– 2016 – March | தன்னம்பிக்கை

Home » 2016 » March

 
  • Categories


  • Archives


    Follow us on

    ஆட்டிசம்

    ஆட்டிசக் குழந்தையின் வளர்ச்சிப் பாதையின் தன்மைகள்

    சமூக வாழ்வுக்குத் தேவையான ஆற்றல்கள் இல்லாமை

    இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் சமவயது உடைய குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அதை மேலும் வளர்க்கும் வழிமுறைகள் அறியாதவர்களாக இருப்பார்கள். அதற்காக நல்ல உறவை உருவாக்கிக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை என்று கூறிவிட முடியாது. அதற்கான வழிமுறைகள் அவர்களுக்குத் தெரியாது. சமூக உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல்களை அவர்களுக்குக் கற்றுத்தருவது முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பணி ஆகும்.

    தொடர்பு கொள்ளும் ஆற்றல்கள் இல்லாமை

    ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பர். இவர்களில் பெரும்பான்மை யோர் பேசும் திறன் அற்றவர்கள். அப்படியே ஒருகால் பேசும் திறன் இருந்து மொழி ஆற்றலும் வாய்க்கப்பெற்றவர்கள் கூட அவற்றைத் திறம்பட கையாளும் வழி தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள். மேலும் பேச்சு மற்றும் முகபாவனைகள், சைகைகள் மூலம் தங்கள் எண்ணங்களை உணர்த்துவதற்கோ அல்லது மற்றவர்கள் உணர்த்துவதைப் புரிந்துகொள்ளவோ இயலாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டுக்கான திறனோ ஆர்வமோ இல்லாமை. சாதாரணமாக விளையாட்டின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமும் கற்பனைத் திறனும் ஆட்டிசக் குழந்தைகளிடம் காணப்படுவதில்லை. தாம் பார்ப்பதைப் போலவே பாவித்துக் கொண்டு அவற்றினை விளையாட்டில் புகுத்தி மகிழும் (Pretend Play) கற்பனைத்திறன் இல்லாதவர்கள் இவர்கள். புலனியக்க ஒருங்கிணைப்பில் உள்ள கோளாறினால் (Disorder of Sensory Integration) சிறிதும் சலிப்படையாமல் தொடர்ந்து ஒரே மாதியான விளையாட்டுகள், அங்க அசைவுகளில் இந்தக் குழந்தைகள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகள் பொதுப்படையானவை, நபருக்கு நபர் மாறுபடக் கூடியவை.

    ஆட்டிசத்தினால் பாதிக்கப்படும் ஒரு நபர் அந்தக்கோளாறு இருப்பதையே அறியாது தன் வாழ்க்கையை முடிப்பதுண்டு. இந்தக் குறைபாட்டினால் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.

    ஆட்டிசத்தின் அறிகுறிகளைக் கண்டறிதல்

    ஆரம்பக் கட்டத்திலேயே ஆட்டிசம் இருப்பதைப் பரிசோதித்து கண்டறிதல், சிகிச்சைக்கும் மறுவாழ்வு திட்டங்களை மேற்கொள்வதற்கும் மிக அவசியமானது. மற்றநோய்களைப் போல் படிப்படியாக ஆய்ந்து அறிய உதவும் முறையான பரிசோதனைகள் மற்றும் உடல்ரீதியான அறிகுறிகள் ஆட்டிசத்திற்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குழந்தை நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அதற்கு இருக்கும் அல்லது இல்லாத சில தன்மைகளைக் கவனித்துதான் ஆட்டிசம் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

    நோய் பரவல் தன்மை

    ( Epidemiology )

    பொதுவாக எங்கும் வியாபித்துக் காணப்படும் ஆட்டிசம் என்ற கோளாறு பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை அதிகம் தாக்குவது தெரிய வந்துள்ளது. இக்குறைபாடுள்ள குழந்தைகளில் ஆண்குழந்தைகள் மற்றும் பெண்குழந்தைகளின் விகிதம் 4 : 1 என்பது கண்டறியப்பட்டுள்ளது இந்தியாவில் மட்டும் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் ஆட்டிசத்தினால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனாலும், ஆட்டிசம் பற்றிய எந்த விவரமும் பொதுமக்களை இன்று வரை அதிகளவில் சென்றடையவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

    காரணங்கள்

    அமெரிக்க ஆய்வு

    ஆட்டிசம் பாதிப்பிற்கு எந்தக் காரணமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் இது குறித்து பல கோணங்களிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு குழந்தைக்குப் பின் குறுகிய இடைவெளியில் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மேற்கொள்ளப் பட்ட ஆரம்ப கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. முதல் குழந்தை பிறந்த பிறகு, குறைந்தபட்சம் 3-ஆண்டுகளுக்குப் பின் பிறக்கும் குழந்தையை விட, 2-ஆண்டுகளுக்குள் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிச ஆபத்து அதிகம் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

    கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அளவுக்கு மீறிய மனஉளைச்சல், மூன்று மாதம் முடிந்த தருணத்தில் ஏற்படும் இரத்தக்கசிவு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் நச்சுக்களின் தாக்கம் போன்றவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை பாதிப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது. குரோமோசோம் கோளாறுகள் (Chromosome 16ல் 11.2 . 15 வ் 24. 11ல் 12 – ல்13) மற்றும் பரம்பரை அல்லது மரபணுக் கோளாறுகளும் காரணங்களாக வகைப் படுத்தப்படுகிறது.

    மேலும், 60% ஒற்றைக் கருமுட்டையை (Monozygotic twins) சேர்ந்த இரட்டை குழந்தைகள் இக்கோளாறினால் பாதிக்கப்படுகின்றன. இரட்டைக் கருமுட்டையை (Dizygotic twins) சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் பாதிக்கப்படுவதில்லை. தடுப்பூசி போடுவதினால் இக்குறைபாடு ஏற்படுகிறது என்பது இதுவரை ஆராய்ச்சியில் நிரூபிக்கப்படவில்லை. குறைந்த காலத்தில் பிறத்தல் மற்றும் குழந்தைபருவ (Schizophrenia) மனச்சிதைவு போன்ற கோளாறுகளும் இவர்களுக்கு இணைந்து காணப்படலாம்.

    நோயியல் (Pathalogy)  குழந்தை பிறந்தவுடன் 2 – மாதங்கள் வரை தலையின் சுற்றளவு சரியான அளவிலோ அல்லது சிறிது குறைந்த அளவிலோ காணப்படும். மேலும் 6 – 14 மாதங்களுக்குள் இயல்பு நிலையை விட தலையின் சுற்றளவு அதிகமான வளர்ச்சியடைந்து காணப்படும். 2-4 வயதில் மூளை யிலுள்ள பாகங்களின் பரிமாண அளவு அதிகரித்துக் காணப்படும். மூளையின் சில பாகங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. அவை பெரும்பாலும் சிந்தனை திறன், மொழி, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மற்றும் சமூக உறவுகளைச் செயல்படுத்தும் பாகங்கள் ஆகும்.

    வியாதி நிர்ணயம் (Diagnosis)

    ஆட்டிசத்தின் கோளாறுள்ள குழந்தைகளை குழந்தை நல மருத்துவர், மனநல மருத்துவர், தொழில் வழி பயிற்சியளார், பேச்சு பயிற்சியாளர் மேலும் பெற்றோர்கள் முக்கிய அங்கமாக நிர்ணயம் செய்வர். இவர்கள் பலவிதமான அளவுகோல்களை (அறிவுத்திறன் சம்பந்தப்பட்ட, புலனியக்க ஒருங்கிணைப்பு, சமூக உறவு, கல்வி, விளையாட்டு) பயன்படுத்தி இக்கோளாறினை உறுதி செய்வர்.

    தீர்வு

    ஆட்டிசத்திற்கு மருத்துவ தீர்வு என்பது கிடையாது. ஆரம்பக்கட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து, அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்த முள்ளதாகவும் செய்து கொள்ள உதவலாம். இதற்கான வழிமுறைகள் குறைபாடுகளின் தன்மையைப் பொறுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பொறுத்தும் வேறுபடும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே இந்தக் குறைபாட்டைக் கவனித்து ஆவன செய்வது பெரிதும் உதவும் என்றாலும், அதற்காக தாமதமாகச் செய்தால், பலன் இருக்கப்போவதில்லை என்று அசட்டையாகவும் இருந்து விடவும் கூடாது. தாமதமாகவாவது செயல்படுவது, செயல்படாமலேயே இருப்பதைக் காட்டிலும் சிறந்தது.

    இக்குழந்தைகளுக்குக் குழந்தை நல மருத்துவர், தொழில் வழி பயிற்சியாளர், மனநல மருத்துவர், பேச்சுப் பயிற்சியாளர், சிறப்பு ஆசிரியர், சமூக ஆர்வலர் மேலும் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியம் ஆகும்.

    (உ.ம்.) தொழில் வழி பயிற்சியாளர், இக்குழந்தைகளின் புலனியக்க ஒருங்கிணைப்பில் (Disorder of sensory Integration) உள்ள கோளாற்றினை சரிசெய்வதன் மூலம் இக்குழந்தை களின் அன்றாட தேவைகளை வெளிப்படுத்தவும், செய்து கொள்ளவும், மேலும் அறிவுத்திறன், கல்வி, விளையாட்டு, நல்லொழுக்கம் போன்றவைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் முடியும்.

    மேலும் இத்தொழில் வழி பயிற்சியாளர், சிறப்பு ஆசிரியர், பேச்சுப் பயிற்சியாளர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் ஒரு குழந்தையினை நல்வழிப்படுத்த முடியும்.

    சிறப்பு ஆசிரியர்கள், இக்குழந்தைகளுக்குச் சிறப்பான சில விசேஷ வழிமுறைகள் மூலம் கற்றுத் தருவதனால் இக்குழந்தைகளால் சிறப்புப் பள்ளி முதல் இயல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல இயலும். பேச்சுப் பயிற்சியாளர் இக்குழந்தைகளுக்கு ஆரம்பகால கட்டத்திலேயே பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு வார்த்தை முதல் பல வாக்கியங்கள் வரை பேச இயலும்.

    தன்னைச் சுற்றி நடக்கும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் மூழ்கிக் கிடக்கும் இக்குழந்தைகளுக்குச் சரியான தீர்வு என்னவென்பது குறித்து மருத்துவத்துறையினரால் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை என்பது தான் வருந்தத்தக்க விஷயம்.

    சிகரமே சிம்மாசனம்

    “வானை அளப்போம் கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தை கண்டு தொழுவோம்” பாட்டுப் புலவன் பாரதி அரை நூற்றாண்டுக்கு முன்பு கனவு கண்டதையும் தாண்டி செவ்வாய் கிரகத்திற்கும் மங்கள்யான் அனுப்பி அரிய தகவல்களை அண்ணாந்து பார்த்து அதிசயித்தோம். அறிவியலின் அற்புதங்களில் மனிதனின் தன்னம்பிக்கை தடம் பதித்து வென்றிருக்கிறது என்பதற்கு பலநூறு சான்றுகள் இந்த மண்மண்டலத்திற்கு கிடைத்திருக்கிறது.

    பூமியைச் சுற்றி வந்த அமெரிக்க செயற்கைகோள் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை கடக்கும்போது மூன்று விநாடிகள் அப்படியே நின்று விடுகிறது. பின்னர் அதுதன் போக்கில் பயணப்படுகிறது, செயல்படுகிறது. செயற்கை கோளில் பழுதோ அதன் கருவிகளிலோ, பாகங்களில் பழுதோ இல்லாமல் இருந்ததைக் கண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி கூடமே அதிர்ச்சியில் உறைந்து போனாலும், நாசா புது ஆராய்ச்சியையும் மேற்கொண்டது.

    நமது நாட்டின் புதுச்சேரியில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலின் நேர்மேலே வான்பகுதியில் செல்லும் எந்த ஒரு செயற்கைகோளும் மூன்று விநாடிகள் நிற்கும் நிகழ்வு (ஸ்தம்பிப்பு) கண்டுபிடிக்கப்பட்டபோது இது நாசாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தையே பிரமிப்பில் ஆழ்த்தியது என்பது அதிசயத்தின் அதிசயமே!

    அதன் காரணத்தை ஆராய்ந்தபோது ஒவ்வொரு நாளும், விநாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குத் தெரியாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோவிலின் மீது விழுந்து கொண்டே இருப்பதுதான் காரணம் என்பதை கண்டறிந்தனர். ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போதும் இந்த கதிர்கள் 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கும். ஆனால் செயற்கை கோளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை எனும் போது ஆச்சரியத்தின் அளவுகள் அதிகரிக்கவே செய்கிறது. திருநள்ளாறுக்கு வந்த நாசா விண்வெளிக் குழுவின் ஆய்வறிக்கை கூறுவது மனிதனுக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை உணர்த்துகிறது.  இன்று வரையிலும் விண்ணில் மனிதனால் ஏவப்படும் செயற்கைக்கோள்கள் அனைத்தும் திருநள்ளாறு பகுதியை கடக்கும்போது மூன்று விநாடிகள் செயல் இழந்து விடுகின்றன என்பது முற்றிலும் உண்மை என்று விஞ்ஞானிகளே ஏற்றுக் கொள்வது என்பது அறிவியலின் அற்புதம் தானே!

    கைகால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் விழி அசைவில் இணையத்தில் உலவ உதவும் கருவியாகிய “ஐகேன் ‘+’ ஐ சாம்சங் நிறுவன தயாரித்துள்ளது. இணைப்புக் கருவியாக இருக்கும் இதை பயன்படுத்துபவர் கணினியை இயக்கினால் அவரது பார்வை அசைவு மூலமாகவே பிரவுஸரில் நுழைந்து தேவையான இணைப்புப் பக்கத்தை பார்வையிடலாம். அச்சிடவும் முடியும் உள்ளத்தில் இல்லை ஊனம் என்னும் தன்னிம்பிக்கையாளர்களை அறிவியல் வாரி அணைத்துக் கொண்டது.

    விழி அசைவு மற்றும் இமை மூடுதலின் வித்தியாசங்களை கடைபிடிப்பதன் மூலம் 18 வகையான விழியசைவுகளை இனம் கண்டு இயங்குகிறது இந்த கருவி. அறிவியலின் அற்புதத்திலும், மனிதனுக்குள் மண்டிக்கிடக்கும் தன்னம்பிக்கைக்கும் இதுவும் ஒரு மைல்கல் என்பது உண்மைதானே!

    நமீபியா ஒரு வெப்பநாடு. இங்கு ஜனவரியிலிருந்து மார்ச் வரை மட்டுமே மழைப்பொழிவு காலம். அந்த காலங்களில் 240 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு இடத்தில் மழை பெய்ய இருக்கிறது என்றால் அந்த இடத்தை யானைகள் கூட்டம். எப்படியோ அறிந்து கொண்டு அந்த இடம் நோக்கி நகர்ந்து செல்கின்றன என்பது இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. என்னே விந்தே! என்னே அற்புதம்!

    வெப்பத்தை கணக்கிட விஞ்ஞானம் வெப்பமானியை கண்டுபிடித்து மனித இனத்திற்கு கொடுத்திருக்கிறது. ஆனால் எந்த கண்டுபிடிப்பும் இல்லாமல் இலவசமாகவே வெப்பத்தை கணக்கிடும் முறையே ஒரு வண்டு இனத்துக்கு வகுப்பு எடுத்து கொடுத்திருக்கிறது. அந்த வண்டை ‘சில் வண்டு’ என்றும் ‘சுவர்க்கோழி’ என்றும் அழைப்பதுண்டு இதற்கு விஞ்ஞானம் விசாலம் கொடுத்து வைத்திருக்கும் பெயர் ‘ஏகாந்தல்’ என்பதாகும். இந்த வண்டு எழுப்பும் ஒலியை வைத்து ஒரு நாளில் வெப்பநிலையை துல்லியமாக கணக்கிட்டுக் கொள்ளலாம். வெப்ப நிலைக்கு ஏற்றவாறு இந்த வண்டு ஒலி எழுப்புகிறது. இதை வைத்தே வெப்பநிலையை கணக்கிடலாம்.

    ஒரு நிமிடத்திற்கு எத்தனைமுறை இந்த வண்டு ஒலி எழுப்புகிறது என்பதை துல்லியமாக கணக்கிட வேண்டும். அந்த எண்ணை நான்கால் வகுக்க வேண்டும். வகுத்த பின் வரும் விடையுடன் நாற்பதை கூட்ட வேண்டும். இப்போது கிடைக்கும் விடையே அந்த நேரத்தின் வெப்ப அளவாகும். அதுவும் பாரன்ஹீட் அளவில் கிடைக்கிறது.

    மக்களின் கூற்றை விஞ்ஞானம் உடனே ஏற்றாக் கொள்கிறது? அது சில்வண்டை வைத்து பலமுறை சோதித்து பார்த்தது. கிட்டத்தட்ட ஐம்பது முறைக்கும் மேல் இந்த சோதனையில் ஒருமுறை கூட விடைமாறி வரவேயில்லை. சில் வண்டின் வெப்பம் உணரும் திறனும் வெப்பமானி கூட்டும் வெப்ப அளவும் ஒன்றாகவே இருந்தன. இயற்கையின் வினோதம் வியப்பான ஒன்றுதானே!

    கடலுக்குள் மனித இனத்தை அச்சுறுத்துவதில் சுறாமீன்கள் முதன்மை வசிக்கின்றன. மனிதர்கள் மற்றும் தங்களுக்கு உணவாகும் மீன்களின் இருப்பிடங்களை எளிதல் கண்டுபிடித்துவிடும் – திறமையை பெற்றுள்ளது சுறா. அது, மீன்களுக்குரிய அற்புதமான குணாதிசயமாகும். கடலில் குறிப்பிட்ட சில எல்லையை ஒரு மனிதன் தொடும்போது சுறாமீன்கள் எங்கிருந்தாலும் – அந்த மனிதனை நோக்கி சரியாக வந்து சேர்ந்துவிடும் அதன்பிறகு அவன் கதி அதோகதிதான். மனிதர்கள் இருக்கும் இடத்தை சுறாமீன்கள் மட்டும் எப்படி சரியாக அறிந்து கொள்கின்றன? என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றலாம். உலகில் எந்தவொரு மீன் இனத்திற்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த சுறா மீன்களுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது மனிதனின் இதய துடிப்பை உணரும் தன்மை சுறாமீன்களை தவிர வேறு எந்த உயிரினத்திற்கும் கிடையாது என்கின்றார் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள். கடலின் ஆழத்தைவிட சுறாமீனுக்குக்கூட மனிதனின் இதயத்துடிப்பை உணரும் திறனை வைத்த இயற்கை பொக்கிஷங்களை படித்து வைப்போம் சிகர சிம்மாசனங்களில் நிறுத்தி வைப்போம்.

    வருகிறது ‘ஸ்மார்ட் சிட்டி’!

    21ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு நவீன நகரங்கள் இருக்க வேண்டும் என்று நாடு முழுவதும 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  அதன் முதல்கட்டமாக 20 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  இரண்டாவது கட்டமாக 2017ஆம் ஆண்டில் 40 நகரங்களும், மூன்றாவது கட்டமாக 2018ஆம் ஆண்டில் 40 நகரங்களும் தேர்ந்தெடுக்கப்படும்.  100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டத்தை 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    தமிழ்நாடு மாநிலத்திலிருந்து  சென்னை, கோவை ஆகிய இரு நகரங்களும், அண்டை மாநிலங்களான கேரளாவிலிருந்து கொச்சி, கர்நாடகாவிலிருந்து தாவணகரே  மற்றும் பெலகாவி, ஆந்திராவிலிருந்து காக்கிநாடா  மற்றும் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசத்திலிருந்து போபால், இந்தூர் மற்றும் ஜபல்பூர், இராஜஸ்தானிலிருந்து உதய்பூர் மற்றும்   ஜெய்ப்பூர்;, மகாராஷ்டிரத்திலிருந்து சோலாப்பூர் மற்றும் பூனா, குஜராத்திலிருந்து அகமதாபாத் மற்றும் சூரத், பஞ்சாபிலிருந்து  லூதியானா, அஸ்ஸாமிலிருந்து கௌஹாத்தி, ஒடிசாவிலிருந்து புவனேஸ்வர், தலைநகர் புதுதில்லி போன்ற 20 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  இந்தப்பட்டியலில் புவனேசுவரம், பூனா, ஜெய்பூர் ஆகிய மூன்று நகரங்களும் முதல் மூன்று இடங்களையும், கோவை 13-வது இடத்தையும், சென்னை 18வது  இடத்தையும் பிடித்துள்ளன. வளர்ந்து வரும் நகரமான கோவை முதல் கட்டத்திலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.  முதல் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களின் வளர்ச்சிக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 50,802 கோடி செலவிடப்படவுள்ளது.

    பளபளக்கும் சாலைகள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தானியங்கி சிக்னல், விதிமீறல்களை கண்காணிக்க ஆங்காங்கே கேமராக்கள், திரும்பிய பக்கமெல்லாம் பசுமைப் பூங்காக்கள், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், தரமான குடிநீர், உலகத்தரம் வாய்ந்த கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், நவீன தொழில்கூடங்கள் . . . ஆம்! இதுபோன்ற நவீன வசதிகளைக் கொண்ட நகரங்களை வடிவமைக்கத்தான் மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிவித்துள்ளது.

    தற்போது நம் நாட்டில் 31 சதவீத மக்கள் நகரங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.  2030ஆம் ஆண்டு வாக்கில் இது 50 சதவீதமாக உயரக்கூடும்.  எனவே அதிகரித்து வரும் நகர மக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    முன்னதாக, நாடு முழுவதிலும் 100 நகரங்களை ‘ஸ்மார்ட்’ நகரங்களாக மாற்றுவதற்கான விதிமுறை அறிக்கையை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை 2015ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது. இதையடுத்து ‘ஸ்மார்ட்’ நகரம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதலாவது பட்டியலை தேர்வு செய்வதற்காக அனைத்து மாநிலங்களுக்கு இடையிலும் போட்டி ஒன்றை மத்திய அரசு நடத்தியது. இதன்படி ‘ஸ்மார்ட்’ நகரத்துக்கான திட்ட மதிப்பீடு, திட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்பு, நகரங்களுக்கான இலக்குகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்வைத்து பரிந்துரை அறிக்கைகளை, மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அனுப்பி வைத்தன.  இதில் சிறந்த அம்சங்களுடன் வந்த பரிந்துரைகளில் 20 நகரங்களைத் தேர்வு செய்து முதலாவது பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தும். இங்கு அனைவருக்கும் வீடு, பொருளாதார வளர்ச்சி, சுத்தமான காற்று, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் கொண்டுவரப்படும்.  மின்சார விநியோகம், சுகாதாரத் திட்டங்கள், திடக் கழிவு மேலாண்மைக்கான கட்டமைப்பு, பொதுப் போக்குவரத்து, இ-சேவை மையம், தகவல் தொழில் நுட்பத் தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கண்ட நகரங்களில் முழுமையான அளவில் செயல்படுத்தப்படும்.

    வளங்களைப் பாதுகாப்பது, ஸ்மார்ட் சிட்டியின் அடிப்படைத்தத்துவம், ஸ்மார்ட் சிட்டியின் மின்சார உற்பத்தி ஆதாரங்களில் பத்து சதவீதமாவது சூரிய மின்சக்தியாக இருக்க வேண்டும். கட்டடங்களில் சூரிய ஒளி மேற்கூரைகள் இருப்பதை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். நகர விரிவாக்கத் திட்டங்களில் 80 சதவீதம் மின்சக்தியை மிச்சப்படுத்துவதாக அமையும்:  தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் போக்குவரத்து முறை, போக்குவரத்தை எளிதாக்கும். மழைநீர் சேகரிப்பு மற்றும் வீணாகும் நீரை மறுசுழற்சி செய்தலுக்கான ஏற்பாடுகளும் இருக்கும்.

    அதிகமான பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் ஆகியவற்றை உருவாக்கி ஸ்மார்ட் சிட்டிகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்: பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தி வீடு வரை செல்லும் வசதியை உருவாக்கும். பொது இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருக்காது. கேபிள்கள் மேலே தொங்காமல் அவையனைத்தும் தரையில் புதைத்து புதைவடங்களாக மாற்றப்படும்.   பொது இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

    இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் உள்ள அனைத்தும் ஒரு நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருக்கும். கேமராக்கள், வயர்லெஸ் கருவிகள், தகவல் மையங்கள் என ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் ஒரு விளக்கை அணைக்க மறந்துவிட்டாலும் அந்த வேலை செய்து முடிக்கப்படும்.  கார்களை டிராபிக் இல்லாத இடமாக பார்த்து பார்க் செய்திட உதவும்.

    இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் பல முன்னனி நிறுவனங்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க பல சாப்ட்வேர்களை உருவாக்கி கொண்டே இருப்பர்.  இப்போது முன்னனி நிறுவனமான ஐ.பி.எம் பல இடங்களில் ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்க உதவ முன்வந்துள்ளது. இந்த ஐ.பி.எம் நிறுவனம் சிங்கப்பூர் கலிபோர்னியா ஆகிய இடங்களில் உள்ள வண்டிகளின் எண்ணிக்கையை குறித்து வைத்து எந்த இடத்தில் டிராபிக் ஜாம் ஆக போகிறது என முன் கூட்டியே கணித்து விடும். அதற்கேற்ப போக்குவரத்தை மாற்றி அமைத்து டிராபிக் ஜாம் இல்லாமல் செய்து விடுவர்.

    எந்த நகரத்தின் செயல்பாடுகளெல்லாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இயங்குகிறதோ, அந்த நகரத்தை ஸ்மார்ட் சிட்டி என்று கூறலாம்.  நவீன நகரம் என்ற சொல்லுக்கு பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இலக்கணம் கிடையாது.  வெவ்வேறு நாடுகளில் அது வெவ்வேறு விதமாக அமைந்திருப்பதே இதற்குக் காரணம்.  நவீன நகரம் என்பது ஐரோப்பாவில் ஒரு மாதிரியும், பிரேசில் நாட்டில் வேறுமாதிரியும் இருக்கலாம்.  எனினும் நவீன நகரங்கள் என்பது நான்கு அடிப்படை கட்டமைப்புகளைக் கொண்டதாக இருக்கும்.  சமூகக் கட்டமைப்பு, பொருளாதாரக் கட்டமைப்பு, அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்பு ஆகியன சேர்ந்ததாக இது இருக்கும்.

    இவையெல்லாம் நமது நகரங்களில் நடைமுறை சாத்தியமா? என்ற கேள்வி எழக்கூடும்.  உண்மைதான்.  பழைய நகரங்களை தொழில்நுட்பத்துக்கு உகந்ததாக மாற்றுவது அவ்வளவு சுலபமல்ல. ‘ஸ்மார்ட் சிட்டீஸ் மிஷன்’  இதற்கு மூன்று தீர்வுகளை முன் வைக்கிறது.  இருக்கும் குடியிருப்புகளை மேலும் வாழ்வதற்கு இலகுவாக்குவது,  பழைய குடியிருப்புகளை மாற்றி புதிய வடிவமைப்புக்குக் கொண்டு வருவது மற்றும்  காலி இடங்களை ஏழைகளுக்கான குடியிருப்புகளாக மாற்றி புதிய வடிவமைப்புகளைச் செய்வது.  இதனைச் யார் செயல்படுத்துவார்கள் என்றால் மாநில அரசுகளும், நகர்புற, உள்ளாட்சி அமைப்புகளும் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்துடன் இணைந்து இதனைச் செயல்படுத்துவார்கள்.

    இந்தத் திட்டத்திற்கு பணம் எங்கிருந்து வரும் என்று கேட்டால், முதல் வருடத்தில் ஒவ்வொரு நகரத்துக்கும் மத்திய அரசு 200 கோடி ரூபாய் வழங்கும். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு வருடந்தோறும் 100 கோடி ரூபாய் வழங்கப்படும்.  இதற்கு சமமான தொகையை மாநில அரசுகள் வழங்க வேண்டும். இதில் அரசு தனியார் ஒத்துழைப்பு இருக்கும். உலக வங்கி போன்ற அமைப்புகளிடமிருந்து கடன் வாங்குவதும் இதில் அடக்கம். மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் நில வரி, தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியும் இந்த வசதிகள் வழங்கப்படும்.

    இந்தத் திட்டம் எதிர்பார்க்கும் பலனைத் தருமா? என்று பலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.  ஸ்மார் நகரங்கள் மூலதனத்தையும், முதலீட்டையும் முன்னிறுத்தி உருவாக்கப்படுபவை.  எனவே இது மனிதர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாது என்றும் பணம் படைத்த மேட்டுக்குடி மக்களுக்கான குடியிருப்புகளாக மாறிவிடுமோ என்றும் அஞ்சுகின்றனர்.  மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை வளரும் நாடுகளில் இறக்குமதி செய்வதற்காகத்தான் இதுபோன்றதொரு நகரங்களை பரிந்துரைக்கின்றன என்றும் சொல்லப்படுகின்றது. வளரும் நாடுகள் பலவும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக பணக்கார நாடுகளில் தோற்றுப்போன இத்தகைய திட்டங்களை களத்தில் இறக்கியுள்ளனர் என்றும் கனவு நகரை எல்லோரும் விரும்பலாம், ஆனால் அத்தகைய நகரங்களில் வாழும் வாய்ப்பு சாமானிய மனிதனுக்கு கிடைக்காது என்றும் இத்திட்டத்தின் மறுபக்கத்தை சுட்டிக்காட்டுகின்றனர்.  ஸ்மார்ட் நகரங்களுக்கு பதிலாக நாட்டிலுள்ள ஒவ்வொரு சிறு நகரத்துக்கும் குடிநீர், வடிகால் வசதி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரலாமே என்று பேச்சும் எழத்தான் செய்கின்றது. ஆக, இத்திட்டத்தின் வெற்றியை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    மாடும் மருத்துவமும்

    நம் பெயர் கதிரேசன். வங்கி மேலாளர். உயர் பதவி இருந்தாலும், ஒரு மாட்டை தேடி மெனக்கட்டு சென்று கொண்டு உள்ளோம். உணவு இடைவேளைக்குகள் திரும்பி விட வேண்டும். பிரேமா அம்மாள், அறுபது வயதுக்கம் மேலானவர். இந்தியன் ஏர்லைஸில் வேலை செய்து ஓய்வான, அடையாற்றில் வசிக்கும் ஒரு மூத்த குடிமகள். கதிரேசனுக்கு இராமகிருஷ்ண மடத்தின் பக்தர் குழு மூலமாக நன்கு அறிமுகம். அம்மா அழைத்து இலட்சுமி என்னும் மாடுக்கு உடல் சரியில்லை. ஏதாவது செய்ய முடியுமா…? என்று கேட்டார். கதிரேசனை அந்தக் கேள்வி பத்துப்பதினைந்து வருடங்கள் பின்னால் அழைத்துச் சென்று விட்டது. சில நொடிகளில், மாடுகளுக்கு வைத்தியம் பார்ப்பது பொள்ளாச்சி பக்கம் மாட்டு வைத்தியராக பணி புரிந்த பொழுது நடந்தது. பாலும் சாணமும் கேமியமும் கலந்த வாசனை இப்பொழுதே நாசியை வருடியது.

    சில நேரங்களில் மாடுகள் முரண்டு பிடித்து உதைக்க வருவதும் உண்டு. இலட்சுமி என்று பெயர் இருந்தால் அமைதியாக இருக்கும் என்று நம்ப தோன்றியது. கோட்டூர்புரத்தில் மார்கெட் தெருவுக்குள் வழிகேட்டு போக வேண்டியிருந்தது.

    கதிரேசனுக்க முதலில் அமைப்பு வந்த பிறகு தான், தானும் ஒரு கால்நடை மருத்துவர் என்பது நினைவுக்கு வந்தது. இவ்வளவு வருடங்கள் கழித்து, அதுவும் வங்கிப்பணியில் நீண்டநாள் மூழ்கிவிட்ட பிறகு திடீரென, நாம் சென்று வைத்தியம் பார்க்க இயலாது என்று தெளிவாக தெரிந்தது. மருந்தில்லை, சிரிஞ்சில்லை. போக வேண்டும் என்று தோன்றியதே மகிழ்வு. உடனே நண்பர் ஒருவரிடத்தில் தொலைபேசியில் அழைத்தார். டாக்டர் ஸ்ரீகுமார் உடனே போக வேண்டுமா…? என்று கேட்டார். பிறகு எண்கள் பரிமாறிக்கொண்ட பிறகு இரவு வேளையில் வைத்தியம் பார்க்கும் சாத்தியக்கூறு இல்லை என்று தெரியவந்தது. சென்னையில் சிறிய விலங்குகள் தான் அதிகம். பெரிய மாடுகள் எப்பொழுதாவது ஒருமுறைதான் வைத்தியம் பார்க்க வருகின்றன என்று ஸ்ரீகுமார் கூறினார். உனக்காக நான் நாளை செல்கின்றேன் என்றார். நானும் வர முயற்சிக்கின்றேன் என்றார் கதிரேசன்.

    அதன் விளைவாகத்தான் இப்போது கோட்டூர்புரத்தில் சின்ன சந்திற்குள் உள்ள மாடிவீட்டு இடுக்கில் கான்கிரீட் தரையில் ஈர சாணிக்கு இடையில் படுத்துக் கிடக்கிற இலட்சுமியை பார்த்து திகைத்துப் போய் நிற்கின்றார். அந்த சந்தில் மாட்டை உரசாமல் யாரும் அந்தப்பக்கம், இந்தப்பக்கம் போய்வர முடியாது. மாட்டுக்காரர் காமராஜன் வேகமாக உள்ளே போனார். “உள்ளே ஆறேழு மாடு இருக்குதுங்க, சார்”, என்று ஆங்கிலத்தில் கூறினார் பிரேமா அம்மா. நம்ம இடத்தை விட அம்மா வீட்டுக்குப் பக்கந்தான் இந்த மாடு சுத்திகினே இருக்கும் சார் என்றார் காமராஸ்ரீன். மாடுகளின் நிலை மிகவும் சிரமமானதாக இருந்தது. ஆரோக்கியமான சூழல் இல்லை. தரை ஈரமாக சாணம் சிதறி காணப்பட்டது.

    மாடுகளுக்க எங்கே நாடி பார்ப்பது…? என்று கேட்டால், வாலின் கீழ்ப்புறம்தான் மாடுகளின் இதயத்துடிப்பு பல்ஸ் ரேட் பார்க்கும் இடம். அதில் சாணம் பட்டு மிகவும் அழுக்காக காய்ந்து காணப்பட்டது. காக்ஸீஜியல் ஆர்டரி என்று அந்த இரத்த தமனிக்கு பெயர். மாடுகளை இடது பக்கமிருந்துதான் அணுகி வைத்தியம் பார்க்க வேண்டும் என்று  ஒவ்வொன்றாக படித்து வேலை செய்து கற்றுக் கொண்டதை நினைவுபடுத்திக் கொண்டார்.

    இரண்டு கட்டிட சந்தில் இடது பக்கம்தான் கொஞ்சம் இடம் இருந்தது. அதன் வழியாக கதிரேசன் சென்று நின்று காய்ச்சல் அடிக்கிறதா…? என்று காதை…?! பிடித்து பார்த்தார். அடிவார காதுதான் பசுவின் தெர்மாமீட்டர் இல்லாமல் டெம்பரேச்சர் பார்க்கும் இடம் என்று சொல்லியாக வேண்டும். கொஞ்சம் இடதுபுறம் நகர்ந்தாலும் அந்த பசு, சுவரோடு தேய்த்து சுவரில் பல நூற்றாண்டுகளாக இருந்த இஞ்ச் கணக்கான அழுக்கு கதிரேசனின் மடிப்பு கலையாக வெள்ளை சட்டைக்கு மஞ்சள் பூசிவிட்டிருக்கும். ஆனால், இலட்சுமிக்கு அந்தமாதிரி எந்த உத்தேசமும் இருந்ததாக தெரியவில்லை. சாதுவாக ஒத்துழைத்தாள்.

    காமராசனே அரை வைத்தியரைப் போலதான் கொடுத்த ஏன்டிபைரடிக் மற்றும் மல்ட்டி விட்டமின் மருந்து ஊசிகளை காட்டினார். மாட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாததால் கால்நடை மருத்துவர்களை உரிய காலத்தில் அழைத்துவர முடியவில்லை என்று காரணங்களை கதிரேசன் அடுக்கிக்கொண்டார். கிருமிகளை கொள்ள ஏன்டிபயாடிக், காய்ச்சலுக்கு குறைக்க ஏன்டிபைரடிக் என எங்கிருந்து கற்றுக்கொண்டாரோ…? காமராசன் என்று தோன்றியது.

    பிரேமா அம்மா பலமுறை பேங்க் வேலை பாதிப்படைய செய்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். கதிரேசன் மனம் ஒரு வாயில்லா ஜீவனுக்கு ஏதோ தன்னாலான உதவியை செய்ய கிடைத்த வாய்ப்பாகவே இதனை நினைத்துக் கொண்டது தனக்கு பதிலுக்கு எதுவும் உதவி செய்ய இயலாத ஒருவருக்கு செய்யும் உதவி மிகவும் மதிப்பு வாய்ந்தது என்று ஒரு பொன்மொழி உள்ளது. அவ்வப்பொழுது வட்டி விகிதம் என்ன…? ப்ராஜக்ட் ஃபீஸிபிலிட்டி என்ன…? யார் ப்ராஜக்ட் சம்பந்தமாக பரிந்துரை செய்து உள்ளனர்…? என்ன தேதிக்குள்ளே பணம் பட்டுவாட செய்யப்பட வேண்டும்…? என்று  பலவாறு மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவது வங்கிப்பணி. ஆனால், அத்தகைய வாழ்க்கைச் சுழற்சியில் இருந்து ஒரு மாறுதலாக மாட்டு வைத்தியம் பார்ப்போம் என்று கிளம்பி வந்திருந்தார்.

    ஸ்ரீகுமார் டாக்டர் வந்து நார்மல் சலைன் எடுத்து சிரிஞ்சில் மடிக்குள் செலுத்தி பாலை பீய்ச்சி வெளியே எடுத்தார். அதன் மூலமாக மடியில் உள்ள கிருமிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கின்றனது. மாடு தன்னுடைய மடி சுத்தமாவதை உணர்ந்து கொண்டது போல சிகிச்சைக்கு மௌனமாக ஒத்துழைப்புக் கொடுத்துக் கொண்டிருந்தது. கன்றுக்குட்டி இலட்சுமியின் தலைப்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தது. பிரேமா அம்மா மிகுந்த மகிழ்ச்சியடைந்து சாய்ராம், சாய்ராம் என்று பலமுறை உச்சரித்துக் கொண்டு நன்றி சொல்லிக் கொண்டிரந்தார்.

    மாட்டுக்பொங்கல் இன்னும் சில நாட்களில் வர உள்ள சமயத்தில் இப்படி ஒரு அழைப்பும் சேவையும் அமைய நேர்ந்தது ஆச்சரியம்தான். கடந்தகாலப் பொங்களல்கள் அரை நிமிடம் கண்முன் ஓடியது. பல இடங்ளில் கிராமங்களில் புது சாயம் பூசிய பளபளக்கும் கொம்புகளோடு வண்ண மூக்கணாக்கயிறு போட்டி கொண்டாடிய காலம் போன பின்னர்… சென்னை பொங்களல் இப்படி பசுவுக்கு நன்றி சொல்வதாக அமைந்தது என்னவோ… ஆச்சரியம்தான்…

    காலமாற்றத்தை புதிய பொங்கலாக ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

    அலுமினிய பால்கேனில் இருந்து பால்வாடையோடு ஊற்றப்பட்ட தண்ணீரால் கரங்களை நனைத்து சுத்தப்படுத்திக் கொண்டு கிளம்புகையில் இலட்சுமிதன் கழுத்தோடு சாய்ந்து திரும்பி பார்த்தபொழுது…

    அவள் கண்களில் தெரிந்த உணர்வு….

    உணர்வு சார் நுண்ணறிவு என்று EQ இ க்யு குறித்த கட்டுரைகளை நிறைய படித்து இருந்தார் கதிரேசன். IQ ஐ. க்யு என்கின்ற அறிவுக்கு எட்டுகின்ற பல பொருட்கள் மனதிற்கு உள்ளார்ந்த நிறைவை தருவதில்லை. ஆனால், மாட்டுப்பொங்கல் மனசோடு நெருங்கி விடுகின்றனத> உயிர் சார்ந்த விஷயமல்லவா…?

    உயிர்களையும் அவை செய்யும் உயிர் உற்பத்தி பொருட்களையும் (biological products) செயற்கையாக உற்பத்தி செய்யும் முறையை சின்தடிக் பயாலஜி என்று கூறுகின்றனர்.

    இதன் மூலமாக மரபியல் குரோமோசோம், டி.என்.ஏ மற்றும் செல்களை மாறுதலுக்கு உட்படுத்தி ஒரு புதிய உயிரியல் பொருளை தயாரித்து விட முடியும். இ. கோலை, யீஸ்ட் போன்ற எளிமையான உயிரினங்களின் மரபணுக்களில் சிறப்பு மாற்றத்தை உருவாக்கி ஆர்டிமிசினின் என்னும் மலேரியா தடுப்பு மருந்தின் முன்னோடியை தயாரித்து உள்ளனர்.

    செயற்கை உயிர்களை உருவாக்கும் முயற்சியும் உயிர் மூலக்கூறு அளவில் சாத்தியமாகி உள்ளது.

    சுற்றுப்புற சூழல் எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளது என்பதை அளந்தறிய உயிர் நுண்ணறிவு சமிஞ்ஞை வெளிப்படுத்தும் பயோசென்சர்களும் கண்டுணரப்பட்டுள்ளன.

    செயற்கை உயிரியல் மற்றும் இயற்கை வடிவமான இலட்சுமியின் உடல்நிலை இவை இரண்டுமே இன்றைய காலகட்டத்தின் இரண்டு காட்சிகள். அறிவிலும் ஆத்மார்த்தமான உணர்வும் ஒன்றாக வளர்க்கப்பட வேண்டும். அதன் மூலமாக ஒரு மனநிறைவான வாழ்வு வாழ இயலும். இப்பொழுது நிலவும் சூழலிலும் இயன்ற அளவு மாட்டுப்பொங்கலை உள்ளன்போடு கொண்டாட இயலும்….

    அடைக்காத்தல்…

    அடைக்காத்தல் என்ற சொல் இன்று நகரத்தில் பிறந்து வளர்ந்து வருபவர்களுக்குப் புதிய சொல். கிராமங்களில் இன்றும் இச்சொல் வழக்கில் இருந்து வருகிறது. பொதுவாக கோழி தன் முட்டைகளைக் குஞ்சாகப்பொறிப்பதற்கு மேற்கொள்ளும் செயல் அடைக்காத்தல் என்று சொல்லப்படுகிறது.

    சிறுவயதில் எங்கள் வீட்டில் கோழி, வாத்து வளர்த்தினோம். கோழியும் முட்டையிடும், வாத்தும் முட்டையிடும். இரு முட்டைகளையும் ஓரிடத்தில் மணல் மீது அடுக்கி வைத்து கோழியை அடைக்காக்க வைத்துள்ளோம்.

    அடைக்காத்தல் என்பது முட்டைகள் மீது கோழி அமர்ந்து வெப்பநிலையை சுமந்து 990F பரமரிக்கும் செயல். இடையில் கோழி முட்டைகளை  விட்டுச் சென்று சாப்பிட்டு வரும்.

    இந்த அடைக்காத்தல் காலத்தில் முட்டைகளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளும். அருகில் யாரையும் நெருங்க விடாது. 21 நாட்கள் ஆனப்பின்பு முட்டைக்குள் வெள்ளைக்கருவை உண்டு வளர்ந்த மஞ்சள் கரு கோழி குஞ்சாக வெளியே வரத்தயாராக இருக்கும்.

    தாய் கோழி அந்த மாதிரியான முட்டைகளைத் தன் அலகால் கொத்தும். அது விரிசல் விட்டு உடையும். குஞ்சும் முயற்சி செய்து முட்டை ஓட்டுக்குள்ளிருந்து வெளியே வரும்.

    அடைக்காத்தல் போலவே மனித இனத்தில் ஆணும், பெண்ணும் இணைந்து உருவாகும் கரு பெண்ணின் கருப்பையில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது.

    கோழி ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்ட முட்டைகள் மீது அமர்ந்து அந்த முட்டைகள் உள்ள கரு வளர்ந்து வெளியே வருவதற்கான வெப்பத்தை அளிக்கிறது.

    ஆனால், பெண் தன் கருப்பையில் உருவாகியுள்ள கருவைச் சுமந்து கொண்டே சுமார் 10 மாத காலம்  நடமாடுகிறாள். இந்த காலம்தான் எதிர்கால சமுதாயத்தை நிர்ணயிப்பதற்கான மனிதர்களை உருவாக்கும் அடிப்படைக்காலமாகும்.

    ஒரு வீடு என்றால் அதைக் கட்டும் போது கவனித்திருக்கலாம். கடகால் (BASEMENT) என்று சொல்லக்கூடிய பூமிக்குக் கீழே கட்டும் சுவர். அதன் மீது எழுப்பும் சுவர், சுவருக்குள் வைக்கும் கதவு நிலவு, ஜன்னல், கூரை கான்கிரீட், பிறகு சிமெண்ட் பூசுதல் பெயிண்ட் அடித்தல், மின்சாதனங்களுக்கு  இணைப்புக் கொடுப்பது, தண்ணீர் குழாய்கள் பதிப்பது எனப்பல கட்டப்பணிகள் இருப்பது போல, எந்த உயிரும் இவ்வுலகுக்கு வரும்முன் பல கட்டப் பணிகளை முடித்தே வருகிறது.

    இன்றைக்கு சுமார் 60 வருடங்களுக்கு முன்பும் பெண்கள் கருத்தரித்திருந்தார்கள். இன்றைக்கும் கருத்தரித்திருக்கிறார்கள். இரண்டுக்கும் ஏராளமான வித்தியாசம் உள்ளது.

    அன்று வாழ்வின் ஒர் அங்கமாக இருந்தது. இன்று மருத்துவ முன்னேற்றத்தினால் கருவில் வளரும் குழந்தைகளுக்குப் பலவித இரசாயன மருந்துகளைக் கொடுத்து வருகிறோம்.

    அன்று கருத்தரித்தல் இயல்பான நிகழ்வு. மலடி என்பது மிகவும் அரிய சொல். இன்று கருத்தரிப்பதே சாதனை. இன்றைக்கு மலட்டுத்தன்மை அதிகமாகி விட்டது. காரணம், தவறான உணவு, தவறான வாழ்க்கை முறைதான்.

    சிலர் கருத்தரிப்பது  தங்கள் அழகைக் கெடுத்துவிடும் என்ற மனநிலையில் உள்ளனர். கர்ப்ப கால வலியைப் பொறுத்துக் கொள்ள தைரியமின்றி அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை எடுக்குமாறு கூறும் நிலையில் பல தாய்மார்கள் உள்ளனர்.

    அன்று நல்ல எண்ணங்கள் கர்ப்பிணிகளின் மனதிலே பதியுமாறு வீட்டிலிருந்த பெரியோர்கள் தங்கள் வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டனர். அன்று குடும்பங்களைச் சீரழிக்கும் டி.வி.க்கள் இல்லை.

    வீண் அரட்டை, வெட்டிவம்பு எதுவுமே கிடையாது. காரணம் மக்கள் தொகை குறைவு. வேலைக்கே நேரம் சரியாக இருந்தது. இன்று அப்படியில்லை.

    கருவில் குழந்தை வளரும்போது அதற்குப் பலவிதமான பாதிப்பு. அந்தப் பெண் பலவித சிரமங்களுக்கு உள்ளாகி, மனஉளைச்சல், உடல்நோய், மனக்கவலை, பாதுகாப்புக்கான பயம், கோபம், வெறுப்புணர்வு எனப்பல தேவையற்றவைகளை அடைகாப்பதால் குழந்தைகள் மனித நேயமின்றியே பிறக்கின்றன.

    வளரும்போதும், எதிர்மறையான வார்த்தைகளையே சொல்லி நம்பிக்கையில்லாமல் செய்து விடுகின்றனர்.

    இந்த நிலையிலிருந்து மாறவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். இது குழந்தைப் பேறுக்கு மட்டுமல்ல தனி மனித வாழ்க்கைக்கும் பொருந்தும். கரு உருவாகும் நேரம், பெற்றோரின் மகிழ்ச்சியான நேரமாக இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண் மனம் கோணாமல் வீட்டிலுள்ள அனைவருமே பொறுப்பேற்று செயல்பட வேண்டும். அந்தப் பெண்ணும் குழந்தைப் பேறு என்பது சமுதாயப்பணி என்ற நல்லவைகளையே சிந்திப்பது, பார்ப்பது, கேட்பது, பேசுவது மற்றும் செய்வது என வாழ வேண்டும்.

    குழந்தை பிறந்த பின்பும் அந்தக்குழந்தைக்கு நல்ல பண்புகளை, தைரியத்தை, மனிதநேயத்தை தன் செயலால், வாழும் முறையால் கற்பிக்க வேண்டும்.

    சரி, நடந்தது நடந்ததுதான்.

    வளர்ந்தது இன்று வாழ்ந்து வருபவர்கள் என்ன செய்வது…? என்ற உங்கள் கேள்வி புரிகிறது. ஒரே வார்த்தை அடைக்காத்தல்தான்.

    உங்கள் தேவைகளைப் பட்டியலிடுங்கள். உருப்போடுங்கள். எந்நேரமும் இதே நினைவாக இருங்கள். சில நாட்களில் ஆழ்மனதில் பதிந்துவிடும். அதன் பின் அகக்காட்சியாகக் கண்டு மகிழுங்கள்.

    கோழி தன் முட்டைகளை அடைக்காக்கும் காலம் 21 நாட்கள். முடியுமானால் நேரிலோ படத்திலோ இதைப்பாருங்கள். அதுபோலவே, உங்கள் தேவைகள் மீது, சூடு குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    முதலில் உங்களுக்கு வருவது மனித நேயமாக இருக்கட்டும். இதன் அடுத்த நிலை எல்லோரையும் மன்னிக்கும் மனம் விரிவாக இருக்கட்டும்.

    உங்கள் வாழ்க்கை ஒளிமயமானதாக மாறும். நீங்கள் செய்ய வேண்டிய ஒரே செயல் அடைகாத்தல்தான்…

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி…?

    பேரும் புகழும் கிடைக்க வேண்டுமென்றால் வளர்த்துக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் பற்றி கூறுங்கள்…?       

    விஜயகுமார்

    மதுரை மாவட்டம்.

    பெயரும், புகழும் என்று நீங்கள் எதைக்குறிப்பிடுகின்றீர்கள்…? என்று புரியவில்லை. ஒருவேளை சினிமா நடிகர்களைப் போல, அல்லது கிரிக்கெட் வீரர்களைப் போல பிரபலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா…? அல்லது சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் அளவுக்கு மங்காத புகழ் வேண்டும் என்று கருதுகிறீர்களா…? என்றும் தெரியவில்லை.

    பெயரும் புகழும் எல்லோருக்கும் உண்டு. சிலருக்கு குடும்ப அளவில் இருக்கும், சிலருக்கு ஊர் அளவில் இருக்கும். சிலருக்கு உலக அளவில் இருக்கும். தான் பெற்ற ஏழு பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்து கவுரவமாக கல்யாணம் செய்து வைத்தார் ஒரு ஆசிரியர். அவரது பிள்ளைகள் மத்தியில் அவர் பெயருடனும், புகழுடனும் இருக்கிறார். மிக நல்ல மனிதன் என்ற பெயரையும், புகழையும் உறவினர்கள் மத்தியில் சம்பாதித்தார். அவர் என்னுடைய உறவினர்.

    பெயரும், புகழும் எல்லாருமே விரும்புகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், சிலர் அப்படி எல்லாம் எனக்கு புகழ் வேண்டாம் என்று வெளிப்புறமாக மறுப்பார்கள்.இது ஒரு பலவீனமான வாதம் போல தெரிகிறது. புகழ் இன்றி வாழமுடியாது என்பது எல்லாரும் அறித்தது தான் அந்த விவாதத்திற்குள் நாம் போக விரும்பவில்லை; ஒருவர் ஒரு கருத்தைச் சொல்லும் போது,அது தனது உணர்வுகளை அப்படியே சொல்லிவிடுவார் என்று எதிர்ப்பார்க்க முடியாது. சீசீ இந்த பழம் புளிக்கும் என்ற வகையில் கூட “எனக்கு புகழ் வேண்டாம்” என்று சொல்லவும் வாய்ப்புண்டு.

    உண்மையான பெயர் அல்லது புகழ் என்பது மனிதகுலத்துக்கும் இந்த உலகிற்கும் நல்லது ஒன்றைச் செய்து மறைவது என்று நான் கூறுவேன். அதாவது, பல கோடி ஆண்டுகள் வயதான பூமியில் சில ஆண்டுகள் வாழும் நாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு இவ்வுலகைவிட்டு போவது சிறப்பாகயிருக்கும். நாம் புகழ் பெறவில்லை என்றாலும் இப்படிப்பட்ட மகான்களைப் பற்றி நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இவர்களது சரித்திரத்தை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.

    1564 – ம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிறந்த கலிலியோ கலிலி என்பவர் அடிப்படை விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொண்டு பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று ஆதாரத்துடன் கூறினார். “heliocentrism” என்று பெயர். அன்றைய விஞ்ஞானிகள் அதை ஏற்கவில்லை. அவர்கள் சூரியன்தான் பூமியை சுற்றி வருகிறது, அதாவது”geocentrism” தான் உண்மை என்று பிடிவாதமாக இருந்தனர். கலிலியோவின் விஞ்ஞான கண்டிப்பிடிப்பு கிறிஸ்தவ ஜெசூட் பாதிரிகளுக்கும், போப் VIII-க்கும் பிடிக்க வில்லை. அவரது கண்டுபிடிப்பு பைபிளுக்கு எதிரானது என்று அவர்கள் கருதினார்கள். எனவே கலிலியோவை வாழ்நாள், முழுவதும் சிறையில் வைத்தனர். அப்போதும் அவர், “என்னை சிறையில் அடைத்த பின்பும் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று நகைச்சுவையாக சொன்னாராம்”.

    பிற்காலங்களில் சில அறிஞர்கள் கலிலியோவின் கண்டுபிடிப்பை ஆராய்ந்து நிரூபித்த பிறகுதான், அவரது மகத்தான கண்டுபிடிப்பு நம்பப்பட்டது. இவருக்கு முன்னால் வாழ்ந்த போலந்து அறிஞர் நிகோலஸ் கோபர் நிக்லஸ் என்பவரும் இந்த உண்மையை தனது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்திருந்தார். ஆனால் அதை வெளியே சொல்லத் தயங்கினார். தன்னை உயிருடன் எரித்துக் கொன்று விடுவார்கள் என்றும் அஞ்சினார். அவர் இறக்கும் தருவாயில் 1543ம் அண்டு De revolutionibus orbium coelestium  (on the revolution of celestial speres) என்ற அவரது நூல் வெளியானது. அறிஞர்கள் மத்தியில் அவரது புரட்சிகர விஞ்ஞான கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டன, அவ்வளவுதான். அதை எவரும் சட்டை செய்யவில்லை.

    கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் கூட பலரும் அப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தனர். ஆனால் கோபர் நிக்ஸ் சூரியனை கோளங்கள் சுற்றுவதையும் வரைபடம் மூலம் விளக்கியிருந்தார். விளக்கம் வேறு, நிருபணம் வேறு. நிருபிக்க ஆதாரம் வேண்டும்,  கலிலியோ அதை அதாரத்துடன் நிரூபித்தார். ஒரு தொலைநோக்கியை கண்டுபிடித்து ஜூப்பிடரின் நான்கு நிலவுகளை கண்பித்தார். அதன் மூலம் மற்ற  கோள்களை நோட்டமிட்டர்; வினஸ் என்ற கோளத்தின் பல பரிணாமங்களை தொலைநோக்கி மூலம் கண்டார். இராணுவ காம்பஸ் கருவிகளையும் கண்டுபிடித்தார். இன்று  அவரை நூண்ணோக்கி விண்வழி இயற்பியலின் தந்தை (Father of observational astronomy) என்றும் நவீன இயற்பியலின் தந்தை (Father of modern physics) என்றும் Father of Science அறிவியலின் தந்தை என்றும் அழைக்கிறோம்.

    கலிலியோ நவீன விஞ்ஞானம் வளர வகை செய்தார்; மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழி செய்தார். எனவே மனிதர்கள் இருக்கும் வரை இவரும் இருப்பார்; இவரது புகழும் இருக்கும். இப்படி மனித குலமும் உயிரினங்களும் மகிழ்ச்சியாக வாழ வழிசெய்தவர்கள் பலர் உண்டு. அனைவருக்கும் பேரும் புகழும் உண்டு.

    நான் முதலில் சொன்ன எனது உறவினரின் நிலையிலான பெயரும் புகழும் வேண்டுமா? அல்லது தொலை நோக்கியை கண்டுபிடித்த கலிலியோவின் நிலையான புகழும் பெயரும் வேண்டுமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    இனி உங்கள் கேள்விக்கான பதில்

    நற்பண்புகள் சிலவற்றை வளர்த்துக் கொண்டால் பெயரும் புகழும் வந்து விடுமா என்று எனக்கு தெரியாது; ஏனென்றால் அப்படி நற்பண்புகள் இல்லாத பலரும் பெயருடனும் புகழுடனும் வாழ்கிறார்கள். அது சமுதாய விதி என்றும் தோன்றுகிறது. ஆனால் பெயரும் புகழும் வாங்கிய நல்லவர்களிடம் பொதுவான சில பண்புகள் உள்ளன என்பதையும் மறுக்க முடியவில்லை. அப்படிப்பட்ட சில நற்பண்புகளை ஆராய்வோம்.

    (அ) அவர்கள் நம்பிய கொள்கையில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். ஒருவர் தமது பெண்பிள்ளைகளின் திறமை மீது நம்பிக்கை வைத்தார், இன்னெருவர் தனது விண்வெளி ஆராய்ச்சியில் நம்பிக்கை வைத்தார். அகிம்சை மற்றும் உண்மை என்ற கொள்கையில் காந்தி உறுதியாகவே இருந்தார், அதனால் புகழ் பெற்றார்.

    (ஆ) புகழ் பெற்றவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்தார்கள். ஆசிரியர் தனது சாதாரண வருமானத்தை வைத்து ஏழு பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும் என்று நம்பினார். கலிலியோ தன்னால் தொலைநோக்கியை கண்டுபிடிக்க முடியும் என்றும், தன்னால் கோள்கள் பற்றிய உண்மைகளை கண்டறிய முடியும் என்றும் நம்பினார் “All Truths Are Easy To understand once They Are Discovered, The point is to Discover Them” என்றார் அவர்.

    (இ) புகழ் பெற்றவர்கள் மன உறுதியுடன் இருந்திருக்கிறார்கள். அசாதாரண சூழ்நிலையில் சொற்ப வருமானம் என்றாலும் ஏழு மகள்களையும் பொறியல் படிக்க அனுப்பி வைத்தார் ஆசிரியர். ஒரு கோழை தந்தையைப் போல் 16 வயதில் பிள்ளைகளை திருமணம் செய்து வைத்து தனது கடமையை அவர் முடிக்கவில்லை.தன்னை சிறையில் அடைக்கப் போகிறார்கள் என்ற போதும் கலிலியோ தயங்கவில்லை, உண்மையை வெளிப்படையாகப் பறை சாற்றினார். துணிச்சல் இல்லாமல் புகழ் வராது, அதுவும் அசாதாரண துணிச்சல் உள்ளவர்களுக்கே அசாதாரண புகழ் கிடைக்கும்.

    (ஈ.) புகழ் பெற்றவர்கள் பல விதமான வெற்றிக்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். ஒரு குடும்பத்தலைவன், தனது குடும்பத்தின் உடல் நலம், வருமானம், மற்றவர்களுடன் உறவு, பிறருக்கு உதவி, குடும்ப மகிழ்ச்சி என அனைத்திலும் கவனம் செலுத்தினார். ஒரு சிலவற்றை மட்டும் கவனித்து, மற்றவற்றை புறக்கணிக்கமாட்டார்கள். அதுபோல விஞ்ஞானிகளும், பல துறைகளைப்பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு, வெற்றி வாகை சூடினார்கள். கலிலியோ ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளன், இயற்பியல் விஞ்ஞானி, பொறியாளர், தத்துவ ஞானி மற்றும் கணிதமேதை என்று சகலகலா வல்லவனாக விளங்கினார் கடைசி மூச்சுவரை பலவித ஆராய்ச்சி பணிகளைத் தொடர்ந்தார். சிறையில் இருந்தவாறே பல விஞ்ஞான தத்துவங்களைக் கண்டுபிடித்தார்.

    (உ). புகழ் பெற்றவர்கள் தங்களது பொன்னான நேரத்தை, அதாவது சில மணிநேரம் பல நாட்கள், பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் என்று தங்களது முயற்சியில் மட்டும் செலவிட்டிருக்கிறார்கள். அவர்களது மனம் வேறு எங்கும் சிதறவில்லை. வயது போகப் போகத்தான் அவர்களது அறிவு விரிவடைந்திருக்கிறது. நிகோலஸ் கோபர் நிக்கஸ் திருமணம் செய்து கொள்ளவில்லை. சைக்கிள் மெக்கானிக்காக இருந்து ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் திருமணம் செய்து கொள்ள வில்லை. அவர்களுக்கு கருமமே கண்ணாக இருந்திருக்கிறது.

    (ஊ). புகழ்பெற்றவர்கள், ஒரு வேலையில் ஈடுபடும்போது இதனால் எனக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. “இதனால் மனித குலத்திற்கு என்ன கிடைக்கும்” “என்ன மாற்றம் உலகில் ஏற்படும்” என்று தான் சிந்தித்தார்கள். இவர்கள் சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள் அல்ல. சவால்களுக்காக வேலை செய்தவர்கள். உணர்ச்சிகளுக்காகவும், மனத்திருப்திக்காகவம் இவர்கள் வேலை செய்திருக்கிறார்கள்.

    (எ). உலகில் உண்மையாக மக்கள் மனதில் வாழ்ந்த மனிதர்கள் பலரும் நல்லவர்களாக  இருந்திருக்கிறார்கள். உண்மை பேசுதல், பிறரை நேசித்தல், தவறு செய்தவரை மன்னித்தல், இயல்பான நடத்தை பதவியிலும் எளிமை,தவறுகளை திருத்திக் கொள்ளுதல், வலியை தாங்கிக் கொள்ளுதல் ஆகியவை இவர்களிடம் நிறையவே காணமுடிகிறது

    முடிவு:

    சுருங்கச் சொன்னால் நீங்கள் செய்யும் தொழிலை உற்சாகத்துடனும், கவனத்துடனும், எதிர்பார்ப்பு இல்லாமலும், முழுமனதுடனும், மனிதாபிமானத்துடனும் செய்தால் நீங்கள் உயர்வீர்கள். உலகில் எந்த ஒருவர் செய்வதை விடவும் சிறப்பாக உங்களது பணிகளைச் செய்தால் உங்களுக்கும் பேரும் புகழும் கிடைக்கும். அது, தானாக உங்களுக்கும் வந்து சேரும்; நீங்கள் அதைத் தேடி போக வேண்டுவதில்லை.

    பதிவை அழுத்தமாக்கு! வாழ்வை அர்த்தமாக்கு!

    திரு. T.A. பொன்னுசாமி

    சேர்மன், பெருந்தலைவர் காமராஜர் கல்வி அறக்கட்டளை

    P.K. மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,

    செல்லிபாளையம், நம்பியூர், கோபி, ஈரோடு மாவட்டம்

    பணம் மட்டும் வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல இருக்கிறது. மன நிம்மதி, அன்பு, தவம், தியானம், சேவை முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல, என்பார் சுவாமி விவேகானந்தர். பணம் தாண்டி நல்ல மனதோடு பலரும் வாழ்த்த வாழ்ந்து வருபவர் இவர்.

    பெருந்தலைவர் காமராஜரின் வழித்தோன்றலாக இருந்து தான் பெறாத கல்வியை மற்றவர் பெற்று பயன்பெறவேண்டும் என்கிற சமூக அக்கறை கொண்டவர் இவர்.

    கல்வி என்பது கவர்ச்சிக்குள் போய்விடக் கூடாது. நல்லதொரு கட்டமைப்பிற்குள் வர வேண்டும் என விரும்பி கல்விப் பணியாற்றி வருபவர் இவர்.

    இன்று நாம் மனிதர்; நாளை தலைவர் என பெயர் பெறவாழ்தலே சிறப்பு என சாதித்து வருபவர் இவர். இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட எளிமையும், இனிமையும் நிறைந்த திரு. T.A. பொன்னுசாமி அவர்களை நாம் சந்தித்ததிலிருந்து இனி…

    தங்களின் குடும்பம் குறித்து?

    தந்தை அய்யாவு நாடார், தயார் கருப்பாயி அம்மாள். மனைவி T.P. குணசெல்வம் இல்லத்தரசி. மகன் T.P. ரவி மீனாட்சி சுந்தரம் MBA., மருமகள் R. ராதிகா M.Sc., Mphil., மகள் T.P. தங்கமணி B.A., மருமகன் R. சரவணக்குமார் DME மகன் வழிபேத்தி நேத்ரா ரவி, மகள் வழிபேத்திகள் அக்ஷிதா, ஆதிரா.

    நீங்கள் பிறந்தது வளர்ந்தது குறித்து…?

    மிக அழகிய கிராமமான திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் பல்லக்கவுண்டன்பாளையத்திற்கு அருகிலுள்ள கச்சன் தோட்டம் என்னும் ஊரில் பிறந்தேன். தந்தை திரு. அய்யாவு நாடார் தாயார் கருப்பாயி அம்மாள். சற்றும் பழமை மாறாத மனிதர் என் தந்தை. தன் வாழ்நாள் முழுவதும் விவசாயத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். தாயார் இல்லத்தரசி, தந்தையோடு சேர்ந்து விவசாயத்திலும் ஈடுபட்டு வந்தார்.

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்களே, அதுபோல எங்கள் குடும்பம். என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு பேரும் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்கள். என்னை என் தந்தை படிக்க வைக்க ஆசைப்பட்டார். எங்கள் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் சேர்த்தார். பல்வேறு கனவுகளோடு பள்ளியில் சேர்ந்தேன். ஆனால், படிப்பை விட எனக்கு தொழில் மீதுதான் அதிகம் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் எட்டாம் வகுப்போடு என்னுடைய கல்விப்பயணம் முடிந்தது. அதன் பிறகு சிறு சிறு தொழில்கள் செய்து வாழ்க்கையின் பயணத்தில் நானும் நடைபோடத் தொடங்கினேன்.

    அதிகம் படிக்கவில்லை, தொழிலோ விவசாயம் இச்சூழலில் ஒரு பள்ளியைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் எப்படி ஏற்பட்டது…?

    இதற்கு முக்கிய காரணம் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்தான். தாம் படிக்காத போதும் தன்னைப்போல் பிறர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அனைவருக்கும் கல்வி என்றதிட்டத்தைக் கொண்டு வந்தார். அவரின் வழித்தோன்றல்கள் நாங்கள் என்பதால் படிப்பின் பயனை அறிய வேண்டும் என்பதற்காகப் பள்ளியைத் தொடங்கினோம்.

    இப்பள்ளி 1999-2000ம் ஆண்டில் “பெருந்தலைவர் காமராஜர் எஜூகேஷனல் ட்ரஸ்ட்’ என்ற பெயரில் செல்லிபாளையம், நம்பியூர் என்ற இடத்தில் தொடங்கினோம். அந்த இடத்தைச் சுற்றி பல்வேறு கிராமங்கள். அங்கு வாழும் பல்வேறு மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள்தான்.

    அவர்களால் அதிகம் பணம் கொடுத்து ஆங்கிலப்பள்ளியில் படிக்க வைக்க முடியாது என்பதால் குறைந்த செலவில் நல்ல கல்வி கொடுக்கவும், அப்பகுதியில் உள்ள கிராமத்து மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கவும் தொடங்கப்பட்டதுதான் இந்தப்பள்ளி.

    கல்விக்கென்று எங்களால் என்னென்ன புதுமைகள் கொடுக்க முடியுமோ அனைத்தையும் ஒரு சேவை மனப்பான்மையோடு கொடுத்து வருகிறோம். இதனால் எனக்கு நிம்மதியும், மனநிறைவும் கிடைக்கிறது. இதுதான் எனக்கு பெருமையைத் தேடித்தருகிறது.

    ஒரு மாணவனின் அக்கறையில் ஆசிரியர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும்…?

    எதிர்காலச் சமுதாயம் கூர்தீட்டப்படும் பயிற்சிப்பட்டறை. ஒவ்வொருக்குள்ளும் ஓசையில்லாமல் ஆற்றல்கள் பல உறங்கியும், மறைந்தும் கிடக்கிறது. அதைத் தட்டி எழுப்புகிறவகையில் செய்யப்படுகின்ற பணிதான் ஆசிரியர்ப்பணி.

    குழந்தைகளிடம் ஆசிரியர்கள் ஒரு அன்னையைப்போல அன்போடும் அரவணைப்போடும் நடந்து கொள்ள வேண்டும். கண்டிப்பே அவனை ஊக்கப்படுத்தும் ஒருமுறையாகப் பின்பற்றவேண்டும். கடமைக்கு வேலையைச் செய்யாமல் கண்ணியத்தோடு வேலை செய்தாலே போதும். மாணவன் வாழ்வில் முன்னேறிவிடுவான் என்பதை ஒவ்வொரு ஆசிரியர்களும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

    இன்றைய பள்ளிச்சூழலில் கல்வியில் மாறுதல்கள் என்னென்ன தேவைப்படுகிறது…?

    கல்வி என்னும் வாழ்க்கைச் சக்கரத்தில் பயணம் செய்பவர்கள் தான் மாறி மாறிப்பயணித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால், அந்தச் சக்கரம் எப்பொழுதும் நிலையானது. நாகரீகத்திற்கு ஏற்றார் போல் கல்வியில் மாறுதல்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

    ஆரம்பக்காலத்தில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டால் முன் அட்டையில் ஆரம்பித்து பின் அட்டை வரை ஒரு வரியில்லாமல் படிப்பார்கள். இது அன்றைய சூழல். ஆனால், இன்றைக்கு வினாவிடை வடிவில் புத்தகங்கள் வந்துவிட்டது.

    எந்த அளவிற்கு மாணவர்களுக்கு எளிமையாகக் கொடுக்க முடியுமோ, அந்தளவிற்கு கொடுக்கிறார்கள்.

    கல்வி எப்பொழுதும் ஒரே நிலையாகத்தான் இருக்கிறது. பாடத்திட்டங்கள் தான் மாறிக்கொண்டே போகிறது.

    இப்பள்ளியின் தனித்தன்மைகள் குறித்து…?

    இன்றைய சூழலில் பெற்றோர்களில் அதிகமானோர் எண்ணுவது, வானைமுட்டும் கட்டிடம், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுதல், பள்ளியின் இதர வசதிகள் இருந்தாலே போதும் எதையும் மனதில் கொள்ளாமல் தங்களுடைய பிள்ளைகளைச் சேர்த்து விடுவார்கள்.

    கவர்ச்சியை நம்பி நிறையப் பெற்றோர்கள் ஏமாந்து போய் விடுகிறார்கள். பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்தபின்னர் இதை நினைத்து மனம் வருந்துவதால் எந்த பயனும் இல்லை.

    கவனிக்கப்பட வேண்டியவை என்னவென்றால்…

    • எவ்வித ஆபத்தும் இல்லாத பள்ளிக்கட்டிடம், வாகனம் போன்றவை இருத்தல் வேண்டும்.
    • இயற்கையான சூழல்.
    • எதிர்கால வாழ்க்கைக்கு உகந்த கல்வி, விளையாட்டு.
    • உடல் நலனில் அக்கறைக்காட்டும் யோகா, கராத்தே பயிற்சிகள்.
    • இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிக்கற்றல்.

    இவை அனைத்தும் இப்பள்ளியில் தங்கு தடையின்றி கிடைக்கிறது.

    தேவையை அறிந்து அதற்கு ஏற்றார் போல் மாறுதல்கள் செய்து வருகிறோம். உங்கள் வாழ்வில் நீங்கள் பெருமிதமாகக் கருதுவது என்றால் எதைச் சொல்வீர்கள்…?

    நாம் பிறந்த பயனை, பிறர் பாராட்டிச் சொல்லும்போது அதன் முழுமையாக அறிந்து கொள்கிறோம்.

    என் வாழ்க்கையில் நான் பெரிதும் பெருமிதமாகக் கருதுவது இப்பள்ளியைக் கட்டியதுதான். ஒரு பள்ளியைத் தொடகுவது ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குகிறோம். அந்த வகையில் இப்பள்ளி தொடங்கியதன் மூலம் ஒரு நற்பெயரை சம்பாதித்துக் கொடுத்தது.

    அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தால் நம்மால் ஒரு குட்டையைக் கூட கடக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். அந்த வகையில் நான் இப்பிறவியின் பயனை இப்பள்ளியின் மூலம் பெற்று விட்டேன் என்று நினைக்கிறேன்.

    ஒரு பள்ளியை தனி ஒருவராய் தொடங்குவதற்கும், கூட்டாகத் தொடங்குவதற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து…?

    இரண்டுக்கும் காரணம் நம்பிக்கை என்னும் ஒற்றைச் சொல்தான். தனி ஒருவர் பள்ளியைத் தொடங்குகிறார் என்றால் அது மிகவும் எளிது. பொறுப்புகள், மேலாண்மை, முடிவெடுக்கும் திறன் அனைத்தும் அவர் ஒருவரைச் சார்ந்திருக்கும். ஆனால், கூட்டாக பலபேர் தொடங்கினால், அதில் நன்மைகளும் இருக்கும், அந்தளவிற்கு தீமைகளும் இருக்கும். அதை அவரவர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறது.     எனக்கு அவ்வித கவலை எதுவும் இல்லை. எங்கள் நாடார் மகாஜன சங்கத்தில் நிறைய உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதையும் நன்கு யோசித்து முடிவெடுக்கும் திறன் பெற்றவர்கள் என்பதால் என்னால் எதையும் சுதந்திரமாக செய்ய முடிகிறது.

    நீங்கள் வசிக்கும் இதரப்பொறுப்புகள் பற்றி…?

    பொறுப்புக்கும், பெயருக்கும், புகழுக்கும் நான் எப்பொழுதும் ஆசைப்பட்டதே இல்லை. காரணம் எங்களுக்குகெல்லாம் வழிகாட்டியாக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வாரிசுகள் நாங்கள். அதனால், தகுதி இருந்தால் பதவி தானாகத்தேடிவரும், பொறுப்புகளும் கூடி வரும் என்பதற்கு ஏற்ப தற்போது பல பொறுப்புகளில் இருந்து சிறப்பாக செயலாற்றி வருகிறேன்.

    • பெருந்தலைவர் காமராஜர் கல்வி அறக்கட்டளையின் சேர்மனாக இருக்கிறேன்.
    • எங்கள் சங்கத்தின் கீழ் இயங்கும் சில கல்லூரி மற்றும் பாலிடெக்னிக்கில் துணைத்தலைவராக இருந்து வருகிறேன்.
    • எங்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறேன்
    • எங்கள் ஊரிலுள்ள அரசுப் பள்ளியில் P.T. தலைவராக இருக்கிறேன். அதுமட்டுமின்றி எங்கள் ஊரிலுள்ள கோயில் ஒன்றில் தர்மகர்த்தாவாக இருக்கிறேன். இப்படி எண்ணற்ற பொறுப்புகளில் இருந்து வருகிறேன்.
    • ஊத்துக்குளியில் “மக்கள் மருத்துவமனை’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதில் உறுப்பினராகவும், உள்ளேன். இலாபநோக்கு கருதாமல் குறைந்த கட்டணத்தில் கடந்து ஆறு ஆண்டுகளாக இம் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது.

    நீங்கள் பொறுப்பேற்ற பின்னர் இப்பள்ளிக்கு கொண்டுவந்துள்ள மாறுதல்கள் பற்றி…?

    இப்பள்ளி 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தொடங்கியதிலிருந்து பலர் பல பொறுப்புகளில் இருந்து வந்தார்கள். அவரவர் தங்களால் முடிந்தளவிற்கு பணிகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

    நான் இப்பள்ளியில் 2013ம் ஆண்டில் சேர்மனாக பொறுப்பேற்றேன். அதன் பிறகு நான் கொண்டுவந்துள்ள மாற்றங்கள் என்றால் அது இப்பள்ளியின் கட்டிடத்தைச் சொல்வேன். ஆரம்பத்தில் சிறிய அளவு கட்டிடமாக இருந்ததை, அனைத்து வசதிகளும் நிறைந்த கட்டிடமாக மாற்றி இருக்கிறேன்.

    பேருந்து வசதி, குடிநீர் வசதி போன்றவசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.      இப்பள்ளிக்கு என்ன தேவையோ, அதனை உடனுக்குடன் செய்து வருகிறேன்.

    மழலையர் கல்வியை வழிநடத்துவதிலுள்ள சவால்கள் என்னென்ன…?

    நான் படிக்கின்ற காலத்தில் நர்சரி மற்றும் பிரைமரி சார்ந்த கல்விமுறை இல்லை. ஆனால், இப்பொழுது 3 வயது முடிந்தபின்னர் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள்.

    குழந்தைகளும் தங்களுடைய பெற்றோரை விட்டு பள்ளிக்கு முதன் முதலாக அடியெடுத்து வைக்கிறார்கள், குழந்தைப்பருவம் சற்றும் மாறாத அவர்களுக்கு பாடம் போதிக்க வேண்டும் என்பது சற்று கடினம்தான்.

    ஆனால், ஆசிரியர்கள் குழந்தைகளிடம் அன்பாகப்பழகி, அவர்களுக்கு பாடத்தைப் போதிக்க வேண்டும்.

    பெற்றோர்களின் மனநிறைவைப் பெறவேண்டும். இப்படி சிற்சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். உங்கள் பெற்றோரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது…?

    என் அப்பா மிகுந்த கண்டிப்பு மிக்கவர். கடின உழைப்புக்கு சொந்தக்காரர். எதிலும் நேர்மை, உண்மை இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

    எளிமையாகத்தான் வாழ்க்கை வாழ வேண்டும் என்று அடிக்கடி எங்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். காமராஜர் அவர்களோடு நெருங்கிப்பழகியவர் என்பதால் எப்பொழுதும் கதர் ஆடை மட்டுமேதான் அணிவார். அதை இன்றுவரை நானும் பின்பற்றி வருகிறேன்.

    என் தாயார் இல்லறத்தை எவ்வாறு சிறப்பாக்குவது, மேன்மைப்படுத்துவது என்பதையே சிந்தித்துக் கொண்டிருப்பார். குறைந்த வருமானத்தில் எப்படி குடும்பத்தை வழிநடத்துவது போன்றவற்றை அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.

    அதிகம் படிக்கவில்லை என்று வருத்தம் அடைந்தது உண்டா…?

    நிச்சயம் வருத்தப்பட்டிருக்கிறேன். கல்வியின் மகத்துவத்தை அறிந்து கொள்ளாத பருவத்தில் நான் எடுத்துக் கொண்ட தவறான முடிவுதான் அதிகம் படிக்காததது.

    என்னுடன் நிறையப்பேர் படித்தார்கள். அதில் அதிகமானோர் நன்றாக படித்து நல்ல துறையில் நன்றாக பணியில் இருக்கிறார்கள். அப்பொழுது மனதிற்கு சற்று சங்கடமாகத்தான் இருந்தது.

    எனினும் அதை நினைத்து இப்பொழுது கவலைப்படுவதினால் எந்தப்பயனும் இல்லை. நான் தவறவிட்ட கல்வியை என்னுடைய வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று என்னுடைய குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்திருக்கிறேன்.

    எதிர்காலத்திட்டம் குறித்து….?

    திட்டம் இருந்தால்தான் இலட்சியம் பிறக்கும். அதுபோல, இப்பள்ளி மழலையர் பள்ளியாகத்தான் இருக்கிறது. இதை உயர்நிலைப்பள்ளியாகக் கொண்டு வரவேண்டும்.

    மழலையர் பள்ளியில் இங்கு வந்து சேர்ந்தால் கல்லூரி வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கக் கூடிய வகையில் வழிவகை செய்ய வேண்டும்.      அடுத்தக்கட்டமாக மாணவ, மாணவியர் தங்குவதற்கு விடுதி கட்ட வேண்டும்.

    இங்கு சுற்றியிருக்கும் எல்லாப்பகுதிகளுக்கும் பேருந்து வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

    இப்படிப்பட்ட திட்டங்கள் நிறைய உள்ளது. இவற்றை ஆண்டுக்காண்டு கொண்டுவர வேண்டும்.

    குறைந்த செலவில் தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்து செய்து வருகிறோம்.

    ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்றால் எதுமாதிரியான நற்பண்புகள் தேவைப்படுகிறது…?

    எந்த ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்றாலும் முதலில் திட்டம் தீட்டிக்கொள்வது மிகவும் நன்று. அதிலும் கல்வி நிலையத்திற்கு கூடுதல் திட்டம் அவசியம்.

    அதனால்தான், ‘ஆழமறிந்து காலைவிடு’ என்று சொல்வார்கள்.

    ஒரு நிறுவனத்தை தொடங்கிய பின்னர் தொடர்ந்து தோல்விகளே வந்தாலும் அதை தாங்கும் வல்லமை நம் மனதில் எப்பொழுதும் பதிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளையும், சிக்கல்களையும் சமாளிக்கும் மனநிலைதான் ஒரு நல்ல கற்றல் அனுபவத்தைக் கொடுக்கும்.

    நேர்மையான உழைப்பு, தொழில்தர்மம், உழைக்கும் திறன் ஆகியவை இருந்தாலே தொழிலில் வெற்றி பெற்று விடலாம்.

    ஒரு வெற்றியாளனின் இலக்கு எப்படிப்பட்டாத இருக்க வேண்டும்…?

    ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பார் தெய்வப்புலவர் வள்ளுவர். நம்முடைய இலக்கு என்பது எப்பொழுதும் உயர்வாக இருக்க வேண்டும்.

    இலக்கை நோக்கிய பயணத்தில் வெறும் இன்பத்தை மட்டுமே காண முடியாது.

    தோல்விகள் நம்மை நசுக்கினாலும் சற்றும் துவளாமல் போராட வேண்டும்.

    இலக்கை தீர்மானி அதை நீயே உருவாக்கு, இன்பமானாலும், துன்பமானாலும் ஒன்றாகவே கருது, எதிர்நீச்சலடித்து பழகு, சிறகு உடைந்ததும் எந்தப் பறவையும் இறப்பதில்லை. வாழ்வதற்கு இங்கு நிறைய இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

    தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு நீங்கள் சொல்வது…?

    “இன்று நீ தலைகுனிந்து படித்தால் நாளை நீ தலை நிமிர்ந்து வாழ்வாய்” என்றவாக்கிற்கிணங்க ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களின் எதிர்காலத்தை நினைத்து படிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவன் நல்ல மதிப்பெண் எடுத்தால் உயர் நிலைக்கல்விக்கு நல்ல அடிகோலும். பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தால் நல்ல கல்லூரியில் படிக்கும் வாய்ப்பினைப் பெறமுடியும்.

    பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கட்டாயத்திற்காகப் படிக்காதீர்கள். தங்களின் எதிர்காலத்தை நினைத்து நினைத்துப்படியுங்கள் வெற்றி உங்கள் வசம்.

    உங்களுக்குள் தன்னம்பிக்கை…?

    தன்னம்பிக்கை என்னுடைய வாழ்வின் மந்திரச்சொல். படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டோம், தொழிலிலும், விவசாயத்திலும் அவ்வளவு அனுபவமில்லை. வேறு எந்த தொழிலும் முன் அனுபவமில்லை. இப்படி எனக்குள்ளே தோன்றிய எண்ணற்றகேள்விகள் என்னுடைய தன்னம்பிக்கையை எனக்குள் உதிக்க செய்தது.

    முதன் முதலாக ஒரு தொழிலைத் தொடங்குகிறேன். அதில் வெற்றியும் பெறுகிறேன். இப்படியே ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பதால்தான் என்னுள் தன்னம்பிக்கையை நான் ஒவ்வொரு முறையும் உணரும் தருணம் கிட்டியது.

    மாணவனின் தனித்திறனை நீங்கள் எவ்வாறு ஊக்குவித்து வருகிறீர்கள்…?

    திறமையுள்ள மாணவர்களின் திறமையை நாங்கள் ஒருபோதும் மழுங்கடித்ததே இல்லை. அந்தத்திறமை படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு, யோகா, கராத்தே போன்ற பயிற்சிகளிலும் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகிறோம்.

    விளையாட்டுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுக்கோப்பை போன்றவற்றைக் கொடுத்து, அவர்களை நன்றாக ஊக்கப்படுத்தி வருகிறோம்.

    பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி வரும் தங்களுக்கு, குடும்பத்தின் பங்களிப்பு…?

    ஒரு தனிமனிதன் சாதிக்கிறான் என்றால் அவர்களுக்கு குடும்பத்தின் பங்களிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றேசொல்வேன். மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரமாக, அவர் பல வழிகளில் எனக்கு ஊக்கம் கொடுக்கும் உந்து சக்தியாக இருந்து வருகிறார்.

    பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக, மனைவிக்கு நல்ல கணவனாக இருந்தாலே போதும். எல்லாமே வரமாக வந்து சேரும்.

    தன்னம்பிக்கை வாசகர்களுக்கு தாங்கள் சொல்வது…?

    எவ்வளவு பெரிய தோல்விகள் உங்களை சூழ்ந்து துன்பப்படுத்தினாலும், எக்காரணத்தைக் கொண்டும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்துவிடக்கூடாது.

    மனதில் தோன்றும் எண்ணங்களையும், செயல்களையும் உடனுக்குடன் செய்து முடித்து விடுங்கள். எதையும் காலம் தாழ்த்தி செய்யாதீர்கள். இன்றைய மனிதர்களாக வாழும் நீங்கள் நாளைய தலைவர்களாக வலம் வரவேண்டும்…

    உள்ளத்தோடு உள்ளம்

    ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் இறுதியாக இரண்டு பேர் தேர்வானார்கள்.

    நிறுவனத்தின் அதிகாரி முதலாம் நபரை அழைத்து ஒரே ஒரு வேலை வாய்ப்பு மட்டும் தான் உள்ளது. அந்த வேலையை உனக்குக் கொடுக்க வில்லையென்றால் நீ என்ன செய்வாய் என்றார். “நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று பொய் விடுவேன்” என்றான். சரி போய் விடு என்று சொல்லி விட்டார் அதிகாரியும்,

    அடுத்து இரண்டாம் நபர் அழைக்கப்பட்டார், அவரிடமும் அதே கேள்வி முன் வைக்கப்பட்டது. ஒரே ஒரு வேலை தான் காலியாக உள்ளது. அந்த வேலையை உனக்குக் கொடுக்கவில்லையென்றால் நீ என்ன செய்வாய் என்று.

    “நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்”என்றான் இரண்டாவது  நபருக்கு வேலையை உறுதி செய்து விட்டார்.  தன்மீது நம்பிக்கை உள்ளவர்கள் தான் எப்பொழுதும் வெற்றி பெறுகிறார்கள் அந்த தன்னம்பிக்கையோடு சாதிப்புகளை இன்னும் அதிகமாக்கி, இன்னும் பல் துறைகளில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக்கி வாழ மகளிருக்கு மகளிர் தின வாழ்த்துக்களையும்,

    அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பெற முடிகின்றது என்றால் அது வாழும் கடவுளான அன்னையிடம் மட்டுமே.

    அப்படிப்பட்ட அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களையும் உரித்தாக்கி மகிழ்கிறது தன்னம்பிக்கை !….