– 2012 – April | தன்னம்பிக்கை

Home » 2012 » April

 
  • Categories


  • Archives


    Follow us on

    உள்ளத்தோடு உள்ளம்

    இனியொரு விதி செய்வோம்
    எதையும் அறிந்து கொள்ள ஆர்வமும், முயற்சியும் போதும். ஆர்வம் இருக்குமானால் அறிவைப் பெறுவது இன்றைய காலத்தில் பெரிய விஷயமல்ல. புத்தகங்கள் மூலமாகவும், இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அறிவு கிடைக்கிறது.
    ஆனால் அறிந்தபடி நடப்பது அவ்வளவு சுலபமல்ல. எது சரி என்று அறிவது அறிவு என்றால், அந்த சரியான பாதையில் செல்வது வாழ்க்கை. எது சிறந்தது என்பது அறிவு என்றால் எப்படி சிறப்பாக வாழ்வது என்பது தான் வாழ்க்கை.

    Continue Reading »

    உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !!

    நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை, சிறந்த தலைமுறையை உருவாக்கும் பொருட்டு ஆரவாரம் இல்லாமல் அடுத்தடுத்து, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, ரத்தினம் மேலாண்மை கல்லூரி, ரத்தினம் பொறியியல் கல்லூரி, ரத்தினம் இன்டர்நேசனல் பப்ளிக் ஸ்கூல் என்று கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிப்பை அளித்துக்கொண்டிருப்பவர்,

    Continue Reading »

    தடம் மாறும் விவசாயம்

    கடந்த காலங்களில் விவசாயத்
    தொழிலை நம்பி இருந்த வேலை
    ஆட்கள் தற்போது ஜவஹர் கிராம
    வேலை வாய்ப்பு திட்டத்திற்குச்
    செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

    விவசாயம் செய்ய வேண்டுமானால் போதிய வேலை ஆட்கள் தேவை. எந்த ஒரு தொழிலும் வேலை ஆட்களை நம்பித்தான் இருக்கிறது. இதில் வேளாண்மைத் தொழிலும் விதிவிலக்கல்ல.
    இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு ஆரம்பித்த முதல் ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனால் புதிய நீர் தேக்கங்கள் கட்டப்பட்டன. நீர் ஆகாரங்கள் பெருக்கப்பட்டன. ஏரிகள், குளங்கள், ஆறுகள் பயன்படுத்தி விவசாயம் பெருகுவதற்கு வழிவகைகள் செய்யப்பட்டன. மேலும் வேளாண்மைக்குத் தேவையான உரங்கள், கருவிகள், இடுபொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
    இதற்குப் பின்னர் வந்த ஐந்தாண்டுத் திட்டங்களில் மற்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதனால் மற்ற துறைகளும் வளர்ச்சி அடையத் தொடங்கின.
    தற்போது விவசாயம் எதிர்நோக்கி உள்ள சவால், ஆட்கள் பற்றாக்குறை. அது எதனால் வந்தது? இதை எப்படி இந்திய விவசாயம் எதிர்கொள்ளப் போகிறது? என்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
    இந்தியா பல ஐந்தாண்டுத் திட்டங்களை தீட்டியதில் கடந்த 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2007 2012ல் ஆண்டில் புதியதாக கொண்டு வரப்பட்ட “ஜவஹர் ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்” (Jawahar Rural Rojar Yojana) இந்திய விவசாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
    இந்த திட்டம் செயல்படுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயத்தை நம்பி இருந்த வேலையாட்களை கிராமத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வேலையாட்களுக்கு மாற்றத் தொடங்கினர். இந்த மாற்றங்கள் தற்போது விவசாயத் தொழிலுக்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    கிராமத்தில் உள்ள வேலையாட்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த வேலைகளுக்குத் தான் செல்வது வழக்கம். இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் தேவையான தினசரி விவசாய வேலைகளுக்கு அந்த கிராமத்தில் உள்ள ஆட்களை வைத்து வேலைகளை செய்து கொண்டு வந்தார்கள். உதாரணமாக, நெல் நடவு, களை எடுத்தல், நெல் அறுவடை, வைக்கோல் போர் வைப்பது போன்ற அனைத்து நெல் பயிரிட்ட விவசாயிகள் தங்கள் ஊரில் உள்ள வேலையாட்களை வைத்து வேலைகளை செய்து முடித்தார்கள் அல்லது பக்கத்து கிராமத்து வேலையாட்கள் தேவையான வேலைகளை செய்து வந்தார்கள்.
    ஆனால் தற்போது நெல் பயிரிடும் விவசாயிக்கு நெல் நடவு முதல் அறுவடை வரை தேவையான வேலைகளை ஆட்கள் வைத்து செய்ய முடிவதில்லை. ஏனென்றால் இருந்த பெரும்பாலான வேலையாட்களும் 100 நாள் கிராம வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைக்குச் சென்று வருகின்றனர்.
    எனவே விவசாயிகள், நாற்று நடவு செய்யும் இயந்திரத்தைத் தேடி அலைந்து கொண்டு இருக்கிறார்கள். களைகளை ஒழிக்க களைக்கொல்லி பயன்படுத்துகிறார்கள். அறுவடைக்கு அறுவடை இயந்திரம் கை கொடுக்கிறது. கிராமத்தில் உள்ள விவசாயிகள் தோட்டத்தில் இருந்த வேலை மாடுகள் பராமரிக்க ஆள் இல்லாமல் விற்கப்பட்டன. கால்நடைகளை நம்பி இருந்த வேளாண்மை தற்போது விவசாய உபகரங்களை நம்பி நடந்து கொண்டுள்ளது.
    வேலை ஆட்கள் இல்லாமல் விவசாயிகள் வேளாண்மையைத் தொடர்வது எப்படி? இதுவரை இருந்த ஆட்கள் இப்போது கிடைப்பதில்லை. அப்படி விவசாயத்திற்கு வேலையாட்கள் தேடி சென்றால், நகரத்தில் இருக்கும் தொழிற்சாலையில் உள்ள வேலை ஆட்களுக்கு நிகரான கூலியை கொடுத்த விவசாயத்தை வெற்றிகரமாக செய்ய முடியுமாஙு
    ஆட்களே இல்லாமல் மேலை நாடுகள் (அமெரிக்க, ஐரோப்பா) போன்று ஒரு குடும்ப உறுப்பினர்கள் 100க்கு மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களை ஒரு விவசாயி பராமரிக்க முடியுமா? இல்லை இந்த நிலை இந்திய விவசாயத்திலும் வருமா? என்ற பல கேள்விக் குறிகளுடன் இன்னும் விவசாயம் செய்து வரும் விவசாயிகளை நம்பி இந்தியாவின் உணவு உற்பத்தி உள்ளது.
    தமிழக விவசாயிகள் இந்த கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டு இருப்பதை விட, தற்போது ஏற்படும் மாற்றத்தை முழுமையாக உணர்ந்து கொண்டால் போதும். மாறும் சூழ்நிலைகளை உண்ணிப்பாக கவனிக்க வேண்டும்.
    விவசாய கூலி ஆட்கள் மற்ற வேலைக்கு நகரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள் என்பதை அனைத்து விவசாயிகளும் அறிவர். ஏனென்றால் விவசாய குடும்பத்தில் தங்கள் பிள்ளைகள் விவசாயத்தைத் தொடர விரும்புவதில்லை. எனவே விவசாய கூலிகள் எப்படி விவசாயத் தொழிலுக்கு வருவார்கள்?
    கடந்த காலங்களில் விவசாயத் தொழிலை நம்பி இருந்த வேலை ஆட்கள் தற்போது ஜவஹர் கிராம வேலை வாய்ப்பு திட்டத்திற்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். எனவே அவர்களுக்கு கிடைத்து வந்த ஆட்கள் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டார்கள். இவர்கள் மீண்டும் முழுநேர விவசாய பணிக்கு கிடைப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நடக்காத ஒன்று.
    எனவே விவசாயத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் அதிக ஆட்கள் தேவைப்படாத பயிர்களைப் பயிரிட ஆரம்பிக்க வேண்டும். அல்லது பயிரிடும் பயிர்களை நடவு செய்ய, களை எடுக்க, அறுவடை செய்ய இயந்திரங்கள் இருக்கிறதா என்று பார்த்து பயிர் செய்ய வேண்டும்.
    தங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை வைத்து முடிந்த வரை விவசாய வேலைக்கு செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டும். அப்படி சிந்தித்து விவசாயம் செய்தால், தொடர்ந்து விவசாயிகளாக இருக்க முடியும்ஙு இல்லையென்றால் விவசாயிகளின் எதிர்காலம் அவர்கள் கையில் இருக்காது!

    தேர்வு பயம் தேவையா?

    வெற்றி வந்ததும் துள்ளக் குதிப்பதும், தோல்வி வந்ததும் முடங்கிப்போய் அழுது துடிப்பதும் மனித இயல்புதான். ஆனால் – இரவும் பகலும்போல மாறிவரும் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப வாழ பழகிக்கொண்ட மனித மனம், வெற்றி தோல்விகளைச் சமமாக எண்ணி, மனநிலையை நிலையாய் வைத்திருப்பதில் மட்டும் தடுமாற்றம் அடைந்துவிடுகிறது. இன்பமும், துன்பமும் இணைந்த மனித வாழ்க்கையில் சூழ்நிலையை நல்லமுறையில் கையாளப் பழகிக்கொண்டவர்கள் மட்டுமே சிறப்பான வெற்றி பெறுகிறார்கள்.
    பள்ள, கல்லூரிகளல் பயிலும் இன்றைய இளைய உள்ளங்களல் சிலர் தோல்வி வந்ததும் துவண்டு போய்விடுகிறார்கள். “இனி வாழ்க்கையில் உயிரோடு இருந்து என்ன பயன்?” – என்று தவறாக சிந்தித்து உயிரைக்கூட போக்கிக்கொள்கிறார்கள். பள்ள, கல்லூரி தேர்வுகளல் தனது மதிப்பெண்கள் குறைய வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்துகொண்டால் தப்புத்தப்பாய் சிந்திக்கிறார்கள். தவறுதலாக நடந்துகொள்கிறார்கள்.
    கடந்த மார்ச் 16 – ம் தேதி +2 மாணவர்களுக்கு இயற்பியல் தேர்வு நடந்தது. அந்தத் தேர்வில் சில கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக சில மாணவர்கள் கருதினார்கள். ஆனால் சென்னையைச் சேர்ந்த சேத்துப்பட்டு பள்ளயில் இயற்பியல் தேர்வு எழுதிய ஒரு மாணவி தோல்வி பயத்தில் பள்ளயின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறாள்.
    இது அங்குள்ள பள்ள மாணவ – மாணவிகள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு படிக்கும் மாணவ – மாணவிகளன் பெற்றோர்களும் அதிர்ந்துபோய்விட்டார்கள். “இயற்பியல்” கேள்வித்தாள், ஒரு தற்கொலையைத் தூண்டும் அளவுக்கு அமைந்துவிட்டதாக சிலர் கருதுகிறார்கள். இருப்பினும், “தவறான கேள்விகளோ, பாடத்திற்கு தொடர்பில்லாத கேள்விகளோ” இடம்பெறவில்லை என்று இயற்பியல் ஆசிரியர்கள் கருத்துக் தெரிவிக்கிறார்கள்.
    ஆண்டுதோறும் மாணவ மாணவிகள் எதிர்பார்க்கும் மிக எளமையான கேள்விகள் மட்டுமே பிளஸ் – 2 தேர்வில் இடம்பெறும். இதனால் கடந்த 2008 – ம் ஆண்டு தமிழகத்தில் பிளஸ் – 2 தேர்வு எழுதியவர்களல் 8 மாணவர்கள் இயற்பியல் தேர்வில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றார்கள். ஆனால், 2011 – ம் ஆண்டு இயற்பியல் தேர்வில் 640 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்கள். இதனால் – “இயற்பியல் பாடத் தேர்வில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெறவேண்டும்” என்றகனவு பல மாணவ மாணவிகள் மத்தியில் உருவாகிவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
    மனித மனநிலையில் “தடுமாற்றம்” ஏற்படுவதற்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன. அவை –
    1. எதிர்பார்ப்பு (Expectation)
    2. உண்மையான செயல்பாடு (Actual Performance)
    எந்தவொரு நிகழ்வை எடுத்துக் கொண்டாலும் “இது இப்படித்தான் நிகழவேண்டும்” என்று ஒரு எதிர்பார்ப்பை மனிதமனம் தீர்மானித்துவிடுகிறது. இதனைத்தான் “எதிர்பார்ப்பு” (Expectation) என அழைக்கிறோம். இந்த எதிர்பார்ப்பு மிக அதிக எதிர்பார்ப்பாகவும் (Over Expectation) அமையலாம். சிலவேளைகளல் எதிர்பார்ப்பு குறைவாகவும் அமையலாம். எதிர்பார்ப்பு மனதில் மிக அதிகமாகி, அந்த அளவுக்கு “உண்மையான செயல்பாடு” (Actual Performance) அல்லது “நிகழ்வு” நடைபெறவில்லையென்றால் அப்போது “விரக்தி” (Frustration) தோன்றுகிறது.
    இதைப்போலவே – எதிர்பார்ப்பு குறைவாக அமைந்து உண்மையான செயல்பாடு அல்லது “நிகழ்வு” எதிர்பார்த்ததைவிட அதிகமாக நடந்துவிட்டால் அங்கு “மகிழ்ச்சி” (Pleasure) ஏற்படுகிறது.
    இங்கு தற்கொலைக்கு முயற்சிசெய்த மாணவி “எப்படியாவது மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெறவேண்டும்” என்று எண்ணி அதிக எதிர்பார்ப்பை மனதில் வைத்துத் தேர்வு எழுத சென்றிருக்கிறாள். கேள்வித்தாளைப் பார்த்ததும் அதிர்ந்து, “என்னால் அதிக மதிப்பெண் பெறமுடியாது” என்றமுடிவுக்கு வந்துவிட்டாள். இப்போது – “எதிர்பார்த்ததை அடைய முடியாது” என்றமனநிலை அவளுக்கு உருவாகியதால் ‘விரக்தி’ ஏற்பட்டது. அந்த ‘விரக்தி’ எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை அவள் மனதில் உருவாக்கிவிட்டது. அதன்விளைவு – அந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்துவிட்டாள்.
    எதிர்பார்த்தது நிகழாவிட்டால் அல்லது கிடைக்காவிட்டால் “விரக்தி” அடைவதோ, வீணாகக் கவலையடைவதோ, விபரீத முடிவுகளை மேற்கொள்வதோ ஒரு தீர்வாக அமையாது. பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு மனதை தயார்செய்துகொண்டால் எந்தச் சூழலிலும் மகிழ்ச்சியாக வாழலாம். ஒரு சாதாரண “தேர்வு பயம்” “வாழ்க்கை பயமாக” மாறிவிடக்கூடாது.
    “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” – என்பது பழமொழி. “எப்போதும் பயத்திலுள்ள ஒருவன் இரவுநேரத்தில் எல்லாவற்றையும் பார்த்து பேய்” என்று நினைத்து பயப்படுவான் என்பது இந்த பழமொழியின் கருத்தாகும். எனவே – தேவையற்றசிந்தனை வளர்த்து பயத்தினை உருவாக்குவதை பள்ள, கல்லூரி மாணவ – மாணவிகள் தவிர்க்க வேண்டும்.
    “தேர்வு” என்றாலே அதனை ஒரு சுகமான அனுபவமாக நினைத்துக்கொள்ள வேண்டும். “நமது படிப்புத் திறனை “மதிப்பீடு” (Evaluation) செய்வதற்கு நடத்தப்படும் ஒரு நிகழ்வு” என்று சிறுவயதிலிருந்தே தேர்வைப் பற்றிய எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பள்ள, கல்லூரியில் படிக்கும் மாணவ – மாணவிகளன் பெற்றோர்களல் சிலர் “எக்ஸாம் நேரத்துல இப்படி ஜாலியா இருக்கிறியே? கொஞ்சம் சீரியஸாக இரு” – என்று இளைய வயதினருக்கு வழிகாட்டுகிறார்கள்.
    “நீ கஷ்டப்பட்டு படித்தால்தான் நன்றாக இருக்கமுடியும்” – என்றும் அறிவுரை வழங்குகிறார்கள். “இஷ்டப்பட்டு” படிப்பவர்களைப் பார்த்து “கஷ்டப்பட்டு” படி என்று சொல்வது நல்லதுதானா? தேர்வு நேரத்தில் தேவையில்லாத தேர்வு பயத்தை உருவாக்குவதில் சில பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ள – கல்லூரி நிர்வாகத்தினர், ஊர்க்காரர்கள் என பல பிரிவினரும் தன் பங்குக்கு ஏதாவது செய்கிறார்கள். தேர்வுக்கு ஆலோசனை என்று கடைசிநேரத்தில் “குறுக்கு வழிமுறைகளை” (Shortcut Methods) சொல்லித் தருகிறோம் என்கிறார்கள்.
    ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் ஒருவருக்கு நாள்தோறும் தேவையான சீரான பயிற்சியை வழங்கினால் அவர் அந்தப்போட்டியில் சிறப்பாக வெற்றிபெறஇயலும். இதைத் தவிர்த்து ஓட்டப்பந்தயம் நடைபெறும் குறிப்பிட்ட தினங்களுக்குமுன்பு மட்டும் அசுரப் பயிற்சியை அந்த விளையாட்டு வீரருக்கு கொடுத்தால் அதன்நிலை என்ன ஆகும்? இதைப்போலத்தான் “தேர்வு” என்பது – புத்தாக்க சிந்தனை (Creativity), நினைவுதிறன் (Memory Power), பகுத்தாய்வுத்திறன் (Analytical Ability), தகவல் தொடர்புத்திறன் (Communication Skill) ஆகியவற்றைமதிப்பீடு செய்வதற்காக நடத்தப்படுகிறது என்பதை மாணவ – மாணவிகள் புரிந்துகொள்ளவேண்டும். எனவே – தொடர்ந்து பயிற்சியும், முயற்சியும் செய்து படிக்கவேண்டும். தேர்வு நேரத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, புத்தகத்திலுள்ள தகவல்களை அப்படியே எழுதினால் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்பதால் சிலர் “காப்பி அடித்து” எழுதுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.
    சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடந்த சம்பவம் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. இந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். தேர்வில் செல்போன் உதவியால் காப்பி அடித்த 9 மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். மயில்வாகனன் நடராஜன் தெரிவித்துள்ளார்.
    தேர்வு அறையில், தேர்வு எழுதிய மாணவர்களல் சிலர் தங்கள் செல்போனை இரு தொடைகளுக்கு மத்தியில் மறைத்துவைத்து, அந்த செல்போனிலிருந்து ஒரு வயர்மூலம் இணைப்புக் கொடுத்து அந்த வயர் காதில் பொறுத்தப்பட்ட சிறிய கருவியைச் சென்றடைவதுபோல ஏற்பாடு செய்திருந்தார்கள்.
    இந்தக்கருவி ஒரு வேப்பங்கொட்டை அல்லது புளயங்கொட்டை அளவில் மிகசிறிய கருவியாகும். தூரத்தில் இருந்து பார்த்தாலும் இந்தக் கருவி இருப்பதாகத் தெரியாது. 9 மாணவர்கள் இந்தக் கருவியை வைத்து தேர்வு எழுதியிருப்பதாகவும் இவர்கள் 9 பேருக்கும் ஒரே நேரத்தில் தேர்வு அறைக்கு வெளியே இருந்து ஒருவர் பதில் சொல்லியிருக்கிறார் என்றும் விசாரணையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது,
    பிளஸ் – 2 தேர்வில் மிகசிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஏன் ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டார்கள்? என்பது புரியாத புதிராக இருக்கிறது.
    “எந்த நோய்க்கு எந்த மருந்தை கொடுக்கவேண்டும்? எந்த நோய்க்கு எந்த ஆபரேஷன் செய்யவேண்டும்?” என்பதைக்கூட நினைவில் நிறுத்த விருப்பமில்லாத இந்த மாணவர்கள், “டாக்டர்” என்றபோர்வையில் சமுதாயத்தில் பணிபுரியும்போது, எத்தனை கொலைகாட்சிகள் அரங்கேறும் என்று நினைக்கும்போது நெஞ்சம் துடிதுடித்து போகிறது அல்லவா!
    “தேர்வுபயம்” இந்த மருத்துவ கல்லூரி மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை அல்லவா!
    எனவே – தேர்வுநேரத்தில் தேவையில்லாத பயத்தை வரவழைத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும். எதிர்காலம் பற்றிய பயத்தில் ஒழுங்கீனமான செயல்களல் ஈடுபடும் செயலை மனதிலிருந்தே நீக்கவேண்டும். “காப்பி அடித்தல்” – எனப்படும் கள்ளத்தனமாகப் “பார்த்து எழுதுதல்”, “கேட்டு எழுதுததல்” முறையை நீக்கிக்கொள்ள இளம்வயதினர் முன்வர வேண்டும்.
    நாள்தோறும் படிக்கும் பழக்கத்தையும், படித்ததை நினைவில் நிறுத்தும் வழக்கத்தையும், நினைவில் நிறுத்திய பாடங்களை எழுதிப்பார்க்கும் பழக்கவழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நினைவாற்றல் வளரும். அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும்.

    மின்சாரம் அது வாழ்வாதாரம்

    வளர்ந்து வரும் இன்றைய நாகரீகச் சூழலில் விவசாயம், தொழிற்சாலை, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வீடு, அலுவலகம் என எல்லாமே மின்சாரத்தை நம்பி இருக்கின்றன. எங்கும் மின்சாரம், எதிலும் மின்சாரம். இன்றைய உலகில் மின்சாரம் இல்லாத வாழ்க்கை கற்பனைக்கும் எட்டாதது. மனிதனின் வாழ்வாதாரமே மின்சாரம்தான் என்றநிலை வந்து விட்டது.
    தற்போது தமிழக மாநிலம் முழுவதுமே மின்சாரப் பற்றாக்குறையால் தத்தளத்துக் கொண்டிருக்கிறது. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியவில்லை. சென்னையில் சுமார் 2 மணி நேரமும், தமிழகத்தின் பிற பகுதிகளல் 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரையும் மின் தடை உள்ளது. தமிழகத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரமே கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன.
    மின்பற்றாக்குறை காரணமாக சுமார் ஆறாயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். திடீர் திடீரென மின்சாரம் போவதும், வருவதுமாக இருப்பதால் தொழிற்சாலைகளல் உள்ள இயந்திரங்களும், மின் உபகரணங்களும், கணினி உள்ளட்ட மின்னணு சாதனங்களும் வெகுவாக பழுதடைந்து வருகின்றன.

    ஆரம்ப காலத்தில் மின்சாரம் பயன்பாட்டுக்கு வந்தபோது லைட், ஃபேன், நீரேற்று மோட்டார் போன்றஅடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போது மின் உற்பத்தியை விட மின் நுகர்வு குறைவாக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் மின்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று மின்சாரம் வேண்டுமா என்று கேட்டுக் கேட்டு மின் இணைப்புக் கொடுத்தனர். மின்சாரக் கட்டணத்தைக்கூட வீடுகளுக்குச் சென்று வசூலித்தனர்.
    ஆனால் அடுத்தடுத்த காலக்கட்டங்களல் மின்சாரத்தினால் இயங்கும் ஏசி, ஹீட்டர், ஃபிரிட்ஜ், ஃபிரீஸர், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோ ஓவன், டீவி, கம்ப்யூட்டர், மின் அடுப்பு, எலக்ட்ரிக் குக்கர், வேக்கும் கிளீனர், ஹேர் டிரையர், அயர்ன் பாக்ஸ், ஸ்டிரியோ சிஸ்டம், டோஸ்டர், டீ மேக்கர், காப்பி மேக்கர் போன்றநவீன உபகரணங்களும், சொகுசு சாதனங்களும் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கின. இவை அனைத்துமே அதிக அளவு மின்சாரத்தில் இயங்கக் கூடியனவாகும்.
    இன்றைய நிலையில் தமிழகத்திற்கு தினமும் 11,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 9,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உள்ளது. அதாவது, சுமார் 2000 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை உள்ளது. மேலும் வருடந்தோறும் சுமார் 8 சதவிகித அளவுக்கு மின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
    பெருகி வரும் மின்தேவைக்காக தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களடமிருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.19-க்கு விலை கொடுத்து வாங்கப்படுகிறது. அரசுத்துறை நெய்வேலி அனல் மின்நிலையத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டிற்கு ரூ.2.25 மட்டுமே. மின்வாரியத்தின் மொத்த வருமானத்தில் 86 சதவிகிதம் தனியாரிடம் மின்சாரம் வாங்கவே செலவிடப்படுகிறது.
    அனல்மின் உற்பத்திக்கான நிலக்கரியின் விலை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உயர்ந்து கொண்டே செல்கிறது. வெளிநாடுகளலிருந்து 30 சதவிகித அளவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. அத்துடன், பிற மாநிலங்களலிருந்தும், வெளிநாடுகளலிருந்தும் நிலக்கரியை ரயில் மற்றும் கப்பல்களல் கொண்டு வரும் சரக்குக் கட்டண செலவும் அதிகரித்து வருகிறது. மேலும், நம் நாட்டில் உள்ள அனல் மின்நிலையங்கள் மிகவும் பழமையானவை என்பதால் அதன் காரணமாக பழுது மற்றும் பராமரிப்புச் செலவுகளும் பன்மடங்கு உயர்ந்து வருகின்றன.
    மின் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து மின்பயன்பாட்டு இடத்திற்கு கம்பிகள் வழியாக மின்சாரம் செல்லும்போது மின் இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய மின்இழப்பு தமிழகத்தில் 18 முதல் 20 சதவிகிதம் வரை உள்ளது. 20 சதவீத மின் இழப்பு என்பது 900 மெகாவாட் மின் சக்தி ஆகும். அதாவது, கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி துவங்கினால் நமக்குக் கிடைக்கும் மின்சார அளவிற்கு இது சமமானதாகும். அத்தோடு கூட மின்திருட்டும் சுமார் 2 சதவிகித அளவுக்கு உள்ளதாக மதிப்பீடு கூறுகிறது.
    இப்போது கிடைத்து வரும் மின்சாரமும் இப்படியே தொடர்ந்து கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. மழை வரத்து குறைந்து விட்டால் இப்போது கிடைத்து வரும் மின்சாரத்தின் அளவும் குறைந்து போக வாய்ப்புள்ளது. நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் அதன் காரணமாகவும் அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் குறைந்து போகலாம்.
    இப்போதைய நிலையில் என்னதான் முயற்சி செய்தாலும் உடனுக்குடன் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியாது. காரணம் நினைத்த மாத்திரத்தில் மின்சாரத்தை உடனடியாக உற்பத்தி செய்ய முடியாது. இன்றைக்கே திட்டம் தீட்டினாலும் அதன் பலனை அனுபவிக்க பல ஆண்டு கால அவகாசம் தேவைப்படும்.
    உடனடியாக மின் உற்பத்தியைக் கணிசமாக அதிகரிக்க வேறு வழி இல்லாத நிலையில் தேவையான பாதுகாப்புகளுடன் கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியைத் தொடங்கினால் அது தமிழகத்துக்குப் பெரும் பயனைத்தரும். உடனடியாக 1,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
    உடன்குடி அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் உற்பத்தியாகும் 1,600 மெகாவாட் மின்சாரமும் தமிழகத்திற்கே கிடைக்க வழிவகை செய்யப்பட உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    இந்த இரண்டு அணுமின் நிலையங்களும் உற்பத்தியைத் தொடங்கினால் தமிழகத்தில் மின்வெட்டை கணிசமாகக் குறைக்கலாம். அதன் மூலம் தற்பொழுது தொழிற்கூடங்கள் மற்றும் தொழிலாளர்களன் வேலை வாய்ப்பை பெருக்குவது மற்றும் பாதுகாப்பதோடு, புதிய தொழிற்சாலைகள் மூலம் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் முடியும்.
    ஆக, இருக்கின்றஇந்த மின் ஆதாரங்களைத் தவிர, போராட்டம் நடத்தினாலும் புரட்சியே வெடித்தாலும் இல்லாத ஒன்றை எந்த அரசாலும் தரமுடியாது என்பதுதான் யதார்த்தமான நிலை. இந்தச் சூழ்நிலையில் சில நெறிமுறைகளை பின்பற்றினால் இப்போதைய உற்பத்தியை வைத்துக் கொண்டு நிலைமையை ஓரளவுக்குச் சரிசெய்ய முடியும்.
    எப்படி என்றால், தற்போது மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. அதனால்தான் 24 மணி நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு என்றஅடிப்படையில் சுமார் எட்டு மணி நேரம் மின் வெட்டு செய்யப்படுகின்றது. எட்டு மணிநேரம் மின்வெட்டு செய்வதால் மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் மீதமாகும் என்று அரசு கணக்கீடு செய்கிறது. அது சரியான கணக்கீடு ஆகாது. காரணம் எட்டு மணிநேர மின்வெட்டால் நாள் முழுக்க தேவைப்படும் லைட், ஃபேன், ஏசி போன்றவை வேண்டுமானால் செயல்படாது. ஆனால் ஒரு நாளல் சில மணி நேரமே பயன்படுத்தப்படும் வாஷிங் மெஷின், ஓவன், கிரைண்டர், மோட்டார் பம்ப் உள்ளட்ட மின் சாதனங்களை மின்சாரம் உள்ள நேரம் பார்த்து கட்டாயம் பயன்படுத்தப்படும். மேலும் இன்வெர்ட்டர் மூலம் மின்சாரத்தை சேமித்து மின்வெட்டின் போது பயன்படுத்தப்படுகிறது. ஆக எட்டு மணிநேர மின்வெட்டால் சுமார் ஒரு மணிநேர மின்வெட்டின் பயன்தான் அரசுக்குக் கிடைக்கும்.
    மின்சாரத்தின் தேவைகளை இரண்டாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒன்று அவசியத் தேவைக்கான மின்சாரம். மற்றொன்று சொகுசுத் தேவைக்கான மின்சாரம். லைட்டோ, ஃபேனோ இல்லாமல் இருக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஏசி, ஃபிரிட்ஜ் போன்றவை இல்லாமல் இருக்க முடியும். இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு மின்வெட்டு இல்லாத காலங்களல் ஒரு வீட்டில் எவ்வளவு யூனிட் செலவானதோ அதில் 30 அல்லது 40 சதவீதத்தை குறைத்து இதுதான் உங்களுக்கான அளவு என்று ரேஷன் முறையை அரசு கொண்டு வரவேண்டும்.
    அதாவது மின் வெட்டு இல்லாத நேரங்களல் 200 யூனிட் பயன்படுத்தி இருந்தால், அவர்களன் மின்சார ரேஷன் 140 யூனிட்டுகள்தான் என்று நிர்ணயிக்க வேண்டும். இப்படி ரேஷன் முறையை அமுல்படுத்தினால் குடும்பத்தினர் இரவில் நிம்மதியாகத் தூங்கவும், பிள்ளைகள் படிக்கவும் தேவையான அளவுக்கு மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்தி சொகுசு சாதனங்களை தாங்களாகவே இயக்காமல் நிறுத்திக் கொள்வார்கள் அல்லது குறைத்துக் கொள்வார்கள். சொகுசு வாழ்க்கைக்கு மின்சாரம் இல்லை என்பதால் யாரும் புரட்சி செய்ய மாட்டார்கள். அடிப்படைத் தேவைக்கே மின்சாரம் இல்லாவிட்டால்தான் புரட்சி வெடிக்கும்.
    வர்த்தக நிறுவனங்கள் பொருள்களைக் கவர்ச்சியாகக் காட்டவும், விளம்பரத்துக்காகவும், தாறுமாறாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். அவர்களையும் இந்த ரேஷனில் கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டுவந்தால். அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் நியான். மெர்குரி போன்றவிளக்குகளைத் தவிர்த்துக் கொண்டு தங்களுக்கான ரேஷன் அளவுக்குள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
    சாப்பிடவும். படிக்கவும், தூங்கவும் தடையில்லாத மின்சாரம் 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்தால் மக்கள் நிலைமையைப் புரிந்து கொள்வார்கள். குண்டு பல்பு எரிக்க வேண்டாம் என்றும், எல்.இ.டி விளக்குகளையும் எல்.இ.டி டிவிக்களையும் பயன்படுத்துங்கள் என்றும் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை. ரேஷன் முறையைக் கொண்டுவந்தால் பொதுமக்களே தாமாக முன் வந்து குறைந்த மின்சாரம் செலவாகும் சாதனங்களை வாங்கும் நிலை ஏற்படும்.
    மற்றுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆற்றல் வளங்களை தாறுமாறாக, கிடைக்கின்றஅளவுக்கு உறிஞ்சி எடுத்து பயன்படுத்தக் கூடாது. இன்றைய வளர்ச்சி, நாளைய பிரச்னையாக மாறி விடக்கூடாது. எனவே ஆற்றல் வளங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும். இக்கருத்தை வலியுறுத்தும் பொருட்டுதான் 2012ம் ஆண்டை ஐ.நா., சபை வளம் குறையாத, நீடித்த, நிலையான ஆற்றல் ஆண்டாக (International Year of Sustainable Energy) அறிவித்துள்ளது.
    ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாடு பயன்படுத்தும் ஆற்றலைப் பொறுத்தே உள்ளது. பெட்ரோலியம் போன்றமரபு சார்ந்த ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தும் போது, அவை என்றேனும் ஒரு நாள் கிடைக்காமல் போகும் சூழ்நிலை உருவாகும். எனவேதான் காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு மரபு சாரா எரிசக்தி துறை உருவானது. மரபுசாரா ஆற்றல் வளங்களல் சூரிய ஆற்றல் (Solar energy) காற்றின் ஆற்றல் (Wind energy) மற்றும் கடல் அலை ஆற்றல் (Sea wave energy) ஆகியன சிறப்பானவைகளாகக் கருதப்படுகின்றன.
    இந்த ஆற்றல் வளங்கள், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களல், ஓரளவுக்கு ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியனவாக இருக்கின்றன. உலகம் உள்ள மட்டும் பல்லாயிரம் ஆண்டு காலம் சூரிய ஒளி, காற்று மற்றும் கடலலைகள் நிலையாக இருக்கும். இவற்றின் ஆற்றல் பெரும்பாலும் குறைய வாய்ப்பில்லை என்பதோடு, திரும்பத் திரும்பப் பயன்படுத்தக் கூடியது.
    இத்தகைய மரபுசாரா ஆற்றல் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காதது. இதற்கான கருவிகளை ஒரு முறை நிர்மாணித்துவிட்டால் பல்லாண்டு காலம் அவை பிரச்சனையின்றி இயங்கக் கூடியது. பராமரிப்புச் செலவும் குறைவு. நிலக்கரியைச் சேமித்து வைத்து மின்சாரம் தயாரிப்பது போல, காற்றையும் சூரிய ஒளியையும் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே மரபு சாரா ஆற்றல் வளங்களை நோக்கி செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.
    மின்சாரம், சாலைவசதி, பேருந்து, மருத்துவ வசதி போன்றவற்றை தனி மனிதர்கள் தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியாது. அத்தகைய கட்டமைப்பு வசதிகளை அரசு உருவாக்கித் தந்தால்தான் நாட்டின் பொருளாதாரமும், வீட்டின் பொருளாதாரமும் மேம்படும். மக்களும் மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும் வாழ முடியும்.

    மேகக் கணினியம் (Cloud Computing)

    இந்த நம்பிக்கை
    ஒளிக்குக் காரணம்
    தகவல் தொடர்பு
    துறையில்
    புதிய மாற்றங்களை
    ஏற்படுத்திவரும்
    தொழில்நுட்பம்தான்

    இன்றைய உலகம் மிகவும் நாகரீகமாகவும், நவீனமாகவும் மாறிவிட்டது. இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும் மொபைல் போன்கள், இ-மெயில் கணக்குகள், ஃபேஸ்புக், கூகுள் தேடல்கள் போன்றவை இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
    இன்றைய தொழில் நுட்பமும், அதன் தாக்கமும் நமது வாழ்க்கை முறையை அடியோடு புரட்டிப் போட்டது மட்டுமின்றி எதிர்காலத்தில் நாம் எப்படிப்பட்ட தொழில்துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நமது மனோநிலையையும் மாற்றிவிட்டது.
    10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகள், வணிகம் படிக்கும் மாணவர்களுக்கு சி.ஏ. மற்றும் எம்.பி.ஏ. போன்ற படிப்புகள், கலைப்பாடம் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியப் படிப்புகள் மற்றும் நிர்வாகப் படிப்புகள் என்று வகைப்பட்டிருக்கும். அத்தகைய படிப்புகளே பெரும்பான்மை மாணவர்களின் எதிர்கால இலட்சியமாகவும், பெற்றோர் ஆசிரியர் கூட்டணியின் விருப்பமாகவும் இருக்கிறது.
    ஆனால் இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் இத்தகைய பாரம்பரிய படிப்புகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு பல புதிய படிப்புகள் வந்துவிட்டன. இத்தகைய படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது தொழில் வாய்ப்பு மற்றும் ஊதியம் போன்றவற்றில் லாப கரமானவையாகவும், இன்றைய மாணவர்களின் அறிவுத் தேடல்களுக்கு ஆர்வமூட்டுபவையாகவும் திகழ்கின்றன. ஆனால் இவை பற்றிய போதுமான தெளிவு பெரும்பாலான மாணவர்களுக்கு இருப்பதில்லை என்பதே நிதர்சன உண்மை. மாணவர்கள் வளர்ந்த மற்றும் வளரும் சூழ்நிலை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் வழக்கமான பாரம்பரிய படிப்புகளை விட்டு வேறு படிப்புகளைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. பிற்போக்குத் தனத்தால் பல புதிய வாய்ப்புகளை மாணவர்கள் நழுவ விடுகிறார்கள். அது மிகப்பெரிய தவறு. எதிர்காலத்தில் ஏற்படப் போகும் ஆச்சரியப்படத்தக்க மாறுதல்களை ஒட்டியே நமது தேர்வும் இருக்க வேண்டும். அப்படி அடுத்த சில ஆண்டுகளில் உலகில் மிகப்பெரிய மாறுதல்களை உண்டாக்கப் போகும் ஒரு புதிய தொழில்நுட்பமான =மேகக் கணினியம்’ பற்றியும், அதன் வேலை வாய்ப்பும் பற்றிய பதிவு தான் இது.
    இணையத்தில் தற்போது வேகமாகப் பரவி வரும் வார்த்தை மேகக் கணினி என்ற கம்ப்யூட்டர் கலைச்சொல். Cloud Computing என்றால் பலருக்கும் புரியும். தற்போது Hat Topic ஆக இருக்கும் கூகுள்குரோம் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படைத் தொழில்நுட்பமே இந்த மேகக் கணினியம் தான். கணினியில் உள்ள ஹார்டிஸ்க் (Hard Disk)ல் நாம் தகவல்களைச் சேமித்து வைத்தால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம். இதைத் தவிர்ப்பதற்காகவும், உலகில் எங்கிருந்தும் எந்த டிவைஸ் மூலமும் நம் தகவல்களை பதிவேற்றவும், பதிவேற்றியதை தரவிக்கவும் பயன்படும் ஒரு தொழில்நுட்பம் தான் மேகக் கணினியம். SAAS என்று சுருக்கமாக அழைக்கப்படும் Software As a Service என்ற மென்பொருள் சேவையே இதன் ரிஷி மூலம். 1999ல் salesforce.com என்ற நிறுவனம் இதைத் தொடங்கியது. இப்போது பில்லியன் டாலர்களில் கொழித்துக் கொண்டிருக்கும் இந்த SAAS-யைக் கொண்டுதான் மேகக் கணினியம் உருவாகிக் கொண்டு வருகிறது.
    விண்டோஸ் போன்ற ஆபரேடிங் சிஸ்டம் உள்ள கணினிகளில் ஒரு சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் முதலில் அந்த குறிப்பிட்ட சாப்ட்வேருக்கான ஹார்ட்வேர் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். சாஃப்ட்வேரை விலை கொடுத்து வாங்கி License ஆக்டிவேட் செய்து பயன்படுத்த வேண்டும். ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்தில் இந்த License காலாவதியாகும். பின் திரும்பவும் வாங்க வேண்டும். இது தான் இது வரை நடைமுறையில் உள்ளது. ஆனால் இப்ர்ன்க் Cloud Computing-ல் இந்த பிரச்சனை இல்லை.
    Cloud Computing என்பது இணையத்தை ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதால் ஒரு பெரிய சர்வரில் (Server) உங்களுக்குத் தேவையான மென்பொருட்கள் எல்லாம் வசதியாக இன்ஸ்டால் செய்து வைக்கப்பட்டிருக்கும். தேவையான நேரத்தில் மென்பொருளை பாவித்துக் கொள்ளலாம். இப்படித் தேவையான மற்றும் தேவையற்ற எல்லா மென்பொருள்களும், Application-களும் மேகங்கள் போன்ற Web Server-களில் கிடைப்பதால் தான் இதற்கு Cloud Computing என்று பெயர் வந்தது. தற்போதும் நமக்குத் தெரியாமலேயே இந்த Cloud Computing-ஐ அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம். உதாரணமாக E-mail Service Provider’s Gmail எடுத்துக்கொண்டால் நாம் அனுப்பும், பெறும் E-mail-கள் அனைத்தும் கூகுள் Server-லேயே சேமிக்கப்படுகிறது. நாம் இணையத்தில் இணைந்த கணத்திலிருந்து தேவையான Data-களை பாவித்துக் கொள்கிறோம்.
    இந்த Cloud Computing தொழில்நுட்பத்தால் அதிக லாபமடைவது தனி நபர்களைக் காட்டிலும் கம்பெனிகளே. காரணம் இந்த தொழில்நுட்பம் ஹார்ட்வேர் செலவுகளை பெருமளவில் குறைத்துவிடுகிறது. குறிப்பிட்ட OS-ம், மானிட்டரும், Computer இயக்கத் தேவையான Processor + Hard Disk மட்டும் இருந்தால் போதும். மற்ற எல்லாவற்றையும் SAAS Service Provider பார்த்துக் கொள்ளும்.
    இணையதள சேவைகள் Cloud Hosting முறையில் சேவை வழங்குவதால் நமது கணினியே முழுவதும் பாதிக்கப்பட்டாலும் அடுத்த கணினி மூலம் இணையம் வழியாக நம் கோப்புகளைப் பயன்படுத்த முடியும்.
    வேலைவாய்ப்பு:
    தகவல் தொடர்புத் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வரும் இந்த தொழில்நுட்பம் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் அளிக்கிறது. இது தொடர்பான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆய்வு, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மட்டும் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், உலக அளவில் இந்த வேலைவாய்ப்பின் எண்ணிக்கை சுமார் 140 லட்சமாக இருக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    கம்ப்யூட்டர் துறை தவிர தகவல் தொடர்பு, ஊடகங்கள், உற்பத்தித்துறை மற்றும் வங்கித் துறைகளில் கூடுதலாக 14 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. 2015ம் ஆண்டில் கிளவுட் கம்ப்யூட்டிங் துறை மூலம் கிடைக்கும் வருமானம் 1.1 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
    நம் வீட்டு கணினி அல்லது அலுவலகக் கணினியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை பாதுகாக்கவும், அதே சமயம் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தும் சேவையை நமக்கு அளிக்கும் இந்த கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில் நுட்பத்துறையை மாணவர்கள் தேர்ந்தெடுத்து பயனடையலாம்.

    நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்

    நான்காம் வகைத் தடிப்பானோரது காலில் உள்ள ஆடுசதை மிகவும் இறுக்கமாக (Calf Hardness, cH) 80 – 100 விழுக்காட்டளவு இருக்கும். சித்த மருத்துவர்கள் நாடி பார்ப்பதுபோல, கட்டை விரலை ஒரு பக்கமும், மற்ற நான்கு விரல்களை மறுபக்கமும் வைத்து அழுத்திப்பார்த்தால், ஆடுசதையின் இறுக்கத்தை உணர்ந்து கொள்ளமுடியும்.
    எலும்பும் தோலுமாய் உள்ளோர்க்கு இந்த இறுக்கம் “-40%” என்ற அளவில் இருக்கும் என்பதை நாம் முன்னரே அறிவோம். அவர்களது ஆடுசதை “தொள-தொள”வென இருக்கும்.
    ஆனால், நான்காம் வகைசார்ந்தோரின் ஆடுசதை “இரும்புபோல” இருக்கும்!
    * * * * * *
    இருதயம், வயிறு, ஈரல்கள், மூளை, மார்பு, கற்பப்பை, கிட்னி, எலும்பு, போன்ற பற்பல உறுப்புக்களைக் கொண்டதுதான் நமது உடல்.
    ஒவ்வோர் உறுப்பும் பற்பல தசைகள் எனும் சதைகளைக்கொண்டுதான் அமைக்கப்பட்டுள்ளது. எலும்பைக் ‘கனமான சதை’ (தசை) எனவும், மற்ற உறுப்புக்களை மென்மையான சதைகள் (soft tissues) எனவும் குறிப்பிடுவது வழக்கம். கோடிக்கணக்கான உயிரணுக்களன் (cells) கூட்டமைப்பால் உருவாவதுதான் உறுப்புக்கள் யாவும். ஒவ்வொரு உயிரணுவும் சுண்ணாம்பை (calcium) தன்னுள்ளே உறிஞ்சிக்கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது.
    நமது தொண்டையில் உள்ள தைராய்ட் சுரப்பியில், “சுண்ணம் சீராக்கிச் சுரப்பிநீர்” (கேல்சிடோனின் ஹார்மோன் =Calcitonin hormone) சுரக்கின்றது. நமது இரத்ததில் சுண்ணாம்பு மிகுதியாக இருக்குமானால், அந்த மிகுதியை, இந்தச் சுரப்பிநீர் வௌத்தள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நமது இரத்தத்தில் உள்ள சுண்ணாம்பின் அளவை இது எப்போதும் சீராக வைத்திருப்பதன் காரணமாகத்தான், சுண்ணாம்பு மிகுதியை இரத்த சோதனையின்வழி கண்டுகொள்ளமுடியாமற் போய்விடுகின்றது.
    நமது உடம்பினுள் இரத்த ஓட்டம் இருப்பதைப்போல மற்றுமொரு ஓட்டமும் உள்ளது. அது “நிணநீர் ஓட்டம்” (-m @ l=Lymph fluid, Lymphatic Circulation) என்று குறிப்பிடப்படுகிறது.
    இரத்தத்தில் இருந்து வௌத்தள்ளப்படும் மிகைப்பட்ட சுண்ணாம்பு, இந்த நிணநீரில் போய்ச் சேர்ந்துவிடும் – சாக்கடைக் கழிவுபோல. கழிவுநீர்ப் பொருட்களை வௌயேற்றுவதும் இந்த நிணநீரின் ஒரு முக்கிய பணியாகும். நிணநீர் உடல்முழுதும் சுற்றிவரும்போது, அதில் உள்ள சுண்ணாம்பை இந்த மென்மையான சதையின் உயிரணுக்கள் உறிஞ்சிக்கொள்ளும்.
    அவ்வாறு உட்செல்லும் சுண்ணாம்பு, அந்த உயிரணுக்களன் அளவை வீங்கினாற்போலப் பெரிதாக்கி, அவற்றின் மென்மைத் தன்மையைப் போக்கி, இறுக்கமானதாக ஆக்கிவிடும். ஒரு சதையின் எல்லா உயிரணுக்களும் இவ்வாறு இறுக்கமடைந்து பெருத்துவிடும்போது, அந்தச் சதைகளைக் கொண்டு அமைந்துள்ள அந்த உறுப்பும் பெரிதான உருவத்தைப் பெற்றுக் கடினமானதாகிவிடும். இவ்வாறு, எல்லா உறுப்புக்களுமே பெரிதாகிவிடும்போது, மொத்த உடம்பும் பெரிதாகிவிடும். உடல் எடையும் மிகமிகக் கூடிவிடும். இதனால்தான், ஒருவர் தடித்த, பேருருக்கொண்ட, முரட்டு உடம்பை உடையவராக ஆகிவிடுகிறார். நம்மிடையே வாழும் நம்மினத்தையே சார்ந்த சிலர் மிகப் பெரிய உடலைக் கொண்டவர்களாகத் திகழ்வதற்குக் காரணம் இந்தகைய சுண்ணாம்பு மிகுதிதான்.
    * * * * * *
    ஒரு பெண்ணின் மார்பில் உள்ள சதைகள், இவ்வாறு சுண்ணாம்பு உறிஞ்சப்படுவதால் உருவத்தில் பெருத்து, இறுக்கமானதாகிவிடும்.
    மார்பின் ஒரு குறிப்பிட்ட மென்சதையில் மட்டும் இந்தச் சுண்ணாம்பு கூடிச்சேருமானால், அதுவே மார்புக்கட்டி (Xml = Lump) ஆகிவிடும். இது எவ்வாறு நிகழ்கிறது, எப்படித் தவிர்த்துக் கொள்ளலாம் என்பன போன்ற விவரங்களைப் சற்று பொறுத்திருந்துதான் காணவேண்டும்.
    சுண்ணாம்பு பேரளவில் குறைந்துவிடுமானால், அந்தப்பெண்ணின் மார்பு மிகவும் நலிந்துபோய், மென்மையானதாகிவிடும். அப்பெண்ணின் ஆடு சதையும் தொளதொளவென்றாகி, மென்மையானதாகிவிடும். அப்போது அது cH -20 அல்லது -40 என்றாகிவிடும். அத்தகைய பெண்ணை நாம் “எலும்பும் தோலுமாய்” உள்ளோர் பட்டியலில் சேர்த்துவிடும்படியாகிவிடும்.
    ஒரு பெண், வயது முதிர்ந்து, ‘பாட்டி’ ஆகும்போது, அவரது மார்பு தளர்ந்து, சதைப்பிடிப்பு ஏதுமில்லாது, தொங்கினாற்போல ஆவதற்குக் காரணம், அப்பெண்ணின் உடலில் உள்ள சுண்ணாம்பு அளவிற்கு மிஞ்சி உடலைவிட்டு நீங்கி விடுவதுதான் காரணம்.
    * * * * * *
    இந்தச் சுண்ணாம்பு ஒரு சிலரது உடம்பினுள் மட்டும் மிகுதியாக உறிஞ்சிக்கொள்ளப்படுவது எதனால் என்பதைப் பார்ப்போம். அதற்கும் முன்னால், ஒரு சிலரது உடம்பினுள் மட்டும் சுண்ணாம்பு ஏன் மிகுதியாகிறது என்பதை நாம் உணர்ந்தாகவேண்டும். பின் வரும் காரணங்களால், ஒருவருடைய உடலுக்குக் கூடுதலான சுண்ணாம்பு கிடைக்கும்:
    சுண்ணாம்பு (caclium tablets, calcium supplements, calcium-enriched foods, such as biscuits, powered milk, etc.) மாத்திரைகள், செறிவூட்டப்பட்ட ரொட்டி, மாவுப்பால் போன்ற உணவுப் பொருட்களை உண்பவர்களது உடம்பினுள் சுண்ணாம்பு மிகுதியாகச் சேர இயலும்.
    சில உணவுப் பொருட்களல் மிக அதிகமான சுண்ணாம்பு இருக்கிறது. பெரும்பகுதியான, நெத்திலி, எறால், நண்டு, போன்ற கடல் உணவுகளலும், முட்டை, பால் போன்றவற்றிலும் சுண்ணாம்பு இயற்கையாகவே அதிகமாக உள்ளது. இத்தகைய உணவுகளை அதிகமாகவும் அடிக்கடியும் உண்பதாலும் ஒருவரது உடம்பினுள் சுண்ணாம்பு மிகுதியாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
    * * * * * *
    நம் உடம்பிற்கு ஒரு குறிப்பட்ட அளவு சுண்ணாம்புச் சத்து (calcium) ஒவ்வொரு நாளும் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. ஆண்களுக்கு, நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 450 மில்லிகிராமும், பெண்களுக்கு 500 மில்லிகிராமும், வளரும் குழந்தைகளுக்கு 900 மில்லிகிராம் என்ற அளவிலும் கிடைத்தாகவேண்டும்.
    நாம் உண்ணும் உணவில், சுண்ணாம்புச் சத்து இல்லாத உணவே கிடையாது. சிலவற்றில் அது மிக அதிகமாகவும், சிலதில் நடுத்தரமாகவும், மற்றும் சிலவற்றில் மிகக் குறைந்த அளவிலும் அது இருக்கிறது. இயற்கையில், நம் உடம்பில் ஒரு தற்காப்புத் தன்மை இருக்கிறது. நம்மை அறியாமல், நாம் உட்கொள்ளும் உணவின் வழியாக மிக அதிகமான சுண்ணாம்புச் சத்து நம் உடம்பினுள் செல்லும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.
    அவ்வாறு அதிகமாகிவிடும் சுண்ணாம்பையும் (வேறுபல தேவையற்ற நச்சுப்பொருட்களையும்) நமது உடம்பிலிருந்து வௌத்தள்ளுவதற்காகவென அமைக்கப்பட்டுள்ளதுதான் மூத்திரநீர் வௌயேற்றம்.
    கிட்னிகள் உதவிசெய்ய, மிகுதியாகிவிடும் சுண்ணாம்புமட்டும் இந்தச் சிறுநீரின் வழியாக, நமது உடலைவிட்டு வௌயேறிவிடும். அதனால், நம் உடம்பு என்றென்றும் நலமுடனேயே இருக்கும். இதுதான் இயற்கையின் அமைப்பு – இறைவன் வகுத்துத்தந்துள்ள நியதி! ஆனால், சில மனிதர்கள் செய்யும் தவறான செயலின் காரணமாக இந்த சுண்ணாம்பு வௌயேற்றம் நடைபெறாமல் போய்விடுகிறது. அந்தத் தவறு யாதென அடுத்த இதழில் காண்போம்.

    எப்படி எதிர்கொண்டேன் GATE தேர்வை

    இந்தாண்டு நடைபெற்ற GATE தேர்வில் இந்திய அளவில் 7ம் இடம்
    பிடித்து சாதனை புரிந்துள்ளார் கோவை, தமிழ்நாடு வேளாண்மை
    பல்கலைக்கழகத்தில், இளங்கலை உயிரி தொழில் நுட்பம் (B.Tech)
    இறுதியாண்டு படிக்கும் மாணவன் இரா. கோகுல கிருஷ்ணன். GATE Exam பற்றியும், இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்பது பற்றியும், நம்மிடம்
    பகிர்ந்து கொண்டவை …
    உங்களைப் பற்றி சில வரிகள்…
    பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். என் தந்தை ம. இராமச்சந்திரன் சென்னை அடையாறில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். என் தாய் இரா. முத்துக்கனி இல்லத்தரசி. எனது சகோதரர்கள் இருவரும் சுயதொழில் செய்து வருகின்றனர். சகோதரி மருத்துவராக உள்ளார்.
    GATE என்றால் என்ன?
    Graduate Aptitude Test in Engineering என்பதின் சுருக்கமே GATE. இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். இந்த தேர்வு மெக்கானிக், ஏரோநாட்டிகல், கெமிக்கல், உயிரி தொழில் நுட்பம் என பல்வேறு பிரிவுகளில் நடத்தப்படும். இந்த தேர்வை நாட்டில் உள்ள எட்டு IIT-களும் இணைந்து நடத்துகின்றன. தேர்வுத் தாளை வடிவமைப்பதை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு IIT என சுழற்சி முறையில் அமைத்துக் கொள்கின்றன. 2011ல் ஐஐப-சென்னையும், 2012ல் IIT-டெல்லியும் வினாத்தாள்களை அமைத்தன. இந்த தேர்வினை IIT-கள் தங்கள் கல்வி நிறுவனத்தில் முதுகலை படிப்பிற்கு மாணவர்களைத் தேர்வு செய்ய நடத்துகிறது.
    இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்து எப்படி?
    ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் இத்தேர்வினை எழுதுவதற்கான Application Form Online-ல் வெளியிடப்படும். அந்த பாரத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். சமர்பித்த உடன் 1000 ரூபாய்க்கான செல்லான் (Chellan) மற்றும் விண்ணப்ப படிவம் (Application Form) டவுன்லோடாகி PDF Format-ல் வரும். அதனை பிரிண்ட் எடுத்து கையொப்பம் இட்டு இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டும். பின்னர் செல்லானில் GATE Copy மற்றும் விண்ணப்ப படிவத்தை அதில் கொடுத்துள்ள விலாசத்துக்கு அனுப்ப வேண்டும்.
    ஒரு மாதம் கழித்து Admit Card-ஐ GATE Website-ல் நமது பதிவெண் மூலம் டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தவறாமல் தேர்வு அன்று எடுத்துச் செல்ல வேண்டும்.
    நீங்கள் எப்படி GATE Exam-க்குத் தயாரானீர்கள்?
    GATE தேர்வு நமது அறிவை சோதிப்பது, ஞாபக சக்தியை அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எனவே கான்செப்டுக்களைத் தெளிவாகவும், ஆழமாகவும் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதேபோல் பல கான்செப்டுக்களுக்கு உள்ள தொடர்பையும் புரிந்து கொள்ள வேண்டும். Syllabus-ஐ கவனித்து அதற்கேற்ப நான் தயார் ஆகத் தொடங்கினேன். முந்தைய வருட தேர்வுத் தாள்களை டவுன்லோடு செய்து கேள்விகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். பின்னர் அதற்கேற்றாற் போல் படிக்கத் தொடங்கினேன். நாம் என்ன படிக்க வேண்டும் என்பதை Syllabus சொல்லிவிடும். நாம் எப்படி படிக்க வேண்டும் என்பதை முந்தை ஆண்டு தேர்வுத் தாள்கள் சொல்லிவிடும். நான் படிக்கும் போது எழும் ஐயங்களை மறவாமல் ஆசிரியர்கள், Internet மற்றும் புத்தகங்களில் இருந்து தெளிவு பெறத் தொடங்கினேன். ஐயங்களை வைத்துக் கொண்டு படிப்பது மிகவும் ஆபத்தானது. நம் முயற்சிகள் வீண்முயற்சியாகி விடும் என்பதைப் புரிந்து படித்தேன்.
    நீங்கள் தேர்வு தாளை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?
    இந்த ஆண்டில் இருந்து விடைத்தாள் ORS Sheet-ல் விடையளிக்க கருப்பு மை பேனாவை தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. எனவே விடைகளை ஒருமுறை அளித்த பின் மாற்ற இயலாது. மேலும் Negative மதிப்பெண் (தவறான விடைகளுக்கு) உள்ளது. ஆகையால் நான் முதலில் தெளிவாகத் தெரிந்த கேள்விக்கான விடைகளை மட்டும் எழுதினேன். பின்னர் ஓர் அளவு தெரிந்த விடைகளை யோசித்து Common Sense-ஐ பயன்படுத்தி விடையளித்தேன். 65 வினாக்களும் விடையளிக்க 180 நிமிடங்கள் என்பதால் யோசிக்க நிறைய நேரம் இருக்கும். எனவே நன்றாக பல Concept-களையும் இணைத்துப் பார்த்து, எனக்கு தெளிவு வந்தவுடன் தான் விடையளித்தேன். தேர்விற்கு முன் பதற்றமில்லாமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். இது அடுத்த 3 மணி நேரம் நம்மை தெளிவாக சிந்திக்க பேருதவி புரியும்.
    GATE மதிப்பெண் வைத்துக்கொண்டு என்ன செய்வது?
    GATE-ல் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் cut off, Result உடன் தரப்படும். இந்த தேர்ச்சி மதிப்பெண் ஒவ்வொரு ஆண்டும் மாறக்கூடியது. GATE-ல் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களான IISc (Indian Institute of Science), IIT மற்றும் NIT (National Institute of Technology) ஆகியவற்றில் உயர் கல்வி பயிலலாம். GATE-ல் உயர்ந்த மதிப்பெண் பெற்றிருந்தால் நேரடியாக முனைவர் பட்டம் (Direct Ph.D.)பயிலலாம். அதுபோக இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றில் உயர்கல்வி பயிலலாம். இவ்வனைத்திலும் GATE மதிப்பெண் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
    அதுபோக உலகளவில் Top Ranking-ல் இருக்கும் NUS (National University of Singapore) மற்றும் NTU (Nanyang Technological University)ஆகிய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயில GATE மதிப்பெண் 90 சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும். GATE மதிப்பெண் இத்தகைய பெரிய பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்படுவது இத்தேர்வின் தரத்தை நமக்கு உணர்த்துகிறது.
    அடுத்த வருடம் GATE தேர்வை எழுதுவோருக்கு நீங்கள் கூற விரும்புவது?
    GATE என்ற ஒரு தேர்வு முடிவு எனது எண்ணங்களை வேறு கோணத்தில் மாற்றிவிட்டது. உங்களுக்கும் இது நிகழ நான் வாழ்த்துகிறேன்.
    GATE போன்ற தேர்வுகளுக்கு 3 மாதம் அல்லது 6 மாதம் Preparation என்பதெல்லாம் சரி வராது. இத்தகைய உயரிய தேர்வுகளை எதிர்கொள்ள நாள்பட்ட தெளிவான அறிவு வேண்டும். நாம் படிக்கும் போது ஆர்வத்தோடு, நேசித்து, உணர்ந்து, அனுபவித்து, கற்பனை செய்து படிக்க வேண்டும்.

    டென்சன் படுத்தாதீங்க!

    செய்ய வேண்டியது:
    போக்குவரத்து சீராக நடைபெற வாகனங்கள் வரிசையாக, ஒன்றன்பின் ஒன்றாகச் செல்ல வேண்டும். அதே போல் அன்றாடப் பணிகள் சீராக நடைபெற எண்ணங்களை ஒழுங்குபடுத்தி, ஒவ்வொன்றாகக் கையாள வேண்டும். அதே போல செயல்களையும் முக்கியத்துவம் அறிந்து, வரிசைப்படுத்தி, திட்டமிட்டு செய்தால், விரும்பிய பலனை உரிய நேரத்தில் பதட்டமேயில்லாமல் இயல்பாக அடைய முடியும்.
    ஏற்றுக்கொள்:
    “சரீங்கஙு நீங்க சொன்ன உதாரணத்துக்கே வருவோம். சாலை விதிகளை மதித்துச் சரியான பாதையில் செல்லும் வாகனம் மீது மற்ற வாகனங்கள் வந்து மோதுவது இன்று இயல்பாகிவிட்டது. காரணம் அவசரம் அதனைத் தொடர்ந்து டென்சன் தான். அந்த நிலையில் டென்சன் படாமல் இருக்க முடியுமா?” என்ற உங்களின் மன ஓட்டம் புரிகிறது.
    நம்மால் தனித்து வாழ முடியாது. சமுதாயத்தோடு இணைந்து தான் வாழ வேண்டும். எப்படி நாம் செய்யாத குற்றத்துக்கும், பொதுவாக தண்டனைக்கு ஆளாகிறோமோ, அது போல் வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டால் நம் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வையும் மீறிய சம்பவங்களை நாம் ஏற்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை.
    ஆனால், இந்த மன நிலைக்குச் சென்றுவிட்டால், நிச்சயமாக மற்றவர்களால் பாதிப்பு இருக்காது.
    செய்யாத குற்றத்துக்கு:
    ஆமாம்ஙு அது என்னங்க, செய்யாத குற்றத்துக்குத் தண்டனை? என்ற சந்தேகம் வந்துவிட்டதா?
    இன்றைக்கு விலைவாசி உயர்வுக்கு நாம் காரணமா? மின் தடைக்கு நாம் காரணமா? பாதாள சாக்கடைக் குழி தோண்டும்போது, உடைந்த குடிநீர் பைப்பைச் சரி செய்யாததால், நம் வீட்டுக்குத் தண்ணீர் வராததற்கு நாம் காரணமா?
    இதுபோல் இன்னும் பல கூறலாம். உங்களுக்கே தெரியும். தெரிந்தும் வாய்மூடி மௌனிகளாய், எதையும் தாங்கும் இதயத்தோடு, அபரிமிதமான சகிப்புத்தன்மையோடு வாழ்ந்து வருகிறோம்.
    ஏனென்றால் நம்மிடம் நம்பிக்கை யுமில்லை; தன்னம்பிக்கையுமில்லை.
    கோபம்:
    அது என்னங்க? அப்படிச் சொல்றீங்க என்ற சிலரது கோபம் புரிகிறது. இந்தக் கோபம் எல்லோருக்கும் வர வேண்டும். அப்போதுதான், சரியாகச் சிந்தித்து நியாயமான செயல்களையே செய்யும் மன நிலை உருவாகும்.
    மழை பெய்தால் டென்சன், காற்று வீசினால் டென்சன், பஸ் தாமதமானால் டென்சன், யாராவது திட்டிவிட்டால் டென்சன், எதை நினைத்தாலும் டென்சன் என வாழ்நாள் முழுதும் டென்சனுடனேயே வாழ்பவர்கள் ஏராளம்ஙு ஏராளம்ஙு
    இதிலிருந்து விடுபட முடியாதா?
    முடியும்.
    இரண்டே பயிற்சிகள் தான்.
    உடலுக்கு ஒன்று; மனதுக்கு ஒன்று.
    மனப்பயிற்சி:
    ஏனென்றால், இந்தச் சூழலில் தான் வாழ்ந்தாக வேண்டுமென்ற நிலையில், சங்கடப்பட்டு, சலிப்புடன் வாழாமல் அவைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றிலிருந்து விடுபட நினைத்தாலே போதும். நம்மிடமுள்ள ஆறாவது அறிவு அதற்கான வழிவகைகளைத் தெளிவாகக் கூறிவிடும்.
    இது என் தலையெழுத்து என்று கூறுவதை முதலில் நிறுத்த வேண்டும். உடலும், மனமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
    முதலில் மனதுக்கான பயிற்சி. எண்ணத்தை மாற்றிப் போட வேண்டும்.
    “எது நடந்தாலும் நன்மைக்கேஙு இது இன்று நடக்க வேண்டும் என்பதால் நடந்திருக்கிறது” எனத் திடமாக எண்ண வேண்டும்.
    அமைதியான இடத்தில் வசதியாக அமர்ந்து இதைச் செய்ய வேண்டும். இதை சுய கருத்தேற்றம் (அன்ற்ர் நன்ஞ்ஞ்ங்ள்ற்ண்ர்ய்) என்று கூறலாம். மனதுடன் நெருக்கமானது நம் மூச்சு (ஆழ்ங்ஹற்ட்ண்ய்ஞ்) என்பதால், மூச்சை மெதுவாக, முழுமையாக உள் இழுத்து, அதேபோல் வெளிவிடுவதால் மனம் அமைதி நிலைக்குச் செல்லும். சரி, எத்தனை முறை செய்வது என்ற கேள்வியும் வந்துவிடடதா? 5 நிமிடங்கள் செய்யுங்கள்.
    மனதைச் சரிப்படுத்தியதால், இனி டென்சன் ஆவதைத் தடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதுவரை ஆன டென்சனால் பாதிக்கப்பட்ட உடல் ஆரோக்கியத்தை சரி செய்ய வேண்டாமா? ஆமாம் தானேஙு
    உடலுக்கான பயிற்சி:
    காலை, மாலை இரு வேளையும் உங்களது கால் விரல்களைக் கை விரல்கள் கொண்டு பின்புறமாக வளைத்து சுமார் 15 நொடிகள் வைத்து விட வேண்டும். இதுபோல் ஒவ்வொரு காலுக்கும் 5 நிமிடம் செய்ய வேண்டும்.
    செய்முறை:
    வசதியாக கால்களை நீட்டி, முழங்காலை மேலிழுத்து மடக்கி உட்காரவும். இடது கால் கடைசி மூன்று விரல்களை இடது கை நான்கு விரல்களை அடியிலும், கட்டை விரலை மேலே வைத்தும் பிடிக்க வேண்டும். வலது கை நான்கு விரல்களால் கால் பெருவிரல் மற்றும் 2வது விரலை அடியிலும், கட்டை விரலை மேலே வைத்தும் பிடிக்க வேண்டும். இப்போது இரு கைவிரல்களாலும், கால் விரல்களை மேல் நோக்கி, பின்புறமாக நன்றாக வளைக்க வேண்டும். 15 நிமிடம் பிடிக்க வேண்டும். பின் கீழ்நோக்கி வளைத்து, உடனே மேல் நோக்கி வளைக்க வேண்டும். இதுபோல் 20 முறை செய்ய வேண்டும். பின் வலது காலுக்கும் இதேபோல் செய்ய வேண்டும்.
    முத்திரை:
    அது சரிங்கஙு வேலை செய்யற இடத்திலே டென்சன் வந்தால், நான் உட்கார்ந்து, காலைப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமா? என்று சிலர் நினைப்பதும் தெரிகிறது. இதோ, அதற்கும் ஒரு முத்திரை. வலது கை 4 விரல்களை கொக்கி போல் உட்புறமாக மடித்து, இடது கை விரல்களையும் இதே போல் மடித்து ஒன்றுக்குள் ஒன்றை வைக்கவும். இப்போது இழுத்து கொக்கிபோல் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
    இந்த நிலையில் நெஞ்சு முன் பிடித்துக் கொண்டு, கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்துவிட வேண்டும். இழுக்கும்போது கை கொக்கி இயல்பாக இருக்கவும்; மூச்சு வெளியே விடும்போது கை கொக்கியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வெளிப்புறமாக இழுக்க வேண்டும். இதுபோல் 10 மூச்சுகள் போதும். தேவைப்படும்போதெல்லாம் இம்மாதிரி செய்யலாம். மூச்சு மட்டும் மெதுவாக இழுத்துவிட வேண்டும். சரிதான்ஙு டென்சனிலிருந்து விடுதலையாக வழி கிடைத்துவிட்டது.
    புலம்பல்:
    ஆனால், டென்சனின்றி எங்களால் வாழவே முடியாதேஙு கர்ணனுக்கு எப்படி கவச குண்டலம் அவரோடு ஒட்டியே பிறந்ததோ, அதுபோல் எங்கள் வாழ்க்கையில் டென்சனும் இரண்டறக் கலந்து விட்டதே எனச் சிலர் புலம்புவது காதில் விழுகிறது.
    ஒரே வழி:
    இன்னும் எத்தனை காலம் தான் இப்படி இருக்கப் போகிறீர்கள்? இதற்காக நீங்கள் பிறக்கவில்லை. மற்றவர்கள் மீது நம்பிக்கை கொண்டு உங்கள் மீது அதீத தன்னம்பிக்கை கொண்டு, சரியாகத் திட்டமிட்டு, செயல்பட்டு வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த வேண்டாமா? உங்களைச் சேர்ந்தவர்களுக்கு நீங்கள் சாதனையாளர் என்பதை நிரூபிக்க வேண்டாமா?
    ஆம் என்றால், ஒரே வழி தான். அதுதான் மேலேயுள்ள மனம், உடல் பயிற்சி. நம்பிக்கையுடன் செய்யுங்கள். டென்சனிலிருந்து விடுபடுங்கள். டென்சனை உங்கள் மீது விரோதம் கொள்ளச் செய்யுங்கள். அன்போடு நட்பு கொண்டு, எஞ்சிய கால வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழுங்கள்.

    பெற்றோரும் பிள்ளை வளர்ப்பும்

    உங்கள் குழந்தை நடக்க முயற்சிக்கும் பொழுது,
    அது நடந்து வருகின்ற தருணத்தின்
    அற்புதத்தை காண்கின்ற பொழுது,
    முதன் முதலாக உங்கள் குழந்தை பேச
    முயற்சிக்கும் பொழுது, அது ஒரு சொல்
    சொல்லிவிடுகின்ற தருணத்தின் இன்பத்தை
    நீங்கள் அனுபவிக்கின்ற பொழுது,
    அந்த மகிழ்வை, பாராட்டை, உங்கள்
    குழந்தையின் மனதில் ஆழப் பதியும் படிச்
    செய்ய நீங்கள் மறவாதீர்கள்.

    பெற்ற குழந்தையைப் பேணி வளர்த்து பெரியவர்களாக்குவது என்பது இன்றைக்கு குதிரை கொம்பாகத்தான் தோன்றுகின்றது. அந்த அளவிற்கு, பிள்ளைகளும் சரி, பெற்றோர்களும் சரி, நெருக்கடிக்குள் நின்று தவிக்கின்றனர்.
    குழந்தை வளர்ப்பு என்பது பெரும்பாலும் மூன்று வித முறையிலே பின்பற்றப்படுகிறது. ஒன்று, பாரம்பரியமாக நம் நாட்டில் தொன்றுதொட்டு பின்பற்றப்படும் “பெற்றோருக்கு கட்டுப்பட்ட குழந்தை வளர்ப்பு முறை”. இரண்டாவது, மேலை நாடுகளில் கடைபிடிக்கப் படுகின்ற“குழந்தைக்கு கட்டுப்பட்ட பெற்றோர்கள்” என்கின்ற வளர்ப்பு முறை. மூன்றாவதாக, “பெற்றோரும், பிள்ளைகளும் சுதந்திரமாக இருக்கும்” வளர்ப்பு முறை என வகைப்படுத்தப்படுகின்றது.
    இன்றைய நவீன காலத்திற்கு ஏற்புடையதான மிகச் சிறந்த முறையாக, மூன்றாவதாக உள்ள, பெற்றோரும் பிள்ளைகளும் சுதந்திரமாக இருக்கக்கூடிய வளர்ப்பு முறையே பொறுத்தமானதாக இருக்கும்.
    இம்முறையில் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அதிகமாய் பொறுப்புகளைத் தருவதோடு நின்றுவிடாமல், அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றத் தேவையான சுதந்திரத்தையும் அவர்களுக்குக் கொடுத்து அதோடு அவர்களின் திறமைகள் மற்றும் ஆற்றல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வளர்க்கப்படுகின்றனர்.
    குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது, நம்மை நம் குழந்தைகள் புரிந்து கொள்ளுவது இல்லையே என்கின்ற கவலை தான். எப்படி அவர்களை நம்மைப் புரிந்து கொள்ளும்படி வளர்ப்பது என்றால், அதற்கான தக்க வழிமுறைகளை, மிக பக்குவமாக கையாள வேண்டும். அதை விடுத்து, நமது பிள்ளைகளை அருகே அழைத்து, மகனே நான் உன்னை நேசிக்கின்றேன். நீ எவ்வாறு இருக்கின்றாயோ, அவ்வாறே உன்னை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூற வேண்டியதில்லை. அப்படிச் சொன்னால், அவர்கள் நம்மை ஏமாற்றுகின்றார்கள் என்று தான் நினைப்பார்கள். ஏன் என்றால் இன்றைய நிலைமை என்பது அதற்கு எதிர்மாறாக உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம் அளவிற்கு அதிகமான எதிர்பார்ப்பை எதிர்நோக்கி இயங்குகின்றார்கள். அதற்காக எதை வேண்டும் என்றாலும் செய்யத் துணிந்து விடுகின்றார்கள் என்கின்ற சிந்தனை இன்று எல்லாக் குழந்தையிடமும் ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. பின்பு என்ன தான் செய்வது என்கின்றீர்களா?
    நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், முதன் முதலாக உங்கள் குழந்தை நடக்க முயற்சிக்கும் பொழுது, அது நடந்து வருகின்ற தருணத்தின் அற்புதத்தை காண்கின்ற பொழுது, முதன் முதலாக உங்கள் குழந்தை பேச முயற்சிக்கும் பொழுது, அது ஒரு சொல் சொல்லிவிடுகின்ற தருணத்தின் இன்பத்தை நீங்கள் அனுபவிக்கின்ற பொழுது, அந்த மகிழ்வை, பாராட்டை, உங்கள் குழந்தையின் மனதில் ஆழப் பதியும் படிச் செய்ய நீங்கள் மறவாதீர்கள்.
    மேலும் அவர்கள் பள்ளிக்கு முதன் முதலாக செல்லும் போதும், பள்ளி சென்று வீடு வந்த பிறகும், பள்ளியிலே நடந்ததை, குழந்தைகள் நம்மிடம் சொல்ல முற்படும் போதும், நாம் செவிமடுத்துக் கேட்டு, அவன் சிந்தனை செம்மை சேர்க்க உதவி, அவனை அங்கீகரித்து, ஆரத் தளுவி, அன்பு பாராட்டி, உற்சாகமூட்டி உத்வேகத்தைக் கொடுப்போமானால் நம்மைக் காட்டிலும் மிகச் சிறந்த வழிகாட்டி, அந்தக் குழந்தைகளுக்கு யாராக இருக்க முடியும் என்கின்ற எண்ணம் அந்த பிஞ்சு உள்ளங்களில் எழுந்து விட்டால் போதும். அப்பொழுதே பிள்ளைகள் பெற்றோர்களைப் புரிந்து கொண்டு அவர்களை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கின்ற தன்மை உருவாகி விடும். இத்தகைய ஏற்றுக்கொள்ளுதலை, பிள்ளைகள் டீன் ஏஜ் பருவத்தை எட்டும் முன் செய்வது மிக மிக எளிது.
    குழந்தைகளை ஐந்து வயது வரை அவர்களை அன்பு பாராட்டி வளர்க்க வேண்டும். ஐந்திலிருந்து பத்து வயது வரை கண்டித்து வளர்க்க வேண்டும். அதன் பின்பு அவர்கள் பதினாறு வயதை அடைந்த உடன் ஒரு சக நண்பனைப் போல் பாவித்து வளர்க்க வேண்டும். இந்த கருத்தை உள்ளடக்கிய வாக்கியம் தான் “குழந்தைகளை கண்டித்து, அடித்து வளர்க்காவிட்டால் அவர்கள் கெட்டுப் போவார்கள்” என்பது.
    பெரும்பாலான பிள்ளைகளின் அடிமனம் என்ன எண்ணுகின்றது என்றால், பெற்றோர்கள் கண்டிப்பு உடையவராகவும், அன்பு மிக்கவராகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
    குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது, அவர்களின் செயல்களுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்வது. இதை சுயசெயல்பாடு என்பார்கள்.
    உதாரணத்திற்கு உங்கள் குழந்தை, ஒர கண்ணாடிக் குடுவையை உடைத்து விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். உடனே அவனை அடித்து துவைத்து விடாமல், அருகே அழைத்து கண்ணாடி என்கின்ற மென்மையான பொருளின் தன்மையை எடுத்துரைத்து, அதை கவனமாகக் கையாளவில்லை என்றால் உடைந்து விடும் என்கின்ற காரணத்தை, மிகப் பக்குவமாக எடுத்துரைத்து, இனிமேல் அவன் அத்தகைய பொருள்களை கவனமாகக் கையாலும் வகையில் தயார்படுத்துதலே மிக முக்கியமானது. அடுத்ததாக குழந்தையின் சுயமதிப்பை வளர்த்துவிட வேண்டும். சுயமதிப்பு மிக்க குழந்தை, தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு.
    மாசிடோனியாவின் அரசன் பிலிப்பு தனது மகனுக்கு சுயமதிப்பு புகட்டுவது குறித்து யோசித்தான். அதன் விளைவு ஒரு நாள் புசிபாலஸ் என்கின்ற குதிரையை மன்னனிடம் விற்பதற்காகக் கொண்டு வர ஏற்பாடு செய்தான். குதிரை அரசன் முன் கொண்டு வரப்பட்டது. அப்போது பிலிப்புடன் அவன் மகனும் இருந்தான். விற்பதற்காகக் கொண்டுவரப்பட்ட குதிரை, திமிரெடுத்து, அங்குமிங்கும், துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தது. அதைப்பார்த்த அரசன், இந்தக் குதிரையை அடக்குகின்ற மாவீரனுக்கு அது பரிசாக அளிக்கப்படும் என்றுரைத்தான். பலபேர் முயற்சித்து தோற்றுப்போனார்கள்.
    இறுதியாக, பிலிப்பின் மகன் எழுந்து சென்று திமிரிக் கொண்டிருந்த அந்தக் குதிரையை பிடித்து சூரியனுக்கு எதிரே நிற்க வைத்தான். குதிரை தன் நிழலைப் பார்த்து, பயந்து சாந்தமானது. அப்போது அரசன் தனது மகனை நோக்கி, மகனேஙு உனது தகுதிக்கேற்ற ஒரு சாம்ராஜ்யத்தை நீ தேர்ந்தெடு. நமது மாசிடோனியா உன் திறமைக்கு முன் மிகச் சிறியது. இதைவிடப் பெரிய சாம்ராஜ்யத்தை நீ கட்டியாழப் போகிறாய்” என்று சொன்னான்.
    அந்தச் சிறுவன் தான் பின்னாளில், அகில உலகத்தையே ஆட்டிப் படைத்த அலெக்சாண்டராக உருவானான் என்றால் குழந்தையின் சுயமதிப்பின் மகிமை எத்தகையது, பெற்றோர்களே!
    பெற்றோர்கள் கருத்தை எழுதும்
    பேனாக்கள் அல்ல பிள்ளைகள்!
    பிள்ளைகள் கருத்தை எழுதும்
    பேனாக்களே பெற்றோர்கள்!
    என்பதை மறந்து விட வேண்டாம்.