டாக்டர்ஆர். ஈஸ்வரமூர்த்தி
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்,
ரேவதிமருத்துவமையம், திருப்பூர்
எந்தவொரு மிகப்பெரிய செயலும், சிறிய அளவில் இருந்து தான் தொடங்குகிறது என்பதற்கேற்ப சிறிய அளவில் கிளினிக்காக ஆரம்பித்து மிகக் குறைந்த காலத்திலேயே தன்னுடைய சிறப்பான மருத்துவ சேவையின் மூலம் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளவர் இவர்…
உலகத் தரமான சிகிச்சையா? குறைந்த செலவில் சிகிச்சையா? என்று பிரிக்காமல் தரமும் உயர்வாக இருக்க வேண்டும், செலவும் குறைவாக இருக்க வேண்டும். இதில் சமரசமே கூடாது என்று நோயாளிகளுக்கு உலகத் தரமான சேவையை அளித்துக் கொண்டிருப்பவர்…
சிறந்த மருத்துவராக மட்டுமின்றி மிகச்சிறந்த நிர்வாகத் திறனும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர்…
பின்தங்கிய பகுதியாக இருந்தாலும் அங்குள்ள பொதுமக்களுக்கு மிகச்சிறந்த சிகிச்சையைக் கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் வெளிப்பாடாக, திருப்பூரிலேயே பெரிய ஐ.சி. யூனிட் மற்றும் அதிநவீன மருத்துவக் கருவிகள் உள்ள மருத்துவமனையை உருவாக்கியுள்ளவர் இவர்…
திருப்பூரில் உள்ள மருத்துவமனைகளிலேயே நான்கடுக்கு சி.டி. ஸ்கேன், மேúமôகிராம், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்றவற்றை முதன்முறையாக நிறுவியர்…
ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட இலவச ஆம்புலன்சுகளை திருப்பூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைத்து நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சைகள் கொடுக்கும் வண்ணம் தனது மருத்துவமனையை வைத்துள்ளவர்.
இலட்சக்கணக்கான மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையைக் கொடுத்துள்ளவர்… என்று பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ள திருப்பூர் ரேவதி மருத்துவ மையத்தின் தலைவர் டாக்டர் ஈஸ்வர மூர்த்தி அவர்களை சந்தித்து அவரின் வெற்றிப் பயணத்தைப் பற்றி கேட்டபோது அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டது…
உங்களின்இளமைக்காலம்குறித்து…
என்னுடைய ஊர் சோமனூருக்கு அருகில் உள்ள பள்ளபாளையம். அப்பா அமரர் திரு.ராமசாமிக்கவுண்டர், அம்மா திருமதி. கமலாத்தாள் அவினாசிபாளையம், பொங்கலூர் போன்ற பகுதிகளில் இருந்து வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து வாங்கி, வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்து நேர்மையாக வியாபாரம் செய்து வந்தவர். தொடர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்தும் நிமித்தமாக என் அம்மாவின் ஊரான திருப்பூருக்கு குடிபெயர்ந்தோம்.
எல்.கே.ஜி. முதல் 10ம் வகுப்பு வரை திருப்பூர் செயின்ட் ஜோசப் ஸ்கூலில் படித்தேன். தொடக்கத்தில் சுமாராகப் படித்த நான் உயர்நிலைக் கல்விக்கு வரும்போது நன்றாக படிக்க ஆரம்பித்தேன். இதன் காரணமாக 10ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் பள்ளி அளவில் மூன்றாம் இடம் பெற்றேன். தொடர்ந்து மேல்நிலைக் கல்விக்கு திருப்பூரின் புகழ்பெற்ற அரசு பள்ளியான நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். அந்த வருடம் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்வு பெற்றதோடு அல்லாமல் அரசு பள்ளியில் படித்த ஒரு மாணவர் மாவட்டத்திலேயே முதலாவது மதிப்பெண் பெற்ற சிறப்பையும் பெற்றேன். இப்படி ஒரு சராசரி மாணவனாக இருந்த நான் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெறுவதற்கு என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் குறிப்பாக பேராசிரியர் சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய காரணமானவர்கள்.
ஒரு சராசரி மாணவனாக இருந்த நான் முதல் மதிப்பெண் பெறுவதற்கு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி நான் டியூசன் படிக்கச் சென்ற பேராசிரியர் சாமிநாதன் அவர்களும் முக்கியக் காரணமானவர்கள். பேராசிரியர் சாமிநாதன் அவர்கள் தான் எனக்கு கல்வியின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் கிடைக்கும் சிறப்பையும் எனக்கு தெளிவாக உணரவைத்தார். கடின உழைப்பினால் எதையும் சாதிக்க முடியும் என்ற உண்மையையும் எனக்குக் கற்றுக்கொடுத்தார். அவரது அர்ப்பணிப்புடன் கூடிய வழிகாட்டுதல் தான் நான் நல்ல மதிப்பெண் பெறவும் இப்படி ஒரு மருத்துவராக மக்கள் சேவை ஆற்றவும் வழிவகுத்துக் கொடுத்தது. எடுத்துக் கூறியதுடன் எப்படி படிக்க வேண்டும்? எப்படி எழுத வேண்டும்? என்று ஒவ்வொன்றையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அவரது அர்ப்பணிப்புடன் கூடிய வழிகாட்டுதல் மூலம் நல்ல மதிப்பெண் பெற்றேன்.
மருத்துவ நுழைவுத் தேர்வில் 197 கட் ஆப் பெற்றதால் சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
வியாபார பின்புலம் கொண்ட நான் மருத்துவம் படித்தது பெரிய திருப்புமுனை என்றே கூறுவேன். அப்பா வெங்காய வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது என்னுடைய நெருங்கிய உறவினர்கள் நிறைய ‘டையிங்’ தொழிற்சாலையை வைத்திருந்தார்கள். அந்த காலகட்டத்தில் திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்ததால் நான் 12ம் வகுப்பு முடித்தவுடன், என்னையும் பின்னளாடை தொழில் சார்ந்த டையிங் தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என என் அப்பாவும், மாமாவும் நினைத்திருந்தார்கள். இந்நிலையில் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் நான் பெற்ற அதிக மதிப்பெண்கள் அனைவரின் மனதையும் மாற்றி அமைத்தது. அத்தோடு மட்டுமன்றி, என்னைத் தொடர்ந்து படிக்க வேண்டுமென அனைவரும் உற்சாகப்படுத்தினனார்கள். இதன் காரணமாகவே நான் மருத்துவம் படித்து மக்கள் சேவை செய்யும் வாய்ப்பினை பெற முடிந்தது. ஏதாவது ஒரு ‘டையிங்’ தொழிற்சாலையை என்னுடைய பொறுப்பில் கொடுத்துவிட வேண்டும் என்றே நினைத்தார்கள் என் அப்பாவும், என் மாமாவும்.
நான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரியில் இந்தியாவில் பிறந்து உலகப் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களான டாக்டர் ரங்கபாசியம், டாக்டர் வி.பி. பல்ராமன், டாக்டர் சாரதா கதிரேசன், டாக்டர் கல்யாணராமன், டாக்டர் கே.கே. ராமலிங்கம், டாக்டர் சுனிதி சாலமன் போன்றவர்கள் பேராசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கற்ற மருத்துவக் கல்வி என்னை சிறந்த மருத்துவராக மாற்றியது என்பது மறுக்க முடியாத உண்மை மற்றும் மறக்க முடியாத அனுபவம் என்றே கூறுவேன்.
அப்போது என்னுடன் மருத்துவம் படித்த 184 பேரில் ஐந்தாண்டுகளிலேயே முழுமையாக மருத்துவ படிப்பு வெற்றிகரமாக முடித்து வெளியே வந்த 35 பேரில் நானும் ஒருவன். மேலும் 65 சதவீதம் மதிப்பெண்களோடு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து அதே கல்லூரியில் 2 வருடம் குழந்தைகள் நல மற்றும் பொது மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றேன்.
இந்நிலையில் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன். அந்த மதிப்பெண்கள் அனைவரின் மனதையும் மாற்றியமைத்தது. தொடர்ந்து படி என்றே அனைவரும் கூறினார்கள். அதனால் மருத்துவம் படிக்க முடிவு செய்தேன். என் விருப்பத்திற்கேற்ப சென்னை மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தது. அப்போது சென்னை மருத்துவக் கல்லூரியில், டாக்டர் அன்புமணி ராமதாஸ், டாக்டர் செங்கோட்டுவேல், விநாயகா மிஷன்ஸ் டாக்டர் கணேசன், திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களின் மகன், ஆர்காடு வீராசாமி அவர்கள் மகன் என்று 184 பேர் படித்தோம். 6000 பேர் படிக்கும் 175 வருட பாரம்பரியம் கொண்ட சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தது சிறந்த அனுபவமாக இருந்தது.
மூன்றாம் ஆண்டின் முடிவில் 65 பேர் தோல்வியடைந்து 120 பேர் மட்டுமே நான்காம் ஆண்டிற்குச் சென்றோம். ஐந்தாண்டுகள் முழுமையாக மருத்துவப் படிப்பு முடித்து வெளியே வந்த 35 பேரில் நானும் ஒருவன். பின்னர் அதே கல்லூரியில் 2 வருடம் குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சியும் பெற்றேன்.
பணிஅனுபவத்தைப்பற்றிக்கூறுங்களேன்?
மேற்படி மருத்துவ படிப்பை முடித்தவுடன் சென்னையிலேயே இரண்டு மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு எனது மருத்துவ பணியின் துவக்க காலத்தில் தமிழகத்தின் தலைநகரில் பணியாற்றியது என்ற வகையில் எனக்குச் சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. தொடர்ந்து நான் வளர்ந்த ஊரான திருப்பூர் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதை ஆட்கொண்டிருந்தது. இதன் காரணமாக திருப்பூருக்கு வந்து அடுத்தடுத்து அறக்கட்டளைகள் நடத்திய மூன்று மருத்துவமனைகளில் பணியாற்றி ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். தொடர்ந்து அரிமா சங்க மருத்துவமனையில் பணியாற்றி பல்வேறு விதமான மக்களை சந்தித்தது அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை கொடுத்தது என் வாழ்வில் என்றும் நினைவில் நிற்கும் நிகழ்வாகும். குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கும் வாய்ப்பை அந்த அமைப்புகளின் வாயிலாக நான் பெற்றேன். அந்த அனுபவம் தான் பிற்காலத்தில் எனக்கு குறைந்த கட்டணத்தில் சிறந்த தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உந்துதலைக் கொடுத்தது.
தனியாகமருத்துவமனைஆரம்பிக்கவேண்டும்என்றஎண்ணம்எப்போதுஉதித்தது?
வருடம் 1994. திருப்பூரில் உள்ள ஒரு டிரஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு நாள் தங்கள் மருத்துவமனைக்கு வேறு மருத்துவரை பணியமர்த்திக் கொள்ளவிருப்பதால் என்னுடைய சேவையை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
மருத்துவத்துறையில் பின்தங்கியிருந்த திருப்பூர் மக்களுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும்போது அதற்கான மருத்துவக் கருவிகள் உள்ள ஒரு நல்ல மருத்துவமனை திருப்பூரில் இல்லாமல் இருந்தது. அதுபோன்ற ஒரு நல்ல மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு தனியாக இப்போது இருக்கும் மருத்துவமனைக்கு எதிரில் சிறிய அளவில் ஒரு கிளினிக்கை ஆரம்பித்தேன்.
அன்றிலிருந்து தனியாக மருத்துவம் பார்க்கத் தொடங்கினேன். தற்போது இருக்கும் மருத்துவமனைக்கு எதிரில் தான் என்னுடைய முதல் ‘கிளினிக்’கை ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவமும், அதில் சந்தித்த பல்வேறு வகையான மனிதர்களின் சந்திப்பும் என்னை சிறந்த மருத்துவர் என்று மக்கள் மனதில் அடையாளப்படுத்தியிருந்தது அந்தக் காலகட்டத்தில்.
அதனால் நிறைய பேர் சிகிச்சைக்காக வர ஆரம்பித்தார்கள். புதிதாக ஆரம்பித்த ‘கிளினிக்’கில் 24 மணிநேரமும் தொடர்ந்து காலை முதல் நள்ளிரவு வரை 300 – 400 பேர் வரை மருத்துவம் பார்த்தேன். அடுத்தடுத்த மாதங்களில் ‘கிளினிக்’கின் வேகமான வளர்ச்சி நோயாளிகளுக்கு போதுமான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கியது. நிலையை ஏற்படுத்தியது. உடனடியாக மருத்துவமனையை தொடங்க முயற்சிகளை மேற்கொண்டேன். அப்படி உருவானது தான் தற்போது இருக்கும் ரேவதி மருத்துவ மையம்.
குறுகியகாலத்திலேயேஏற்பட்டுவிட்டரேவதிமருத்துவமையத்தின்சாதனைகுறித்து…
எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கான செலவு வெகு குறைவு. எனவே ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். இங்கு வரும் நோயாளிகளில் 60 சதவிகிதம் பேர் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள். இவர்கள் மற்ற மருத்துவமனைக்கு செல்லும் போது ஆகும் செலவைவிட இங்கு சிகிச்சை பெறுவதற்கு ஆகும் செலவு குறைவு தான். ஆனôலும் மருத்துவ சேவையிலும், தரத்திலும் எந்தக் குறைபாடும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
எங்களுடைய அடிப்படைக் கொள்கையே இதுதான். குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை. தரமான சிகிச்சை. இதனை ஒரு புண்ணியமாகவே கருதுகிறேன். இந்த மாதிரி செய்யப்படும் புண்ணியங்கள் ஒரு வட்டம் மாதிரி நமக்கே திரும்ப வரும். அதிக எண்ணிக்கையில், குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதால் இன்னும் அதிகம் பேர் வருகிறார்கள்.
எங்களிடம் சிகிச்சை பெற்று சென்றவர்களின் மதிப்பு வாய்ந்த பரிந்துரைகளினால் ரேவதி மருத்துவ மையத்தின் மதிப்பும், கௌரவமும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கூடுகின்றன. அதைத் தொடர்ந்து மேலும் பல நோயாளிகள் வந்து குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். குறைந்த கட்டணம், தரமான சிகிச்சை என்பதே எங்களின் சாதிப்பிற்குக் காரணம். மக்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையே இந்த சாதனைக்கு முக்கிய காரணம். தவிர எங்கள் மருத்துவ மையத்தின் இருதய துறை நிபுணர் டாக்டர் பார்திபன், நரம்பியல் நிபுணர் டாக்டர் குணசேகரன், மயக்கவியல் நிபுணர் டாக்டர் ராஜா போன்றோரின் சேவையும், செவிலியர்கள், பணியாளர்கள், போன்றோரின் சேவையும் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழக முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்ததற்காக விருதினை எங்கள் மருத்துவ மையம் பெற்றுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு அப்பெல்லோ மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர் செங்கோட்டுவன் தலைமையில் நடைபெற்ற இலவச இருதய நோய் சிகிச்சை முகாம் எங்கள் மருத்துவமனை வரலாற்றில் ஒரு மைல் கல்.
2005ம் ஆண்டு மெட்ராஸ் மெடிக்கல் மெசினோடு இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் 2000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றது மருத்துவ உலகில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.
திருப்பூரில்அமைதியாகசெயல்பட்டுவரும்ரேவதிமருத்துவமையம்ஏழைஎளியவர்களுக்குஒருகலங்கரைவிளக்கமாகமாறியதுஎப்படி?
திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் படிப்பறிவு குறைவானவர்கள் அல்லது படிப்பறிவே இல்லாதவர்கள் என்றே சொல்லலாம். கடுமையான உழைப்பாளிகள், ஆனால் அவர்களின் ஊதியம் குறைவானதாகவே இருக்கும். அதில் சேமிப்பு என்பது முற்றிலும் இருக்காது.
இந்நிலையில் அவர்கள் பெரிய மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் நிலையில் அவர்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அத்தகையவர்களுக்கு ஒரு பெரிய மருத்துவமனையில் கொடுக்கப்படும் தரமான சிகிச்சையைக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு கனவின் வெளிப்பாடு தான் இந்த ரேவதி மருத்துவ மையம்.
முதலில் சிறிய அளவில் தொடங்கிய இந்த மையம் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வின் மூலம் அனைத்து அடிப்படை கட்டமைப்புடன் கூடிய அனைத்து வசதிகளும் நிறைந்த மருத்துவமனையாக உருவெடுத்தது. அந்த நெஞ்சை நெகிழச் செய்யும் நிகழ்வு, ஒருநாள் காலை 9.30 மணி அளவில் ஒரு ஏழை தொழிலாளி ‘பார்பர்’ தனக்கு நெஞ்சில் அங்கிருந்து 2 பர்லாங்கு தொலைவில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்று எரிச்சல் இருப்பதாக என் மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதித்து பார்த்த நான் அவரிடம், தனியார் திரையரங்கிற்கு அருகில் உள்ள பரிசோதனை சென்டருக்கு சென்று ஒரு ECG எடுத்து வாருங்கள் என்று கூறினேன். அதற்கு ‘அய்யா, நான் இன்று வேலைக்குச் சென்றால் 1000 ரூபாய் சம்பாதிக்க முடியும். அதை விட்டுவிட்டு நான் ECG எடுத்துக்கொண்டு வந்து சிகிச்சை பெறும் நிலையில் இல்லை. உங்களால் முடிந்தால் இந்த மருத்துவமனையில் பரிசோதித்து எனக்கு சிகிச்சையளியுங்கள். இல்லை என்றால் நான் வேலைக்குச் சென்று விடுகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அப்போது எங்களிடம் ECG கருவி இல்லாததால் அவரை பரிசோதிக்க முடியாமல் அனுப்பி விட்டோம். பகல் 12.30 மணி அளவில் அதே மனிதரை எங்கள் மருத்துவமனைக்கு எடுத்து வந்தார்கள், உயிர் இருக்கிறதா என்று பரிசோதிக்க, பெரிய அதிர்ச்சி எனக்கு. காலையில் உயிருடன் வந்தவர், மூன்று மணிநேரத்தில் உயிரற்ற சடலமாகிவிட்டார். இருந்தார்.
இந்த நிகழ்வு எனக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது க் கேட்டது. இதயத்தை பலமாக அதிர வைத்த இந்த நிகழ்விற்குப் பின்னர் பல திட்டங்களை வரையறுத்தேன். உடனடியாக ஒரு ECG மெசினை வாங்க முடிவு செய்தேன். தாமதிக்காமல் அடுத்த நாளே ஒரு மெசினை வாங்கினேன்.
ECG மெசின் மட்டும் என்னிடம் அன்று இருந்திருந்தால் அந்த ஏழைத் தொழிலாளியைக் காப்பாற்றியிருக்கலாம் என்ற என்னுடைய ஏக்கம் தான் என் மருத்துவமனையில் அனைத்து உயிர் காக்கும் அடிப்படை கருவிகளையும் நிறுவச் செய்தது. மேலும் எல்லா தரமான மருத்துவக் கருவிகளையும் மருத்துவமனையில் நிறுவினேன். தொடர்ந்து வற்றையும் தரப்படுத்தினேன். மருத்துவமனைகளில் உள்ள பல்வேறு பிரிவுகள், கருவிகள், சேவைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டது. இப்போது அனைத்து வசதியும் நிறைந்த ஒரு மருத்துவ மையமாக 24 மணி நேரமும் செயல்படுகிறது.
ஒருமருத்துவராகஇருப்பதற்கும், மருத்துவமனையைநிர்வாகம்செய்யும்நிர்வாகியாகஇருப்பதற்கும்உள்ளவேறுபாடுகளைஎப்படிஎடுத்துக்கொள்கிறீர்கள்?
கண்டிப்பாக நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. மருத்துவராக எத்தனை நோயாளிகள் வந்தாலும் சிகிச்சையளித்துவிட முடியும். ஆனால் ஒரு சிறந்த நிர்வாகத்தைக் கொடுப்பது என்பது மிகவும் சவாலான காரியம். ஆனாலும் செய்து வருகிறேன். அதற்கு உதவியாக என்னிடம் இருக்கும் தன்னம்பிக்கையும், உடனடியாக கற்றுக்கொள்ளும் பழக்கமும், அப்பா, அம்மாவிடம் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொண்ட கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும், சரியான நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
பணி நிமித்தம் உடனடியாக முடிவை எடுத்துவிடுவேன். தொலைநோக்குப் பார்வை இருப்பதால் சின்னச்சின்ன விசயங்களைக் கூட கருத்தில் கொண்டு முடிவு செய்வேன். அதனால் தான் நிர்வாகத்தில் பிரச்சனை இன்றி செல்கிறது. மேலும் வரவு, செலவு நோயாளிகள் மற்றும் பொதுமக்களை உபசரிப்பது போன்றவற்றை எனது மனைவி பார்த்துக் கொள்வதால் நிர்வாகத்தை சிறப்பாக நடத்த முடிகிறது.
பெரியநகரங்களில்இருக்கும்மருத்துவமனைக்கும், திருப்பூர்போன்றசிறியநகரங்களில்இருக்கும்மருத்துவமனைக்கும்உள்ளவேறுபாடு?
சிகிச்சையளிப்பதில் எந்த மாறுபாடும் இல்லை. ஆனால் பொதுமக்கள் மனதில் பெரிய நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் தான் சிறப்பான சிகிச்சை கிடைக்கும் என்ற தவறான எண்ணம் நிலைகொண்டுள்ளது.
பெரிய மருத்துவமனைகளில் இருக்கும் அனுபவம் குறைந்த டாக்டர்கள் சொல்வதைக் கேட்கும் அவர்கள் எங்களைப் போன்ற சிறிய மருத்துவமனையில் அதிக அனுபவம் பெற்ற டாக்டர்களான நாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை. இந்நிலை மாறவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது மாற வேண்டும் என்பதே என் கருத்து. மேலும் நாங்களும் பெரிய நகரங்களின் மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்குக் கூட பல்வேறு சவாலான நேரங்களில் சிகிச்சையளித்து பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். ஆனால் சிறிய நகரங்களில் மருத்துவமனையாக இருப்பதால் அதற்கான அங்கீகாரம் எங்களுக்குக் கிடைப்பதில்லை… கண்டிப்பாக இதை எங்கள் மருத்துவமனை மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
முதன்முதலாகஆன்லைனில்‘சி.டி. ஸ்கேன்ரிப்போர்ட்’பெற்றுசிகிச்சையளித்ததாகக்கேள்விப்பட்டோம். அதைப்பற்றி…
பொதுவாக ‘சி.டி. ஸ்கேன் ரிப்போர்ட்’ கொடுப்பதற்கு குறைந்தபட்சம் 6 மணி நேரத்தையாவது எடுத்துக்கொள்வார்கள். ரிப்போர்ட் கிடைத்தவுடன் தான் மேல் சிகிச்சைக்குச் செல்ல முடியும் என்ற நிலையில் காலதாமதம் பெரிய நெருக்கடியைக் கொடுத்தது. அப்போதுதான் என்னுடைய நண்பரும் டாக்டருமான சேலத்தில் ரேடியாலிஜிஸ்ட்டாக பணியாற்றும் ஈ. ரவி, சி.டி. ஸ்கேனைப் பார்த்து பரிசோதித்து உடனடியாக ஆன்லைனில் ரிப்போர்ட்டை அனுப்பிவிடுவார். அதிகபட்சம் 3 நிமிடங்களில் ‘சி.டி. ஸ்கேன் ரிப்போர்ட்’ எங்களுக்குக் கிடைத்துவிடும். அதனால் விரைவாக, மேல்சிகிச்சையைத் தொடர முடிகிறது.
இந்த முயற்சிக்குப் பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்பட்டன. சட்டத்தின்படி இந்த ‘ரிப்போர்ட்’ செல்லத்தக்கது அல்ல… பின்னால் ஏதாவது பிரச்சனை வந்தால் சட்டச்சிக்கல் ஏற்படும் என்றெல்லாம் கூறினார்கள். ஆனாலும் நாங்கள் இந்த முறையைத் தொடர்ந்தோம். தற்போது எலக்ட்ரானிக் கையெழுத்து (Electronic Sign) சட்டப்படி செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது எங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்.
ரேவதிமருத்துவமையத்தின்சமூகசேவைகுறித்து?
பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்தும், ரோட்டரி, அரிமா போன்ற சங்கங்களுடன் இணைந்தும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையளித்து வருகிறோம். இதுவரை சுமார் 2000க்கும் மேற்பட்ட சிறப்பு இலவச மருத்துவ முகாம்கள் (Special Camp) நடத்தி இலட்சக்கணக்கான மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கி உள்ளோம். வசதியைக் கொடுத்திருக்கிறோம்.
ரேவதி அறக்கட்டளை மூலம் திருப்பூருக்கு அருகில் உள்ள மங்கலம் மற்றும் பூளுவபட்டியில் சிறிய அளவிலான மருத்துவமனையை நிறுவி அங்கும் சிகிச்சைக்கான வசதியை செய்து கொண்டும் இருக்கிறோம். திருப்பூரில் பத்துக்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைகயில் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்து விபத்துக் காலங்களில் சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களைக் காப்பாற்றியதற்காக தமிழக கவர்னரின் பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளோம். ரோட்டரின் சங்கத்தின் சார்பில் எனக்கு வழங்கப்பட்ட தொழில் முறை இளம் சாதனையாளர் விருது எங்கள் மருத்துவமனையின் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். இனியும் இதே சேவையைத் தொடருவோம்.
மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சையளித்தும், திருப்பூருக்கு அருகில் உள்ள பூளுப்பட்டியில் ஒரு கிளினிக்கை ஏற்படுத்தி அங்கும் இலவச மருத்துவ வசதியைச் செய்து கொடுத்துக்கொண்டும் இருக்கிறோம். ரேவதி மருத்துவ மையம், விபத்து காலங்களில் சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களைக் காப்பாற்றியதைத் தமிழக கவர்னர் அவர்கள் பாராட்டி பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். இதற்காக
ரோட்டரி சங்கத்தின் சார்பிவாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றிருக்கிறேன். எங்களின் சீரான சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமே இது எனக் கருதுகிறேன்… தொடர்ந்து இதே சிகிச்சையைக் கொடுப்போம்.
பல்வேறுவேலைப்பளுகளுக்கிடையிலும்தொடர்ந்துபடிக்கிறீர்களே… எப்படி?
பொது மருத்துவம் முடித்த நான் தற்போது பல்வேறு சிறப்பு பட்டயப் படிப்புகளை முடித்திருக்கிறேன். அதற்குக் காரணம் புதிய விசயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீராத ஆர்வம் தான். குறிப்பாக ‘ஐ.சி.யு. கிரிட்டிகல் கேர்’ (ICU Critical Care) சம்பந்தமாக ஒரு வகுப்புக்கு அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற போது பல ஆக்கப்பூர்வமான விசயங்களை, புதிய விசயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஏற்கனவே அவசர சிகிச்சைப் பிரிவில் சிறிது அனுபவம் பெற்றிருப்பதால், புதிதாக அவர்கள் கற்றுத்தந்தவை சொல்லித்தரும் விசயம் எனக்கு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் இதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவம், குடும்ப நலம் போன்ற பல்வேறு பிரிவுகளில் பட்டயப் படிப்புகளை முடித்திருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் புதிய விசயங்களைக் சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தான்.
குடும்பத்தினரின்ஒத்துழைப்புகுறித்து…
என்னுடைய மனைவி ரேவதி , மருத்துவமனையை நிர்வகிப்பதில் மிகப்பெரிய பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இரண்டு குழந்தைகள். எனது பெரிய மகன் விஷ்ணு ராகவா ‘கிரின் பார்க்’ பள்ளியில் பதினொன்றாம் வகுப்பும், சிறிய மகன் பிரனவ் 9ம் வகுப்பும் ஊட்டியில் உள்ள பள்ளியிலும் படிக்கிறார்.
ரேவதிமருத்துவமையத்தின்எதிர்காலத்திட்டம்என்பது…
எந்த ஒரு புதிய செயலில் இறங்கும்போதும் நீண்டகால தொலைநோக்கோடு தான் திட்டமிடுவேன். எனவே குறுகிய காலத்தில் அதிநவீன சிகிச்சைகளான ஏன்ஜியோகிராம், ஏன்ஜியோ பிளாஸ்டர், டையாலிஸிஸ், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற வசதிகளை எங்கள் மருத்துவமனையிலேயே ஏற்படுத்துவது. மேலும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கான தனிப்பிரிவுகளை உருவாக்கி கதிர்வீச்சு சிகிச்சை போன்ற அதிநவீன சிகிச்சைகளையும் எங்கள் மருத்துவமனையிலேயே ஏற்படுத்துவது. மேற்குறிப்பிட்ட இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றி திருப்பூர் மக்களுக்கு திருப்பூரிலேயே உலகத்தரம் உள்ள சிகிச்சையை குறைவான செலவில் ரேவதி மருத்துவ மையத்திலேயே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுவே எங்கள் எதிர்காலத்திட்டம்.
திட்டத்துடன் ‘பெரியதாக குறி வை’ என்ற தத்துவத்தைப் பின்பற்றியே தான் செல்வேன். என்னுடைய எதிர்காலத் திட்டம், நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை மிகக்குறைந்த செலவில் கொடுக்க வேண்டும். அந்த உயர்ந்த நோக்கத்தை நோக்கியே என்னுடைய திட்டம் அமைந்திருக்கிறது. தற்போது இரண்டு விதமான திட்டங்களை வகுத்திருக்கிறேன். 1. குறுகிய காலத்தில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள். 2. நீண்ட காலத்தில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள்.
குறுகிய காலத்தில் (ஓராண்டுக்குள்) ஏன்ஜியோகிராம், ஏன்ஜியோ பிளாஸ்டர், டையாலிஸிஸ், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற வசதிகளை ஏற்படுத்துவது.
நீண்டகாலத்தில் (5 ஆண்டுகளில்) புற்றுநோய்க்கான சிகிச்சையளிக்க தனியாக ஒரு கட்டிடம் (Cancer Block) அதில் புற்றுநோய் கதிர்வீச்சு மற்றும் புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவம் கொடுக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவது.
இந்த இரண்டு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால் நோயாளிகள் மிகச்சிறந்த உலகத்தரமான சிகிச்சையைக் குறைந்த செலவில் ரேவதி மருத்துவ மையத்திலேயே பெற முடியும்.
வளர்ச்சிக்காலம்
ரேவதி மருத்துவ மையத்தின் வெற்றிப்பயணத்தில் சில மைல் கற்கள் இவை:
1994ல் சிறிய அளவில் ‘கிளினிக்’ தொடங்கப்பட்டது.
2001ல் 20 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டது.
2005ல் 5 மாடி கட்டிடமாகவும், 75 படுக்கைகள் கொண்ட குறைந்த செலவு மருத்துவமனையாக மாறியது. அப்போது சி.டி. ஸ்கேன். ரத்த வங்கி, நவீன தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, இருதய நோய் பிரிவு, நரம்பியல், எலும்பு முறிவு, விச முறிவு, குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு, லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை தொடங்கப்பட்டன.
2006ல் – சி.டி. ஸ்கேன், இரத்த வங்கி கொண்ட மருத்துவமனையாக விரிவடைந்தது.
2013ல் தீவிர சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், இதய நோய் பிரிவு கொண்ட மருத்துவ மையமாக விரிவடைந்தது.
2013ல் 150ஆக படுக்கைகளுடன் வசதிகள் அதிகரிப்பதுடன் பல்வேறு சிறப்பு பிரிவுகள் மற்றும் அதிநவீன உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கருவிகளுடன் விரிவுபடுத்தப்பட்டது. கொண்ட மருத்துவ மையமாக மாறுவதற்குத் தேவையான கட்டமைப்புடன் கூடிய 5 மாடிக் கட்டிடம் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டது.
ரேவதிமருத்துவமையத்தில்அளிக்கப்படும்சிலசிறப்புசிகிச்சைகள்
கருவுற்ற 4 மாதம் முதல் குழந்தை பிறக்கும் வரை ஆகும் பிரசவ கால செலவுகள் அனைத்துக்கும் ரூ.4500 மட்டுமே.
இ.எஸ்.ஐ. சந்தாதாரர்களுக்கு அனைத்துவிதமான சிகிச்சையும் இலவசமாக செய்யப்படுகிறது.
நெசவாளர்கள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை கொடுக்கப்படுகிறது.
உலகத் தரம் வாய்ந்த முழுமையான உடல் பரிசோதனை ( ) மிகக் குறைந்த செலவில் செய்யப்படுகிறது.
இரத்த வங்கி ஏற்படுத்தியதன் நோக்கம்:
2003-04ம் ஆண்டுகளில் சாலை விபத்தில் கடுமையான காயங்களுடன் வருபவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கும்போது அவர்களுக்குத் தேவையான இரத்தம் கிடைப்பது அரிதாக இருந்தது. உடனடியாக தேவைப்படும் ரத்தம்கூட கோவை மாநகரில் இருந்துதான் வாங்கிவர வேண்டிய சூழ்நிலை.
இரத்தம் பெறுவதில் ஏற்பட்ட இந்த காலதாமதத்தால் சாலை விபத்தில் காயமுற்றவர்களை காப்பாற்றுவதில் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு ரேவதி மருத்துவ மையத்திலேயே இரத்த வங்கியை ஏற்படுத்தினால் அவசர காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், 2005ம் ஆண்டில் இரத்த வங்கி ஏற்படுத்தப்பட்டது.
தற்போது திருப்பூர் மாவட்டத்தில் இரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக கிடைக்கச் செய்து வருகிறது ரேவதி மருத்துவமனை.
அளிக்கப்படும்சிகிச்சைகள்:
மாரடைப்பு, பக்கவாதம், மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு, விபத்து அவசர சிகிச்சை, லேப்ராஸ் கோபிக், சர்க்கரை நோய், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, சிறுநீரகக் கல், சதை வளர்ச்சி, விசமுறிவு சிகிச்சை, குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை என்று அனைத்து விதமான சிகிச்சைகளும் உலகத் தரமான முறையில் அளிக்கப்படுகிறது.