25 ஆம் ஆண்டு வெள்ளி விழா
முன்னாள் மாணவர்கள் (1989-1993)
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
மதுரை
நேர்காணல் : விக்ரன் ஜெயராமன்
பள்ளிக்காலம் என்பது பசுமையான நினைவுகள், கல்லூரிக்காலம் என்பது காலம் முழுவதும் மாறாத நினைவுகள். இந்நினைவுகளை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.
முகம் தெரியாமல், முகவரி தெரியாமல் அனைவரும் ஒரே கூண்டிற்குள் வரும் பறவையைப் போல கல்லூரிக்கு வந்து, நண்பர்களிடம் பழகி, பிறகு முடிக்கின்ற காலத்தில் கல்லூரி முழுவதும் உறவுகளாக்கிக் கொள்வது தான் நினைவுகள்.
அந்த வகையில் 25 ஆண்டுகளுக்கு முன் மதுரை வேளாண் கல்லூரி படித்த அப்போதைய மாணவ மாணவியர்கள், தற்போது 90 % அரசுப்பணி ஊழியர்கள், 5% பேராசிரியர்கள் 5 % தனியார் துறையில் மேலாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் மதுரை வேளாண் கல்லூரியில் நடைப்பெற்றது. முகமலர்ச்சியான இத்தருணத்தில் அவர்களை சந்தித்தோம்.. அப்போது அவர்களின் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள் அதிலிருந்து நாமும் பயணிப்போம்.
கே : மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தின் தோற்றம் பற்றிக் கூறுங்கள்.
இக்கல்லூரியானது 1965 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திரு. கக்கன் அவர்கள் கல்வித்துறை அமைச்சராக இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்டது. கல்லூரித் தொடங்கிய காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்தது. அதன் பிறகு 1977 ஆண்டு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் வந்தது. அன்று முதல் இன்று வரை எத்தனையோ மாணவர்களை இக்கல்லூரி உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் 1989 முதல் 1993 ஆண்டு படித்த மாணவர்கள் தான் நாங்கள். எங்களின் 25 வது ஆண்டு வெள்ளி விழாவை தற்போது இக்கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடினோம்.
கே : உங்களின் கல்லூரி அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
இப்பொழுதும் எங்களுக்கு நினைவு இருக்கிறது. 1989 ஆண்டு நாங்கள் கல்லூரியில் சேர்ந்து அந்த முதல் நாள். இங்குள்ளவர்களில் பெரும்பாலனோர் கிராமப்பின்னணியில் இருந்து வந்தவர்கள். யாரும் யாருக்கும் அறிமுகமில்லாதவர்கள். எல்லா வகுப்பையும் போலவே எங்கள் வகுப்பிலும் பெண்களே அதிகம் இருந்தார்கள், 59 பெண்கள், 17 ஆண்கள் இருந்தோம். எல்லோரும் ஒவ்வொரு கனவுகளுடன் கல்லூரிக்கு வந்தோம்.
சிறிது நாட்களிலேயே அனைவரிடமும் அன்பாகப் பழக ஆரம்பித்துவிட்டோம். கல்லூரி என்றாலே கலகலப்புக்கும், மகிழ்ச்சிக்கும் குறை இருக்காது. சொந்த பெயரை விட ஒவ்வொருக்கும் ஒரு மாற்றுப் பெயரை வைத்து தான் அழைப்போம்.
எங்களுக்கு வந்த பேராசிரியர்களும், முன்னாள் சீனியர் மாணவ மாணவியர்களும் எவ்வித சந்தேகம் கேட்டாலும் உடனுக்குடன் அதனைத் தெளிவுப்படுத்தி விடுவார்கள். அந்தளவிற்கு இணக்கமான நட்புக் கொண்டிருந்தார்கள். தேர்வு காலங்களிலும் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வோம். இப்படியே எங்களின் இந்த இனிமையான பயணம் தொடர்ந்து சென்றது.
கே: நீங்கள் கல்லூரி முடிந்தவுடன் இதுபோன்று சந்திக்க வேண்டும் என்று திட்டம் வகுத்துக் கொண்டீர்களா?
ஆம். கல்லூரி முடித்துவுடன் விடை நல்கு விழாவில் அனைவரும் ஒன்று சேர்ந்து நம்முடைய நட்புத் தொட வேண்டும் என்றால், நம் ஆண்டிற்கு ஒரு முறை சந்திக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தோம். அப்போதைய சூழலில் அது சரியாக இருந்தது. எங்கள் பேஜில் பெண்கள் அதிகம் என்பதால் அவர்களை அனைவரையும் ஒற்றிணைக்க முடியவில்லை.
ஒவ்வொருவரும் கல்லூரியை முடித்தவுடன் திருமணம், மேல்படிப்பு, உள்நாடு மற்றும், வெளிநாடுகளில் வேலை என்று ஒவ்வொரும் இரைத் தேடும் பறவைகளாக பல திசையில் சென்று விட்டார்கள். இது காலத்தின் கட்டாயம் தான் இதை மாற்ற முடியாது. எல்லோரிடமும் பேச முடியவில்லை என்றாலும் சிலர் அன்று முதல் இன்று வரை நட்பைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.
கே : பலதிசைகளில் உள்ளவர்களை எப்படி ஒன்றிணைத்தீர்கள்?
தற்போது அறிவியிலின் வளர்ச்சி அதிகமாக வளர்ந்துள்ளதால் சமூக வலைதளங்கான வாட்ஸ் ஆப், பேஸ்புக், ஸ்கைப் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொண்டோம். 2 மாதங்களுக்கு முன்னரே இதற்கான திட்டத்தைத் தீட்டினோம். அதன் படி அதற்கு என்று தனித்தனியே குழுக்களைப் பிரித்து அனைவரையும் அழைத்து விட வேண்டும் என்று நினைத்தோம். அதன் விளைவாக சுமார் 39 பேர் பங்கு பெற்றார்கள் வெளிநாடுகளில் இருந்தவர்கள் சிலர் ஸ்கைப் மூலம் தாங்கள் வர முடியாத காரணத்தையும், அடுத்து முறை வருகிறேன் என்ற உத்திரவாதத்தையும் கொடுத்தார்கள்.
கே : அன்று ஒரு நாள் நிகழ்வு எப்படியிருந்தது?
நாங்கள் நினைத்தது போலவே தூரத்திலிருந்து வந்தவர்கள் ஒரு நாள் முன்னரே விழா நடக்க இருக்கும் ஹோட்டல் ஆகாஷ் கிளப்பிற்கு வருகைப் புரிந்து விட்டார்கள்.
4 ஆம் தேதி மாலை நான்கு மணிக்கெல்லாம் விழா இனிதே தொடங்கியது. பல ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நேரத்தில் ஒவ்வொருவரும் மனதில் மிகுந்த முகமலர்ச்சியுடன் சந்தித்து, கைக்குலுக்கி வரவேற்று கொண்டோம்.
5 ஆம் தேதி காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கிய விழாவில் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். அன்று உலக நண்பர்கள் என்பது எங்கள் விழாவிற்கு கூடுதல் பலம் கொடுத்தது. படிக்கின்ற காலத்திலும் தற்போதும் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட உதவிகளையும், செய்யும் உதவிகளையும் கூறிக்கொண்டார்கள். அனைவரிடத்திலும் முகம் மாற்றம், உடல் மாற்றம் இருந்தது. மாணவர்களாய் பிரிந்து இன்று பல அதிகாரிகளாய் சந்தித்துக் கொண்ட அத்தருணம் மிகவும் சுவாரஸ்சியமாக இருந்தது. குறிப்பிட்ட நேரப்படி ஒவ்வொரு நிகழ்வையும் சரியாக அமைத்துக் கொண்டோம். பிறகு நாங்கள் அமர்ந்து படித்த வகுப்பை, பேராசிரியர் முருகன் அவர்கள் அழைத்துச் சென்று காட்டினார். மனதிற்குள் மீண்டும் நாங்கள் படிக்க வந்ததாகவே உணர்ந்தோம். அந்தளவிற்கு மட்டற்றமகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த வகுப்பில் நாங்கள் செய்த அத்துனை நிகழ்வுகளும் எங்கள் மனக்கண் முன் காவியமாக ஓடியது. மற்ற நாட்கள் கடிகார முள் சுற்றுவதை விட அன்று வேகமாகச் சுற்றியதை எங்களால் உணர முடிந்தது. கல்லூரிக்கு முன்வாயலில் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
கே: 25 ஆண்டுகளின் உங்களின் கல்லூரி நினைவுகள் பற்றிச் சொல்லுங்கள்?
இந்தக் கல்லூரி வளாகத்திற்குள் எங்களின் கால் தடம் படாத இடமே எதுவுமில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு இங்குள்ள மரங்களும் கட்டிடங்களும், கேண்டீனும் தான் சாட்சி.
எல்லா மரங்களும் எங்களைப் பற்றி நன்றாக கூறும், அமர்ந்து படித்த போதும், சாப்பிடும் போதும், நண்பர்களிடம் அரட்டை அடித்த போதும் எங்களோடு ஒன்றோடு ஒன்றாக இருந்த இந்த மரங்கள் தான்.
நாங்கள் படித்த போது இருந்ததை விட நிறைய கட்டிடங்கள் தற்போது வளர்ந்து விட்டது. ஆனாலும் இன்னும் எங்களின் கல்லூரி நினைவுகளை நினைவுப்படுத்தும் எத்தனையோ நினைவுச் சின்னங்கள் இன்னும் இருக்கிறது. மீண்டும் கையில் புத்தகத்துடன் நண்பர்களோடு ஒன்றாக வகுப்பிற்குச் சென்ற அந்த நாட்கள் வராத என்ற ஏக்கமும் எங்களுக்குள் இருக்கிறது.
நாங்கள் படித்த போது இருந்த பேராசிரியர்கள் இன்றும் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்ததும் மனதிற்குள் ஆனந்தமே தென்பட்டது.[hide]
கே: தற்போது நீங்கள் ஆற்றிக் கொண்டிருக்கும் பொறுப்புகள் பற்றிச் சொல்லுங்கள்.
எங்கள் பேஜில் படித்தவர்களின் 95 சதவீதம் பேர் அரசு அதிகாரிகளாகவே இருக்கிறார்கள். அதிலும் சில பேர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். வனிதா U.K, முனைவர். ராஜேந்திரன் Senior Scientist at Moderna Therapeutics U.S, நாகூர் மீரான் கட்டார், முனைவர். மார்க்ஸ் சாமுவேல் பிரிட்டிஸ் கோலம்பியா பல்கலைக்கழகம் கனடா, ஜெயக்குமார் கனடா, ஜெயஸ்ரீ U.S, சுஜிவா கொழும்பு, சிங்கார லீனா வேளாண் துணை இயக்குநராக இருக்கிறார். நாவூர் மீரான், ரேணுகா, ராஜேஷ், அபர்ணா சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பு குழுவில் இருந்தார்கள். பலர் வேளாண் துணை இயக்குநர், அ.ஞ, காவல் துறை துணை ஆணையர், டிஆர்டிஓ, திண்டுக்கல் பிரஜெக்ட் ஆபிசர் போன்ற பொறுப்புகளில் இருக்கிறார்கள்.
கே: அன்று நடத்த நிகழ்வுகளில் இன்றும் மறக்க முடியாத நிகழ்வுகளாக நீங்கள் பார்ப்பது?
கல்லூரிக்காலங்களில் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்கிறோமா இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் ஏதேனும் மறக்க முடியாத சம்பவத்திற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நண்பர் ஒருவர் நன்றாகப் படிக்கக்கூடியவர். ஒருநாள் பூச்சிகள் பற்றி ஆய்வு நடைப்பெற்றது. அப்போது ஒவ்வொருவரும் ஒரு இறந்த பூச்சிகளைக் கொண்டு வர வேண்டும் என்று வகுப்பு பேராசிரியர் கட்டளையிட்டியிருந்தார். அனைவரும் இறந்த பூச்சிகளைக் கொண்டு வந்திருந்தார்கள்.
ஒருவர் மட்டும் அன்று பிராஜெக்ட் என்பதை மறந்துவிட்டார். அன்று காலை தான் நண்பர்கள் சொல்லி அவருக்குத் தெரிந்தது. இதனால் உடனே வேறு வழியில்லாமல் உயிருடன் இருந்த பூச்சை ஒரு பொட்டிக்குள் போட்டு எடுத்து வந்துவிட்டார். அவரின் பெயரை அழைத்தவுடன் அந்தப் பொட்டியைத்திறந்தவுடன் உயிருடன் இருந்த பூச்சிகள் ஆய்வகத்திலேயே பறக்க ஆரம்பித்துவிட்டது. இதைப் பார்த்த ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் மிகப் பெரிய சிரிப்பலை எழுந்தது. வகுப்பில் ஒரு முறை ஆசிரியர் பிராட்டிக்ல் தேர்வு சொல்லியிருந்தார். அப்போது வகுப்பில் உள்ள ஒரு மாணவியைப் பார்த்து ஓட்டுமொத்த வகுப்புமே எழுதிவிட்டோம். அடுத்த நாள் வகுப்பில் பேராசிரியர் அவர்கள் நீங்கள் அனைவரும் இந்த பிராட்டிக்கலில் ஒரு மாதிரியான தவறைச் செய்திருக்கிறீர்கள் யாரோ ஒருவரைப் பார்த்து ஒட்டு மொத்த வகுப்புமே எழுதியிருக்கிறீர்கள் என்று சொன்னது. இதையும் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்கமாட்டார்கள். அவ்வளவு இன்பத்தைக் கொடுத்தது.
இது போன்ற எத்தனையோ நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொருவரின் கல்லூரிப்பயணமும் ஒரு மறக்க முடியாத சகாப்தம் என்று சொன்னால் அது மிகையல்ல.
கே : குடும்பத்துடன் சந்தித்த அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
ஒரு மாதத்த்திற்கு முன்னரே இப்படி ஒரு திட்டம் இருக்கிறது என்பது எங்கள் குடும்பத்திற்குத் தெரியப்படுத்திவிட்டோம். இதைக் கேட்டதிலிருந்து இன்று வரை எங்களை விட எங்கள் துணைவியாரும் குழந்தைகளுமே அதிகம் ஆசைப்பட்டார்கள்.
காரணம் குழந்தைகள் அம்மா அம்மா படித்த கல்லூரியைப் பார்க்க வேண்டும், கணவன் மனைவி படித்த கல்லூரியைப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். எங்களுக்கும் மனதிற்கு மனதில் மகிழ்ச்சியிருந்தது.
ஒவ்வொருவரும் அவர்களின் குழந்தை அழைத்து நண்பர்களிடம் அறிமுகம் செய்து கொண்டோம். இது ஒரு 25 ஆண்டுகால நண்பர் சந்திப்பு என்பதை விட குடும்ப சந்திப்பு என்று சொன்னால் இன்னும் கூடுதல் பலமாக இருக்கும்.
அவரவர்கள் அவர்களின் குடும்பத்தை அழைத்துக் கொண்டு படித்த வகுப்பை, அமர்ந்து பேசிய இடத்தை, விளையாட்டு மைதானத்தை எல்லாம் அழைத்து சென்று காட்டினார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு இன்பச் சுற்றுலாவுக்குச் சென்ற மகிழச்சி இருந்தது. பிள்ளைகள் இதை பெரிதாக நேசித்தார்கள். நாங்கள் படித்த அனுபவத்தையும், ஒற்றுமையுணர்வு பற்றியும் விளக்கினோம். எங்களைப் போலவே நீங்கள் ஒற்றுமையுணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறினோம்.
வந்தவர்களின் நிறைய பேரின் பிள்ளைகள் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கே: இறுதியாக ஏதேனும் திட்டம் வகுத்துக் கொண்டீர்களா?
இந்த 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் நாங்கள் சந்தித்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை மேலும் 2 ஆண்டுக்கு ஒரு முறை சந்திக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தோம். அனைவரும் இதை ஏற்றுக் கொண்டார்கள்.
நாங்கள் எதிர்பாராத சந்தித்த இன்றைய நாள் நண்பர்கள் தினம் என்பதால் இனி சந்திக்கும் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்திலேயே கொண்டாட வேண்டும் என்று நினைத்தோம்.
அடுத்த சந்திக்கும் நிகழ்வில் இன்று தவறியவர்கள் அனைவரையும் வர வைக்க வேண்டும் என்று விரும்பினோம்.
இறுதியாக, ஒரு குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அது அனைவருக்கும் ஒரு நகல் கொடுத்தோம். பசுமையான நினைவுகளுடனும், பாசமான உறவுகளுடன் பயணித்தோம்.
விழாவில் பங்கேற்றவர்கள்
அமுதா, வனிதா, பாரதி, சுப்புலட்சுமி, அபர்ணா, ராஜராஜேஷ்வரி, நிஷா, ரேணுகா, சுஜாதா, சுசிலா, உஷா, செல்வி, கீதா, சுஜிவா, புனிதா, கமலா, லதா, மனோரஞ்சிதம், வாசுகி, லீலாவள்ளி, ராமலட்சுமி, மாலா, ஜீனா, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், ராஜேஷ், மீரான், ராஜா, மகேஷ்வரன், காளி, அரவிந்தன், இந்திரா, உதயகுமார், கவிதா, தேன்மொழி, லட்சுமணன், சிங்கார லீனா
வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பங்கேற்றவர்கள்.
மார்க்ஸ் அப்பிரஹாம், ஜெயக்குமார், ஜெயஸ்ரீ, கிருபா, பார்த்திமா[/hide]
இந்த இதழை மேலும்