– 2014 – August | தன்னம்பிக்கை

Home » 2014 » August

 
  • Categories


  • Archives


    Follow us on

    முக மூடி

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 17.08.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை,

    இடம்: ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்

    ஜோதி தியேட்டர் அருகில்,

    திருச்செங்கோடு.

    தலைப்பு: முக மூடி

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc.N. வேள்பாரி

    மண்டல பயிற்சியாளர், சேலம்

    போன்: 82200 11427

    தொடர்புக்கு:

    தலைவர்: JCI. Sen. G. கோவிந்தசாமி  98427 96868

    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554

    ஒருங்கிணைப்பாளர்: Jc. Dr. S. சரவணகுமார் 94423 83833

    உடல் நலமும் சுயமுன்னேற்றமும்

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 10.08.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : அரிமா சங்க அரங்கம்,

    குமரன் சாலை, திருப்பூர்

    தலைப்பு: உடல் நலமும் சுயமுன்னேற்றமும்

    சிறப்புப் பயிற்சியாளர்: யோகி. இராஜேந்தர்ஜி

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,

    மகா அந்தர்யோகா மையம்,

    மலேசியா.

    போன்: 98422 91345

    தொடர்புக்கு: திரு. A. மகாதேவன் 94420 04254

    திரு. S. வெங்கடேஸ்வரன் 94423 74220

    திரு. S. மாரப்பன் 95242 73667

    காரணம் ஆயிரம்

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 10.08.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை,

    இடம் : மாயாபஜார் A/C ஹால்,

    (வடிவு சுப்ரமணியம் மண்டபம் எதிரில்),

    Opp. E.B. அலுவலகம் எதிரில்,

    E.V.N. ரோடு, ஈரோடு.

    தலைப்பு: காரணம் ஆயிரம்

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc. R. ராஜா,

    தேசிய பயிற்சியாளர், ஈரோடு.

    போன்: 95248 63670

    தொடர்புக்கு

    தலைவர் ஆடிட்டர்  P. வெங்கடேஸ்வரன்  97879 50100

    செயலாளர் M. மணிகண்டன்  90255 51777

    பொருளாளர் S.A. சிவசாமி  99943 46686

    என்று தணியும் இந்த…

    சேலம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 17.08.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : லட்சுமி அரங்கு, சாமுண்டி காம்ப்ளெக்ஸ்

    4 ரோடு, சேலம்  7.

    தலைப்பு: என்று தணியும் இந்த…

    சிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், கோவை

    போன்: 97893 75278

    தொடர்புக்கு

    Jc. தாமோதரன் – 93601 22377

    சிந்தனை செய் மனமே

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம் இணைந்து வழங்கும் மாணவர் சிறப்புப் பயிலரங்கம்

    நாள் : 10.08.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

    இடம் : A.M. மஹால்,

    மோதிலால் தெரு பஸ் நிலையம் அருகில்,

    கும்பகோணம்.

    தலைப்பு: சிந்தனை செய் மனமே

    சிறப்புப் பயிற்சியாளர்: முனைவர் A. டோமினிக் சேகர்

    வரலாற்றுத் துறை பேராசிரியர்,

    தஞ்சாவூர்.

    போன்: 94870 29494

    தொடர்புக்கு

    திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா  93453 53113

    வாழ்க்கை சுலபமானது (Make Easy Life)

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம், லிங்கம் ஸ்டோர்ஸ் (காய்கனிகள் மொத்த வியாபாரம்), கிட்ஸ் & குயின்ஸ், வளசரவாக்கம் மற்றும் கிரி பிரதர்ஸ் வேயிங் மிஷின்ஸ், சென்னை  இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்  :  17.08.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : மாலை 6.00 மணிமுதல் 8.30 மணி வரை

    இடம் : ‘ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்

    காமகோடி நகர்,

    வளசரவாக்கம், சென்னை-87.

    (ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்)

    தலைப்பு: வாழ்க்கை சுலபமானது (Make Easy Life)

    சிறப்புப் பயிற்சியாளர்: திரு. மித்ரன் ஸ்ரீராம்

    Life Coach and Motivational Speaker, Chennai

    Ph: 94440 69302

    தொடர்புக்கு:

    தலைவர்  R. பாலன்  94442 37917,

    செயலாளர்  L. கருணாகரன்  98419 71107

    PRO யமுனா கிருஷ்ணன்  94440 29827

    புரட்சிக் கவிஞன் பிஸ்மில்

    இந்தியச் சுதந்திரத் திருநாள் ஆகஸ்ட் 15 1947, உலக வானில் இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்த நாள். இந்தச் சுதந்திரத் திருநாளில் இந்தியன் என்பதில் பெருமைப்படுகின்ற அதே வேளையில் அந்த பெருமைக்கு காரணமாக இருந்த இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை சற்றே புரட்டிப் பார்த்தால் காற்றில் கரைந்த அவர்கள் தம் தியாகங்கள் தெரியும். பகத்சிங்கின் புரட்சித் தோழர்களில் ஒருவரான உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த புரட்சிக் கவிஞர் ராம்பிரசாத் பிஸ்மல், இவரது தேச விடுதலை உணர்ச்சிக் கவிதைகள் சாதி, மத வேறுபாடின்றி இளைஞர்களை ஈர்த்தன. இந்திய சுதந்திரப் புரட்சிப் போராட்டத்தில் “ககோரி சதி வழக்கில்” நண்பன் ஒருவன் காட்டிக் கொடுத்ததால் பிடிபட்டார். கோரக்பூர் சிறையில் வெட்டவெளியில் மைதானத்தின் நடுவே சிறைக்கொட்டடியில் நிழல் தரும் மரமோ, செடியோ கண்ணுக்கெட்டும் தூரம் இல்லாத சூழலில் தூக்கு தண்டனைக் கைதியாக வாழ்ந்தார். 1927 டிசம்பர் 19 அன்று தூக்கு தண்டனை நாள் குறிக்கப்பட்டது. தன் மகனைக் காண்பதற்காக பிஸ்மில்லின் தாயார் சிறைக்கு வந்தார். தாயைக் கண்டவுடன் அவரது கண்கள் கலங்கியபோது அந்த தாய் மகனே! என்ன இது? ஏன் கலங்குகிறாய்? என் மகன் ஒரு காவிய நாயகன் என்று பெருமிதம் கொள்கிறேன். என் மகனின் பெயரை உச்சரிக்கும் போதே வெள்ளையர்கள் உடல் நடுங்குகிறது என்று பெருமைப் படுகிறேன். ஏன் அஞ்சுகிறாய்? என்று கேட்டபோது “அம்மா, இது மரணபயத்தில் வந்த சோகக் கண்ணீர் இல்லை என் வீரம் செறிந்த அன்னையை நினைத்து வந்த ஆனந்த கண்ணீர்” என்றார்.

    தூக்கு மேடை நோக்கி நடந்தபோது ஒரு நாயகனைப் போல நெஞ்சுயர்த்தி புரட்சிக் கவிஞன் நடந்து சென்று சிரித்த முகத்துடன் தூக்கு கயிற்றின் முன் நின்று “வந்தே மாதரம்! வந்தே மாதரம்! பாரத மாதா வாழ்க! வெள்ளையர் ஆதிக்கம் வீழ்க! என்று வீரமுழக்கமிட்டு தனது 30வது வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காக இன்னுயிரை வழங்கிய புரட்சிக்கவிஞனின் வரிகள் இதோ.

    “இளைஞர்களே எங்கள் தியாகம்

    உங்கள் உள்ளங்களில் தைத்தால்

    எப்போதாவது எங்களை எண்ணிப்பாருங்கள்

    சித்திரவதைப் பலிபீடத்தில் அகங்கள் சிதறிடினும்

    வரவிடமாட்டோம் விழிகளில் வேதனையின் சாயலை”

    அவர்தம் தியாகங்களை இன்னும் பலரின் தியாகங்களை இந்நாளில் வணங்கிப் போற்றுவோம் தேசத்தை சுவாசிப்போம்.

    இந்த இதழை மேலும்

    புத்தகங்களும் நண்பர்களும் ஒன்றா?

    ஆயிரக்கணக்கான புத்தகங்களை நீங்கள் அடுக்கி வைத்திருந்தாலும் அது தொடப்படாமலும் படிக்கப்படாமலும் இருந்தால் அவை அனைத்தும் பயனற்றவையாகவே கருதப்படும். ஒவ்வொரு மனிதனும் நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்க பழகிக்கொள்ள வேண்டும். ஒரு ஆண்டுக்கு குறைந்தது நூறு நல்ல புத்தகங்களையாவது  படிக்க வேண்டும்.

    புத்தகங்களைப் படிப்பதால் எனக்கு என்ன பயன் என்று ஒருவர் கேட்கலாம், நல்ல புத்தகங்கள் உங்களுக்கு ஒரு நல்ல நண்பன். உங்களுக்கு வழிகாட்டுவதும், வாழ்வை சீரமைப்பதும், எண்ண ஓட்டங்களை ஒழுங்குபடுத்துவதும், மனதுக்குள் எழுச்சியை உண்டாக்குவதும், அறிவை விசாலப்படுத்துவதும், ஆழமாக சிந்திக்க தூண்டுவதும், மற்றவர்களின் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்கிற தன்மையும், வாய்ப்புகளை வசப்படுத்திக் கொள்கிற திறமையும், பிரச்சனைகளை எளிதில் முடிக்கக் கூடிய சாமார்த்தியமும், புத்தகங்களைப் படித்து அறியும் அனுபவத்தால் மட்டுமே பெறமுடியும்.

     மோசமான புத்தகங்கள் தீய எண்ணங்களையும் தீய பழக்க வழக்கங்களையும் தீய விதைகளையும் மனதிலே விதைக்கும். உங்கள் முகம் தீய எண்ணங்களின் வடிவமாக மாறிவிடும். உங்கள் முகம் உங்கள் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அமையும் என்பதையே,

     அடுத்தது காட்டும் பளிங்கு போல

     எடுத்தது காட்டும் முகம்

     என்னும் குறள் விளங்க வைக்கிறது.

    புத்தகங்களை நல்ல நண்பனுக்கு ஒப்பிடலாம். பல நண்பர்கள் உங்களைச் சுற்றி இருக்கலாம். நீங்கள் வெற்றி பெறும் போது உங்களைச் சுற்றி ஆயிரம் நண்பர்கள் படுவார்கள். உங்களுக்கு என்று ஒரு சிறு சறுக்கலோ, சரிவோ, பிரச்சனையோ வரும் போது, அந்த ஆயிரத்திலே ஒரு நண்பர் கூட உதவிக்கு வரமாட்டாட்கள்.

    அற்ற குளத்தில் அறுநீர்ப்  பறவைபோல

    உற்றுழித் தீர்வார் உறவல்லர்அக்குளத்தில்

    தொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலுமே

    ஒட்டி உறுவார் உறவு.

    எனும் ஒளவையார் வாக்குப்படி குளத்திலே நீர் நிறைந்திருக்கும் போது  ஆயிரமாயிரம் பறவைகள் அக்குளத்தைச் சுற்றி இருக்கும், அந்த குளம் நீரின்றி வறண்டு விட்டால் ஒரு பறவை கூட இருக்காது. அது போலவே, பயன் பெறும் போது உங்களைச் சுற்றி பலர் இருப்பார்கள் உங்களால் பயன் ஏதும் கிடையாது என்ற நிலை வரும் போது  உங்களுடன் ஒருவருமே இருக்கமாட்டார்கள்.

    புத்தகங்கள் மற்றும் நண்பர்களை எடுத்துக் கொண்டால், எண்ணிக்கை முக்கியமல்ல தரம் தான் முக்கியம். எத்தனை புத்தகங்கள் படித்துள்ளோம் என்பது  முக்கியமல்ல, எந்த வகையான புத்தகங்களைப் படித்துள்ளோம் என்பது தான் முக்கியம். நல்ல புத்தகங்களைப்போல தரமான நண்பர்களால் தான் தரமான யோசனைகளையும் வாழ்வியல் ஆலோசனைகளையும் தர முடியும்.

    ஒரு நூலகத்திற்குள் அல்லது புத்தக நிலையத்திற்குள் நுழையும் போது ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பல வண்ணங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதில் எது சிறந்த புத்தகம், எது நல்ல புத்தகம் என தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நம்மைச் சாரும். ஏனெனில் ஒரு நல்ல புத்தகம் ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த அறிவுக் களஞ்சியம். அவை நமக்கு வழிகாட்டும்.

    ஒரு நல்ல புத்தகப் படிப்பாளி, நல்ல புத்தகம் எது, மோசமான புத்தகம் எது என்பதைக் கண்டறியக்கூடிய திறமை மிக்கவராக இருப்பார். இதே தத்துவம் நண்பர்களுக்கும் பொருந்தும். நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய சக்தி நமக்கு இருக்க வேண்டும். சிலர் உண்மையான அன்புடன் நட்பு கொள்வார்கள். சிலர் இவரிடம் நட்பு கொண்டு விட்டால் பல காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்ற சுயநலக் கணக்குடன் பழக முற்படுவார்கள். வசதியான வீட்டுப் பிள்ளையாய் இருக்கிறார்கள், இவருடன் பழகிக் கொண்டால் நமக்காக அவர் செலவு செய்வார், அவர் தோள் மீது அமர்ந்து தேரோட்டம் பார்க்கலாம் என்று நினைப்பவர்களும் உண்டு.

    இவர்களை எல்லாம் அடையாளம் கண்டு நட்பு பாராட்டுவது மிகவும் சிரமமான காரியம். அதனால் தான் ஏதேனும் ஒன்றை எதிர்பார்த்து வருகிற நட்புகள் முறிவுகளாக மாறி விடுகின்றன. இவை எல்லாம் உண்மையான அக நக நட்புகளாக ஆவதில்லை.

    சிலர் நண்பர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்வதில் பெருமைப்படுவார்கள். இணையதளம், வலைதளம், முகப்புத்தகம் என்ற ஒரு புதிய பரிமாணம் தற்போது தொடங்கியுள்ளது. இணையதளம் மூலமாக பழகிய நண்பர்கள் ஏமாற்றியதாகவும், மோசடி செய்ததாகவும், திருமண ஆசை வார்த்தை கூறி காதலித்து ஏமாற்றியது போன்று  பல நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம்.

    ஒரு மனிதன் தனக்கு அதிக நண்பர்கள் இல்லை என கவலைப்பட அவசியமில்லை. நூறு மோசமான நண்பர்களை விட ஒரு நல்ல நண்பனை பெறுவது உத்தமமானது. நண்பர்களைத் தெரிவு செய்யும் போது மெதுவாக யோசித்து தெரிவு செய்ய வேண்டும். தெரிவு செய்த நண்பர்களை ஏதோ ஒரு காரணத்திற்காக பிரியும் போது மிகவும் மெதுவாக மெதுவாக யோசித்துப் பிரிய வேண்டும். ஒரு சிறு உணர்ச்சிக் குமுறல் அல்லது சில வருத்தங்கள் கூட ஒரு நல்ல நட்பினை முறிக்கும் ஆற்றல் கொண்டது. தீர்க்கமான முடிவுக்கு பின் தான் ஒரு நட்புக்கு முடிவு சொல்ல  வேண்டும். நம்பிக்கையான நண்பர்கள் குறைந்த அளவிலே இருந்தாலும் பரவாயில்லை, அது நன்மையே பயக்கும்.

    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

    அகநக நட்பது நட்பு.

    என்று வள்ளுவர் சொன்னதை போல முகம் பார்த்து பழகுவது நட்பல்ல உள்ளம் பார்த்து, அகம் பார்த்து பழகுவது தான் நல்ல நட்பு. உணர்வுகள், உணர்ச்சிகள், மகிழ்ச்சிகள், துயரங்கள், அன்பு, பாசம், உறவு, பிரிவு, பரிவு, உதவிகள், ஆலோசனைகள், இத்தனையும் சேர்ந்த கலவை தான் நட்பு.

     “நாயின் கால்களில் உள்ள சிறிய விரல்கள் நெருக்கமாக இருக்கும் அது போல மிகவும்; நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் கூட துன்பம் வரும் காலத்தில் ஈயினது கால் அளவு கூட உதவி செய்யமாட்டார்கள், அத்தகையவர்களின் நட்பினால் சிறிதளவும் பயனில்லை. ஆற்று நீர் வாய்க்கால் வழியாக சென்று வயலுக்குப் பயன்படுவதைப் போல் தொலைவிலிருந்தாலும் உதவும் குணம் கொண்ட நண்பர்களை தேடிச்சென்று நட்பு கொள்ள வேண்டும் என்பதை,

    நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்

    ஈக்கால் துணையும் உதவாதார் நட்பெண்ணாம்

    சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்

    வாய்க்கால்அணையார்தொடர்பு

    எனும் நாலடியார் பாடலின் மூலம் அறியலாம்

    வாழ்க்கை என்பது ரோஜா மலர் கூட்டமல்ல, இன்பமும் துன்பமும் கலந்தது. நல்ல நண்பரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து படிப்பதும்  வாழக்கைக்கு மிகவும் இன்றியமையாததாகும்.

    நட்பு கொள்வது எளிதானது. ஆனால் அதை இறுதி வரை தொடர்வது சற்று கடினமானது. ஏனென்றால் தியாகம், சுயநலமின்மை, அன்பு, நம்பிக்கை, இவைகள் ஒரு மயிரிழை கூட நட்பில் குறையாமல் இருத்தல் வேண்டும். உடை மாற்றுவதைப் போல நண்பர்களை மாற்றஇயலாது. உயர்வாக சொன்னால் உண்மையாக சொன்னால் நண்பர்களும் நல்ல புத்தகங்களும் இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதர்கள் ஆவார்கள்.

    சிரமங்களின் போது உதவுவதும், துயரங்களைப் பங்குபோட்டுக் கொள்வதும், மகிழ்ச்சியை அசை போட்டுக் கொள்வதும், கலக்கமுறும் போது கை கொடுப்பதும், காயம்படும்போது ஆறுதல் சொல்வதும், சோதனை வரும் போது உதவுவதும், இதயத்தோடு இணைந்து இருப்பதும் நண்பர்கள் தான்.

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

    இடுக்கண் களை வதாம் நட்பு.

    என்பார் வள்ளுவர்.

    இது எத்தனை ஆழமான உண்மை என்பதை அனுபவங்கள் தான் உணர்த்தும். நண்பன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஆதலின் புத்தகங்களும் நண்பர்களும் ஒன்று தான் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

    இந்த இதழை மேலும்

    தென்மாவட்டங்களில் சிறு தானியப்பயிர் குதிரைவாலிக்கு அதிக மவுசு

    தமிழகத்தில் விவசாயத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறு தானியங்கள் தமிழக விவசாயிகளின் விளைநிலத்தை விட்டுச்சென்று 50 ஆண்டுகள் ஆகிவிட்டது.

    இந்த குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் காணாமல் போனதற்குக் காரணம், அதிக விளைச்சல் கொடுக்கக்கூடிய சோளம், கம்பு போன்ற தானிய வகைகள் ஒரு காலத்தில் தமிழகத்தில் செழிப்பான தானிய வகைகளாக இருந்தன. பிறகு நமது மக்கள் சிறுதானியங்களை உணவாக உட்கொள்வதை அடியோடு நிறுத்திவிட்டு அரிசியையே மூன்று நேர உணவாகவும் உட்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அரிசி சாதம் சாப்பிடுபவரே சமுதாயத்தில் உயர்ந்தவர் என்ற எண்ணம் கூட இருந்துவந்தது.

    அதிக உற்பத்தி மற்றும் மக்களின் விருப்பம் காரணமாக மற்ற தானியங்களைக் காட்டிலும் அரிசியே முதன்மை இடத்தைப் பிடித்தது. மேலும் தமிழக மக்களுக்கு அரிசி இலவசமாகக் கிடைக்கப் பெற்ற பின்னர், அரிசியை மேல்நிலை மக்கள் மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களும் அதிகம் உண்ண ஆரம்பித்தனர்.

    தற்போதைய மாறுபட்ட காலநிலைகளில், நெல் போன்ற பயிர்கள் மழையை ஆதாரமாக நம்பி பயிரிடப்பட்டாலும் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கப் பெறுவதில்லை. வறட்சி காலநிலைகள் காரணமாக, நெல்லுக்கு மாற்று உணவாக “குதிரைவாலி’ போன்ற சிறுதானியங்களையே மக்கள் தேர்ந்தெடுக்கலாம்.

    இன்றைய காலகட்டத்தில் சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வும் மக்களுக்கு பெருகிக் கொண்டு தான் வருகிறது. சிறுதானியங்களை உணவாக உட்கொண்டால் சமூக மரியாதை குறையும் என்று எண்ணிய காலம் மாறி, மீண்டும் அவற்றையே மக்கள் தேர்ந்தெடுத்து வருவது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது. சிறு தானியங்களில் உள்ள சத்துக்களை அறிந்த காரணத்தால் மேல்தட்டு மக்கள், சுபநிகழ்ச்சிகள் மற்றும் தினந்தோறும் வீடுகளிலும் முக்கிய உணவாக இவற்றை சேர்த்துக் கொண்டு வருகிறார்கள்.

    மாறி வரும் அவசர மற்றும் உடனடி உணவுகள், மென்பொருள் துறைகளில் கணினி முன்பாக நீண்ட நேரம் அமர்ந்து செய்யும் பணிச்சுமைகள், அலுவலகங்களில் கிடைக்கும் உடனடி உணவுகள் Fast Food எனப்படும் பீசா, நூடுல்ஸ் போன்ற சக்தியில்லாத உணவுப் பண்டங்கள் போன்றவை மக்களின் உடல் நலத்தை வெகுவாகப் பாதிக்கிறது.

    சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்குக் காரணம், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவையே. பெரும்பாலான மக்களில் 45 வயதிற்கு மேல் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. தனது குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் கூட, தனது உணவுப் பழக்கங்கள், வேலை சூழ்நிலைகளின் காரணமாக இந்நோயை வரவழைத்துக் கொள்கின்றனர்.

    குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில் குறைந்த கிளைசிமிக் ஆசிட் (Gi) இருப்பதால், சாப்பிடும் அரிசி மெதுவாக சீரணித்து, மெதுவாக சர்க்கரையை இரத்தக் குழாய்களுக்கு எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கிறது.

    சர்க்கரை வியாதி மற்றும் நுண்ணூட்ட சத்து குறைபாடு போன்ற நோய்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் தான் தீர்வு என்ற விழிப்புணர்வைப் பெறவேண்டும். வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது, தேவையான அளவு இந்த தானியங்கள் கடைகளிலும் கிடைக்கப்பெற வேண்டும்.  இந்த தானியங்களை  சில்லறை வியாபாரம் செய்வதன் மூலமும் தேவையான அளவு தானியங்களைப் பொது மக்களும் பெறலாம்.

    தற்போது குதிரைவாலி தானியங்கள் கிலோ 26 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கடைகளில் பல்வேறு விதமான அடையாளங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.

    பெரும்பாலான மேல்தட்டு மக்கள் தானியங்களின் அவசியம் உணர்ந்து இவற்றை உணவாக எடுத்து வருகின்றனர். ஆனால், நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்கள் விலை மலிவாகவும், இலவசமாகவும் அரிசி கிடைக்கப் பெறுவதால் மூன்று நேரமும் அரிசியை உணவாக உட்கொள்வதால் பல்வேறு சத்துக் குறைபாடுகளை வரவழைத்துக் கொள்கின்றனர்.

    சிறு தானியங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு அரிசி உணவைத் தவிர்த்து சிறு தானியங்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்களானால் அதுவே இக்கட்டுரையின் வெற்றியாகும்.

    குதிரைவாலியில், நமது உணவுச் செரிமானத்திற்குத் தேவையான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. உடலின் நன்மைக்கு இது இன்றியமையாததாகும். மேலும் மற்ற தானியங்களைக் காட்டிலும் இரும்புச்சத்தும், கால்சியம் சத்தும் அதிக அளவில் இதில் உள்ளது.

    குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் தேவையான அளவு இரும்புச்சத்தைச் சேர்க்கவும் இந்த குதிரைவாலி போன்ற சிறுதானியங்களைச் சேர்த்து தயாரிக்கபடுகிறது. எனவே விளம்பரங்களில் காட்டப்படும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு பதிலாக நேரடி உணவாக இந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. சிறு தானியங்களில் உள்ள ஊட்டச் சத்துக்களை உணர்ந்து அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் எந்த நோய் தாக்குதலுக்கும் ஆளாகாமல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

    மேலும், அதிக நார்ச்சத்தால் அடிக்கடி உண்ண வேண்டும் எனும் தேவை குறையும். பசியை நீண்ட நேரம் தாங்கும் தன்மையை அளிப்பதால் குறைந்த உடல் உழைப்பு கொண்டோர், தம் உணவின் உட்கொள்ளும் அளவை இயல்பாக குறைத்துக் கொள்ளலாம். உடற்பருமன், இருதய நோய்க்கான சிரமம் நிச்சயமாகக் குறையும்.

    குதிரைவாலியில் 13.6g/100gm என்ற அளவில் நார்ச்சத்து உள்ளது. புரதம் 6.2g/100gm, கார்போஹைட்ரேட் 65.5g/100gm, கொழுப்பு 4.89g/100gm. மற்ற சிறுதானியங்களைக் காட்டிலும் குதிரைவாலியில் அதிகமான நார்ச்சத்து நிரம்பியது. மேலும் கிளைசிமிக் அமிலம் குறியீடு மற்ற தானியங்களை விட குதிரைவாலியில் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

    ஒரு ஏக்கரில் குதிரைவாலி பயிரிட்டால் 800 முதல் 1000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ குதிரைவாலி தற்போது ரூ.15 முதல் ரூ.20 வரையில் விற்பனை செய்யலாம். எனவே ஒரு ஏக்கரில் 11,000 ஆயிரம் முதல் 15,000 வரையில் லாபம் பெறலாம். 90 நாட்களில் இந்த வருமானம் நல்ல வரப்பிரசாதமாக இருக்கும்.

    இந்த இதழை மேலும்

    உனக்குள் ஒருவன்

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 15.8.2014; வெள்ளிக்கிழமை

    நேரம் : மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை

    இடம் : M.G.V. மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)

    திருச்செங்கோடு ரோடு,

    பள்ளிபாளையம்

    தலைப்பு: உனக்குள் ஒருவன்

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc. மகாலட்சுமி

    மண்டலப் பயிற்சியாளர், கரூர்.

    தொடர்புக்கு: தலைவர் – திரு. D.S. ஜெயசீலன்: 94432 44850

    பொருளாளர் – திரு. V. சண்முகசுந்தரம்: 98423 95373

    PRO – திரு. M. ராதா கிருஷ்ணன்: 99657 95856