– 2014 – May | தன்னம்பிக்கை

Home » 2014 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    நம்மால் முடியும் நம்பு!

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்  :  09.05.2014; வெள்ளிக்கிழமை

    நேரம் : மாலை 6 மணி

    இடம் : M.G.V. மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)

    திருச்செங்கோடு ரோடு, பள்ளிபாளையம்

    தலைப்பு: நம்மால் முடியும் நம்பு!

    சிறப்புப் பயிற்சியாளர்: திரு. A. டோமினிக் சேகர்

    வரலாற்றுத்துறை பேராசிரியர்

    தஞ்சாவூர்.

    போன்: 94870 29494

    தொடர்புக்கு:

    தலைவர் – திரு. D.S. ஜெயசீலன்: 94432 44850

    பொருளாளர் – திரு. V. சண்முகசுந்தரம்: 98423 95373

    PRO – திரு. M. ராதா கிருஷ்ணன்: 99657 95856

    அறிவால் வெற்றி! (மெய் ஞானமும் வெற்றியும்)

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 11.05.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

    இடம் : மாயாபஜார் A/C ஹால்,

    Opp. E.B. அலுவலகம் எதிரில்,

    E.V.N. ரோடு,

    ஈரோடு.

    தலைப்பு    : அறிவால் வெற்றி! (மெய் ஞானமும் வெற்றியும்)

    சிறப்புப் பயிற்சியாளர்: திரு. N. சிவநேசன், M.Sc (Ag).

    தலைவர், அனைத்து வணிகர்சங்கக் கூட்டமைப்பு,

    ஈரோடு.

    போன்: 94431 66067

    தொடர்புக்கு

    தலைவர் P. வெங்கடேஸ்வரன்  97879 50100

    செயலாளர் M. மணிகண்டன்  90255 51777

    பொருளாளர் S.A. சிவசாமி  99943 46686

    உள்ளத்தோடு உள்ளம்

    ஒரு பெரிய நிறுவனம். மேலாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. அதிக மதிப்பெண்ணுடன் நல்ல அறிவாற்றல் உள்ள இளைஞன் ஒருவன் தேர்வாகிறான். முதலாளி அவனைச் சந்திக்கிறார். ஆனாலும் தேர்வு செய்ய ஏனோ தயங்கி, பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

    “உயர்ந்த கல்வி நிறுவனத்தில் நீ படித்திருக்கிறாய். உன் தந்தை பெரிய செல்வந்தரா?” எனக் கேட்டார்.

    “இல்லை. நான் குழந்தையாக இருக்கும்போதே அவர் காலமாகிவிட்டார். என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தது அம்மா தான்” என்றான்.

    “அப்படியா… அவர் என்ன வேலை பார்க்கிறார்.?”

    “பல வீடுகளில் பத்துப்பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது” என வேலை பார்க்கிறார். கண் கலங்கினான் இளைஞன்.

    “உன்னுடைய துணிகளை யார் துவைக்கிறார்கள்..?” “அம்மா தான்”

    “உன் தாயின் கரங்களைக் கழுவிச் சுத்தம் செய்துவிட்டு, நாளை வந்து என்னைப் பார்” என்றார் முதலாளி.

    அன்றிரவு தான், தன் தாயின் கரங்களை முதன்முதலாகப் பார்த்தான். தோலெல்லாம் உரிந்து, வெடித்து இருந்தது. கதறினான். கண்களில் ஒற்றினான்.

    அந்தத் தாயோ அவனை அமைதிப்படுத்தினாள். அன்றிலிருந்து வீட்டு வேலைகள், அவனுடைய துணிகளைத் துவைப்பது என வேலை செய்ய ஆரம்பித்தான் அவன்.

    அடுத்த நாள் முதலாளியைச் சந்தித்து “நன்றி” சொன்னான்.

    அவர், “என்ன நடந்தது நேற்று?” என்றார்.

    “தாயின் உழைப்பு தான் என் உயர்வுக்குக் காரணம் என்று உணர்ந்தேன்” என்றான் இளைஞன்.

    “இன்னும் ஏதாவது உணர்ந்தாயா?” “ஆம். பிறரது உழைப்பை அவசியம் மதிக்கத் தெரிய வேண்டும்” என்றும் உணர்ந்தேன்.

    “எவருக்கு பிறரது உழைப்பின் மீது மரியாதையும், மதிப்பும் இருக்கிறதோ அவர்தான் தலைமைக்குத் தகுதியானவர்”, நீ நாளையே வந்து மேலாளர் பதவியை ஏற்றுக்கொள்” என்றார் முதலாளி.

    அயராத உழைப்பே வெற்றி தரும்

    அடுத்தவரின் உழைப்பை மதிக்கும் பண்பே உயர்வு தரும்.

    அனைவருக்கும் “உழைப்பாளர் தினம்” மற்றும் “அன்னையர் தினம்” நல்வாழ்த்துக்கள்!

    இந்த மாத இதழை

    எதை நோக்கிச் செல்கிறாய்

    மதுரை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்:  18.05.2014 ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: காலை 10.30  மணி

    இடம்: சிபி பயிற்சி கல்லூரி 3/182 P.R. வளாகம்,

    முதல் தளம் ப்ரொபசனல் குரியர்மாடி,

    பேங்க் காலனி,

    மதுரை -14

    தலைப்பு: எதை நோக்கிச் செல்கிறாய்

    சிறப்புப் பயிற்சியாளர்: திரு. A. டோமினிக் சேகர்

    வரலாற்றுத்துறை பேராசிரியர்,

    தஞ்சாவூர்.

    போன்: 94870 29494

    தொடர்புக்கு :

    தலைவர் : திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647

    செயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103

    ஒருங்கிணைப்பாளர் திரு. திருச்சி சந்தர்: 94437 43524

    இறைநிலை உணர்வோம்

    நிறையப் பேருக்கு கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதே சந்தேகமாய் உள்ளது. நண்பர்களே! இல்லை என்று சொன்னாலும், இருக்கிறது என்று சொன்னாலும் நிரூபித்துக் காட்ட வேண்டும். உங்களில் யாரேனும் இல்லை என்று சொல்வதானால் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்துக் காட்டுங்கள். யாம் இங்கு “இருக்கிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப் போகிறேன். என்ன தயாரா?

    இறைநிலையையும் இறைத் தன்மையையும் புரிந்து உணர்ந்து கொள்ள உங்களுக்கு செயல்முறை விளக்கம் மூலம் விளக்கப் போகிறேன். கவனமாக கவனியுங்கள். முதலாவதாக ஒரு வட்டமான நீர் நிறைந்த குளத்தினை விளக்கத்திற்கு எடுத்துக் கொள்வோம். குளத்தின் மையப்பகுதியை குறிவைத்து ஒரு கல்லை எறிந்தால், கல் விழுந்த மையப்பகுதியில் இருந்து விரிவலைகள் வளைய வளையமாய் குளத்தின் எல்லை வரை பரவும்தானே? ஒரு விரிவலையானது அடுத்தடுத்து உள்ள விரிவலைகளைத் தள்ளிக் கொண்டே போவதால் எண்ணற்ற விரி வலைகள் ஒன்றன்பின் ஒன்றாக விரிவடைந்து கொண்டே போவது புரியும். இந்த விரிவலையானது குளத்தின் விளிம்பு வரை பரவுவது தெரியும். ஆனாலும் அதையும் தாண்டிய விரிவலை அதிர்வுகள் அடர்த்தி வேறுபாடு காரணமாக நம் வெளிப்பார்வைக்கு தெரிவதில்லை. ஆக ஒரு மையப் புள்ளியில் உருவாகும் அதிர்வுகள் அளவற்ற விரிவலைகளாகப் பரவுவது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

    இரண்டாவதாக, குளம் என்று பார்த்ததை ஒரு இசைத்தட்டுக் கருவி (Gramophone record) சுழல்வதாக இப்போது பார்ப்போம். இந்த இசைத்தட்டு ஒருமுறை சுழன்று நிற்பதாக வைத்துக் கொள்வோம். இந்த சுழலும் இசைத் தட்டில் மூன்று புள்ளிகளை அடையாளப்படுத்திக் கொள்வோம்.வெளிப்புள்ளியான “அ’ ஒரு சுற்று சுற்றிவர எடுத்துக்கொள்ளும் அதே கால அளவைத்தான் உள்தள்ளி இருக்கும் ‘ஆ’ புள்ளியும் எடுத்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லைதானே? இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ‘”ஆ”யின் சுற்றளவு ‘”அ” வை விட குறைவாக இருப்பதால் ஒரு சுற்று சுற்றி முடிக்க ‘”அ” புள்ளியானது “ஆ” யை விட அதிவேகமாகச் சுற்றும் தன்மை புரிகிறதா? ஆக, ஒரு பொருள் சுழலும்போது அதன் வெளிப்புள்ளி அதிகபட்ச வேகத்துடனும் உள்ளே செல்லச் செல்ல வேகம் குறையும் என்பது புரிகிறதா? ஆக, இப்படி வேகம் குறைந்து வரும் நிலை மையப் புள்ளியான “ஞ”வை அடையும் போது வேகம் பூஜ்ஜியமாக இருக்கும் என்பது புரிகிறதா? இதுதான் இரண்டாவது உதாரணத்தில் புரிந்து கொள்ள வேண்டிய விளக்கம்.

    மூன்றாவதாக, இந்தப் பார்வையை ஒரு சுழலும் அணுவாக பார்ப்போமா? மேலே சொன்ன மையப்பகுதி ‘”ஞ” ‘வை அணுவின் நியூக்கிளியஸ் என்று வைத்துக் கொள்வோம். அணுவின் நியூக்ளியஸ் ஒரு ஷனத்திற்கு பல்லாயிரம் சுழற்சிகளை மேற்கொள்கிறது. நாம் இரண்டாவது உதாரணம் மூலம் இந்த அணுவின் நியூக்ளியஸை பார்க்க முற்படும் போது அணுவின் வெளிப் புள்ளி ‘”அ” மிக விரைவாகவும், உட்புள்ளி ‘”ஆ” வேகம் குறைந்தும் சுற்றி வரும் என்பது புரிகிறது தானே? அப்படி பார்க்கும் போது அணுவின் மையப்புள்ளியான ‘”ஞ” பூஜ்ஜியமாக அசைவற்று தானே இருக்கும்? ஆக இந்த மையப்புள்ளி அசைவற்று இருந்து கொண்டு மற்ற எல்லாப் புள்ளிகளையும் அதன் அதன் தூரத்திற்குத் தக்க படிச் சுழல வைக்கிறது தானே?

    முதலாவது உதாரணத்தில், குளத்தின் மையப் புள்ளியை சுழற்சிக்கு நாம் உட்படுத்தினோம். அதேபோல் இசை தட்டை நாம் தான் சுழல விடுகிறோம். ஆனால், அணுவின் சுழற்சியை நாமா உருவாக்கினோம்? ஆழ்ந்த உள்உணர்வு கொண்ட அன்பர்களே! தான் இயங்காமல், மற்றவற்றை இயங்க வைக்கும் மையப் புள்ளியைத் தான் நாம் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி என்கிறோம். இதைத்தான், எல்லாம் வல்ல ஆற்றல் (Almighty), சிவம் (அசைவற்றது), கிருஷ்ணா (கும்மிருட்டு), அல்லா (எல்லாம் வல்ல) என்று எண்ணிலடங்கா பெயர்களில் அழைக்கின்றோம். நம் இந்திய கலாச்சாரத்தில் அசையாததை சிவன் (துறுதுறு குழந்தையை சற்று சிவனேன்னு இரேன்” என்றோம்) என்றும் அசைவதை சக்தி என்று கூறுகின்றோம்.

    முதலாவது உதாரணத்தில், குளத்தில் ஏற்பட்ட ஒரு சுழற்சி அதிர்வுக்கே எண்ணிலடங்கா விரிவலைகளைப் பார்த்தோம். ஆனால், அணுவானது பல்லாயிரம் சுழற்சிகளை ‘ஷனத்திற்கு’ஷனம் இடைவிடாது உண்டு பண்ணுகிறது. இதனால் எண்ணிலடங்கா விரிவலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணு முதல் அண்டசராசரம் வரையிலும், அதைத் தாண்டி இந்த அண்டங்களையெல்லாம் காப்பதாக உள்ள சுத்த வெளியிலும் (Space) விரிவடைந்து கரையும் தானே? நண்பர்களே! ஒரு அணுவின் விரிவலையே இப்படி இருக்க, இந்த அண்டசராசரத்தில் உள்ள அணுக்கள் அத்தனையும் இவ்வாறு விரிவலைகள் உண்டாக்கத்தானே செய்யும்? இவ்வாறு உருவாக்கப்படும் விரிவலைகளின் பதிவே வான்காந்தம் (Universal Magnotism) என்று “மகான் வேதாத்திரி மகரிஷி’ அவர்கள் கூறியுள்ளார்கள். நாமும் அணுக்களின் கூட்டாகத் தானே உள்ளோம். ஆகவே நமக்குள்ளே உள்ள ஒவ்வொரு அணுவின் மத்தியிலும் இறைநிலை உள்ளதை முதலில் புரிந்து கொள்வோம். இதைத்தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஜீவகாந்தம் என்று கூறுகிறார்.

    வாழ்வின் குறிக்கோள் இறைநிலை உணர்தல் அல்லது இறைநிலை நோக்கியதாக இருக்க வேண்டும் என்று முயன்று இறைநிலையையும் இறைத் தன்மையையும் உணர்பவர்கள், வாழ்வின் அடிப்படையே, சாரமே இறைநிலையாக இருப்பதை உணர்கிறார்கள்.

    செயல்முறை: இறுக்கமற்று ஒரு இடத்தில் அமருங்கள். இரு கைகளைக் கொண்டு காதுகளை அழுத்தமாக மூடிக்கொள்ளுங்கள். உள்ளே என்ன உணர்கிறீர்கள். இப்போது கைகளைத் தளர்வாக கீழ்நோக்கி வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கோடான கோடி அணுக்களின் மையத்தில் இறைநிலை அசையாமல் இயங்கிக் கொண்டிருப்பதை உள்ளுணர்வாக உணர்ந்து பாருங்கள். உங்களுக்குள்ளே அற்புத இறைநிலை இருப்பது உணர்வீர்கள். இறைநிலையாய் வாழ்வோம்.

     உள்ளும் புறமும் இருப்பதுவெல்லாம் இறைநிலையே!

    உள் கடந்து உணர்ந்தால் கடவுள் இருப்பது தெரியும்!

            இந்த மாத இதழை

    குழந்தை மனம் வேண்டும்

    அன்புடனும், எப்பொழுதும் சந்தோசமாகவும் இருக்க விரும்பினால் அனைவரும் குழந்தை மனம் பெறுவோம்.

    “குழந்தை மனம் என்றதும் ஏதோ ஒரு இனம் புரியா மகிழ்ச்சி ஏற்படுகிறது தானே!  மீண்டும் சிறு பிள்ளையாக மாட்டோமா? என்ற ஏக்கம் அனைவருக்கும் இருக்கத்தான் செய்யும். ஏனெனில் குழந்தைகள் எப்பொழுதும், யார் மீதும் பொறாமை கொள்ள மாட்டார்கள். உண்மையான மகிழ்வுடன் இருப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் நிகழ்காலத்தை இழக்க மாட்டார்கள். அந்த நிமிடத்தில் வாழ்பவர்கள். தாமும் சந்தோசமாகவும், உடனிருப்பவர்களையும் சந்தோசமாகவும் வைத்திருப்பவர்கள்”.

    சில சமயங்களில் நம்மைவிடவும் குழந்தைகள் விவேகமாகவும், விரைவாகவும் செயல்களில் ஈடுபடுவார்கள். பேச்சிலும் பெரும்போக்குத் தெரியும். குறும்புத்தனம் இருந்தாலும் அதை பிறர் ரசிக்கும் படியே செய்வார்கள்.

    சஞ்சய் என்ற எனது அண்ணனின் நான்கு வயது மகனிடம், கொஞ்சம் மரியாதைக் குறைச்சலாக, பேசத் தெரியாமல் பேசிவிட்டேன் இப்படி, “கொஞ்ச நேரம் வாயை மூடுடா… இப்படியா வாய மூடமா பேசிகிட்டே இருப்ப… ஓட்ட வாய் டா உனக்கு” என்றேன்.அதற்கு சிறிதும் தாமதிக்காமல், “என்ன அத்தை… எனக்கு மட்டுமா ஓட்ட வாய்… எல்லோருக்குமே வாய் ஓட்டயாத்தானே இருக்கு” என்று சொல்லி எனது வாயை அடைத்துவிட்டான். பதில் பேசத் தெரியாமல் சந்தர்ப்பத்தைச் சமாளிக்க, “புத்திசாலிப் பிள்ளையடா நீ! ” என்று அள்ளி அணைத்தேன் அவனை.

    “அழுது அடம்பிடித்தாவது நினைத்ததை சாதித்துவிடுகிறான்” என்று சிறுவயதில் நல்ல பெயரை எடுத்திருப்போம். அந்த நினைத்ததை அடையும் விடாப்பிடித் தனத்தை எந்த இடத்தில் விடுகிறோம் என்பதை நினைத்திருக்கிறோமா? ஒரு இலட்சியத்தை அடைய முடிவு செய்துவிட்டால் எந்தத் தடைகளையும், யாருக்காகவும், எதற்காகவும் அதிலிருந்து பின்வாங்காமல் இருந்தால் தான் இலட்சியம் சாத்தியம் ஆகும். சாதனைகள் படைக்க முடிவுசெய்துவிட்டால் முயற்சிகளில் விடாப்பிடியாக இருத்தல் அவசியம். “என் முயற்சிகள் என்னை பலமுறை கைவிட்டதுண்டு, ஆனால் நான் ஒருமுறைகூட முயற்சியைக் கைவிடவில்லை” என்ற எடிசனின் பொன்னான வரிகளை நெஞ்சுக்கு உரமிடுவோம்.

    எவர் என்ன சொன்னாலும் நான் நினைப்பதை செய்து முடிப்பேன் என்று கண்ணோடும், கருத்தோடும் காரியத்தில் ஈடுபடும் குழந்தைகள், இன்றில்லாவிட்டாலும் நாளை நிச்சயம் நல்ல நிலைக்கு வருகிறார்கள்.

    சிறுவயதில் வீடு வீடாக செய்தித்தாள்களைப் போட்ட அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி ஆனார். வல்லரசாக இந்தியா வரவேண்டும் என்றும், கனவு காணுங்கள் என்றும் இளைய சமுதாயத்தினரின் எண்ணங்களை உயிர்த்தெழுப்பி சிறந்த குடியரசுத் தலைவர் ஆனார். குழந்தைப் பருவம் முதலான தன்னுடைய அனுபவங்களைச் சீராக்கிய அவர் இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த முன்னோடி.

    தன் பிள்ளையை அக்கறையுடன் வளர்த்தெடுப்பதில் ஒவ்வொரு தாய்க்கும் அளவில்லா மகிழ்ச்சி ஏற்படும் தான். அவரவர் பிள்ளையை வளர்ப்பதில் காட்டும் ஈடுபாட்டை தனது உறவினர் பிள்ளைகளின் வளர்ப்பில் பாதியும் கூட நாம் காட்ட மாட்டோம். அப்படி இருக்கையில் ஊரார் பிள்ளைகளையும், ஆதரவற்ற பிள்ளைகளையும் தன் பிள்ளை போல் அளவில்லா அன்பு காட்டிய அன்னை… உலகோர் மதிக்கும் இணையற்ற அன்னை… அன்பென்றால் அதற்கு சிறந்த உதாரணமாகிய அன்னை… தெரசா என்ற பெயர் பெற்ற ஆக்னசு. தனது பதின்ம வயதில் சமூக சேவை தான் செய்யப் போகிறேன் என்ற தெளிவான முடிவுடன் தன்னுடைய அன்னையின் சம்மதத்துடன் வீட்டிலிருந்து புறப்பட்டார். “அன்னை என்றதும் நமது நினைவில் வரும் ஒரு உன்னத தாய்” என்று சரித்திரத்தில் மாறாத இடம் பெற்றவர்.

    “ஒரு இலட்சியத்தை

    அடைய முடிவு

    செய்துவிட்டால் எந்தத்

    தடைகளையும்,

    யாருக்காகவும், எதற்காகவும்

    அதிலிருந்து பின்வாங்காமல்

    இருந்தால் தான் இலட்சியம்

    சாத்தியம் ஆகும்.”

    பிறவியிலே கண் பார்வை இல்லாமலும், வாய் பேச முடியாமலும், காது கேட்காமலும் பிறந்த குழந்தை ஹெலன் கெல்லர். ஒன்றரை மாதமான போதுதான் அவர்களது பெற்றோருக்கு தனது குழந்தையின் நிலை தெரிய வருகிறது. பொதுவாக, இப்படிக் குழந்தைகள் பிறக்கும் நிலையில் ‘கருணைக் கொலை’ என்ற பெயரில் கருணையே இல்லாமல் கொலை செய்திருப்பார்கள் மற்றவர்கள். ஆனால் ஹெலன் கெல்லர் அவர்களது பெற்றோர் அவருக்கு ஒரு ஆசிரியரை நியமித்து கையிலே எழுதிக் காண்பிக்கும் முறையைக் கொடுக்கக் கற்பித்தனர். சிறு வயதில் எல்லா பிள்ளைகளுக்கும் இருக்கும் ஆர்வமும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஏக்கமும் அவரிடத்தில் இருந்ததால் சிறப்பாகவும், வேகமாகவும் கற்றுக்கொண்டார். “என்னால் இந்த அழகிய உலகத்தைப் பார்க்க முடியவில்லை தான் ஆனாலும், உலக மக்கள் அனைவரையும் என்னைத் திரும்பிப் பார்க்க வைப்பேன்” என்று திடமுடன் தன்னை மெருகேற்றி, தான் உறுதிகொண்டது போல் சாதித்துக் காட்டிய பெண் ஹெலன் கெல்லர்.

    போகின்ற போக்கில் உங்களைப் பற்றிய நல்லெண்ணங்களை மற்றவர் மனதில் விதைத்துவிட்டுப் போங்கள். உங்களது நியாபகங்கள் அடுத்தடுத்த தலைமுறையில் மலர்ந்து விரியட்டும்.

    குழந்தை மனம் வேண்டும் இறைவா… என்று இப்பொழுதிலிருந்து அவர்களைப் போல வாழப் பழகுவோம்… மனம் அமைதி பெறும். குழப்பங்கள் விடை பெறும்.

    இந்த மாத இதழை

    இன்றைய மாணவர்களுக்கு வேண்டும் ஒரு பாசறை

    இன்றைய மாணவர்கள் ஒரு நோக்கத்தோடு, கட்டுப்பாட்டுடன் மிலிட்டரித்தனத்தில் பெற்றோர்களால் Pre-Kg முதல் +2 வரை வளர்க்கப்படுகிறார்கள், பந்தயக் குதிரைகளை Starting Shell-ல் அடைப்பது போல் அவர்களுடைய பிஞ்சுமனம் எந்த சுதந்திரமும் இல்லாமல், குழந்தைத்தனம், சுதந்திரச் சிந்தனைகள், மகிழ்ச்சி ஆரவாரங்கள், சின்ன சின்ன மனசுகள் ஒன்றோடு ஒன்று உரசி ஏற்படுகிற தீஜுவாலைகளால் மாறுபடுகிற எண்ண ஓட்டங்கள், அதனால் அவர்கள் மனதில் பதிகிற பின்னால் அவர்கள் நல்ல வாழ்க்கைக்கு உதவுகிற அறிவுச் சிந்தனைகள், சுய சிந்தனைகள், தாங்களே தங்களுடைய உயர்வுக்காக முடிவு செய்கிறதிறன்கள், இவைகள் அனைத்தையும் இன்னும் பல நல்ல மாற்றங்களையும் அந்த பிஞ்சுமனம் இழந்து விடுகிறது, மேலே சொன்ன மிலிட்டரித்தனத்தால்.

    இப்படி இருகிப்போய், கல் மனதோடு பணம் மற்றும் பதவி ஒன்றே குறிக்கோளோடு, எந்த சுதந்திர உணர்வும் இல்லாமல், பெற்றோர்கள், பள்ளி தாளாளர்கள் நோக்கத்துக்கு கட்டுப்பாட்டோடு வளர்க்கப்படும் இவர்கள் +2 முடித்து அந்தந்தத் துறையில் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள். கல்லூரிகளில் பெற்றோர்களை விட்டுப்பிரிந்து முதன்முதலில் தங்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைக் கண்டு திக்குமுக்காடி விடுகிறார்கள். எது நல்லது, எது கெட்டது என்பதை பகுத்தறியும் திறன் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலான மாணவ மாணவிகள் அதீத சுதந்திரத்தால் தங்களுடைய கட்டுப்பாட்டை இழந்து இவ்வளவு நாளும் பூட்டி வைக்கப்பட்டிருந்த சுதந்திரம் பீறிட்டு எழுந்து மனம் போன போக்கில் கட்டுப்பாடு இல்லாமல், கட்டுப்பாட்டோடு வளர்க்கப்பட்டவர்கள் தவறான வழிகளில் செல்ல நேரிடுகிறது.

    ஆகவே, அவர்கள் கல்லூரியில் முதல் வருடத்தில் ஆரம்பிக்கும் பொழுதே படிப்புடன் சேர்த்து பண்பாடு, கலாச்சாரம், தாய்மொழிப்பற்று, இனப்பற்று, தேசப்பற்று, அன்பு, பாசம், குடும்பப்பற்று மற்றும் வாழ்க்கை ஒழுக்கம் பற்றி அவர்களுக்கு கற்றுத்தரும் கட்டாய சூழ்நிலையில் இந்த காலக்கட்டம் இருக்கிறது. இதையெல்லாம் வெளியிலிருக்கும் அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் யாரும் அறிவுரை சொல்ல முடியாது. சொன்னாலும் கேட்கமாட்டர்கள் அந்த அளவிற்கு அவர்களை பள்ளிப்பருவத்திலேயே படிப்பு, மதிப்பெண் இதைத்தவிர இந்த சமூகத்தோடு சேர்ந்து வாழ்வது எப்படி என்பதை பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும் கற்றுத் தரவில்லை.

    இந்த நிலையில் வெளியில் உள்ளவர்கள் என்ன சொன்னாலும் அவர்கள் மனதில் பதியாது? முள்ளை முள்ளாலேயே எடுக்க வேண்டும் என்ற பழமொழிக்கிணங்க மாணவர்களை மாணவர்கள் மூலமாகவே திருத்தவேண்டும். இதற்கு மாணவ மாணவிகளிடமிருந்து எந்த கெட்ட பழக்கங்கள் இல்லாத, தாய்மொழிப்பற்றுள்ள, இனப்பற்றுள்ள, தேசப்பற்றுள்ள, நல்ல பண்பாடுள்ள, உயர்ந்த நோக்கங்கள் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அனைத்து கலைக் கல்லூரிகள், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், ஒவ்வொன்றிலுமிருந்தும் ஐந்து மாணவர்களை (மாணவர்கள்-3, மாணவிகள்-2) தேர்ந்தெடுக்கவேண்டும். ஒரு மாவட்டத்தில் ஏறக்குறைய 300 மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த மாணவர்கள் கொண்ட அமைப்பிற்கு NATIONAL STUDENTS REFORMIST FORCE என்று பெயரிடலாம்.

    அந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு வெளியே இருக்கும் கல்வியாளர்களில் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், உயர் அதிகாரிகள் (அரசு மற்றும் நிறுவனங்கள்) பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்றவர்கள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்றவர்கள், ஆன்மீகவாதிகள், ரோட்டரி அமைப்புகள் இவர்களிடமிருந்து இதற்குத் தகுந்த அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து, பயிற்சி பெற்றமாணவர்கள் மூலம் மற்றமாணவ மாணவிகளில், தகுதியானவர்களை அவர்களே தேர்ந்தெடுத்து, பயிற்சி கொடுக்கவேண்டும். பயிற்சிகள் இசை மூலமாகவும், நாடகங்கள் மூலமாகவும், அன்றாட நிகழ்வுகளை, நாட்டு நடப்புகளை, மக்களின் நிலைமையை, இன்று எது தேவையோ அதை மட்டும் அவர்களுக்கு கூட்டாக இசைத்து நடித்துக் காட்டவேண்டும். இதைத்தான் இன்றுள்ள மாணவர்கள் விரும்புகிறார்கள் பழைய கதைகளை, இலக்கியப் பேச்சுக்களை, அறிவுரை சொல்வதை, கதா காலட்சேபத்தை, புராணங்களை, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதை, நீண்ட பேச்சுக்களை, இக்கால மாணவர்கள் விரும்புவதில்லை. இந்த காலத்திற்குத் தகுந்தாற்போல் இன்று என்ன தேவையோ, வருங்காலத்திற்கு என்ன தேவையோ அதை சுருக்கமாக சொன்னால்தான் விரும்புகிறார்கள். இதற்குத் தகுந்தாற்போல பயிற்சிகளை வடிவமைத்து அதை அடிப்படையாகக் கொண்டு, அறிஞர் பெருமக்களை நட்போடு, கருத்தோடு, நகைச்சுவையோடு ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு கிழமைகளில், பயிற்சி கொடுக்க வைக்கவேண்டும். பயிற்சிகள் அவர்களின் முழு பங்களிப்போடு இருக்கவேண்டும்.

    மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும்பொழுது ஒவ்வொரு கல்லூரியிலும் முதல் வருட மாணவர்களிடமிருந்து இரண்டு பேரும், இரண்டாவது வருட மாணவர்களிடமிருந்து இரண்டு பேரும், மூன்றாவது வருட மாணவர்களிடமிருந்து  ஒரு மாணவனும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். முதல் வருட மாணவர்கள் இரண்டாவது வருடம் வரும்பொழுது, திரும்பவும் முதல் வருடத்திலிருந்து இரண்டு மாணவர்களை எடுத்துக் கொள்ளவேண்டும். இப்படியே ஒவ்வொரு வருட மாணவர்களும் அடுத்த வருடத்திற்கு போகும்பொழுது முந்தின வருட மாணவர்களை எடுத்துக் கொண்டே போக வேண்டும். அவர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    வருடம் முழுவதும் இப்படியே அவர்களுடைய பங்களிப்போடு பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்கும்பொழுது, கல்லூரிகளில் இருக்கும் அனைத்து மாணவர்களும், ஒவ்வொருவராக பயிற்சியில் சேர்ந்துவிடுவார்கள். படிப்பு முடிந்து வெளியே வருகிறஒவ்வொரு மாணவனும் மாணவியும் பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட இருக்கத்திலிருந்து விடுபட்டு, பாசமுள்ள, பற்றுள்ள, சுதந்திரமான விசால மனதோடு, அன்போடு, நட்போடு இந்த சமூகத்திற்கு உதவி செய்கிற, சேர்ந்து வாழ்கிறகுணத்தோடு, நல்ல பண்பாளர்களாக, குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவர்களாக மாறி வெளியே வருவார்கள். இந்த நாட்டையே மாற்றி நல்வழிக்கு கொண்டுவரும் திறன் படைத்தவர்கள் ஆவார்கள்!

    அப்போதுதான் நாட்டிற்கு நேர்மையான ஆட்சியாளர்கள் கிடைப்பார்கள்!

    இந்த மாத இதழை

    மனமாற்றமும் மகத்தான வெற்றியும் மனம் எண்ணங்கள்

    “வெற்றி” என்ற சொல்லே மனதிற்கு மகிழ்ச்சியூட்டுகிறது. “தோல்வி” என்ற சொல் மனதிற்கு சுமையாகிறது; துன்பம் தருகிறது. ஒருவரது வெற்றியை, தொடர் வெற்றியைக் கூர்ந்து ஆய்ந்தால் அது அவரது மனம் சார்ந்ததாகிறது. மனம் என்பது எண்ணங்களின் பிறப்பிடமாகிறது.

    மனதைப் பற்றி முழுமையாக அறிவதென்பது வெறும் அறிவியலால் மட்டும் முடியாது. மனோதத்துவ நிபுணர்களாலும் அறிய முடியாத, புரிய முடியாத பல புதிர்கள் மனம் சார்ந்துள்ளன.

    மனதைக் கொண்ட மனிதன் உயர்வதும், தாழ்வதும் அதனாலே தான். மனதை வென்ற மனிதன் உயர் ஞானியாகிறான்.

    பொதுவாக மனம் ஐம்புலன்கள் சார்ந்து இயங்குகிறது. ஐம்புலன் இன்பங்களுக்கு அடிமையானோர் பலர்.

    நாவின் சுவைக்கு அடிமையானதால், உடலுக்கு ஊறு விளைவிக்கும் நோய்வயப்படுகின்றனர்.

    கண்களால் காணப்படும் காட்சிகளால் கட்டுண்டு விடுகின்றனர்.

    சிலர் மூக்கால் உணறும் நறுமணங்களுக்கு அடிமையாகின்றனர்.

    சிலர் சிலரின் தொடு உணர்வுகளுக்காக ஏங்குகின்றனர்.

    சிலர் காதால் கேட்கும் இசைக்கும், பேச்சுகளுக்கும் இரசிகர்களாக உள்ளனர்.

    ஆறாவது அறிவை, பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்துபவர்கள் எதற்கும் அடிமையாகாமல், அதன் வசப்படாமல், தனக்கென ஒரு இலக்கை அமைத்து, அதை நோக்கி பயணிக்கும் பாதை வகுத்து வெற்றிக்கனியைப் பறிக்கிறார்கள்.

    ஐம்புலன் இன்பங்களிலேயே திளைத்திருக்க மனம் எப்போதும் ஏங்கிக் கொண்டுள்ளது. ஐந்தறிவே கொண்ட மிருகங்களுக்கு இது இயற்கை. அவ்வின்பங்களிலேயே ஈடுபாடு கொண்டு வாழ்வை முடிக்கிறது.

    ஆனால் ஆறாவது அறிவையும் கொண்ட மனிதன், ஏழாவது அறிவையும் பெறும் வாய்ப்பு கொண்ட மனிதன் வெற்றி காணவே படைக்கப்பட்டுள்ளான்.  பகுத்தறிவு மூலம் மனிதன் கொண்ட வெற்றிகள்  எத்தனை!  எத்தனை! கற்கால மனிதனுக்கும், நாகரிக வளர்ச்சியின் உச்சத்தில் கோலோச்சும் இன்றைய மனிதனுக்கும் எத்தனை வேறுபாடுகள்.

    எத்தனை வகைப்பட்ட படிப்புகள், தொழில்கள்… ஆனாலும் எல்லா மனிதராலும் வெற்றியடைய முடியவில்லையே!

    உயர் படிப்புகள் படித்தும் உயர்ந்து நிற்க முடியவில்லையே!

    கடினமாக உழைத்தும், கனிசமான முன்னேற்றமில்லையே!

    ஏன்? ஏன்? ஏன்?

    இதற்கான காரணங்களை ஆராய முற்பட்டால், அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பது நமது எண்ணங்களே.

    எண்ணங்களின் குவியலே மனம்.

    “எதை எண்ணுகிறாயோ அதுவாக மாறுகிறாய்”

    “நல்ல எண்ணங்கள் நம்மை உயர்த்தும். தீய எண்ணங்கள் நம்மை வீழ்த்தும்”

    “மனதை நேர்மறை எண்ணங்களால் நிரப்பு”

    “எதிர்மறை எண்ணங்கள் நம் முன்னேற்றத்தின் தடைக்கற்கள்”

    போன்ற ஆன்றோர், சான்றோர் வாக்குகளை சற்று ஆழ்ந்து நோக்கினால் ஒன்று தெளிவாகப் புலப்படும்.

    நமது எண்ணங்களை ஆராய்ந்து, வகைப்படுத்தி, நெறிப்படுத்தும்போது மாற்றங்கள் நம்முள் நிகழ்வதை அறியலாம்.

    மனம் மாற்றங்களை விரும்புகிறது புதிய, புதிய செயல்களில் நாட்டம் கொள்கிறது. எனவே மனதை நம் வயப்படுத்த வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.

    பத்து, பதினைந்து, இருபது வருடங்களாக புலன் இன்பங்களிலேயே ஈடுபட்டுள்ள மனதை திசை திருப்பும்போது அது எதிர்க்கும்.

    ஒன்றை மட்டும் நன்கு உணருங்கள் அன்பர்களே!

    மனதை அதன் போக்கிலே விட்டு, அதன் நாட்டங்களை அறிந்து, கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியேற சில பயிற்சிகளை, மன பயிற்சிகளைச் செய்யச்செய்ய நம்மை நோக்கி நகரும்.

    “மனம் ஒரு வேலைக்காரன். நீ அதன் முதலாளி” (Mind is a Servant; You are the Master) என்பதை நன்கு நினைவு கொள்ளுங்கள்.

    மனதை வேலைக்காரனாக எண்ணி, அதனிடம் வேலை வாங்குவதிலேயே முயற்சி மேற்கொண்டால் அது முரண்டு பிடிக்கும்.

    சில வேளைகளில் அதற்கு நாம் நண்பனாக வேண்டும். அதற்கென சிறிது நேரம் ஒதுக்கி அதை உற்சாகப்படுத்த வேண்டும். அதே வேளையில் அப்பயிற்சிகளில் நுழையும்முன் நம்மைப்பற்றி, நம் உடலைப்பற்றி, உடல் உறுப்புகளைப் பற்றி ஓரளவேனும் தெரிந்து கொள்வது அவசியம்.

     “ஆறாவது அறிவை, பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்துபவர்கள் எதற்கும் அடிமையாகாமல்,அதன் வசப்படாமல், தனக்கென ஒரு இலக்கை அமைத்து,அதை நோக்கி பயணிக்கும் பாதை வகுத்து வெற்றிக்கனியைப் பறிக்கிறார்கள்.”

    கண்களுக்கு தெரிந்த உடலின் வெளி உறுப்புகள், கண்களுக்குத் தெரியாத உடலின் உள் உறுப்புகள், இவைகளின் அடிப்படை இயக்கங்கள், இரத்த ஓட்டம், நுரையீரலின் இயக்கம், கண்களின் விழித்திரையில் (Retina) கண்களை மூடிய நிலையில் காணும் காட்சிகள் (உறக்கத்தில் அல்ல), கனவுகள் (உணர்வு நிலையில்) இவைகளைப் பற்றிய அடிப்படை அறிவு சற்று தேவை.

     மனம் எண்ணங்கள் கனவுகள்  வெற்றிகள்

    இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை, பிணைந்தவை. அனைத்து இயக்கங்களுக்கும் மூலமாக இருந்து இயக்குகின்ற சூத்திரதாரி “மூளை”.

    அதைப்பற்றிய தகவல்களும் தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

     அப்போதுதான் மனமாற்றத்தைப் பற்றி அறிய முடியும், தெளிய முடியும், இயக்க முடியும்.

    இந்த மாத இதழை

    பெண்கள் பாதுகாப்பு படையிலும் சாதிக்கலாம்

    “பெண்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்”

    -நெல்லீ மிக்லங்க்

    இம்மேற்கோளிற்கேற்ப இன்றைய சாதனை பெண்கள் பட்டியலில் சிலர்,

    வான் படையின் முதல் பெண் ‘ஏர் மார்சல்’ . பன்டோபத்யாய்.

    Lt. ஜென் புனிதா அரோரா கடற்படை மற்றும் தரைப்படை. இவற்றில் கடற்படை உதவி துணைத்தலைவர் மற்றும் விமானப்படை உதவி துணைத்தலைவர் ஆக பணியாற்றியவர்.

    வான் படையின் முதல் பெண் பைலட்  Flt. Lt. ஸ்வேதா மிஸ்ரா

    Lt. பிரியா செம்வால், தன் கணவரை போரில் இழந்த இப்பெண், இப்பொழுது தன்னையும் நாட்டிற்காக அர்ப்பணம் செய்துள்ளார்.

    இவர்களைப் போல சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கானது இக்கட்டுரை.

    இன்றைய இளம் பெண்கள் நாளைய உலகின் சிறந்த தலைவர்களாக நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பாதுகாப்புப் படையில் அதிகாரியாக பணிபுரிவது. பெண்கள் எந்த விதங்களில் ஆண்களைவிட சிறந்த தலைவார்களாக திகழ்வார்கள் என்று “கேலிப்பர் கார்ப்’ என்னும் அமெரிக்க நிறுவனம் செய்த ஆய்வில் தெரியவந்தது. அவை கீழ்வருமாறு:

    பெண்களின் பேச்சுத்திறன், ஆண்களைவிட அதிகம். இதனால் அவர்களால் மற்றவரின் தேவைகளை அல்லது ஆட்சேபனைகளைத் தெளிவாக எடைபோட்டு அதற்கேற்ப நடந்து கொள்ள முடியும்.அதேசமயம், மற்றவர்களைத் தங்கள் இடத்தில் இருந்து சிந்திக்க வைக்கவும் முடியும். ஆனால் ஆண்களோ தங்கள் இடத்தில் இருந்து தான் முதலில் யோசிப்பார்களே தவிர, பிறரை இரண்டாம் பட்சமாக கருதுவார்கள். இதனால் ஆண்கள் தங்கள் கருத்தை பிறர்மேல் திணிப்பார்களே தவிர, பிறமனிதர்களுக்குப் பேசி புரிய வைப்பதில்லை.

    இரண்டாவதாக, பெண்கள் தாங்கள் செய்த தவறுகளை எண்ணி வருத்தப்படாமல், சுலபமாக அதில் கற்றுக்கொள்ளும் திறன், ஆண்களைவிட அதிவேகமாக தங்களை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கின்றன. குறிப்பாக மற்றவர்கள் முடியாது என்று கூறும்பொழுது, பெண்கள் உயர்வான நோக்கம் கொண்டு முடியும் என நிரூபிக்கிறார்கள். கடைசியாக, பெண்கள் துணிந்து சில செயல்களை முடிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் எடுத்த செயலை முடிக்க விதிமுறைகள் தடையாக இருந்தனவென்றால், அவற்றை எதிர்த்து செயல்பட்டு, புதிய தீர்வுகளைத் தருகிறார்கள். இவற்றிலிருந்து பெண்கள் தலைமை வகிப்பதில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றுக் கூறலாம்.

     பாதுகாப்பு படைகளில் அதிகாரிகள் ஆக வேண்டும் என்றால், சில குணங்கள் பிறக்கும்பொழுதே இருந்திருக்க வேண்டும். அவற்றை நாம் வளர்த்திருக்கவும் வேண்டும். அவற்றில் சில முக்கியமானவை:

    •     பேச்சுத்திறன்(Communication Skills)
    •     பிறரைப் புரிந்து நடப்பது (Social Adjustability)
    •     தன்னைக் குறைத்து மதிப்பிடாதது  (Confidence)
    •     துணிந்து வேலையை முடிப்பது  (Assertiveness / Courage)

              இவை அனைத்தும் பெண்களுக்குள் இருப்பனவே. இவற்றினால் ஒரு பெண் நூறு ஆண்களையும் தோற்கடித்து விடலாம். அதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, Lt. திவ்யா அஜித். இவர் 2010ம் ஆண்டு, சென்னையில் உள்[ Officers Training Academy-ல் பயிற்சி பெற்று, சிறந்த மாணவியாய் (Sword of Honour) தேர்ச்சிப் பெற்றார். அவருடன் 244 ஆண் மற்றும் பெண் மாணவர்களும், அதிகாரிகளாய் தேர்ச்சிப் பெற்றனர்.

     பெண்கள் கீழ்கண்ட இணையதளம்-கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

     Army  Officers Training Academy

    (CDSE; Direct Entry)

    www.upsc.gov.in,

    www.joinindianarmy.nic.in

     Navy/Coast Guard  Naval Academy

     (Direct Entry)

    www.nausena-bharti.nic.in

     Air Force  Air Force Academy

    ( AFCAT; Direct Entry)

    www.careerairforce.nic.in

    இவற்றில் CDSE மற்றும் AFCAT என்பன எழுத்து தேர்வுகளாகும். தேர்ச்சி பெறுபவர்கள், Interview-க்கு அழைக்கப்படுவர்.

    Direct Entry என்பது எழுத்து தேர்வு இல்லாது, 10, +2, டிகிரி மதிப்பெண்களை வைத்து  நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

    பெண்களை அதிகாரிகளாக நியமனம் செய்யப்படும் பிரிவுகள்:

    Army  EME, Signals, Engineers, Army Education Corps, Ordnance, ASC, Intelligence, JAG (LAW), AMC, MNS

    Air Force  Flying, Navigation, Engineering, Education, Administration, Logistics, Accounts, Meteorology

    Navy  Logistics, ATC, Observers, Naval Architecture, Education, Coast Guard  Navigation, Engineering

    வயது: 19 முதல் 27 வரை (படிப்பைப் பொறுத்து)

    படிப்பு: பட்டதாரிகள் (Except MNS)

    பெண்களை அதிகாரிகள் ஆக்குவதை ஒரு சேவையாக செய்யும் Defence Academy, coimbatore-ன் தலைவரான திரு. Lt. Col. CS. ஜெயவேல் அவர்களை விபரங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்  094437 20076

    இந்த மாத இதழை

    மருத்துவக் கல்வியின் மறுமலர்ச்சி

    மனிதனை சிறந்த மனிதனாக மாற்றுவது கல்வி தான். அதுவும் சிறந்த தொழில் கல்வியாக அமைந்துவிட்டால் கல்வியின் மூலம் செல்வமும் சேரும். அதில் குறிப்பாக தனது விருப்பம் மருத்துவத் துறையாக இருந்தால் அவர் மனிதருள் புனிதராகக் கருதப்படுவார்.

    தொழிற்கல்வி வரிசையில் மருத்துவக் கல்வி முதலிடம் பிடித்துள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஒரு டாக்டராக பார்க்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளனர். ஆனால் சில பெற்றோர்கள் தன்னால் அடைய முடியாத கல்வியை தனது குழந்தையாவது பெறவேண்டும் என்பதை விருப்பமாக கொண்டு முயற்சி செய்து படிக்க வைக்கின்றனர்.

    21ம் நூற்றாண்டில் மற்ற துறைகளைப் போல மருத்துவத் துறையும் தனக்கென பல அரிய வளர்ச்சிகளைக் கொண்டு வீறுநடை போட்டு முன்னோக்கி வளர்ந்து வருகின்றது. பழங்காலத்தில் மருத்துவர்கள் புதிய மருந்துகளைக் கண்டுபிடித்து தீர்வு நல்லதாக நிரூபித்திருந்தனர். தற்போதும் புதிய புதிய நோய்கள் பரவி வருவதற்கு ஏற்ப நவீன மருத்துவ உதவியுடன் தற்போதைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் பல சோதனைகளுக்குப் பிறகு நல்ல மருந்துகளை சமூகத்திற்கு தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இப்படியான நோய்கள் பரவுவதற்கு காரணம், பலதரப்பட்ட மாசுபாடுகள் நிறைந்த சுற்றுப்புறச் சூழல் தான்.

    மனிதர்களின் மாறுபட்ட உணவு பழக்கவழக்கங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் மாசுபாடு போன்றவை பல புதிய நோய்களை உருவாக்குவதுடன், அந்நோய்களிலிருந்து விடுபடத் தேவையான மருத்துவத் தேவைகளின் அவசியத்தையும் நமக்கு உணர்த்துகின்றன.

    தற்போதைய மருத்துவத் துறையின் சவால்களுக்கு ஏற்றாற்போல் பல புதிய மருத்துவப் படிப்புகளும் அதற்கு நிகராக இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையாக பாடத்திட்டங்களில் பல புதுமைகள் வந்து கொண்டு தான் உள்ளன.

     “காலத்திற்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக்கொண்டால் மட்டுமே இன்றைய போட்டி நிறைந்த உலகில் நம்மால் வாழ்ந்து காட்ட முடியும் என்பதை அனைத்து மருத்துவத் துறையினரும் தெரிந்து செயல்பட்டு வருகின்றனர்.”

    மருத்துவத்துறை பணம் சம்பாதிக்கும் துறையாக அல்லாமல், போகின்ற உயிரைக் காக்கும் புனிதமான, போற்றுதலுக்குரிய பணியாகக் கருதப்படுகின்றது. உயிர் காக்கும் மருத்துவர்களை மக்கள் கடவுளாகவே பார்க்கின்றனர். மருத்துவத் துறையைச் சேவையாகக் கருதி அதனை தனது வாழ்நாள் பணியாக தேர்ந்தெடுக்கும் மாணவர்களை இந்தச் சமூகத்தில் செல்வாக்கு உடையவர்களாகவும், நன்மதிப்பு பெற்றவர்களாகவும் காக்கும் என்பதில் ஐயமில்லை.

    மருத்துவத் துறையில் MBBS, BDS, Nursing, Pharmacy, Physiotherapy, BSMS, BAMS, BUMS & BNMS போன்று பலதுறைபடிப்புகள் உள்ளன.

     தற்பொழுது டாக்டர் MGR பல்கலைக் கழகத்தின் கீழ் இணைவு பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2271 இடங்களும், 11 தனியார் கல்லூரிகளில் 1400 இடங்களும் உள்ளன. இவற்றில் 85% இடங்களைத் தமிழக அரசு பொது கலந்தாய்வு மூலம் ரேங்க் பெற்றமாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கின்றனர்.

    கடந்த ஆண்டின் பொது மருத்துவ மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வில் OC மாணவர்க்கு, 198.25 என்பது Cut-Off மார்க்காக இருந்தது. அதனைத் தொடர்ந்து BC மாணவர்க்கு 197.00 இருந்தது. இதற்கு குறைவாக பெற்றமாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே தேர்வு செய்ய முடியும். அதே வேலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் பல லட்சங்களைத் தாண்டும் என்பதால் ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் அது எட்டாக் கனியாகவே உள்ளது.

    நமது நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குறைவான எண்ணிக்கையிலேயே மருத்துவர்கள் வெளிவருகின்றனர். 120 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி 7 லட்சம் மருத்துவர்களும், 73,000 பல் மருத்துவர்களும், 10 லட்சம் மருத்துவ செவிலியர்களும் தேவைப்படுகின்றனர்.

    ப்ளஸ் டூ  தேர்வில் மருத்துவச் சேர்க்கைக்குத் தேவையான மதிப்பெண்கள் பெற நமது மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில், குறைந்த செலவில் மருத்துவம் படிக்கலாம் என்ற விளம்பரங்களைக் கண்டு, அங்கு சென்று பட்டம் பெறவிருப்பப்படுகின்றனர். நாம் செல்ல விரும்பும் நாடு, படிப்பு மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.

    MBBS கிடைக்கப் பெறாத மாணவர்கள் அத்துடன் தனது மருத்துவக் கனவு கலைந்துவிட்டதென கருதிவிடுகிறார்கள். MBBS அதிக வாய்ப்புகள் கொண்ட பல மருத்துவப் படிப்புகள் இந்தியாவில் உள்ளதை பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை.

    மருத்துவப் பல்கலைக் கழகங்கள் தற்கால மருத்துவத் துறைக்கு ஏற்றாற்போல் பல புதிய படிப்புகளை அறிமுகம் செய்கின்றன. அவற்றில் புதியதாக B.Sc. Radiology, Radio Imaging போன்றவை சிறந்த வேலை வாய்ப்புள்ள படிப்புகளாகக் கருதப்படுகின்றன. மேலும் இந்திய மருத்துவ முறைகளை சித்த, ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற படிப்புகளுக்கு அதிக அளவில் வாய்ப்புகளும், அரசு வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகமாக உள்ளது.

    ஸ்ரீ செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம் தொடர்ந்து 6 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஆலோசனை வழங்கி வருகிறது. மாணவர்கள் சரியான கல்லூரியை, பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். அத்துடன் கல்லூரிகளின் வேலை வாய்ப்பு பாடப்பிரிவுகளின் கடந்த ஆண்டின் கட்-ஆப் மதிப்பெண்கள் மற்றும் கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக்கடன் போன்ற தகவல் அடங்கிய 1700 பக்கமுள்ள கைடு ஒன்றினையும் வெளியிட்டிருக்கிறது. தேவைப்படும் மாணவர்கள் 96553 21216 என்ற எண்ணில் அழைத்து பெற்றுக் கொள்ளலாம்.

    ஸ்ரீ செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம் தொலைபேசி வாயிலாக, கல்வி ஆலோசனை நிகழ்ச்சிகள் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெற்று வருகின்றது. அதைப் பெற மாணவர்கள் 0424 2500073 என்ற எண்ணில் அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் தொடர்பான தகவல்களை

    அடுத்த இதழில் பார்ப்போம்.

    இந்த மாத இதழை