வளர்ந்து வரும் இன்றைய நாகரீகச் சூழலில் விவசாயம், தொழிற்சாலை, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வீடு, அலுவலகம் என எல்லாமே மின்சாரத்தை நம்பி இருக்கின்றன. எங்கும் மின்சாரம், எதிலும் மின்சாரம். இன்றைய உலகில் மின்சாரம் இல்லாத வாழ்க்கை கற்பனைக்கும் எட்டாதது. மனிதனின் வாழ்வாதாரமே மின்சாரம்தான் என்றநிலை வந்து விட்டது.
தற்போது தமிழக மாநிலம் முழுவதுமே மின்சாரப் பற்றாக்குறையால் தத்தளத்துக் கொண்டிருக்கிறது. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியவில்லை. சென்னையில் சுமார் 2 மணி நேரமும், தமிழகத்தின் பிற பகுதிகளல் 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரையும் மின் தடை உள்ளது. தமிழகத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரமே கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன.
மின்பற்றாக்குறை காரணமாக சுமார் ஆறாயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். திடீர் திடீரென மின்சாரம் போவதும், வருவதுமாக இருப்பதால் தொழிற்சாலைகளல் உள்ள இயந்திரங்களும், மின் உபகரணங்களும், கணினி உள்ளட்ட மின்னணு சாதனங்களும் வெகுவாக பழுதடைந்து வருகின்றன.
ஆரம்ப காலத்தில் மின்சாரம் பயன்பாட்டுக்கு வந்தபோது லைட், ஃபேன், நீரேற்று மோட்டார் போன்றஅடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போது மின் உற்பத்தியை விட மின் நுகர்வு குறைவாக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் மின்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று மின்சாரம் வேண்டுமா என்று கேட்டுக் கேட்டு மின் இணைப்புக் கொடுத்தனர். மின்சாரக் கட்டணத்தைக்கூட வீடுகளுக்குச் சென்று வசூலித்தனர்.
ஆனால் அடுத்தடுத்த காலக்கட்டங்களல் மின்சாரத்தினால் இயங்கும் ஏசி, ஹீட்டர், ஃபிரிட்ஜ், ஃபிரீஸர், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோ ஓவன், டீவி, கம்ப்யூட்டர், மின் அடுப்பு, எலக்ட்ரிக் குக்கர், வேக்கும் கிளீனர், ஹேர் டிரையர், அயர்ன் பாக்ஸ், ஸ்டிரியோ சிஸ்டம், டோஸ்டர், டீ மேக்கர், காப்பி மேக்கர் போன்றநவீன உபகரணங்களும், சொகுசு சாதனங்களும் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கின. இவை அனைத்துமே அதிக அளவு மின்சாரத்தில் இயங்கக் கூடியனவாகும்.
இன்றைய நிலையில் தமிழகத்திற்கு தினமும் 11,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 9,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உள்ளது. அதாவது, சுமார் 2000 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை உள்ளது. மேலும் வருடந்தோறும் சுமார் 8 சதவிகித அளவுக்கு மின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பெருகி வரும் மின்தேவைக்காக தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களடமிருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.19-க்கு விலை கொடுத்து வாங்கப்படுகிறது. அரசுத்துறை நெய்வேலி அனல் மின்நிலையத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டிற்கு ரூ.2.25 மட்டுமே. மின்வாரியத்தின் மொத்த வருமானத்தில் 86 சதவிகிதம் தனியாரிடம் மின்சாரம் வாங்கவே செலவிடப்படுகிறது.
அனல்மின் உற்பத்திக்கான நிலக்கரியின் விலை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உயர்ந்து கொண்டே செல்கிறது. வெளிநாடுகளலிருந்து 30 சதவிகித அளவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. அத்துடன், பிற மாநிலங்களலிருந்தும், வெளிநாடுகளலிருந்தும் நிலக்கரியை ரயில் மற்றும் கப்பல்களல் கொண்டு வரும் சரக்குக் கட்டண செலவும் அதிகரித்து வருகிறது. மேலும், நம் நாட்டில் உள்ள அனல் மின்நிலையங்கள் மிகவும் பழமையானவை என்பதால் அதன் காரணமாக பழுது மற்றும் பராமரிப்புச் செலவுகளும் பன்மடங்கு உயர்ந்து வருகின்றன.
மின் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து மின்பயன்பாட்டு இடத்திற்கு கம்பிகள் வழியாக மின்சாரம் செல்லும்போது மின் இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய மின்இழப்பு தமிழகத்தில் 18 முதல் 20 சதவிகிதம் வரை உள்ளது. 20 சதவீத மின் இழப்பு என்பது 900 மெகாவாட் மின் சக்தி ஆகும். அதாவது, கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி துவங்கினால் நமக்குக் கிடைக்கும் மின்சார அளவிற்கு இது சமமானதாகும். அத்தோடு கூட மின்திருட்டும் சுமார் 2 சதவிகித அளவுக்கு உள்ளதாக மதிப்பீடு கூறுகிறது.
இப்போது கிடைத்து வரும் மின்சாரமும் இப்படியே தொடர்ந்து கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. மழை வரத்து குறைந்து விட்டால் இப்போது கிடைத்து வரும் மின்சாரத்தின் அளவும் குறைந்து போக வாய்ப்புள்ளது. நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் அதன் காரணமாகவும் அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் குறைந்து போகலாம்.
இப்போதைய நிலையில் என்னதான் முயற்சி செய்தாலும் உடனுக்குடன் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியாது. காரணம் நினைத்த மாத்திரத்தில் மின்சாரத்தை உடனடியாக உற்பத்தி செய்ய முடியாது. இன்றைக்கே திட்டம் தீட்டினாலும் அதன் பலனை அனுபவிக்க பல ஆண்டு கால அவகாசம் தேவைப்படும்.
உடனடியாக மின் உற்பத்தியைக் கணிசமாக அதிகரிக்க வேறு வழி இல்லாத நிலையில் தேவையான பாதுகாப்புகளுடன் கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியைத் தொடங்கினால் அது தமிழகத்துக்குப் பெரும் பயனைத்தரும். உடனடியாக 1,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
உடன்குடி அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் உற்பத்தியாகும் 1,600 மெகாவாட் மின்சாரமும் தமிழகத்திற்கே கிடைக்க வழிவகை செய்யப்பட உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு அணுமின் நிலையங்களும் உற்பத்தியைத் தொடங்கினால் தமிழகத்தில் மின்வெட்டை கணிசமாகக் குறைக்கலாம். அதன் மூலம் தற்பொழுது தொழிற்கூடங்கள் மற்றும் தொழிலாளர்களன் வேலை வாய்ப்பை பெருக்குவது மற்றும் பாதுகாப்பதோடு, புதிய தொழிற்சாலைகள் மூலம் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் முடியும்.
ஆக, இருக்கின்றஇந்த மின் ஆதாரங்களைத் தவிர, போராட்டம் நடத்தினாலும் புரட்சியே வெடித்தாலும் இல்லாத ஒன்றை எந்த அரசாலும் தரமுடியாது என்பதுதான் யதார்த்தமான நிலை. இந்தச் சூழ்நிலையில் சில நெறிமுறைகளை பின்பற்றினால் இப்போதைய உற்பத்தியை வைத்துக் கொண்டு நிலைமையை ஓரளவுக்குச் சரிசெய்ய முடியும்.
எப்படி என்றால், தற்போது மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. அதனால்தான் 24 மணி நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு என்றஅடிப்படையில் சுமார் எட்டு மணி நேரம் மின் வெட்டு செய்யப்படுகின்றது. எட்டு மணிநேரம் மின்வெட்டு செய்வதால் மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் மீதமாகும் என்று அரசு கணக்கீடு செய்கிறது. அது சரியான கணக்கீடு ஆகாது. காரணம் எட்டு மணிநேர மின்வெட்டால் நாள் முழுக்க தேவைப்படும் லைட், ஃபேன், ஏசி போன்றவை வேண்டுமானால் செயல்படாது. ஆனால் ஒரு நாளல் சில மணி நேரமே பயன்படுத்தப்படும் வாஷிங் மெஷின், ஓவன், கிரைண்டர், மோட்டார் பம்ப் உள்ளட்ட மின் சாதனங்களை மின்சாரம் உள்ள நேரம் பார்த்து கட்டாயம் பயன்படுத்தப்படும். மேலும் இன்வெர்ட்டர் மூலம் மின்சாரத்தை சேமித்து மின்வெட்டின் போது பயன்படுத்தப்படுகிறது. ஆக எட்டு மணிநேர மின்வெட்டால் சுமார் ஒரு மணிநேர மின்வெட்டின் பயன்தான் அரசுக்குக் கிடைக்கும்.
மின்சாரத்தின் தேவைகளை இரண்டாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒன்று அவசியத் தேவைக்கான மின்சாரம். மற்றொன்று சொகுசுத் தேவைக்கான மின்சாரம். லைட்டோ, ஃபேனோ இல்லாமல் இருக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஏசி, ஃபிரிட்ஜ் போன்றவை இல்லாமல் இருக்க முடியும். இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு மின்வெட்டு இல்லாத காலங்களல் ஒரு வீட்டில் எவ்வளவு யூனிட் செலவானதோ அதில் 30 அல்லது 40 சதவீதத்தை குறைத்து இதுதான் உங்களுக்கான அளவு என்று ரேஷன் முறையை அரசு கொண்டு வரவேண்டும்.
அதாவது மின் வெட்டு இல்லாத நேரங்களல் 200 யூனிட் பயன்படுத்தி இருந்தால், அவர்களன் மின்சார ரேஷன் 140 யூனிட்டுகள்தான் என்று நிர்ணயிக்க வேண்டும். இப்படி ரேஷன் முறையை அமுல்படுத்தினால் குடும்பத்தினர் இரவில் நிம்மதியாகத் தூங்கவும், பிள்ளைகள் படிக்கவும் தேவையான அளவுக்கு மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்தி சொகுசு சாதனங்களை தாங்களாகவே இயக்காமல் நிறுத்திக் கொள்வார்கள் அல்லது குறைத்துக் கொள்வார்கள். சொகுசு வாழ்க்கைக்கு மின்சாரம் இல்லை என்பதால் யாரும் புரட்சி செய்ய மாட்டார்கள். அடிப்படைத் தேவைக்கே மின்சாரம் இல்லாவிட்டால்தான் புரட்சி வெடிக்கும்.
வர்த்தக நிறுவனங்கள் பொருள்களைக் கவர்ச்சியாகக் காட்டவும், விளம்பரத்துக்காகவும், தாறுமாறாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். அவர்களையும் இந்த ரேஷனில் கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டுவந்தால். அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் நியான். மெர்குரி போன்றவிளக்குகளைத் தவிர்த்துக் கொண்டு தங்களுக்கான ரேஷன் அளவுக்குள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
சாப்பிடவும். படிக்கவும், தூங்கவும் தடையில்லாத மின்சாரம் 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்தால் மக்கள் நிலைமையைப் புரிந்து கொள்வார்கள். குண்டு பல்பு எரிக்க வேண்டாம் என்றும், எல்.இ.டி விளக்குகளையும் எல்.இ.டி டிவிக்களையும் பயன்படுத்துங்கள் என்றும் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை. ரேஷன் முறையைக் கொண்டுவந்தால் பொதுமக்களே தாமாக முன் வந்து குறைந்த மின்சாரம் செலவாகும் சாதனங்களை வாங்கும் நிலை ஏற்படும்.
மற்றுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆற்றல் வளங்களை தாறுமாறாக, கிடைக்கின்றஅளவுக்கு உறிஞ்சி எடுத்து பயன்படுத்தக் கூடாது. இன்றைய வளர்ச்சி, நாளைய பிரச்னையாக மாறி விடக்கூடாது. எனவே ஆற்றல் வளங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும். இக்கருத்தை வலியுறுத்தும் பொருட்டுதான் 2012ம் ஆண்டை ஐ.நா., சபை வளம் குறையாத, நீடித்த, நிலையான ஆற்றல் ஆண்டாக (International Year of Sustainable Energy) அறிவித்துள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாடு பயன்படுத்தும் ஆற்றலைப் பொறுத்தே உள்ளது. பெட்ரோலியம் போன்றமரபு சார்ந்த ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தும் போது, அவை என்றேனும் ஒரு நாள் கிடைக்காமல் போகும் சூழ்நிலை உருவாகும். எனவேதான் காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு மரபு சாரா எரிசக்தி துறை உருவானது. மரபுசாரா ஆற்றல் வளங்களல் சூரிய ஆற்றல் (Solar energy) காற்றின் ஆற்றல் (Wind energy) மற்றும் கடல் அலை ஆற்றல் (Sea wave energy) ஆகியன சிறப்பானவைகளாகக் கருதப்படுகின்றன.
இந்த ஆற்றல் வளங்கள், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களல், ஓரளவுக்கு ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியனவாக இருக்கின்றன. உலகம் உள்ள மட்டும் பல்லாயிரம் ஆண்டு காலம் சூரிய ஒளி, காற்று மற்றும் கடலலைகள் நிலையாக இருக்கும். இவற்றின் ஆற்றல் பெரும்பாலும் குறைய வாய்ப்பில்லை என்பதோடு, திரும்பத் திரும்பப் பயன்படுத்தக் கூடியது.
இத்தகைய மரபுசாரா ஆற்றல் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காதது. இதற்கான கருவிகளை ஒரு முறை நிர்மாணித்துவிட்டால் பல்லாண்டு காலம் அவை பிரச்சனையின்றி இயங்கக் கூடியது. பராமரிப்புச் செலவும் குறைவு. நிலக்கரியைச் சேமித்து வைத்து மின்சாரம் தயாரிப்பது போல, காற்றையும் சூரிய ஒளியையும் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே மரபு சாரா ஆற்றல் வளங்களை நோக்கி செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மின்சாரம், சாலைவசதி, பேருந்து, மருத்துவ வசதி போன்றவற்றை தனி மனிதர்கள் தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியாது. அத்தகைய கட்டமைப்பு வசதிகளை அரசு உருவாக்கித் தந்தால்தான் நாட்டின் பொருளாதாரமும், வீட்டின் பொருளாதாரமும் மேம்படும். மக்களும் மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும் வாழ முடியும்.