நாம் நம் குழந்தைகளைப் பள்ளக்கு அனுப்புவது அறிவாளயாக்கவா அல்லது புத்திசாலியாக்கவா என்று தெரியுமா? அன்பு பெற்றோர்களே! நம் குழந்தைகளை நாம் எப்படி உருவாக்க வேண்டும் என்பதில் ஒரு தௌவான நிலைப்பாட்டை எடுக்க அறிவாளத்தனத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் உள்ள அடிப்படையான வேறுபாட்டுத் தன்மைகளை முதலில் பார்ப்போம்.
அறிவாளத்தனம் / புத்திசாலித்தனம்
அறிவு என்பது வெறும் படிப்பு (Theortical) மற்றும் படிப்பித்தலில் (Instructional) கிடைக்கும் தகவல் (Information) தொகுப்பாகும். இதைக் கொண்டு தன் சுய அனுபவத்தால் உண்டான காரண அறிவைத் தர்க்க ரீதியாக கையாண்டு வாழ்க்கை முடிவுகளை எடுப்பது அறிவாளத்தனமாகும்.
புத்தி என்பது செயல்பாட்டிலும் (Practical) அனுபவத்திலும் (Experiencial) கிடைக்கும் புரிதல் தன்மையாகும். அதாவது, தன் சுய அனுபவம் மற்றும் அடுத்தவர் அனுபவத்திலிருந்து உணர்தல் (புரிதல்) அடிப்படையில் வாழ்க்கை முடிவுகளை எடுப்பது புத்திசாலித்தனமாகும்.
அறிவாளயாக பணம் இழப்பு, கால விரையம், அதிக உழைப்பு, மற்றும் வேண்டாத அனுபவ பாதிப்புகள் ஆகியவைகளுக்கு ஆட்பட வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு விழிப்புணர்வற்ற அனுபவக் குப்பையாக இருக்கும்.
புத்திசாலியாக இதெல்லாம் தேவையே இல்லை. அடுத்தவர் வாழ்க்கை அனுபவத்தை விருப்பு வெறுப்பு இன்றி சுயமாகப் புரிந்து கொண்டு செயல்பட்டால் போதுமானது. வாழ்க்கை ஒரு விழிப்புணர்வான ஆனந்தமான அனுபவமாக இருக்கும்
அறிவாளக்கு அறிவுரைகள் தேவைப்பட்டாலும் அது கசக்கவே செய்யும். அறிவுரையை விட்டுவிட்டு அறிவுரை சொன்னவரை ஆராய்ந்து, விமர்சனம் செய் ஆரம்ப்பித்துவிடுவர்.
புத்திசாலிக்கு அறிவுரைகள் தேவையில்லை. வழிகாட்டுதலும் முன்னுதாரணங்களும் தந்தால் போதும். சொன்னது யார் என்று பார்ப்பதைவிட சொன்னது என்ன என்பதற்கு முக்கியத்துவம் தருவர்.
அறிவாளக் குழந்தைகளை நாம் வாழும் வரைதான் பாதுகாத்து, காப்பாற்றமுடியும். நமக்குப் பிறகு நம் பாரம்பரியத் தன்மை (Legacy), சொத்து மற்றும் நற்பெயர் ஆகியவை காப்பாற்றப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.
புத்திசாலிக் குழந்தைகள் தங்களையும், நம்மையும், நம் பாரம்பரியத் தன்மை மற்றும் நற்பெயரை நமக்குப் பிறகும் பாதுகாத்து மேம்படுத்துவர்.
அறிவாளத்தனத்தால் தன் முனைப்பு, அகந்தை (Ego), மற்றும் ஆணவம் அதிகப்பட்டு, மற்றவர்களை விட நாம் எவ்வளவோ தேவலாம் என்றநினைப்பால் மேம்பாடடைவதை நிறுத்தி, வாழ்க்கையை ஓட்டுவர்.
புத்திசாலித்தனத்தால் விருப்பு வெறுப்பு விடுத்து, ஒழுக்க முறைகளைக் கடைபிடித்து, தன்னம்பிக்கை வளர்த்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி மேம்பட்ட வாழ்க்கையை வாழ முற்படுவர்.
அறிவாள பழுத்த அனுபவஸ்தராகி எப்படி வாழக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாவார். இதனால் தன் நஷ்டம் புத்திசாலிக்குப் பாடமாகிறது.
புத்திசாலி பண்பட்ட ஞானியாகி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகி, தானும் மற்றவர்களும் பலனடைவார்கள்.
அறிவாள தோல்வி அடையாமல் பார்த்துக் கொள்வதிலேயே கவனமாக இருந்து இறுதியில் மிகப் பெரிய தோல்வியை சந்திப்பார்.
புத்திசாலி தற்காலிகத் தோல்விகளை மனப்பூர்வமாக ஏற்று அவற்றில் பாடம் கற்று, இறுதியில் மிகப் பெரிய வெற்றியை அடைவார்.
அறிவாளகள் புத்திசாலிகளைத் தவிர்க்க முற்படுவர்.
புத்திசாலிகள் அறிவாளகளைப் பயன்படுத்திக் கொள்வர்.
உண்மையில் இன்றைய அநேக பள்ளகள் நம் குழந்தைகளை அறிவாளயாக்கி வேலைக்குதான் தயார்படுத்துகின்றன. அப்படி அவர்கள் நம் பிள்ளகளைத் தயார்படுத்துவதன் மூலம் அவர்கள் புத்திசாலித்தனமாக பணம் சம்பாதிக்கிறார்கள். அப்படி நம் பிள்ளைகள் பெற்ற அறிவைக் கொண்டு இன்னொரு புத்திசாலியிடம் வேலைக்குத்தான் போக முடியும். ஆனால், நம் குழந்தைகளை நாம் புத்திசாலிகளாக உருவாக்கினால், அவர்கள் பல அறிவாளகளுக்கு வேலை கொடுத்து சிறப்பாக வாழ்வார்கள். ஆகவே, நம் குழந்தைகளை அதிகம் படிக்க வைத்து அறிவாளகளாக்குவதை விட புத்திசாலிகளாக ஆக வழிகாட்டினால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.
படிக்காத பெற்றோர்கள் நாம்தான் படிக்க வில்லையே நம் பிள்ளைகளாவது படித்து வாழ்க்கையில் நம்மை போல் அல்லாமல் பெரிய நிலைக்கு வரட்டுமே என்று பிள்ளைகளைப் படி படி என்று கண்டிப்பு காட்டி வருத்தெடுப்பதும் உண்டு. நன்கு படித்த பெற்றோர்களோ நாம் நன்றாகப் படித்தும் செல்வச் செழிப்பை காண முடியவில்லையே என்று தங்கள் பிள்ளைகளைத் தொழில் செய்ய கட்டாயப்படுத்தி, அதற்குத் தயாராகாத பிள்ளைகளை வீண் செய்துவிடுவதும் உண்டு. நாம் பார்த்த இந்த இரண்டுமே அவரவர் பார்வையில் சரி அல்லது தவறாகப் படலாம்.
நாம் பார்த்த இரு வேறு வழிகளல் எது சரி என்று தெரிந்து கொள்ள, நம் இரு குழந்தைகளை இரு வேறு விதங்களல் வளர விட்டு எது சரிபடுகிறது என்று பார்க்கவா முடியும்? ஆக, இது சாத்தியமில்லை. அதே சமயம், எது வேலைக்கு ஆகும் என்று தெரிந்து கொள்ள நம்மோடு ஒன்றாக படித்தவர்களல், வாழ்ந்தவர்களல் எப்படிப்பட்ட தன்மைகளைக் கொண்டவர்கள் இப்பொழுது வாழ்க்கையில் எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்பதை விருப்பு வெறுப்பு இன்றி ஆராய்ந்து பார்ப்போமேயானால், நமக்கு ஒரு உண்மை புரிய வரும். அந்த உண்மை என்னவென்றால், அதிக படிப்பாளயாக, அறிவாளயாக இருந்தவர்களைவிட யதார்த்தவாதிகளாக, புத்திசாலிகளாக இருந்தவர்கள்தான் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளைக் குவித்துள்ளனர் என்பதை உணர முடியும்.
நம் குழந்தைகளை வெறும் அறிவாளயாக்கி நம் அறிவுரைகளைக் கேட்டு நடக்கச் செய்து, நம்மைச் அதிகம் சார்ந்து இருக்கச் செய்யும் பட்சத்தில், வெற்றி பெற்றால் அது அவனால் வந்தது என்றும், தோல்வி என்றால் அது நம்மால் ஏற்பட்டது என்றும் கூறும் நிலைக்கு ஆளாக நேரிடும். அதுவே, நம் குழந்தைகளை சுயமாக சிந்திக்கவும் செயல்படவும் செய்து, முடிவுகளை சுயமாக எடுக்க வழிவிட்டு, அவனது வெற்றிக்கும் தோல்விக்கும் அவனே காரணம் என்று உணரும்படி வழிகாட்டினால், அவன் ஜெயிப்பது சாத்தியமாகும். நம் குழந்தைகள், நம்மையும் மற்றவர்களையும் பார்த்து, உணர்ந்த புத்தியால் சுய முடிவு எடுத்து செய்யும் எதற்கும் அவர்களே முழு பொறுப்பு என்பதை அவர்கள் உணர வேண்டும். இதுவே வெற்றிக்கு வழியாகும். ஆகவே, நம் குழந்தைகளை அப்படி இரு, இப்படி செய் என்று அறிவுரைகள் கூறி வளர்ப்பதை விடுத்து, புத்திசாலிகளாக வளர வாய்ப்பு மட்டும் தந்தால் போதும். அவர்கள் கண்டிப்பாக நம்மைவிட மேம்பட்டு வருவார்கள். அன்பு நண்பர்களே! நம் குழந்தைகள் அறிவாளகளாக இருப்பதைக் காட்டிலும் புத்திசாலிகளாக இருப்பது நல்லது என்று இப்பொழுது புரியும் என்று நினைக்கிறேன்.
அன்பு பெற்றோர்களே! ‘கண்டதையும் கற்றவன் பண்டிதனாவான்’ என்பது முதுமொழியாகும். இதை இரு விதத்தில் அர்த்தம் கொள்ள முடியும். ஒன்று சகட்டுமேனிக்கு படிப்பவன் எல்லாம் தெரிந்த அறிவாளயாவான். இன்னொரு அர்த்தம் கண்ணால் கண்ட அனுபவத்தில் கற்றுக் கொள்ளும் எவனும் பாண்டித்தியம் பெற்றபுத்திசாலியாவான் என்பதாகும். ஆக, முதலில் பார்த்த அர்த்தம் நிறையப் படித்தால்தான் உருப்பட முடியும் என்று ஆழமாக நம்பும் அறிவாளகளுக்கானது. இரண்டாவது, ஏட்டுப் படிப்பு இல்லா விட்டாலும், உலக மக்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் வாழ்வியல் பாடத்தால் அருமையாக வாழலாம் என்று உள்ளுணர்வாக உணர்ந்த புத்திசாலிகளுக்கானது. இதில் எது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் தேவையோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
பல காலம் செலவழித்து, உழைத்து, படித்து, பட்டம் பெற்று திறன்மிக்க அறிவாளயாவர் பலர்.
சில காலம் திட்டம் போட்டு, பலருக்கு வேலை கொடுத்து, செழிப்பாக இருப்பர் புத்திசாலி சிலர்.