எல்லாம் அசாதாரணமே
போயும் போயும் அது எறும்புதானே… அதனால் அப்படி என்ன சாதிக்க காட்டிட முடியும்னு நீங்க சாதாரணமா நெனச்சா அது ரொம்ப ரொம்பத் தப்புங்க அதே எறும்பு உருவத்திலே ரொம்ப ரொம்பப் பெரிய ஒரு யானையோடு போகட்டும்.. அப்போ யானை படும் பாடு இருக்கே…அது சொல்லி மாளாது. அந்த நேரத்தல் தெரியுங்க அந்தக் குட்டியூண்டு எறும்போடக் குறும்பும் அதனோடு அபாரத் திறமையும்.
கடுகு சிறுசா இருக்கேன்னு பார்க்காதீங்க என்னா கடுகு சிறுத்தாலும் காரம் போகாதும்பாங்க.
அதே மாதரி குழந்தைகள் தானேன்னு அவங்களை அலட்சியமா எண்ணிடப் படாது. குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னுச் சொல்லும் போது அந்தக் குழந்தைங்க கிட்டயும் ஏராளமான திறமைகளும் அதிசயங்களும் மறைந்திருக்குமில்லியா?
சில கண்டுபிடிப்புகள் நமக்கு மலைப்பாக இருக்கலாம். ஆனா அந்தக் கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்க அமைந்த அந்த தருணங்களும் அவற்றின் மூலங்களும் ஆச்சரியமானவை. அதிசயிக்கக் கூடியவை.
இப்படித்தான் ரெண்டு குழந்தைங்க விளையாடிக் கொண்டு இருந்தாங்க.. எவ்வளவு நேரந்தான் விளையாடுவாங்க. கொஞ்ச நேரம் ஓய்வா ஒரு மரக்கட்டையை மேல வந்து உட்கார்ந்தாங்க. அப்பவும் விளையாட்டுதான்.
ஒரு குழந்தை மரக்கட்டையோடு ஒரு முனையில டொக்கு டொக்குன்னு தட்ட இன்னொரு குழந்தை இன்னொரு முனையில் காதை வைத்துக் கேட்டது.
டேய் நீ தட்ற சத்தம் இங்கே எங்காதிலே நல்லா விழறதுடா நீகேளேன் நான் இப்பத் தட்றேன் என்று அந்தக் குழந்தைகள் இரண்டும் மாறி மாறித் தட்டுவதும் மாறி மாறிக் கேட்பதுமாக விளையாட்டைத் தொடர்ந்தனர்.
இந்த விளையாட்டை ஒருவர் நீண்ட நேரம் பக்கத்திலே நின்று பார்த்து ரசித்துக் கொண்டே இருந்தார். அவருக்குத் திடீரென்று என்ன தோன்றியதோ தெரியவில்லை. வந்த வழியே மீண்டும் நடந்தார். ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்தார். பிறகு தான் தெரிந்தது. அவர் ஒரு டாக்டர் என்று.
தனது மருத்துவமனையில் படுத்திருந்த ஒரு நோயாளியைப் பார்த்தார். ஒரு பேப்பரை எடுத்து நீளவாக்கில் உருளை போலச் சுருட்டி அதன் முனையை அந்த நோயாளியின் மார்பு பகுதியில் வைத்து மறு முனையைத் தன் காதில் வைத்து கொண்டார்.
நோயாளியின் இதயத் துடிப்பு டாக்டரின் காதிலே தெளிவாக கேட்டது. அதன் விளைவுதான் இப்போது ஒவ்வொரு டாக்டரின் தோள்களிலும் குழந்தை போல் தவழந்து தொங்கிக் கொண்டிருக்கும் அந்த ஸ்டெதாஸ் கோப். எனப்படும் கருவி.
இது கண்டுபிடிக்கப்பட்டதன் தருணத்தையும் சூழலையும் அதன் மூலத்தையும் கொஞ்சம் இப்போது நினைத்துப் பாருங்கள் ஆச்சரியமாக இல்லையா சரி. அந்த டாக்டர் யாரென்றும் அவர் பெயர் என்ன என்றும் நீங்கள் கேட்க மாட்டீர்களா? நீங்கள் கேட்டாவிட்டால் என்ன, நானே சொல்கிறேன். அவர் ஒரு பிரெஞ்ச் டாக்டர் பெயர் ரேனதியோ பிலிலேநக்.
மனுஷன் பொறந்ததில இருந்து மண்ணுலப் போய்ப் புதையற வரைக்கும் கடைசி மூச்சு அவனுக்குள்ளே இருக்கிற வரைக்கும் அவன் உடம்பிலே ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேலை பார்க்கிறது ரெண்டு. அந்த ரெண்டு என்னென்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்.
சரியாச் சொன்னீங்க ஒண்ணு அவனோட மூளை
இன்னொன்னு அவனோட இதயம்
ஒரு ஆள் சொன்னான்
அவள் மட்டும் எனக்குக் கிடைக்கலேன்னா என் இதயம் வேலை செய்யாமல் நின்னுடு மோன்னு நான் ரொம்பவே கவலைப் பட்டேன் அப்படீன்னு.
அப்புறம் என்னாச்சி என்று கேட்டான் இன்னொருவன் நல்ல காலம் அவள் எனக்குக் கிடைச்சுட்டா அப்படீன்னான் அவன். சரி இப்போ என்ன பிரச்சனை… அதைச் சொல் என்றான் வேறொருவன்.
கல்யாணமாகி விட்டது. இப்ப மூளையே வேலை செய்ய மாட்டேங்குது என்றான் இவன்.
இது எப்படி இருக்குப் பாருங்களேன்…
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles