- இந்தியாவில் துவங்கப்பட்ட முதல் ஒருங்கிணைந்த மருத்துவமனையை உருவாக்கி நிர்வகித்துவரும் சிறப்பிற்குரியவர்.
- பத்திரிக்கை, ஊடகங்களில் மருத்துவம், குடும்ப ஆலோசனை குறித்து பல வருடங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.
- மற்றவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது என்பது மகத்துவமானது என்று கருதி இயற்கை மருத்துவமுறை குறித்து பல மருத்துவ முகாம்களை தங்களது மருத்துவர் குழு மூலமாக நடத்தி வருபவர்.
- நம் முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதை இந்தத் தலைமுறை சரியாகப் புரிந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்கிற நல்நோக்கத்துடன் செயல்பட்டு வருபவர்.
- திறமையையும், நேர்மையையும் வெளிப்படுத்தும்போது நிச்சயம் பிறரால் பாராட்டப்படுவோம் என்பதில் உறுதியாக இருக்கும் பெண்ணின் பெருமை இவர்…
இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட Rtn. டெய்ஸி சரண் அவர்களை நாம் சந்தத்திலிருந்து இனி…
டெய்ஸி மருத்துவமனையை இயற்கை மருத்துவமனையாக தொடங்கக் காரணம்?
இயற்கை மருத்துவமனை என்பதைவிட, ஒருங்கிணைந்த மருத்துவமனை என்பது தான் சரி. இயற்கை மருந்துகள், மூலிகைகள் மூலம் அநேக நோய்கள் குணப்படுத்த முடியும். இந்த இயற்கை மருந்துகளை ஒங்கிணைத்து, ஒரே கூரையின் கீழ், அத்தனை இயற்கை மருத்துவத்தையும் கொண்டுவர வேண்டும் என்பது எனது கணவர் திரு. சரண் அவர்களுடைய கனவு!
இந்த முறைமருத்துவத்திற்கு “ஒருங்கிணைந்த மருத்துவம்” என்று பெயர். இந்த “ஒருங்கிணைந்த மருத்துவத்தின்” மூலம் நிறைய நாட்பட்ட கடும் வியாதிகளை, எளிதாக குணப்படுத்த முடியும்.
உங்களுக்கு, நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். கடந்த வருடம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எந்த மருத்துவம் சிறந்தது என்று பேச்சு மன்றம் நடந்தது. அப்போது நடுவராக இருந்த மதிப்பிற்குரிய மருத்துவர் ஒருவர், “ஒருங்கிணைந்த மருத்துவமே இப்போதைக்கு நம் மக்களுக்கு தேவையான மருத்துவம்” என்று கூறினார்.
எங்களின் எண்ணத்திற்கேற்ப அவரின் கருத்தும் இருந்ததால் இந்த மருத்துவமுறையை, மிக சரியாக துவக்க வேண்டும் என்று துவக்கியிருக்கிறோம்.
ஒருங்கிணைந்த மருத்துவமுறை என்பது என்ன?
அனைத்து மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, நோயாளிகளின் தேவை அறிந்து சிகிச்சை தரும் முறையே ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை (Integrated Treatment) ஆகும்.
எங்களது மருத்துவமனையில் தகுதியான, அனுபவமிக்க ஆயுர்வேத டாக்டர்ஸ் (B.A.M.S), சித்தா டாக்டர்ஸ் (B.S.M.S), ஹோமியோபதி டாக்டர்ஸ் (B.H.M.S), நேச்சர் க்யூர் டாக்டர்ஸ் (B.N.Y.S), அக்குபங்க்சர் டாக்டர் மற்றும் யோகா தெரபிஸ்ட் என்று மொத்தம் 14 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். எனது கணவர் திரு. சரண் மருத்துவமனையின் சேர்மனாக உள்ளார். கூடவே மருத்துவமனையில் லேப், ஸ்கேனிங் வசதி, மருத்துவ பரிசோதனைக் கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளது.
எங்களது மருத்துவமனை இந்தியாவிலேயே “முதல் ஒருங்கிணைந்த மருத்துவமனை” (India’s First Integrated Hospital) ஆகும்.
ஒருங்கிணைந்த மருத்துவமனையில் எப்படிப்பட்ட சிகிச்சைகள் தரப்படுகிறது?
உதாரணத்திற்கு ஒரு தைராய்ட் நோயாளியையோ, இரத்த நோயாளியையோ எடுத்துக் கொள்வோம். இவர்கள் எவ்வளவு பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்தாலும் தினசரி மாத்திரை என தொடர்ந்து, வருடக்கணக்கில் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கிறது. ஆட நோயாளிகளைக் கவனத்தீர்கள் என்றால் நான் பத்து வருடமாக மாத்திரை எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று சாதாரணமாக சொல்வார்கள். தினசரி மாத்திரை அல்லது அடிக்கடி மாத்திரை சாப்பிட்டால் மாத்திரைகளின் பக்கவிளைவால் ஒருவரின் ஆரோக்யம் சிறிது சிறிதாய் பாதிக்கப்பட்டு, ஆயுள் குறையும் அபாயம் உள்ளது.
அதிக வருடம் மாத்திரை சாப்பிட்டு மற்ற சிகிச்சைகளிலிருந்து எங்கள் மருத்துவத்திற்கு வரும் எண்ணற்ற நோயாளிகளை ‘பரிசோதனை’ செய்து பார்க்கும்போது, அவர்கள் கல்லீரல், கிட்னி செயல்பாட்டில் நிறைய பாதிப்பு, ECG, Echo-வில் Abnormality-யை அதிகம் பார்க்கிறோம்.
ஆனால் எங்களின் Integrated Treatment-ல் நாங்கள் எந்த ஒரு நாட்பட்ட வியாதியுள்ள நோயாளிக்கு சிகிச்சை தரும்போதும், அவர்களுக்கு ஆயுர்வேதா அல்லது சித்தாவிலுள்ள சரியான மருந்துகளைத் தருகிறோம். தேவைப்பட்டால் நோய்க்கேற்ப ஒரு சில ஹோமியோபதிக்கான மருந்துகளை (constitutional Remedy) தருகிறோம்.
என்ன உணவுகள் சாப்பிட்டால் அந்த நோய் குணமாகுமோ, நோயாளியின் வயது, எடை, வாழ்க்கை முறைக்கேற்ப அந்த பிரத்யேகமான இயற்கை சார்ந்த உணவுகளை எங்கள் மருத்துவர்கள் மூலம் வடிவமைத்து தருகிறோம். அந்த நோயாளிக்கு கூடவே, அந்த நோயைக் குணப்படுத்தும் குறிப்பிட்ட யோகா, மூச்சுப்பயிற்சியை கற்றுத்தருகிறோம். உதாரணத்திற்கு, தைராய்டு நோயாளி என்றால் தைராய்டு சுரப்பிகளை சரியாய் இயங்க வைக்கும் யோகா, இதய நோயாளி என்றால் சீரான இதய செயல்பாட்டிற்கான மூச்சுப்பயிற்சி இப்படி முறையாக கற்றுத்தருகிறோம்.
இப்படி சிகிச்சை செய்யும்போது நோயாளி தினசரி தொடர்ந்து வருடக்கணக்கில் மாத்திரை சாப்பிட்டு, ஆரோக்கியத்தைக் கெடுக்காமல், குறுகிய காலத்தில் ஒரு வருடத்திற்குள் நோயையே முழுமையாய் குணப்படுத்தி, உறுதியான உடலமைப்பு பெற்று, மாத்திரைகள் இல்லா ஆரோக்ய உலகிற்கு வர முடியும்!
Integrated Treatment–ல் பக்கவிளைவுகளே இல்லை என்பதுதான் எங்கள் மருத்துவமனையின் தனிச்சிறப்பு!
அன்றைய சித்த மருத்துவத்திற்கும், இன்றைய சித்த மருத்துவத்திற்கும் என்ன வேறுபாடு?
பொதுவாக உலகிலேயே 500 வருடம், 700 வருடம் வரை ஒருவர் உயிர் வாழ்ந்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது கதையில்லை. நிஜம்! நம் நாட்டு சித்தர்களான அகத்தியர், போகர், தேரையர், பாம்பாட்டி சித்தர், கொங்கணர் இதுபோன்ற எண்ணற்ற சித்தர்கள் ஐந்நூறு வருடங்களுக்கு மேலாக உயிர் வாழ்ந்து, பின் வியாதி வந்து இறக்கவில்லை! அதற்குப்பின், அவர்களுக்கு உலக வாழ்க்கையில் பிடிப்பின்மை வந்தபின், பின் பேராற்றலோடு கலக்க விரும்பி, ஒரு சமாதியைக் கட்டி, அதனுள் உயிரோடு இறங்கி, அந்த சமாதியை மற்றவர்களை மூடச்செய்து, ஜீவ சமாதி ஆனார்கள். இது வெறும் கட்டுக்கதை அல்ல. மூச்சை நிறுத்தும் கலையைக் கற்றுக்கொண்டதால் இது சாத்தியமாகி, பரம்பொருளுடன் கலந்தார்கள்.
அதனால் தான், நம் நாட்டில் திருவண்ணாமலை, தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருப்பதி, பழனி, மதுரை போன்ற அநேக இடங்களில் பல்லாயிரம் சித்தர்கள் ஜீவசமாதி உள்ளது. சித்தர்கள் இந்தியாவிற்கு அடுத்து, சீனாவிலும் அதிகம் இருந்தனர்.
ஆனால் இன்று நம் நோயாளிகளுக்கு, நாடி பிடித்து, வாதம், பித்தம், கபம் நாடி என்று சொன்னால் அவர்களுக்கு முழு திருப்தி வருவதில்லை.
இன்று எங்கள் மருத்துவமனையில், நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளெல்லாம் ஆங்கில முறைகளில் தான் செய்கிறோம். அதுதான் சிறந்ததும் கூட.
எலும்பு, மூட்டு வலி வருவதற்கு காரணம் உணவு முறையா? நம் வாழ்க்கை முறையா?
உணவுமுறை முதல் முக்கிய காரணம். உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதும், தவறாக உடற்பயிற்சி செய்வதும் இன்னொரு காரணம்.
முக்கியமான காரணம், சுத்தமாக நாம் எண்ணெயைத் தவிர்ப்பது தான். உங்களுக்குத் தெரியுமா? சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை நாம் உபயோகப்படுத்தவே கூடாது. எண்ணெய் சுத்திகரிப்பு என்பது, எண்ணெயில் தேவையில்லாத கெமிக்கல்களைக் கொட்டி, எண்ணெயின் நற்குணங்களைக் கெடுப்பது தான். நாம் அனைவரும் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் இவற்றைநம் சமையலில் நன்கு பயன்படுத்த வேண்டும். தேங்காயில் செய்த எண்ணெய் தேங்காய் எண்ணெய்; கடலையில் செய்தது கடலை எண்ணெய் எனும்போது, எள்ளில் செய்த எண்ணெய் எள்ளெண்யைôகத் தானே இருக்க முடியும்? ஏன், அதை நம் முன்னோர்கள் நல்லெண்ணெய் என்றார்கள்? காரணம் இது ரொம்ப நல்ல எண்ணெய் என்பதால் தான்.
எலும்புகள் உறுதியாக ‘கால்சியம் மாத்திரைகள்’ எடுக்கும் முறை நல்லதல்ல. கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். கால்சியம் நிறைந்த உணவுகளான பால், கீரை, மீன், சோயாபீன்ஸ், நண்டு என்று எத்தனையோ உணவுகள் நமக்குத் தெரியும். அதில் ஒப்பிட்டே பார்க்க முடியாத அளவு கால்சியம் உணவு “எள்”. எள் சாப்பிடும்போது, எலும்புகள் உறுதியாகும். கூடவே எலும்புகளுக்கிடையில் இருக்க வேண்டிய Synovial Fluid-யும் சேர்ந்து கிடைக்கும். ஒரு டம்ளர் பாலில் 125 மி.கி. கால்சியம் உள்ளது. ஆனால் ஒரு பெரிய எள்ளுருண்டையில் (உலக்கையில் இடித்து செய்யப்படும் எள்ளுருண்டை, கடைகளில் கிடைக்கும்) 975 மி.கி. இயற்கை கால்சியம் உள்ளது.
“இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது இதனால் தான். ஏழைகள் கூட குறைந்த செலவில் மிகுந்த ஆரோக்கியம் தரும் உணவுகளைச் சாப்பிட முடியும் என்பதால் தான் “ஏழைக்கேற்ற எள்ளுருண்டை” என்கிறோம். நம் உடலில் கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு என்று 2 பிரிவு உள்ளது. நல்ல கொழுப்பு நமக்கு வேண்டும். கெட்ட கொழுப்பு தான் கூடாதது. எண்ணெய், பசு நெய்யை சேர்த்துக் கொண்டால் தான் நல்ல கொழுப்பு கிடைக்கும். எலும்பு நரம்புகள் உறுதியாக இருக்கும்.
கெட்ட கொழுப்பைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
பகலில் சாப்பிட்டு விட்டு “மதிய தூக்கம்” கூடாது. உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து வேலை செய்தால் அதுவும் ஏஸியிலேயே வேலை செய்தால் கெட்ட கொழுப்பு வரும். அப்படிப்பட்டவர்கள் காலையில் வாக்கிங் அரை மணிநேரம், யோகா அரை மணிநேரம், மூச்சுப்பயிற்சி 10 நிமிடம் என செய்தால் ஏகப்பட்ட வியாதிகள் காணாமல் போய்விடும். இதுவே சரியாக உடற்பயிற்சி செய்யும் முறை. ஒரேயடியாக 2 மணிநேரம் வாக்கிங் போகவும் கூடாது. ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை வெறித்தனமாக செய்வதும் நல்லதல்ல. உதாரத்திற்கு, ஷட்டில் காக் விளையாடுபவர்கள் அநேகர், விளையாடிவிட்டு, வந்து அரைமணி நேரத்தில் இறந்து போவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மூச்சு வாங்க, வாங்க வெறித்தனமாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்பதை மிகுந்த அக்கறையோடு உங்களுக்க சொல்ல கடமைப்படுகிறேன்.
அப்புறம் எப்படித்தான் உடற்பயிற்சி செய்வது…
நீங்கள் 20 நிமிடம் வாக்கிங் செய்கிறீர்கள். மூச்சு வாங்குகிறது, உடனே ஒரே ஒரு நிமிடம் நின்று, மூன்றமுறை மூச்சை நிதானமாக உள்ளிழுத்து, பின் மிக நிதானமாக வெளியேற்றவேண்டும். இது மாரடைப்பை வரவே விடாது.
மேலும், உணவு சாப்பிடும்போது எக்காரணம் கொண்டும் குளிர்ந்த நீர், ஜில் வாட்டர் எடுக்கவே… எடுக்கவே கூடாது. இது உணவிலுள்ள கொழுப்பை, உணவுக்குழாய்களில், உடலில் மோசமாகப் படியச் செய்யும்.
உணவு சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்குப்பின் வெதுவெதுப்பான தண்ணீரை அல்லது கொஞ்சம் சூடாகவே குடிப்பது நல்லது. கெட்ட கொழுப்பு வரவே வராது. இரவு அதிகபட்சம் ஏழரை மணிக்குள் எளிதில் ஜீரணமாகும் உணவை சாப்பிட வேண்டும். காலதாமதமாக சாப்பிட்டுவிட்டு, உடனே தூங்கினால் கெட்ட கொழுப்பு உருவாகும். அதனால் மதிய தூக்கம் தவிர்ப்பது, ஜில் வாட்டர் தவிர்ப்பது, இரவு சீக்கிரம் சாப்பிடுவது, தினசரி உடற்பயிற்சி செய்வது, உடற்பயிற்சிக்கிடையில் ஆழ்ந்த மூச்சு எடுப்பது இவையெல்லாம் கெட்ட கொழுப்பை அறவே தவிர்க்கும். கூடவே மாரடப்பை வரவிடாது.
உடற்பயிற்சி செய்ய நினைப்பவர்கள் அரை மணிநேரம் வாக்கிங் அல்லது 1 மணிநேரம், அரை மணிநேர யோகாசனம், 15 நிமிட மூச்சுப்பயிற்சி என செய்வது எந்த நோயையும் அண்டவிடாது.
மருத்துவத்தில் உங்களது நிலைப்பாடு என்பது எத்தகையது?
ஒருங்கிணைந்த மருத்துவத்தில் முக்கியமான விசயம் “Treat the Cause, not the Symptoms” என்பதே. இதன் மூலம் நோயின் அறிகுறிகளை வைத்து மட்டும் மருந்துகள் தராமல், அதன் மூலகாரணத்தை ஆராய்ந்து சிகிச்சை தரப்படுகிறது.
இதன் மூலம் எந்த நோயாளிகளையும், தொடர்ந்து மாத்திரை சாப்பிடவைத்து, ஆரோக்யம் இழக்க அனுமதிப்பதே இல்லை. எங்களிடம் வரும் ஆஸ்துமா, BP, தைராய்டு, கடும் மூட்டு வலி, ருமட்டாய் ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், இதய நோயாளிகள், நியூரோ பேவுண்ட்ஸ், மன நோயாளிகள், சரும பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டே இருப்பதில்லை. எத்தனை வருடம் எலும்பு வலியால் (Ortho) பாதிக்கப்பட்டாலும், எங்கள் சிகிச்சைக்கு பின் ஆடி ஓடி வலியில்லா உலகிற்கு வந்து விடுகிறார்கள். Fitz நோயாளிகள் 1 வருடத்திற்குப் பின் எந்த மாத்திரையையும் எடுக்க வேண்டாம். திரும்ப கால் கை வலிப்பு வரவே வராது. எப்படிப்பட்ட ஆஸ்துமாவும் முழுமையாக குணமாகிவிடும். மாதவிடாய் கோளாறுகளில் எங்கள் மருத்துவத்தில் தள்ளிப்போகும் மாதவிடாய், அதிக இரத்தப்போக்கு, அனைத்தும் முழுமையாக குணமாகிறது. சர்க்கரை நோயாளிகள் இந்த மருத்துவத்தில் மிகுந்த ஆரோக்கியம் பெற்று, சில வருட சிகிச்சைக்குப்பின் மருந்துகளை நிறுத்திவிட்டு, நாங்கள் சொல்லும் சில மூலிகைகளை மட்டும் சிறிது நாள் எடுத்துக் கொள்ளலாம். உணவில் நாங்கள் சொல்கிற மாற்றத்தை மக்கள் மிகவும் விரும்புகின்றனர்.
இலட்சக்கணக்கில் செலவழித்தாலும் கிடைக்கவே கிடைக்காத ஆரோக்கியமும், மாற்றமும் உடலில் சந்திக்கின்றனர். கல்லீரல் செயல்பாட்டிற்கு கரிசாலை, கீழாநெல்லியும், சிறுநீரக பிரச்சனைக்கு பீன்ஸில் செய்யப்படும் கசாயம் மற்றும் புனர்னவாதி கசாயமும் மாயாஜாலம் செய்யும். அப்படியிருக்க எங்களது மருத்துவர்களின் முறையான ஒருங்கிணைந்த மருத்துவத்தில் கிடைக்கும் தீர்வோ, மிக மிக நிம்மதி தரும் விசயம்.
இதயத்தில் ஏற்படும் அடைப்பை, இம்மருத்துவத்தில் சரி செய்ய முடியுமா?
நிச்சயமாக… அதுவும் மிக மிக எளிதாக. ஒரு ஜீஸ் இஞ்சி, பூண்டு, தேன் இன்னும் சில பொருட்கள் கலந்து, அந்த ஜீஸிம், மூச்சுப்பயிற்சியுமே இதய அடைப்பில் அற்புதம் நிகழ்த்தும். இன்னும் இதய அடைப்பை, சரிசெய்ய மருதம்பட்டை, செம்பருத்தி, ரோஜா இதழ் இன்னும் அநேக அநேக மூலிகைகள் இணைந்த மாத்திரைகள், ஆயுர்வேதா கசாயங்கள் அவற்றிலுள்ள ஹெர்பல் காம்பினேஷன்ஸ் எந்த அறுவை சிகிச்சையுமின்றி இதய அடைப்பைச் சரிசெய்யும்.
இதை நாங்கள் அடுத்தகட்ட மருத்துவ பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கும்போது, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரொம்பவும் நிம்மதி அடைகிறார்கள்.
உங்கள் ஒருங்கிணைந்த மருத்துவமனைக்கு எந்தளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது?
நன்கு படித்தவர்கள் மற்றும் இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் இந்த ‘Integrated Treatment’-யை அதிகம் தேர்வு செய்கின்றனர்.
மீடியாக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மிக அபாரமானது. கிராமப்புறங்கள், கல்லூரி பள்ளிகள், அபார்ட்மென்ட்ஸ், மகளிர் சங்கங்கள், ரோட்டரி கிளப், ஆண்கள் வேலைசெய்யும் தொழிற்கூடங்கள் அனைத்து தரப்பினரும் எங்களை ‘இயற்கை மருத்துவ விழிப்புணர்வு’ அல்லது ‘இயற்கை ஆரோக்ய குறிப்புகள்’ தந்து கருத்தரங்கு நடத்தச் சொல்லி அழைக்கிறார்கள்.
எங்களது மருத்துவக் குழுக்களும் அவர்கள் இடம் சென்று முறையாக நடத்தித் தருகிறோம்.
இதில் கலந்து கொள்ளும் மக்கள், தங்கள் வாழ்வில் ஒரு புது திருப்பம் வந்ததாக சொல்லும்போது, கிடைக்கும் நிம்மதி பெரியது.
மற்றுமொரு விசயம், எங்கள் மருத்துவ சிகிச்சை Adoptogenic தரத்துடன் இருக்கும்.
அதாவது
- No Toxins (விஷமற்றது)
- No Side Effects (பக்கவிளைவற்றது
- Over all function (முழுமையாய் வேலைசெய்யக் கூடியது)
- Future Protection (எதிர்காலத்தில் பாதுகாப்பு)
இந்த அடிப்படையில் மட்டுமே எங்களது சிகிச்சையை அளித்து வருகிறோம்.
தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
நான் சொல்கிற பதில் உங்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் அதுதான் சாத்தியமான உண்மை. பிரார்த்தனை எல்லாவற்றிற்கும் சிறந்த தீர்வு. உங்களுக்கு என்ன பிரச்சனையானாலும், தனியறையில் உட்கார்ந்து பிரார்த்தனை பண்ண வேண்டும்… உங்கள் முகத்தை யாரும் பார்க்க வேண்டாம்… பேராற்றலிடம் பேசுங்கள்! அந்தப் பேராற்றலை ‘இறைவன்’ என்றோ, சாமி என்றோ இல்லை, அப்பா அம்மா என்றோ பிடித்த மாதிரி கூடப்பாருங்கள். பிரார்த்தனையில் 3 விசயம் இருக்க வேண்டும்.
- கிடைத்த நன்மைகளுக்கு தினமும் நன்றி சொல்லிப் பழகுதல். உதாரணமாக நல்ல உடல்நிலை, வாழ்க்கைத் துணை, குடும்பம், வேலை, வாகன வசதி, சொந்த வீடு.. மழை, காற்று, வெயில் அனைத்திற்கும் நன்றி சொல்வது… ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு பத்திரமாக வீடு திரும்பினாலே அதுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
- தெரிந்தும் தெரியாமலோ செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது. உதாரணமாக, யாரையாவது மனதை கஷ்டப்படுத்தி பேசியிருக்கலாம். பணத்திற்காக சில தவறுகளைச் செய்திருக்கலாம். ஆணவமாக நடந்திருக்கலாம். மற்றவர்களை குறைத்துப் பேசியோ வார்த்தைகளாலோ காயப்படுத்தி இருக்கலாம்.
- மூன்றாவது, உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை பேராற்றலிடம் கேளுங்கள். ஆனால் உங்கள் கோரிக்கை நியாயமாக இருக்க வேண்டும். உதாரணமாக, நான் சொந்த வீடு வாங்கணும். என் பையனுக்கு இங்கே சீட் கிடைக்கணும். கடன் அடைக்கனும், பதவி உயர்வு கிடைக்கனும்… குடும்ப பிரச்சனை தீரணும்… இந்த மாதிரி…
உங்களை எந்த சக்தியும் ஒன்றும் செய்ய முடியாது.
பின் குறிப்பு:
நம்ம பிரார்த்தனைகள் பலிக்கணும் என்றால் நாம் நல்லவர்களாக, மற்றவர்களை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். இதுதான் எனக்கும், எனது கணவருக்கும் கம்ப்ளீட் எனர்ஜி. எங்கள் வாழ்க்கையின் ஆதாரம்!
தன்னம்பிக்கை குறித்து…
எனக்கும், என் கணவருக்கும் புத்தகங்கள் படிப்பதில் அத்தனை ஆர்வம். நல்ல புத்தக வாசிப்பு ஒரு மனிதனுக்கு மிக அத்தியாவசியம். அப்படியிருக்கையில் மதிப்பிற்குரிய திரு. இல.செ. கந்தசாமி ஐயா அவர்களின் தன்னம்பிக்கை புத்தகங்களில் பாதி புத்தகங்கள் இன்னும் எங்கள் வீட்டு லைப்ரரியில் இருக்கிறது! அவருடைய தன்னம்பிக்கை புத்தகங்களை அப்படி வாசித்திருக்கிறேன். அவரின் பத்திரிக்கையில் நானும் இடம் பெறுகிறேன் எனும்போது, குருவை தரிசித்த சிஷ்யைப் போல உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறேன். ரொம்ப நெகிழ்வான தருணம் இது!
பலரின் வெற்றிப் பயணத்திற்கு துணைநிற்கும் நற்பாதை தன்னம்பிக்கை.
பத்திரிக்கை, ஊடகம், மருத்துவம் எனப் பல துறைகளில் சாதித்து வரும் நீங்கள் நேரத்தைப் பயன்படுத்தும் விதம் குறித்து…
விடியலில் எழுந்திருப்பது, யோகா, வாக்கிங், மூச்சுப்பயிற்சி செய்வது, வேலையைப் பகிர்ந்து Together, Towards, Excellence… என்ற முறையில் செய்வது… அதேசமயம் அவ்வப்போது பிரார்த்தனை செய்வது, தியானம் செய்வது, இறைசக்தியோடு வேலை செய்வது, கூடவே மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க அப்பப்போ ரிலாக்ஸ் செய்து கொள்வது இதெல்லாம் தான் முக்கிய காரணங்கள்!
நன்றிக்குரியவர்கள் என்று நீங்கள் கருதுபவர்கள்?
வேலையில் முழு நேர்த்தியைக் கற்றுத்தந்த என் அன்பிற்குரிய மாமனார் திரு. ராமச்சந்திரன் அவர்கள், ஒழுக்கத்தை ஆணித்தரமாக சொல்லித்தந்த என் அன்பு அப்பா திரு. தங்கையா அவர்கள், தாய் பாசத்திற்கு நிகரான பாசத்தை தந்துவரும் தங்கை மெர்சி, எனக்கும் என் கணவருக்கும் நல்ல நண்பர்களாய் பாலிமர் ராஜா சார், பழைய My Tv சரவணன் சார், Rtn. சிவப்ரகாஷ், ரோட்டரி நண்பர்கள் ரவி, ப்ரகாஷ், என் நெருங்கிய தோழிகளாய் எப்போதும் என்னுடனிருக்கும் மெர்ஸி, மகள்கள் ரோமிகா, ஷர்மிகா, நெருங்கிய நட்பு வட்டாரங்கள், காரமடை ரஜினி தர்மராஜ், கல்லி சிவா, டாக்டர் கதிர்வேல், பிரபு அண்ணா, ஜெயா, அன்பே உருவான டாக்டர் வேலுப்பிள்ளை அண்ணா,Energyful சந்திரா அண்ணி, பாஸ்டர் செல்வின் ஐயா, பாம்பே மனோ அண்ணா, என் பிரிய சூசை அங்கிள், பிரியத்திற்குரிய ராதா, சுதா, நாட்டுப்பற்றை நெருப்பாய் சுமக்கும் என் தம்பி ஆசீர் இவர்கள் அனைவருடன் எங்களது மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் மேலும் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள்.
எதிர்கால இலக்கு?
நாங்கள் மருத்துவத்துடன் குடும்ப நல ஆலோசனையை பனிரண்டு வருடமாக மீடியாக்கள், பத்திரிக்கைகளில் செய்து வருகிறோம்.
எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து, அவர்களின் அந்தரங்கங்களை ஒரு நல்ல தோழியாய் என்னுடன் மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த அனுபவத்தில் சொல்கிறேன்… பணம் மட்டுமே வாழ்க்கையில்லை! நூறுகோடி வங்கி கணக்கு வைத்திருந்தாலும் 3 வேளைதான் சாப்பிட முடியும். 10 வேளை சாப்பிட முடியாது. பெரிய மாடி வீடு இருந்தாலும், ஆறு அடிக்குதான் படுக்க முடியும். அதை மீறி மனிதன் ஒன்றும் செய்ய முடியாது! ஆனால் நேர்மையாய் எதையும் செய்து பாருங்களேன்… மற்றவர்களைக் காயப்படுத்தாத வார்த்தைகள்; ஆறுதலான உதவிகள்; சுறுசுறுப்பான வாழ்க்கை; குடும்ப நபர்களிடம் அன்பு; தொழிலில் நேர்மை என்று வாழ்ந்து பாருங்கள்… உண்மையான மனநிம்மதி கிடைக்கும்!
இப்போது Rainbow Fm-ல் தினசரி காலை 6.55 மணி முதல் 7 மணிவரை தினம் ஒரு ஆரோக்கிய குறிப்புகளை நானும், பிரதி வியாழன் 3 மணி முதல் 4 மணி வரை இயற்கை மருத்துவம் குறித்த கருத்துக்களை எனது கணவர் திரு. சரண் அவர்களும் தந்து வருகிறோம். பாலிமர் சேனல், சத்யம் டி.வி., ஜெயா தொலைக்காட்சியில் எங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
விரைவில் சத்தியம் தொலைக்காட்சியில் குடும்ப ஆலோசனைகளைத் தரும் ‘இனியவளே உனக்காக’ நிகழ்ச்சி ஈஸ்டருக்குப்பின் வாரா வாரம் ஒளிபரப்பாக உள்ளது.
எதிர்கால இலக்கு என்றால் இந்த இயற்கை மருத்துவம் உலகெங்கும் பரவ வேண்டும். நிம்மதியான தனிமனித, குடும்ப வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க எங்கள் ‘ABBA Foundation’ முயற்சி எடுத்து வருகிறது; அது பலிக்க வேண்டும்!
இந்த இதழை மேலும்