– 2012 – June | தன்னம்பிக்கை

Home » 2012 » June (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    அமைதிக்கான வழி

    அமைதியாக வாழ வேண்டும் என்பதே நம்மில் பலரது விருப்பமாகும். ஆனால், பிரச்சனைகளில் சிக்குண்டு அமைதியை இழப்போரே அதிகம். பிரச்சனையிலிருந்து தப்பித்து ஓடாமல், அதனைத் தைரியமாக எதிர்கொள்வதே அமைதிக்கான ஊற்றுக்கண்ணாகும்.
    “எங்கே அமைதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” என்றே தேடிக் கொண்டிருக்கிறோம். அந்த அமைதி எங்கேயோ இல்லை. நம்மிடமே தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு விட்டால், அமைதி தன்னால் பூத்துக்குலுங்குவதைக் காணலாம்.
    அமைதியாக இருப்பதற்கு அமைதியாக இருப்பது ஒன்றே வழி. இதைப்புரிந்து கொண்டுவிட்டால் நாம் எந்தச் சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க முடியும். நேற்று நடந்த நிகழ்வுகளை ஒரு போதும் மாற்ற முடியாது. அதையே நினைத்துக் கொண்டிருந்தால் நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும். நாளை என்பது நமது கையில் இல்லை. நாளைய கனவில் ஏன் ஆழ்ந்து அனாவசியமாகக் கவலைப்பட வேண்டும். இன்றைய பொழுதை இனிதாய்க் கழிப்போமே. சிலர் எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களால் எப்படி அமைதியாக இருக்க முடியும். கவலைப்படுவதால் நமது உடல் நலமும், மன நலமும் கெடும். கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பதை நாம் எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போது நாம் அமைதிப் பூஞ்சோலையில் ஆனந்தமாக நுழைகிறோம்.
    ‘Don’t poke your nose in others affairs’ என்று சொல்வார்கள். எதற்காக நாம் மற்றவர் விஷயத்தில், தேவையில்லாமல் தலையிட்டு நமது அமைதியை இழப்பானேன். இதனால் தேவை இல்லாமல் சண்டையும், சச்சரவும்தான் வரும்.
    “கருடா சௌக்யமா?” என்று கருநாகம் கேட்டது. கருடன் சொன்னது, “அவரவர் இருக்கும் இடத்தில் அவரவர் இருந்தால் அனைவரும் சௌக்கியமே”. இதுதான் உண்மை.
    பிறர் நம்மிடம் ஆலோசனை கேட்டால் மட்டுமே சொல்ல வேண்டும். ஏன் வலியப்போய் நாம் பிறருக்கு ஆலோசனை கூற முற்பட்டு, “போயாஙு உன் வேலையைப் பார்த்துக்கொண்டு, உன் ஆலோசனையை யார் கேட்டா” என்று அவர் பதில் கூற, “நான் நல்லதைத் தானே சொன்னேன். அவன் கேட்க மாட்டேன் என்கிறானே” என்று வீணில் வருந்துவானேன்.
    கண்ணாஙு எது சரி?, எது தவறு?, நான் என்ன செய்ய வேண்டும் என்று போர்க்களத்தில் அர்ஜீனன் கண்ணனிடம் சரணடைந்து, அவன் தான் தன் பிரச்சனைக்குத் தீர்வு சொல்ல முடியும் என்ற சிரேயஸ் (சிரத்தை) மனோபாவத்துடன் கேட்ட போதே கண்ணன் அவனுக்குக் கீதையை உபதேசித்து, அவன் மனக்குழப்பத்தைப் போக்கி, செயலாற்றத் தூண்டினான்.
    அழுது புலம்புவதால் நமது பிரச்சனை ஒருபோதும் தீராது. பிரச்சனை என்ன? அதை எப்படி எதிர்கொள்வது. அதை எப்படிச் சமாளிப்பது என்று சற்று அமைதியுடன் சிந்தித்தால் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். குழப்பமும், சஞ்சலமும் இருந்தால் ஒரு போதும் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது.
    ஆகவே தான் நமது பெரியவர்கள், “நிம்மதியாகத் தூங்கு, காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்பார்கள். நூல் சிக்குண்டு, ஒவ்வொரு பிரியாக பிரித்தால் தான் சிக்கு நீங்கும். அவசரப்பட்டால் மேலும் சிக்கல் தான். அதே போல நீங்கள் வீணில் ல்லவும் கூடாது. ஏனெனில் அவரவர் பிரச்சனை அவரவருக்குப் பெரிதாக இருக்கும். அந்தச் சூழலில், அந்த மனநிலையில் அவரால் நமக்கு எந்த ஆலோசனையும் கூற முடியாது.நம் வீட்டுப்பிரச்சனையை வெளியில் சொல்லக்கூடாது. நமது பலவீனத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு, சந்தர்ப்பம் பார்த்து நம்மை அவர்கள் வீழ்த்தலாம். அதேபோல் மனதிற்குள் அடக்கிவைத்துக்கொண்டு புழுங்குவதாலும் பலனில்லை. பிரச்சனைக்கு வழி காண முடியாது. யாரிடமாவது சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொள்ள விரும்பினால், நமக்கு வேண்டியவர்களிடம், நம் நலனில் அக்கறை உள்ளவரிடமும் சொன்னால் மன ஆறுதல் பெற முடியும். இறைசிந்தனை, இறைபிரார்த்தனை, ஜபம், கீர்த்தனை இதற்கு வழி கோலும். நமது நலனில் அக்கறையுள்ளவரிடம் சொல்லும்போது, அவர் சில யோசனைகளை “சேஙு இதற்குப்போய் இத்தனை அலட்டிக் கொண்டோமே. வீட்டிற்கு வீடு வாசற்படி தான். நமக்குள்ளது போலத்தான் அவருக்கும் பிரச்சனை என்று எண்ணும்போது, அந்த எண்ணம் வலுப்படும்போது, நமது பிரச்சனையை ஊதித்தள்ளும் மனநிலை ஏற்படும்.
    யாராவது, ஏதாவது சொல்லி விட்டால் நம் மனதில் சுருக்கென தைக்கிறது. என்னைப்பார்த்து அவன் ஏடா கூடமாகப் பேசுகிறான். இளக்காரமாகப் பேசுகிறான். கேலி செய்கிறான் என்று ஏன் நீங்கள் எண்ண வேண்டும். யாராவது நம்மை ‘முட்டாள்’ என்று கூறினால், உடனே கோபப்பட்டு, ‘நீ முட்டாள், உன் அப்பா முட்டாள், உன் பரம்பரையே முட்டாள்’ என்று சடசடவென பொரிந்து தள்ளிவிடுகிறோம். நாம் முட்டாள் இல்லை என்று நமக்குத்தெரியும். பின் ஏன் அதற்காக வருந்துவானேன். நம்மை முட்டாள் என்று சொல்கின்றவன், ஏதாவது மனநிலையில் இருக்கலாம். ஆகவே அந்தச் சொல்லை லேசாக எடுத்துக்கொண்டு மறந்துவிடுவதே நமது மனஅமைதிக்கு நல்லது. நாமும் அவருடைய நிலையில் இருந்தால் அப்படித்தானே பேசி இருப்போம் என்று நீங்கள் நினைத்துப்பாருங்கள். நண்பர்களிடையே உறவு முறிவதும், தம்பதிகளிடையே சண்டை நடப்பதும் பரஸ்பரம் புரிந்து கொள்ளாததால்தான்.
    புத்தர் ஞானம் பெற்ற பின்பு ஒரு கிராமத்திற்குச் சென்றார். மக்கள் அவரை வரவேற்று, அவர் காலில் விழுந்து வணங்கி அவரது அறிவுரையைக் கேட்டனர். மற்றொரு கிராமத்திற்குச் சென்றார். அந்த ஊர் மக்கள் இப்படி எத்தனை போலி சன்யாசிகள் கிளம்பியிருக்கிறீர்கள் என்று தகாத வார்த்தைகளால் அவரைத் தூற்றினார்கள். புத்தர் ஏதும் சொல்லாமல் அமைதி காத்தார். அவர் அமைதியாக இருந்ததைப் பார்த்த அவ்வூர் மக்கள் முதலில் இவர் சூடு, சொரணை இல்லாதவரா? நாம் இப்படி ஏசியும் சற்றுங்கூட கோபப்படவில்லையே என்று நினைத்தனர். புத்தர் மேலும் அமைதியுடன் இருந்தார். அவ்வூர் மக்களுக்கு இவர் பெரிய மகான் போல இருக்கும் என்று எண்ண ஆரம்பித்தனர்.
    புத்தர் சொன்னார், “நாம் உங்கள் ஊருக்கு வரும் முன்பு, அவர்கள் என்னைக் கோலாகலமாக வரவேற்றனர். நான் அதைப்பெரிது படுத்தாமல் எல்லாம் உங்களுக்கே என்று கூறினேன். அதேபோலத்தான் நீங்கள் என்னைத் தூற்றியதையும் ‘உங்களுக்கே’ என்று பேசாமல் இருந்துவிட்டேன்” என்று. “போற்றுவார் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும். போகட்டும் எல்லாம் கண்ணனுக்கே”, என்று விட்டுவிட்டோமானால் அதுவே நமக்கு அமைதியைத் தரும். ஆன்ம ஞானம் பெற்ற புத்தர் நமக்கு உணர்த்தும் உண்மை இதுதான்.ணங்களின் பிரதிபலிப்பே. அதனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோமானால், அந்த எண்ணங்கள் எந்த இடத்திலிருந்து தோன்றுகிறது என்பதை உற்றுக்கவனிக்கும்போது மனம் அற்றுப்போகிறது. மனதில் அமைதி தோன்றுகிறது என்பது தான் புத்தர் நமக்கு கூறும் அறிவுரை. பிரச்சனைகளை நாம் மறக்க வேண்டும் என்று மற்றவரிடம் பேசுவதும் பலன் தராது. அதை அதிகரிக்கவே செய்யும். அதேபோல் பலப்பல யோசிப்பதாலும் சிந்தனைக் குழப்பமே ஏற்படும். பிரச்சனை தீராது. ஆகவே பிரச்சனையைத் தைரியமாக எதிர்கொள்வதே அமைதியைத் தரும்.
    இறைவாஙு எனது பிரச்சனை என்ன என்பதை அறிந்து கொள்ளும் அறிவைத் தா. தீர்க்க முடியாத பிரச்சனை எனில் அதனை பெற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைத் தா. எந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும். எதைத் தீர்க்க முடியாது என்பதை உய்த்துணரும் அறிவைத் தா, என்று இயேசுபிரான் இறைவனிடம் வேண்டுவது பொருள் பொதிந்த வார்த்தையாகும்.

    எவ்வளவோ பண்றோம்… இத பண்ண மாட்டோமா…

    ‘எவ்வளவோ பண்றோம்… இத பண்ண மாட்டோமா…’ என்று தமிழகத்தில் இன்றைக்கு பலபேரும் சொல்லும் ஒரு மந்திரம். வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னதத் தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க…(சும்மா ஒரு கற்பனை தான்)
    அது பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்குத் தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்திக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ள போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம ஏகாம்பரம்.
    உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சீக்கிரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.
    முதலில் தொழில்நுட்ப அறிவைச் சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.
    “உங்களல் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”
    2000 பேர் இடத்தை காலி செய்தார்கள். நம்ம ஏகாம்பரதிற்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!
    “இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்குப் போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.
    அடுத்த கேள்வி, “உங்களல் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”
    இன்னொரு 2000 வௌயே கிளம்பியது. ஏகாம்பரம் , “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”
    இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக் கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”, சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.
    “அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்துக் கொண்டிருந்தார், ஏகாம்பரம்.
    ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கும் முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்கச் சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
    “உங்களல் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” (செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி).
    இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும். அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் உள்ள நம்ம ஏகாம்பரம்.
    ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ். “ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா…” – மனசுக்குள் ஏகாம்பரம்.
    “இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”
    ஏகாம்பரம் அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!
    ஏகாம்பரம் ஆரம்பித்தார் மெதுவாக, “தம்பிக்கு எந்த ஊரு?” – கேட்டது தமிழில்.
    “கோயம்புத்தூர் பக்கம். நீங்க?”
    என்னங்க சிரிச்சு முடிச்சிட்டிங்களா?
    இந்த கதையில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. நீங்கள் கவனித்தீர்களா? எந்த சூழ்நிலையிலும் நம் தன்னம்பிக்கையை விட்டுவிடக்கூடாது என்பது மட்டுமல்ல, மனம் தளராமல் எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்பது தான். நம்ம ஏகாம்பரத்திற்கு எதுவுமே தெரியாது என்றாலும் அவர் என்னதான் நடக்குதுன்னு பாப்போமே என்று தீர்கமான மனதுடன் இருந்தாரே அது தான் இந்த கதையின் ஹை லய்ட். சரி. இப்போது விசயத்திற்கு வருவோம்.
    இந்த உலகத்தில் எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற துணிவு இல்லாத மனிதர்கள் , நிச்சயமாகச் சாதித்ததாக வரலாறு இல்லை. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று, தான் கொண்ட குறிகோளுக்காகத் துணிவுடன் போராடும் மனம் படைத்த மனிதர்கள் தான் சாதனையாளர்கள் பட்டியலில் அமர்ந்து இருக்கிறார்கள். இன்றைக்கும் பல மாணவர்கள் தங்கள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, வேலைக்காகப் பல நிறுவனங்களை அணுகும் போது நெஞ்சம் படபடக்கத்தான் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளுகிறார்கள். என்ன கேட்பார்களோ? ஆங்கிலத்தில் தான் கேட்பார்களோ? எப்படி சொல்வது என்று இன்னும் பல பேர் வாசற்படி வரை சென்று, குனிந்த தோளோடு கவலை தோய்ந்த முகத்தோடு திரும்பி வந்து விடுகிறார்கள்.
    தெரிகிறதோ இல்லையோ எதையும் எதிர்கொள்வோம் என்ற நேர்மறை எண்ணத்துடன் இருக்கும் பல பேர், பணி வாய்ப்பு பெற்று நல்ல பதவியில் இருப்பதை இன்றைக்கும் நான் பார்கிறேன். யாருமே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வாழ்வதில்லை. அத்தனை விசயங்களையும் ஒரு தனி மனிதன் தெரிந்து இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. இதை நேர்முக தேர்வுகளை நடத்தும் அவர்களுக்கும் நன்றாக தெரியும். என்றாலும் போட்டியாளரின் தன்னம்பிக்கை, பேச்சுத் திறமை, சாதூர்யம் இவற்றைத் தான் அவர்கள் எதிர் பார்கிறார்கள். போட்டியாளரின் அறிவு, திறமையை அல்ல. ஆனால் நாம் பல பேர் , இந்த ஒற்றை விசயத்தில் கோட்டை விட்டு விடுகிறோம். அவர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் நம்மால் பதில் சொல்ல முடியாதே என்கின்ற ஒரு தாழ்வு மனப்பான்மையில், போட்டியில் பங்கு பெறுவது கூட கிடையாது. முதலில் கதவுகளை தட்டுங்கள். கண்டிப்பாக கதவுகள் திறக்கும். எது வேண்டும் என்று முதலில் வாய் திறந்து கேளுங்கள். அது கண்டிப்பாக கிடைக்கும். இது தான் இயற்கையின் நியதி.புதிதான இடத்திற்குப் பயணம் போகிறிர்களா? பயப்படாமல் செல்லுங்கள். அங்கு போய் உங்கள் திறமைகளை, மற்றவர்களைப் பார்த்து வளர்த்துக் கொள்ள முடியும். மொழி பிரச்னை ஒரு கவலையா? ஒரு மனிதனால் ஒரு மாதத்தில் பிற மொழிகளை கற்றுக் கொள்ள இயலும். இந்த உலகத்தின் கதவுகள் சாத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அடைக்கபடுவதில்லை. வேண்டும் வேண்டும் என்கின்ற ஆசையை மட்டும் விட்டு விடாதிர்கள். அதுதான் உங்களை உற்சாகப்படுத்தும் மந்திரத் தீ. அது மனதில் கொழுந்து விட்டு எரிந்தால் எந்த சூழ்நிலையும் நமக்கு சாதகமாக மாறிவிடும். பயம், எதிர்மறை எண்ணம் யாவும் தூள் தூளாகும். அப்புறமென்ன..? இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும். துணிந்த உள்ளம் துணிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும் என்று நொடி பொழுதும் உற்சாகமாக பாடி கொண்டே இருப்பிர்கள்.
    எக்காரணத்தை கொண்டும் நமக்கு இதெல்லாம் சரி பட்டு வராது என்று முடிவு கட்டி விடாதிர்கள். அது எதிர்மறை எண்ணத்தின் வௌப்பாடு. துணித்து இறங்குங்கள்.
    சாதனைக்குத் துணிந்து விட்டால் எந்த ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும். நீங்கள் நிச்சயம் வெற்றி அடைவீர்கள் அந்த ஏகாம்பரம் போல.

    வளமான வாழ்வின் அஸ்திவாரம்

    சென்றமாத இதழில் வளமான வாழ்வின் அஸ்திவாரத்திற்கு, தன்னைத் தான் அறிதல், தன்னைப் போல் பிறரை நினைத்தல், தொடர்பு கொள்ளும் திறமையும், உறவை வளர்க்கும் தன்மையும், பக்குவமாய் கேள்வி கேட்பதும், பளிச்சென்று பதில் கண்டுபிடிப்பதும் உட்பட பல கருத்துக்களைப் பார்த்தோம். தொடர்ந்து இன்னும் சில கருத்துக்களைப் பார்ப்போம்.
    தெளிவாக இயங்குவதும், சிக்கலில் தெளிவான முடிவு எடுப்பதும்
    சிக்கல் இல்லாத வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை. சிக்கல் இருந்து கொண்டே இருக்கும். அதற்குரிய தீர்வும், ஒன்றல்ல பலவாகவும் இருக்கும்.
    உதாரணத்திற்கு, ஒருவர் நமக்கு பிரச்சனைக்குரியவராக இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அதை எப்படி சமாளித்து, தீர்வு காண்பது என்பதைப் பார்ப்போம்.
    நாம் நேரடியாகச் சென்று அவரது, இன்ன இன்ன காரியங்களால் நமக்கு பிரச்சனையாக உள்ளது என்று விளக்கிக் கூறி, அவரை தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளலாம். நாம் நம் பிரச்சனையை அவரிடம் எடுத்துரைக்கும் நேரத்தைச் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். அவரால் பிரச்சனை நமக்குத் தோன்றிய உடனே அவரைப் பார்த்து விவாதிக்கக்கூடாது. அது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.
    மேலும் நமது பேச்சு அவரை குறை, குற்றம் சொல்லுகிறபாணியில் அமைந்துவிடக் கூடாது. ஏனென்றால், பிரச்சனை நமது, அதற்கு தீர்வு காண அவருடைய ஒத்துழைப்பைத் தேடி வந்துள்ளோம். ஆகையினால் நம் பிரச்சனை தீர்வதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டியது அவசியம். அந்தத் தீர்வால் அவருக்கு விளையும் நன்மை என்ன என்பதையும் அவருக்கு தெள்ளத் தெளிவாக புரிய வைக்க வேண்டியது நம் கடமையாகும்.
    அச்சத்தையும், பயத்தையும் விட்டுவிட்டு, உறுதியோடு, தன்னம்பிக்கையுடன் பிரச்சனையைச் சந்திப்போமானால், தெளிவான தீர்வு கிடைப்பது நிச்சயம். எதற்கும் தயங்கக்கூடாது. அது நேரத்தை வீணாக்கும். பிரச்சனையைப் பார்த்து பயந்தால் அது பெரும் பிரச்சனையாகிவிடும். பிரச்சனை பெரியதானாலும், சிறியதானாலும், தாமதப்படுத்தாது உடனுக்குடன் தீர்வு கண்டு பழகிவிட்டால் வாழ்வு வளமாக அமைவதில் சந்தேகமில்லை.
    சூழலைச் சமாளிக்கும் ஆற்றல்
    உணர்ச்சிகளை உள்வாங்கிக் கொள்ளுதல்
    இறுக்கத்தை, இலகுவாக்கிக் கொள்ளுதல்
    சூழலை சமாளிக்கும் ஆற்றல் என்பது உணர்ச்சிகளை உள்வாங்கி சரியான முறையில் அதை வெளிப்படுத்தும் திறனிலும் மற்றும் செயல்படும்போது நிகழும் அழுத்தம், இறுக்கம் முதலான மனநோய்களுக்குள் சிக்கி, செயலற்றுப் போய்விடாது, உடனுக்குடன் அதிலிருந்து விடுபட்டு முன்னேறிச் செல்லும் தன்மையையும் பொருத்து வளர்ச்சி நிலை அமைகின்றது.
    உணர்ச்சிகளை உள் வாங்குதலும், இறுக்கத்தை இலகுவாக்குவதும்
    சுற்றுச்சூழலில் இருந்து வரும் உணர்வுகள் இதயத்துள் நுழைந்து மூளைக்குச் சென்று சரியான நிலையில் வெளிப்பட வேண்டும். அப்போதுதான் அது ஆனந்தமளிப்பதாக, அமைதி மிக்கதாகத் திகழும். நம் இதயத்தில் இருந்து மட்டும் வெளிப்படும் உணர்வுகள் அறிவுப்பூர்வமாக இருக்காது. அது தான் தோன்றித்-தனமானதாகத் தான் இருக்கும். நம் மூளையில் இருந்து மட்டும் வெளிப்படும் உணர்வுகள், ஈவு இரக்கம் அற்றதாக இருக்கும். ஆகையால் வெளிச்சூழலில் இருந்து வரும் உணர்வுகள், நம் இதயத்திற்கும், மூளைக்கும் சென்று வெளிப்படும் போதுதான், அது ஆரோக்கியம் மிக்கதாக இருக்கும்.
    உணர்வுகள் தான் ஒருவரை ஒழுங்குபடுத்துகின்றன. நேர்மறைஇயக்கம் உடையவராகவும், எதிர்மறைஇயக்கம் உடையவராகவும், ஒருவர் இயங்க மிக முக்கிய காரணமாக அமைவது உணர்வுகளே. உணர்வுகளை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதை முறைப்படுத்தி நல்ல விதமாய் வெளிப்படுத்த முடியும்.
    நம்மிலிருந்து வெளிப்படும் உணர்வு நம்மை மட்டும் பாதிப்பதில்லை. அது ஒரு தொடர் சங்கிலி போன்று அனைவரையும் பாதிக்கக்கூடியதாகும். நம்மிலிருந்து வெளிப்படும் எந்த வகையான உணர்வானாலும் சரி (கோபம், வெறுப்பு, ஆனந்தம்) அது நம்முடைய தன்மையின் வெளிப்பாடு தான் என்று பொறுப்பேற்க வேண்டும். அப்படி பொறுப்பேற்கும் போது, நாம் அந்த உணர்வை முறைப்படுத்தி வெளிப்படுத்த முடியும்.
    அதுபோல், நம் சுயநலம் பாதிக்கப்படும் அளவைப் பொறுத்து மன இறுக்கமானது, சிறியதாகவும், பெரியதாகவும் நம்முள் ஏற்படுகின்றது. மனஇறுக்கம் நம்முள் ஏற்பட்டதற்கான அறிகுறியாக, எண்ணப் பிதற்றல், உணர்ச்சிகளில் குழப்பம், நடத்தையில் நடுக்கம், உடலில் ஏற்படும் மாறுபாடு என பல்வேறு அறிகுறிகளை அது நம்மில் இருந்து வெளிப்படுத்துகின்றது.
    இத்தகைய தருணத்தில் அதில் இருந்து விடுபட நாம், யோகா பயிற்சி செய்தல், நன்றாக ஓய்வு எடுத்தல், மருத்துவரை கலந்தாலோசித்தல், உடற்பயிற்சி செய்தல், நகைச்சுவை காட்சிகள் போன்றவற்றில் ஈடுபட்டு அத்தகைய இறுக்கத்தை இலகுவாக்கி, மீண்டும் வாழ்வைத் திட்டமிட்டு, பிரச்சனைகளைச் சரியான முறையில் எதிர் கொண்டால், நமக்கு வெற்றி நிச்சயம்.
    ஆகையினால் நாம் அனைவரும் நம்மில் உள்ள சமூகம் சார்ந்த சக்தி, சிந்தனைத் தொடர்பான ஆற்றல் சூழலை சமாளிக்கும் திறன் போன்றவற்றைநாளுக்கு நாள் மெருகேற்றிக் கொண்டே இருப்போமானால், வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று சந்தோசமாக இருப்போம்.

    மாற ஆசைப்படுகிறீர்களா?

    “நேற்று என்பது வெறும் கனவு
    நாளை என்பதோ கற்பனை மட்டுமே
    இன்று சிறப்பாக வாழ்ந்தால்
    அது நேற்றைய கனவையும் இனிமையாக்கும்
    நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்
    அதனால் இன்றைய தினத்தைக் கவனி
    அதில் தான் விடியலுக்கான தீர்வே உள்ளது”

    மகாகவி காளிதாசரின் ஒரு கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு தான் இது. இதில் ஒருவருடைய வாழ்க்கை எத்தனை நீண்டதாக இருந்தாலும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் என்னவோ நிகழ்காலம் மட்டுமே என்கிறார்.
    நல்லதோ, கெட்டதோ பல நிகழ்வுகள் நடந்து முடிந்து, நமது வாழ்க்கையின் வரலாறாகப் பதிவாகிவிட்டது. கடந்து போன அந்தக் காலத்தில் நடந்து முடிந்திருக்கிற நிகழ்வுகளை நம் விருப்பப்படி மாற்றியமைத்திட முடியாது.
    இனி எத்தனை காலம் நாம் இருக்கப் போகிறோம்? அந்தக் காலத்தில் என்னவெல்லாம் நடக்கப் போகின்றன? என்ற கேள்விக்குறியை எழுப்பும் எதிர்கால நிகழ்வுகளை நாம் எட்டிப்பார்க்க முடியாது.
    உண்மை நிலை இப்படி இருக்கும்போது நம் கட்டுப்பாட்டில் இல்லாத கடந்த கால நிகழ்வுகளின் நினைவுகளிலும், எதிர்காலக் கனவுகளிலும் மூழ்கிக்கொண்டு, நம் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நிகழ்காலத்தை நாம் வீணடித்துக் கொண்டிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கையானது.
    இந்தக் கணம் மட்டுமே நம்முடையது. நாம் நினைத்தபடி எப்படியும் நடந்துகொள்ள இந்தக் கணத்தில் மட்டுமே முடியும். முழுமையாக நம்மால் செயலாற்ற முடிந்த இந்த கணத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நமது வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படுகிறது.
    எனது ஆசிரியர் திரு. த. வரதராஜன் அவர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு கருத்து என் நினைவுக்கு வருகிறது. “80 வயதில் நாம் கம்பை ஊன்றி நடக்கப் போகின்றோம் என்பதற்காக இப்போதே கம்பை ஊன்றி நடக்கப் பழகலாமா?” என்பார். ஆமாம், நாம் அதிகமாகக் கோட்டை விடுவது நிகழ்காலத்தைத் தான்.
    கடந்த காலத்தில் அப்படியாகி விட்டது, இப்படியாகி விட்டது என்று வருத்தப்பட்டும், நாளை என்ன நடக்குமோ? என்று கவலைப்பட்டுக் கொண்டும் இருந்தால் என்ன நிகழ்ந்து விடப்போகிறது. நேற்றைய வருத்தங்களால் கடந்த காலம் மாறப்போவதுமில்லை. நாளைய கவலைகளால் எதிர்காலம் சிறந்துவிடப் போவதுமில்லை. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் எல்லா வெற்றிகளுக்கும், மேன்மைகளுக்கும் அடிப்படையான சூட்சுமமாக இருப்பது கடந்த காலமோ, எதிர்காலமோ அல்ல. இந்த கணம் மட்டுமே. இந்தக் கணத்தில் தான் நம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியும். எனவே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமானது இந்தக் கணமே.
    உதாரணமாக, இரவில் நமது கிராமத்தில் இருந்து 100 கி.மீ. தூரமுள்ள நகருக்குக் காரில் செல்வதாகக் கொள்வோம். இருட்டில் பயணம் மேற்கொள்வதால் நாம் சென்று சேரும் நகர் வரையிலான 100 கி.மீ.க்கும் தெருவிளக்கு வேண்டும் என்பது அவசியமில்லை. நமது காரின் முன் விளக்குகள் சரியாக எரிந்தாலே போதும். பயண தூரம் அத்தனையையும் சிரமம் இன்றிக் கடந்து விடலாம்.
    காரின் முன் விளக்குகளால் சில அடி தூரங்கள் மட்டுமே தான் வெளிச்சத்தைத் தர முடியும் என்பதால் பயணத் தூரம் வரை தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பது நகைப்புக்குரியதாகி விடுகிறது. இதைப்போலத் தான் நாம் ஒவ்வொருவரும் எதிர்காலத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
    இதை மிக அழகாக தாமஸ் கார்லைல் “நம்முடைய முக்கியமான வேலை தூரத்தில் மிக மங்கலாகத் தெரிவது என்ன என்று தெரிந்து கொள்வதல்ல. நம் கண் முன்னால் இருப்பது என்ன என்று தெரிந்து கொண்டு அதைச் சிறப்பாகச் செய்வது தான்” என்று கூறியிருப்பார். கார்லைல் கூறியபடி இந்தக் கணத்தை நாம் எல்லோரும் சிறப்பாக உபயோகித்தால் எதிர்காலம் தானாகச் சிறப்பாய் அமைந்துவிடும்.
    கடைசி வரை நம்மால் செயல்பட முடிந்த காலம் நிகழ்காலம் மட்டுமே என்பதை இதன் மூலம் அறியலாம். எனவே நிகழ்காலத்தில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டும். நேற்றைய நிகழ்வுகளில் இருந்து ஏதாவது பாடம் இந்தக் கணத்தில் உணர்வோமானால் அது நம்மை பக்குவப்படுத்தி அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். நாளைய நாளின் வெற்றிக்காகத் திட்டமிட்டு ஏதாவது இந்தக் கணத்தில் செய்வோமானால் அது நம்மை முதல்நிலை நோக்கி முன்னேற்றும். ஆக, இந்த கணத்தில் நாம் மேற்கொள்ளும் செயல்தான் நேற்றைய அனுபவத்திற்கும், நாளைய நடப்பிற்கும் பாலமாக அமைந்து வெற்றியை ஈட்டித்தரும். எனவே நமக்குத் தரப்பட்டிருக்கும் நேரத்தில், நமக்கு அமைந்த சூழ்நிலையில் எப்படி முடிந்த அளவு சிறப்பாகச் செயல்படலாம் என்று யோசித்து அதன் வழி செயல்படுங்கள்.
    மாற ஆசைப்படுகிறீர்களா? அதற்கான முதல் முயற்சியை இந்தக் கணத்திலேயே ஆரம்பியுங்கள். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்கான முதல் அடியை இந்தக் கணத்தில் வையுங்கள். நாளை என்பது நம்மிடம் இல்லை என்பதை உணர்ந்து, நம்மிடம் உள்ள இந்தக் கணத்தையே சரியாகப் பயன்படுத்துங்கள்.
    காளிதாசர், “நதி நீரோட்டத்தில் நாம் ஒரு முறை காலை நனைத்த நீரில் இன்னொரு முறை நனைக்க முடியாது. ஒவ்வொரு முறையும் நீர் புதிதாகவே வரும். அதைப்போல தான் கால ஓட்டத்தில் ஒவ்வொரு கணங்களும் புதியவையே. இந்தக் கணத்தில் வாழும் முறையைப் பொறுத்தே நமது வெற்றிகளும், தோல்விகளும் தீர்மானிக்கப்படுகின்றன” என்று சொன்னதுபோல் நமது முழுக்கட்டுப்பாட்டில் இருப்பது இந்தக் கணம் தான். அதில் தான் வாழ்க்கையின் வெற்றிச் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

    மேடை, மாலை, கைத்தட்டல் – 2

    தரையில் கிடத்தப்பட்டுள்ள இருபது அடி நீளமுள்ள ஒரு பலகை மீது உங்களை நடக்கச் சொன்னால், நடப்பீர்களா? நடப்பதென்ன, ஓடவே செய்வீர்கள் அல்லவா? ஆனால், அதே பலகையை, நூறடி உயரம் கொண்ட இரண்டு கட்டிடங்களன் உச்சிகளை இணைக்குமாறு கிடத்தி அதன் மீது நடக்கச் சொன்னால் …… !
    மேடையில் பேச ஒரு வாய்ப்பு கிடைக்கும் பொழுது, நம் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு சிக்கல் வருவது இது போன்ற ஒரு பயத்தினால்தான். ஆனால், ஒரு சர்க்கஸ் வீரர் இதை எந்த விதமான பயமுமின்றிச் செய்கிறாரே,
    அது எப்படி ?
    அதற்குக் காரணம் அவர் எடுத்துக் கொண்ட பயிற்சிதான். மேடைப் பேச்சையும் இது போலவே நாம் பழகிக் கொள்ளலாம். அந்தப் பயிற்சிப் படிகள் என்னென்ன?
    ஒரு தலைப்புப் பற்றி நம்முடைய புதுமையான கருத்து ஒன்று.
    அதற்குண்டான தகவல்கள் மற்றும் தரவுகளைத் திரட்டுதல்
    உரைக்கு மெருகு ஏற்றுதல் அல்லது அதை அலங்கரித்தல்.
    தயாரித்த உரையை பல முறை பேசிப் பழகுதல்.
    மேலே கூறப்பட்டுள்ள நான்கும் தான் எந்த ஒரு பேச்சுக்கும் அடிப்படை. பழகுநர் முதல் பழுத்த பேச்சாளர் வரை இந்தப் பாதையில் தான் பயணம் செய்கிறார்கள். ஒரே ஒரு வித்தியாசம் தான். நாம் மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டு கடக்கும் இந்த நான்கு படிகளையும், தேர்ந்த பேச்சாளர்கள் மிக எளதாகவும், குறைவான நேரத்திலும் தாண்டி விடுகிறார்கள். அதுவே நம்மை ஆச்சரியப்பட வைக்கும் அவர்களுடைய திறமை. எடுத்துக்காட்டாக “முயற்சி” என்பது நமக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு என்று வைத்துக் கொள்வோம். உடனேயே, “முயற்சி திருவினையாக்கும்’ ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ போன்ற பழமொழிகள் நம் சிந்தனையை முற்றுகை இடும். முயல், ஆமை, முயலாமை போன்ற வார்த்தைச் சிலம்பங்களும் கூட்டணி அமைக்கும்.
    “ஆப்ரஹாம் லிங்கன், தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோர் தோல்விகளைத் தழுவிய கதைகள் நினைவிற்கு வரும். இந்தப் பாதையில் நம் உரை தயாரிக்கப் பட்டால் அது “விர்ர்ர்ர்’ … என்று கிளம்பி மேலே பறக்காமல் “பொத்’ என்று கீழே விழுந்து விடும். ஏன்?”

    இதுதான் எல்லோருக்கும் தெரிந்ததாயிற்றே. கேட்டுக் கேட்டு அலுத்துப் போலிருக்கும் அல்லவா? நாம் வேறு ஏதாவது கருத்தை ஒரு மாறுதலான கோணத்தில் சொல்ல வேண்டாமா ? முயற்சி என்ற பதத்தை விளக்குவதை ஓரிரு வரிகளல் முடித்து விட வேண்டும். பின்னர், முயற்சி என்பது நம் அனைவருடைய சக்திக்கு உட்பட்டது தான். ஆனால், கடந்த கால எதிர்மறை அனுபவங்களன் காரணமாக இதை நாம் நம்ப மறுக்கிறோம். இதற்கு உண்டான உளவியல் காரணங்கள் இவை இவை என்று சொல்லலாம்.
    உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடுகிறேன். என் நண்பர் ஒருவர் பட்டப் படிப்பு படிக்கும் காலத்தில் கல்லூரியில் நடந்த ஒரு ஓட்டப் பந்தயதில் கலந்து கொள்ள விரும்பினார். பள்ளப் பருவத்திலிருந்தே இது போன்ற போட்டிகளல் பங்கேற்று, பரிசுகள் வென்றிருந்தால் தான் இங்கே அனுமதி என்று சொல்லி விட்டனர் நிர்வாகிகள். இவரது உடல் தோற்றமும் விளையாட்டு வீரர் போல் இருக்காது. எனவே, நண்பர் துவண்டு போனார்.
    பின்னர், வீட்டின் அருகே இருந்த ஒரு திடலில் தன்னந்தனியே ஓடத் தொடங்கினார். குறுகிய தூர ஓட்டம் என்று ஆரம்பித்தது, நாளடைவில் நீண்ட தூர ஓட்டமாக (ஙஹழ்ஹற்ட்ர்ய்) மாறியது. பின்னர், கல்லூரியில் தொடங்கி, பல்கலைக் கழகம், தேசிய அளவிலான போட்டிகள் என்று பல தடகளங்களல் பங்கேற்று, வெற்றி அடைந்தார்.
    அனுமதி மறுக்கப்பட்ட பொழுது அவர் சோர்ந்து போனது இயல்பான ஒன்றாகும். ஆனால், அந்த அளவிலேயே நின்று விடாமல், ஆழ்ந்து சிந்தித்து, தனது பலம் என்ன என்பதைக் கண்டறிந்தார். குறுகிய தூர வேக ஓட்டம் தனக்குப் பொருந்தாவிட்டாலும், நீண்ட தூர ஓட்டத்தைத் “தாக்குப் பிடிக்கும்” திறன் தன்னிடம் இருக்கிறது என்று புரிந்து கொண்டார். தொடர் பயிற்சி மூலம் அதை உறுதியாக்கினார். விடாமுயற்சியால் கோப்பைகளையும் பதக்கங்களையும் குவித்தார். கண்டறிந்தார். குறுகிய தூர வேக ஓட்டம் தனக்குப் பொருந்தாவிட்டாலும், நீண்ட தூர ஓட்டத்தைத் “தாக்குப் பிடிக்கும்” திறன் தன்னிடம் இருக்கிறது என்று புரிந்து கொண்டார். தொடர் பயிற்சி மூலம் அதை உறுதியாக்கினார். விடாமுயற்சியால் கோப்பைகளையும் பதக்கங்களையும் குவித்தார்.
    இந்த உதாரணம் நமக்கு மிக அண்மையானது. செய்தியும் புதியது. நமது பேச்சில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டால், மக்கள் கவனிக்கத் தொடங்குவார்கள். முயற்சி என்பதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதையும் நாம் இங்கே விளக்குகிறோம், அல்லவா. அட, நம்மாலும் கூட பின்பற்ற முடியும் போலிருக்கிறதே, என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். அதுவே நம்முடைய பேச்சின் முதல் வெற்றியாகும்.
    இப்படித்தான் ஒரு உரையின் மையப் புள்ள அமைய வேண்டும். அதுவே சபையின் கைத்தட்டலைப் பெற்றுத் தரும் !

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தமிழுக்குச் செய்த மாபெரும் தொண்டு காலத்தால் அழியாதது. ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல்’ என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகளுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் கவிமணி . சிறந்த கவிதைப் படைப்புகளையும், மொழி பெயர்ப்புகளையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், சமூகத் தொண்டையும் செய்து சாதனை படைத்தவர்.
    ‘கம்பனைப் புரிந்து கொண்ட தமிழ்நாடு, பாரதியைப் புரிந்து கொண்ட தமிழ்நாடு முற்றாகப் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு கவிஞர் கவிமணி’ என்று கண்ணதாசன் வியந்து போன்றிய கவிஞர்.
    கவிமணி, மொழிப்பற்று, சமுதாய மேம்பாடு, நாட்டின் விடுதலை, பரந்துபட்ட ஆன்மீகம் போன்ற பலதிறப் பண்புகளைக் கொண்டு வாழ்ந்தார். அன்பும் எளமையும் அவர் வாழ்க்கைத் தடங்களாக அமைந்தன. தன்னுடைய கவிதைகளை கோடிக்கணக்கான பிஞ்சு நெஞ்சங்களல் ஒலிக்கச் செய்தவர் கவிமணி. ‘கள்வனின் காதலி’ எனும் திரைப்படத்தில் கண்டசாலா மற்றும் பானுமதி குரலில் ‘வெய்யிற் கேற்றநிழலுண்டு, வீசுந் தென்றல் காற்றுண்டு’ என்றபாடலுக்கு சொந்தக்காரர்.
    1976ம் ஆண்டு ஜுலை-27ம் தேதி குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகில் உள்ள தேரூரில் பிறந்தார் கவிமணி. தந்தை சிவதாணுப்பிள்ளை, தாய் ஆதிலட்சுமி அம்மையார். 1901ல் உமையம்மையாரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். இவர் நாகர்கோவிலில் தொடக்கப்பள்ள ஆசிரியராக தனது பணியைத் துவக்கி திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகம் தயாரித்த தமிழ்ப் பேரகராதியின் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றியவர்.
    கவிமணி, தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளல் நன்கு எழுதவும், பேசவும் ஆற்றல் பெற்றிருந்தார். ‘பாட்டய்யா’ என்று ஊரார் போற்றும் வண்ணம் பார்க்கின்ற, கேட்கின்ற பொருள்களையெல்லாம் பாடு பொருளாக்கி விரைந்து கவிபாடும் ஆற்றல் பெற்றவர். குமரி மாவட்டம் கேரள மாநிலம் தென்திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்பதில் களமிறங்கி தொண்டு செய்தவர்
    கவிமணி வெளியுலக ஆரவாரங்களலிருந்து ஒதுங்கி வாழ்ந்தவர். தேடிவந்த நியாயமான புகழைக் கூட தள்ள விட்டவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இவருக்கு தமிழ்ப் பேராசிரியர் பதவி தர முன்வந்தது. தமிழ்ச் சங்கங்கள் விருதுகள் வழங்க விழைந்தன. அவற்றையெல்லாம் கவிமணி ஒதுக்கி விட்டார். தமிழறிஞர்கள் எஸ்.வையாபுரிப்பிள்ளை, டி.கே.சி., அண்ணாமலை அரசர் போன்றோரின் வற்புறுத்தலின் பேரில் ‘கவிமணி’ என்ற விருதை ஏற்றார் தேசிக விநாயகம் பிள்ளை.
    ஆசிரியர் பணியில் இருந்தாலும் இவர் தமது ஓய்வு நேரத்தைக் கவிதைகள் புனைவதிலும், வரலாறு மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் செலவழித்தார். ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த காரணத்தால் சிறந்த ஆங்கிலக் கவிதைக் காவியங்களை, மொழிபெயர்ப்பு நூல் என்று வாசகர்கள் உணரமுடியாத வண்ணம். அன்னைத் தமிழில் அற்புதமாக மொழிபெயர்ப்பு செய்தார்.
    கவிமணியின் புகழ் பெற்ற மொழியாக்க நூல் உமர்கயாம் பாடல்கள். பதினோறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் உமர். ஈரான் நாட்டை ஆண்ட மாலிக்ஷா என்றசுல்தானின் அரசவை அறிஞர் மற்றும் ஜோதிடர். ஒரு ஆண்டிற்கு 365 நாட்கள் என்று அறிவித்த கணித மேதை. அவரது அற்புத நூல் ‘உமர்கய்யாம் பாடல்கள்’. ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்த இந்நூலைப் படித்த கவிமணி அதை தீந்தமிழில் தனக்கே உரித்தான பாணியில் மொழிபெயர்ப்பு செய்தார்.
    எட்வின் அர்னால்டு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய ‘லைட் ஆப் ஏசியா’ என்ற நூலை தமிழாக்கம் செய்தார். 1941ல் ‘ஆசிய ஜோதி’ என்ற பெயரில் இந்நூல் வெளியானது. புத்தரின் வரலாற்றை சுவை நிரம்ப விளக்கும் கவிதைக் காவியம் இது. கவிமணியின் ஆசிய ஜோதியில் தோய்ந்து களத்த அரசவைக் கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை “தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை, தினமும் கேட்பதென் செவிப்பெருமை’ என்று புகழ்ந்துள்ளார்.
    சமூக நலனில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்தார் கவிமணி. மக்கள் அனைவரும் விவேகமும், விழிப்புணர்வும் பெறத்தக்க வகையில் அவருடைய கவிதைகள் இருந்தன. பெண்ணுரிமைக்காக அவர் எழுதிய பல பாடல்களல் மிகவும் பிரபலமான ஒன்று ‘மங்கையராய் பிறப்பதற்கே – நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா’ என்னும் உள்ளம் நெகிழ வைக்கும் பாடலாகும். இப்பாடலை இன்றளவும் தமிழ்நாட்டு மேடைகளல் பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் கையாண்டு வருகின்றனர்.
    கவிமணிக்கு குழந்தைப்பேறு இல்லையாயினும் நாட்டிலுள்ள குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளாகக் கருதும் கனிவைக் கொண்டிருந்தார். இவரது கவிதைத் தொகுப்பில் தலையாயது ‘மலரும் மாலையும்’ என்ற கவிதை நூலாகும் (1937). இவர் ஒரு சிறந்த குழந்தைக் கவிஞர் என்பதையும், வரலாற்றின் நிகழ்வுகளைக் கவிதையாக்கிச் சிறப்புற வழங்குபவர் என்பதையும் இத்தொகுப்பு காட்டும்.
    குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் படித்து மகிழ்வதற்கு ஏற்றவகையில் இனிய சந்தங்களுடன், அரிய கருத்துக்களைக் கொண்ட அற்புதப் பாடல்களை இயற்றியுள்ளார். ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே துள்ளக் குதிக்குது கன்றுக் குட்டி’ இந்தப் பாடலை அறியாத சிறியோர் பெரியோர் யாருமில்லை என்றே கூறலாம்.
    கவிமணியின் மொழிநடை எளமையும், இனிமையும் நிரம்பியது. நமது பண்பாட்டில் தோய்ந்து எழுந்த சொற்களால் ஆனது. அவரது கவிதை-நடையிலும் சரி, உரை-நடையிலும் சரி, முழுக்க முழுக்க நமது மரபின் மணம் கமழும். தெள்ளத் தெளிவாகவும், எல்லோர்க்கும் எளதில் புரியும்படியாகவும் அவர் மொழியைக் கையாண்டுள்ளார். அவரது கவிதைகளன் பொருளை அறிய அகராதியைப் புரட்ட வேண்டியதில்லை. படித்ததுமே உள்ளத்தில் பளச்சென பொருள் விளங்கும் நடை அவருடையது.
    காலத்தேவன் வளர்த்த முதுமையில் கவிமணியின் செழுமையான உடல் வறட்சி கண்டது. எடுப்பான தோற்றம் தளர்ச்சி பெற்றது. வாழ்வாங்கு வாழ்ந்த கவிமணி 26.9.1954ல் மறைந்தார். 2005ம் ஆண்டு கவிஞரை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு நினைவுத் தபால் தலை வெளியிட்டது. தமிழுக்குத் தொண்டு செய்து, கவிதை உலகில் நீங்கா இடம் பெற்றவர் கவிமணி. கவிமணி மறைந்தாலும் அவரின் தமிழ்ப்பணி மக்கள் மனங்களல் என்றென்றும் நிறைந்திருக்கும்.

    பாதை மாறிய பயணங்கள்

    வெளிநாடுகளையே எத்தனை ஆண்டுகளுக்குத் தான் பேசிக்கொண்டிருப்பது?
    என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்ஙு ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?
    நம் நாட்டில், நம் மாநிலத்தில், நம் மாவட்டத்தில், நம் ஊரில், நம் வீட்டில் ஏன் நமக்குள் என்ன இல்லை?
    எல்லாமும் உள்ளது.
    இல்லை, பற்றாக்குறை என்போருக்குத் தம்மிடம் இருப்பதைக் காணும் பார்வைக் குறைபாடு தான். தாமஸ் ஆல்வா எடிசன் கூறினார், “சரியான பாதையைத் தேர்வு செய்து, வெற்றிகளைப் பெறுவதற்கு ஒரு சதவீதம் திறமையே போதும்” மீது 99% என்ன தேவை?
    சொல்வதற்கு முன்பு, சில உதாரணங்கள் பார்ப்போம்.
    ஹெலன் கெல்லர்:
    பிறந்து ஒன்றரை வயது வரை திடகாத்திரமான குழந்தை; 84வது வயதில் 1968ல் இறக்கும்போது இவர் விட்டுச் சென்றவை உலகம் போற்றும் 12 புத்தகங்கள். அதில் “தி ஸ்டோரி ஆப் மை லைப்” முக்கியமானது. அமெரிக்காவில் அல்பாமா மாகாணத்தில் டஸ்கம்பியாவில் பிறந்து, வளர்ந்தபோது ஒன்றரை வயதில் திடீரென மூளையிலும் வயிற்றிலும் இரத்தக்கசிவு ஏற்பட்டது. விளைவு; பார்வை பறிபோனது; பேச முடியவில்லை; காது, கேட்கும் சக்தியை இழந்தது.
    கடுமையான முயற்சி, பயிற்சி, உழைப்பால் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தின் மொழிகளை பிரெய்லி முறையில் கற்றுக்கொண்டார். 1904ல் பி.ஏ. பட்டம் பெற்று, காது கேளாத, பார்வையற்ற முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். மாபெரும் பேச்சாளராக, சமூக ஆர்வலராக, எழுத்தாளராக, மனித நேய மிக்கவராக வாழ்ந்தவர்.
    வெளிநாட்டு உதாரணங்களையே எத்தனை முறைபடிப்பது? இதோ நம் பகுதி:
    வெங்கடேசன்:
    தருமபுரி அருகில் எம். ஒட்டப்பட்டியில் பெருமாள் என்ற கூலி விவசாயிக்கு மகனாகப் பிறந்து 10 வயது வரை எல்லாச் சிறுவர்களையும் போலவே இருந்தார். 10வது வயதில், வேலை செய்யும்போது மின் ஒயரில் தவறுதலாகக் கை வைத்ததால், இரு கைகளும் கருகிவிட்டன. ஆபரேஷன் மூலம் கைகள் நீக்கப்பட்டன. இன்று அவருக்கு 25 வயது.
    தன்னம்பிக்கையோடு, உற்சாகத்தோடு, கைகள் இல்லாததைப் பற்றிக் கவலைப்படாமல் கால்களால் எழுதவும், புத்தகங்களைப் புரட்டவும், நீச்சல், சைக்கிள் எனப் பல பயிற்சிகள் செய்யவும் மேற்கொண்டார். இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து, இப்பொழுது எம்.எட். படித்து வருகிறார்.
    2011 டிசம்பரில் மகாராஷ்டிராவில் நடந்த பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் நான்கு பிரிவுகளிலும் பங்கேற்று நான்கு பதக்கங்களைப் பெற்று, இந்திய அளவில் தனி நபர் சாம்பியன் என்ற பட்டத்தை வென்றார்.
    இன்னும் ஓர் உதாரணம் பார்ப்போமா?
    ஜனார்த்தனன்:
    21 வயதில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவில் வேலை பார்க்கிறார். இதுபோல் பலர் இருக்கிறார்களே என உங்கள் மனம் நினைக்கும்.
    இவரும் 8 வயது வரை குறும்புகள் செய்யும் முழுமையான சிறுவன் தான். சிக்கிக்கொண்ட பட்டத்தை மின்கம்பியிலிருந்து இரும்புக் கம்பியால் எடுத்தபோது மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானார். விளைவு, வலது கை முழுவதும், இடது கையில் பாதி, இடது காலில் பாதி, வலது கால் பாதம் என அனைத்தும் துண்டித்து எடுக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
    கை, கால்கள் முழுமையாக இல்லாவிட்டாலும், தன்னிடம் எஞ்சியிருக்கும் மூளை, வாயை வைத்து ஏதாவது செய்ய எண்ணினான். உதடுகள் தூரிகை பிடிக்கும் விரல்களாயின. அற்புதமான தத்ரூபமான ஓவியங்களை வரைந்தான். இருமுறைஜனாதிபதியின் விருதும் பெற்றான்.
    இடது முழங்கை முடிவில் பிசிறு போல் நீட்டி இருக்கும் சதைத் துண்டால் கேரம் விளையாடினான்; கீபோர்டு வாசித்தான்; கம்ப்யூட்டர் இயக்கினான். இன்று சாதனைகள் புரியும் வாலிபன்.

    இதுபோல் இன்னும் பலர் உங்கள் பகுதியில், உங்கள் வீட்டுக்கு அருகிலேயே கூட இருக்கலாம். இவர்களோடு உங்களை ஒப்பிடுங்கள்.
    இந்த ஒப்பீடு தான் சுயஉந்துதலை உங்களிடம் உருவாக்கும். இந்தச் சுயஉந்துதல் உங்களைச் சாதனை என்ற பாதைக்குத் திருப்பிவிடும். இதற்குத் தேவை, 99% கடின உழைப்பும், இடைவிடாமுயற்சியும் தான்.
    உலகம் என்பது நல்லது கெட்டது இரண்டும் கலந்தது தான். தமிழ்நாட்டில் இன்று சுமார் 15 லட்சம் மாணவர்கள் பள்ளி இறுதித்தேர்வு எழுதுகின்றனர். தோராயமாக சுமார் 2 கோடி மாணவர்கள் பல நிலைகளில் கல்வி கற்று வருகின்றனர்.
    இந்தக் கல்வி மொழி மற்றும் தொழிலுக்கான கல்வியே தவிர, வாழ்க்கைக் கல்வி அல்ல.
    இளைஞர்களின் மனோபாவமும் விட்டேற்றியாக, முழுமையான ஈடுபாடில்லாதது போல் தான் தோன்றுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல.
    1000 பேர் படிக்கும் இடத்தில் 10 பேர் தவறான செயல்களில் ஈடுபடலாம்; அது செய்தியாகப் பிரசுரிக்கப்படும் அதே நேரம் மீதி 990 பேர் அமைதியாகத் தான் இருந்தனர் என்பதை நாம் முழுமையாக மறந்து விடுகிறோம். அதைச் செய்தியாக வெளியிடுவதில்லை.
    மனிதன் விலங்கினத்தின் தொடர்ச்சி என்ற ஆய்வுகள் உண்மை என்பதால் தான் சில சமயங்களில் மனிதப் பண்புகளை மறந்து, புறந்தள்ளி, மிருகமாகச் செயல்பட்டு விடுகின்றனர் சிலர். இந்தச் சிலரின் சூழலை ஆராய்ந்தால், அவர்களது செய்கைக்கு, பெற்றோர், ஆசிரியர், அரசாங்கம், சமுதாயம் என எல்லோருமே ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பது தெளிவாகும். பல ஏக்கர் நெற்பயிரினூடே களைகள் இருப்பது போல், இத்தகு கயமைப் பண்புள்ளவர்களை அடையாளம் கண்டு, உரிய கவுன்சிலிங் மூலம் பண்படுத்த முடியும்.
    மாணவப் பருவம் என்றில்லை. வயதானவர்களும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, பகையுணர்வு, ஆட்சி அதிகார வர்க்க ஒத்துழைப்பு, சட்டங்களின் மெத்தனம், ஆட்சியாளர்களின் அலட்சிய மனோபாவம் ஆகியவற்றால் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் அரிதான உயிரைக் கொலை செய்வது இன்று வாடிக்கையாகிவிட்டது. பிடிபட்டால், சிறை, ஜாமீன், மருத்துவ சிகிச்சை, சிறையில் பல வசதிகளுக்கு சோரம் போகும் சிறைஅலுவலர்கள், ஒத்தி வைக்கப்படும் நீதி, கருணையோடு காத்திருக்கும் மனுக்கள் இவற்றால் மக்களின் பார்வையிலிருந்தே மறைந்து, மகிழ்வான வாழ்க்கை நடத்துவோர் பலர் உள்ளனர்.
    நற்பண்புகளுடன், சமுதாய சேவை உணர்வுடன் ஆட்சி அமைந்தால் தான் “தலைவன் எவ்வழி – தொண்டன் அவ்வழி; மன்னன் எவ்வழி – மக்கள் அவ்வழி” என்று நல்ல மனித சமுதாயம் இருக்கும்.
    இன்று சாதாரணமாகப் பயணங்களில் நாம் பார்ப்பது என்ன?
    நல்ல பண்புகள் இல்லாத ஓட்டுனர்கள், பிறவாகனங்களுக்கு வழி தருவதில்லை; பிறவாகனங்களை முந்திச் செல்வதில் விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை; இரவு நேரங்களில் விளக்குகளை டிம் செய்வதையே மறந்துவிட்டனர்.
    இதுபோல் தான், இவர்கள் வாழ்க்கையும் உள்ளது. நியாயம், தருமம் என்று பேசக் கூடாது. பேசினால், ஆட்சியிலுள்ளவர்களைக் கூறி, அவர்கள் என்ன யோக்கியர்களா? என்று சமாதானப்படுத்திக் கொள்கின்றனர். எப்போதோ ஒருநாள் சாகப்போகிறோம்ஙு இப்போதே செத்துவிட்டால் என்ன குறைந்தாவிடும்? என்றஅகங்காரப் பேச்சு, மனிதாபிமானமின்றி, கடின உழைப்புக்கு விருப்பமின்றி, ஜாலியாக வாழும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
    பெரிய, சிறிய திரைகள்:
    முன்பு சினிமாக்களைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பும்போது, கதாநாயகனைப் போல் தவறுகளைத் தட்டிக்கேட்கும் தைரியம், மற்றவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் விருப்பம் இவை மேலோங்கி நிற்கும். சில நாட்களில் இந்த உணர்வுகள் மறைந்துவிட்டாலும் கூட, நினைக்கும் போதெல்லாம் உத்வேகம் உண்டாகும்.
    ஆனால் இன்று? குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு அருவருப்பான காட்சிகள், காதுகளில் நாராசமாய் ஒலிக்கும் வசனங்கள், பார்க்கும்போதே பழி வாங்கும் உணர்வை உண்டாக்கும் காட்சிகள் என மனிதர்களை விலங்குகளாக மாற்றத்தக்க பல தயாரிப்புகள் பெரிய திரையிலும், சிறிய திரையிலும் போட்டிபோட்டுக் கொண்டு வெளியிடப்படுகின்றன.
    இவைகளைத் தயாரிப்பது யார்? வெளிநாட்டுக்காரர்களா?
    இல்லையேஙு நம்மூர்க்காரர்கள் தான்.
    வித்தியாசமாக, புதுமையாகத் தயாரிப்பதாய் எண்ணிக்கொண்டு, நேயர்களும், ரசிகர்களும் விரும்புகிறார்கள் என்றபொய்க்காரணம் கூறிக்கொண்டு, சுய லாபத்துக்காக சமுதாயப் படுகொலையில் ஈடுபட்டுள்ளனர்.
    சில்லறைவணிகம், பெருந்தொழில்களில் முதலீடு, தடையில்லா மின்சாரம் எனப் பல சலுகைகள் பெற்று நம்மைச் சுரண்டும் மேல்நாட்டு நிறுவனங்கள் உண்டாக்கும் பாதிப்பை விட இன்றைக்கு மீடியா என்று சொல்லக்கூடிய பத்திரிக்கைகளும், டி.வி. தொடர்களும், சினிமாப் படங்களும் ஏற்படுத்தும் பாதிப்பு கலாச்சாரச் சீரழிவு மற்றும் மனிதாபிமானமற்றவாழ்க்கை.
    இதைச் சரி செய்ய முடியுமா?
    முடியும்… காத்திருங்கள்.

    வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!!

    பிறந்தது; படித்தது; மனதில் பதிந்தது குறித்து?
    என்னுடைய வேர் பல்லடம் அருகில் உள்ள புள்ளியப்பம்பாளையம் என்ற கிராமம். என்னுடன் பிறந்தவர்கள் 6 சகோதரிகள். எங்கள் குடும்பத்தில் என்னைத் தவிர யாருமே பள்ளிக்குச் சென்றதில்லை. எங்கள் குடும்பத்திற்கென்று இரண்டு எருதுகளும், ஒரு மாட்டு வண்டியும் மட்டுமே சொத்தாக இருந்தது. மேலும் சொல்ல வேண்டுமென்றால் என் அம்மாவிடம் இருந்தது மூன்று 9 கஜம் சேலைகள் மட்டுமே. அதில் ஒன்றை என் அம்மா உடுத்திக் கொள்வார்.

    Continue Reading »

    சாதிக்கலாம் நீங்களும்! சாதித்தவர் சொல்கிறார்…

    வில் சர்வீஸ் தேர்வு எனப்படும் குடிமைப் பணிகளுக்கான 2012ம் ஆண்டுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் 910 பேர் நாடு முழுவதும் தேர்வாகியுள்ளன. இதில் தமிழத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 104 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
    தமிழகத்தைச் சேர்ந்த 670 பேர், முதன்மைத் தேர்வு எழுதி, நேர்முகத் தேர்வுக்கு 183 பேர் முன்னேறி, இறுதித் தேர்வில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் பலர், வளர்ச்சியடையாத குக்கிராமங்களில் பிறந்து, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்தவர்கள். குறிப்பாக, விவசாயம் எங்கெல்லாம் ஆளுமை செலுத்துகிறதோ, அங்கு இந்தத் தேர்வுக்கு வானளாவிய மதிப்பு அளிக்கப்படுகிறது. வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அவர்களின் கவுரவத்தின் அடையாளமாக இதைப் பார்ப்பதால் சிறுவயதில் இருந்தே தங்கள் குழந்தைகளுக்கு ஐ.ஏ.எஸ். பற்றிய எண்ணத்தை உருவாக்குகிறார்கள்.
    சிறுவயதில் இருந்து சொல்லி வருவதால், அந்த குழந்தைகளின் மனதிலும் பசுமரத்தாணி போல, ஐ.ஏ.எஸ்.
    பற்றிய ஒரு பிம்பம் பதிந்து விடுவதால் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் இருந்து அதிக அளவில் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
    சமூக புரட்சிக்கு வித்திடும் வீரிய விதையான ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக இளைஞர்களின் வெற்றி விகிதம் அதிகரித்து வருவதற்கு இங்கே உருவாகியுள்ள சூழலும் ஒரு காரணம்.
    நுனி நாக்கு ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறமுடியும் என்கிறநிலை மாறிவிட்டது. இன்று அந்தந்த மாநில மொழிகளில் தேர்வுகள் எழுதுகிறார்கள். நேர்காணல்களில் மாநில மொழிகளிலேயே பேசுகிறார்கள். அதற்கென்றேபிரத்யேக மொழிபெயர்ப்பாளர்களை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கிராமப்புறஇளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார்கள்.
    சமீப காலங்களில் இந்திய அளவில் தென் மாநிலங்களில் உள்ளவர்கள், ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் பங்கெடுத்து வெற்றிவாகை சூடுகிறார்கள். இதற்குக் காரணம் சென்னை. சென்னையில் தமிழக அரசும், சில தனியார் பயிற்சி மையங்களும், தரமான பயிற்சியை வழங்குவதால் ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்றமாநிலங்களின் இளைஞர்கள் சென்னைக்குப் படையெடுக்கிறார்கள். முன்பெல்லாம் டெல்லி போன்றநகரங்களில் மட்டுமே சிவில் சர்வீஸ் பயிற்சி மையங்கள் இருந்தன. ஆனால் இன்று சென்னை போன்றநகரங்களில் பல பயிற்சி மையங்கள் அமைந்து இந்த வெற்றியை பெற்றுக் கொடுக்கின்றன.
    டெல்லியுடன் ஒப்பிடும்போது சென்னையில் பயிற்சிக்கட்டணம் குறைவு. அதைத்தவிர, நல்ல தரமான நூலகங்கள், மாணவர்களின் மீது தனிப்பட்ட அக்கரை போன்றகாரணங்களால் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்றவடமாநில இளைஞர்களும் சென்னை வந்து படிக்கின்றனர்.

    இந்தச் சாதனை குறித்து…
    என்னுடைய இரண்டாவது முயற்சியில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளேன். இந்த வெற்றிக்காக தினமும் 8 மணிநேரம் படிப்பதற்காக மட்டுமே செலவிட்டேன். முதல் முயற்சியில் நான் தேர்வில் வெற்றி பெறமுடியாமைக்குக் காரணம் என்ன என்று யோசித்தபோது சரியான திட்டமிடல் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். இரண்டாவது முயற்சியில் இதைத் தவிர்த்தேன். ஒவ்வொரு மாதமும் என்ன படிக்க வேண்டும் என்று ஒரு கால அட்டவணையை தயாரித்துக் கொண்டு அதன்படி படித்தேன்.
    மே மாதத்திலிருந்து நவம்பர் மாதம் முடிய பாடத்திட்டத்தை நன்கு அலசி, நல்ல தெளிவு ஏற்படும் வரை படித்தேன். டிசம்பர் முதல் மார்ச் வரை முதல் நிலைத் தேர்வின் கோணத்திலும், விருப்பப் பாடங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் படியும், இறுதியில் படித்தவற்றைத் திருப்பிப் பார்க்க வசதியாகவும் திட்டத்தை அமைத்துக் கொண்டேன்.
    தேர்வுக்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது,

    எத்தனை முடியுமோ அத்தனைக் கேள்வித்தாள்களுக்கும் பதிலளிக்க பயிற்சி மேற்கொண்டேன். நேர்காணல் கோணத்தில் தயாரிப்புகளை அமைத்துக் கொண்டு படித்தேன்.
    மற்றொரு மாற்றம் இரண்டாவது முயற்சியில் மெயின் தேர்வில் என்னுடைய பாடத்தை மாற்றியது. முதல் முயற்சியில் என்னுடைய பாடம் வேளாண்மை. கடந்த சில வருடங்களாகவே வேளாண்மை பாடங்களைத் தேர்வு செய்தவர்களுக்கு மதிப்பெண்கள் குறைவாகவே கிடைத்து வந்துள்ளதை அறிந்தேன். எனினும், இரண்டாவது முயற்சியில் வேளாண்மையைத் தவிர்க்காமல் அதையே தேர்ந்தெடுத்தேன். புவியியலும் கிட்டத்தட்ட வேளாண்மைக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததால் வேளாண்மை (அக்ரி) படித்த எனக்கு புவியியல் பெரிய கஷ்டமாகத் தெரியவில்லை.
    வேலைக்குச் சென்று கொண்டே படித்ததில் சரியான நேர மேலாண்மையை கடைபிடிக்க முடிந்ததா?
    நான் வங்கியில் நல்ல பணியில் இருந்தேன். முதல் முறைஎழுதும் போது பணியில் இருந்து கொண்டே தான் எழுதினேன். சரியாக தயாராவதற்குப் போதுமான நேரம் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில் என்னுடைய சகோதரர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் என்னுடைய வங்கிப்பணியை விட்டுவிட்டு முழு நேரமும் இந்தத் தேர்வுக்குத் தயாரானேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகும்போது சரியான நேர மேலாண்மையைக் கடைபிடித்தால் மட்டுமே போதிய அளவு தயாராக முடியும். தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும் என்பதால் போதிய அளவு நேரம் கிடைப்பது போன்று எனது அன்றாட அலுவல்களை அமைத்துக் கொண்டேன்.
    மெயின் தேர்வில் உங்கள் அனுபவம்…
    மெயின் தேர்வில் புவியியல் பாடம் தான் நான் தேர்ந்தெடுத்தது. சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் திரு. ஈ. சங்கர் அவர்கள் புவியியல் பாடத்தில் புலமை பெற்றவர். அவரின் வழிகாட்டுதல் எனக்குப் பெரிதும் உதவியது. எப்படி ‘நோட்ஸ்’ எடுத்துக் கொண்டு படிக்க வேண்டும். எப்படி எழுதினால் முழுமையான மதிப்பெண்கள் பெறமுடியும் என்பன போன்றசிறுசிறு விசயங்களைக் கூட கற்றுக்கொடுத்தார். உதாரணமாக, புவியியல் பாடங்களில் பதிலளிக்கும் போது எந்த அளவு கருத்துக்களை எழுதுகிறீர்களோ, அதே அளவு முக்கியத்துவத்தைப் படம் வரைவதிலும் செலுத்தினால் முழு மதிப்பெண்களைப் பெறமுடியும். உதாரணமாக, சதுப்பு நிலக்காடுகளைப் பற்றிய கேள்விக்கு விடையளிக்கும் போது அதைப்பற்றி எழுதியவுடன், இந்திய வரைபடத்தை வரைந்து எந்தெந்த பகுதிகளில் சதுப்பு நிலங்கள் உள்ளன என்பதை ‘மார்க்’ செய்யலாம். படம் தெளிவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. புரியும் விதத்தில் இருந்தாலே போதும்.

    விசயங்களைக் கூட கற்றுக்கொடுத்தார். உதாரணமாக, புவியியல் பாடங்களில் பதிலளிக்கும் போது எந்த அளவு கருத்துக்களை எழுதுகிறீர்களோ, அதே அளவு முக்கியத்துவத்தைப் படம் வரைவதிலும் செலுத்தினால் முழு மதிப்பெண்களைப் பெறமுடியும். உதாரணமாக, சதுப்பு நிலக்காடுகளைப் பற்றிய கேள்விக்கு விடையளிக்கும் போது அதைப்பற்றி எழுதியவுடன், இந்திய வரைபடத்தை வரைந்து எந்தெந்த பகுதிகளில் சதுப்பு நிலங்கள் உள்ளன என்பதை ‘மார்க்’ செய்யலாம். படம் தெளிவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. புரியும் விதத்தில் இருந்தாலே போதும்.
    இப்படி எனக்கு ஒவ்வொரு விசயத்தையும் சங்கர் சார் சொல்லிக் கொடுத்தார். அவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றியே மெயின் தேர்வை எழுதினேன்.
    நேர்முகத் தேர்வில் கேள்விகளை எதிர் கொண்ட விதம் குறித்து…
    என்னுடைய சர்வீசில் வங்கியின் இயக்குநர் வரை உயர முடியும் என்றநிலையில் அந்தப் பணியை விட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். எழுதினேன். சாதிக்க வேண்டும் என்றஉந்துதல் இருந்து கொண்டே இருந்தது. தன்னம்பிக்கையுடன் நேர்முகத் தேர்வை எதிர்கொண்டேன். நேர்முகத் தேர்வில் நான் எதிர்கொண்ட கேள்விகளில் மிக முக்கியமானது ‘முல்லைப் பெரியார்’ டேம் பற்றியது. நான் என்னுடைய பதிலாகக் கூறியது என்னவென்றால், ‘முல்லைப் பெரியார் அணை இவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் தன்னுடைய ஸ்திரத் தன்மையில் உறுதியாக உள்ளது. இந்தப் பிரச்சனைக்குக் காரணம் இரண்டு மாநில மக்களுக்கும் இது சென்ட்டிமெண்டாக தனக்குத் தான் சொந்தம் என்றமனோபாவம் தான். இரு மாநில விவசாயிகளும் பேசித்தான் இதற்குத் தீர்வைக் காண வேண்டும்’ என்று கூறினேன்.
    புதிய அணை கட்டுவது பற்றிய பிரச்சனைக்குத் தீர்வாக என்ன கூறுகிறீர்கள் என்றகேள்விக்கு, ‘புதிய அணை கட்டினால் இப்போது தமிழகத்திற்கு உள்ள உரிமையான அணைப்பாதுகாப்பு, பராமரிப்பு போன்றவற்றைத் தொடர்ந்து தமிழகத்துக்குக் கிடைக்க உறுதி செய்வதுடன், இரண்டு மாநிலங்களுக்கும் இடையே மத்திய அரசு பொதுவான அமைப்பாக இருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் டாக்குமெண்டாக பதிவு செய்த பிறகு புதிய அணை கட்டுவதற்கு முய்றசியை மேற்கொள்ளலாம்’ என்றேன்.

    பாடங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளில் குறிப்பிட்ட பாடங்களைத் தேர்வு செய்பவர்களே அதிகம் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து அப்போதைய நிலையைப் பொறுத்து தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்தைப் பொறுத்துத்தான் மெயின் தேர்வை எழுதும் போது பாடங்களுக்கு இடையில் போதிய கால அவகாசம் கிடைக்கும். சில பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் அடுத்தடுத்த நாட்களில் மெயின் தேர்வு எழுத வேண்டி வரும். பல புத்தகங்களை ஒருமுறைபடிப்பதைவிட ஒரு புத்தகத்தைப் பலமுறைபடியுங்கள். அதிக தெளிவு கிடைக்கும்.
    தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ளுங்கள். எழுதிப்பார்ப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் குறிப்பிட்ட கால அளவில் தேர்வை முழுமையாக எழுதி முடிக்க முடியும். இல்லை என்றால் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முடியாது.
    நிறைய மாதிரித் தேர்வுகளை நீங்களே எழுதிப் பழகுங்கள். பழைய விடைத்தாள்களை மாதிரியாக வைத்து எழுதிப் பாருங்கள்.
    இப்படித் தொடர்ந்து பயிற்சி செய்தால் கண்டிப்பாக நீங்களும் ஒரு ஐ.ஏ.எஸ். தான்.

    கல்வி மிகப்பெரிய சொத்து

    நீங்கள் எதற்காக கல்லூரிக்கு வந்திருக்கிறீர்கள் என்று யோசிக்க வேண்டும். படிப்பதற்கு, சர்டிபிகேட் வாங்குவதற்கு, வேலை தேடுவதற்கு என்று சொல்வீர்கள். இந்த அனைத்து காரணங்களையும் ஒரே வார்த்தையில் சொல்லலாம். அது, ‘கல்வி’ என்பது. நல்ல கல்வி கற்றவனுக்கு வேலை தேடி வரும். எதையும் கற்காமல் வெறும் பட்டம் மட்டும் பெற்றவன் வேலையைத் தேடி அலைய வேண்டியிருக்கும். எனவே தான் வள்ளுவர் கற்க கசடறஎன்றார். எந்த சந்தேகமும் இல்லாதவரை கற்க வேண்டும்.
    உங்களது மிகப்பெரிய சொத்து உங்களுடைய கல்வி. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கல்லூரிகளில் என்னை பேசுவதற்கு அழைக்கிறார்கள். நான் பெரிய டாட்டாவா, பிர்லாவா? பெரிய தொழிலதிபரா? எனக்கு பெரிய பங்களா இருக்கிறதா? இல்லை. என்னிடம் வெளிநாட்டு சொகுசுக்கார் இருக்கிறதா? நான் இதுவரை காரே வாங்கவில்லை. அரசாங்க கார் மட்டும் இருக்கிறது. எனது செல்வத்திற்கோ அல்லது செல்வாக்கிற்கோ கல்லூரிகளில் என்னை பேச அழைக்கவில்லை. இருப்பினும் என்னிடம் ஒரு சொத்து இருக்கிறது. அதுதான் கல்வி. இவர் வந்தால் மாணவர்கள் மத்தியில் சில கருத்துக்களை சொல்லுவார். வகுப்பறைப் பாடம் படிக்க ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ அவர் பேசும்போது ஆர்வத்துடன் கேட்பார்கள் என்று நம்பி என்னை அழைக்கிறார்கள். கல்வி தான் என் சொத்து என்று கூறலாம்.
    புரிந்து படியுங்கள்:
    ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்காக, ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் நேர்முகத் தேர்வுக்கு ஒத்திகை நடத்தி வருகிறேன். அதற்கென்று ஒரு குழு உண்டு. அதில் ஒரு பேராசிரியரும் இருந்தார். அவருக்கு தமிழார்வம் அதிகம். தமிழ் இலக்கியத்திலிருந்து கேள்விகள் கேட்பார். ஒரு மாணவியிடம் ‘ஆற்றுப்படை என்றால் என்ன’ என்று கேட்டார்.
    அந்தக்காலங்களில் புலவர்கள் பலர் இருந்தார்கள். அந்தப் புலவர்களெல்லாம் ஏழைகள் தான். ஆனால் அவர்கள் செல்வந்தர்கள், அரசர்களையெல்லாம் புகழ்ந்து பாடுவார்கள். அரசன் மிகவும் கோழையாக இருந்தாலும் நீ பெரிய வீரன் என்று பாடுவார்கள். அவன் பெரிய கஞ்சனாக இருந்தாலும் நீ ஒரு கொடைவள்ளல் என்று பாராட்டுவார்கள். உடனே புலவர்களுக்கு தங்கம், பொருள் போன்ற பரிசுகள் கிடைக்கும். பரிசு பெற்ற புலவர் சக புலவருக்கு இந்த வழிமுறைகளைப் போதிப்பது தான் ஆற்றுப்படை.
    ஆற்றுப்படை என்றால் என்ன என்ற அந்த கேள்வியைக் கேட்டதும், “ஆறு மாதிரி மடித்து மடித்துப் படைகள் முன்னேறிப் போவது ஆற்றுப்படை” என்றான் ஒரு மாணவன். இன்னொரு மாணவியின் கற்பனையைப்பாருங்கள். சிறிதுநேரம் யோசித்துவிட்டு,