என் பள்ளி
கல்வி என்பது ஒரு மனிதனை மனிதனாக வாழச் செய்யும் உன்னதம். கல்வி கற்கும் காலம் குறைவாக இருப்பினும் அக்கல்வியால் பெறும் பயன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும். அவ்வகையில் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் சாதனை படைத்துவரும் பேராசிரியர் மூர்த்தி செல்வக்குமரன் அவர்கள் தனது கல்வி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், கண்ணுடையாம்பாளையம் கிராமத்தில் பெரியசாமி, தங்கமணி அவர்களின் மூத்த மகனாய் 1978ம் ஆண்டு பிறந்தேன். ஒரு சிறிய ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிறு வயது முதலே கல்வியின் மீது எனக்கு நாட்டம் அதிகமிருந்தது. எனது தந்தைக்கு கை கால் சிறிது ஊனமுற்றிருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொழிலில் அவர் காட்டிய கடின உழைப்பு பிற்காலத்தில் எனக்கும் பெறும் உந்துதலாக இருந்தது.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்பொது என்னுடைய பாட்டியிடம் நான் காந்தியைப் போல் வெளிநாடுகளில் சென்று படிப்பேன் என்று கூறியிருக்கிறேன். அதனை இன்று நிறைவேற்றியும் காட்டியிருக்கிறேன்.
மேலும், அதே வகுப்பு படிக்கும் பொழுது குப்புசாமி என்ற தலைமையாசிரியர் கணக்கில் செய்த தவற்றை சுட்டிக்காட்டியதற்கு அவர் என்னைப் பாராட்டியது என்றும் மறக்கமுடியாத நிகழ்வாகும்.
எனது ஆரம்பக்கல்வியை கண்ணுடையம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை கணபதி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பள்ளி இறுதிநிலையை மொடக்குறிச்சி மேல்நிலைப் பள்ளியிலும் நிறைவு செய்தேன்.
பள்ளி வயதிலே புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதில் எனக்கு ஆர்வம் மிகுதியாக இருந்தது. சிறிய ரப்பர் டப்பாவைக் கொண்டு எரிவாயு உற்பத்தி செய்தல் போன்றவற்றை செய்முறையாக செய்து பார்த்திருக்கிறேன். பொறியியல் படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தேன்.
இன்று கல்வி ஆலோசனைகளை லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கி வழிகாட்டுவதிலும், பொதுமக்களின் வாழ்வு சிறக்க பணியாற்றி வருவதிலும் சமுதாயத்திற்கு என்னால் இயன்றஅளவில் செய்துவருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பள்ளி வயதிலே புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதில் எனக்கு ஆர்வம் மிகுதியாக இருந்தது. சிறிய ரப்பர் டப்பாவைக் கொண்டு எரிவாயு உற்பத்தி செய்தல் போன்றவற்றை செய்முறையாக செய்து பார்த்திருக்கிறேன். பொறியியல் படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தேன்.
இன்று கல்வி ஆலோசனைகளை லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கி வழிகாட்டுவதிலும், பொதுமக்களின் வாழ்வு சிறக்க பணியாற்றி வருவதிலும் சமுதாயத்திற்கு என்னால் இயன்றஅளவில் செய்துவருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
எட்டாம் வகுப்பு வரை சுமாராகத் தான் படித்து வந்தேன். நேசமணி என்ற கணக்கு ஆசிரியரின் கல்விப்பயிற்சி முறையில் ஈர்க்கப்பட்ட பின்னர் படிப்பில் தனிக்கவனம் வந்தது. ஆங்கிலத்தில் குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறாதது எனது பள்ளிக்கல்வியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தத் தோல்வி தந்த ஊக்கம் தான் பத்தாம் வகுப்புத் தேர்வில் பள்ளியில் இரண்டாம் இடம் பெற்றமாணவனாகவும், அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண் பெற்ற மாணவனாகவும் என்னை உருவாக்கியது. பரிசுகளும், பாராட்டுக்களும் அந்த ஊக்கத்திற்குக் கிடைத்த வெற்றி. எதிர்காலத்தில் கல்வியில் என்னை பல சாதனைகள் செய்யத் தூண்டியது. நாங்கள் படித்த காலத்தில் சகமாணவர்களுடன் படிப்பில் போட்டிகள் ஏற்படும். அது ஆரோக்கியமான போட்டியாக அமைந்தது. அதுவே பல சாதனைகளைச் செய்ய வழிவகுத்தது.
மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் துறை ஆசிரியராக இருந்த திரு. மோகனசுந்தரம் அவர்களின் வழிகாட்டல் தான் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் முதல் மதிப்பெண் பெற துணையாக இருந்தது. பள்ளி இறுதித் தேர்வில் பள்ளியிலேயே இரண்டாம் இடம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.
தமிழக அரசின் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்வு பெற்று பொறியியல் கல்வியை 1996ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தொடங்கினேன். பள்ளிக் கல்வி முழுவதும் தமிழ் வழியிலேயே கற்ற எனக்கு பொறியியல் பட்டப்படிப்பு முழுவதும் ஆங்கிலம் என்பது சிரமமாகத் தான் இருந்தது. எனினும் நான்காண்டு கல்லூரிக் காலங்களில் எந்த பாடத்திலும் தோல்வியடையாமல் ஆங்கில வழியிலேயே தேர்ச்சியும் பெற்றேன்.
பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நண்பர்களுடன் சேர்ந்து காலையில் டியூசன், பள்ளி வகுப்புகள், மாணவர்களுடன் மதிப்பெண்களுக்கான போட்டிகள் போன்றவை பள்ளிக்கால மறக்கமுடியாத தருணங்களாகும்.
இன்றைய அவசர உலகில் மனித வாழ்க்கை இயந்திரம் என்றாகிவிட்டது. இதில் கடந்த கால பள்ளி அனுபவங்களைப் பற்றி நினைப்பதே இன்பமென்றாகிவிட்டது. இனியும் அதுபோல் இனிய காலம் அமைவது கிடைக்காத அனுபவமே.
நான் படித்த பள்ளியில் புதிய மாற்றங்கள் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் என் மனதில் இருந்து கொண்டு தான் உள்ளது. ஆண்டுதோறும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றேன். இந்த ஆண்டு ப்ளஸ் டூ-வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்க முடிவு செய்துள்ளேன்.
15 ஆண்டுகளாக பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் எனக்கு ஒரு கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு என்ன பாடம் படிப்பது? எங்கு படிப்பது? என்ற எதிர்கால இலக்கு இல்லாமல் இருந்து வருகிறார்கள். அவர்களது எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். அம்மாதிரியான மாணவர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக இது தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். The Hindu, Times of India தினத்தந்தி போன்ற செய்தித்தாள்களிலும், தன்னம்பிக்கை, புதிய தலைமுறை போன்ற இதழ்களிலும், புதிய தலைமுறை டி.வி. மற்றும் கோடை FM, சூரியன் FM மூலமாகவும் பல உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.
எரிவாயுவை சரியாகக் கையாளத் தெரியாத மக்களுக்கென சமையல் சிலிண்டர்களை எளிதாகவும், பாதுகாப்பாகவும் கையாளுவதற்கென “A Smart Gas Cylinder Machine” என்றபுதிய சாதனத்தை உருவாக்கி உள்ளேன். இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வரவுள்ளது.
ஸ்ரீ செல்வக்குமரன் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் மூலமாக பல இளைஞர்களுக்கு வேலைகள் வழங்கி வருகிறேன். வளரும் சாதனையாளர், சிறந்த ஆசிரியர், சிறந்த ஆராய்ச்சியாளர் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளேன்.
எண்ணுவதெல்லாம் உயர் உள்ளல் என்ற வள்ளுவரின் வாக்குப்படி மாணவர்கள் சிறுவயதிலேயே சிறந்த லட்சியங்களை உருவாக்க வேண்டும். அதனை அடைவதற்கு கடுமையான தொடர் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
நீ எதுவாக நினைக்கின்றாயோ அதுவாகவே ஆவாய் என்பதைப் போல ஒரு லட்சியத்தை நோக்கி பயணம் தொடர்ந்தால் ஒருநாள் நீங்கள் கண்டிப்பாக அந்த லட்சியத்தில் வெற்றி அடைவது உறுதி. அதுவரை மாணவர்கள் தங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்காமல் மேலும் மேலும் முயற்சியை கடுமையாக்க வேண்டும். மனம் மிகப்பெரிய சக்திகளை உள்ளடக்கியது. அதை சரியாக முறைப்படுத்துபவர்களே சாதனையாளர்களாக
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles