ஊசல்
அவருக்கு பதில் சொல்லும்பொழுது…. பலன் எதிர்பாராத உதவியை செய்கின்ற பண்பை குறித்து விளக்கம் கூறினேன். செய்நன்றி அறிதல்… என்பது நன்றி பாராட்டுதல் என்பதும் என்ன என்று விளக்கினேன். சுப. வீரபாண்டியன் அவர்களது ‘குறள் வானம்’ என்னும் புத்தகத்தில் தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும் செய்யவேன்றிய உதவி மற்றும் நன்றி குறித்து சொல்லப்பட்டு இருக்கும். உதவியவர்களுக்கே திரும்பி உதவுவதல்ல உதவியின் பொருள்… உதவி தேவைப்படுபவர்களுக்கு அதை உரிய நேரத்தில் செய்வதுதான் அதன் இலக்கணம். பள்ளி கல்லூரிகள் நாம் ஏறிவந்த ஏணிகள். நாம் அடுத்த தலைமுறைக்கு ஏணிகளாக இருப்பதுவே அவர்களுக்கு செய்யும் மறு நன்றி. அப்பா என்னை படிக்க வைத்தார்…. திரும்ப நன்றியோடு அவரை நான் படிக்க வைப்பேன் என்பது என்ன நன்றி. நந்தனம் கலைக்கல்லூரி கூட எனது தான்… நீங்கள் யாவரும் என் கேளிர்… என் கடமையைச் செய்வதே! என் கல்லூரிக்கான கடன்! என்று பதில் கொடுத்தேன். மற்றவர் குழந்தைகளை அன்போடு ஊட்டி வளர்த்தால் தன் குழந்தைகள் தானே வளர்வார்கள் என்றொரு வழக்கு இருப்பதையும் நினைவூட்டினேன் அருணாச்சலம்…. சார் நான் எதிர்பார்க்காத நல்ல பதில் என்றார்… பக்கத்தில் மேடையில் வீற்றிருந்த சுதாகர் IPS “ பாஸீ” செம பதில்… என்று பாராட்டினார். தனக்கு அந்த பதில் மிகவும் பிடித்திருந்ததாக கூறினார்.
வாழ்க்கை வசந்த கால ஊஞ்சல்களை அசைத்த வண்ணம் இருக்கிறது. நாம் தான் அடையாளம் சரிவர கண்டு பிடிக்க வேண்டும். எண்ணங்கள் தானாய் வருமென்றால் நாம் சும்மா இருந்தாலே போதுமா? எதுவுமே செய்ய வேண்டமா? என் இல்லத் துணைவியாரை …. ஸ்போர்ட்ஸ் T சர்ட், டராக் சூட் அணிந்து ஓடுங்கள்… ஆள் பாதி ஆடை பாதி… என்று சொல்லி… அதற்குரிய உடை அணிந்தாலே விளையாட்டு வீராங்கனை ஆகிவிடலாம் என்று பத்து வருடங்களாக… ஏன் பதினைந்து வருடங்களாக சொல்லி வருகிறேன். இதுவரை நடக்கவில்லை! என்று நினைத்தேன். மனம் ஊசலாடியது. சொல்வதை நிறுத்தி ஆயிற்று. சும்மா இருந்தால் எல்லாம் நடந்துவிடுமா?
பயோமெட்ரிக் அட்டன்டென்ஸ் வைக்க வேண்டாமா? கிரிக்கெட் பவுலிங் பிராக்டீஸ் செய்யாமல் விக்கெட் கிடைக்குமா….? படிக்காமல் எப்படி தேர்வில் வெல்வது? ஆப்ரேஷன் செய்யாமல் ஹார்ட் பிளாக் எப்படி நீங்கும்? என்று ஊசலாடியது கேள்விகள்? தூரி நோன்பு மனதில் நடந்தது. கேள்விகள் தூரியில் அமர்ந்து ஆடின….
தியானமும் அமைதியும் உலக நிகழ்வுகளில் இருந்து தூர அழைத்துச் சென்றுவிடவேண்டும் என அவசியமே இல்லை. சிம்பலிஸம் (குறியீடுகள் – Symbolism) என்று ஒரு கருத்து நிலவுகின்றது. கிட்டத்தட்ட நம்ம ஊர் சகுனம் பார்ப்பது போல. டால்ஸ்டாயின் 1872 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கதை ஒன்றை படிக்க நேர்ந்தது. அந்த கதை கு.ப. ராஜகோபலன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. “ அவனின்றி அணுவும் அசைவதில்லை” என்று தமிழில் தலைப்பு வைத்து இருந்தார். ஆங்கிலத்தில் “ கடவுள் உண்மையை பார்க்கிறார், ஆனால் காத்திருக்கிறார்” (God sees the Truth, but waits) என்றும் உள்ளது. இந்தக் கதையில் அப்பாவி இவான் டிமிட்ரிச் அக்சினோவ் (Ivan Dmitrich Aksinor) என்பவர் தான் செய்யாத குற்றத்திற்காக சைபீரியா சிறையில் பல நாள் வாடியபோதும் தனக்கு அநீதி இழைத்தவனை மன்னித்து இறுதியில் மரணிக்கிறான். இதில் சிம்பலிசம் என்ன? என்றால்… அவன்… விதி விளையாடும் நாள் அன்று கிளம்பும் போது… அவனது மனைவி … போகாதே போகாதே …. என் கணவா? பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்று அழுது தடுக்கிறாள். இதையே… வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் பழைய தமிழ்ப் படத்தில்…வாழை தோப்பு அழிதல், பட்டத்து யானை சாதல் என பல குறிப்புகளால்.. சிம்பல்களால்… உணர்த்தி… வெள்ளத்துரையை அவர் மனைவி (திரையில் ஜெமினிகணேசன் பத்மனி) தடுப்பதாக அமைத்திருப்பார்கள். இதுவேதான் ஜீலியஸ் சீசரின் கதையிலும் அவர் மனைவி போக வேண்டாம் என்று தடுக்க தடுக்க… கொஞ்சநேரம்… ஊசலாடி… தடுமாறிவிட்டு… சீசர் கிளம்பி போய் குத்து வாங்கியதாக வரலாறு சொல்கிறது. இப்படி கெட்டதை மட்டும்தான் ‘குறிகள்’ முன் உணர்த்துமா? என்றால்…. “நாளென்ன செயும்… எனை நாடிவந்த கோளென் செயும்”? என்று அருணகிரிநாதரும்…. “ ஆறு நல்ல நல்ல அவை நல்ல….” என்று திருஞானசம்பந்தரும்… எல்லா நாட்களும் நேரங்களும் நல்ல நேரமே என்று முடித்திருப்பதாக எடுத்துக் கொள்வோம்.[hide]
பலனை எதிர்பாராமல் காரியங்களை செய் என்று கீதை சொல்ல… “பூமியில் வேண்டிய தொழிலெலாம்; ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து வாழ்வாய்” என்று பாரதியார் எழுதியுள்ளார். “ காண்பதெல்லாம் மறையும் என்றால்… மறைவது எல்லாம் காண்போம்” என்கிறார். “ காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்” என்கிறார். எனவே நம்பிக்கை உழைப்பை வெளிபடுத்த வேண்டும்… குழந்தைகளை எழுப்பி விட தயங்க வேண்டியது இல்லை…. பயிற்சி அளிப்பது பயிற்சியாளரின் கடமையாக இருந்தாலும்… ஊசல் போல வாழ்வு நகர்ந்து ஆடினாலும் ஒரே மரத்தடியில் இருப்பது போல… வாழ்க்கை ஆராவாரம் நிறைந்திருந்தாலும் அதே இடத்தில் நிற்பதை போல உணர்ந்துகொண்டு மெய்ப்பொருள் புரிந்துகொண்டு கடமையாற்றினால் எல்லா மணித்துளிகளிலும்…. பரிபூரணம் நிச்சயம். இந்த நாளிலே… நான் சொல்லாமலே துணைவியார் விளையாட்டு சீருடையில் கிளம்பி குழந்தைகளோடு பயிற்சிக்குச் சென்றது அத்தகையதொரு நம்பிக்கை அளிக்கின்ற குறியீடு….
செல்வா அண்ணன் கேட்ட தூரி கேள்வி… இவ்வளவு ஊசலாட்டத்தை மனதில் ஏற்படுத்திவிட்டது அது ஆச்சரியமே![/hide]
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles