– 2014 – December | தன்னம்பிக்கை

Home » 2014 » December (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    என் பள்ளி

    கல்வி என்பது ஒரு மனிதனை மனிதனாக வாழச் செய்யும் உன்னதம். கல்வி கற்கும் காலம் குறைவாக இருப்பினும் அக்கல்வியால் பெறும் பயன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும். அவ்வகையில் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் சாதனை படைத்துவரும் பேராசிரியர் மூர்த்தி செல்வக்குமரன் அவர்கள் தனது கல்வி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

    ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், கண்ணுடையாம்பாளையம் கிராமத்தில் பெரியசாமி, தங்கமணி அவர்களின் மூத்த மகனாய் 1978ம் ஆண்டு பிறந்தேன். ஒரு சிறிய ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிறு வயது முதலே கல்வியின் மீது எனக்கு நாட்டம் அதிகமிருந்தது. எனது தந்தைக்கு கை கால் சிறிது ஊனமுற்றிருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொழிலில் அவர் காட்டிய கடின உழைப்பு பிற்காலத்தில் எனக்கும் பெறும் உந்துதலாக இருந்தது.

    நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்பொது என்னுடைய பாட்டியிடம் நான் காந்தியைப் போல் வெளிநாடுகளில் சென்று படிப்பேன் என்று கூறியிருக்கிறேன். அதனை இன்று நிறைவேற்றியும் காட்டியிருக்கிறேன்.

    மேலும், அதே வகுப்பு படிக்கும் பொழுது குப்புசாமி என்ற தலைமையாசிரியர் கணக்கில் செய்த தவற்றை சுட்டிக்காட்டியதற்கு அவர் என்னைப் பாராட்டியது என்றும் மறக்கமுடியாத நிகழ்வாகும்.

    எனது ஆரம்பக்கல்வியை கண்ணுடையம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை கணபதி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பள்ளி இறுதிநிலையை மொடக்குறிச்சி மேல்நிலைப் பள்ளியிலும் நிறைவு செய்தேன்.

    பள்ளி வயதிலே புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதில் எனக்கு ஆர்வம் மிகுதியாக இருந்தது. சிறிய ரப்பர் டப்பாவைக் கொண்டு எரிவாயு உற்பத்தி செய்தல் போன்றவற்றை செய்முறையாக செய்து பார்த்திருக்கிறேன். பொறியியல் படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தேன்.

    இன்று கல்வி ஆலோசனைகளை லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கி வழிகாட்டுவதிலும், பொதுமக்களின் வாழ்வு சிறக்க பணியாற்றி வருவதிலும் சமுதாயத்திற்கு என்னால் இயன்றஅளவில் செய்துவருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    பள்ளி வயதிலே புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதில் எனக்கு ஆர்வம் மிகுதியாக இருந்தது. சிறிய ரப்பர் டப்பாவைக் கொண்டு எரிவாயு உற்பத்தி செய்தல் போன்றவற்றை செய்முறையாக செய்து பார்த்திருக்கிறேன். பொறியியல் படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தேன்.

    இன்று கல்வி ஆலோசனைகளை லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கி வழிகாட்டுவதிலும், பொதுமக்களின் வாழ்வு சிறக்க பணியாற்றி வருவதிலும் சமுதாயத்திற்கு என்னால் இயன்றஅளவில் செய்துவருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    எட்டாம் வகுப்பு வரை சுமாராகத் தான் படித்து வந்தேன். நேசமணி என்ற கணக்கு ஆசிரியரின் கல்விப்பயிற்சி முறையில் ஈர்க்கப்பட்ட பின்னர் படிப்பில் தனிக்கவனம் வந்தது. ஆங்கிலத்தில் குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறாதது எனது பள்ளிக்கல்வியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தத் தோல்வி தந்த ஊக்கம் தான் பத்தாம் வகுப்புத் தேர்வில் பள்ளியில் இரண்டாம் இடம் பெற்றமாணவனாகவும், அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண் பெற்ற மாணவனாகவும் என்னை உருவாக்கியது. பரிசுகளும், பாராட்டுக்களும் அந்த ஊக்கத்திற்குக் கிடைத்த வெற்றி. எதிர்காலத்தில் கல்வியில் என்னை பல சாதனைகள் செய்யத் தூண்டியது. நாங்கள் படித்த காலத்தில் சகமாணவர்களுடன் படிப்பில் போட்டிகள் ஏற்படும். அது ஆரோக்கியமான போட்டியாக அமைந்தது. அதுவே பல சாதனைகளைச் செய்ய வழிவகுத்தது.

    மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் துறை ஆசிரியராக இருந்த திரு. மோகனசுந்தரம் அவர்களின் வழிகாட்டல் தான் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் முதல் மதிப்பெண் பெற துணையாக இருந்தது. பள்ளி இறுதித் தேர்வில் பள்ளியிலேயே இரண்டாம் இடம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.

    தமிழக அரசின் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்வு பெற்று பொறியியல் கல்வியை 1996ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தொடங்கினேன். பள்ளிக் கல்வி முழுவதும் தமிழ் வழியிலேயே கற்ற எனக்கு பொறியியல் பட்டப்படிப்பு முழுவதும் ஆங்கிலம் என்பது சிரமமாகத் தான் இருந்தது. எனினும் நான்காண்டு கல்லூரிக் காலங்களில் எந்த பாடத்திலும் தோல்வியடையாமல் ஆங்கில வழியிலேயே தேர்ச்சியும் பெற்றேன்.

    பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நண்பர்களுடன் சேர்ந்து காலையில் டியூசன், பள்ளி வகுப்புகள், மாணவர்களுடன் மதிப்பெண்களுக்கான போட்டிகள் போன்றவை பள்ளிக்கால மறக்கமுடியாத தருணங்களாகும்.

    இன்றைய அவசர உலகில் மனித வாழ்க்கை இயந்திரம் என்றாகிவிட்டது. இதில் கடந்த கால பள்ளி அனுபவங்களைப் பற்றி நினைப்பதே இன்பமென்றாகிவிட்டது. இனியும் அதுபோல் இனிய காலம் அமைவது கிடைக்காத அனுபவமே.

     நான் படித்த பள்ளியில் புதிய மாற்றங்கள் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் என் மனதில் இருந்து கொண்டு தான் உள்ளது. ஆண்டுதோறும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றேன். இந்த ஆண்டு ப்ளஸ் டூ-வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்க முடிவு செய்துள்ளேன்.

    15 ஆண்டுகளாக பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் எனக்கு ஒரு கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு என்ன பாடம் படிப்பது? எங்கு படிப்பது? என்ற எதிர்கால இலக்கு இல்லாமல் இருந்து வருகிறார்கள். அவர்களது எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். அம்மாதிரியான மாணவர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக இது தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். The Hindu, Times of India தினத்தந்தி போன்ற செய்தித்தாள்களிலும், தன்னம்பிக்கை, புதிய தலைமுறை போன்ற இதழ்களிலும், புதிய தலைமுறை டி.வி. மற்றும் கோடை FM, சூரியன் FM மூலமாகவும் பல உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.

    எரிவாயுவை சரியாகக் கையாளத் தெரியாத மக்களுக்கென சமையல் சிலிண்டர்களை எளிதாகவும், பாதுகாப்பாகவும் கையாளுவதற்கென “A Smart Gas Cylinder Machine” என்றபுதிய சாதனத்தை உருவாக்கி உள்ளேன். இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வரவுள்ளது.

    ஸ்ரீ செல்வக்குமரன் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் மூலமாக பல இளைஞர்களுக்கு வேலைகள் வழங்கி வருகிறேன். வளரும் சாதனையாளர், சிறந்த ஆசிரியர், சிறந்த ஆராய்ச்சியாளர் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளேன்.

    எண்ணுவதெல்லாம் உயர் உள்ளல் என்ற வள்ளுவரின் வாக்குப்படி மாணவர்கள் சிறுவயதிலேயே சிறந்த லட்சியங்களை உருவாக்க வேண்டும். அதனை அடைவதற்கு கடுமையான தொடர் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

    நீ எதுவாக நினைக்கின்றாயோ அதுவாகவே ஆவாய் என்பதைப் போல ஒரு லட்சியத்தை நோக்கி பயணம் தொடர்ந்தால் ஒருநாள் நீங்கள் கண்டிப்பாக அந்த லட்சியத்தில் வெற்றி அடைவது உறுதி. அதுவரை மாணவர்கள் தங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்காமல் மேலும் மேலும் முயற்சியை கடுமையாக்க வேண்டும். மனம் மிகப்பெரிய சக்திகளை உள்ளடக்கியது. அதை சரியாக முறைப்படுத்துபவர்களே சாதனையாளர்களாக

    இந்த இதழை மேலும்

    என் கல்லூரி பக்கம்.

    கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான ஒன்று. கல்வி தான் ஒருவரைக் கரை சேர்க்கும். அந்தக் கல்வியை நமக்கு பிடித்தாற்போல் தேர்ந்தெடுத்து படித்தால் நிச்சயம் அதில் வெற்றி பெறுவது உறுதி. காரணம் நம்மால் எதைச் சரியாகப் படிக்க முடியும். எத்துறையைப் படித்தால் என்னவாக ஆகலாம் போன்றவயை அறிந்து படிக்கும் பொழுது தேர்வும் தேர்ச்சியும் சுலபமாக இருக்கும். விரும்பிய துறையில் விரும்பிய பாடத்தில் பாட அட்டவணையையும் நாமே தேர்ந்தெடுக்கும் போது கல்வியின் மகத்துவத்தை அறிந்துகொள்ள முடியும். இம்முறையில் ஒரு சிறப்புமிக்க திட்டத்தை மாணவர்களின் நலனுக்காக வேலூர் VIT தொழில்நுட்ப கல்லூரி  FFCS என்ற ஒரு முறையை உருவாக்கி வருகிறார்கள்.

    VIT கல்வி நிறுவனம் முதலில் ஒரு முழுமையான, தரமான உயர்கல்வியை எங்களுக்கு கொடுத்துவருகிறது. அது மட்டுமல்லாமல்,FFCS என்ற ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுத்து பாட அட்டவணையைப் பயிலும் மாணவர்களிடம் கொடுத்து தேர்ந்தெடுக்கச் சொல்கிறார்கள். இதனால் பிடித்தமான பாட அட்டவணையை மாணவர்களே தேர்ந்தெடுத்து படிக்கும் முறை தேர்விற்கும் வாழ்விற்கும் பெரிதும் உறுதுணையாக இருக்கிறது.

    நான் கல்வியாளர்களிடமும், என் சகமாணவர்களிடமும் இதைப்பற்றி பேசினேன். இந்த FFCS (Fully Flexible Credit System) கல்லூரியில் கல்விப் பாடத்திற்கு மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். இதன்மூலம் மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்களைத் தேர்வு செய்து ஆனந்தமாக தேர்ச்சியும் பெற்று வருகிறார்கள். மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்தப் பாடத்தினை படித்து தேர்ச்சி பெறுவதற்கு நாட்கள் வரையறையில்லை. எப்போது அவர்கள் முடிக்கிறார்களோ அப்போது அவர்களுக்குப் பட்டம் அளிக்கப்படுகிறது.

    ஒரே கல்வியாண்டில் பல பாடங்களைப் படித்தல்

    மாணவர்களின் கூடுதல் திறனுக்காக வேறு தரப்பட்ட பாடங்களை பல தரப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் இருந்து தேர்வு செய்து படிக்கிறார்கள். இம்முறை பொதுவாக படிப்பதற்கு உதவியாக இருக்கிறது. அவர்களின் தரம் உயர்வதற்காகவும், விரைவாக கல்வி கற்பதற்காகவும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. முதன்மையான பாடங்கள் அனைத்தும் வருடத்திற்கு இரண்டு பருவத் தேர்வுகளிலும் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. முந்தைய பருவத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடத்தினை மறுபதிவு செய்து கொள்ளலாம். இங்கு கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களைக் கௌரவப் படுத்துகிறார்கள். FFCS, நேரத்திற்கு ஏற்றாற்போல் கால அட்டவணை செயல்பட்டு வருகிறது. எப்படியென்றால், மாணவர்கள் தங்களது வகுப்பைத் தேர்வு செய்து கொள்ளலாம் (செயல்முறைவகுப்பு, கற்றல் வகுப்பு). வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனி அட்டவணை உள்ளது.

    GPA முறையில் மாணவர்களின் தரம் ஆராயப்படுகிறது (0  10% அலகுமுறைப்படி) இரண்டு பருவங்களிலும் கூடுதல் மதிப்பீடு முறை பயன்படுத்தப்படுகிறது. விரிவுரை, செய்முறை, கருத்தரங்கம், ஆய்வறிக்கை அனைத்து மதிப்பீட்டையும் ஒன்றுக்கொன்று ஒப்பிட்டு சரியான மதிப்பெண் வழங்கப்படுகிறது. வகுப்பின் மொத்த மாணவர்களின் மதிப்பெண்களும், சராசரி முறையில் வகுப்பின் மதிப்பீடு கணக்கிடப்படுகிறது.

    தேர்வு முறை, மதிப்பீட்டு முறைஇரண்டும் மாணவர்களின் கால அட்டவணைப்படியே அமையும். ஒரு பருவத் தேர்விற்கு 6 எழுத்துத் தேர்வும், 3 Quiz வினாவிடைத் தேர்வும், 2 CAT தேர்வும், 1 TEE இறுதி பருவத் தேர்வும் நடத்தப்படுகிறது. வினாவிடைத் தொடுத்தல் முறையில் வகுப்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிர்ணயம் செய்யப்படுகிறார்கள். தொடர் மதிப்பீட்டுப்பரீட்சை 4 அலகு மற்றும் இறுதி பருவத் தேர்வு 2 வாரங்கள் நடத்தப்பட்டு பாடத்திட்டம் முழுமையாக முடிக்கப்படுகிறது.

    SLOT முறைப்படி தேர்வும் அதே வகுப்பில் நடத்தப்படுகிறது. இதன்மூலம் அதிக அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்களின் மொத்த மதிப்பெண் பருவத் தேர்வின் இறுதியில் 100க்குக் கணக்கிடப்படுகிறது.

    நேர்மறைக் கருத்து (Positive Thoughts)

     என் நண்பர்களிடம் கருத்துக் கேட்கும் பொழுது அவர்கள் கூறுவது இந்த முறை எங்களுக்கு உறுதித் தன்மையாகவும், நல்ல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியும் கொடுக்கிறது. மேலும் ஆசிரியர்கள் நிர்ணயிக்கும் முறை எங்களுக்குச் சாதகமாக உள்ளது. அவர்களும் எங்களது கலந்துரையாடலில் அதிகமாக நேரம் ஒதுக்கி செயல்படுகிறார்கள்.

    அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் கொடுக்கப்படுவதில்லை. சரியான ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பதற்கும், சக மாணவர்களின் நேரத்திற்கு ஏற்றாற்போல் திட்டங்கள் தீட்டி செயல்படுத்துகிறோம். ஆனால் அந்த நாளின் இறுதியில் நாங்கள் தீட்டிய திட்டம் சரிதானா என்று புலப்படும். அதுவொரு விதமான அதிர்ஷ்டம் தான்  என்று என்னிடம் கருத்தினை தெரிவித்தார்கள்.

    இந்த சார்பு மதிப்பு முறையின் படி அதிக மதிப்பெண் பெறுவது என்பது முக்கியம் இல்லை.

    மற்றமாணவர்களை ஒப்பீடு செய்யும்போது அவர்களை விட முன்னேறியிருந்தால் போதுமானது.

    கல்லூரி வளாகம்

    எங்களது பரந்து விரிந்த கல்லூரியின் வளாகம். 350 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்திற்குச் சென்றடைய 10 நிமிடங்கள் செலவாகின்றன. வகுப்பிற்குச் செல்வதற்கு நாளொன்றுக்கு 600 முதல் 1000 மீட்டர் வரை ஓடித் தான் செல்ல வேண்டும். மிதிவண்டியைப் பயன்படுத்தி வகுப்பிற்குச் செல்கிறார்கள். பெரிதாக பிரச்சனை இல்லை, நடந்து செல்பவர்களுக்கு உண்மையில் ஒரு நல்ல உடற்பயிற்சி.

    இந்த இதழை மேலும்

    திறமைகள் உடன் பிறந்தவைகளா?

    இங்கிலாந்து அரசர் முதலாம் பிரான்சிஸ் என்பவருடைய அரசவையில் துவால் என்பவர் நூலகராக இருந்தார். பல துறைகளில் அவருக்கு நிபுணத்துவம் உண்டு. தன்னுடைய தனித்துவம் மிக்க இந்த திறமைக்காக அவர் கர்வம் கொள்வதில்லை, பெருமை பேசுவதில்லை. அரசவையில் இருக்கிற பலரும் அவருக்கு மிகுந்த மரியாதை அளித்தனர். அரசன் இந்த நூலகருக்கு நல்ல ஊதியத்தையும் வழங்கி இருந்தார்.

    ஒரு சில சமயங்களில் ஒரு சில விஷயங்கள் அவருக்குத் தெரியாமல் இருந்த போது, எனக்கு இது தெரியவில்லை என மிகப் பணிவோடு ஒப்புக் கொண்டார். எனக்குத் தெரியவில்லை என்று ஒப்புக்கொள்கிற இந்த மனப்பக்குவத்தை ஒரு இளைஞன் விரும்பவில்லை. எனக்கு ஒன்றைப்பற்றித் தெரியவில்லை என்று ஏன் சொல்கிறீர்கள், உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவுக்கும் ஞானத்திற்கும் தான் அரசர் உங்களுக்கு ஊதியம் தருகிறார். ஆகவே தெரியாது என்று சொல்வது உங்களுக்கு அழகல்ல என்று கூறினான். துவல் அதற்கு, எனக்கு என்ன தெரிகிறதோ, எந்த திறமை இருக்கிறதோ அதற்கேற்ப தான் அரசு ஊதியம் வழங்குகிறது. எனக்குத் தெரியாதவைகளுக்கு எல்லாம் அரசர் ஊதியம் தருவதென்றால் அவருடைய பொக்கிஷம் கூட போதாது என்று பதில் தந்தார். கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்று விளக்கினார்.

    பலர் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்து முடித்தவுடன் கல்வி அறிவு பெறுவதும் முடிவுறுகிறது என்று தவறாக எண்ணுகிறார்கள். இது உண்மையல்ல பட்டச் சான்று பெறுவது மட்டும் கல்வி அறிவுக்கு இறுதியானது அல்ல. பள்ளிகளும் கல்லூரிகளும் கல்வி கற்கிற சூழ்நிலையை உண்டாக்குகின்றன. முழுமையான கல்வி அங்கு பெறப்படுகிறது என்பது உண்மையல்ல. கல்வி நிலையங்களில் படித்து முடித்த பிறகு பெறுகிறஅறிவும் அனுபவமும் தான் ஒருவருடைய திறமையை வளர்க்கும். அடிப்படை அறிவை மட்டுமே கல்வி நிலையங்கள் தருகின்றன. அங்கிருந்து பெற்றகல்வியை மூலதனமாகக் கொண்டு மேலும் மேலும் அறிவை வளர்த்துக் கொண்டு திறமையை அதிகப்படுத்திக் கொள்வது தான் எதார்த்தமான உண்மை.

    உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரும் கற்றுக் கொண்டிருக்கிறமாணவர்கள் தான். ஒன்றைப்பற்றிக் கற்றுக் கொள்வது அல்லது தெரிந்து கொள்வதை எப்போது நிறுத்துகிறானோ அப்போது அவன் இறந்து விட்டதாகப் பொருள்.

    திறமை என்பது கல்வி அறிவினால் மட்டும் வந்து விடுவதில்லை. அந்தத் திறமை அவனுடன் உடன் பிறந்தது. உடன் பிறந்த திறமையை யார் நன்றாகப் பயன்படுத்துகிறார்களோ அவர்களே சாதனையாளர்களாக மாறுகிறார்கள். ஒருவனுக்குள் மறைந்திருக்கிற திறமையை வெளிக்கொணர்வது தான் கல்வி நிலையங்களின் பணி. அந்த திறமை தான் அவன் வாழ்வின் அதியசங்களையும் அற்புதங்களையும் செய்து காட்ட உதவுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் திறமை உண்டு. சிலர் விளையாட்டுத்துறையில் திறமையானவர்களாக இருப்பார்கள். சிலர் கலைத்துறையில் திறமையானவர்களாக இருப்பார்கள். சிலர் ஓவியத் துறையில் திறமையானவர்களாக இருப்பார்கள். சிலர் இசையிலே விற்பனர்களாக இருப்பார்கள். சிலர் அறிவியலிலே திறமையானவர்களாக இருப்பார்கள். சிலர் கணக்கிலே புலியாக இருப்பார்கள். சிலர் நிர்வாகத் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

    ஒரு கையிலே விரல்கள் ஐந்தும் ஒரே நீளமாக இருப்பதில்லை. திறமைகளின் அளவீடு துறைக்கு துறை மாறுபடுகிறது. திறமை என்றகுணத்தை வளர்த்துக் கொள்கிற முறை அவர்களுடைய முயற்சியைப் பொறுத்தது.

    மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரான கபில்தேவ் அவர்கள் என்ற தன் சுய சரிதையில் குறிப்பிடுகிறார். ஒருவனிடமுள்ள திறமையும் அவனுடைய கடுமையான உழைப்பும் இரண்டும் இணைந்து தான் சாதனையை உருவாக்க முடியும் என்று சொல்கிறார். இரண்டும் கலந்தது தான் சாதனை. அதில் திறமையோ அல்லது கடின உழைப்போ ஏதாவது ஒன்று குறைவாக இருந்தால் அவர்கள் குறிப்பிடுகிறஅளவு சாதனையாளர்களாக ஆக முடியாது.

    ஒரு சிலர் திறமை சற்று குறைந்து கடுமையான உழைப்பின் மூலமாக சாதிப்பது உண்டு. ஒரு சிலர் திறமை அதிகமானவர்களாக இருந்து குறைவான உழைப்பின் மூலம் சாதிப்பது உண்டு. இதற்கு அவர்களுடைய அதிர்ஷ்டம் அல்லது விதி தான் என்று சொல்கிறார்.

    மிகப்பெரிய வெற்றியாளனாக திகழ்வதற்கு ஆர்வம் மட்டுமே போதாது.  அதைப்பற்றிய அறிவும் இருக்க வேண்டும். திறமையும் இருக்க வேண்டும். ஒன்றைஇழந்தால் தான் ஒன்றைப் பெறமுடியும். தியாகம் செய்தால் தான் சாதிக்க முடியும். ஆகவே அறிவு, திறமை, ஆர்வம், கடுமையான உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தோல்வியைக் கண்டு துவண்டு போகாத மனம், ஓர் உத்வேகம், ஒரு குறிக்கோள், ஓர் இலக்கு இவைகள் இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் உங்களுக்குள் உண்டாகும் ஒவ்வொரு எண்ணமும், நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நீங்கள் உங்களுக்குள் உங்களை செதுக்கி உருவாக்கிக் கொண்டிருக்கும் சிலையைச் செய்ய கருவிகளாக அமையும். நல்ல எண்ணமாக, நல்ல வார்த்தையாக, நல்ல செயலாக இருந்தால் அது நல்ல கருவியாக அல்லது உளியாக மாறுகிறது. தீய எண்ணமாக, தீய வார்த்தையாக, தீய செயலாக இருந்தால் அது மோசமான கருவியாக அல்லது உளியாக மாறுகிறது. கருவியை அல்லது உளியைப் பொறுத்து சிலை மாறுபடும். நல்ல கருவியாக அல்லது உளியாக இருந்தால் சிலை முழுமையாகவும், மோசமான கருவியாக அல்லது உளியாக இருந்தால் சிலை குறையுள்ளதாகவும் அமையும். ஆகவே சிலை செய்ய உதவும் இந்த கருவிகளை நாம் கவனமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

    இந்த இதழை மேலும்

    நம்பிக்கை வேண்டும்

    வாழ்க்கையில் வெற்றிக் கனியைப் பறிக்க விரும்புபவர்கள், சரியான முறையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். “இந்த வெற்றியை என்னால் பெறமுடியுமா?” என்றகேள்வியை முதலில் எழுப்பி, அந்தக் கேள்விக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    தன்னைப்பற்றி நன்கு தெரிந்துகொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெறுகிறார்கள்.

    ஒருவர் தனது பலம், பலவீனம், வாய்ப்புகள், தடைகள் பற்றி சரியாக முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தன்னைப்பற்றி ஒருவர் “சுயமதிப்பீடு” (Self evaluation) செய்யும்போதுதான் அவரது உண்மையான நிலை தெரியும்.
    “நீ செய்வது சரியில்லை”

    “உன்னிடம்தான் தவறு இருக்கிறது”
    “நீங்கள் செல்லும் பாதை சரியானது அல்ல”
    “உன்னை நீ மாற்றிக்கொள்ள வேண்டும்”
    “உனது நடவடிக்கைகள் வரவர சரியில்லை”

    என விமர்சனங்கள் அள்ளித்தெளித்து ஒருவரை மற்றவர்கள் ஆய்வு செய்கிறார்கள் என்றால் அவரிடம் குறை இருப்பதை அந்த நபர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

    நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், பள்ளி – கல்லூரித் தோழர்கள் என வெவ்வேறு நிலைகளில் விமர்சனங்களை ஒருவர் பெறவாய்ப்புள்ளது. இந்தநிலையில் ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

    “நமது பலவீனங்களை சரியாகத் அறிந்துகொள்ளாமல் இருந்தால் நம்மால் வெற்றி பெறமுடியாது” என்பது வெற்றி பெற்றவர்களின் அனுபவ வார்த்தைகள் ஆகும். பலவீனங்களைப்பற்றி தெரிந்து கொள்வதைப்போலவே ஒருவர் தனது பலத்தைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்.

    “என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கிறது” என்று சிந்தித்து அதனை பட்டியலிட்டு அந்த பலத்தினை அதிகப்படுத்த முயல வேண்டும். குறிப்பாக, பள்ளியில் படிக்கும் மாணவ – மாணவிகள் தங்களுடைய திறமைகளை இளம்வயதிலேயே இனம் கண்டுகொள்ள வேண்டும்.

    “என்னால் நன்றாக பாட முடியும்”

    “என்னிடம் மனப்பாடம் செய்யும் சக்தி உள்ளது”

    “பிறருக்கு உதவுவது எனது பிறவிக்குணம்”

    “பெரியவர்களை மதித்து அவர்களது பேச்சை கூர்ந்துகவனித்து அதன்படி நடப்பது எனக்கு எப்போதும் நன்மை தருகிறது”

    “எனது பெற்றோர்கள் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்”

    இப்படி மாணவ – மாணவிகள் தாங்கள் பலமாகக் கருதும் காரணிகளை இனம்கண்டுகொள்ள வேண்டும். தங்கüன் பலத்தை அடையாளம் காணும்போதுதான் அவர்களை அறியாமலேயே அவர்களின் மனோபலம் அதிகரிக்கிறது.

    “எனக்கு ஆதரவாக எனது உறவினர்களும், நண்பர்களும் இருக்கிறார்கள்” என்ற நல்ல நம்பிக்கையும் இவர்களுக்கு மேலும் அதிக பலத்தைத் தருகிறது. இப்படி தனது பலம், பிறர் வழங்கும் ஊக்கம் ஆகியவற்றை மனதில்கொண்டு வாழும்போது நல்ல நம்பிக்கை மனதில் பிறக்கிறது. இளம்வயதில் ஒருவர் பெறும் நம்பிக்கைதான் அவரது வெற்றிக்கு அடித்தளமாக அமைகிறது.

    “இந்தியாவின் தந்தை” என அழைக்கப்பட்ட மகாத்மா காந்தி தனது பலத்தையும், பலவீனத்தையும் அறிந்துகொள்வதற்கு அடிக்கடி முயற்சிகளை மேற்கொள்வார். தன்னைத்தானே “சுய மதிப்பீடு” (நங்ப்ச் உஸ்ஹப்ன்ஹற்ண்ர்ய்) செய்யும் வகையில் மவுன விரதம் மேற்கொள்வார். மற்றவர்கüடம் ஓரிரு நாட்கள் பேசாமல் அமைதியாக இருக்கும் பழக்கத்தை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். வாரத்தில் ஒருநாள் இந்த மவுன விரதத்தையும், உண்ணாவிரதத்தையும் அவர் கடைபிடித்ததால் அவர் தனது நடவடிக்கைகளை மதிப்பீடு செய்தார்.

    “நான் செய்யும் இந்த செயல்களெல்லாம் சரியானவைதானா? என்பதை மற்றவர்கள் சொல்வதற்குமுன்பு நான் தெரிந்துகொள்ள வேண்டும்” என மகாத்மா காந்தி நினைத்ததால் இன்று உலகம் போற்றும் உன்னதத் தலைவராக விளங்குகிறார்.

    தன்னம்பிக்கையோடு செயல்பட முடியாதவர்கள் நாள்தோறும் சோகத்தை சுமக்கிறார்கள். வருத்தப்பட்டு நாட்களை நகர்த்துகிறார்கள். “வெற்றி என்பது என் வாழ்வில் கிடைக்காத ஒன்றாக மாறிவிட்டது” என கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன? என்பது பற்றிக்கூட சிந்திக்க இவர்கள் விரும்புவதில்லை.

    ஒருவர் தனது இளம்வயதிலேயே தனது மனநிலையை எப்படி வைத்துக்கொள்கிறாரோ? அதைப்போலவே அவரது வாழ்க்கை அமைகிறது. மனதைரியத்துடன் இளமையில் வாழப் பழகியவர்கள் முதுமையில் வாழ்க்கையை ரசிக்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள்.

    ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தார் ஒருவர். எதிரே மிகப்பெரிய யானை ஒன்று வந்துகொண்டிருந்தது. அருகில் மிகச் சாதாரணமாக யானைப்பாகன் நடந்து வந்துகொண்டிருந்தார். இதைப்பார்த்த அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அசுர பலம் பொருந்திய யானையின் கால்களில் சங்கிலி இல்லை. யானைக் கூண்டில் அடைக்கப்படவில்லை. ஆனால், யானை அமைதியாக யானைப்பாகனின் கையசைப்பைப் பார்த்து நடந்து வந்துகொண்டிருந்தது.

    “இந்த யானை நினைத்தால் ஊரிலுள்ள பலரையும் அழிக்க இயலும். ஆனால், இது அமைதியாக வருகிறதே? தப்பித்துச் செல்ல வேண்டும் என்ற உணர்வுகூட இதற்கு இல்லையே! அது ஏன்?” என்று யானைப்பாகனிடம் கேள்விக் கேட்டார் அவர்.

    யானைப்பாகன் மெதுவாக சிரித்துக்கொண்டே அவருக்குப் பதில் தந்தார்.

    “இந்த யானை சிறியதாக இருக்கும்போது நாங்கள் அதன் காலில் இரும்புச் சங்கிலியை கட்டிவிடுவோம். இந்தச் சங்கிலியை இளம் பருவத்திலேயே இந்த யானை இழுத்து இழுத்து பார்க்கும். எவ்வளவுதான் இழுத்தாலும் அந்த சங்கிலியை உடைத்துக்கொண்டு அந்த யானையால் வெளிவர முடியாது. எனவே, தொடர்ந்து முயற்சிசெய்தும், சங்கிலியை அறுத்துக்கொண்டு வெளிவர முடியாத யானை, தன்னால் இந்தச் சங்கிலியை நீக்கிவிட்டு வெளிவரமுடியாது என உறுதியாக நம்புகிறது. இளம்வயதில் இந்த யானை கொண்ட நம்பிக்கை மிகவும் ஆழமானது. அழுத்தமானது. இதனால்தான் இந்த யானை பெரியதாக வளர்ந்தபின்பும் தன்னால் இந்த சங்கிலியை உடைத்துவிட்டு வெளிவர முடியாது என எந்த முயற்சியும் செய்யாமல், எங்கள் கை அசைவுக்குஏற்ப அமைதியாக நடந்துவருகிறது” என்றார் யானைப்பாகன்.

    பலம்பொருந்திய யானையைப்போன்றே இன்றைய இளைஞர்கüல் பலர் “என்னால் இந்த காரியத்தை செய்ய முடியாது” என மிக அழுத்தமாக நம்புகிறார்கள். இந்த எதிர்மறை நம்பிக்கை தங்கüன் தன்னம்பிக்கையை தகர்த்துவிடுகிறது என்பதை உணராமலேயே இவர்கள் செயல்படுகிறார்கள்.

    “எல்லாம் என் தலைவிதி” என முடிவுசெய்து எந்தவித முயற்சியும் செய்யாமல் வெற்றிபெற ஆசைப்படுகிறார்கள். இதனால்தான், அவர்கள் ஆசைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது. வெற்றியைப் பெற விரும்புகின்ற இளைஞர்கள் தன்னம்பிக்கை என்னும் நன்னம்பிக்கையை இளம்வயதிலேயே மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கை வாழ்க்கையில் வெற்றியை மட்டுமல்ல மனநிறைவையும், மனமகிழ்வையும் தரும்.

    இந்த இதழை மேலும்

    பிரம்ம முகூர்த்தம்

    நம் கலாச்சாரத்தில் முகூர்த்த நாட்களில்தான் திருமணங்களைச் செய்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரத்திற்கு முகூர்த்த நேரம் இருக்கிறது. இந்த முகூர்த்த நேரத்தில்தான் நாம் அனேகம் பேர் தூங்கி வீணாக்குகிறோம். அந்த முகூர்த்த நேரத்தில் செய்யப்படும் எந்தச் செயலும் அற்புதமான மாற்றங்களை நம்மில் ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. அந்த அற்புதமான முகூர்த்த நேரம் ஒவ்வொரு நாளும் அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை இறைநிலை நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

    இந்த முகூர்த்த நேரத்தின் அற்புத அமைப்புதான் என்ன? இதை மூன்று விதமாக நாம் பார்க்கலாம். ஒன்று நம் உடலின் உயிர்க் கடிகாரத்தின் கணக்குப்படி அதிகாலை 4.30 மணிக்கு மேல் நம் பெருங்குடலும் நுரையீரலும் புத்துணர்வு பெறும் காலமாகவும், அதே நேரத்தில் நம் சிறுநீரகமும், சிறுநீர்ப்பையும் தளர்ந்திருக்கும் காலமாகும். ஆக, பெருங்குடல் புத்துணர்வாக இருக்கும் இந்த அதிகாலைப் பொழுதில் நாம் நம் காலைக் கடனை முடிக்க இலகுவாகவும் இருக்கும். அதே போல் நுரையீரல் புத்துணர்வு காலமான அதிகாலையில் மூச்சு பயிற்சி செய்யும்போது நம் உடல் முழுமையும் புத்துணர்வு பெறுகிறது. அதேபோல், சிறுநீரகமும், சிறுநீர்ப்பையும் தளர்ந்திருக்கும் அதிகாலைப் பொழுதில் நாம் படுக்கையைவிட்டு எழுந்து சிறுநீர் கழிக்காமல் இருந்தால், தளர்ந்திருக்கும் சிறுநீரகமும் சிறுநீர்ப்பையும் பலவீனமடையும். ஆகவே, நாம் நம் உடலின் கழிவுகள் முழுமையாகவும் இலகுவாகவும் வெüயேறவும், உடல் முழுமையும் புத்துணர்வு பெறவும் நாம் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலைப் பொழுதில் துயில் எழுவது மிகவும் நல்லது.

    அடுத்து நாம் அதிகாலைப் பொழுதின் இரண்டாவது அற்புதத்தைப் பார்ப்போம். சூரியனின் வெப்பத்தால் நிலத்தைச் சுற்றியுள்ள கடல் நீர் விரைவாக வெப்பமாகி பின்னர் மாலைப் பொழுதில் விரைவாக வெப்பம் தணிந்து குளிர்ந்துவிடும். ஆனால், நிலப்பரப்போ மெதுவாக வெப்பமாகி, மெதுவாகத்தான் தணியும். அதாவது சூரியனின் உச்சி வெய்யில் வெப்பமானது பூமியை மதியம் மூன்று மணியளவில்தான் உணரமுடியும். ஆனால் இந்த வெப்பமானது மாலையில் தணிய ஆரம்பித்து இரவு வரை நீடித்து அதிகாலை மூன்று மணியளவில்தான் முழுமையாக குளிர்ச்சியடைகிறது.

    அடுத்து நாம் மூன்றாவது அற்புதத்தை கவனத்தில் கொள்வோம். அதாவது வெப்பம் அதிகமாக இருக்கும்போது பூமியின் காற்று மண்டலத்தில் உள்ள பிராண சக்தி  இரு மூலக் கூறமைப்பாக இருக்கும். அதுவே குளிர்ந்த நிலையில் இருக்கும்போது (குறிப்பாக பனி பொழியும் போது) காற்றின் பிராண சக்தி மூன்று மூலக் கூறாக, அதாவது ஓசோனாகஇணைந்திருக்கும். நம் பிராண சக்தியானது இரு மூலக் கூறாக இருப்பதை விட ஓசோனாக இருக்கும்போதுதான் மிகவும் சக்தியளிப்பதாக இருக்கும். ஆக, அதிகாலைப் பொழுதில் குளிர்ச்சியான தன்மையால் நம் பூமியின் நிலப்பரப்பில் அதிக அளவில் மூன்று கூறு பிராண வாய்வு இருக்கும். இது சூரியன் எழும்பியதும் இரு கூறாக மாறிவிடுகிறது.

    ஆக, இந்த மூன்றையும் இணைத்து பார்க்கும்போது நம் நுரையீரலின் புத்துணர்வு பெற்ற காலநேரத்தில் நம் பூமிப் பரப்பில் அதிக ஓசோன் வாய்வு கூடியிருக்கும் பொழுது நாம் விழித்து, காலைக் கடன் முடித்து மூச்சு பயிற்சி செய்வோமேயாயின் நமக்கு நாளெல்லாம் புத்துணர்வுதான் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

    ஆக, இப்பொழுது புரிகிறதா நம் முன்னோர்கள் ஏன் அதிகாலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று சொன்னார்கள் என்று? மனிதன் இரவு வேளையோடு தூங்கப்போய், அதிகாலையில் எழும்போது அவன் புத்துணர்வு பெற வேண்டும் என்று இயற்கையானது தயாராக காத்திருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாத மனிதன் மிகத் தாமதமாக எழுந்து, ‘எங்களுக்கு இயர்லி மார்னிங் என்பது பத்து மணி+ என்று பாட்டு பாடுகிறான். அய்யோ! பாவம் அவன் படப்போகும் பாட்டை யார் பாடுவது?

    இந்த இதழை மேலும்

    அலை பாயும் மனதை அடக்குங்கள்

    ஊராரை நீங்கள் வென்று, வெற்றி வாகை சூட வேண்டுமா? ஊரிலுள்ள மக்கள் அனைவரும் உங்களைப் போற்றிப் புகழ வேண்டுமா? எதற்கும் கலங்காத மனமும், எவரையும் எதிர்கொள்ளும் பேராற்றலும், வீரமும், எக்காலத்திலும் அழியாத தன்னம்பிக்கையும், முன்னுக்கு வருவோம் என்ற மன உறுதியும், தொய்வில்லாத முயற்சியும், மனதை அடக்கும் கடுமையான பயிற்சியும், ஓய்வறியாத நெஞ்சும், தளராத ஊக்கமும் நீங்கள் கொண்டிருந்தால், ஊரார் மட்டுமல்ல உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் உங்களைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

    மாபெரும் வீரன் அலெக்ஸண்டர், உலகத்திலுள்ள நாடுகளையெல்லாம் வென்று கொண்டே வந்தான். இதற்குக் காரணம் அவனிட மிருந்த துணிச்சல், தளராத ஊக்கம் ஆகும். நெப்போலியன் மிகச் சிறந்த வீரனாக விளங்கியதற்குக் காரணம், அவனிடமிருந்த தளராத ஊக்கமே! அவர்களை அவர்கள் வென்றார்கள். உலக சரித்திரத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டார்கள். காலத்தால் அழியாத புகழைப் பெற்றார்கள். இவர்கள் எதற்கும் கலங்காத மனம் கொண்டவர்கள். மனதைத் தங்கள் அடிமையாக வைத்திருப்பவர்கள். அதனால் தான் உலகமே போற்றும் வீரர்களாகத் திகழ்கிறார்கள்

    நீங்களும் உங்களை வெல்லுங்கள். உங்களை நீங்கள் வெல்லும் போது, உலகம் உங்களைக் கூர்மையாகக் கவனித்துப் பார்க்கும். இதன்மூலம் காலத்தால் அழியாத புகழைப் பெற்றுச் சிறப்படைவீர்கள். உங்களை நீங்கள் வெல்வது எப்படி? எவராக இருந்தாலும் அவரிடத்தில் என்றைக்கும் மாறாத அன்பைச் செலுத்துங்கள். உங்களிடம் தேவையற்ற கோபம், பொறாமை, மற்றவர் மேல் கொள்ளும் வெறுப்பு, கடிந்துரைத்தல், தேவையற்ற அச்ச உணர்வு, உங்களின் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களையே நம்பாத தன்மை, குறித்த நேரத்தில் எக்காரியத்தையும் செய்யாமல் காலங்கடத்தல், எல்லோரையும் பகைவர்களாகக் கருதுதல், சிரிப்பு என்றால் என்ன விலை என்று கேட்கும் தன்மை, எப்பொழுதும் “சிடுமூஞ்சியாக இருத்தல்” பேச்சில் நம்பகமற்ற தன்மை, எவரையும் எடுத்தெறிந்து பேசுதல், சினத்தினால் பிறரை கைநீட்டி அடிப்பதற்குத் துணிதல், எக்காரியத்தையும் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருத்தல், வருங்காலத்தைப் பற்றி நம்பிக்கையின்மை, மற்றவரை மட்டம் தட்டுதல் ஆகியவைகளை முற்றிலும் நீக்கி விடுங்கள்.

    நீங்கள் உங்களை உங்களிடமுள்ள இருக்கக் கூடாத குணங்களை வென்று விடுங்கள். அரக்கரைப் போன்ற தீய குணங்களை வென்று விடுங்கள். உங்களை நீங்கள் வெல்லாமல், இந்த உலகத்தை வெல்வது எப்படி? முதலில் உங்களை நீங்கள் வெல்ல வேண்டும்.

    நீங்கள் இனியவர் போல வெளிஉலகத்திற்கு நடித்துச் சிரித்தபடி காட்சியளித்து உள்ளத்தால் வஞ்சகத்தன்மையைக் கொண்டிருந்தால் எப்படி? வஞ்சகம் இல்லாத மனதை உடையவராய் நீங்கள் விளங்க வேண்டும்.

    நீங்கள் கூடா நட்பைக் கொண்டிருந்தால் அதை விலக்கிவிடுங்கள். இல்லாவிட்டால் கூடா நட்பு, கேடாய் முடியும். நீங்கள் பொறாமைக் குணத்தைப் பெற்றவராக இருந்தால் அதை இப்பொழுதே ஒழித்து விடுங்கள். பொறாமைக் குணத்தை நீங்கள் பெறாமல் இருந்தால், அதுவே உங்களுக்குச் சிறந்த செல்வம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அழுக்காறு அவா, வெகுü உங்கள் உள்ளத்தில் மண்டிக் கிடந்தால் அவைகளை அறுத்தெறியுங்கள். அவைகள் நல்ல வாழ்க்கை என்னும் சிகரத்திலிருந்து கீழே தள்ளும் பள்ளங்களாகும்.

    உங்களுக்கு ஒருவன் அளவு கடந்த துன்பச் செயல்களைச் செய்து விட்டால், அதற்காக அவனைத் தண்டிக்காமல் அவன் மேல் கோபம் கொள்ளாமல், அவன் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொண்டு, அவனுக்கு உதவிகள் செய்திட வேண்டும். அதுமட்டுமல்ல அவன் செய்த குற்றத்தையும், நீங்கள் செய்த நன்மையையும் உடனே மறந்துவிட வேண்டும். அவன் வேறு துன்பத்தில் வாடும் போது, அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்திட வேண்டும்.

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

    நன்னயம் செய்து விடல்

    என்ற வள்ளுவரின் வழியை நீங்கள் பின்பற்றும் போது, மற்றவரை மட்டுமல்ல, உங்களை நீங்கள் வென்று விட்டீர்கள் என்பதில் ஐயமில்லை.

    உங்கள் உள்ளத்தில் குடிபுகுந்துள்ள போது, அவைகளை நீங்கள் வென்று வெற்றி வாகை சூட வேண்டாமா? உங்கள் மனதைக் கட்டுப்பாடாக வைத்திருங்கள். கட்டுப்பாடு உங்களைச் சிறந்த நிலைக்குக் கொண்டு செல்லும். மற்றவர்களை மதிக்காமல் மிகுந்த ஆணவத்துடன் மட்டம் தட்டிப் பேசக் கூடிய இழிவான செயலை நீங்கள் இப்பொழுதே ஒழித்து விடுங்கள். மற்றவர்களை நீங்கள் மதித்தால் தான் உங்களுக்கும் தகுந்த கௌரவம் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். பிறரை நீங்கள் அலட்சியப்படுத்தும் போது, மற்றவர்களால் நீங்கள் விரைவில் ஒதுக்கி வைக்கப்படுவீர்கள். எல்லோராலும் நீங்கள் ஒதுக்கி வைக்கப்படும்போது, எந்தக் காரியத்தையும் உங்களால் சரியாகச் செய்ய முடியாது. எதிலும் தோல்விதான் மிஞ்சும். உங்கள் உள்ளத்தில் மண்டிக் கிடக்கும் இழிவான குணங்களை எதிர்த்து நீங்கள் போராடுங்கள். உங்கüடமுள்ள வேண்டாத குணங்களைக் கடுமையாக எதிர்த்து வெல்லுங்கள்.

    சில சமயங்களில் “மற்றவர்க்கு ஒன்றுமே தெரியாது. எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்” என்கிற அகந்தை உங்கள் உள்ளத்தில் குடி கொள்ளும். இந்த அகந்தை உங்களிடத்தில் இருக்கும் வரை உங்களால் முன்னுக்கு வரவே முடியாது. இந்த அகந்தை என்ற மூள் கீரிடத்தை உங்கள் தலையிலிருந்து அகற்றி குப்பைத் தொட்டியிலே எறிந்து விடுங்கள் அல்லது எரித்து விடுங்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கயமைக் குணங்களை அடியோடு பெயர்த்தெறியுங்கள்.  நல்ல குணங்கள் அனைத்தும் பொருந்தியிருக்கும் ஒருவரை, மற்றவர்கள் தடுக்கும் போது, விரும்பத்தகாத குணங்களைக் கொண்டிருக்கும் உங்களை முன்னேறுவதற்கு விடுவார்களா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

    தளராத ஊக்கம் உள்ளவனிடத்தில் செல்வமானது தானே வழியைக் கேட்டுக் கொண்டு அவன் இருக்கும் இடத்திற்குச் செல்லும். இத்தகைய தளராத ஊக்கத்தை நீங்கள் வாழ்நாள் முழுவதும் பெற்றிருக்க வேண்டும். தளராத ஊக்கத்தை நீங்கள் பெற்றிருந்தால், உங்களை நீங்கள் எüதாக வெல்ல முடியும்.

    ஆக்கம் அதர்வினாயச் செல்லும் அசைவிலா  ஊக்க   முடையான் உழை

    உங்கüடம் சோம்பல் இருக்குமேயானால் அதைக் கடலில் தூக்கியெறிந்து விடுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்குப் பல விதத்திலும் இடையூறுகள் வந்து சேரும். உலகத்தையே ஆண்டு வரும் சக்கரவர்த்தியின் உறவு வலிய வந்து சேர்ந்த காலத்திலும், சோம்பலை உடைய உங்களுக்கு, அந்தச் சேர்க்கையினால் சிறந்த பயனை அடைய முடியாது.

    உங்களுக்குச் சொந்தமான கப்பலே கடலில் கவிழ்ந்து போனாலும், கலங்காத மனத்திண்மை கொண்டு விளங்க வேண்டும், உங்கள் உள்ளத்தில் அச்ச உண்ர்வு இருந்து கொண்டிருக்கின்றதா? முதலில் அந்த அச்ச உண்ர்வை ஒழித்து விட்டு, எதற்கும், பயப்படாத மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை எனது உடைமையடா! என்பதை நினைவில் கொண்டு வாழுங்கள். அச்சத்தை வென்றவன் தன்னையே வென்று விடுகிறான். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நல்லுள்ளம் கொண்டவராய் இப்புவியில் வாழ்ந்து மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.

    உலகின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சியாகிய நயாகரா நீர் வீழ்ச்சியின் குறுக்கே கயிற்றைக் கட்டி அதன் மீது நடந்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த நிக்லென்சி என்பவர், இவர் 18000 அடி தூரத்தை அரை மணி நேரத்தில் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இடைவிடாத பயிற்சியும், குறிக்கோளும் ஒன்றுபட்ட கவனமும் இருந்தால் தான் இத்தகைய சாதனையைச் செய்ய முடியும்.

    தன் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தீய குணங்களையெல்லாம் போராடி வென்றார். அவரை அவர் வென்றதினால் தான் சாதனை படைக்க முடிந்தது. முயற்சி, கடும் பயிற்சி, ஊக்கம், உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவைகளைக் கொண்ட நிக்லென்சி தன்னிடமிருந்த சோம்பல், எதிலும் ஈடுபாடற்ற தன்மை ஆகியவைகளைப் போராடி வென்றார். அவரை அவரே வென்றார்.

    அவரை அவர் வென்றதினால்தான், தான் மேற்கண்ட முயற்சிகüல் வெற்றி பெற்றார். நீங்களும் உங்களை வெல்லும் போது, முன்னேற்றத்தின் உச்சியில் இருப்பீர்கள், உங்கüடமுள்ள வேண்டாத குணங்களை  ஒதுக்கப்பட வேண்டிய குணங்களை முதலில் நீங்கள் நீக்கி விடுங்கள். உங்களை நீங்கள் வெல்லும் போது, உலகம் உங்களை மதிப்புடன் பார்க்கும்.

    உங்களுடைய உள்ளம் எவருக்கும் கட்டுப்படாதது. நிமிடந்தோறும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். இந்த அலைபாயும் மனதை நீங்கள் அடக்கியாள வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் எந்தச் செயலிலும் வெற்றி காண முடியும். மனதை உங்கள் வசப்படுத்தாமல் உங்களால் எந்தக் காரியத்தையும் ஒழுங்காகச் செய்ய முடியாது. மிகப் பெரிய ஞானிகள் தங்கள் உள்ளத்துடன் கடுமையாகப் போராடி வென்றார்கள். அவர்கள் தனிமையில் தவமிருந்து மனதைத் தங்கள் வழிக்குக் கொண்டு வந்தார்கள். இதன் மூலம் அதிக சக்தியைப் பெற்றார்கள். நீங்கள் உங்கள் கண்களை மூடி  ஐந்து நிமிடம் தியானத்தில் இருந்து பாருங்கள். மனம் உங்களைப் பல திசைகளுக்கும் கூட்டிச் செல்வதை நீங்கள் நன்கு உணரலாம். இந்த மனதுடன் மிகவும் போராடி மனம் சொன்னபடி நீங்கள் கேட்டால் அது உங்களை வெற்றி கொள்வதோடு, உங்களைப் படுபாதாளத்தில் தள்ü விடும் அதனால் தான் “மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்” என்று சான்றோர்கள் சொல்லி வைத்தார்கள்.

    தமிழர்கள் “காளையை அடக்குதல்” என்பதை வீர விளையாட்டாக  ஒரு நிகழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள். பண்டைக் காலத்தில் காளையை அடக்கும் வீரமிக்க இளைஞனுக்கே மாலை சூட்டி மகிழ்வாள், தமிழ்ப் பண்பாட்டில் ஊறிய ஒரு பெண், நாமும் “மனதை அடக்குதல்” என்பதை “ஞானத்தைத் தரும் நாளாக” எண்ணி மகிழ்ந்திடுவோம். மனதை அடக்கும் தினமாக ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அந்நாüல் மனதிற்குச் சிறப்பினைத் தருவோம். எனவே உங்கள் மனதை வெல்லாமல், உங்களை வெல்லாமல் நீங்கள் வேறு எவரையும் வென்று சாதனை படைக்க முடியாது. எனவே முதலில் உங்களை நீங்கள் வெல்லுங்கள்! என்றைக்கும் வெற்றிப் பாதையில் செல்லுங்கள்!

    இந்த இதழை மேலும்

    திரும்பத் திரும்ப வெற்றியாளர் கூறும் விளக்கங்கள்

    ஒரு நல்ல ஐடியா நமக்கு இருக்கும். ஆனால் அதை எங்கே தொடங்கி, யாரை அணுகி, எவ்வாறு உள்ளே நுழைவது என்பது மட்டும் பிடிபடாமல் இருக்கும். அப்படிப்பட்ட வேளையில், அது குறித்த செய்திகளைத் தேடித்தேடி சேகரித்து தெரிந்துகொண்டால் விரைவில் வெற்றி பெறமுடியும்.

    • வறுமையில் வருகின்ற அவமானங்கள் பின்னாளில் வாழ்க்கையில் பெருமையையே கொண்டு வந்து  சேர்க்கும்.
    • சங்கடச்சகதியைப் பொருட்படுத்தாது எப்போதும் என் கடன் பணிசெய்வதே என இடைவிடாது இயங்குவோருக்கு, வெற்றி காத்துக்கொண்டு இருக்கிறது.
    • வறுமை நிலையில் புலமை வெளிப்படும்போது எதிர்ப்புகள் எல்லாத் திசையில் இருந்தும் கிளம்பும். அதை எதிர்கொண்டு இதயம் தளராது, எதிர்நீச்சல் போடும் தைரியம் மட்டும் இருந்தால் போதும். வெற்றி நிச்சயம்.
    • பட்டங்கள் வாங்கிவிடுவதால் மட்டும் பெரும்பலன் இன்று இருப்பதாகத் தோன்றவில்லை. சுய உந்துதல் உள்ள மனிதர்களால் தான் பல சுயமுன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
    • சில நேரங்களில் சிலரை சந்திக்கின்றபோது, அதுவரை இருந்த நிலையில் இருந்து நாம் அடுத்த நிலைக்கு மேம்பட்டு முன்னேறுவோம்.
    • இருக்கின்ற நேரத்தை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். அதை உழைப்பாக மாற்றிக்கொண்டே இருந்தோமானால், நம்மைப்பார்த்து எல்லோரும் வியப்பார்கள் என்பதில் ஐயமில்லை
    • காலத்தின் தேவை கருதி கனகச்சிதமாக இயங்குகின்றவர்களே வெற்றியாளர்களாக என்றைக்கும் உள்ளனர்.
    • நீ உலக அதிசயமாய் உயர்ந்து நிற்க வேண்டும் என்றால் அதற்கே உரிய ரிஸ்க் எடுத்துத்தான் ஆக வேண்டும். அதை கண்மூடித்தனமாக செய்யாது, ரொம்ப கால்குலேட்டிவாக முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி காண முடியும்.
    •  நாம் செய்வது எந்தத் தொழில் என்றாலும் சரி, அந்தத் தொழில் குறித்த, தெளிவும், எதிர்கால நோக்கமும், சமயோசிதமான முடிவும், எடுக்கத் தெரிந்து இருக்க வேண்டும். நாம் என்ன வேலை செய்கின்றோம் என்பது முக்கியமல்ல, அந்த வேலையை எப்படி வித்தியாசமாக சிறப்பாக செய்கின்றோம் என்பது தான் முக்கியம்.
    •  தோல்வி என்பது ஒரு பின்னடைவு தான். அதுவே முடிவாகி விடாது. தோல்விக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதை எப்படிச் சரிசெய்ய முடியும் என்று திட்டமிட்டு முயன்றால் முடியாதது என்பது ஒன்றும் இல்லை.
    •  நம் கண்முன்னே தெரியும் வெற்றியாளனின் பாதையிலேயே பயணிக்க நினைக்காதீர்கள். தனித்துவம் மிக்க உங்களுக்கான பாதையிலே பயணித்துப் பாருங்கள். உங்களாலும் எல்லோராலும் விரும்பக்கூடிய வெற்றியை அடைய முடியும்.
    • ஒருவனது சூழ்நிலையே அவனை, எவனாக வேண்டும் என நிர்ணயிக்கிறது. ஆகவே பெரிதாக சிந்தியுங்கள். பிரம்மாண்டமாக முயற்சியுங்கள். பிரமிப்பான வெற்றியை வெளிப்படுத்துவீர்கள்.
    • சாஸ்திர, சம்பிரதாயத்தின் மீது பலிபோட்டு, உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். விடாமல் திட்டமிட்டு செயல்படுங்கள். இன்றில்லை என்றாலும் நாளை நீங்கள் தான் வெற்றியாளன்.
    • உங்கள் நம்பிக்கை சில நேரங்களில் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருந்தாலும், சட்டென்று மாற்றுப்பாதையை விரும்பாதீர்கள். தொடர்ந்து முழுமனதோடு அதே பாதையில் பயணியுங்கள். விரைவில் உங்களுக்கான வெற்றி கிடைக்கும்
    • நம் சிறு வயதின்போது மனதில் எழும் சிந்தனைகளே நமது பெரிய வயதிலும் எதிர்காலமாக தென்படுகிறது.
    • தனக்கு முன்னே செல்பவனை, பின்னுக்குத் தள்ளுகின்ற வேகமும், விவேகமும் இருக்கின்றவன் தான் உண்மையான வெற்றியாளன்.
    • நம்மால் முடியுமா? என்றால் அது முடியாது! நம்மாளும் முடியும் என்றால் அது முடியும். இந்த நம்பிக்கை தான் நாளும் நம்மை நகர்த்தும் நெம்புகோல்.
    • ஜெயிக்க வேண்டும் என்றவெறியும், மன உறுதியும் உள்ளவரை வெற்றி என்பதற்கு எல்லை என்பதே இல்லை.
    • ஒருவர் நினைத்துக்கூட பார்க்காத நிலை என்றால் நிமிர்ந்துவிடுவதும், ஒருவர் ஆசை ஆசையாய், தேடிப்பிடித்த நிலையிலே தேய்ந்துபோய் விடுவதும் இங்கே வாடிக்கையான விசயம். அதற்காக எதையும் விட்டு ஒதுக்கிப்போவது கோழைத்தனம். எந்த நிலையையும் நேருக்கு நேர் எதிர்கொண்டு, போராடி வெற்றி காண்பதே உன்னதமானது.
    • இறுதியாக, அரிதாரங்களை பூசிக்கொள்ளாத அவதாரங்களே கிடையாது என்பதை மறவாதீர்கள். எதற்காகவும் கலங்காதீர்கள். எத்தகைய மனபாரத்தையும் இறக்கிவைத்துவிட்டு, மறுமுயற்சி செய்ய மறவாதீர்கள்! நிலையாமை உள்ளவரை எங்கேயும் நாம் நின்றுவிட வேண்டியதில்லை. ஓடிக்கொண்டே இருப்போம். ஒருநாள் உன்னதமாய் உருமாறிப் போவோம்

    இந்த இதழை மேலும்

    இடைவெளியை புஜ்யமாக்குவோம்

    பேச்சு வழக்கில் சொல்வோம்!

    “பாதிக்கிணறு தாண்டிய கதை தான்”

    யோசித்துப் பாருங்கள்! பாதிக்கிணறு தாண்டினால் என்ன ஆகும்? எப்போது அப்படித் தாண்டுவோம்!

    நான் பள்ளிக்குச் சென்ற காலகட்டம், அதாவது சுமார் 50 ஆண்டுகளுக்கு (அரை நூற்றாண்டு) முன்பு, பல ஊர்களில் கிணற்றுப்பாசனம் தான். பள்ளி இடைவேளை, மதிய உணவு நேரங்கள், மாலை நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு அருகிலுள்ள கிணற்றுக்கு ஓடிச்சென்று தொலை மேட்டிலிருந்து, கிணற்றுக்குள் எட்டிக் குதிப்போம்.

    சட்டை, டிராயரை அவிழ்த்துவிட்டு, ஒரு கோவணம் கட்டிக்கொண்டு தான் குதிப்போம். தொலைமேடு என்பது, மாடு பூட்டி கவலை மூலம் கிணற்றிலிருந்து நீரை வெளியே கொண்டு வருவதற்கான உயரமாக பகுதி; மாடு செல்லும் பாதை சரிவாக இருக்கும்.

    இப்போது இதுபோன்ற கிணறுகளே கண்ணுக்குத் தட்டுப்படுவதில்லை. கவலை, பரி, ஏற்றம், மாடு எல்லாம் கிணற்றிலிருந்து விடுபட்டு, மின்சார மோட்டார் பம்ப் செட்டுகள் ஆக்கிரமித்துக் கொண்டன.

    கிணறுகளில் நீர்மட்டம் மேலேயே இருக்கும். கிணற்றின் மற்ற மூன்று புறங்களிலிருந்து கத்தி (டைவ்) அடித்து நீருக்குள் நீண்ட தூரம் செல்வோம். தவறாகக் கத்தி அடித்தால், மூக்கு, காதுகளில் தண்ணீர் ஏறுவதுடன் முகமும் அடிபடும்.

    அடிப்பதற்கான பொசிசனே தனி தான். அன்று நீச்சல் குளங்கள் (Swimming Pools) கிடையாது. கோவில்களில், ஊர் நடுவில் குளங்கள் தான் இருக்கும். அதில் குளிப்பதற்கு கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. ஆனால், இன்றைய செயற்கையாக அமைக்கப்பட்ட நீச்சல் குளங்களில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.

    குதிக்கக்கூடாது; (டைவ்) கத்தி அடிக்கக்கூடாது. ஆனால், அன்று கிணறுகளில், குளங்களில் விருப்பம் போல, எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி குளித்து மகிழ்ந்தோம்.

    தொலை மேட்டிலிருந்து குதித்தால், சில சமயம் நீருக்குள் நிலத்தின் அடிமட்டம் வரையிலும் சென்று வந்திருக்கிறோம். அவ்வளவு ஆழம் செல்வதற்கான வேகத்தில் குதிப்போம்.

    கத்தி அடிப்பவர்கள் சிலர், கிணற்றின் ஒரு புறமிருந்து அடித்தால், நேர் எதிரே மறுபுறம் சென்று எழுமளவுக்கு வேகமாய் அடிப்பார்கள்.

    நீளம், ஆழம் இரண்டுக்குமே அடிப்படை மூச்சை தம் கட்டுதல். இதுதான் பூர்ண கும்பம் என்று பிராணாயாமத்தில் சொல்லப்படுகிறது. கண்களை நீருக்குள் திறந்து சுற்றும் முற்றும் பார்ப்போம். கண்கள் சிவந்துவிடும்.

    கிணற்றிலிருந்து மேலே ஏறிவந்தால், மூக்கிலிருந்து சளி ஒழுகும். அந்தக் காலமே ஆரோக்கியமான காலம். இதற்கு இன்று செயற்கையாக மூக்குக் கழுவிக்கொண்டு மூக்கைக் கழுவிக் கொண்டிருக்கிறோம்.

    மக்கள் தொகைப் பெருக்கம், விஞ்ஞான வளர்ச்சியால் அதிகரித்துவிட்ட வாகனப் போக்குவரத்து, தவறான உணவால் நலம் குன்றிய உடல்கள், தவறான வாழ்க்கை முறை (தனிமை, பிறருடன் சேராமல் டி.வி., செல், கம்ப்யூட்டர் ஏதாவதொன்றில் புதைந்து விடுவது) இவற்றால் இன்று பூமி, ஆகாயம், தண்ணீர், காற்று என எல்லாமே மாசடைந்துவிட்டன. அதனால் சைனஸ், மூச்சிறைப்பு எனப்படும் வீசிங் இவற்றால் பெரும்பாலானவர்கள் சிரமப்படுகின்றனர்.

    அன்று இந்த வசதிகளும் கிடையாது; சிரமங்களும் கிடையாது. அவசர அவசரமாக கிணற்றிலிருந்து ஏறி, ஈரத்தோடேயே சட்டை டவுசரைப் போட்டுக் கொண்டு, தலையிலிருந்து வடியும் தண்ணீரை கோவணத் துணியால் துடைத்துக் கொண்டு வகுப்புக்கு ஓடியதை நினைத்துப் பார்க்கிறேன்.

    அந்த வகுப்பில் பயிலும் மற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் ஹீரோ அந்தஸ்து தான். பார்த்தாலே தெரியும். சிவந்த கண்கள்; கலைந்த, ஈரமான தலை. ஆங்காங்கே ஈரமான உடைகள் என.

    அந்தக் காலம் வருமா?

    வரும்.

    இப்போது பெரிய மால்கள் கட்டப்படுவது போல், கிராமிய சூழலுக்கான வசதிகளுடன் கூடிய இடங்களும் விரைவில் வந்துவிடும்.

    மரங்கள், அவற்றின் அடியில் கயிற்றுக் கட்டில்கள் செயற்கை முறையில் உருவாக்கப்படும் குளங்கள், கிணறு போன்ற அமைப்பிலுள்ள நீச்சல் குளங்கள் என எல்லாமே வரும். ஆனால் அவற்றை அனுபவிக்க அதிகத் தொகை செலவாகும். சரி தானேஙு

    அன்று பாதிக்கிணறு தாண்டினோம். நீர் நிறைந்த ஆழமான கிணற்றில் விழுந்து நீச்சலடித்து எழுந்து மகிழ்ந்தோம்.

    இன்று, கிணறுகளே அதிகமில்லை; இருக்கும் ஒரு சிலவற்றிலும் தண்ணீர் இருக்காது; அல்லது அடியில் கொஞ்சம் இருக்கும். கிணற்றை வலைபோட்டு மூடிவைத்துமிருக்கலாம். எனவே இன்று பாதிக்கிணறு தாண்டுவது மிகவும் ஆபத்தானது.

    இடைவெளி என்பது என்றும், எங்கும் நீக்கமற உள்ளது தான். இந்த இடைவெளி இருப்பதால் தான் நம்மால் நடமாட முடிகிறது; வாழ முடிகிறது.

    நினைத்துப் பாருங்கள். சென்னை ரங்கநாதன் தெருவில், ஞாயிறன்று மாலைநேர நெரிசல் போல, கந்தர் சஷ்டியன்று திருச்செந்தூர் கடற்கரையில் குழுமியுள்ள மக்கள் கூட்டம் போல, இடைவெளியில்லாமலிருந்தால், எப்படி வாழ முடியும்?

    இடைவெளியில் தான் நம் உயிர் மூச்சான காற்று நிரம்பியுள்ளது. நமக்கு அனைத்தும் அளிக்கும் வான் காந்தமும்  இந்த இடைவெளி முழுதும் நிறைந்துள்ளன. இதனால் தான் நாம் ஏதோ, இந்த அளவுக்காவது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    இனி எதிர்காலத்தில் சில மேலை நாடுகளில் சக மனிதர்கள் முதுகில் சிறிய பிராணவாயு சிலிண்டரைத் தொங்கவிட்டுக் கொண்டு, அதிலிருந்து சுவாசிக்கும் செயலைச் செய்யும் நிலை ஆராயப்பட்டு வருகிறது.

    இன்று விண்வெளிக்குச் செல்லும் அன்பு உடன்பிறப்புகள் பிராணசக்திக்கு மூக்கினுள் டியூப் செலுத்தியிருப்பது போல, சில நகரங்களில் இடைவெளி முழுதும் நச்சுக்காற்றால் நிரம்பிவிடும் நிலையால், அந்நகரங்களில் வசிப்போரும் வான்வெளி வீரர்கள் போல் காட்சியளிப்பார்கள். சைனாவில் ஒருநகரில் மூக்குக்குத் துணி அணிந்து வசிக்கின்றனர் என்கிறது பத்திரிக்கைச் செய்தி.

    அன்று வாழ்ந்த வாழ்க்கை

    இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை இந்த இரண்டுக்குமான இடைவெளி என்ன என்பதையும், அதை பூஜ்யத்துக்குக் கொண்டு வருவதற்கான உபாயங்களையும் பார்க்கக் காத்திருப்போம்.

    இந்த இதழை மேலும்

    கார்த்திகை பிறந்த போது

    ஐப்பசியின் அடைமழை கொட்டித்தீர்த்த பிறகும் இன்னும் தீர்ந்துபோகாமல் இருப்பு வைத்திருக்கும் கருத்த மேகங்கள் எப்போது வேண்டுமானாலும் பெய்து விடுவோம் என்று பயமுறுத்தியபடி அங்கும் இங்கும் வானவீதியில் உலாவிக் கொண்டிருக்கும், அவ்வப்போது, சில் சில்லென்று குளிர்ந்த காற்று வீசி உடலையும், மனதையும் குளிரவைக்கும். அந்த மாதிரி சமயங்களில் பள்ளிக்கு செல்லும்போதும், பள்ளியைவிட்டு வரும்போதும், நெஞ்சோடு புத்தகப்பையை அணைத்துக்கொண்டு வருவார்கள் சின்னஞ்சிறு குழந்தைகள். மழைக்காலமான நாள் முடிந்து விடைபெறப் போகிறேன் என்று சொல்லி தன் தங்கை குளிர்காலத்தை கைபிடித்து அழைத்து வந்து வீதியில் விட்டுவிட்டுச் செல்வதைப் போல தோன்றும். நடுங்கவைக்கும் குளிர் இல்லையென்றாலும், குளிரும், சாறலும், தூறலும் வந்து பெருமழைக்கும் கட்டியம் சொல்லிச் செல்லும். நீல வானத்தில் சூரியனின் கதிர்கள் எட்டிப்பார்த்து சிரிக்கும். அந்த மாதிரி சமயங்களில் குளிர் காய்வதற்காக பரந்த பரப்புகளில் நின்றுகொண்டும், உட்கார்ந்து கொண்டும் பேசி பொழுதைக் கழிப்போம். தீபாவளி முடிந்து கார்த்திகை பொறியும், அவல் உருண்டைகளும் கொஞ்சகாலம் நிரந்தரமாக இடம்பிடித்துக் கொள்ளும். நினைத்தபோதெல்லாம் வாயில் எடுத்துப்போட்டு, கூட இருக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து சந்தோஷப்படும் பருவமாக இருந்தது அது.

    வந்துவிட்டது என்று அறிவிப்பு தந்தபடி தினம் தினம் வீட்டு வாசல்களில் விளக்கு ஏற்றிவைப்பதற்கு என்றே இருக்கும் சின்னச்சின்ன அழகழகான மாடங்களில் அகல் விளக்குகள் பிரகாசிக்கத் தொடங்கும். அந்த மாடங்களில் தான் எத்தனை வகைகள்! எத்தனை வேலைப்பாடுகள்! சிலவற்றில் மாடத்தைச் சுற்றி வரையிடப்பட்டு, அந்த மேடுபள்ளக்கோடுகளில் வெவ்வேறு நிறங்களில் வர்ணம் பூசப்பட்டிருக்கும். வாசல் திண்ணைக்கு மேல் நுழையும் இடத்தின் இரு பக்கங்களிலும் அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் அந்த மாடங்களின் உள்ளே சுடர்விட்டு எரியும் அகல்விளக்குகள் குடிபோகும்போது தான் வீட்டுக்கே ஒரு தனி அழகு பிறப்பது போல இருக்கும். நெய் தீபங்களும் உண்டு. நின்று நிதானமாக அமைதியுடன் எரியும் அந்த சிறிய அகல் விளக்குகளின் ஆர்ப்பாட்டம் இல்லாத சௌந்தரியம் வாழ்க்கையின் ஏதோ பெரிய தத்துவத்தை நமக்கு உணர்த்துவதுபோல இருக்கும். மாதம் பிறந்தவுடன் குடிபுகத் தொடங்கும் இந்த விளக்குகள் கார்த்திகை நாளில் திருவிழா கண்டு மாதம் முடிந்தவுடன் விடைபெற்றுச் செல்லும்.

    தெற்கு பகுதிகளில் மரோட்டிகாயின் கொட்டாங்குச்சிகளிலும், மண் அகல்களிலும் விளக்குகள் ஏற்றப்படும். ஆங்காங்கே தீபங்கள் மின்னி மின்னி எரிந்து ஏற்படுத்தும் அழகு மனதைக் கொள்ளை கொள்ளும். சில இடங்களில் ஓலைகளை வயல்வரப்புகளில் கூம்பாரமாக கட்டி அதை எரித்து “றொகரா” என்று குழந்தைகள் கூவி சத்தம் போடுவார்கள். இந்த தீயில் நெல்லை நாசப்படுத்தும் பூச்சிகளும், சிறிய உயிரினங்களும் விழுந்து இறந்து போய்விடும்.

    கடலில் மீன்கள் அதிகமாக கிடைப்பதும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் தான். கோயில்கள் பாராயணங்களும், தீபங்களுமாக பக்திமயமாகக் காட்சியளிக்கும். மங்கிய சூரிய ஒளியில் பிரகாசிக்கும் அகல்களின் வரிசைகள் கோயிலுக்குள் நம்மை இழுத்துச் செல்லும். சபரிமலை சீசன் தொடங்கிவிடும் என்பதால் ஊரில் தினம் எப்படியும் கன்னிசாமியின் பூஜை இருக்கும். சரணகோஷம் கேட்டுக் கொண்டே இருக்கும். ஜாதி, மத வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரும் இதில் கலந்து கொள்வார்கள். கன்னிபூஜை முடிந்து நடைபெறும் விருந்தில் கிராமமே பங்கு கொள்ளும். கூடி வாழும் தத்துவமும், சாதி மத வேறுபாடுகளை மறந்து மக்கள் எல்லோரும் ஒன்று என்ற சகோதர உணர்வும் பாரம்பரியமாக நிலைத்து நிற்க இது வழிவகுத்தது.

    கார்த்திகையும், மார்கழியும் பொதுவாக பக்தியுடன் நெருங்கி தொடர்பு கொண்டுள்ளதால் ஒவ்வொரு வீட்டிலும் அது எதிரொலிக்கும். வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பெருக்கி, சாணத்தால் மெழுகி துடைத்து சுத்தப்படுத்தி வைத்திருப்பார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் தன்னடக்கத்தைக் கற்றுத்தரும் மாதமாக இருந்தது இந்த கார்த்திகை மாதம் தான். கார்த்திகை மாதத்தில் இருந்து பல நல்ல விசயங்களையும், உடல் சுத்தத்தையும், மன சுத்தத்தையும் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் இவையெல்லாம் இயற்கையோடு சேர்ந்த ஒத்திசைவான வாழ்க்கையாக இருந்தது. பூவுக்கும், புல்லுக்கும், புழுவுக்கும், பறவைக்கும், பசுவுக்கும் எல்லா உயிரினங்களுக்கும் உரிமை உள்ளதாகும் இந்த பூமி என்றபாடமே அது. அதனால் தான் எல்லாவற்றையும் ஒன்றாகக் காணும் சமுதாயமாக இருந்தது அன்றைய ஊரும், நாடும் எல்லாம்.

    கார்த்திகை மாதத்தின் கடைநாட்களில் அகல்கள் சிறிது சிறிதாக நம்மிடம் இருந்து விடைபெறத் தொடங்கும். கண்ணின் காட்சியில் இருந்து மறையத் தொடங்கினாலும், மனதோடு பூட்டிவைத்துக் கொள்ள வேண்டும் என்றஅடங்காத ஆசை மனதுக்குள் சுடர்விடச் செய்து கொண்டிருக்கும். கார்த்திகை நாள் வருவதற்கு சில நாட்கள் முன்பாகவே தெருவில் கூடைகளில் விளக்குகளைச் சுமந்தபடி அகல்விற்பவர்கள் வந்துவிடுவார்கள். யானை விளக்கு, பெண்கள் கையில் ஏந்தியபடி நிற்கும் பொம்மை விளக்குகள், காமாட்சி விளக்கு, புதுமண் வாசனையோடு வீட்டுக்கு வரும் புது உறவாக மண் அகல் விளக்குகள் என்று எத்தனை எத்தனை விதமான விளக்குகள்! எல்லாம் கார்த்திகை முடிந்தவுடன் தகர டப்பாக்களில் தேய்த்து கழுவி வெய்யிலில் உலர்த்தி குடிபுகுந்து கொள்ளும். இனி அடுத்த வருடம் தான். இனி இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

    எவ்வளவு கழுவினாலும் போகாத எண்ணை வாசனையும், வெல்லத்தின் மணத்தோடு செய்த அப்பத்தின் மணமும், அவல் பொறி உருண்டைகளின் வாசனையும், நெல் பொறியில் கலந்து வீசும் நெல்லின் மனமும் எல்லாம் மனதில் என்றும் நறுமணமாக வீசிக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு வருடம் வரும்போதும், ஒரு புதுக் கார்த்திகை. ஒவ்வொரு வருடமும் அது ஒரு புது வெளிச்சத்தை கொண்டுவந்து தந்துவிட்டுப் போகும். அந்த ஒளிச்சுடர் என்றும் நம் வாழ்க்கையை வழிநடத்தட்டும்!

    இந்த இதழை மேலும்

    புல் இங்கே… மாடுகள் எங்கே?

    கொரங்காடு வகையான மேய்ச்சல் நிலங்கள் காங்கேயம் பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலத்தின் முக்கியமான தன்மை என்னவென்றால் கால்நடைகளுக்கு இயற்கை வேலி அமைத்து அதை மேய்ச்சல் நிலமாக விவசாயிகள் உபயோகித்து வருவது தான்.

    கல்லிமந்தையில் கொரங்காடு ஒரு பாரம்பரிய மேய்ச்சல் நிலமாக இருந்து வருகிறது. தாராபுரம், காங்கேயம், பல்லடம், மூலனூர் போன்ற பகுதிகளில் செம்மண் அல்லது சரளை வகை மண் மற்றும் மழை அளவு அதிகம் இல்லாத பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் கிராமப்புறபெரும்பான்மை மக்கள் கால்நடை வளர்த்து வருகிறார்கள்.

    கொரங்காடு வகை மேய்ச்சல் நிலங்களில் கொலுகட்டை என்ற ஒரு வகையான மேய்ச்சல் புல் ரகம் அதிகமாக காணப்படுகிறது. இது வறட்சியை மிகவும் தாங்கி வளரக்கூடிய புல் வகையாகும். பொதுவாக காங்கேயம் பகுதியில் மிக குறைந்த அளவே மழை பெய்வதால், எப்போது எல்லாம் மழை பெய்கிறதோ அப்போது குறைந்த மழைநீரைக் கொண்டு இந்த வகையான புல், வறட்சியைத் தாங்கக்கூடியதாக வளரும்.

    வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்குப் பருவ மழை காலங்களில் விட்டுவிட்டு கிடைக்கும் குறைந்த மழையில் (ஆண்டுக்கு சராசரி 600 675 மி.மீ அளவு) வளரும் புற்களை காங்கே வகை நாட்டு மாடுகள் மேய்ந்ததும், அந்தப் புல்தரையையே விவசாய நிலமாக விவசாயிகள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இந்த மேய்ச்சல் தரையில் கொலுகட்டை புல் மட்டும் அல்லாமல் வேலியில் உள்ள மரங்கள் மிக மோசமான வறட்சியில் கூட மாடுகளுக்குத் தேவையான குறைந்த தீவனங்களை கொடுத்து வந்துள்ளனர். இந்த முள் வேலி மற்றும் வெல்வேல் ஆன மரங்கள், மாடுகள் சொந்த நிலத்தை விட்டு மற்றஇடங்களுக்கு போகாமல் தடுக்கும் இயற்கை வேலியாகவும் அமைந்துள்ளது (ஒரு ஹெக்டருக்கு 30 40 மரங்கள் இருக்கும்).

    நவீன கால மாட்டுப் பண்ணையில் வேலி அமைத்தல், நிழல் கொட்டகை போடுதல் (Shed) பல வகையான புல் வகைகளை வளர்த்தல், புரதம் நிறைந்த புல் வகைகளை உற்பத்தி செய்தல் போன்றமற்றமாட்டுப்பண்ணைகளுக்கு இணையாக, கொரங்காடு மாட்டுப் பண்ணை மாடு வளர்ப்பில் ஒரு தனித்தன்மை மிக்க, ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் செய்வதில் தனிச்சிறப்பு பெற்றது என்றேசொல்லலாம். இந்த கொரங்காடு மேய்ச்சல் நிலங்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய அறிவியல் நுணுக்கங்களும் ஏராளம் உள்ளது.

    இதுபோன்ற கொரங்காடு புல்வெளிகள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது. கடந்த மூன்றாண்டில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக கொரங்காடு மேய்ச்சல் நிலங்களில், பசுந்தீவனங்கள், தீவனப் புல் வகைகளில் உற்பத்தி குறைச்சலும், வேலைக்கு ஆட்கள் இல்லாத காரணங்களும், பெரும்பாலான இளைய தலைமுறையினர் நகர்ப்புறத்தை நோக்கி குடிபெயர்ந்த காரணத்தாலும், காங்கேய வகை மாடுகள் எண்ணிக்கை கொரங்காடு மேய்ச்சல் நிலங்களில் குறைந்துவிட்டது.

    இந்த வருடம் பெய்த கனமழை காரணமாக, கொரங்காடு மேய்ச்சல் நிலங்களில் கொலுகட்டை போன்றபுல் வகைகள் அதிகம் வளர்ந்து காணப்படுகிறது. ஆனால் காங்கேயம் மாடுகளைக் காணமுடிவதில்லை.

    1990களில் 20 லட்சம் மேற்பட்ட கொரங்காடு நிலங்கள் என்றிருந்த நிலை தற்போது படிப்படியாக குறைந்து 10 லட்சம் ஏக்கருக்கும் குறைவான கொரங்காடு புல் தரைகளாக மட்டுமே உள்ளது.

    காங்கேயம் காளைகள் விலை ரூ.40,000 முதல் ரூ.75,000 வரையிலும், காங்கேயம் பால் மாடுகள் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரையிலும் விற்கப்படுகின்றன. இந்த வகை மாடுகளை கொரங்காடு புல்வெளிகளில் வளர்க்க வேண்டுமானால் 25 ஏக்கர் நிலம் தேவைப்படும். இதன் மூலம் குடும்பப் பராம்பரியச் செலவுக்குத் தேவையான வருமானம் கிடைக்கப் பெறும். காங்கேய வகை மாடுகள் கடந்த 2 ஆண்டுகளில் நிறைய விற்கப்பட்டன. இதனால் தற்போது கொரங்காடு புல்தரைகளில் அளவுக்கதிகமான புல் வகைகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் மேய்வதற்கு மாடுகளைத் தான் பார்க்கமுடிவதில்லை.

    தொடர்ந்து மழை வளம் கிடைக்கப் பெறுமானால் காங்கேய வகை மாடுகளின் எண்ணிகையும் அதிகரிக்கும். ஆனால் அதேசமயம் கிராமத்தை விட்டுச்சென்றஇளைஞர்களும் கிராமத்திற்குத் திரும்புவார்களா?!என்பது சந்தேகம் தான்!

    இந்த இதழை மேலும்