அமைதி
நிகழும் 2016 – ஆம் வருடத்திற்கான, ஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நண்பர் ஒருவரது பயிற்சி மையத்தில் கதிரேசன் வழக்கம்போல் வகுப்புகள் எடுக்கச் சொன்னார். அதில் கோ. சரண் என்ற ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதும் மாணவனது ஏ.கே. 47 வேகத்தில் கருத்து மழைபொழியும் சொற்பொழிவை அனுபவிக்கவும், அதில் நனையவும் நேர்ந்தது. அவருக்கு, யாரோ, நீங்கள் கொஞ்சம் மெதுவாக பேசினால் நல்லது என்று கூறி இருக்கின்றார்கள். அதைக்கேட்ட சரண் அதிகம் பேசும் தனது இயல்பை குறைத்துக் கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்.
இப்படி இருந்தால் நல்லதா…? அல்லதா…? என்று யோசனை செய்து பார்த்தோம். இஸ்பேனிய மொழியில் ஜோர்ஹே லூயி போர்ஹெஸ் என்று உச்சரிக்கப்படும் ஆங்கில மொழியில் ஜார்ஜ் லூயிஸ் போர்ஜஸ் என்று வழங்கத் தலைப்படும் ஒரு அர்ஜென்டீனிய எழுத்தாளரின் நினைவு வந்தது. ஒர்ழ்ஞ்ங் கன்ண்ள் ஆர்ழ்ஞ்ங்ள் என்பது ஆங்கில எழுத்துக் கூட்டமைப்பு. இது வாசகர்களில் பெரும்பாலானோர் இணையதளம் அல்லது நூலகம் வாயிலாக போர்ஹே குறித்து தெரிந்து கொள்ள விரும்புவார்கள் என்னும் நம்பிக்கையில் கொடுக்கப்பட்டு உள்ளது.
அத்தகைய நம்பிக்கைக்கு காரணம் உம்பர்ட்டோ இகே என்னும் இத்தாலிய நாவலாசிரியர். அவரே, வாசகர்களது அறிவாற்றல் மீது நம்பிக்கை வைத்து எழுத வேண்டும் என்று தற்கால இலக்கிய ஆசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த புகழ்பெற்ற சிலரில் ஒருவராக இருந்தும் முடிவு செய்தவர்.
மேற்கண்ட நீளமான வாக்கியத்தை கொஞ்சம் பிரித்து பார்ப்போம். வாசகனுக்கு தேவைப்படுவதை கொடு, அவரை சந்தோஷமாக வைத்திரு போதும். புதிது புதிதாக வித்தியாசமாக எழுதுகிறேன் பேர்வழி என குழப்ப வேண்டாம் என்றுதான் நிறைய எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், இகே அப்படியில்லாமல் மாறுபட்டார். வாசகனுக்கு புரியாது என்று நாம் ஏன் முடிவு செய்ய வேண்டும்…? புதிதாக எழுதினாலும், புதிராக எழுதினாலும் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தார். அதன் பெயர் “ரோஜா” என்கிற தலைப்பில் ஒரு துப்பறியும் கதை ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதில் எழுதினார். தலைப்பிற்கும் புதினத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு கதை. பதினான்காம் நூற்றாண்டில் நடப்பது மாதிரி வரலாற்று புதிர் புதினம்.
வாசகர்களின் புத்திசாலித்தனத்தை அப்படியே பயன்படுத்திக் கொண்டு எழுதிய உம்பர்ட்டோ இகோவைப் போல உங்களையே ஒரு கதாப்பாத்திரமாக எடுத்துக் கொண்டு பின்னப்பட்ட வலைபோல “சிலந்தி” என்று ஒரு நாவலை கதிரேசன் படித்தார். சிலந்தியை அறிமுகம் செய்தவர் பெயர் எம். சரவணன். கோவை வேளாண் பல்கலைக்கழக பட்டதாரியான எம். சரவணன் சொட்டு நீர் பாசன நிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருப்பவர். இவர் இலக்கிய ஆர்வலர். பேச்சு சொட்டு நீர்ப்பாசன கிளை குழாய்கள் போல பிரிந்த பொழுது சொட்டிய ஒரு தகவல்தான் பின் நவீனத்துவ புதினங்கள் குறித்து, சிலந்தி ஒரு பின் நவீனத்துவ நூல். இது அடையாளம். பதிப்பகத்தினரால் அடையாளம் அடைந்துள்ளது. சரவணன் அண்ணா கூறுகையில் ஒரு பக்கம் படித்தாலே ஒன்பது எழுத்தாளர்களை குறித்து தெரிந்து கொள்கிறோம். அதைத்தவிர அவர்கள் கூறிய மிக மிக முக்கியமான கருத்துக்களின் சாரம் சொட்ட சொட்ட எழுதியிருக்கின்றார் என்று பாராட்டினார். அது புத்தகத்தை பார்த்தவுடன் புரிந்தது. படித்தவுடன் பாராட்டத் தோன்றியது.
நல்ல எழுத்தாளரை அடையாளம் கண்டறிய உதவிய சரவணனுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும். எம்.ஜி. சுரேஷ் அவர்களது புத்தகம் அடுத்த முறை வரும்போது கொண்டு வருகின்றேன் என்றுதான் அவர் கூறினார். ஆனால், உடனே அவனை வேதவாக்காக எடுத்துக் கொள்ள ஏன் தோன்ற வேண்டும்…? அவர் எழுதியுள்ள ஐந்து புத்தகங்களை தேடிப்படித்து வாங்க வேண்டும்….? அப்படி வாங்கியவற்றை அவசர அவசரமாக தேர்வுக்கு படிப்பது போல் ஏன் படிக்க வேண்டும்…? அதிலிருக்கின்ற பின் நவீனத்து முற்போக்கு, வெளிநாட்டு எழுத்தாளர்கள் குறித்து இணையத்தளத்தில் தேட ஏன் மெனக்கெட வேண்டும்…? என்கின்ற கேள்விகளுக்கெல்லாம்… நாகூர் ரூமி அவர்களின் இந் விநாடி புத்தகத்தில் கூறியுள்ளது போல “தற்செயல்” என்று முடித்துவிடலாம். தற்செயலுக்குள் எவ்வளவு தத்துவம் உள்ளது என்பது மேலே கூறியுள்ள புத்தகம் கண்டவர்களுக்கு புரியும். காணாதோரும் காண இருப்போரும், “Butterfly effect” என்கின்ற எட்வர்ட் லாரென்ஸ் அவர்களது கேயோஸ் தத்துவத்தின் ஒரு பாகமே மேற்கண்ட நிகழ்வுகளும், இக்கட்டுரையும் என்று புரிந்து கொள்வர். போர்ஹேயின் கிளை பிரியும் பாதை கொண்ட தோட்டம் என்னும் புத்தகம் 1948 வெளிவந்தது. இதில் கதையின் ஒவ்வொரு திருப்பத்திலும் உள்ள சாத்தியக்கூறுகளுக்கு தொடரும் சூழ்நிலைகளை கதையாக உருவாக்கி இருப்பார். “அட்லாண்டிஸ்” மனிதன் மற்றும் சிலருடன் என்னும் எம்.ஜி. சுரேஷ் அவர்களின் புத்தகம் தமிழில் இத்தகைய உத்தியை பயன்படுத்தியுள்ளது. புத்தகத்தை படிக்கும் பொழுது சுவாரஸ்யம் கூடிக்கொண்டே செல்கின்றது. ஒரு சதுரங்க விளையாட்டின் விளக்க உரையைப் போல.
தமிழில் 12B என்பது ஒரு திரைப்படம் 2001ல் வெளிவந்தது. பஸ்ûஸ பிடத்தால், பிடிக்காமல் விட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று சுஜாதாவும், இயக்கநர் ஜீவாவும் சேர்ந்து எழுதி இயக்கிருப்பார்கள். அப்பொழுது இன்னும் ஆறு வருடத்தில் வெறும் 44 வயதிலேயே ஜீவ மாஸ்கோவில் இதயததுடிப்பை நிறுத்திக் கொள்வார் என்று கூறினால், அதற்கான சாத்தியமில்லை என்ல்று அதிர்ச்சியுடன் கூற தோன்றியிருக்கும். காலம் விசித்திரமானது. அசினை அறிமுகப்படுத்திய ஜீவா இப்போது அமரர். ஒரு நிகழ்வில் நாம் என்ன செய்ய போகின்றோம் என்பதை பொறுத்து அதன் வின் நிகழும் நிகழ்ச்சிகள் அடுக்கடுக்கா நடந்து விடுகின்றன. அவற்றை நாம் கவனிக்காமலே கடந்து போய்விடுகின்றோம்.
திருப்புமுனைகள் என்று கருதப்பட கூடியவை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கூர்மையில்லாத சாதாரண நிகழ்வுகளால் ஆக்கப்படுத்தப்பட்டுள்ளன. இதன் எதிர்மறையும் உண்டு. கோலாகலமான திருமணங்கள் கோர்ட்டுகளில் முடிந்திருப்பதை கூறலாம். திரும்புமுனையாக நாம் கருதும் சந்தர்ப்பங்கள் உண்மையில் அப்படிப்பட்டவைகளாக அடையாளம் காணப்பட வேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லை என்று சொல்ல வருகின்றோம்.
முக்கியமான திருப்புமுனை என்று ஓவராக (அதாவது அளவுக்கதிகமாக) திப்பிவிட கூடாதல்லவா. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் புத்தகத்தில் ஒவ்வொரு சம்பவத்திற்கும் நான்கைந்து வகையான முடிவுகளை கொடுத்திருப்பார். அதில் ஒரு கதாபாத்திரமான அஜய் என்னும், நேர்மையான ஐ.ஏ.எஸ்., திருப்பங்களுடன் விவரித்துள்ளார்.
கிளைவிரியும் பாதையுள்ள தோட்டத்தில் ஒவ்வொரு பாதையிலும் நுனிவரை சென்று திரும்பும் சந்தோஷம் வாழ்விலும் கிடைத்தால் எப்படி இருக்கும். கிரிக்கெட் விளையாட்டில் ஒரு ஃபீல்டிங்க் மிஸ் ஒரு இரன்தானே என்று பார்த்துவிட முடியாது. கால் பந்திலோ எல்லா கால்களுமே, கோல்களுக்கானவையே.
முதல் பத்தியில் கண்ட, சரணை, அதிக பேச வேண்டாம் என்று வேகத்தடை போட்டுக் கொண்டால் என்ன ஆகும். அப்படித்தான் பேசுவேன், இதுவே எனது உண்மையான இயல்பு… தடுத்தால்… பேச வராது என்று குறைத்துக்கொள்ளாமல்… நயாகரவாக கொட்டினால் என்ன ஆகும்…? என்று இரண்டு கிளை பிரிப்போம்.
மெதுவாக பேசுவதால் நன்றாக புரிந்து இருநூற்றி எழுபத்தைந்திற்கு இருநூற்றிற்கும் அதிகமான மதிப்பெண் பெற்று வெற்றிபெறலாம். வேகமாக பேசுவதால் நிறைய பேசி நடுவர்களை கவர்ந்து அதிக மதிப்பெண்களை குவித்து வெற்றி பெறலாம் என்கின்ற இரண்டு அடுத்த அடுக்கிலான நேர்மறை விளைவுகளை இங்கே கொடுத்து உள்ளோம்.
எதிர்மறை விளைவுகள் வேண்டாமே என்று விட்டுவிட்டோம். இப்படி ஒவ்வொரு முடிவுகளுக்கும் ஏகப்பட்ட கிளைகள். இன்றைக்கு காலை உணவு இட்லியா, தோசையா…? என்பதில் ஆரம்பித்து எல்லா முடிவுகளை தொடர்ந்தும் பல கிளைகள் விரிய தொடங்கலாம். அவுட் ஆஃப் தி பாக்ஸ் தீர்வுகள் கிடைக்கலாம்.
அதன் பெயர் ரோஜா என்கின்ற நாவல் தலைப்புக்கு தொடர்புபடுத்த பல விளக்கங்கள் இகோவின் படைப்புக்கு தேவைப்பட்டது. இந்தக் கட்டுரையை படிப்பதற்கு ஒரு நல்ல அமைதியான மனநிலை உங்களுக்கு தேவைப்பட்டது. அதுவே தலைப்பா கொடுக்கப்பட்டு உள்ளது. நேர்முக தேர்வுகளில் என்ன பதில் சொல்லப் போகிறோம் என்பது வினாடிக்கும் குறைவான கால அவகாசத்தில் முடிவெடுக்கப்பட்டாக வேண்டும் அந்த பதிலில் எதிர்காலம் அடங்கி உள்ளது. சில ஒப்பற்ற முடிவுகள், புதுமையான சிந்தனைகள், கிரியேட்டிவிட்டி எல்லாம் கிளைகளே.
கேள்விகளை முன்கூட்டியே கணித்து அமைதியா மனநிலையில் பதில்களை தயாரித்து நிதானமாக திருத்தி பேசிப்பார்த்து, தனியாக, தயாரித்து, மாதிரி தேர்வுகளில் சொல்லி கேட்பவர்கள் கொடுக்கின்ற பின்னூட்டத்திற்கு தக்கவாறு நம்மை மாற்றி தயாரித்து கொள்ள வேண்டும்.
இவை எல்லாமே, மனம் சாந்தமாகவும், முழு நம்பிக்கையுடனும் இருக்கும் பொழுதுதான் சாத்தியம் ஆகிறது. பயிற்சியாளர் பயிற்சியின் பக்கத்தில் இருப்பார். பரீட்சையின் போது…?
எனவே…
அமைதியான தணருணத்தில் கிளைபிரியும் சாத்தியக்கூறுகளை நாம் ஆராய்ந்தோமேயானால் பயணிக்கும் பாதை பிரகாசமாக அமையும். உள்ளத்திற்குள் உருவாகின்ற சூழ்நிலைகள்தான் உண்மையிலும் உருவாகப்போகின்றன. உள்ளம் உடைமை உடைமை என்று திருவள்ளுவர் கூறியதையேதான் கதிரேசனும் சொல்ல விழைகிறார். உம்பர்டோ இகோவும், போர்ஹெசும் இங்கே உசுப்பி விடுவற்காகவும் உலக நடப்பிற்காககவும் உதாரணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அமைதி தவழட்டும்… சரண் வெல்லட்டும்… கிளைகள் பிரிந்து வளரட்டும்….
0 comments Posted in Articles