ஒருவர் நாள்தோறும் இரண்டுமூன்று தடவைகள்மட்டும் சிறுநீரர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பாரேயானால், எந்த மாதிரியான துன்பங்களெல்லாம் ஏற்படும் என கடந்த மாத இதழில் கண்டோம்.
அவ்வாறானால், நாள்தோறும் இருபது முப்பது முறைகள் ஒருவர் சிறுநீர் கழிப்பாரானால், யாது நடக்கும் எனக் கேட்பது முறையான கேள்வியாகும்.
ஒருவிதத்தில் நோக்கினால், இத்தனை தடவைகள் என்பது ‘அளவுக்கு மிஞ்சி’ என்றாகிவிடும். உண்மையில், இது ஒரு நோயாகும். இதனைக், ‘கட்டுப்படுத்த இயலாத அதிக மூத்திர வெளியேற்றம்’ எனும் பொருள்படும் “பாலியூரியா” (Polyurea) என்ற சொல் மருத்துவ நூல்களில் காணப்படும்.
ஒருவர் நாள்தோறும் நாலைந்து லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, அதனை வியர்வையாக வீணடிக்காது, அவ்வளவையும் சிறுநீராகக் கழிப்பாரேயானால், அவர், ஏறத்தாழ 20 தடவைகள் (நோயேதுமில்லாது) சிறுநீர் கழிக்கக்கூடும்.
இவ்வாறு நிறைய வெளிச்செல்லும் சிறுநீரில் ஒரு பகுதி, உடம்பிலிருந்து வெளித்தள்ளப்படவேண்டிய மிகைப்பட்டனவற்றையும் நச்சுப்பொருட்களையும் நிறைவாக வெளித்தள்ளும்.
அதன்பிறகு, மீதமுள்ள சிறுநீர், நமது உடலுக்குத் தேவையான நல்ல பொருட்களையுங்கூடக் கரைத்து வெளித்தள்ளிவிடும்.
இவ்வாறு நிகழும்போது, நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் குறைந்து, அதனால் சில கோளாறுகள் ஏற்படும்.
உடல் மெலிந்துபோவது, அத்தகைய ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படக்கூடிய கோளாறுகளில் முக்கியமான ஒன்றாகும். இதனால்தான், சிலர், நாம் முதன் முதல் கண்டதுபோன்ற “எலும்பும்-தோலுமாய்” (Skeletal type) இருக்க நேருகிறது.
வற்றி-வறண்டுபோயுள்ள, மிகவும் மெலிவான ஒருவரைக் காணும்போது, “நீங்கள் நாள்தோறும் (24 மணிநேரத்தில்) எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்?” “ஒரு நாளைக்கு எத்தனை தடவைகள் சிறுநீர் கழிக்கிறீர்கள்?” என்று கேட்டுப் பாருங்கள்.
தாம் நாலைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பதாகவும், 15 தடவைகளுக்குமேல், 20 அல்லது கூடுதல் தடவைகள் சிறுநீர் கழிப்பதாகவுமே அவர் கூறுவார். நான் இங்கு கூறுவதை இதுவே மெய்ப்பித்துவிடும்.
இத்தகையோருக்கு உடல் மெலிவது மட்டுமல்லாது, வேறு சில சிறு-சிறு உடல் நலக் குறைபாடுகளும் ஏற்படும்.
குடற்புண் (Duodenal Ulcer), கண்ணாடி அணியவைக்கும் பார்வைக் குறைபாடுகள், அடிக்கடி ளிதில் அழுதுவிடும் மனப்பான்மை, பொய்சொல்லாத்தன்மை, தவறிழைக்காமை, ‘அனைத்தையும் மிகச்சரியாகச் செய்யவேண்டும்’ என்ற “Perfectionist” மனப்பான்மை, முதலியன), நெஞ்சுப்படபடப்பு, தலைமுடி நரைத்தல், மிகுதியாக முடி கொட்டுதல், காமம் கூடுதல், பெண்களாயின் கைகால்களில் முடிமுளைத்தல், மீசை முளைத்தல், மாதவிலக்குக் கோளாறுகள், கற்பந்தரித்தொர்க்கு அது கலைந்துவிடுதல், போன்றவை நிகழக்கூடும்.
சிறுநீர் கழிக்காதோர் – மிகுதியாகக் கழிப்போர் ஆகிய இரு சாராரிடையேயும் உடல்நலத்தில் மட்டுமல்லாது, மனநிலையிலும் கெட்ட, அல்லது நல்ல மாற்றங்கள் ஏற்படுவதையும் நான் பதிவுசெய்துள்ளேன்.
முன் கோபம் ஏற்படுவது, உணர்ச்சி வயப்படுவது போன்றவையெல்லாம் மனநிலை சார்ந்த மாற்றங்கள்தாம்.
இவற்றிற்கெல்லாம் காரணம், மூளையில் நஞ்சுகள் குவிந்துவிடுவது, அல்லது சத்து நீக்கத்தால் ஏற்படும் மிக முக்கியமான சத்துக்குறைபாடுகள்தாம்.
சத்துக் குறைபாட்டால் ஏற்படுவனவற்றைக் காட்டிலும், நச்சுக் குவியன் காரணமாக ஏற்படும் மனநிலைக் கோளாறுகள்தாம் மிகவும் கொடூரமானவையாக அமைகின்றன.
1980-1981-ஆம் ஆண்டுக் காலத்தில், நான் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டியாகோ நகரத்துப் பல்கலைக்கழகத்திற்கு, வருகைதர பேராசிரியராகச் சென்றிருந்தேன். அதுசமயம், அறிவியல் முனைவர் பட்டத்திற்கான ஓர் ஆராய்ச்சித் தொகுப்புநூல் ஒன்று எனது மதிப்பீட்டிற்காகத் தரப்பட்டது.
ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதிகளின் தலைமுடியில், ஆர்சீனிக் நஞ்சு, பித்தளை போன்ற, கடினநிலைத் தன்மைகொண்ட உலோகப்பொருட்களின் அளவு அளவுக்கு மிஞ்சியும், குற்றமிழைக்காதோரின் தலைமுடியில் இத்தகைய நச்சுப் பொருட்கள் மிக, மிகக் குறைவாகவும் (அல்லது இல்லாமலும்) இருப்பதை அந்த ஆய்வாளர் முதன்முதலில் கண்டுபிடித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள இணைப்பேராசியை மரீனா முகம்மது அரிப்பின் என்ற ஒருவர், இதனையே இப்போது மறுஉறுதிப்படுத்தியுள்ளார். அதற்காக அவருக்கு, சோல் நகரில், புதிய கண்டுபிடிப்பிற்கான தங்கப் பதக்கம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.எனவே, சிறுநீர் சரிவரக் கழிக்காதிருந்து, அதன்வழி உடம்பினுள் கூடாப்பொருட்கள் மிகுதியாகச் சேர்ந்து, அவை மூளையில் உறைவதின் காரணமாகத், தடித்த உடம்புடைய மக்களது மன நிலையில் கேடுகள் மிகுந்த எண்ண அலைகள் ஏற்படுகின்றன என்ற எனது கண்டுபிடிப்பு, தவறேதுமில்லாது சரியானதாக அமைந்துள்ளது.
கோலாலம்பூரில் உள்ள திருமதி ஷெல், இங்குள்ள நடராசன் என்பவர், கோவையில் உள்ள “வேவ்டெல் மொபைல் மால்” எனும் நிறுவனத்தையுடைய திரு. சந்திரசேகர் சக்ரவர்த்தி என்பார் போன்ற பற்பலரும் இத்தகைய ஆய்வில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு, எனது கண்டுபிடிப்புக்களை மீண்டும் மீண்டும் மறுஉறுதிப்படுத்தியுள்ளனர்.
எனது ஆய்வின்படி, தடித்த உடலைத் தங்களது 25, 30 வயதுமுதல் பெறுவோரின் உடல் / மனநிலையில், அவர்களது 40 அல்லது 45 வயதிற்குப் பிறகுதான் கேடுகள் நிறைந்த மாற்றங்கள் ஏற்படுவதாகத் தெரிகிறது.
இளவயதினரிடையே இனிப்புநீர் நோய் தோன்றினாலுங்கூட, மாரடைப்புநோய் ஒருவது 48 வயதையொட்டித்தான் பெரும்பகுதியனருக்கு ஏற்படுகின்றது.
தடித்துப் பெருத்த உடலை உடைய இளவயதினரிடையே (எ.கா: 15 முதல் ஏறத்தாழ 35 வயதுடையோரிடையே) கேடுடைய எண்ணமாற்றங்கள் ஏற்படுவதாகத் தெரியவில்லை.
நச்சுப்பொருட்கள் ஒருவரது உடல் கேடுகள் உண்டாக்கும் அளவிற்குச் சார்ந்து படிந்து ஒரு முற்றிய நிலையை அடைவதற்கு 15 ஆண்டுகளாவது ஆகும்போலத் தெரிகிறது.
கடந்த 36 ஆண்டுக்கால ஆய்வில், பல்கலைக் கழகத்து மாணவர்கள், பணியாட்கள், பேராசிரியர்கள் ஆகியோரையும், எனது மாற்று மருத்துவ நிலையத்திற்கு மருத்துவம் பார்த்துக்கொள்ள வந்த மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் ஆகியோரை உள்ளடடிக்கி மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெளிந்துணர்ந்த விவரங்களை, புள்ளிவிவர ஆய்வுகளுக்கு உட்படுத்தி, அவற்றை எனது பல்வேறு நூல்களில் வெளியிட்டுள்ளேன்.
‘மனிதர்களைத் தாக்கும் நோய்கள்’ எனப் பொருள்படும் “Human Diseases” எனும் நூல், இந்தக் கண்டுபிடிப்பின் தொகுப்பினை, மிகத் தெளிவாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளேன்.
இக்கண்டிபிடிப்பைப் பலரும் தாக்கக்கூடும் என்ற அச்சத்தோடுதான் அந்நூலை ஓர் அசட்டுத் துணிச்சலோடு வெளியிட்டேன். நல்லவேளையாக அப்படி ஒருவரும் இதுவரை தாக்கவில்லை. மாறாக, இதனைப் படித்த சிலர் இந்தக் கண்டுபிடிப்புக்களைப் பெரிதும் பாராட்டி, ஏற்றுக் கொள்ளுகிறார்கள். தடித்த உடலுடைய சிலர், வாய்விட்டுச் சிரித்துவிடுகிறார்கள், அவ்வளவுதான்!
எதையுமே பெரிதும் பொருட்படுத்தாது இருப்பதுங்கூட தடிப்பான உடலுடையோரது மனநிலைகளில் ஒன்றுதான். அவர்கள் தங்களது சொந்தப் பிள்ளைகளிடங்கூட கண்டிப்புடன் நடந்துகொள்ளமாட்டார்கள். அதனால், தடித்த உடலுடையோரை அவர்களது பிள்ளைகள் பெரிதும் விரும்புவார்கள், அன்புடனும் இருப்பார்கள்.
அடுத்த மாதம், சிறுநீர் கழிப்பதற்கும், உடல்நலம், மனநலம் ஆகியவற்றிற்கும் இடையே உள்ள தொடர்புகளை விளக்கத்தக்க பட்டியல் ஒன்றைத் தந்து விளக்கமாக சொல்கிறேன்.