– 2012 – May | தன்னம்பிக்கை

Home » 2012 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    திருப்பூர் வாசகர்வட்டம்

    நாள் : 13.05.2012 ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி
    இடம் : அரிமா சங்க அரங்கம்
    குமரன் ரோடு
    திருப்பூர்
    தலைப்பு : “மனிதப் பிறவியும் மகாத்மியம்”
    சிறப்பு பயிற்சியாளர்: திரு. டி.ஆர். வெங்கடராமன்
    மனவளப் பயிற்சியாளர், திருச்சி, 96004 86329
    தொடர்புக்கு : திரு. மகாதேவன் – 94420 04254
    திரு. வடிவேல் – 99944 27992
    திரு. வெங்கடேஸ்வரன் – 94423 74220
    திரு. கிருஷ்ணமூர்த்தி – 99761 10974

    சென்னை வாசகர் வட்டம்

    நாள் : 13.5.2012, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி
    இல்ம் : P.S. மேல்நிலைப்பள்ளி
    இராமகிருஷ்ணா மடம் ரோடு
    இராமகிருஷ்ணா மடம் எதிரில்
    மைலாப்பூர், சென்னை – 600 004
    தலைப்பு : “வெற்றியின் மொழி”
    சிறப்பு பயிற்சியாளர் : திரு. ஜி. ராமசுப்பிரமணியன், B.E., MBA மனநல ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர், 94441 28486
    தொடர்புக்கு தலைவர்: M.S.M. சோமசுந்தரம் மாணிக்கம்
    செயலாளர் : L. கருணாகரன் – 98419 71170
    பொருளாளர் : A. கஅறிவழகன் – 97906 31378
    PRO – M.P.. சரவணன் 98841 60404

    திருச்சி வாசகர் வட்டம்

    நாள் : 13.5.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
    இடம் : பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளி,
    தெப்பக்குளம்,
    சென்னை சில்க்ஸ் எதிரில்,
    திருச்சி.
    தலைப்பு : “வாழ்வியல் மேலாண்மை’
    சிறப்பு பயிற்சியாளர் : திரு. மனுராஜ், M.E.
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,திருச்சி
    தொடர்புக்கு :
    திரு. கே. நாகராஜன் 94437 14933
    திரு. தங்கவேல் மாரிமுத்து 93603 27848
    திரு. சுரேந்திரன் 98940 93595

    திருச்செங்கோடு வாசகர்வட்டம்

    நாள் : 13.5.2012, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை
    இடம் : ஹோட்டல் சித்தார்த்தா ஹால்
    ஜோதி சினிமா தியேட்டர் அருகில்,
    திருச்செங்கோடு
    தலைப்பு : “உன்னையறிந்தால்”
    சிறப்பு பயிற்சியாளர் : டாக்டர் வி.ஆர். அறிவழகன் ஆசிரியர் ஆனந்தயோகம்-கலைக்கதிர், கோவை, 934482805
    தொடர்புக்கு தலைவர்: JCI. Sen. G. கோவிந்தசாமி 9842796868
    செயலாளர் : Jc. அ. திருநாவுக்கரசு 99429 66554
    ஒருங்கிணைப்பாளர் : Jc. Dr. P. சரவணன் 9842796868

    மதுரை வாசகர் வட்டம்

    நாள் : 20.5.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.30 மணி
    இடம் : தன்னம்பிக்கை பயிற்சி மையம்,
    42 / 20, சிபி பவுண்டேசன்,
    மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர்
    தபால்தந்தி நகர் ரோடு,
    பிரம்மகுமாரிகள் மடம் எதிர்புறம்
    மதுரை -17.
    தலைப்பு : “தன்னம்பிக்கைக்கு தூண்டுகோள் ஊக்கம்”
    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. நிஷாந்த்,M.A., M.Phil.
    உதவிப் பேராசிரியர்
    மதுரை சமூக அறிவியல் கல்லூரி
    தொடர்புக்கு
    தலைவர் – திரு. எ. எஸ். இராஜராஜன்: 9442267647
    செயலர் – கவிஞர். இரா. இரவி: 98421 93103
    ஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சந்தர்: 9443743524

    கோவை வாசகர் வட்டம்

    நாள் : 20.5.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி
    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்,
    139/86, மேற்கு சம்பந்தம் சாலை,
    ஆர்.எஸ். புரம் (மேற்கு),
    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,
    கோவை.
    தலைப்பு : “வெற்றியின் வேர்”
    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. நம்பிக்கை மணியன் சுயமுன்னேற்ற பயிற்சியாளர்,
    தூத்துக்குடி, போன்: 9842591086
    தொடர்புக்கு:
    தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் – 98422 59335
    செயலாளர் திரு. A. சரவணகுமரன் – 9092092080
    PRO திரு. விக்டரி விஸ்வநாதன் 9787744533

    உலக சிரிப்பு தினம்

    ‘உலக சிரிப்பு தினம்’ ஆண்டுதோறும் மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் முதன் முதலாக 1998 ஜனவரி 11ம் நாள் மும்பையில் ‘சிரிப்பு யோகா இயக்கம்’ என்றஅமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்து கொண்டாடப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவனர் டாக்டர் கட்டாரியா. தற்போது உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உலகளவில் 65 நாடுகளல் சுமார் 6000 சிரிப்பு மன்றங்கள் இயங்கி வருகின்றன.
    சிரிப்பின் வாயிலாக உலகில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த தினத்தின் நோக்கம். இது சற்று வேடிக்கையாகவும் விந்தையாகவும் தோன்றும். ஆனால் இது சாத்தியம் என்பதை அறிவியல் உண்மைகள் உறுதிப்படுத்துகின்றன. ‘மனிதன் சிரித்தால் மனித மனம் மாறும். மனிதன் மாறினால் அவனைச் சுற்றியுள்ள உலகம் மாறும்’ என்பதுதான் அடிப்படை கோட்பாடு.
    ‘சிரிக்க தெரிந்த சமுதாய விலங்கு மனிதன்’ என நம்மை மற்றஇனங்களலிருந்து வகைப்படுத்தி அறிவியலார் கூறுவதுண்டு. சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. விலங்கினங்களுக்கு அந்தச் சிறப்பு கிடையாது. “சிரிப்பு என்பது சிநேகத்திற்கான முதல் தூது. இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளம் சிரிப்பு”.
    மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க, ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனத்தெளிவு மற்றும் மனமகிழ்ச்சியை உண்டாக்க . . . என்று பல்வேறு வகைகளல் துணை நிற்பது சிரிப்பு. சிரிப்பின் சிறப்புகளை கூறுகையில் ‘அழகின் சிரிப்பு’ என்றார் பாரதிதாசன். ‘துன்பம் வரும் வேளையிலே சிரிங்க…’ என்றார் வள்ளுவர். ‘சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே…’ என்றார் கவியரசு கண்ணதாசன். ‘சிரிப்பு பாதி, அழுகை பாதி சேர்ந்ததல்லவா மனித ஜாதி…’ என்றார் பொதுவுடைமைக் கவிஞர்.
    ‘ வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பார்கள். உண்மைதான். சிரிக்கும் போது மனதில் ஒருவித மகிழ்ச்சியான கலகலப்பான உணர்ச்சி ஏற்படுகிறது. இதனால் உடலில் ஆரோக்கியமான வேதிப்பொருட்கள் (HEALTHY ENZYMES) உற்பத்தியாவதால் அது நோயைத் தீர்க்கும் மருந்தாகிறது. சிரித்து மகிழ்வதால் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன் வந்த நோய்களும் விரைவில் குணமாவதாக ஆராய்ச்சி உண்மைகள் தெரிவிக்கின்றன.
    மனிதன் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த, மிகவும் பயனுள்ள செய்திகளை மட்டுமே படிக்கவும் சிந்திக்கவும் விரும்புவதில்லை. சிலவற்றை நகைச்சுவையோடு பார்க்கவும், படிக்கவும் விரும்புகிறான். திரைப்படம், டி.வி. சீரியல், நாடகம் எதுவானாலும் அதன் கதைப்போக்குடன் நகைச்சுவை பகுதியும் இருப்பதால்தான் ரசிக்க முடிகிறது. சில பேச்சாளர்கள் நகைச்சுவையுடன் பேசுவதால்தான் அவர்களது பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. சிந்திக்க வைக்கும் அதே நேரத்தில் சிரிக்க வைக்கும் வகையிலும் எழுதும் எழுத்தாளர்களை நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று வாசகர்கள் புகழ்கின்றனர். சிரிப்பின் பலன் எத்தகையது என்பதை அக்பர், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகளை படிக்கும்போது உணர முடியும்.
    அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, சாகசச் சிரிப்பு, நையாண்டி சிரிப்பு, புன்சிரிப்பு என்று சிரிப்பில் பலவகை உண்டு. இதில் புன்னகைக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் ஒளிந்து இருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை. புன்னகை என்பது எந்தவிதமான ஓசையையும் செய்யாமல் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை முகத்தில் காண்பிக்கும் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாகும். உலகம் முழுவதும் உள்ள மக்கள், புன்னகை என்பதனை, மனத்தில் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாகவே கருதுகிறார்கள். மனதில் உள்ள மகிழ்ச்சியானது புன்னகையின் வடிவில் தானாகவே வெளிவருகிறது.
    மனிதனின் சோர்வை அகற்றவல்லது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு முறை வெளியூர் சென்ற சமயம் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. வேறு காருக்காக காத்திருந்த போது, அந்த வழியாக வந்த விவசாயிகள் கார் விபத்தைக் குறித்து கேட்டபொழுது, ‘காருக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது அதனால் காரை மரத்தில் சாத்தி வைத்திருக்கிறோம்…’ என்றாராம். இத்தகைய வஞ்சகமில்லா நகைச்சுவைக்கும், சிரிப்புக்கும் இன்றைய காலகட்டத்தில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்.
    மேலை நாடுகளல் டாக்டர்கள் நோயாளகளுக்குச் சிரிப்பு வீடியோக்களைப் பார்க்குமாறு பரிந்துரை செய்கிறார்கள். ‘நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களன் இயல்பை ‘சிரிப்பு’ முடுக்கிவிடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார். சிரிக்கும்போது உடலில் 300 தசைகள் அசைகின்றன. உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன. குறிப்பாக முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன. ஒரு நாளல் குழந்தைகள் சராசரியாக 400 தடவைகள் சிரிக்கும் போது பெற்றோர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
    காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காலையில் ஒரு அரை மணிநேரம் சிரித்துக் கழித்தால் டென்ஷன் இருப்பதில்லை என்பது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். சிரிப்பதற்கு கூட பயிற்சிகள் தேவைப்படுகினறன. ஐந்து நிமிடம் காலையில் சிரித்துப் பழகலாம். பெருநகரங்களல் தற்போது பலர் ஒன்றுகூடிச் சிரிப்பதை ஒரு வகையான பயிற்சியாக மேற்கொண்டுள்ளனர். நடைப்பயிற்சியாளர்கள் கிளப் போல சிரிப்பு கிளப்புகள் (HUMUROUS CLUBS) ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சுமார் இருபது அல்லது முப்பது பேர் வட்டமாக பூங்காக்களல் அமர்ந்து ஒரு அரை மணிநேரம் வாய்விட்டுச் சிரிக்கப் பழகுகிறார்கள். இதனால் நல்ல பலன் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இப்போது எல்லா நகரங்களலும் சிரிப்பு கிளப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
    தினமும் கொஞ்ச நேரம் குழந்தைகள் மனம் விட்டுச் சிரித்தால் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வார்கள். சிரிப்பு மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும். மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் மனஅழுத்த ஹார்மோன்களும், அதன் மூலக்கூறுகளும் பெருமளவு குறைந்து உடல் ஆரோக்கியமடையும்.
    சிரித்தால், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீர்கள். சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்த வேண்டும். சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால் அது மிகையல்ல. ‘நீங்கள் மிகழ்ச்சியாக, சந்தோஷமாக, சிரிக்கும் சமயம் மட்டுமே உங்கள் வீட்டில் இருந்து வெளி வாருங்கள். மகிழ்ச்சி அலைகளைப் பரப்புங்கள்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். சோக அலைகளை, துக்க சுவடுகளை, கவலை எண்ணங்களை வீட்டில் புதையுங்கள். வெளி உலகில் வந்து பரப்பாதீர்கள் என அறிவுறுத்துகிறார்.
    உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள். சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும். கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும். சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி பாஸிடிவ் கரண்ட்டை பரப்பும். சோக அலைகள் நம்மைச்சுற்றி நெகடிவ் கரண்ட் தரும். உயிர் எழுத்துக்களல் ‘அ’ முதல் ‘ஓ’ வரை வரிசையாகத் தொடர்ந்து வேகமாக உச்சரித்தால் சிரிப்பு அலைகள் உருவாகும். “சோகம் நமது ஆரோக்கியச் செல்வத்தைக் குறைக்கும். சிரிப்பு நமது ஆரோக்கியச் செல்வத்தை உயர்த்தும்”.

    மேடை மாலை கைத்தட்டல்

    மணிமகுடங்களையே உருட்டித் தள்ளய ஆக்ரோஷமான புரட்சிகளானாலும் சரி, மானுட சமுதாயத்தையே மாற்றுப் பாதையில் திருப்பி விட்ட மௌனப் புரட்சிகளானாலும் சரி, அதை முன்னின்று நடத்தும் ஆளுமையின் மேடைப் பேச்சும் அதன் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.
    சிரிப்பு இயற்கை நமக்கு அளத்தப் பரிசு. ஆனால், மொழியோ மனிதனின் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு. மேடையில் ஒருவர் பேசும் பொழுது எழும் கைத்தட்டல் என்பது ஒரு உடனடி அங்கீகாரம். கரகோஷம் கிறக்கம் தரும் ஒன்றுதான். நம் எல்லோருக்குமே மேடையில் பேசவேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால், வாய்ப்பு கிடைத்தால் பயம் வந்து சூழ்ந்து கொள்ளும். வந்த வாய்ப்பை “வேண்டாம்” என்று கூறி விடுவோம்.
    இந்தத் தொடர் உங்களது மேடை பயத்தை முற்றிலுமாகப் போக்கி, உரையாற்றும் திறனை வளர்க்கும்.
    தூரிகையை இப்படியும் அப்படியுமாக வீசி ஒரு தேர்ந்த லாவகத்துடன் சித்திரங்களை உருவாக்கும் ஓவியர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களது கலைத் திறன் அவ்வளவு உயர்ந்தது.
    அப்படிப்பட்ட ஓவியர்களல் ஒரு சிலர் சுயம்புவாக உருவாகி இருப்பார்கள். பலருக்கு, இளம் வயதில் ஓவிய ஆர்வம் இருந்திருக்கும். ஆனால், திறமை இருந்திருக்காது. தக்க குரு ஒருவரை அணுகி, தம் திறனை மேம்படுத்தி வளர்ந்திருப்பர்.
    முதல் வகையினரை இயல்புக் கலைஞர்கள் என்று சொல்வார்கள். இரண்டாம் வகையினர் பயிற்சிக் கலைஞர்கள் எனப்படுவர். அது போலவே மேடைப் பேச்சிலும் இரண்டு வகையினர் உண்டு. முதல் வகையினரை ORATORS என்றும் மற்றவரை SPEAKERS என்றும் பொதுவாக அழைக்கிறோம். நாம் இரண்டாம் வகை.
    நண்பர்களோடு நாம் உரையாடுவதற்கும் மேடைப் பேச்சுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. சில கூர் தீட்டலும் மெருகேற்றலும்தான் தேவை. ஆங்கிலத்தில் இதை ONE TO ONE – ONE TO MANY ! என்பார்கள்.
    பரஸ்பர உரையாடலில் நாமும் நம் நண்பரும் மாறி மாறிப் பேசிக் கொள்கிறோம். இரண்டு பேர் விளையாடும் மேடைப் பந்தாட்டம் (Table Tennis) போன்றது அது. நான்கைந்து நண்பர்கள் கூடிப் பேசுவதிலும் இதே விதிதான்.
    ஆனால், மேடையில் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை நாம் மட்டுமே பேசுகிறோம். மற்றவர்கள் கேட்கிறார்கள். இது ஒரு ஒருவர் மட்டுமே ஒரு சமயத்தில் விளையாடும் GOLF போன்றததாகும். ஆகவே, தொடர்ந்து பேசுவது என்பதுதான் முதல் வித்தியாசம்.
    உரையாடலில், நாம் சொல்வது நம் நண்பனுக்குப் புரியவில்லை என்றால் அதை ஒரு கேள்வியாகக் கேட்டுத் தௌவு பெறுவார். மேடைப் பேச்சில் இதற்கு உடனடியான வாய்ப்பு இல்லை. எனவே, இந்த விஷயங்களை உள்ளடக்கியே நமது பேச்சைத் தயாரிக்க வேண்டும்.
    நேயர்கள் அவ்வப்பொழுது குறுக்கிட்டுப் பேசினால் அல்லது கேள்வி கேட்டால், நம் சிந்தனை ஓட்டம் தடைப்படும். மற்றவர்களுடைய கவனமும் சிதறும். எனவே கேள்விகளைக் கடைசியில் கேட்கும் விதி முறையே சிறந்தது. அதற்கேற்ப நம் உரை, தௌவாகவும் விரிவாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    • மேடையில் பேசும் வாய்ப்புகள் கிடைத்தால் ஆர்வத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அதனைத் தேடிச் செல்லுங்கள். இதற்கான அமைப்புகள் ஆங்காங்கே உள்ளன. அப்படி இல்லையெனில் ஒத்த ஆர்வமுடைய நண்பர்களோடு நீங்களே ஒன்றை ஆரம்பியுங்கள். எல்லோரும் பயன் பெறலாம்.
    •   மாணவர்களாக இருந்தால் உங்கள் பள்ளயில் அல்லது கல்லூரியில் ஒரு அமைப்பை உருவாக்குங்கள். மேலும் “தன்னம்பிக்கை” மாத இதழ் நடத்தும் மாதாந்திரக் கூட்டங்களலும் பங்கேற்றுக் கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
    • உங்களுக்குத் தரப்படும் தலைப்பு உங்களுடைய ஆர்வ வட்டத்திற்குள் இருப்பது மிகவும் அவசியம். தெரியாத அல்லது பரிச்சயம் இல்லாத துறை பற்றிய வாய்ப்பு வந்தால் ஒரு புன்சிரிப்போடு ஒதுக்கி விடுங்கள். மேடை ஏறிய பின்பு “இந்தக் கூட்டத்தில் பேசுவதற்கு நான் தகுதியானவன் இல்லை” என்னும் போலித் தன்னடக்கம் காட்டுவது அழகல்ல. மேலும் நம்மால் வெற்றிகரமாகப் பேசவும் முடியாது.

    மூன்றாவது, மொழி. நமக்குத் தாய் மொழி தமிழ். பயிற்று மொழியும் பெரும்பாலும் தமிழே. எனவே தமிழில் பேசும் முயற்சியை நாம் முதலில் மேற்கொள்வோம். வேற்று மொழியில் உதாரணமாக, ஆங்கிலத்தில் பேசுவது எப்படி என்பது பற்றி பிறகு பார்ப்போம்.
    சரி, பேசும் வாய்ப்பு கிடைத்து விட்டது. கூட்டத்திற்கு இன்னமும் இரண்டு வார காலம் இருக்கிறது. என்ன செய்யலாம் ?
    வாய்ப்பை ஏற்றுக் கொண்டதற்காக, முதலில் நம்மை நாமே பாராட்டிக் கொள்வோம். அதை வௌப்படுத்தும் விதமாக கரகோஷம் எழுப்புவோமே !
    தொடரும்…

    களவாடப்படும் நேரம்

    நிர்வாகப் பொறுப்பு என்பது கற்றுக்கொள்ளச் சற்று கடினமானதாக தோன்றலாம். கற்றுக்கொண்டால் நிர்வாகத் திறமை உங்களை வெற்றியாளர்கள் பட்டியலில் சேர்த்துவிடும். இதில் நேரத்தை நிர்வாகம் செய்வது (நிர்வாகம் என்பதை விட பயன் படுத்திக்கொள்ளுதல் என்று சொல்வது சரியாக இருக்கும்) என்பது தலை சிறந்த நிர்வாகத் திறமையாகும்.
    காலத்தை நிர்வகித்தல் என்பது காலத்தைச் சரியாக பயனுடையதாக பயன்படுத்துவதில் ஒருவர் தன்னை நிர்வகித்தல் என்று கூட கருதலாம்.
    நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவராக இருந்தால் உங்கள் கால நிர்வாகத்தில் உங்களைச் சார்ந்தது, உங்கள் மேலதிகாரிகளோடு தொடர்புடையது, உங்களின் கீழ் பணியாற்றுபவர்களுடன் தொடர்புகொண்டது என பிரித்துக் கொண்டு கையாண்டால் சற்று இலகுவாக இருக்கும்.
    தன்னைச் சார்ந்த நேரநிர்வாகம் என்பது தன் சுயகாரியங்களைச் செய்து கொள்ளத் தேவையான நேரம், தன் குடும்ப அலுவல்களைக் கவனித்துக்கொள்ள ஒதுக்கப்பட வேண்டிய நேர அளவு, நண்பர்களுடன், சமுதாய கடமைகள் ஆற்றுவதற்கான நேரஅளவு ஆகியவை உள்ளடங்கும். இவற்றில் செயல்பாடுகளுக்குத் தேவையான திட்டமிடல் அதனை செயல்படுத்துவதில் அளிக்க வேண்டிய முன்னுரிமை பட்டியல் இவை உங்களிடம் இருந்தால் தன்னைச்சார்ந்த செயல்பாடுகளில் நிச்சயம் மகிழ்ச்சி கொண்டவராகவே திகழ்வீர்கள்.
    காலத்தை நிர்வகித்தல் பயனுடையதாக இருக்க ஒருவருக்கு நல்ல மனப்பாங்கு இருக்க வேண்டும். இழந்தால் திரும்ப பெறமுடியாத சொத்து, ஆனால் இழப்பது என்பதை மட்டும் எந்த காரணத்தைக்கொண்டும் தவிர்க்க முடியாது. இருந்தாலும் வாழும் காலத்தை-கிடைத்த நேரத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டால் அந்தப் பயன் கடக்கும் காலத்தினால் பெற்றபயன் தொடரும். அதுவே ஒரு வெற்றியாளர்களின் நேர நிர்வாகத்தின் வெற்றிச்சூத்திரம்.
    எங்கே, எப்போது எப்படி சுறு சுறுப்போடு செயல்படவேண்டும். அதே போல் எது முக்கியம்? எது அவசரம்? என்பதில் தெளிவு வேண்டும். அந்த முன்னுரிமைகளில் செயல்பாடுகளைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அதைவிட கால நிர்வாகத்தின் முக்கியம் எதனை நோக்கி (குறிக்கோள்) என்பது நிச்சயம் உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக பதட்டமாக செயல்பட வேண்டிய அவசியமில்லை.
    காத்திருப்பு காலத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ குறைத்துக்கொள்ளுங்கள். அது கால நிர்வாகத்தினைச் சீர்குழைக்கும் ஒரு வகை வைரஸ்.
    களவாடப்படும் காலம்
    உங்களின் பொன்னான நேரம் உங்களுக்குத் தெரியாமலே களவாடப்படுகிறது. ஆனால் நம்மிடம் இருந்து ஒரு பொருள் களவாடப்பட்டால் என்ன தோன்றுமோ அது தோன்றுவது இல்லாமலே களவாடப்படுவதால் அதன் பாதிப்பு பலவேளை உடனடியாக தெரிவதில்லை. காயம்பட்டு கொஞ்சம் நேரம் கழித்து வலி உணர்வது போல் காலம் களவாடப்பட்ட பிறகு அடடா எப்படி இழந்து விட்டோம் பார்த்தாயா? நம்மை நாமே கடிந்துகொள்வதும் வருத்தப்படுவதும் நடக்கும். களவாடப்படுகிறது என்றால் அந்த நேரத்தை பயன்படுத்தாமல் பறிக்கபடுகின்றன. எப்படி? இப்படித் தான்!
    – தேவையற்றதொ(ல்)லைபேசி தொடர்பு அல்லது நீடிப்பு
    இதைப்படிக்கும் போது சற்று உங்களைச் சுற்றி பாருங்கள் அல்லது நினைவுப்படுத்துங்கள்; மக்கள் எத்துணை முக்கியமாக விசயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது அடுத்தவன் பாக்கெட்டில் இருந்து பர்ஸ் பறிபோவது போல் காலம் களவாடப்படுவது புரியும்.
    – பயன்படாத சந்திப்புகள் (தவிர்ப்பதால் தவறு ஒன்றும் ஆகப்போவதில்லை போன்றசந்திப்புகள்) வேலை எதுவுமில்லை அவரைப்போய் பார்க்கலாம் என்று செல்வது என்பது பயன்படாத சந்திப்பு மற்றும் அடுத்தவரின் கால நிர்வாகத்தில் நாம் செய்யும் களவாடல்.
    – எதிர்பாராத சந்திப்புகள் (மேலே குறிப்பிட்ட உதாரணம் கூட பொருந்தும். அவர் வராமல் இருந்தால் நமது வேலையை முடித்திருக்கலாம் என்று தோன்றியிருந்தால் அது எதிர்பராத சந்திப்பின் பயனிழப்பு)
    – கால அளவும் முன்னுரிமையும் இல்லாத செயல்திட்டம். எதை எவ்வளவு நேரம் செய்யப் போகிறோம் என்றோ? எதை முதலில் செயல்படுத்த வேண்டும் என்ற திட்டமிடலோ இல்லாமல் இருத்தல்.
    இல்லை, தெரியாது, முடியாது என்று பதில் சொல்லத்தெரியாமல் இருத்தல். ஆமாம் உங்கள் பதில் இல்லை என்றோ, தெரியாது என்றோ, முடியாது என்றோ சொல்லவேண்டிய சூழ்நிலை என்றால் தயங்காமல் சொல்ல வேண்டும். அதற்கான விளக்கங்களைப் பிறகு பதில் பெறுவருக்கு சொல்லலாம். ஆனால் சொல்லாமல் இருந்தால் அது உங்களது பொன்னான நேரத்தை இலகுவாக களவாடிச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
    எல்லாம் என்னால் மட்டுமே முடியும் என்றமனப்பாங்கோ, நானே தான் செய்வேன் என்ற மனப்பாங்கோ இருந்தால் விட்டொழியுங்கள். அது போன்ற மனநிலையால் ஒருசில வேளை வெற்றி பெறலாம். ஆனால் தொடர்ந்து வெற்றியை நோக்கி பயணிக்க நிச்சயம் முடியாது. மற்றவர்களை உங்களுக்குப் பதிலாக அல்லது உங்களுடன் உங்கள் பணியைப் பகிர்ந்து பணியாற்றினால் மட்டுமே காலத்தை சரிவர பயன்படுத்திக்கொள்ள முடியும்.
    சுய ஒழுக்கம் நிச்சயம் காலத்தைப் பயன்படுத்தலுக்கு மிகவும் அவசியம். எல்லா செயல்பாடுகளையும் திட்டமிட்டபடி நடத்திட சுய ஒழுக்கம் முதன்மைப் பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட காலத்தை களவாடும் களவாணிகளைக் கண்டு கொண்டால் காலத்தைச் சரிவர பயன்படுத்தும் கலையை இலகுவாக கற்றுக்கொள்ளலாம். பொதுவான திட்டம், செயல்திட்டம், கால அளவுடன் செயல்பாடு, இவைகளைச் சரியான கால முன்னுரிமையுடன் செயல்படுத்தினால் நேரம் என் நண்பன்டா எனச் சந்தோசமாக சொல்லிக்கொண்டு நீங்கள் வெற்றியாளராகத் திகழ முடியும்.

    சமூகப் பணி படிப்பு

    தொடக்கத்தில் வெறும் சமூக சேவையோடு மட்டுமே தொடர்புடைய படிப்பாகக் கருதப்பட்ட சமூகப்பணி படிப்பு, வேகமாக இயங்கும் இன்றைய வாழ்வில் மனித உறவு மேம்படவும், நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளை போக்கவும், போதைப்பொருள் பயன்பாடு, மனநல பிரச்சனைகள், சிறுவர் மற்றும் முதியோர் வாழ்வு போன்றவற்றிற்கு பெரும் பங்காற்றும் துறையாக விளங்கி வருகிறது. இளைஞர்கள், பெண்கள், ஊனமுற்றோர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் சமூகக் குற்றவாளிகள் வாழ்வில் மாற்றத்தையும், பல்வேறு சமூகப் பிரச்சனைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் படிப்பாகும்.
    இதில் பங்காற்றும் ஒருவருக்குக் கிடைக்கும் திருப்தியானது மிக அதிகமாக இருக்கிறது. மனிதனை உளவியல் ரீதியாக அணுகும் ஆர்வம், பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்றவை ஒருவரிடம் இருந்தால் இந்தப் படிப்பை மேற்கொள்ளலாம். இப்படிப்பினை படிப்பவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, பிறரின் வாழ்வில் நம்மால் பெரிய மாறுதலை ஆரோக்கியமாக உருவாக்க முடியும் என்பதை இந்த சமூகப்பணி படிப்பு கற்றுத் தருகிறது.
    முன்பெல்லாம் ‘சோசியல் வொர்க்’ போன்ற படிப்புகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. அந்த படிப்பிற்கு அதிக மரியாதை கிடைத்துள்ளது. அந்தப் படிப்பைப் பற்றிய பல தவறான கருத்துக்கள் இன்று மறைந்துள்ளன. சமூகப் பணித்துறையில் ஒரு புதிய பார்வை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
    சோசியல் வொர்க் என்பது சமூகத்தில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் கிராம, நகர வளர்ச்சிக்கு உதவுதல், சமூக இன்னல்களை நீக்குதல் மற்றும் இன்ன பிற நல்ல செயல்களைச் செய்தல் என்பது மட்டுமல்ல கடந்த பல வருட காலத்தில், சோசியல் வொர்க், ஒரு நல்ல தொழில் முறை பணியாக (Professional) வளர்ந்துள்ளது. மேலும் இது ஒரு வழக்கமான சம்பிரதாய பணியும் அல்ல. இந்தப் பணியானது சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, மனித உறவுகளில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துகிறது.
    மேலும், சமூக பொருளாதார மற்றும் உணர்வு ரீதியான பிரச்சனைகளைக் களைய முயற்சிப்பதே சமூகப்பணியின் முக்கிய பணியாக இருக்கிறது. இதற்கு கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை, மாநாடுகளை நடத்துவது, ஆதாரமான வளங்களை அதிகப்படுத்துவது, பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சமூகத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவது, பல நலத்திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவது என இவர்களின் பணி எப்போதும் உயரிய நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கும்.
    இப்பணியின் வகைகள்:

    • சமூகப்பணி படிப்பில், நோயாளிகளின் தேவை அறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் மருந்துகள் எடுப்பது தொடர்பாக உதவுதல் போன்ற முற்றிலும் மருத்துவமனை சார்ந்த கிளீனிக்கள் சோசியல் வொர்க்
    • போதை மருந்து பயன்பாட்டு பிரச்சனைகள், பாலியல் முறைகேட்டு பிரச்சனைகள் தொடர்பாக, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கும் பள்ளி சோசியல் வொர்க்
    • மன உளைச்சலுள்ள குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினர் ஆகியோருக்கு உள்ள நடத்தை சிக்கல்களை ஆராய்ந்து, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியான சைக்யாட்ரிக் சோசியல் வொர்க் (Medical & Psychiatric Social Work)
    • சிறைக்கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, அதன் மூலம் அவர்களைத் திருத்தி, சமூக விரோத நடவடிக்கைகளை குறைப்பது போன்ற பணியான குற்றவியல் மற்றும் திருத்துதல் சோசியல் வொர்க் (Criminology and Correction Administration Welfare).
    • வீட்டு வசதிகள், வேலையின்மை பிரச்சனைகள் மற்றும் உள்ளூர் சேவைகள் ஆகியவற்றைக் கவனிப்பது போன்ற பணியான சமூக அமைப்புப் பணி(Community Development), சமூகம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் நிறுவனங்களின் தீவிர செயல்பாட்டிற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் Teaching and Research பணி, வணிக நிறுவனங்கள் மற்றம் தொழிற்சாலைகளில், தொழிலாளர் நலன்களை உறுதி செய்வது தொடர்பான பணியான தொழில்துறை சோசியல் வொர்க் (HRD) என்று பல பணி வாய்ப்புள்ள படிப்புகளை சமூகப்பணி படிப்பு வழங்குகிறது.

    வேலை வாய்ப்புகள்:
    கிராமப்புற அவலம் மற்றும் வசதியின்மை, படிப்பறிவின்மை, மருத்துவ வசதிகளில் குறைபாடு மற்றும் மருந்துகளை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற அவலங்களைப் பற்றிய அதிகரித்துவரும் விழிப்புணர்வானது, சோசியல் வொர்க் துறையில் வேலைவாய்ப்பை அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO) வேலை வாய்ப்புக்களை அதிக அளவில் அளிக்கின்றன. மேலும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், சோசியல்வொர்க்கர்களைப் பணியமர்த்துகின்றனர்.
    அரசுப்பணி என்று எடுத்துக்கொண்டால், நல அதிகாரி பணிகள், அரசு சாரா அமைப்புகளில் ஏராளமான பணிவாய்ப்புகள் குவிந்துள்ளன. சோசியல் வொர்க் படிப்பில் பட்டம் பெற்ற ஒருவர், முதலில் சோசியல் வொர்க்கராகப் பணியில் சேர்ந்து, பின்னர் பணி உயர்வு பெறலாம். ஒருவர் இத்துறையில் போதிய அனுபவம் பெற்ற பின்னர் சொந்தமாக கவுன்சிலிங் மையம் தொடங்கலாம்.
    மேலும், உலக சுகாதார நிறுவனம், யுனிசெப், லேபர் பீரோ, பல கார்பரேட் நிறுவனங்கள் தங்களின் பணியாளர் நலத்திட்டங்களுக்கு பல சோசியல் வொர்க்கர்களை பணியமர்த்துகின்றனர்.
    சம்பளம்:
    நீங்கள் பணிக்குச் சேரும் தொண்டு நிறுவனத்தைப் பொறுத்து ஆரம்ப சம்பளம் ரூ.12,000 முதல் ரூ.18,000 வரை இருக்கும். அதே சமயம் சர்வதேச ஏஜென்சிகள் அதிக சம்பளம் தருகின்றன.
    படிப்புகள்:
    பல வித பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விதவிதமான படிப்புகளை வழங்குகின்றன.

    • சோசியல் வொர்க்-ல் இளங்கலைப் படிப்புகள் (BSW) தகுதி 2 தேர்ச்சி
    • முதுகலைப் படிப்பு (MSW) – ஏதேனும் இளநிலைப் படிப்பில் தேர்ச்சி
    • எம்.பில் மற்றும் பி.எச்.டி. முதுநிலை சமூகப்பணி படிப்பில் தேர்ச்சி

    களப்பணி (Field Work):
    இப்படிப்பில் மட்டும் தான் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கட்டாயமாக களப்பணியாற்ற வேண்டும். களப்பணி வேலைக்கான திறமையினை வளர்க்க உதவுவதால் படிப்பினை முடிக்கும் முன்னரே வேலை வாய்ப்பினைப் பெற முடிகிறது.
    சோசியல் வொர்க் சார்ந்த படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்,
    கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம், கோவை அவினாசிலிங்கம், கற்பகம், அமிர்தா போன்ற பல்கலைக்கழகங்களிலும்,
    பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி,P.S.G. கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா, G.R.D., பிசப் அப்பாசாமி, சி.எம்.எஸ். வணிகவியல் கல்லூரி, ஸ்ரீ நாராயணகுரு, சேரன் கலை கல்லூரி, S.M.S. கல்லூரி, நேரு கல்லூரி, நேரு மஹாவித்யாலயா, ஹிந்துஸ்தான், A.J.K., பிஷப் அம்புரோஸ் கல்லூரி, சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, என்.ஜி.எம். கல்லூரி, ஆர்.வி.எஸ்., எஸ்.என்.ஆர்., ஸ்ரீ.ஜி. கல்லூரி, ஈரோடு அம்மன் கலை கல்லூரி போன்ற கல்லூரிகளிலும்,
    மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மதுரை சமூகப்பணிக் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, விருதுநகர் இந்து நாடார் கல்லூரி, கொடைக்கானல் கிறிஸ்டியன் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி, லேடிடோக் கல்லூரி, பாத்திமா கல்லூரி போன்ற கல்லூரிகளிலும்,
    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பிஷப் ஹீப்பர், காவேரி, தந்தை கேன்ஸ் ரோவர், அடைக்கல மாதா, ஜீமத் ஆண்டவர் காலேஜ், உருமு தனலட்சுமி காலேஜ், இந்திரா காந்தி கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, போன் சாக்கர்ஸ் கல்லூரி பெரியார் மணியம்மை கல்லூரி, கிறிஸ்துராஜ் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகள் போன்ற கல்லூரிகளிலும்,
    சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மெட்ராஸ் சமூகப் பணிக் கல்லூரி, சென்னை கிறிஸ்டியன் கல்லூரி, லயோலா, எத்திராஜ், வைஷ்ணவி, ராமகிருஷ்ண விவேகானந்தா கல்லூரி, பாரத் பல்கலைக்கழக கல்லூரி, மார்க் கிரகோரியஸ் கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, முகமது சதக் கல்லூரி போன்ற கல்லூரிகளிலும்,
    திருநெல்வேலியில் செயின்ட் சேவியர் கல்லூரி, நாகர்கோவில் எஸ்.டி. இந்து கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி, மலாய்கரை கத்தோலிக் கல்லூரி, திருப்பத்தூர் சேக்ரட் கலை கல்லூரி போன்றவை எம்.எஸ்.டபிள்யூ (Master of Social Work MSW) வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்களாகும்.
    தொடர்புக்கு: பேராசிரியர் அ. அழகர்சாமி, துறைத்தலைவர், முதுகலை சமூகப்பணித் துறை, ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை – 08

    Mobile: 98427 29127.
    Email: aalagar2002@yahoo.co.in