– 2012 – April | தன்னம்பிக்கை

Home » 2012 » April (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    ‘நான்’ கொன்று, வாழ்வோமா …?

    இந்த உலகத்தில் அடுத்த வினாடி எது வேண்டுமானாலும் நடக்கலாம், அழுது கொண்டிருப்பவன் சிரிக்கலாம், சிரித்துக் கொண்டிருப்பவன் அழலாம். ஏனெனில் கண நேரங்களலெல்லாம் உலகம் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. நாம் எவ்வளவு நாட்கள் வாழ்வோம் என்பதில் கூட எந்த நிச்சயமும் இல்லை, என்றாலும், அகந்தையோடு இருக்கும் சில மனிதர்களைப் பார்க்கும் போது, பரிதாபமாகத்தான் இருக்கிறது. இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் வாழும் குட்டி மனிதன் நானே பெரியவன். நானில்லையென்றால் எதுவும் நடக்காது என்று நினைத்துக் கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
    தன்னம்பிக்கை என்பது வேறு; அகம்பாவம் என்பது வேறு. என்னால்தான் எல்லாமே முடியும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே தரும்.இதை எல்லாம் நாம் இன்றைக்கு கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
    எந்த மனதில் அகந்தை இருக்கிறதோ அங்கு குழப்பமும் இருக்கும். கி.வா.ஜ. அவர்கள் சொல்வார்கள் ‘குழம்பு குழம்பியிருக்கிறது, ரசம் தௌவாக இருக்கிறது’. காரணம் குழம்பில் ‘தான்’ இருக்கிறது; ரசத்தில் அதுஇல்லை என்று. (பிராமணர்கள், குழம்பில் போடும் காயைத் ‘தான்’ என்றுதான் சொல்வார்கள்) அகந்தையின் விளைவு குழப்பம்; அதன் விளவு அவசரம்; செயல்திறன்குறைபாடு; தோல்வி! இன்னும்…இன்னும்.
    நமக்கு கொடுக்கப்பட்ட நிமிடங்களல் செய்ய வேண்டிய நல்ல செயல்களை, தேவையான காரியங்களை செய்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு எல்லாம் நானே என்று வாழ்ந்து கொண்டிருந்தால் அது அர்த்தமற்ற வாழ்க்கையாகும்.
    இன்னும் இரண்டு தலைமுறைகள் சென்றால் நம்மை யாரென்று யாருக்குமே தெரியாது. அர்ப்பமான மனிதனாக வாழ்வதும் போதாமல், அதில், இறுமாப்பு, ஆணவம், அகங்காரம் என்று தன்னைத்தான் புகழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.
    நாளைக்கே நாம் இறந்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். செத்த பின்பு நடப்பதெல்லாம் நமக்கே தெரிகிறது என்றும் வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்? நம்மை நேசிப்பவர்கள் அழுது கொண்டிருப்பார்கள், வேண்டாதவர்கள் செத்த பின்பும் அவதூறு பேசி திரிவார்கள், அதுவும் எல்லாம் ஒன்றிரண்டு மாதங்கள்தான்.
    பின்னர் பார்த்தால், அனைவரும் தத்தம் அவரவர், வேலையைச் செய்து கொண்டிருப்பார்கள், அப்படிஎன்றால் , நாம் இல்லையென்றாலும் எல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. நம்மால் செய்ய முடியாத காரியங்களையும் ஜனங்கள் அற்புதமாக செய்து கொண்டிருக்கிறார்களே! உலகம் அழகாக இயங்கிக் கொண்டிருக்கிறதே, நாமில்லையென்றாலும் இவையெல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது.
    ஆம்! நம்மை எதிர்பார்த்து உலகம் இயங்கிக் கொண்டிருப்பதில்லை நாம்தான் எல்லாம் நம் கையில் உள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஒரு சின்ன கதை, எல்லோரும் கேள்வி பட்டது தான்.
    மிகப்பெரிய கோவில் ஒன்றில் பண்டிதர் ஒருவர் பல நாட்கள் புராண உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். படித்தவர்கள், பணக்காரர்கள் பலர் மனைவி மக்களுடன் காரிலும், வண்டிகளலும் தவறாமல் வந்து புராணம் கேட்டனர். ஒரு ஆடு மேய்ப்பவனுக்குப் புராணம் கேட்க ஆசை. அவன் படிப்பும், இல்லாதவன், சபையில் எல்லாருக்கும் சமமாக உட்காராமல் மூலையில் அமர்ந்து கதை கேட்டான். தினந்தோறும் சொற்பொழிவு நடந்தது. கடைசி நாளன்று புராண உபன்யாசம் செய்தவர் சபையில் இருந்தவர்களைப் பார்த்து “ இவ்வளவு நாள் புராணம் கேட்டீர்களே ! உங்களல் யார் சொர்க்கத்திற்குப் போகிறீர்கள் ?” என்று கேட்டார். ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அப்போது ஆடு மேய்ப்பவன் மட்டும், நான் போனால் போவேன் என்று கூறினான். சபை ஆச்சரியப்பட்டது. பெரியவர் விளக்கம் அளக்குமாறு ஆடுமேய்ப்பவனிடம் கேட்டார். அப்போது “நான்” என்ற அகந்தை போனால் சொர்க்கம் போகமுடியும் என்றான் அவன்!
    எனவே நிச்சயமில்லாத இந்த வாழ்வில் பெருமையடித்துக் கொள்வதற்கு எதுவுமில்லை, இருக்கும் காலம் வரை நன்மையைச் செய்து மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தி, எப்போதும் இயந்திரத்தனமாக வாழாமல், வாழ்வின் நிஜமான ருசிகளை அனுபவித்து, நண்பர்கள், சுற்றார்கள், உற்றார் உறவினர்கள் என்று அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்க்கையின் உண்மை நிலையினை அனுபவிக்கும் மனிதனே வாழ்க்கையை நன்றாக வாழ்பவனாவான்.

    பிரபலமாகும் மாற்றுப் பொருளாதாரம்

    பணப்புழக்கம் இல்லாத, எந்த சந்தர்ப்பத்திலும் பணத் தாள்களைப் பயன்படுத்தாத, சமுதாயம் ஒன்றைக் காட்ட முடியுமா? கிரேக்கத்தில் அப்படியான சமூகம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது. கிரேக்க மக்கள், பணத்தை, தமது வாழ்க்கையில் வெறுத்து ஒதுக்கி வருகின்றனர். கிரேக்க நாடு, யூரோ நாணயத்தை பயன்பாட்டில் கொண்டுள்ளது. கடந்த சில வருடங்களாக, நிதி நெருக்கடி காரணமாக, மக்களடம் யூரோவின் கையிருப்பு குறைந்து கொண்டே செல்கின்றது. கையில் காசில்லாமல் வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள், தற்பொழுது ஒரு மாற்றுப் பொருளாதார சமூகத்தை உருவாக்கி உள்ளனர். இந்த சமூகத்தை, கிராமிய, அல்லது நகர மட்டத்தில், நீங்களும் உருவாக்கிக் கொள்ளலாம். குறிப்பாக ஏழைகள் நிறைந்த, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளல், மாற்றுப் பொருளாதாரத்தின் அவசியம் காணப்படுகின்றது. அதற்கு முதல், கிரேக்க மக்கள், பணமின்றி எப்படி வாழ்கின்றார்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம். அவர்களடம் இருந்து கற்றுக் கொள்வோம்.
    கிரேக்க நாட்டுப்புறங்களல், மாற்று நாணய வலையமைப்பு (Alternative Currency Network) என்றொரு கட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதில் உறுப்பினராக சேரும் ஒருவர், தனக்குத் தெரிந்த பண்டத்தை உற்பத்தி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவர் வீட்டில் சவர்க்காரம் செய்யும் கைத்தொழிலை தெரிந்து வைத்திருக்கிறார். அவர் உற்பத்தி செய்த சவர்க்காரத்திற்கு விலை நிர்ணயம் செய்கின்றார். ஒரு சவர்க்காரத்தின் விலை 1 கரெட்டி (kaereti).வலையமைப்பைச் சேர்ந்த நபர்கள், வந்து வாங்கிச் செல்வார்கள். அதற்குப் பதிலாக, அவர் எத்தனை கரெட்டிக்கு சவர்க்காரம் விற்கின்றாரோ, அந்த அளவுக்கு, விரும்பிய பொருட்களை பண்டமாற்றாக பெற்றுக் கொள்ளலாம். அது தேன், பழம், காய்கறி, இறைச்சி, எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவர் எவ்வளவு கரெட்டிக்கு விற்றார், எவ்வளவு கரெட்டிக்கு பொருட்களை வாங்கினார், என்பன போன்ற விபரங்கள் கணினியில் குறித்து வைக்கப் படும். அமைப்பில் உள்ள உறுப்பினர்களன், அத்தனை கணக்கு வழக்குகளும், மத்திய கணினி ஒன்றில் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. இந்தப் பணப் பரிமாற்றத்தில், யூரோ நாணயங்கள் பாவனையில் இல்லாததால், யாரும் ஊழல் செய்து பணம் சேர்க்க முடியாது.
    இந்த சமூக வலையமைப்பில் உள்ள உறுப்பினர்களே, தமக்கு எந்தப் பொருள் தேவை என்பதையும், விலையையும் தீர்மானிக்கின்றனர். ஓரிடத்தில் பண்டமாற்று நடைபெற்றால், அதிலே சம்பந்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும், பொருளன் விலையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, நாணயப் பரிமாற்றத்தில் நிச்சயிக்கப் பட்ட தொகையை, ஒருவர் மற்றவரது கணக்கில் குறித்துக் கொள்வார்கள். “சமூக நாணயம்” என்றழைக்கப்படும் கரெட்டி மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். யூரோ, டாலர் அல்லது வேறு நாணயத்தை பயன்படுத்துவது தடைசெய்யப் பட்டுள்ளது. கரெட்டி என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா? “நான் ஒருவருக்கு, பிரதிபலன் எதிர்பாராமல், சிறு உதவி செய்கிறேன்.” என்று அர்த்தம்.
    கிரேக்கத்தில் இன்று பல்கிப் பெருகி வரும், மாற்றுப் பொருளாதார வலையமைப்பை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். விவசாய விளை பொருட்கள், மீன், வைன், மரத் தளவாடங்கள், சவர்க்காரம், ஆலிவ் எண்ணெய், கைவினைப் பொருட்கள், சாக்லேட், ஆடை வகைகள், செருப்பு, நகைகள்… இன்னும் பல. உங்களுக்கு என்னென்ன பொருட்கள் அத்தியாவசியமாக தேவைப் படுகின்றதோ, அத்தனையும் பெற்றுக் கொள்ளலாம். அவற்றை வாங்குவதற்கு, நீங்கள் ஒரு யூரோ நாணயம் கூட கையில் வைத்திருக்கத் தேவையில்லை. அதிலே பெரிய சிக்கல் ஒன்றுமில்லை. ஒரு சாதாரண வர்த்தக நிலையத்தில் நடப்பதைப் போல, ஒவ்வொரு பண்டமும் வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், பரிமாற்றம் துரித கதியில் நடக்கின்றது. அதற்கு காரணம், டிஜிட்டல் மயப் படுத்தப் பட்ட நாணயப் பரிமாற்றம். கணினியில் பாவிக்கப்படும் மென்பொருள், எல்லாவற்றையும் ஒரு நொடியில் முடித்துத் தந்து விடுகின்றது.
    உங்களுக்குத் தேவையான உணவை அல்லது உடையை வாங்குவதற்கு, நீங்களும் ஏதாவது ஒரு பண்டத்தை வைத்திருக்க வேண்டுமா? இல்லை. எல்லோருமே உற்பத்தியாளராக இருக்க முடியாது. ஏதாவது ஒரு துறையில், தொழில்நுட்ப அறிவு பெற்றவர்கள் நிறையப் பேர் உள்ளனர். வைத்தியர், கணக்காளர், ஆசிரியர், வழக்குரைஞர், பொறியியலாளர், கணினி வல்லுநர், மெக்கானிக், தையல்காரர், முடி திருத்துபவர், சமையல்காரர், தோட்டக்காரர்…. இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இப்படி ஏராளமான தொழில் தேர்ச்சி பெற்ற நபர்கள், தமது சேவையை வழங்கத் தயாராக இருக்கின்றனர். உங்களுக்கு வேறென்ன வேண்டும்? சுருக்கமாக, இது ஒரு தன்னிறைவு கண்ட சமுதாயம்.
    கரெட்டி எனும் உள்ளூர் நாணயம், ஆகஸ்ட் 2011 முதல் புழக்கத்தில் வந்துள்ளது. கிரேட்டா என்ற தீவில் மட்டும், 300 க்கும் அதிகமானோர் அந்த நாணயத்தை பயன்படுத்துகின்றனர். கிரேக்கப் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்து வருவதால், தினசரி புதிய உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர். கணக்கு வழக்குகள் அனைவருக்கும் தெரியும் படியாக இருப்பதால், ஊழலுக்கு அங்கே இடமில்லை. ஒவ்வொரு உறுப்பினரும், தினசரி நடக்கும் பணமாற்றத்தை பார்வையிடலாம். விலை, விற்ற அல்லது வாங்கிய பொருட்களன் எண்ணிக்கை, எல்லாவற்றையும் சரி பார்க்கலாம். ஒரு காரெட்டி நாணயத்தின் மதிப்பு ஒரு யூரோ. ஆனால், யூரோ நாணயம் பயன்படுத்துவது இந்த வலையமைப்பில் தடை செய்யப் பட்டுள்ளது.
    மாற்று நாணயத்தை ஆதரிக்கும், கிரேட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் பொருளாதார விரிவுரையாளர் எங்ர்ழ்ஞ்ங் நற்ஹற்ட்ஹந்ண்ள் கூறுகின்றார். “சமூகத்தின் அடித்தட்டு ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த மாற்றுப் பொருளாதாரம் அமைக்கப் பட்டுள்ளது. மந்த நிலையில் இருந்த பொருளாதார செயல்பாடுகள் ஊக்குவிக்கப் படுகின்றன. இதனால், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன. நம்பிக்கை, எளமை, வௌப்படையான தன்மை, இவை தான் (கரெட்டி) நாணய பரிமாற்றத்தின் அடிப்படை. இன்று கிரேக்கம் முழுவதும் 26 வலையமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த வருட இறுதிக்குள், நாடு முழுவதும் நூறு அமைப்புகள் இயங்கத் தொடங்கியிருக்கும்.”
    பொருளாதார நெருக்கடியால், முதியோர் தான் அதிகமாகப் பாதிக்கப் படுகின்றனர். மின்சாரம், எரிவாயுக் கட்டணங்களை கட்ட முடியாமல் தடுமாறுகின்றனர். இன்று, மாற்றுப் பொருளாதார வலையமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் அவற்றைக் கட்ட உதவுகின்றனர். முதியோரை பராமரிக்கின்றனர். வேலைக்கு போகும் தம்பதியினரின், குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஆள் கிடைக்கின்றது. வீட்டில் ஏதாவது உடைந்து விட்டால், யாராவது வந்து திருத்திக் கொடுக்கிறார்கள். எங்கேயாவது போக வேண்டுமானால், தெருவில் கண்டாலும், வாகனம் வைத்திருப்பவர்கள் ஏற்றிச் செல்கிறார்கள். மக்கள் எல்லோரும் ஒரே குடும்பம் போலப் பழகுகின்றனர். அவர்களுக்கு இடையே உண்மையான நட்பு மலர்ந்துள்ளது. தங்களுடைய வாழ்க்கையில், “முதல் தடவையாக சுதந்திரத்தை அனுபவிப்பதாக’ அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
    மாற்று நாணய வலையமைப்பானது உள்ளூர் மட்டத்தில் தான் சாத்தியமாகின்றது. தேசத்தின் பொருளாதார பிரச்சினையை தீர்க்கும் வல்லமை அதற்குக் கிடையாது. வங்கிகளும், அரச கட்டமைப்புகளும், நிதி நிறுவனங்களும் மட்டுமே பெரிய மாற்றங்களை உண்டாக்கலாம். ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட்டால் மட்டுமே, பெரிய அதிசயங்களை நிகழ்த்திக் காட்டலாம். அது வரையில், மாற்று நாணய பொருளாதாரம், யூரோ நாணய பொருளாதாரத்திற்கு சமாந்தரமாகவே சென்று கொண்டிருக்கும்.
    பணப் புழக்கம் இல்லாத சமுதாயங்கள் பல, வரலாற்றில் ஏற்கனவே இருந்துள்ளன. சோவியத் யூனியனிலும், மாவோவின் சீனாவிலும், சில இடங்களல் பரிசோதனை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றுமேயில்லாத வெறும் கட்டாந்தரையில் இருந்து, நவீன நகரங்கள் உருவாகின. இந்த சமுதாயங்கள், இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை எதுவும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப் படவில்லை.
    கிரேக்கத்தைப் போலவே இன்று, அமெரிக்காவிலும், பல்வேறு ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க நாடுகளலும், பணமில்லாமல் வாழுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. முதலாளத்துவத்தின் மிகப் பெரிய குறைபாடான நிதி நெருக்கடிக்கு தீர்வாக, அதைக் கருதுகின்றனர். இயற்கையில் கிடைக்கும் பொருட்கள், தேவையில்லையென வீசப்படும் பொருட்கள், இவற்றை பயன்படுத்தியே சந்தோஷமான வாழ்க்கை வாழலாம். நெதர்லாந்தில், பணமில்லாமல் வாழ விரும்புவோர் அமைப்பு ரீதியான தொடர்பாடலைக் கொண்டுள்ளனர். அந்த வலையமைப்பில் யாரும் சேரலாம்.
    முதலில், உங்களுக்கு என்னென்ன வேலை தெரியும் என்பதை தெரிவிக்க வேண்டும். தேவைப் படுவோர் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். நீங்கள் அவருக்கு செய்து கொடுக்கும் வேலைநேரத்தை கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அதேயளவு நேரத்திற்கு, அல்லது அதை விட அதிகமாக, அவர் உங்களுக்கு தேவையான வேலைகளை வந்து செய்து கொடுப்பார். சேவைகளைத் தவிர, பொருட்களையும் பண்டமாற்று செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம், எல்லோரும் பயனடையலாம். ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணப்புழக்கம் இருக்காது என்பது குறிப்பிடத் தக்கது.
    கிரேக்க மக்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்யவும் தெரியும், அதே நேரம், புதியதோர் உலகத்தை படைக்கவும் தெரியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
    நன்றி: BBC News, Greece’s Alternative Economy with Bartering.

    மூன்று முடிச்சு

    மூன்று முடிச்சை அவிழுங்க, ஸார் !!
    “ஸார், டைம் மேனேஜ்மென்ட் டெக்னிக் எல்லாம் நம்ம நாட்டுல யூஸ் ஆகாது. இங்க எல்லாரும் அலங்காரத்துக்குத்தான் “வாட்ச்’ கட்டி இருக்கான்’.
    நேர மேலாண்மை பற்றி நாம் யாரிடமாவது பேசினால் இப்படித்தான் பதில் சொல்வார்கள். மேலே ஏதாவது நாம் சொன்னால், “ஸார், ஜப்பான்ல ஒரு தடவ என்ன ஆச்சு தெரியுமா? ஒரு ட்ரெயின் மூணு மணி நேரம் லேட்டா வந்தது. அதாவது ஒரு பாஸன்ஜர் ட்ரெயின் எடுத்துகுற நேரம் ஆயிடுச்சி. ரயில்வே டிபார்ட்மென்ட் என்ன செஞ்சாங்க தெரியுமா? எக்ஸ்பிரஸ் ட்ரெயினுக்கு வாங்கின கூடுதல் காசை திரும்ப கொடுத்துட்டாங்க. அது நாடு ஸார்’. என்று உதாரணம் காட்டுவார்கள்.
    இந்த மனோபாவத்தில் பெரிதான தவறு ஏதும் இல்லை. இவர், உங்களையும் என்னையும் போல் ஏதாவது ஒரு தரமான “நேர மேலாண்மை’ புத்தகத்தைப் படித்திருப்பார். அதில் சிபாரிசு செய்யப்பட்ட ஒரு சில நல்ல யுக்திகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி இருப்பார். கொஞ்ச நாட்களல் அவை வலுவிழந்து போயிருக்கும். மேலும் இரண்டொரு முறை முயன்றிருப்பார். அப்பொழுதும் தோல்வியே கிட்டியிருக்கும். அதன் பிறகு நேர மேலாண்மை என்பதே நம் நாட்டுக்கு உகந்தது அல்ல என்ற முடிவிற்கு வந்திருப்பார்.
    பெரும்பாலான மக்கள் இப்படிப்பட்ட எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். ஆனாலும் மேலும் ஒரு முறை முயற்சி செய்வோமே! அதற்கு முன், ஒரு சில காட்சிகளைப் பார்ப்போம்.
    ஒரு தம்பதியருக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை ஒன்று இருக்கிறது. இருவருமே அலுவலகத்தில் பணி புரிபவர்கள். எல்லாக் காலைப் பொழுதுமே Expresso Coffee இயந்திரம் போல் சத்தமும் நீராவியுமாக… ஒரே பதட்டம் தான். பல நாட்கள், அந்தக் குழந்தையின் தாய் இட்டிலித் துண்டை அதன் வாயில் திணித்தபடியே தான் பள்ளக்கூட வாகனத்தில் ஏற்றுவார்.
    இந்தக் குழந்தைக்குப் “பதட்டம்’ என்பது இயல்பான நிகழ்வு போல தான் கவனத்தில் பதியும். அதுவே மீண்டும் மீண்டும் நடக்கும் பொழுது அது ஒரு பலமான பதிவாகப் பொறிக்கப்படும். பின்னாளல் இதுவே ஒரு “படிமம்’ என்பதாகவும் ஆகலாம். இதுதான் ஒரு மனதில் உருவாகும் “முதல் முடிச்சு’.
    அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி +2 படிப்பதாக வைத்துக் கொள்வோம். ஏதோ ஒரு தேர்வு நாள். தந்தை மகனைப் பள்ளக்கு அழைத்துச் செல்கிறார். வழியில் அவர்களது இரண்டு சக்கர வாகனம் “பஞ்சர்’ ஆகி விடுகிறது. “இன்னமும் சீக்கிரம் நீ கிளம்பி இருக்க வேண்டும்’ என்று தந்தை மகனை மிகவும் கடிந்து கொள்கிறார். பரிட்சை பயத்தோடு இந்தக் கடுஞ்சொல்லும் சேர்ந்து கொள்கிறது. உள்ளே ஒரு ஊமைக் காயம் உண்டாகிறது. இரண்டாம் முடிச்சு!
    காட்சி மாற்றம். அந்த மாணவன் பட்டதாரி ஆகி வௌயூரில் ஒரு வேலையிலும் சேர்ந்து விடுகிறார். வீட்டிலிருந்து விடுதலை. பிறகென்ன … விரும்பிய நேரம் தூக்கம். நினைத்த நேரத்தில் விழிப்பு. கட்டுப்பாடு கொஞ்சமும் இல்லாத வாழ்க்கை !! சில வருடங்கள் செல்கின்றன. இவர் பல இடங்களுக்குக் கால தாமதமாகச் சென்றதால் சில கசப்பான அனுபவங்கள் நிகழ்கின்றன. நல்ல வாய்ப்புகள் பலவற்றை இழக்கிறார். இவரது அலட்சிய மனோபாவத்தால் ஒரு முறை பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. தான் நேரத்தைச் சரியாக நிர்வகிக்கவில்லை. அதனால்தான் இது போன்ற தோல்விகள் என்று நினைக்கிறார். அந்தக் குறையைச் சரி செய்ய வேண்டும் ஏதாவது செய்தே ஆக வேண்டும் எனத் தீர்மானிக்கிறார்.
    ஒரு நாள் எதேச்சையாக, நேர மேலாண்மை பற்றிய ஒரு புத்தகம் அவர் கண்ணில் படுகிறது. அதை வாங்குகிறார். ஆர்வத்தோடு படிக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில யுக்திகளைப் பயன்படுத்தத் தொடங்குகிறார். தோல்வி அடைகிறார். மீண்டும் முயற்சி. மீண்டும் தோல்வி. மீண்டும் ஒரு முயற்சி. ஆனால் அதே முடிவு. பிறகு, அந்தப் புத்தகத்தை அலமாரியின் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு, அதைப் பற்றி மறந்தே போகிறார்.
    யார் இவர் என்று கேட்கிறீர்களா? இவரைத்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் சந்தித்தோம். ஜப்பானை உதாரணம் காட்டியதும் இவரேதான். இதன் காரணம் என்ன? அவர் பயன்படுத்திய யுக்திகள் குறையுள்ளவையா? அல்லது இந்தியாவில் நேர மேலாண்மை என்பதே செல்லுபடியாகாதா?
    ஒரு பிரச்சனையைத் தீர்க்க தவறான யுக்திகளைப் பயன்படுத்தினால் தோல்விதான் கிட்டும். அது போலவே, ஒருவருக்குப் பொருந்தும் ஒரு யுக்தி இன்னொருவருக்கு எந்தப் பயனையும் அளக்காமலும் போகலாம். ஆனால், இவை தவிர வேறு ஒரு காரணமும் இருக்கலாம். அது என்ன?
    இவரது வாழ்க்கையைக் கொஞ்சம் அலசுவோம். குழந்தைப் பருவத்தில் எந்த விதமான புரிதலும் இல்லாமல் “பதட்டம்’ என்பது முதல் முடிச்சாக விழுந்தது. காரியங்களைச் செய்ய அதுவே சரியான முறை என்ற பதிவும் உண்டாகி உள்ளது.
    மாணவப் பருவத்தில், அந்த பரிட்சை நாளன்று … தந்தையின் சாடல்… அந்த நிகழ்வு ஒரு சாதாரண நாளல் ஏற்பட்டிருந்தால் பெரிய விஷயமாக இருந்திருக்காது. வண்டி பழுதடைந்ததில் மகனின் தவறு ஏதும் இல்லை. சொல்லப் போனால் தந்தையின் தவறும் கூட ஏதும் இல்லை. ஆனால், தேர்வு பயம் என்னும் உணர்ச்சி உச்சத்தில் இருந்த அந்த நாளல் தந்தையின் திட்டு மகனைப் பாதித்திருக்கிறது. உணர்ச்சியின் ஆக்ரமிப்பில் உள்ள மனமானது பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் போன்றது. சாடல் போன்ற சம்மட்டி அடியில் அவலட்சண உருவகங்களாக வார்ப்படம் ஆகும். அதுவே இங்கு விழுந்த இரண்டாம் முடிச்சு!
    வேலை கிடைத்த பின், கட்டுப்பாடற்ற சுதந்திரம், எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தி இருக்கும். “காஞ்ச மாடு கம்பங் காட்டில் புகுதாற் போல்’ சிந்தனை கட்டுப்பாடற்று ஓடியிருக்கும். விளைவு … குழப்பமான நடவடிக்கைகள். அதனால் நேர நிர்வாகம் என்னும் குணம் மேலும் சிடுக்காகி இருக்கும். இந்தத் தருணத்தில்தான் இவர் ஒரு நேர மேலாண்மைப் புத்தகத்தை வாங்குகிறார். அதில் படித்த விஷயத்தைப் பிரயோகம் செய்கிறார். என்ன நடக்கும்?
    உதாரணமாக, மறுநாள் முதல், காலை நான்கு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று அவர் தீர்மானிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கடிகாரத்தில் நாலு மணிக்கு ஒலி எழுப்ப அலாரத்தைப் பொருத்தி விட்டு தூங்கப் போவார்.
    கொண்டைச் சேவல் போல் கடிகாரம், தன் கடமையை வினாடி பிசகாமல் செய்யும். ஆனால், அலாரம் அடித்தவுடன், அவர் விழித்துக் கொள்ளும் முன்பே அவரது ஆழ் மனம் விழித்துக் கொள்ளும். அது தனது குரங்கு புத்தியைக் காட்டும்.
    மாணவப் பருவத்தில் அவருக்கு தந்தையோடு ஏற்பட்ட கசப்பை அந்த நொடியில் வௌயே துப்பும். உடனே, புதிய பழக்கத்திற்கு எதிரான ஒரு உணர்ச்சி பீறிட்டுக் கொண்டு பாயும். அவர் என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் அனுமானித்தது சரியே! கடிகாரத்தின் தலையில் ஓங்கி ஒரு தட்டு தட்டி விட்டு மீண்டும் தூங்கப் போய் விடுவார். அவரோடு அவரது ஆழ்மனமும் தூங்கப் போய்விடும். அதன் பின் “4 மணி” என்ற யுக்திக்குச் சங்கு ஊதப்படும்!!
    இப்படித்தான் ஒரு நல்ல வழிமுறையை பிரயோகம் செய்ய அவர் முனையும் பொழுதெல்லாம் இந்த மூன்று முடிச்சுகள் தனியாகவோ அல்லது கூட்டணி முறையிலோ கைகோர்த்துக் கொண்டு அவர் சிந்தனையைப் பலமிழக்கச் செய்யும். புதிய நல்ல பழக்க வழக்கங்கள் உருவாகாமல் “காவல் காக்கும்!’
    இதை எப்படிச் சரி செய்யலாம்? விடையும் வழியும் மிக மிகச் சுலபம். ஒரு நோட்டுப் புத்தகமும் சில மணி நேரத் தனிமையுமே போதுமானது.
    தனியாக அமர்ந்து கொண்டு “நேரம் மற்றும் அதன் நிர்வாகம்” சம்பந்தமான உங்கள் கடந்தகால முக்கியப் பதிவுகளை எல்லாம் அந்த நோட்டுப் புத்தகத்தில் குறியுங்கள். எந்த ஒரு நிகழ்வானாலும் சரி. எழுதுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதுங்கள். அது சம்பந்தமான உங்கள் உணர்வுகளையும் அதன் பக்கத்திலேயே எழுதுங்கள்.
    சிறு வயது, மாணவப் பருவம், வளர்ந்த பருவம் என்று எல்லா வகை நிகழ்வுகளையும் மீண்டும் மீண்டும் படியுங்கள். மொத்தத்தில் ஒரு PATTERN (ஒரு தினுசு அமைவு) கிடைக்கும். கொஞ்சம் ஆழமாகச் சிந்தியுங்கள். ஒரு தௌவு பிறக்கும். கீழே கொடுக்கப் பட்டுள்ள விஷயங்கள் அல்லது ஆச்சரியங்கள் உங்களுக்குத் தெரிய வரலாம் !
    * நிகழ்வுகள் சாதாரணமானவையாகவும் ஆனால் அவை உண்டாக்கிய தாக்கம் அதிகமானதாகவும் இருக்கும்.
    * யார் மீதோ உள்ள கோபம், நேரம் என்னும் ஒரு விஷயத்தின் மீது விழுந்திருக்கும்.
    * ஒருவர் நம் மீது செலுத்தும் அதிகாரத்தை மறைமுகமாக எதிர்க்க “நேர விரயத்தை” ஒரு சாதனமாக நாம் பயன்படுத்தி இருப்போம்.
    இப்படி பல விஷயங்கள் மற்றும் முரண்கள் நமக்குத் தெரியவரும். கொஞ்சம் சிந்தித்தால், இவை ஒரு கடந்தகாலச் சுமைகள் என்பதைப் புரிந்து கொள்வோம். கொஞ்சம் நம் மனதோடு இணக்கமாகப் பேசினால், இது போன்ற பழைய கசடுகள் மெல்ல மெல்ல நீங்கும். மூன்று முடிச்சுகளும் மெல்ல மெல்ல அவிழும். சிடுக்கு விலகும். மனத்திரை “பளச்” என்று பிரகாசமாகும்.
    இப்பொழுது, காலையில் நம்மை எழுப்புவதற்குக் கடிகாரத்தில் அலாரம் பொருத்திப் பாருங்கள். அதன் ஒலி, உங்கள் காதுகளுக்கு “வெற்றி மணி’ போல் இனிமையாகக் கேட்கும்.
    நீங்கள் ஒரு புதிய மனிதராக வலம் வருவீர்கள்!!

    பிரச்சனைகளுக்குத் தீர்வு நம்மிடமே….

    மனிதனாக பிறந்தால் பிரச்சனைகள்
    இருப்பது இயல்பே.
    அவற்றை நாம் பார்க்கும்
    கண்ணோட்டத்தை பொருத்தே
    அதன் விளைவுகளும் இருக்கும்.
    பிரச்சனைகள் வரும்பொழுது
    துவண்டு விடாமல்,
    அவற்றை உள்ளடக்கிக் கொள்ளாமல்,
    எவ்வாறு அதைத் தீர்த்து,
    மீண்டு வருவது என்பதையே
    யோசிக்க வேண்டும்.
    “பயணிகளின் கனிவான கவனத்திற்கு…” என்று ரயில்களின் நிலவரங்களை கணீரென்று ஒரு குரல் எடுத்துரைத்துக் கொண்டிருந்தது. தாங்கள் செல்ல வேண்டிய ரயில் வந்துவிட்டதா? இல்லையா? என்று பயணிகள் தங்கள் உடைமைகளை எடுத்துத் தயாராகிக் கொண்டிருந்தனர். அவ்வாறே ஒரு முதியவரும் தன் இருபத்தி ஐந்து வயதுடைய மகனும் ரயிலை எதிர்நோக்கியிருந்தனர். ரயில், தன் அசுர வேகத்தை அடக்கிக் கொண்டு, தன் களைப்பை வெளிப்படுத்தும் வண்ணம், மெல்ல மெல்ல ஊர்ந்து, ஒரு விதமாக தடத்தை வந்தடைய, பயணிகள் இறங்கவும் ஏறவுமாக, அந்த நடைபாதையே பரபரப்பாக இருந்தது. முதியவரும் தன் மகனும் ரயிலில் ஏறி தங்களின் இருக்கைகளில் அமர்ந்தனர்.
    அந்த இளைஞனுக்கு அப்படியொரு குதூகலம்… ஏதோ இணங்கொள்ளாத ஒரு பேரின்பம். ஒரு சிறு குழந்தையைப் போல் ஜன்னலின் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ரயில் கிளம்பியதும், “அப்பாஙு அப்பாஙு அங்கே பாருங்கள் மரங்களும் பயணம் செய்கின்றனஙு” என்று பூரிப்படைந்தான். தந்தையும் மெல்லியதாக புன்னகைத்தார். அந்த ரயில் பெட்டியில் இருந்த சக பயணிகளுக்கு சற்றே நெருடலாகவே இருந்தது. மேலும் வானம், மேகம், பறவைகள், ஆறு, குளம் ஆகியவற்றை எல்லாம் ஜன்னலின் வழியே பார்த்து மிகவும் உற்சாகமடைந்தான் அந்த இளைஞன்.
    தன் பொறுமையையும், ஆர்வத்தையும் அடக்க முடியாமல் எதிரே இருந்த ஒருவர் அந்த முதியவரிடம், “உங்கள் மகன் இப்படி இருக்கிறானே; நீங்கள் ஏன் அவனை ஒரு நல்ல மருத்துவரிடம் காண்பிக்கக்கூடாது?” என்று வினவினார். தன் முகத்தில் பூத்திருந்த புன்னகை சற்றும் மாறாமல் “ஆமாம்ஙு மருத்துவரிடம் காண்பித்து விட்டு தான் வருகிறேன்; அவனுக்கு முதல் முறையாக கண்பார்வை கிடைத்துள்ளது” என்றார். கேள்வி கேட்டவர் வாயடைத்துப் போனார்.
    இவ்வாறே நாமும் வாழ்க்கையில், பல நேரங்களில் எந்த ஆய்வுமின்றி திடீர் தீர்மானங்களுக்கும், முடிவுகளுக்கும் வந்துவிடுகிறோம். அவை சில நேரம் பிரச்சனைகளாக உருவெடுக்கின்றன. திடீர் சுனாமியாக கொந்தளித்து மன உளைச்சலில் போய் முடிகின்றன. நாம் வெளியே நடந்து செல்லும்போது, நம் தலைக்கு மேல் வானத்தில் பறவைகள் பல பறக்கின்றன. அவற்றில் ஒரு பறவை நம் தலை மீது தன் கூட்டை கட்டி அமர்ந்து கொண்டால் எப்படி இருக்கும்?
    இதைப்போலத்தான் பிரச்சனைகள் பல நம்மை சூழ்ந்து கொள்ளும்; அவற்றை மேலோட்டமாக துரத்தி விடாமல் அவற்றை நமக்குள்ளே குடியிருத்தி நம்மை நாமே துன்பத்திற்கு ஆளாக்கிக் கொள்கிறோம். எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு நம்மிடமே இருக்கிறது. அதை உணராமல் தீர்வுகளையும், மன அமைதியையும் தேடி எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறோம்.
    கடவுள் பக்தி நிறைந்த ஒரு இளைஞன், தினமும் கோயிலில் பூஜை செய்து வந்தானாம். அவ்வழிபாடுகளில் ஆனந்தம் அடைந்த கடவுள், அவன் முன் தோன்றி “உனக்கென்ன வரம் வேண்டும்? கேள்ஙு” என்றார். அந்த இளைஞனோ, தனக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று பணிவாகக் கேட்டான். வரமும் அருளப்பட்டது. கடவுள் அவனை முதலில் நரகத்திற்கு அழைத்துச் சென்றாராம். அந்தோஙு பரிதாபம் அங்கே மக்கள் அனைவரும் சோர்ந்து, கவலையாக, மெலிந்த தேகத்துடன் காட்சியளித்தனர். ஆனால் நரகத்தின் நடுவே ஒரு பெரிய மேஜை இருந்தது. அங்கே சுவையான உணவு பதார்த்தங்களும், பழங்களும் நிறைந்திருந்தன. இப்படியிருக்க மக்கள் ஏன் சோர்ந்து போய் இருக்கிறார்கள்? என்று குழப்பமடைந்த இளைஞனுக்கு விஷயம் புரிந்தது. அவர்கள் அனைவரின் கைகளிலும் பெரிய கரண்டி தோள்பட்டையில் இருந்து கட்டப்பட்டிருந்தது. கைகளை மடக்க முடியாத நிலைமையில், சுவையான உணவு இருந்தும் உண்ண முடியாத ஒரு கொடூரமான தண்டனைஙு அந்தக் காட்சியைக் கண்டதும், இளைஞனுக்கு உலக வாழ்க்கையில் எந்த பாவமும் செய்துவிடக் கூடாது என்று எண்ணம் ஏற்பட்டது.
    பின்பு கடவுள் அவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார். வெண்ணிற புகையும், குளிர்ந்த நீரோடைகளையும் எதிர்பார்த்து சென்ற இளைஞனுக்கு ஒரே அதிர்ச்சி. ஏனென்றால் நரகத்தில் இருந்த அதே சூழல் தான் இங்கேயும். கரங்களில் நீண்ட கரண்டி கட்டப்பட்டிருந்தது… பெரிய மேஜை … நிறைய உணவு வகைகள் … ஆனால் சொர்க்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் கொழுத்திருந்தனர். இளைஞன் நன்றாக குழம்பிப் போனான். நரகமும் சொர்க்கமும் ஒரே மாதிரிதான் அமைந்து இருக்கிறது. ஆனால் சொர்க்கத்தில் மட்டும் எவ்வாறு மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று கடவுளிடம் வினவினான். “அவர்களை நன்கு கவனித்துப் பார்” என்று கடவுள் பதிலளித்தார். அவ்வாறு செய்த இளைஞனுக்கு உண்மை புரிந்தது. சொர்க்கத்தில் இருந்தவர்கள் தங்கள் கைகளில் கட்டப்பட்டிருந்த கரண்டியால் உணவை எடுத்து ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டிருந்தனர். எனவே மகிழ்ந்திருந்தனர்.
    மனிதனாக பிறந்தால் பிரச்சனைகள் இருப்பது இயல்பே. அவற்றை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை பொருத்தே அதன் விளைவுகளும் இருக்கும். பிரச்சனைகள் வரும்பொழுது துவண்டு விடாமல், அவற்றை உள்ளடக்கிக் கொள்ளாமல், எவ்வாறு அதைத் தீர்த்து, மீண்டு வருவது என்பதையே யோசிக்க வேண்டும். “வாழ்வது ஒரு முறை” அந்த வாழ்க்கையை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் உங்கள் கையில்!!!

    கால்பந்தும் கால்நடையும்

    நந்தகுமார் ஸ்டேட்டுக்கு விளையாடிட்டு வந்திருக்கான் என்று பிரமிப்பை நிறைத்துக்கொண்டு நாங்கள் பார்ப்போம்…
    ‘டேய் விட்டுர்றா’ என்று தனது நண்பன் ஒருவனை வி.ஐ.பி எதிரணி விளையாட்டு வீரருக்கு எளமையான வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு சொல்வது உண்டு. சில சென்னை கால்பந்து அணிகளன் தலைவர்கள் அதையும் கவனித்து இருக்கின்றோம்.
    இந்த இரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் முப்பது வருடங்கள் கழிந்திருக்கின்றன. முப்பது வருடங்களாக விளையாடுமளவு அதுவும் கால்பந்து விளையாடுமளவு உடல்தகுதியை வைத்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சி தருவதுதான். விளையாட்டை படிப்பின் எதிரியாகவே பார்த்துப் பழகிப்போன கண்களுக்கு அது வாழ்வின் முதுகெலும்பு என்று மதிப்புக் கூட்ட ஒரு திரு. சேர்த்தால் திருவிளையாடல் உயரத்திற்குச் சென்றுவிடுகின்றோம்.
    ஆண்டவனே விளையாடியிருக்கின்றார்; விதி விளையாடி விட்டது, விளையாட்டுப் போக்கில் நடந்து விட்டது, கஷ்டமே தெரியவில்லை என்றெல்லாம் பேசிக்கொண்டே இருந்தாலும் நம் கரங்களை உடலை அதில் ஈடுபடுத்திப்பார்த்தால் என்ன? என்று சில பேர் யோசிக்க மாட்டேன் என்கின்றோம். 1982க்குப் போவோம், நாம் பார்த்த நந்தகுமார் இப்பொழுது எங்கு விளையாடுகின்றார் என்று தெரியவில்லை. ஆனாலும் அவன் கால்களுக்கும் பந்திற்கும் ஒரு காதல் இருந்ததை உணர முடிந்தது. பிரேசில் அணியினர் மிகச் சிறிய பரிமாறுதலுடன் கால்பந்தை நடத்தி செல்வதும் 4-3-3-1 என்றவாரோ 3-4-3-1 என்றவாரோ வியூகம் வகுப்பதையும் அந்த காலகட்டத்தில் அறிந்திருக்கவில்லை நாம். இந்த எண்கள் கால்பந்து களத்தின் தமக்குரிய அரைப்பாகத்தில் முன்களம் (4), நடுகளம் (3), பின்களம் (3), இலக்குத் தடுப்பாளர் (1) என்ற வகையில் வீரர்களை நிறுத்துவதைத்தான் குறிக்கின்றது.
    பெள்ளாச்சி பஸ் ஸ்டேண்டில் வௌயே வைத்திருந்த ஒரு டி.வி யில் கால்பந்தை பார்த்து மனசுக்குள் பிரேசிலுக்காய் கவலைப்பட்டு ரொனால்டோவிற்கு என்ன நிகழ்ந்தது என்றே தெரியாமல் போட்டி பொசுக்கென்று முடிந்த சோகத்தோடு போட்டித் தேர்வுக்கும் படித்துக் கொண்டிருந்த காலம் கால்பந்தை பரிட்சைப் படிப்புக்கு வண்ணம் சேர்த்த பின்னணியாய்த்தான் காணச் சொன்னது. அது படிப்பைப் பாதித்த தடயம் கூட தடவிப் பார்த்தாலும் கிடைக்காது. பால்ய வயதிலிருந்து பாதங்கள் பந்தைத் தேடி ஓடிப்பழகிய பள்ள வயது வழியாய் இன்றைக்கும் நேரு விளையாட்டரங்கில் (கோவை, சென்னை மற்றும் ஈரோட்டில்) என பச்சைப் புல்வௌயைப் பார்க்கும் பொழுதெல்லாம் அட்ரீனல் செழித்தோடத் தொடங்கிவிடுகின்றது. செழியன் தனது ஐம்பதுகளைத் தாண்டிய வயதில் இப்பொழுதுதான் இந்த விளையாட்டின் பரிமாணத்தை சரியாகப் பார்க்கின்றேன். சார் ஒடுவதைப் பார்க்கையில் எனக்கே என்னவோ செய்கின்றது என்றார்.
    வாழ்க்கை முறை சார்ந்த வியாதிகள் நெடிந்தோங்கி பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் ‘வாக்கிங்’ என்று செல்லமாக அழைக்கப்படும் உடற்பயிற்சி உத்தியோடு போராடிக்கொண்டு இருக்கின்ற நிறையப்பேர் மருத்துவ மனையை நோக்கி நடக்காமலிருப்பதற்கு நடப்பதுதான் வழி என்பதை முழுதாகத் தெரிந்திருந்தும் பின்பற்றாமல் இருப்பது ஆச்சரியகரமாக இருக்கின்றது.
    முதல் வருட கல்லுரி படிப்பில் விளையாட்டு விழாவின் பொழுது 400 மீட்டர் ஓடுவதற்கு சீனியர் மாணவர்கள் அழைத்தபொழுது தயக்கம் தலைகாட்டியது. கால்பந்தில் ஓடுகின்றாயே…….. அதுபோல் ஓடு……. முன்னால் ஒரு பந்து உருள்வதாய் கற்பனை செய்து கொள் என்று உசுப்பேற்றினார்கள்……. தொடர்ந்து வந்த வருடங்கள் …… நிறைய வட்டவட்டமாக ஓடி வாழ்க்கை ஒரு வட்டம் என்கின்ற வசனம் போல வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவியாக இருந்தது.
    வேலன் வள்ள வீட்டில் ஒரு கன்றுக்குட்டி இருந்தது. அதற்கு எல்லாவித வசதிகளும் செய்து கொடுத்து கண்போல பாதுகாத்து வந்த பொழுதிலும் செயற்கை முறைக் கருவூட்டல் மீது நம்பிக்கை இன்றி காளைமாட்டிற்கு கொண்டு சென்று சினைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை வள்ள செய்துவிட்டிருந்தாள். அதன் விளைவு கருப்பை பாதிப்படைந்து, பிரச்சனை தொடங்கியது. கால்நடை மருத்துவர் பக்கத்திலேயே இருப்பதால், கம்ப்ளெய்ன்ட் கொடுக்கப்பட்டது. கருப்பைக்குள் காற்றுப்புகாத நிலையில் வாழும் பாக்டீரியக் கிருமிகள் கலவரமூட்டிக் கொண்டிருக்க, பொட்டாஷியம் பெர்மாங்கனேட் என்கின்ற கரைசலை (சின்ன கிரிஸ்டலாக இருக்கும்- தண்ணீர்பட்டால் மேஜிக் போல வயலெட் கலராகுமே அது) மிகச்சிறந்த ஆக்ஸிஜனை உருவாக்கும் வேதிப்பொருள் கொண்டு கருப்பையைக் கழுவிச் சுத்தப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, நல்லதொரு நாளலே கருப்பையினை குடல் வழியாக சென்று தேடிப்பிடித்து அது சரியான அளவிலே குணமும், வளர்ச்சியும், பருவமும் அடைந்துள்ளதா? என்று தெரிந்து கொண்டு மிகச்சரியாக இயற்கை அல்லது கடவுள் கொடுத்திருக்கின்ற இரண்டு நாள் நேர இடைவௌயில் இங்கிலாந்தில் எங்கோ பிறந்த ஜெர்ஸி வகை மாட்டினத்தின் உயிரணுக்களை – 1920இ என்கின்ற மைனஸ் உறை நிலையிலிருந்து உடல் வெப்பநிலைக்கு திடீரென கொண்டு வந்து செலுத்தினேன். என்னுடைய நல்ல காலம் என்று சொல்லவேண்டும் இல்லையொன்றால் பக்கத்து வீட்டுக்காரர்களடம் நல்ல பெயரில்லாத ‘கைராசிக்காரர்’ என்கின்ற பெயர் பெறாத சூழ்நிலை வந்துவிடுமே…
    இன்றைக்கெல்லாம் மனிதகுல மருத்துவத்தில் கொடிகட்டிப் பறக்கின்ற சோதனைக் குழாய் குழந்தை பெற வைக்கும் முறைகளைப் போல தினந்தோறும் சர்வசாதாரணமாக உறைவிந்துக் குச்சிகளை திரவ நைட்ரஜனுக்குள் மிதக்க வைத்துக் கொண்டு சரியான பருவ காலத்திற்காக கிட்டத்தட்ட 28 நாட்களுக்கொருமுறை பசுக்கள் தங்களது ஹார்மோன் சுழற்சியினால் ஆண்காளைகளை இன விருத்திக்கு அனுமதிக்கும் காலம் வருவதை அறிந்து செயல்பட வேண்டியிருக்கும். இதில் விவசாயிகளன் மாட்டுக்காரர்களன் பங்களப்பு மிகவும் முக்கியமானது.
    கால்பந்தில் மிகச்சரியான நேரத்தில் ‘கார்னர் கிக்’ என்றழைக்கப்படும் பந்து கோல் கம்பம் அருகே பறந்து வருகையில் தலையை வைத்து முட்டித்தள்ளுவதைப் போல….டைமிங் மிக முக்கியமானது.
    மாட்டுச் சாணம் அரியபெரிய மருத்துவ குணங்கள் உடையது என்பதும் அது இரஷ்யாவில் அணுஉலை கதிரியக்க பாதிப்பில் இருந்தெல்லாம் பாதுகாப்பு கொடுத்தது என்றெல்லாம் படித்து இருந்தாலும் கையுறையின்றி அது உருவாகும் இடம் வழியே இடதுகை தோள்பட்டை வரை உள்ளே அனுப்பி கருப்பையில் பிடித்துப் பார்ப்பது அலாதியான அனுபவம். மாடு என்ன சாப்பிட்டதோ? அதற்குத்தகுந்த மாதிரி பல்வேறு வகையான சாணத்திற்கும் நிறத்திற்கும் மணத்திற்கும் கெட்டித்தன்மைக்கும் தன்னை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.
    சிலநேரம் மிகவும் உயரமான மாடு- என்றால் தொங்கலில் போய்விடும். நல்ல உடற்பயிற்சி செய்யாவிட்டால் கை சுளுக்கு முதல் வலி வரை வித்தியாசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். கரு முட்டை உருவாவதை அண்டத்தை விரல்களுக்கிடையே தொட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். இது லேப்ராஸ்கோபி போலத்தான் போலுள்ளது. மனத்திரையின் விரல்நுனி கேமிரா மூலம் படம் பிடித்து ஞான திருஷ்டியில் பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.
    வள்ள மாடு கன்று ஈன்றி சந்தோஷத்தில் சீம்பாலோடு காலை கண்விழித்த நாட்கள் ஞாபகம் வருகின்றது.
    பசு மாட்டின் பால் காம்புகளை உதைவாங்காமல் பால்கறப்பதற்கே ஆடிக்கறக்கிற மாடு பாடிக்கறக்கிற மாடு என்றெல்லாம் கதை பேசிக் கொண்டிருக்கின்ற அதற்காகவே பெயரெடுத்த தமிழ் சினிமா காட்சிகளோடு நம் கட்டுரையை முடிந்துகொள்ள வாய்ப்பு நம் வாசகர்களுக்கு அதிகம் உண்டு. மாஸ்டைடிஸ் என்றொரு மடிவீக்க நோய் வந்த மாடுகளல் காம்புகள்- வெடித்து; வீங்கி; சீழ் கலந்து; உதிரம் சொட்ட என்று பல கொடுமையான நிலைகளல் நமக்கென்று வந்து சேர்ந்த நாட்கள் உண்டு…. அவர்கள் எல்லோரிடமும் நல்ல பேர் வாங்க வேண்டும். நேராக போய் வைத்தியம் செய்துவிட முடியாது. ஒவ்வொரு மாட்டின் பேரையும் கேட்டு அவற்றோடு பேசி சமாளத்து கால்களை கட்டி உரிமையாளரின் உதவியோடு அல்லது அவர்களை வைத்தே என்று பல வகைகளல் மருத்துவம் செய்ய வேண்டிய வரலாறுகள் பல.
    சில வேளைகளல் கைகளல் உதிரம் வந்துவிட்டால் உஷ் உஷ் என்று மாட்டுக்காரர்களும் காரிகளும் வருத்தப்பட நேர்ந்துவிடும் அதற்கென்றே தகுந்த மாதிரி விவசாயக்கதை, மழைமேகக் கதை, வெள்ளாமைக்கதை, மாட்டு வண்டிக்கதை, திருவிழா கதை, பால்காரக் கணக்கு, முத்தண்ணன், டீக்கடை, வடை ருசிக்கதை, என்று பல சுவாரஸ்யமான விஷயங்களுக்கு பேச்சை மடை மாற்றி விட வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டதும் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
    சிலநேரங்களல் பசுக்களை பாடாய்ப்படுத்திக் கொண்டு வந்திருப்பார்கள். பார்க்கவே பாவமாக இருக்கும்…. எல்லா விதமான அரைகுறை மருத்துவத்தையும், நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம், சித்த வைத்தியம் என்று ஆளாளுக்கு வைத்தியம் செய்து பார்க்கப்பட்ட சோதனை போல சின்னாபின்னமான மடியோடு தார் பூசப்பட்டது போல கருப்பு நிறத்தில் ஒரு பாடு மிரட்சியோடு ‘இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்? அன்பே அன்பே’ என்று என்னை பார்த்த நாள் நன்றாக நினைவில் இருக்கின்றது.
    கிரிக்கெட் பந்திற்கும் கால்பந்திற்கும் ஏன் இத்தனை வேறுபாட்டை ஆண்டவன் வைத்தான் என்ற கவலை நியாயமா? இல்லையா? என்றெல்லாம் யோசிக்காமல் பட்ட நாட்கள் நிறைய, ஆர்சனெனல், போகன் பகான், சால்கோகர், மான்செஸ்டர் யுனைடெட் என்றெல்லாம் பேசினாலும் சுண்ணாம்புக்காரர் தோட்டத்தில் எல்லை வேலிமுள்ளுக்கு கால்பந்து பதில் சொன்னதே இல்லை. காற்று இறங்க இறங்க உதைவாங்கி வெறுங்கால்களுடன் புழுதிக் காட்டில் புரண்ட பொழுவதை கால்பந்து கட்டாயமாக விரும்பியிருக்க முடியாதுதான். இத்தனைக்கும் மத்தியில் கிடைத்த ஏதோ ஒரு நேரத்தில்தான் படிப்பு வந்து சேர்ந்திருக்கக் கூடும். ஆச்சரியம் தான்.
    முள்குத்திப் பஞ்சரானதும் குடலை உருவி சிவப்பு நிற ‘பிளாடர்’ (bladder) மீது காத்தடித்து, நீரில் முக்கி, செல்வா அண்ணன் சைக்கிள் பஞ்சர் கடையில் உப்பு தாள் மூலம் தேய்த்து, வட்ட வடிவ கருப்பு சைச்கிள் ட்யூப் ஒட்டுப் போட்டால் மறுபடி மறுபடி ஃபாஸ்ட் ஃபார்வேடில் (fast forward) செய்து கருப்பு நிற bladder ஆக மாறிப்போனதும் உண்டு எங்கள் கால்பந்து.
    ஆடுகளுக்கு மருந்து ஊற்றுவது அடுத்த அத்தியாயம். இது அதிக வருமானம் தரக்கூடியது என்று மார்க்கெட் நிலவரச் செய்தி வேறு. ஒரு ஆட்டுக்கு இவ்வளவு என்றால். பெருக்குத்தொகை கணிசமாகின்றது. ஆனாலும் கண்டே பிடிக்க முடியாத விஷயம் காரியம் முடிந்தவுடன் அதாவது வைத்தியம் முடிந்தவுடன் காசு கிடைக்குமா? என்பது தான். அன்பும் கருணையும் அதிகமாக இருப்பதால் இலவச சேவை இதயத்திலிருந்து நடந்த நாட்களும் உண்டு.
    ஒவ்வொரு ஆட்டுக்கும் பணி முடித்து குறியிடுவது அலாதி அனுபவம். மடக்கி காலின் இடையில் நிறுத்தி திமிர திமிர அடையாளக்குறி நீலம் அல்லது சிவப்பு மைத்தொட்டு இடுவது நல்ல உடற்பயிற்சிதான்…..
    கால்நடையும், கால்பந்தும் இன்னபிற எல்லாமும் எவ்வளவு நிறங்களோடு கவலையாக கடந்து போயிருக்கின்றது காலம் …….. திரும்ப பார்க்கையில் திகைப்பு திகட்டுவதே இல்லை…… வாழ்க்கைக்கரையில் உட்கார்ந்து நதியோட்ட நினைவலைகளல் கால்களை மாற்றி மாற்றி சிதறடித்துக்கொண்டே ஞாபகக் கற்களை ஒன்றொன்றாக உள்ளே வீசி காகித வட்ட வளையங்களல் முகம் பிரதிபலிக்கக்கண்டு இலயிக்கலாம் நாமெல்லாம்……… வாருங்கள் ….

    சுய உந்துதல்

    இவ்வுலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, மனிதனுக்கு துணைபுரியும் ஒரு மாபெரும் அம்சம் சுய உந்துதல். இவ்வுலகில் பிரளயம், பூகம்பம் மற்றும் இன்னபிற இயற்கைப் பேரிடர்கள் பல ஏற்பட்டாலும், இந்த சுய உந்துதலே ஒவ்வொரு உயிரினத்தையும் நிலைத்து பிழைக்கச் செய்கிறது. மத நூல்கள் உட்பட, பலவிதமான நன்னெறி நூல்களிலும் இந்த சுய உந்துதல் போதிக்கப்பட்டுள்ளது.
    இந்த உலகில் ஒவ்வொரு சாதனையாளரையும் சாதிக்க வைத்ததும் இந்த சுய உந்துதலே.
    மூட நம்பிக்கையால் சீரழிந்து கிடந்த சமூகத்திற்கு பகுத்தறிவையும், மனித முயற்சிகளின் மாண்பையும் உயர்த்தி, ஏமாற்றுக் கூட்டத்தினரிடமிருந்து மக்களைப் பாதுகாக்க உலகின் ஜோதியான புத்தரைத் தூண்டியதும் இந்த சுய உந்துதல் தான்.
    இந்த சுய உந்துதல் ஒரு மனிதனை சாதாரண நிலையில் இருந்து அசாதாரண நிலைக்கு மாற்றுகிறது. இந்த உந்துதல் தான் நமது உள்ளார்ந்த திறன்களை நமக்குப் புரியவைத்து, நமது பலத்தைத் தெரிவிப்பதுடன் நமது பலவீனங்களை மறக்கச் செய்கிறது.
    ‘என் சோகம் சொல்லி மாளாது’ என்று நாம் சொல்வது காட்டுமிராண்டித்தனம். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் சுமக்க அவர்களது சொந்தச் சுமை உள்ளது. உங்கள் சுய உந்துதலால் உங்கள் துக்கத்தை வெற்றி கொள்ள முயலுங்கள்.
    “எழுந்திருங்கள், உறுதியுடனும், தைரியத்துடனும் இருங்கள். பொறுப்பு முழுவதையும் உங்கள் தோளிலேயே சுமந்து கொள்ளுங்கள். உங்கள் விதிக்கு நீங்களே தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்புகின்ற வலிமையும், உதவியும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன” என்று சுய தூண்டுதலைப் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
    எனக்கு யாருடைய உதவியும் இல்லையே என்று ஏங்குவது மிகப்பெரிய தவறு. யாரிடமும் உதவியை நாடாமல் நமக்கு நாமே உதவி செய்து கொள்ள வழி வகுக்கிறது சுய உந்துதல். ஒரு நிமிடம் பெரும் துன்பக் குவியலைச் சிந்தித்துப் பாருங்கள். எல்லா விளைவுகளும் உதவியைத் தேடிய தவறான எண்ணத்தின் விளைவாலே ஏற்பட்டதாகும் என்பது புரியும். எனவே நமக்கு நாமே உதவி. வேறு யாரும் உதவ முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
    இவ்வுலகில் மனிதனுக்கு உதவ யாரும் இல்லை; யாரும் இதுவரை இருந்ததும் இல்லை; இருக்கப் போவதும் இல்லை. நீங்களே முயன்று துன்பங்களில் இருந்து சுய உந்துதல் மூலம் விடுபடுங்கள். இவ்வுலகில் வேதாந்தம் கேட்கின்ற ஒரு பெரிய கேள்வி மனிதர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? என்பது தான். பதில் அவர்கள் தங்களைப் பலவீனர்களாகவும், பிறர் துணையை எப்பொழுதும் நாடுபவர்களாகவும் ஆக்கிக் கொண்டது தான் இந்த பயத்திற்குக் காரணம். உண்மையில் நாம் சோம்பேறிகள், நாமாக எதையும் செய்ய விரும்புவதில்லை. ஒரு கடவுளோ, ஓர் அவதார புருஷரோ, அல்லது மகானோ வந்து நமக்காக எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இப்படி ஒருவருடைய வேலைகளையெல்லாம் அவருக்காக இன்னொருவர் செய்து வந்தால் முன்னவருடைய உடல் இயற்கைத் திறனை இழந்துவிடும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
    கிராமத்தில் மாட்டு வண்டியில் ஒரு கற்று வைக்கோலை மாடுகளின் கண்களுக்கு முன் அவற்றின் வாய்க்கு எட்டாத அளவில் தொங்கவிட்டிருப்பார்கள். அந்த மாடுகள் அந்த வைக்கோலைத் தின்ன முயன்றுகொண்டே நடக்கும். ஆனால் அவை எட்டாது. அதுபோலத்தான் நமக்குப் பிறரால் கிடைக்கும் உதவியும்.
    பாதுகாப்பு, வலிமை, அறிவு, இன்பம் இவையெல்லாம் வெளியில் இருந்து கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம். எதிர்பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அது கிடைப்பதில்லை. எந்த உதவியும் ஒரு போதும் வெளியில் இருந்து வருவதில்லை. நமது குற்றங்களைச் சுமத்துவதற்கு வேறொருவர் இருக்கும் வரை நாம் நம்முடைய பலவீனங்களையும், தவறுகளையும் புரிந்து கொள்வதில்லை. மனிதர்கள் எப்போதும் தங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதே தங்கள் குற்றங்களைச் சுமத்துகிறார்கள். அதுவும் முடியாவிட்டால் கடவுளின் மீது சுமத்துகிறார்கள். விதி என்கிறார்கள் சில நேரங்களில். அவர்கள் சொல்லும் விதி எங்கே இருக்கிறது? விதியாக நாம் சுட்டிக்காட்டும் நபர் யார்? நாம் விதைத்ததைத் தான் இப்போது அறுவடை செய்கிறோம். ஆகவே நம் விதிக்கு நாமே காரணம். கடும் பழியாகட்டும், பெரும் புகழாட்டும் அதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல நாமே தான் பொறுப்பு.
    பல நேரங்களில் மனிதர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கின்றனர். கற்பனைத் தெய்வங்களை நோக்கி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். அத்தகைய செய்கைகள் பலவும் மூட நம்பிக்கைகளே என்பது அவர்களின் உள்ளத்திற்குத் தெரியும். ஆனாலும் பிரார்த்திக்கிறார்கள். சில நேரங்களில் உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறி இருக்கலாம். அப்போது வெளியில் உள்ள ஏதோ ஒரு சக்தி அவற்றை நிறைவேற்றியது என்று உங்கள் அறியாமை காரணமாக எண்ணியிருப்பீர்கள். ஆனால் உண்மையில் உங்களுக்குத் தெரியாமல் அவற்றையெல்லாம் நிறைவேற்றியவர்கள் நீங்கள் தான். உங்களிடமிருந்தே உங்களுக்கான உதவி கிடைத்திருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் யாரோ உங்களுக்கு உதவுவதாக நன்றியோடு கற்பனை செய்து கொள்கிறீர்கள். இந்த நிமிடம் முதல் இந்தக் கற்பனையை விட்டொழியுங்கள். இந்த வெற்றிக்கு நானே தான் காரணம் என்று நினைத்திருங்கள். இந்த வார்த்தைகள் தான் உங்க்ள நெஞ்சில் உள்ள குப்பைகளை எல்லாம் எரித்துச் சாம்பலாக்குவதுடன் ஏற்கனவே உங்களுக்குள் கனன்று கொண்டிருக்கும் பேராற்றலை எழுப்பியும் விடும்.
    நமக்குத் துன்பம் நேரும்போது உலகிலுள்ள எல்லாத் தெய்வங்களிடமும் கதறுகிறோம். துன்பம் தீர்கிறதா? இல்லை. இந்த தெய்வங்கள் எங்கே இருக்கின்றன? நீங்கள் வெற்றி பெற்றால் அதன்பின் மட்டுமே அந்தத் தெய்வங்கள் உங்களுக்கு உதவி செய்ய வருகின்றன. அதனால் என்ன பயன்? ஆறுகோடித் தெய்வங்களை நோக்கிக் கதறி நாய்களைப் போல் சாவதை விட்டுவிட்டு இன்பமாக உயிர்விடுங்கள். மூடநம்பிக்கைகளுக்கு முழந்தாளிடுங்கள். இதற்கு உங்களின் சுய உந்துதல் உதவி புரியும். இந்த சுய உந்துதல் எந்தப் புத்தகத்தாலும், எந்த சாஸ்திரத்தாலும் எந்த விஞ்ஞானத்தாலும் கூட கற்பனை செய்ய முடியாத சக்தியைக் கொடுக்கும். இந்த சுய உந்துதல் தான் இவ்வுலகில் உள்ள ஒரே தெய்வம். முன்பு இருந்ததும்; இப்போது இருக்கின்றதும்; இனிமேல் இருக்கப் போகின்றதுமான ஒரே கடவுள் சுய உந்துதல் மட்டுமே.
    பலவீனமான மனிதன் கண்ணுக்குத் தெரியாத விண்வெளிக்கு அப்பால் ஏதோ ஓரிடத்தில் உள்ள ஏதோ ஒன்றிடமிருந்து உதவியை எதிர்பார்த்து, அழுது கதறுகிறான். தனக்குள்ளேயே அந்த விண்வெளி இருப்பதை உணராமலேயே…
    உதவியும் வருகிறது… ஆனால் அது அவனுள்ளிருந்தே தான் என்பதை அறியாமல் வெளியில் இருந்து வருவதாகவே நினைத்துக் கொள்கிறேன். இப்போதும். எப்போதும்…
    ஒரு மனிதன் உயிரோடு வாழ்வதற்கான அடிப்படைப் பண்பான சுய உந்துதலை அதிகரிப்பது எப்படி என்று வரும் மாதங்களில் பார்க்கலாம்…

    உங்களுக்காகக் காத்திருக்கிறது ஒரு புதுமையான கொள்கை… 10/90

    இன்றைய தேதியில் கோடிக்கணக்கானோர் தேவை இல்லாத மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும், பிரச்சனைகளாலும், மன வேதனைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரின் வாழ்விலும் நடைபெறும் நிகழ்வுகளுக்கு யார் காரணம்? பதில் அவர்கள் மட்டுமே. ஆம், நம் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் 10 சதவீதம் இயற்கையாக நடப்பவை. மீதி 90 சதவீதம் எப்படி நாம் நடந்து கொள்கிறோம் என்பதில் தான் உள்ளது. அதாவது நம் வாழ்க்கையில் நடைபெறும் 10 சதவீத சம்பவங்களில் நமக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஓடிக்கொண்டிருக்கும் வாகனம் பழுதாவதையோ, தாமதமாக வரும் பேருந்தால் நம் முழுத் திட்டமும் குழம்பிவிடுவதையோ நம்மால் தடுக்க முடியாது. இந்த 10 சதவீதத்தில் நமக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் மீதி 90 சதவீதமும் முற்றிலும் மாறுபட்டது. அந்த 90 சதவீதத்தை நாம் தான் தீர்மானிக்கிறோம். எப்படி? உங்கள் பதில் செயல்பாடு மூலம் தான். நீங்கள், சம்பவங்களை எதிர்கொள்ளும் விதம் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும்.
    உதாரணமாக நீங்கள் காலை உணவை உங்கள் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மகள் தேனீர்க் கோப்பையைத் தவறுதலாகத் தட்டிவிட, அதிலிருந்த தேனீர் நீங்கள் அலுவலகம் செல்ல அணிந்திருந்த உடையை அசிங்கப்படுத்திவிடுகிறது.
    இந்த நிகழ்வுகளின் மீது உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால், இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக அடுத்து நடக்கப்போவது என்ன என்பதைத் தீர்மானிப்பது, நீங்கள் எவ்வாறு பதில் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பதில் தான் உள்ளது.
    தேனீர் கோப்பையைத் தட்டிவிட்டதற்காக உங்கள் செல்ல மகளைத் திட்டித் தீர்க்கிறீர்கள். மகள் அழத் தொடங்குகிறாள். அடுத்ததாக, தேனீர் கோப்பையை மேசையின் ஓரத்தில் வைத்ததற்காக உங்கள் மனைவி மீது பழியைப் போட்டுத் திட்டுகிறீர்கள். அதனைத் தொடர்ந்து உங்களுக்கும், மனைவிக்கும் ஒரு சிறிய வாய் யுத்தம் நடக்கிறது.
    மிகுந்த கோபத்தோடு மாடிக்குச் சென்று வேறு உடையை அணிந்து கொண்டு வருகிறீர்கள். அப்போது உங்கள் மகள் அழுது கொண்டே காலை உணவை முடித்து, பாடசாலை செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருப்பதைக் காண்கிறீர்கள்.
    சற்று முன் நடந்த நிகழ்வினால் உங்கள் மகள் பேருந்தைத் தவறவிட்டு விடுகிறாள். இதற்கிடையில் உங்கள் மனைவியும் உடனடியாக அலுவலகத்திற்கும் போக வேண்டும். ஆகவே, அவசர அவசரமாக உங்கள் மகளை காரில் ஏற்றிக்கொண்டு பாடசாலையை நோக்கி வேகமாக விரைகிறீர்கள். தாமதம் ஏற்பட்ட காரணத்தினால் 50 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டிய சாலையில் 80 கி.மீட்டர் வேகத்தில் பயணித்ததால் அபராதத் தொகையையும் செலுத்திவிட்டு 20 நிமிட தாமதத்துடன் பாடசாலையை அடைகிறீர்கள். ‘போய் வருகிறேன்’ என்று கூட சொல்லாமல் உங்கள் மகள் பாடசாலைக்குள் சென்று விடுகிறாள்.
    30 நிமிடத் தாமதத்திற்குப் பின் அலுவலகத்திற்குப் போய் சேருகிறீர்கள். அப்போதுதான் உணர்கிறீர்கள் அலுவலகக் கோப்புகள் உள்ள உங்கள் பிரீஃப்கேஸை அவசரத்தில் எடுத்து வர மறுந்துவிட்டதை. இப்படி அன்றைய தினத்தின் தொடக்கமே குழப்பமாகிவிட்டது. தொடர்ந்து மேலும் மேலும் அது மோசமடைந்து கொண்டே செல்கிறது அன்றைய நாள்.
    ஒருவாறு அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் செல்கிறீர்கள். வீட்டிற்கு வந்தவுடன் உங்களுக்கும், உங்கள் மனைவி மற்றும் மகளுக்குமிடையேயான உறவில் சற்று விரிசலை உணர்கிறீர்கள்.
    இதற்குக் காரணம் நீங்கள் காலையில் நடந்து கொண்ட விதம். இந்த நாள் இப்படி குழப்பமாகப் போனதற்குக் காரணம் என்ன? அந்த கோப்பைத் தேனீரா? இல்லை அந்த நிகழ்வுகளுக்குக் காரணமான உங்கள் மகளா? அல்லது அபராதம் விதித்த போலீஸ்காரரா? இல்லை நீங்களா?
    பதில்: நீங்கள் தான். ஏனென்றால் அந்தத் தேனீர் சிந்தியதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் தேனீர் சிந்திய அடுத்த ஐந்தாவது விநாடியில் இருந்து நீங்கள் நடந்து கொண்ட விதம் தான் இத்தனை குழப்பங்களுக்கும், உறவுச் சிக்கல்களுக்கும் காரணம்.
    இப்படி உங்களது பதில் நடவடிக்கைகள் அமையாமல் பின்வருமாறு நீங்கள் நடந்திருக்க வேண்டும்.
    தேனீர் உங்கள் உடைமீது படுகிறது. உங்கள் மகள் அழப்போகிறாள். இதைப் புரிந்து கொண்டு நீங்கள் அன்பான குரலில், ‘பரவாயில்லை, இனிமேல் கவனமாக நடந்து கொள்’ என்று கூறிவிட்டு, சிந்திய தேனீரைத் துடைத்தபடி மாடிக்குச் சென்று உடையை மாற்றிக்கொண்டு பிரீஃப்கேஸையும் எடுத்துக் கொண்டு இறங்கி வரும்போது ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள். அங்கே உங்கள் மகள் உங்களை நோக்கி புன்னகையுடன் கையசைத்து விடைபெற்றவாரே பாடசாலைப் பேருந்தில் ஏறுவதைக் காண்கிறீர்கள். ஐந்து நிமிடம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்து அலுவலக நண்பர்களுடன் காலை வணக்கத்தைப் பரிமாறிக் கொள்கிறீர்கள்.
    இப்படி இரண்டுவிதமான நிகழ்வுகள். இரண்டுமே ஒரே மாதிரி தான் தொடங்கின. ஆனால் வெவ்வேறு விதமாக முடிந்தன. ஏன் இந்த வித்தியாசம்? காரணம் நீங்கள் நிகழ்வுகளை எதிர்கொண்ட விதம். அதாவது உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் 10 சதவீத சம்பவங்களில் உங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஆனால் 90 சதவீதம் எப்படி நீங்கள் நடந்து கொள்கின்றீர்கள் என்பதில் தான் உள்ளது. நீங்கள் சரியானபடி நிகழ்வுகளை எதிர்கொண்டால் உங்களின் நாள் இனிய நாளாக அமையும். தவறான எதிர்கொள்ளலால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். நல்ல நண்பர்களை, உறவினர்களை இழக்கலாம்.
    தவறான எதிர்கொள்ளலால் நீங்கள் வேலையை இழந்துவிட்டால் கூட நீங்கள் சஞ்சலமடைய வேண்டியதில்லை. நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருங்கள்.
    மனவேதனைக்காகச் செலவிடும் சக்தியை புதிய வேலை தேடுவதற்காகச் செலவிடுங்கள்.
    பேருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதனால் அன்றைக்குச் செயல்படுத்த வகுத்திருந்த திட்டங்களெல்லாம் குழம்பி விடுகின்றன. அதற்காக அலுவலர்கள் மீது ஏன் வெறுப்பைக் காட்ட வேண்டும்? தாமதமான நேரத்தை புத்தகம் படிப்பதிலோ அல்லது அருகிலிருக்கும் பயணியுடன் அறிமுகமாவதிலோ செலவிடுங்கள். இதைத் தவிர்த்து ஏன் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
    இதைத் தவிர்க்க நீங்கள் 10 / 90 கொள்கையை நடைமுறைப்படுத்திப் பாருங்கள். வியப்பான விளைவுகள் ஏற்படும். நிகழ்வுகள் நடைபெறும்போது, ஈரத்தை உறிஞ்சும் பஞ்சுபோல ஆகிவிடாமல் கண்ணாடியின் மீது விழும் தண்ணீர் போல வழிந்து ஓட விட்டுவிடுங்கள். அந்த நிகழ்வுகள் உங்களைப் பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு வாழ்க்கையை அனுபவித்து மகிழுங்கள்.

    மேலாண்மை ஒரு கலை

    1500 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் பெரிய இராணுவ தளபதி ஹானிபால், கிரிஸ் நாட்டின் மீது படை எடுத்தான். அந்தப் படையெடுப்பின் போது ஹானிபால் பக்கம் பத்தாயிரம் படைவீரர்கள். ஆனால் எதிரிகளின் பக்கம் இருபதாயிரம் பேர். அவரது தளபதி, “இருபதாயிரம் பேரை எதிர்த்து எப்படி சண்டையிட முடியும்” என்று கேட்டான். அதற்கு ஹானிபால், “கவலைப்படாதே, உன்னுடைய தலைமைத் தளபதி நானே நிற்கிறேன் சண்டையிடு; வென்றுவிடலாம்” என்றான். சண்டையில் வெற்றி கண்டான். கிரீஸ் நாட்டை வென்ற ஒரே ஆப்பிரிக்க தளபதி அவன் தான். இது தான் தலைமைப் பண்பு. தன்மீது முழுமையான நம்பிக்கை உள்ளவன் தான் தலைவன்.
    சிறந்த முதல்வர் ஒருவர் இருந்தாலே, கல்வி நிறுவனம் நன்கு வளரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்படி வளர்ந்து பெயர் பெற்ற கல்வி நிலையங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். அந்த தலைமை ஆசிரியர்களிடம் தலைமைப் பண்புகள் உள்ளன. நல்ல மேலாண்மைத் திறமையுடன் செயல் புரிகிறார்கள்.
    நான் 24 வயதில் ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வானேன். அதற்கு முன்னால் நான் ஒரு வங்கி அதிகாரி. அப்போது எனக்குக் கீழே ஐந்து குமாஸ்தாக்கள் பணியில் இருந்தார்கள். அதுவும் தலைûமைப் பதவி தான். என்னுடைய 27 வயதில் நான் உதவி கண்காணிப்பாளராக கோபிசெட்டிபாளையத்தில் பணியாற்றினேன். அப்போது கிட்டத்தட்ட 800 அதிகாரிகளுக்கு நான் தான் உயர் அதிகாரி. எனக்குக் கீழே வேலை பார்த்த அனைவருக்குமே என்னைவிட வயது அதிகம். சின்ன வயதில் உயர்ந்த பதவியில் இருந்து கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் நிர்வாகம் பற்றிய சில கோட்பாடுகளை என்னால் சொல்ல முடியும். சொல்வதற்கும் தகுதியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
    மேலாண்மை பட்டப்படிப்பு படிப்பவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது, மேலாண்மை என்றால் என்ன என்பது தான். கல்லூரியில் படித்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்று, ஒரு எம்.பி.ஏ. பட்டம் பெற்றால் ஒரு மேலாளர் என்று பலர் நினைக்கிறார்கள்.
    ஒரு தொழில் நுட்பக்கல்லூரியில், கணிப்பொறியியல் படிக்கின்ற மாணவர்களிடத்தில் கம்ப்யூட்டர் என்றால் என்னவென்று கேட்டேன். அவர்களுக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. மூன்று வருடம் படித்திருக்கிறார்கள். ஆனால் சொல்லத் தெரியவில்லை. கம்ப்யூட்டர் என்றால் ஓர் இயந்திரம் என்றான் ஒரு மாணவன். வெளியே நிற்கும் காரும் கூட ஒரு இயந்திரம் தான். நிறையப் பேர் இப்படித்தான்; சரியாக வரையறுக்கத் தெரிவதில்லை.
    மேலாண்மை என்பது ஒரு கலை:
    நிறையப் பேர் சிறந்த மேலாளராக இருப்பார்கள். ஆனால் எம்.பி.ஏ. படித்திருக்க மாட்டார்கள். எம்.பி.ஏ. படித்துத்தான் மேலாளராக வேண்டுமென்ற அவசியம் கிடையாது. எம்.பி.ஏ. படித்திருந்தும் பலருக்கும் ஒரு மேலாளரின் பணிகளை சரியாகச் செய்யத் தெரிவதில்லை.
    எனக்கு ஒரு பெண் மேலாளரைத் தெரியும். அவருக்கு எட்டு பிள்ளைகள். அவர் ஏழாம் வகுப்புதான் படித்திருக்கிறார். ஆனால், அவர்கள் பிள்ளைகளெல்லாம் பெரிய பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே அவரும் குழந்தைகளுடன் படித்துக் கொண்டார். பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார். அந்தப் பெண்ணின் மகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதினாள். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். அந்த அம்மாவை பரிட்சை எழுத வைத்தால் இன்னும் அதிகமாக மார்க் வாங்கியிருப்பார். பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அவரும் படித்துவிட்டார். அவர் நினைத்தது போலவே அவருடைய இரண்டு பிள்ளைகள் பி.எச்.டி. வரை படித்தார்கள். ஒரு மகள் தற்போது இணை ஆட்சியர். இன்றும் அந்தப் பெண் தான் குடும்பத்தை திறம்பட நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்.
    அந்தப் பெண்மணி ஒரு நல்ல மேலாளர். அவர்களுக்கு ஒரு தோட்டம் இருந்தது. அதில் அறுவடை நேரங்களில் முப்பது பேர் வேலை பார்த்தார்கள். பத்திற்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் வீட்டிலிருந்தன. அவற்றைப் பராமரிக்க வேண்டும்; தோட்டத்தில் முப்பது பேருக்கு, வீட்டில் பத்து பேருக்கு என்று நாளொன்றுக்கு நாற்பது பேருக்கு உணவு சமைக்க வேண்டும். சமையல் பணியை அந்தப் பெண்மணி மட்டும் செய்வார்கள். இன்றைக்கு என் மனைவி நான்கு பேருக்கு சமையல் செய்வதற்கே கஷ்டப்படுகிறார். ஆனால், அந்தப் பெண்மணி ஒரு நாளைக்கு நாற்பது பேருக்கு சமையல் செய்வார்கள். ஒரே ஆள். காலையில் மூன்று மணிக்கு எழுந்து, தண்ணீர் இறைப்பார்; சமைப்பார். மாடுகளை பராமரிப்பார். அந்தப் பெண்மணியை எனக்கு நன்கு தெரியும். ஏனென்றால் அவர் என்னைப் பெற்ற தாய். இன்றைக்கும் என் மகன் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறான் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவன் என்ன மதிப்பெண் வாங்குகிறான் என்பதெல்லாம் எனது அம்மாவிற்குத் தான் தெரியும். எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து வைத்துக் கொள்வார். மேலாண்மை என்பது ஒரு கலை என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.
    மேலாண்மை என்பது ஓர் அறிவியல்:
    அதை நீங்கள் நிறைய கற்றுக்கொள்வீர்கள். உங்களுக்கு நிறைய கோட்பாடுகள் சொல்லிக் கொடுப்பார்கள். கம்ப்யூட்டரைப் பற்றி நிறைய பாடங்கள் உண்டு. நிறுவன மேலாண்மை (Enterprises Management) பற்றிச் சொல்லும்போது என்னவோ சொல்கிறார்கள் என்றுதான் தோன்றுமே தவிர என்ன என்று தெரியாது. ஒரு நிறுவனத்தின் பணியாளர்களின் நடத்தை (Organizational Behaviour) என்பது மேலாண்மைக் கல்வியின் ஒரு பிரிவு. எந்தத் தொழில் தொடங்க வேண்டும்? அதற்கு போதுமான நிதி திரட்டுவது எப்படி? லாபம் அடைவது எப்படி? என்பதற்குப் பல விஞ்ஞான கணக்குகள் கற்றுத்தரப்படும். முடிவெடுக்கவும் விஞ்ஞான முறைகள் சொல்லித் தரப்படும். இப்படி நிர்வாக அறிவியலை உங்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள்.
    உங்கள் தாய் எப்படி உங்களை வளர்க்கிறார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் திரட்டி உங்களுக்கு கல்விக் கட்டணம் கட்டி இருக்கிறார்கள். இதெல்லாம் தான் கலை. எனக்குத் தெரிந்த ஒரு பெண், கரூர் காகித ஆலையில் ஒரு நாளைக்கு 90 ரூபாய் தான் சம்பளம் வாங்குகிறார். வேலைக்குச் சென்றால் சம்பளம். இல்லாவிட்டால் இல்லை. தன் இரண்டு மகள்களையும் என்ஜினியரிங் கல்லூரியில் படிக்க வைக்கிறார். என்னிடம் உதவி கேட்டு வந்ததால் அவரை எனக்குத் தெரியும். ஒரு வசதியும் கிடையாது. கணவன் உதவி இல்லை. அதனால் அந்தப் பெண் தான் வீட்டை நிர்வாகம் செய்கிறார். அடுத்த வருடம் கல்லூரிக் கட்டணம் எப்படி கட்டுவாய் என்று கேட்டேன். ‘உடம்பில் உயிர் இருந்தால் இரண்டு மகள்களையும் இன்ஜினியரிங் படிக்க வைத்து விடுவேன்’ என்று கூறினார்.
    மேலாண்மைப் பட்டப்படிப்பு படிக்காமலேயே இந்தப் பெண்மணி ஒரு மேலாளர்தான். ஏழ்மையைக் கண்டு அஞ்சவில்லை; முடிவு எடுக்கத் தயங்கவில்லை. நினைத்ததை செய்து முடிக்கிறார் இந்தப் பெண்மணி. அமெரிக்காவில் இருக்கும் எனது நண்பர் மூலமாக இந்தப் பெண்மணியின் மகளுக்கு நிதியுதவி செய்து தந்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஒரு காரியத்தை செய்து முடிப்பது தான் மேலாண்மை என்றார் நிர்வாக குரு பீட்டர் டிரக்கர். இப்பெண்மணியும் ஒரு மேலாளர் அல்லவா?
    நீங்கள் ஒரு கல்லூரியில் சேர்ந்து எம்.பி.ஏ. படித்துவிட்டீர்கள். 80 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள் என்பதற்காக மட்டும் ஒரு பெரிய நிறுவனம் உங்களை மேலாளராக நியமிக்காது. பிறகு நாங்கள் எதற்காக எம்.பி.ஏ. படிக்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம். இரண்டு ஆண்டுகள் ஒரு மேலாளருக்கான அடிப்படை திறமைகள் கற்றுத்தரப்படுகின்றது. நீங்கள் எம்.பி.ஏ. படிக்கும்போதே, ஒரு நல்ல மேலாளருக்குத் தேவையான மேலும் பல திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெறுமனே பாடங்களை படிப்பது மட்டும் போதாது. ஒரு கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு தொழிலதிபர் அழைக்கிறார். நீங்கள் எம்.பி.ஏ. படித்திருக்கிறீர்களே, கல்லூரி ஆரம்பியுங்கள் என்கிறார். கல்லூரி கட்ட இடம் கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் பிரச்சனைக்குரிய இடம் இல்லாமல் இருத்தல் வேண்டும். அந்த இடத்தை வாங்கும் திறமை உங்களுக்கு வேண்டும். சரியான ஆட்களை நியமிக்க உங்களுக்குத் திறமையிருக்க வேண்டும். கட்டிடம் கட்டுவதற்கான ஒரு நம்பகமான நபரை கண்டுபிடிக்க வேண்டும்.
    எதை வேண்டுமானாலும் கண்டுபிடித்து விடலாம். ஆனால் தகுதியுள்ள பேராசிரியர்களைக் கண்டுபிடிப்பது கடினம். என்னிடம் ஒரு மேலாளர், “நான் பள்ளி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தான் நிறைய பள்ளிகளுக்குப் போகிறீர்களே, நன்றாக ஆங்கிலம் பேசத் தெரிந்த ஓர் ஆசிரியர் இருந்தால் சொல்லுங்கள். ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கிறேன். ஆனால், அவர் ஒரு புலமை பெற்ற ஆசிரியராக இருக்க வேண்டும். அவர் வகுப்பறைக்குள் நுழைந்தால், அனைத்து குழந்தைகளுக்கும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வர வேண்டும். அவர் ஆங்கிலம் தவறில்லாமல் பேச வேண்டும். சரியான உச்சரிப்புடன் பேச வேண்டும்” என்றார்.
    திறமை மிக்க ஓர் ஆசிரியருக்கு இன்று ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் தரத் தயாராக இருக்கிறார்கள். எனவே, கல்லூரியில் படிக்கிற குறுகிய காலத்தில் மேலாண்மை என்றால் என்ன? நீங்கள் மேலாளராக ஆவதற்கு உங்களை எப்படி தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
    ஆங்கிலம் பேசத் தெரிய வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவி வகிக்க ஆங்கிலம் முக்கியம். ஆங்கிலம் பேசுகிற திறமையை வளர்க்க ஆங்கிலச் செய்திகளைக் கேட்க வேண்டும். துணிச்சல் குணம் உள்ளவர்கள் தான் நல்ல மேலாளராக இருக்க முடியும். ஆபத்துக்களைச் சந்தித்து சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே தகுதியுள்ள ஒரு மேலாளராக முடியும்.
    மேலாண்மை என்பது ஓர் ஆராய்ச்சிப்பாடம்:
    இன்று மேலாண்மை என்பது ஆய்வுப் பொருளாகிவிட்டது. பல்கலைக்கழகங்களில் பலவிதமான ஆராய்ச்சிகள் மேலாண்மை குறித்து நடத்தப்பட்டு வருகிறது. சம்பளம் அதிகமாக்கினால் தொழிலாளிகளின் உற்பத்தித்திறன் அதிகரிக்குமா? அதிக நேரம் ஓய்வு வழங்கினால் தொழிலாளிக்கு திருப்தி வருமா? என்பன போன்ற ஆராய்ச்சிகள் பல நடந்துள்ளன. இன்றும் பல ஆராய்ச்சிகள் சந்தைப்படுத்துதலில் (Marketing) நடந்து கொண்டிருக்கின்றன.
    நேரத்தின் பயன்பாடு:
    நீங்கள் ஒரு நல்ல மேலாளராக, தலைவராக வேண்டுமென்றால் முதல் நிபந்தனை, நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். உங்கள் திறமைகள் வளர வேண்டுமென்றால், உங்களை ஒரு நிறுவனம் அழைத்து மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் தருகிறேன் என்று சொல்ல வேண்டும் என்றால் கல்லூரியில் படிக்கிற போது நேரத்தை சரியாகப் பயன்படுத்தி உங்களுடைய ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
    நேரத்தை சேமிக்க சினிமா பார்ப்பதை தவிர்க்கலாம் (சில மட்டமான சினிமா பார்க்காமல் இருந்தாலே நீங்கள் வாழ்க்கையில் முன்னேறி விடலாம்). தரம் தாழ்ந்த பொழுது போக்குகளில் சொல்லக்கூடிய கருத்துக்கள் அவ்வளவு மடத்தனமாக இருக்கிறது. சில தொலைக்காட்சித் தொடர்கள் அதை விடக் கேவலமானவை. மிக மிகத் தரம் தாழ்ந்த கருத்துக்களை வைத்து கேவலமான வார்த்தைகளை நகைச்சுவைகளாக நினைத்து நாம் சிரித்துக் கொண்டிருக்கிறோம். இப்படியே நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால், சில ஆண்டுகள் கழித்து, உங்களைப் பார்த்து மற்றவர்கள் சிரிப்பார்கள்.
    எனக்கு மிகுந்த வருத்தம் தருவது என்னவென்றால், நாம் இப்போது இடைவிடாமல் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து ரசிக்கிறோம். பலர் ஒருவனை அடிக்கிறார்கள். அடி வாங்குபவனைப் பார்த்து நாமெல்லாம் சிரிக்கிறோம். இதில் சிரிக்க என்ன இருக்கிறது? உங்களை ஒருவன் அடித்தால் நீங்கள் சிரிப்பீர்களா? ஒருவனை இழிவுபடுத்துவதில் உங்களுக்கு மகிழ்ச்சியா? ஒருவர் அடிக்குமேல் அடிவாங்கி சட்டையையும் பேண்ட்டையும் கிழித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்து வாய்விட்டு சிரிக்கிறோம். உங்கள் சட்டையையும், வேஷ்டியையும் ஒருவன் கிழித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதைப் பார்த்து எப்படி சிரிப்பு வரும்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நாம் பார்ப்பதால் தானே இதுபோல் ‘படம்’ காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? இதில் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும். உங்களை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். இது ஒரு பொழுதுபோக்கு என்பீர்கள். நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் பார்த்து விட்டுப்போங்கள். அதைப் பற்றிக்கூட கவலையில்லை. ஆனால் எவ்வளவு பொழுதைத்தான் போக்குவீர்கள்? எல்லா பொழுதையும் போக்குவதா?
    கல்லூரியில் நான்கு வருடங்கள் தான் உங்களுக்கு இருக்கிறது. பொழுது போக்கிலிருந்து விடுபட்டு அந்த நேரத்தை சேமியுங்கள். இந்த நேரத்தில் ஆங்கிலம் பேச, எழுதக்கூடிய திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். எம்.பி.ஏ. என்றால், ‘இன்டர் பர்சனல் ஸ்கில்ஸ்’ என்று சொல்வேன். இரண்டு மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சிறந்த முறையில் வளர்க்கும் திறன் தான் மேலாண்மைப் படிப்பு. அதற்கு பயிற்சி எடுங்கள்.
    இந்த குறுகிய காலத்தில் நீங்கள் நிறைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனிதர்களைப் பற்றிய கல்வி முக்கியம். பாடம் படிப்பது போல் மனிதர்களைப் படிக்க வேண்டும். மனிதனுக்கு என்ன தேவை? ஏன் இந்த மனிதன் இப்படி நடந்து கொள்கிறான்? அந்த மனிதனை நம்முடைய ஆளுகைக்குள் கொண்டுவருவது எப்படி? மற்றவர் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்துவது எப்படி? என்பவற்றை எல்லாம் சிந்தியுங்கள். ஒரு தொழிற்சாலையில் உங்களை வேலைக்கு நியமிக்கிறார்கள். ஐந்து பேர் சேர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளை தயாரிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஐந்து பேரை வைத்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.
    செயல்திறனை வளர்த்தால் நேரம் லாபகரமாக பயன்படுத்தப்படுகிறது. பொழுதுபோக்கு என்று கழித்தால் நேரம் விரயமாகிறது.

    நூல் வெளியீட்டு விழா

    தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர் இல.செ.க.

    நாள் : 15.4.2012 ஞாயிறு
    நேரம் : காலை 10.00 மணி
    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்ட்டிடியூட்,
    ஆர்.எஸ். புரம் ,
    கோவை.
    தன்னம்பிக்கையும் – நானும்

    திரு. சீனிவாசன் திரு.பாபு ; அன்னபூர்ணா நிறுவனங்கள்
    திருமதி ரமா சுந்தர்ராஜன் ; அன்னபூர்ணா நிறுவனங்கள்
    திரு.‘அரோமா’ பொன்னுசாமி ; தலைவர்,அரோமா நிறுவனங்கள்
    திரு. மு.வேலாயுதம் ; விஜயாபதிப்பகம்
    திரு.ஓ.ட. நடராஜன் :ஓ.ட.ச டிராவல்ஸ்
    திரு. ஆர்.கே. இராமசாமி ; தலைவர்,ஆர்.கே.ஆர். கல்வி நிறுவனங்கள்
    திருமதி. அனுஷா மகேஷ் ; இஉஞ, பார்க் கல்வி நிறுவனங்கள்
    திரு. செங்குட்டுவன் ; இயக்குநர், வள்ளுவர் கலை அறிவியல்&மேலாண்மைக் கல்லூரி திரு. என். வெங்கடேஷ் ; இயக்குநர், சிஸ்மென்டெக் குழுமங்கள்
    திரு. ந.த.ஓ. தேவராஜ் ; ந.த.ஓ. ஸ்டீல்ஸ்
    திரு. பிரதீப் குமார் ; இயக்குநர், ‘எலைட்’ குழுமங்கள்
    திரு. ஆனந்த் பழனிசுவாமி ; சேர்மன், ‘டாக்சி டாக்சி’
    திரு. தினேஷ் இராமசாமி ; இயக்குநர், அய்யன் திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி
    திரு. ஜெகதீஸ் சந்திரன் ; இயக்குநர், ஒயங நெட்வொர்க்ஸ் திரு. மதன் ஆ. செந்தில் ; சேர்மன், இரத்தினம் கல்வி நிறுவனங்கள்
    திரு. ட.ந.த. ஜவஹர் ; ட.ந.த. சில்க்ஸ்
    திரு. சூரியன் : சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்

    தன்னம்பிக்கை மாத இதழ் நடத்திய கவிதை, கட்டுரை வாசகர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தல்

    பரிசு வழங்குவோர்
    சாவித்திரி போட்டோ ஹவுஸ் நிறுவனத்தார், கோவை

    நன்றியுரை : பேரா. கே.நாகராஜ்,
    இணை ஆசிரியர்,
    தன்னம்பிக்கை மாத இதழ்

    திருப்பூர் வாசகர்வட்டம்

    நாள் : 8.4.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி
    இடம் : அரிமா சங்க அரங்கம்
    குமரன் ரோடு
    திருப்பூர்
    தலைப்பு : “வழியெல்லாம் வாய்ப்புகள்”
    சிறப்பு பயிற்சியாளர்: திடாக்டர் வி.ஆர்.அறிவழகன்
    ஆசிரியர், ஆனந்த யோகம்& கலைக்கதிர், 944482805
    தொடர்புக்கு : திரு. மகாதேவன் – 94420 04254
    திரு. வடிவேல் – 99944 27992
    திரு. வெங்கடேஸ்வரன் – 94423 74220