தமிழனின் இரு கண்கள் வீரமும் , காதலும் ஆகும். வீரத்தின் அடையாளமாக இம்மண்ணில் ஏராளமான கலாச்சாரப் பண்பாடு மக்களிடையே பரவிக் காணப்பட்டது. ஆனால் காலப் போக்கில் பல அடையாள கலச்சாரங்கள் நம் கண் முன்னே அழித்து வருவதை நம்மால் பார்க்க முடிந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு இனம் இன்று தனது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் இழந்து வருகிறது, என்பதை நினைக்கும் போது மிகவும் மனவேதனை ஏற்படுகிறது
இல்லையென்று வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமால் அள்ளிக் கொடுத்தது எம் தமிழ் இனம், வந்தாரை எல்லாம் வாழ வைத்து எம் இனத்தின் பெருமைக்கு இன்று சில அடையாளங்களை இழந்து வருகிறோம். அதில் முதன்மையானது வீரத்தின் அடையாளமாக போற்றிப் புகழ்ந்து வந்த ஜல்லிக்கட்டு ஆகும். இதை இப்போது சில மிருகவதை அமைப்புகள் தடைசெய்யபட்டுள்ளது. இது வெறும் ஜல்லிக்கட்டுல்ல தமிழனின் ரத்ததோடு ஒன்றாக கலந்து விட்ட கலாச்சாரமும் பண்பாடும் ஆகும். இந்த தடை விதிப்பு வளம் கொழிக்கும் தமிழகத்தின் வளத்தைக் குறைக்கும் பெரும் முயற்சி என்பதை தமிழர்களான நாம் ஒவ்வொரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.
நாட்டு மாடு அழிப்பது நாட்டையே அழிப்பதாகும். வியப்பாக இருக்கிறதா? முழுமையாகக் கேட்பதற்கு முன் நீங்கள் நிற்கும் நமது தாய் மண்ணை ஒரு முறை முத்தமிட்டுக் கொள்ளுங்கள். இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம். தமிழன் மேடுபள்ளங்களை சீர்படுத்தி, செம்மைபடுத்தி விவசாயம் செய்ய முனைந்தான். அதற்குத் துணையாக நாட்டு மாடுகளை தன் விவசாயத்திற்குப் பெரிதும் ஒரு பாதுகாப்பு கவசமாக உருவாக்கிக் கொண்டான்.
நாட்டு மாடுகளை அழிக்கும் முயற்சிகளில் ஆங்கிலேயேர் செய்த சூழ்ச்சி
அப்போது 1970 ல் இந்தியாவிற்கு வந்தார் இராபர்ட் கிளைவ். 1975 ல் தமிழகம் வந்த அவர் அங்கு கண்ட இரண்டு நிகழ்வுகள் அவனை புருவம் உயர்ந்த செய்தது. அதில் ஒன்று குருகுலக்கல்வி, மற்றொரு விவசாயமும் விவசாய நுணுக்கமும் ஆகும். இந்த செயல்பாடு அவனை மிகவும் உருத்தியது. இதனால் சூழ்ச்சியை கையில் எடுத்தான் அதில் முதன்மையானது பசுவதைக்கூடங்கள். இது விவசாயத்தின் கண்களில் ஊசி ஏற்றுவது போல் இருந்தது. 1760 ல் இது ஒரு மாபெரும் இயக்கமாகவே ஆகிவிட்டது, இந்த இயக்கத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பசுக்களைக் கொன்று குவித்தார்கள். ஒன்று இரண்டு என்று தொடங்கிய பசுவதைக்கூடங்கள் 1910 ம் ஆண்டில் 350 ஆக உயர்ந்தது.
இதனால் மாட்டுச்சாணத்தையும், கோமியத்தையும் மட்டுமே பயன்படுத்தி குழிக்கு 71 படி அரிசி விளைவித்த தமிழன் முதன்முறையாக தடுமாறினான். அந்த இடைவெளியில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டவைதான் இரசயான உரங்கள். அந்த சந்தர்ப்பத்தில் தான் காங்கேயம் காளைகளும், அவற்றின் விந்தணுக்களும் வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
நம்மவர்கள் செய்த சூழ்ச்சி, பசுவதைக் கூடங்களின் பெருக்கம்
1929 ம் ஆண்டு வட்டமேஜை மாநாட்டிற்காக காந்தி- இர்வின் ஒப்பந்தம் நடைபெற்ற காலம் அது. பசுவதைக் கூடங்கள் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தியா சுதந்திரம் வாங்கும் நாளில் அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும் என்றார்; மகாத்மா. பசுவதைக் கூடங்களை ஒழிப்பதே என் முதல் வேலை என்றார் ஜவஹர்லால் நேரு. இந்தியா சுதந்திரம் அடைந்து, பொருளாதார வளர்ச்சியும் அடைந்தது. ஆனால் 350 ஆக இருந்த பசுவதைக்கூடங்கள் 30 ஆயிரமாக உயர்ந்தது. தலைநகர் டெல்லியில் மட்டும் 11 ஆயிரம் பசுவதைக்கூடங்கள். மணிக்கு 10 ஆயிரம் பசுக்களை கொல்ல ஓங்கி நின்றது இயந்திரவியல். அவற்றை சுத்தம் செய்ய நாளொன்றுக்கு முகத்தல் அளவை லட்சம் முறை துணிந்தது. அன்று வைத்த தீ தான் இன்றும் அணைய மறுத்தது.
தேசியப் பொருளாதாரத்தில் மாடுகளின் பங்கு
இன்றைய பொருளாதார புள்ளிவிவரப்படி இந்தியாவில் மொத்த மாடுகளின் எண்ணிக்கை சுமார் 720 இலட்சம். இவை, இந்த பாழாய் போன மனித இனத்திற்கு ஆண்டொன்றிக்குத் தரும் உழைப்பு மட்டுமே 3624 கோடியே 16 லட்சத்து 10 ஆயிரத்து 738. 255 குதிரைத்திறன். அதன் கழிவுகள் தரும் மின்சார உற்பத்தி மூலம் இந்தியாவிற்கு ஈட்டித்தரும் வருமானம் ஆண்டொன்றிக்கு 1. 83 ஆயிரம் கோடி. தமிழகத்தில் மட்டும் பால் சந்தையில் ஆண்டொன்றிக்கு மூன்றரை லட்சம் கோடி. மாட்டுச் சாணத்தின் மூலம் 20 ஆயிரம் கோடியும், விறகிற்காக வெட்டப்படும் ஐந்தரை லட்சம் மரங்களும் சேமிக்கப்படுகின்றன.
தமிழகத்திலிருந்து பசுக்களும், காளைகளும் கறிக்காகவும் தோலுக்காகவும், தனிநபர் சுய லாபத்திற்காகவும் கொல்லப்பட்டால், இன்னும் நம் நாட்டில் விவசாயம் செய்ய 73 லட்சம் இழுபொறிகள் தேவைப்படும். அதற்கான முதலீடு சுமார் 2 லட்சம் கோடி. அந்த இழுபொறிகளை இயக்கத் தேவைபடும் எரிபொருளுக்கான செலவு, ஆண்டுக்கு 1. 16 ஆயிரத்து 375 கோடி, அந்த எரிப்பொருட்களின் புகை மட்டும் ஓசோன் படலத்தை முத்தமிடுமா? என்ன இந்த செலவுகளும், வேதனைகளும் ஒருபுறமிருக்க, ஆண்டொன்றிக்கு தமிழகத்திற்கான வருவாய் இழப்பு சுமாராக 16,56,70,00,00,00,000 ஆயிரம் கோடி.
நம்முடைய காங்கேயம் காளை பிரேசிலில் 1 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது, நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்…?திராவிட மக்களே பெருமையாக கூறிக்கொள்ளுங்கள். நாம் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆனால் கடைசித் தலைமுறை விவசாயிகள்.
இங்கே, இப்பொழுது தமிழ் கலாச்சாரம் அழித்து விட்டது என்று கூறும் சில நயவஞ்சகர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விழைகிறேன். எந்த தமிழனும் தங்கை உறவுமுறையில் இருப்பவளை திருமணம் செய்து கொள்வது இல்லை. தமிழனின் மூச்சு உள்ள வரை தமிழ் கலாச்சாரம் வாழும் வாழ வைப்போம்.
காளை வெறும் விலங்கு மட்டுமல்ல. எம் வீட்டின் ஒருவன். எம் விரல் கொண்டு எம் கண்ணைக் குத்தும் உம் சூழ்ச்சிகள் நிலைபெறாது விலையும் போகாது. வீரம் மறைந்து, வீரியம் குறைந்து, வேற்றான் சூழ்ச்சியால் விவசாயம் துறந்து வெட்டியான் வேலை பார்ப்பவன் தமிழன் அல்ல.
காளைய அடக்கினால் தான் திருமணம் செய்தும் கொள்ளுவேன் என்று வீரத்தின் அடையாளத்தை எம் சங்க கால மகளிர் பின்பற்றிய வந்தார்கள் என்பதை எங்களது வீரத்தை மார்தட்டிச் சொல்வேன்.
ஜல்லிக்கட்டு என்பது என்ன?
வீரம் விளைந்த தமிழ் மண்ணில், காதலோடு ஒரு மோதல் உறுதியோடு நின்று எருதோடு விளையாடு, இது குருதியின் வெளிப்பாடு என்று பண்டைய காலம் தொட்டே நமது பாரம்பரியத்துடன் தொடர்புடையது ஜல்லிக்கட்டு. இந்தப் பெயரைக் கேட்டாலே நம் கலாச்சாரத்தின் கம்பீரம் வெளிப்படும். ஒட்டு மொத்த தமிழர்களின் தெய்வீக மணம் கமழும். உழுவுத் தொழிலைத் தொடர்ந்து ஏறுதழுவும் துடிப்பான விளையாட்டு ஜல்லிக்கட்டு.
ஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் மட்டுமே. அக்காலத்தில் முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனையே மணமகனாகத் தேர்வு செய்தார்கள்.
ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் சல்லிக்காசு என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் வழக்கம் வந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப்பழக்கம் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது. பேச்சு வழக்கில் அது மருவி ஜல்லிக்கட்டு என்று என்று மாறியது.
பழந்தமிழ் இலக்கியங்களிலும், சிந்துசமவெளி நாகரித்திலும் ஏறுத்தழுவதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவதல்( மஞ்சு விரட்டல்) என்ற சொல் பழந்தமிழர் இலக்கியத்தில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராய் விளக்கி வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் கொல்லேறு தழுவுதல் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
புதுடெல்லியிலுள்ள தேசியக் கண்காட்சியகத்தில் உள்ள சிந்துவெளி நாகரீகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவதல் வழகத்தில் இருந்தது என்றும் அறிஞர்கள் கூறுவார்கள்.
அன்றும் இன்றும் மண் அசையா சொத்து. ஆனால் மாடு அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை (ஆநிரை) கவர்வதே வம்பிக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரையை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலைக் கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். முல்லை நிலத்தவரைத் தவிர வேறு எந்த நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்தச் செய்தியும் இலக்கியத்தில் இல்லை. என்றாலும், இது தமிழர்களின் பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது.
ஸ்பெயின் உள்ளிட்ட சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆனால் அவை வெறும் விளையாட்டாகவே நடக்கிறது. கலாச்சாரத்தின் அல்லது வாழ்வியலின் வெளிப்பாடாக விளக்கவில்லை. காளையின் கொம்பைப் பிடித்தால் ஆண்மை, வாலைப்பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை. வாலைப்பிடித்தவன் காளையின் காலால் உதைப்பட்டு மண்ணிடை வீழ்வான். ஆதாலால் கொம்மை விற்று வாலைப்பற்றுதல் கோழயின் செயல். தோல்வியின் அறிகுறி. காளைப்போரில் வெற்றி பெற்ற இளைஞரை கன்னியரின் கயல்கள் வியந்து நோக்குகும் நயந்து பார்க்கும்.
இலக்கியங்களில் ஏறுதழுவதல்
பண்பாட்டுத் திருவிழாவாகவும். மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுத்தழுவுதல் பற்றி, இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இனி பார்ப்போம். கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பகுதிகளில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண் மீது அமர்ந்து ஏறுதழுவுதலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இந்த ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுகக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.
பிடவம்பூ, செங்காந்தள் பூ, காயாம் பூ உள்ளிட்ட மலர்கள் அணிந்த ஆயர்கள், தம் காளைகளை அடக்குபவதர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்து, சிவபெருமானின் குந்தாலிப்படை தோன்ற மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அந்த எருதுகள் இடிஒலி போலமுழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. காளைகளை அடக்குபவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.
கிருஷ்ணர், ஏழு காளைகளை அடக்கி நப்பின்னை என்ற நீளாதேவியை மணந்தார், என்று நம்மாழ்வாரின் திருவாய் மொழியிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலில் எருதேழ் தழீஇக் கோளியர் என்று கிருஷ்ணரைக் குறிப்பிடுகிறார் நம்மாழ்வார். இதிலிருந்து துவார யுகத்திலேயே எருதுகளை அடக்கும் வீர விளையாட்டு வழக்கத்திலிருந்து என்பது புலனாகிறதல்லவா?
மாட்டின வகைகள்
தமிழ்நாட்டில் பல்வேறு மாட்டினங்கள் உண்டு. அதில் சில குறிப்பிட்ட மாட்டினங்களை மட்டும் பார்ப்போம்.
காங்கேயம்
தமிழ்நாட்டின் ஈரோடு, மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள காங்கேயம், தாராபுரம், பெருந்துறை, பவானி மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய வட்டங்களில் இம்மாடுத் தோன்றியது. இக்காளைகள் சாம்பல் நிறத்தில் காணப்படும்.
பர்கூர்
ஈரோடு மாவட்டத்தின் பர்கூர் மலையினைச் சுற்றியுள்ள பகுதிகளில் இம்மாட்டினம் காணப்படுகிறது. இம்மாட்டினம் பழுப்பு நிறத்திலும் நல்ல உடற்கட்டுடன் தென்படும்.
உம்பலச்சேரி
தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் அதிகளவு தென்படும். இவ்வகையான மாட்டினத்ûதை ஜாதிமாடு, மொட்டை மாடு, மோலை மாடு தெற்கத்தி மாடு என்று பல பெயர்களில் அழைப்பர். அது சிவப்பாகவும் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
புலிக்குளம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், சேலம் போன்ற மாவட்டங்களிலும், கர்நாடகா போன்ற மாநிலத்திலும் அதிகளவு காணப்படுகிறது. அடர்ந்த சாம்பல் நிறத்திலும், கருப்புமாகவும் காணப்படும்.
இளைஞர்களின் தன்னெழுச்சி;
மாட்டுக்காக மகனையே பலிகொடுத்த மனுநீதி சோழன் இனத்தில் பிறந்த நாம் அனைவருக்கும் தெரியும் இது வெறும் மாட்டுக்காக நடக்கும் உரிமைப் போரல்ல எமது நாட்டுக்காக நடக்கும் உரிமைக்குரல் என்று. சிறுகன்றிலிருந்து வளர்க்கும் எந்த ஒரு வளர்ப்பாளனும் தம் கண் முன்னே வளர்ந்த காளை வதைப்படுவதை விரும்பி ரசிக்க மாட்டான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் இனத்தோடு தொடர்புடைய விளையாட்டை காக்க வேண்டும் என்பதால் மட்டுமே இதை பல ஆயிர ரூபாய் செலவு செய்து மாட்டை வளர்க்கிறான். நம் இனத்தின் கலாச்சாரம் அழிந்தால் நம் இனம் அழிவதற்கு சமம் என்பதால் நம் உரிமையை மீட்க போராடி வருகிறோம்.
பீட்டா என்பது விலங்கு வதைகளைத் தடுக்குமாறு உருவான தன்னார்வல அமைப்பாகும். இந்த அமைப்பு அமெரிக்காவில் தோன்றிய அமைப்பாகும். இவர்களுக்கு தெரியாது நமது பண்பாடும் பாரம்பரியமும். உலகத்திலேயே சீறிக்கொண்டு வரும் காளையின் பிடறியைப் பிடித்து அடக்கும் வலிமையுடைய இந்த வீர தமிழனுக்கு மட்டும் உண்டு. இந்த வீர விளையாட்டு நம் தமிழ் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது. வீரத்தின் அடையாளமாய் ஆண்டாண்டு காலமாய் நடைபெறும் எமது ஜல்லிக்கட்டை அழிப்பதை, தமிழனாய் பிறந்த எந்த ஒரு இளைஞனும் விரும்பமாட்டான். ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள் ஏன் அமெரிக்காவில் நடக்கும் காளை சண்டையை எதிர்க்க மறுக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் நடக்கும் யானை பந்தயமும். கர்நாடகாவில் நடக்குமும் குதிரைப் பந்தயத்தையும் நடப்பதை தடை செய்ய முடியவில்லை.
இறுதியாக, ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இது எங்கள் வீர விளையாட்டு. இதில் காயப்படுபவனும், குத்துப்படுபவனும் விரும்பி தான் ஏற்கிறான். யாரையும் கட்டாயப்படுத்தி களம் இறக்கப்படுவதில்லை. நாங்கள் மாட்டுக்கு பொங்கல் விழா எடுக்கும் மாண்பை உடையவர்கள், சிவன் கோயிலுக்குச் செல்லும் போது கூட சிவனைப் பார்பதற்கு முன்னர் நந்தியை வணங்கி விட்டு தான் செல்வோம். நீங்கள் மாட்டை இறைச்சியாகப் பார்க்கிறீர்கள் நாங்கள் இறைவனாகப் பார்க்கிறோம். என் இனத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு என் பண்பாட்டு கலாச்சாரத்தின் அடையாளம் அதன் உரிமையும் பெருமையும் தமிழனுக்கு மட்டும் உண்டு.