அமைதிக்கான வழி
அமைதியாக வாழ வேண்டும் என்பதே நம்மில் பலரது விருப்பமாகும். ஆனால், பிரச்சனைகளில் சிக்குண்டு அமைதியை இழப்போரே அதிகம். பிரச்சனையிலிருந்து தப்பித்து ஓடாமல், அதனைத் தைரியமாக எதிர்கொள்வதே அமைதிக்கான ஊற்றுக்கண்ணாகும்.
“எங்கே அமைதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” என்றே தேடிக் கொண்டிருக்கிறோம். அந்த அமைதி எங்கேயோ இல்லை. நம்மிடமே தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு விட்டால், அமைதி தன்னால் பூத்துக்குலுங்குவதைக் காணலாம்.
அமைதியாக இருப்பதற்கு அமைதியாக இருப்பது ஒன்றே வழி. இதைப்புரிந்து கொண்டுவிட்டால் நாம் எந்தச் சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க முடியும். நேற்று நடந்த நிகழ்வுகளை ஒரு போதும் மாற்ற முடியாது. அதையே நினைத்துக் கொண்டிருந்தால் நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும். நாளை என்பது நமது கையில் இல்லை. நாளைய கனவில் ஏன் ஆழ்ந்து அனாவசியமாகக் கவலைப்பட வேண்டும். இன்றைய பொழுதை இனிதாய்க் கழிப்போமே. சிலர் எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களால் எப்படி அமைதியாக இருக்க முடியும். கவலைப்படுவதால் நமது உடல் நலமும், மன நலமும் கெடும். கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பதை நாம் எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போது நாம் அமைதிப் பூஞ்சோலையில் ஆனந்தமாக நுழைகிறோம்.
‘Don’t poke your nose in others affairs’ என்று சொல்வார்கள். எதற்காக நாம் மற்றவர் விஷயத்தில், தேவையில்லாமல் தலையிட்டு நமது அமைதியை இழப்பானேன். இதனால் தேவை இல்லாமல் சண்டையும், சச்சரவும்தான் வரும்.
“கருடா சௌக்யமா?” என்று கருநாகம் கேட்டது. கருடன் சொன்னது, “அவரவர் இருக்கும் இடத்தில் அவரவர் இருந்தால் அனைவரும் சௌக்கியமே”. இதுதான் உண்மை.
பிறர் நம்மிடம் ஆலோசனை கேட்டால் மட்டுமே சொல்ல வேண்டும். ஏன் வலியப்போய் நாம் பிறருக்கு ஆலோசனை கூற முற்பட்டு, “போயாஙு உன் வேலையைப் பார்த்துக்கொண்டு, உன் ஆலோசனையை யார் கேட்டா” என்று அவர் பதில் கூற, “நான் நல்லதைத் தானே சொன்னேன். அவன் கேட்க மாட்டேன் என்கிறானே” என்று வீணில் வருந்துவானேன்.
கண்ணாஙு எது சரி?, எது தவறு?, நான் என்ன செய்ய வேண்டும் என்று போர்க்களத்தில் அர்ஜீனன் கண்ணனிடம் சரணடைந்து, அவன் தான் தன் பிரச்சனைக்குத் தீர்வு சொல்ல முடியும் என்ற சிரேயஸ் (சிரத்தை) மனோபாவத்துடன் கேட்ட போதே கண்ணன் அவனுக்குக் கீதையை உபதேசித்து, அவன் மனக்குழப்பத்தைப் போக்கி, செயலாற்றத் தூண்டினான்.
அழுது புலம்புவதால் நமது பிரச்சனை ஒருபோதும் தீராது. பிரச்சனை என்ன? அதை எப்படி எதிர்கொள்வது. அதை எப்படிச் சமாளிப்பது என்று சற்று அமைதியுடன் சிந்தித்தால் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். குழப்பமும், சஞ்சலமும் இருந்தால் ஒரு போதும் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது.
ஆகவே தான் நமது பெரியவர்கள், “நிம்மதியாகத் தூங்கு, காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்பார்கள். நூல் சிக்குண்டு, ஒவ்வொரு பிரியாக பிரித்தால் தான் சிக்கு நீங்கும். அவசரப்பட்டால் மேலும் சிக்கல் தான். அதே போல நீங்கள் வீணில் ல்லவும் கூடாது. ஏனெனில் அவரவர் பிரச்சனை அவரவருக்குப் பெரிதாக இருக்கும். அந்தச் சூழலில், அந்த மனநிலையில் அவரால் நமக்கு எந்த ஆலோசனையும் கூற முடியாது.நம் வீட்டுப்பிரச்சனையை வெளியில் சொல்லக்கூடாது. நமது பலவீனத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு, சந்தர்ப்பம் பார்த்து நம்மை அவர்கள் வீழ்த்தலாம். அதேபோல் மனதிற்குள் அடக்கிவைத்துக்கொண்டு புழுங்குவதாலும் பலனில்லை. பிரச்சனைக்கு வழி காண முடியாது. யாரிடமாவது சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொள்ள விரும்பினால், நமக்கு வேண்டியவர்களிடம், நம் நலனில் அக்கறை உள்ளவரிடமும் சொன்னால் மன ஆறுதல் பெற முடியும். இறைசிந்தனை, இறைபிரார்த்தனை, ஜபம், கீர்த்தனை இதற்கு வழி கோலும். நமது நலனில் அக்கறையுள்ளவரிடம் சொல்லும்போது, அவர் சில யோசனைகளை “சேஙு இதற்குப்போய் இத்தனை அலட்டிக் கொண்டோமே. வீட்டிற்கு வீடு வாசற்படி தான். நமக்குள்ளது போலத்தான் அவருக்கும் பிரச்சனை என்று எண்ணும்போது, அந்த எண்ணம் வலுப்படும்போது, நமது பிரச்சனையை ஊதித்தள்ளும் மனநிலை ஏற்படும்.
யாராவது, ஏதாவது சொல்லி விட்டால் நம் மனதில் சுருக்கென தைக்கிறது. என்னைப்பார்த்து அவன் ஏடா கூடமாகப் பேசுகிறான். இளக்காரமாகப் பேசுகிறான். கேலி செய்கிறான் என்று ஏன் நீங்கள் எண்ண வேண்டும். யாராவது நம்மை ‘முட்டாள்’ என்று கூறினால், உடனே கோபப்பட்டு, ‘நீ முட்டாள், உன் அப்பா முட்டாள், உன் பரம்பரையே முட்டாள்’ என்று சடசடவென பொரிந்து தள்ளிவிடுகிறோம். நாம் முட்டாள் இல்லை என்று நமக்குத்தெரியும். பின் ஏன் அதற்காக வருந்துவானேன். நம்மை முட்டாள் என்று சொல்கின்றவன், ஏதாவது மனநிலையில் இருக்கலாம். ஆகவே அந்தச் சொல்லை லேசாக எடுத்துக்கொண்டு மறந்துவிடுவதே நமது மனஅமைதிக்கு நல்லது. நாமும் அவருடைய நிலையில் இருந்தால் அப்படித்தானே பேசி இருப்போம் என்று நீங்கள் நினைத்துப்பாருங்கள். நண்பர்களிடையே உறவு முறிவதும், தம்பதிகளிடையே சண்டை நடப்பதும் பரஸ்பரம் புரிந்து கொள்ளாததால்தான்.
புத்தர் ஞானம் பெற்ற பின்பு ஒரு கிராமத்திற்குச் சென்றார். மக்கள் அவரை வரவேற்று, அவர் காலில் விழுந்து வணங்கி அவரது அறிவுரையைக் கேட்டனர். மற்றொரு கிராமத்திற்குச் சென்றார். அந்த ஊர் மக்கள் இப்படி எத்தனை போலி சன்யாசிகள் கிளம்பியிருக்கிறீர்கள் என்று தகாத வார்த்தைகளால் அவரைத் தூற்றினார்கள். புத்தர் ஏதும் சொல்லாமல் அமைதி காத்தார். அவர் அமைதியாக இருந்ததைப் பார்த்த அவ்வூர் மக்கள் முதலில் இவர் சூடு, சொரணை இல்லாதவரா? நாம் இப்படி ஏசியும் சற்றுங்கூட கோபப்படவில்லையே என்று நினைத்தனர். புத்தர் மேலும் அமைதியுடன் இருந்தார். அவ்வூர் மக்களுக்கு இவர் பெரிய மகான் போல இருக்கும் என்று எண்ண ஆரம்பித்தனர்.
புத்தர் சொன்னார், “நாம் உங்கள் ஊருக்கு வரும் முன்பு, அவர்கள் என்னைக் கோலாகலமாக வரவேற்றனர். நான் அதைப்பெரிது படுத்தாமல் எல்லாம் உங்களுக்கே என்று கூறினேன். அதேபோலத்தான் நீங்கள் என்னைத் தூற்றியதையும் ‘உங்களுக்கே’ என்று பேசாமல் இருந்துவிட்டேன்” என்று. “போற்றுவார் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும். போகட்டும் எல்லாம் கண்ணனுக்கே”, என்று விட்டுவிட்டோமானால் அதுவே நமக்கு அமைதியைத் தரும். ஆன்ம ஞானம் பெற்ற புத்தர் நமக்கு உணர்த்தும் உண்மை இதுதான்.ணங்களின் பிரதிபலிப்பே. அதனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோமானால், அந்த எண்ணங்கள் எந்த இடத்திலிருந்து தோன்றுகிறது என்பதை உற்றுக்கவனிக்கும்போது மனம் அற்றுப்போகிறது. மனதில் அமைதி தோன்றுகிறது என்பது தான் புத்தர் நமக்கு கூறும் அறிவுரை. பிரச்சனைகளை நாம் மறக்க வேண்டும் என்று மற்றவரிடம் பேசுவதும் பலன் தராது. அதை அதிகரிக்கவே செய்யும். அதேபோல் பலப்பல யோசிப்பதாலும் சிந்தனைக் குழப்பமே ஏற்படும். பிரச்சனை தீராது. ஆகவே பிரச்சனையைத் தைரியமாக எதிர்கொள்வதே அமைதியைத் தரும்.
இறைவாஙு எனது பிரச்சனை என்ன என்பதை அறிந்து கொள்ளும் அறிவைத் தா. தீர்க்க முடியாத பிரச்சனை எனில் அதனை பெற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைத் தா. எந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும். எதைத் தீர்க்க முடியாது என்பதை உய்த்துணரும் அறிவைத் தா, என்று இயேசுபிரான் இறைவனிடம் வேண்டுவது பொருள் பொதிந்த வார்த்தையாகும்.
5 comments Posted in Articles