வலதும் இடதும்
ம் பிள்ளைகளை அறிவாளிகளாக்குவதை விட புத்திசாலிகளாக்குவது மிகவும் சிறப்பானது என்று பார்த்தோம். அப்படி புத்திசாலிகளாக்க நாம் நம் மூளையின் அற்புதமான இரு தன்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் மூளையை வலது மற்றும் இடது பகுதிகளாக பகுத்துப் பார்க்க முடியும். நம் வலது மூளை புதியதை ஆராய்ந்துக் கண்டறியும் (Creative) விதமாகவும், இடது மூளை கணக்கிடும் (Logic) விதமாகவும் விளங்குகிறது. வலது மூளையானது எதையும் ஆராய்ந்துதான் ஏற்றுக் கொள்ளும். கற்பனாசக்தி அதிகமாக இருக்கும். ஆனால், இடது மூளையானது புள்ளி விவரங்களை இணைத்து அல்லது பொருத்திப் பார்த்து லாஜிக்கலாக ஒத்து வருவதைத்தான் ஏற்றுக் கொள்ளும். வலது மூளைத் தன்மையை அதிகம் பயன்படுத்தி வாழ்பவர்கள்தான் அறிவியல் கண்டு பிடிப்புகளை உலகிற்கு அளிக்கும் விஞ்ஞானிகள்.
இடது மூளைத் தன்மையை அதிகம் பயன்படுத்தி வாழ்பவர்கள் கணினி மற்றும் கணித வல்லுனர்கள், மேலாண்மை (Management) புரிபவர்கள் மற்றும் வாதம் புரிபவர்கள் (Advocate) ஆகியோர்கள்.
நம் மூளையை ஒரே விதமாக பயன்படுத்துவதால், வாழ்க்கைச் சிக்கல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அதீதமாக ஆராய்ச்சி செய்து புதியதைக் கண்டறிய முனையும் விஞ்ஞானிகள் வாழ்க்கையின் இறுதிக் காலங்களில் ஞாபக மறதி (Alzhimer’s Disease) நரம்பிழுப்பு (Paralysis) மற்றும் மூளைச் செயலிழப்பு (Coma) நோய்களுக்கு ஆளாகிறார்கள். அதே போல் கணித மூளையை அதீதமாக பயன்படுத்தும் கணினி வல்லுனர், கணித வல்லுனர்கள் (Auditors) வழக்குரைஞர்கள் (Advocates) உள்ளிட்டோர் வாழ்வின் இறுதிக் காலங்களில் மூளை பிறழுதலுக்கு (Mental Problems) ஆளாக நேரிடுகிறது. அதிக ஆராய்ச்சி தன்மையில் இருப்பவர்கள் அவ்வப்போது கணித மூளையைப் பயன்படுத்தும் விதமாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, இவர்கள், தங்களுக்குப் பிடித்தமான கவிதை அல்லது இசையைக் கேட்கலாம். அதே போல, சதா கணக்கு பண்ணுவதே கதி எனக் கிடக்கும் கணித மூளைத் தன்மையாளர்கள் தங்கள் கிரியேட்டிவ் மூளைக்கு வேலைக் கொடுக்க, புதிய இடங்களுக்குப் போவது, புதிய நபர்களைச் சந்திப்பது போன்றவற்றை கையாளலாம். இதன் மூலம் இவர்களின் இடது மூளைக்கு ஓய்வு தரலாம்.
நம் பிள்ளைகளின் புத்திசாலித் தனத்திற்கு இந்த வலதும் இடதும் எப்படி உதவும் என்று இனி பார்ப்போம். நம் பிள்ளைகளில் சிலர் கணிதம், இலக்கணம் ஆகியவற்றில் புலிகளாக இருப்பர், ஆனால், மற்ற பாடங்களில் குறிப்பாக அறிவியல் பாடத்தில் திணறு வார்கள். இவர்களுக்கு லாஜிக் புரியும், ஆனால் கிரியேட்டிவிட்டி குறைவாக இருக்கும். அதே போல், சில பிள்ளைகள் கணக்கு என்றால் வேப்பங்காயாக கசக்கும், ஆனால் அறிவியல் சமூகவியல் பாடங்களை வெளுத்து வாங்குவார்கள். இவர்களுக்கு லாஜிக் புரியாது, ஆனால், கிரியேட்டிவிட்டி அதிகமிருக்கும். இவ்வித பிள்ளைகள் இரண்டு தன்மைகளிலும் சிறப்பாக விளங்க நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், குறைவாக உள்ள மூளைத் திறனை அதிகரிக்க வழி காண வேண்டும்.
கணிதத்தில் மக்காக இருக்கும் குழந்தைக்கு கணித மூளையை உசுப்பும் பயிற்சியைக் கையாள வேண்டும். உதாரணமாக, பிடித்தமான மெல்லிசை கேட்டல், கீபோர்டு வாசித்தல், செஸ் விளையாடுதல், பேச்சாற்றல் வளர்த்தல் மற்றும் கவனம் ஈர்த்தல் விளையாட்டுக்களை விளையாடுதல் ஆகியவற்றை அவர்கள் பயிற்சி செய்யலாம். இவர்களுக்கு மூளைச் சூட்டிகையை அதிகரிக்கும் ஒமேகா-3 (Omega-3) கொழுப்புச் சத்துணவைக் கொடுக்க வேண்டும். அப்புறம் மலர் மருந்தில், வைட் செஸ்நட் (White Chestnut) மருந்து கொடுப்பதன் மூலம் கணிதத்திறன் மேம்படும்.
அடுத்து, கிரியேட்டிவிட்டி குறைவாக உள்ள குழந்தைகளைப் புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்ய வலியுறுத்தி அவர்களை கட்டாயப்க் படுத்தினாலும் அவர்களால் திறமையாக படிக்க முடியாது. அவர்களின் கிரியேட்டிவிட்டியை அதிகரிக்க வழி காண வேண்டும். உதாரணமாக, இயற்கையை இரசிக்கப் புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், புதிய நபர்களை அறிமுகப் படுத்துதல், புதுக் கவிதை மற்றும் கதை எழுதத் தூண்டுதல், புதிய முயற்சிகளைப் பாராட்டுதல் மற்றும் புதிய முயற்சிகளுக்கு வழியேற்படுத்துதல் ஆகியவற்றைச் செய்யலாம். கிரியேட்டிவிட்டியை அதிகரிக்க ஜின்சங் தாவரச் சத்து கொடுக்க வேண்டும். மலர் மருந்தில் கற்பனா சக்தியை அதிகரிக்கும் கிளமேட்டிஸ் (Clematis) மருந்து கொடுக்கலாம்.
ஆண் குழந்தைகள் இயல்பிலேயே புதியவற்றைக் கண்டறிய ஆர்வமும் (Creativity), பெண் குழந்தைகள் கணிதத் திறனில் (Logic) ஆர்வமும் இருக்கும். இது எதிர் விதமாக இருப்பின், இவர்களின் திருமண வாழ்க்கையில் இல்லற இணக்க பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அதே சமயம், இரு மூளைத் தன்மைகளையும் சமமாக வைத்திருக்கும் பிள்ளைகள் சம்பாத்தியத்திலும் இல்லற வாழ்க்கையிலும் சிறந்து விளங்குவர். அன்பு நண்பர்களே! இல்லற வாழ்க்கையில், அன்பு பிணைப்பு நிலைக்க கணித மூளையும், இல்லறம் இனிக்க கிரியேட்டிவ் மூளையும் அவசியம் தேவை. இல்லறவாழ்க்கையில், பெண் அடிப்படையாக லாஜிக் பார்க்கும் தன்மையால் உறவுகளை (Relationship) மேம்படுத்தும் விதமாகவும், ஆண் அடிப்படையாக ஆராயும் தன்மையால் பணம் தேடும் விதமாகவும் இருக்கிறார்கள். இதைப் புரிந்து ஆண் பெண் உறவு நிலைகளை கையாளக் கற்றுக் கொடுப்பது நலம்.
நம் பிள்ளைகளுக்கு வெறும் ஆராய்ச்சி தன்மைகளை மட்டும் வளர்த்து விட்டால், தேடல் மட்டுமே வாழ்க்கையாகி விடும். குடும்பம், அன்பு பொறுப்பு ஆகியவற்றுக்கு இடம் தரமாட்டார்கள். அதே போல், வெறும் லாஜிக் மூளைத் தன்மையை வளர்ப்பதன் மூலம் எல்லாவற்றுக்கும் பேரம் பேசுவது மட்டுமே நிகழும். அன்பு பெற்றோர்களே! வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க கிரியேட்டிவிட்டி மூளையும், அதை நிர்வகித்து (Management) நிம்மதி காண லாஜிக் மூளையும் தேவைப்படுகிறது. பணம் பெருக்கும் வழிகளை அறிய கிரியேட்டிவிட்டி மூளையால் மட்டுமே சாத்தியம். எல்லோரும் செய்வதையே நாமும் செய்தால் போட்டி நிலையைச் சந்திக்க வேண்டியதிருக்கும். பயனுள்ள புதிய வழிமுறைகளைக் கையாண்டால், போட்டி வருவதற்குள் சம்பாத்தியம் செய்துவிட முடியும். மேலும் நம் சம்பாத்தியம் நிலைத்திருக்கவும் கிரியேட்டிவிட்டி தேவைப்படுகிறது. அதேசமயம், சம்பாதிப்பதோடு, அல்லாமல் நேர நிர்வாகம் (Time management), பணமேலாண்மை (Money Management), உறவு நிலை மேம்பாடு (Relationship development), மற்றும் சமுதாய நல்லிணக்கம் (Social intelligence) ஆகியவற்றிற்கு லாஜிக் மூளை தேவை. ஆக, இரு மூளைத் தன்மைகளையும் சமமாக கையாள்பவர்களே வாழ்க்கையில் முழு வெற்றி பெறுகிறார்கள்.
0 comments Posted in Articles