– 2012 – March | தன்னம்பிக்கை

Home » 2012 » March (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    கோவை வாசகர் வட்டம்

    நாள் : 18.3.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி
    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்,
    139/86, மேற்கு சம்பந்தம் சாலை,
    ஆர்.எஸ். புரம் (மேற்கு),
    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,
    கோவை.
    தலைப்பு : “நிற்க நேரமில்லை”
    சிறப்புப் பயிற்சியாளர் : திருமதி ஹெலன் மேரி
    சுயமுன்னேற்ற பயிற்சியளர்
    95666 97802
    தொடர்புக்கு:
    தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் – 98422 59335
    செயலாளர் திரு. A.சரவணகுமரன் – 9092092080
    டதஞ திரு. விக்டரி விஸ்வநாதன் 9787744533

    சேலம் வாசகர் வட்டம்

    நாள் : 18.3.2012, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி
    இடம் : லிட்டரரி சொசைட்டி ஹால்
    பேலஸ் தியேட்டர் ரோடு
    சேலம்
    தலைப்பு : ‘வெற்றியின் வாசல்’
    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. மணிகண்டன்,
    சுயமுன்னேற்ற பயிற்சியாளர், கோவை
    போன் : 90036 56567
    தொடர்புக்கு : திரு. ஒட்டக்கூத்தன் – 98421 12666

    தொழுதூர் வாசகர்வட்டம்

    நாள் : 19.3.2012 & 20.3.2012
    நேரம் : காலை 10 மணி
    இடம் : டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன்
    பொறியியல் கல்லூரி,
    தொழுதூர் 606303
    கடலூர் மாவட்டம்
    தலைப்பு : “Total Personality Development Programme”
    பயிற்சியாளர் : பிரம்ம குமாரிகள்
    ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயா அமைப்பு
    தொடர்புக்கு :
    தலைவர் : முனைவர் P. பழனிசாமி – 98420 53919
    ஒருங்கிணைப்பாளர் : திரு.G. சுரேஷ் – 94436 78709

    ஈரோடு வாசகர்வட்டம்

    நாள் : 25.3.2012, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை
    இடம் : மாயா பஜார் அ/இ ஹால்,
    ஞல்ல். உ.ஆ. அலுவலகம் எதிரில்,
    உ.ய.ச. ரோடு, ஈரோடு.
    தலைப்பு : “வெற்றியின் இரகசியங்கள்”
    சிறப்புப் பயிற்சியாளர் : Dr. Jc. சரவணக்குமார்
    திருச்செங்கோடு, தொலைபேசி 9442383833
    தொடர்புக்கு
    தலைவர்: Jc . அ. குப்புசாமி – 98432 69931
    செயலாளர்: Jc. நூர்முகம்மது – 99945 00575
    பொருளாளர் Jc. ந. சையது ஜைனலாபுதீன் – 99942 29080

    வேளாண்மை அன்றும்… இன்றும்… இனியும்…

    நவீன உலகத்தில் அனைவரும் வேகமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறோம். காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு தூங்கும் வரை நம்மை விடுவதில்லை. பொதுவாக நாம் அனைவரும் இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு மாறி விட்டோம். இதில் தற்போது கிராமங்களையும் விட்டு வைப்பதில்லை. கிராமத்தில் இருந்து நகரத்திற்குச் செல்ல வேண்டுமானால் குறைந்தது 1 கிலோ மீட்டர் தூரம் நடந்த பிறகு டவுன் பஸ் படித்து அருகில் உள்ள பெரிய ஊருக்குச் சென்று பின்பு தொலை தூரப் பேருந்து பிடித்து நகரத்திற்குச் செல்வது வழக்கம். இது ஒரு நாள் வேலையாக இருக்கும். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. பல வகையான வாகனங்கள், கையில் எப்போதும் பல்நோக்கு வசதி உள்ள கைபேசி (Cell Phone), உடனுக்குடன் SMS மூலமாக செய்திகள் பரிமாற்றம், Satellite Channel தொலைக்காட்சி என்று தற்போது கிராமங்களிலும் பெரும்பாலான வசதிகள் கிடைக்கப் பெற்றுவிட்டன.
    ஆனால் விவசாயத்தில், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக விளைச்சல், விதை, உரம், பூச்சி மருந்து, புதிய விவசாய உபகரணங்கள் (Farm Machine) அறிமுகப்படுத்தி அதிக விளைச்சல் உற்பத்தி செய்தலில் நாம் பாரம்பரிய கிராமங்களை விட்டுவிட்டோம். பாரம்பரிய விவசாய பழக்கத்தை மறந்துவிட்டோம். 2000 கிலோ பட்ஜெட் விவசாயம், உழுவாமல் பயிர் செய்ய வேண்டும் என்று பலர் இன்னும் பழமையை பேசிக்கொண்டு இருப்பதில் எந்த பயனும் இல்லை.
    நம்முடைய சுகத்திற்கு, எளிமையான வாழ்க்கை முறைக்கு, தொழில் நுட்பம், மருத்துவம், பொறியியல் என அனைத்துத் துறைகளிலும் புதுமையை நாடுகின்ற நாம், ஏன் விவசாயத்தில் மட்டும் புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம்?
    மனிதனின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்யும் எந்த ஒரு பொருளானாலும், விளம்பரத்தின் மூலம் அந்த புதிய தொழில்நுட்பங்களை உடனடியாக மக்களிடம் சென்று சேர்க்கிறார்கள். அதனால் மக்கள் தங்களுடைய வாழ்க்கை முறைக்குத் தேவையான புதிய மாற்றங்களை உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதுவே விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கப்படும் விதைகள், உரங்கள், விவசாய உபகரணங்கள் பயன்பாட்டில் பல எதிர்ப்புகள் வருகின்றன.
    முன்பு ஒரு விவசாயியின் குடும்பத்தில் குறைந்தது 5 முதல் 10 வரை உறுப்பினர்கள் விவசாயத்தை கவனித்து வந்தார்கள். ஒரு வீட்டில் 10 முதல் 20 மாடுகள் வரை இருக்கும். மாட்டுச் சாணம் குப்பைத் தொட்டியில் போட்டு மக்கிய உரம் அந்த வருடத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்குக் கிடைக்கும். வயல்வெளிகளைச் சுற்றி நிறைய மரங்கள் இருக்கும். புங்கம், வேப்பம் போன்ற மரங்களின் தழைகள் நெல் பயிரிடப்படும் சேற்றில் மிதித்து நெல் நடவு செய்வார்கள்.
    இந்த நிலையைத் தற்போதைய விவசாய வல்லுனர்கள் இயற்கை விவசாயம், அங்கக விவசாயம் (Organic Agriculture) என்று பல முறைகளாகக் கூறி வருகிறார்கள். தற்போது இயற்கை விவசாயம் செய்ய வேண்டுமானால், எத்தனை விவசாயிகளிடம் உழவு மாடுகள் உள்ளது. அப்படி மாடுகள் இருந்தால் எத்தனை பேர் மாடுகளை வைத்து ஏர் ஓட்டுகிறார்கள். அப்படியே இருந்தாலும் அத்தனை மாடுகளுக்கும் தேவையான தீவனங்கள் கிடைக்கிறதா? எத்தனை விவசாயிகள் ஏர் ஓட்டுவதற்குத் தயாராக உள்ளார்கள்.
    மாறுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயத்தை மாற்றாவிட்டால், விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாக மாறிவிடும். விவசாயத் தொழில் லாபகரமாக இல்லாமல் போய்விடும். ஒரு காலத்தில் விவசாயம் செய்ய ஆட்களைத் தேட வேண்டிய நிலைக்கு நிச்சயம் செல்ல நேரிடும்.
    இயற்கை வேளாண்மையைத் தவறு என்று சொல்லவில்லை. மேல் சொன்னவாறு விவசாயத்திற்கு மாடுகள், தேவையான அங்கக உரங்கள் இருந்தால் அப்படி விளைவிக்கும் பொருட்களுக்கு உண்மையில் கட்டுபடியான விலை கிடைத்தால், கண்டிப்பாக அனைத்து விவசாயிகளும் இயற்கை வேளாண்மையைச் செய்து அனைத்து பொருட்களுக்கும் செயற்கை உரம் போடாமல், பூச்சி மருந்து அடிக்காமல் கொடுத்திருப்பார்கள்.
    ஆனால் அனைத்துத் துறையிலும் நாம் உபயோகிக்கும் பொருட்களில் மாற்றங்களை சந்தித்துவிட்டு, விவசாயத்தில் மட்டும் இன்னும் பழைய முறையில் செய்யப்படும் உணவுகள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயம்.
    இந்திய மக்கள் தொகை 125 கோடியைத் தொட்டுவிட்டது. 40 கோடி மக்கள் கொண்ட புதியதாக சுதந்திரம் அடைந்த இந்தியா (1947) வேறு. அனைத்து இளைஞர்களையும் விவசாயத் துறையில் இருந்து சாப்ட்வேர் துறைக்கு அனுப்பிவிட்டு வயதான காலத்தில் விவசாய பூமியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் 2012ல் உள்ள விவசாயிகள் உள்ள இந்தியா வேறு. அப்போது, 85 சதவிகிதம் விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்தனர் நம் மக்கள். ஆனால் தற்போது 65 சதவிகித மக்கள் மட்டுமே விவசாயத்தை நம்பி உள்ளனர்.
    இத்தனை மாற்றங்களையும் செய்துவிட்டு நான் இன்னும் பழமையை மட்டுமே விரும்புவேன் என்பதில் எந்த பலனும் இல்லை.
    கிராமத்து குழந்தைகளை காலை எழுந்த உடன் விடிந்தும் விடியாததற்குள் காலை சிற்றுண்டியை வாயில் திணித்து, பெரிய புத்தகப் பொதி மூட்டைகளை முதுகில் ஏற்றி மதிய உணவையும் அதில் வைத்து, எங்கோ தொலைவில் உள்ள ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடிய பள்ளிக்கு பல கிலோ மீட்டர் தூரம் செல்லும் பேருந்தில் ஏற்றி விடுகிறோம். பிறகு பள்ளி முடிந்து, டியூசன் முடித்து பொழுது சாய்ந்த பிறகு பல கிலோ மீட்டர் பேருந்தில் பயணம் செய்து கிராமத்தை அடைகிறார்கள். தினமும் இதே நிலையில் உள்ள பல ஆயிரக்கணக்கான கிராமத்து இளைஞர்களுக்கு விவசாயம் என்றால் என்ன என்று கற்றுத்தர வேளாண்மைக் கல்லூரிகள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் இருக்கும் கிராமத்து இளைஞர்கள் மீண்டும் விவசாயம் செய்ய வருவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது.
    மேலும், கிராமத்து குழந்தைகள் நகரத்துக் குழந்தைகளுக்குச் சமமாக வேண்டும் என்று எண்ணும் கிராமத்து பெற்றோர்கள், உயர்ந்த தியாகத்தின் அடிப்படையில் 1ம் வகுப்பு முதல், தங்கி படிக்கும் (Residential) விடுதிகளில் குழந்தை பருவம் முழுவதையும் பள்ளிக் கூடங்களில் கழிக்க தங்கள் பிள்ளைகளை விடுகின்றனர். இப்படி நகரத்தில் படிக்கும் கிராமத்து குழந்தைகள் பார்க்கும் விவசாயம், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டின் விடுமுறை விவசாயம். அவர்களுக்கு இந்த காலத்து விவசாயத்தில் உள்ள நுணுக்கங்களும், விவசாய முறைகளும் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவதில்லை. விவசாய நிலங்களை பார்க்கும் கண்ணோட்டம் அவர்களுக்கு தெரியாததாகி விடுகிறது.
    தற்போது உள்ள பெரும்பாலான விவசாயிகள், குழந்தை விவசாயத்தை எடுத்துச் செய்யப் போகிறார்கள். அப்படியே விவசாயம் செய்ய நினைத்தாலும் அத்தகைய விவசாயி,தான் பெற்றகஷ்டங்களைத் தான் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போகிறார்கள்.
    ஏன் வேண்டும் இந்த இரசாயன உரங்கள்:
    பயிர்களுக்குத் தேவையான தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் மண்ணிலிருந்து தான் செடிகளுக்கு, அதாவது நாம் பயிரிடும் நெல், மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை போன்ற அனைத்து பயிரினங்களுக்கும் கிடைக்கிறது. நாம் முந்தைய காலங்களில் பயிரிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் குறைந்த அளவே மகசூல் கொடுக்கும் தன்மை கொண்டவையாக இருந்தன. ஏனென்றால் அவை மண்ணிலிருந்து குறைந்த அளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை எடுக்கும் வல்லமை கொண்டவை. இப்படி குறைந்த சத்துக்களை எடுத்துக் கொண்டு குறைந்த அளவே மகசூலை கொடுத்தது. ஆனால் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக ஆரம்பித்த உடன் அனைத்து மக்களுக்கும் உணவு அளிக்க வேண்டிய சூழ்நிலையில், உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டுள்ளோம். இதற்கு ரசாயன முறையில் தயாரிக்கப்படும் உரங்களைச் சத்துக்களாக எடுத்துக் கொண்டு அதிக மகசூலை கொடுக்கக்கூடிய ரகங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
    இந்தியாவின் பசுமை புரட்சி என்று அனைவராலும் இன்று சொல்லப்படுகின்ற சரித்திரத்தைச் சற்று உற்று நோக்கினால், அதிக அளவு ரசாயன உரங்களை உட்கொண்டதன் விளைவால் நெல், கோதுமை போன்ற பயிரினங்கள் அதிக விளைச்சலைக் கொடுத்தது புலப்படும். இத்தகைய பசுமைப்புரட்சி நடைபெறாமல் இருந்திருந்தால் நமது அதிகரித்த உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடிந்திருக்குமா? என்பது கேள்விக்குறிதான்.
    தற்போது இரண்டாவது பசுமைப் புரட்சி நடக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். காரணம், முதல் பசுமைப் புரட்சிக்குப் பின்பு மக்கள் தொகை இரட்டிப்பு அடைந்துவிட்டது. மாறாக விவசாயத்தைத் தொழிலாகச் செய்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது. விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாகி விட்டன. இதற்கிடையில் மக்களுக்கான உணவை உற்பத்தி செய்ய வேண்டுமானால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டியது அவசியம். அதற்குத் தேவை மற்றுமொறு பசுமைப் புரட்சி.
    அத்தகைய இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு நவீன ரசாயண உரங்கள் மட்டுமின்றி வளர்ந்து வரும் புதிய தொழில் நுட்பங்களான உயிரி தொழில் நுட்பம் (Biotechnology), நேனோ தொழில் நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும் அப்போது தான் நாம் எதிர்பார்க்கும் உயர் விளைச்சலைப் பெறமுடியும்.
    இன்னும் இயற்கை வேளாண்மை தான் செய்ய வேண்டும், இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்த உணவைத் தான் பயன்படுத்த வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை ஆனால் இயற்கை வேளாண்மை செய்யத் தேவையான சாணம், இலைகளின் தழைச்சத்து போன்றவை கிடைப்பது அரிதாகிவிட்டது. எனவே அத்தகைய இயற்கை வேளாண்மையிலிருந்து கிடைக்கும் குறைந்த மகசூல் நமது தேவையைப் பூர்த்திசெய்யாது. இத்தகைய மகசூல் இழப்பு, இடு பொருட்களின் அதிக விலை போன்றவற்றை ஈடுசெய்ய அதிக விலை கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து இயற்கை வேளாண்மை முறையில் விவசாயம் செய்யலாம். ஆனால் அத்தகைய சூழ்நிலை தற்போது இல்லை என்பதே உண்மை.
    மேலும் இந்திய நுகர்வோர்களின் பெரும்பான்மையானோர் வறுமைக் கோட்டிற்கும் கீழே இருப்பதால் அதிக விலை கொடுத்து இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்த பொருட்களை வாங்கிப் பயன்படுத்த முடியாது.
    இவ்வளவு பிரச்சனைகள் இருப்பதாலும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று ஏற்றுமதி செய்யவும் ரசாயண உரங்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி உற்பத்தி செய்ய வேண்டிய காலகட்டம் வந்து விட்டதாகவே கருதவேண்டும். இன்னும் இயற்கை வேளாண்மை தான் கை கொடுக்குமென்று நம்பி இருப்பதில் பயனேதும் இல்லை.

    வாடகைத் தாய்

    தெருவோரம் வசித்தாலும் அரண்மனையில் வாழ்ந்தாலும் குடும்பத்திற்கு அழகு பிள்ளைச் செல்வம். மருத்துவத் தொழில்நுட்பம் வளராத காலத்தில் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் கோயில் குளங்களையும் , அரச மரத்தையும் சுற்றி வந்து சாமியிடம் பிள்ளை வரம் கேட்டனர். இன்று நிலைமை மாறிவிட்டது. குழந்தை இல்லை என்றால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை நாடுகின்றனர்.
    குழந்தைப் பேறு இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அல்லது இருவருக்குமோ உள்ள குறைகள் காரணமாக குழந்தைப் பேறு இல்லாத நிலை இருக்கலாம். மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக அத்தகைய குறைகளைச் சரி செய்ய வியக்கத்தகு நவீன சிகிச்சை முறைகள் ஏற்பட்டுள்ளன.
    குழந்தை இல்லாத எண்ணற்ற தம்பதியரின் தலையெழுத்தை மாற்றும் விஞ்ஞான முயற்சியின் காரணமாக விளைந்ததுதான் ‘செயற்கை முறைகருத்தரித்தல்’ என்றழைக்கப்படும் ‘டெஸ்ட் டியூப் பேபி’ சிகிச்சை முறை. இந்த முறையில் கணவனின் விந்துவில் உள்ள வீரியமான உயிரணுவைத் தேர்ந்தெடுத்து மனைவியின் சினைமுட்டையோடு செயற்கையாக டெஸ்ட் டியூபில் சேர்த்துப் பின்னர் மனைவியின் கருப்பையில் வைக்கப்படும். ஆக மனைவியின் கருப்பை நன்றாக இருந்தால் மட்டுமே இந்த முறைசாத்தியப்படும். ஒருவேளை மனைவியின் கருப்பை கருவைத் தாங்கக் கூடிய அளவுக்கு வ|மையானதாக இல்லை என்கிறபட்சத்தில் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு விடையாக வந்திருப்பதுதான் ‘வாடகைத்தாய்’ எனும் முறை.
    ஒரு பெண்ணுக்கு மகப்பேறை அளப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது கர்ப்பப் பை. கருவைத் தாங்கக்கூடிய அளவுக்கு கர்ப்பப் பை வ|மையானதாக இருத்தல் அவசியம். கர்ப்பப் பை பலவீனமாக இருந்தால் இயல்பான மகப்பேறுக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும். மேலும் கர்ப்பப் பையில் கட்டி, புற்றுநோய் தாக்கம், அதிக ரத்தப் போக்கு போன்றபல்வேறு காரணங்களால் கர்ப்பப் பை அகற்றப்படுவதாலும் பிள்ளைப்பேறு இல்லாத நிலை ஏற்படும்.
    இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வாக தோன்றியிருப்பதுதான் ‘வாடகைத் தாய்’ என்றபுதிய முறை, கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கருவை வளர்த்து குழந்தைப் பேறு அளக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள்.
    வாடகைத்தாய் விஷயத்தில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஜஸ்டேஷனல் வாடகைத்தாய். அதாவது தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கணவனின் உயிரணு மற்றும் அவரது மனைவியின் சினைமுட்டையோடு சேர்ந்த கருவை தன் கர்ப்பப் பையில் சுமக்கிறார் வாடகைத்தாய்.
    இரண்டாவது டிரெடிஷனல் வாடகைத்தாய். இந்த முறையில் வாடகைத் தாயாக வரும் பெண் ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். இந்த முறையில் ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தப்படும். அதாவது தம்பதியரில் அந்த மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் சூழ|ல் வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் கருமுட்டையே குழந்தை உருவாக பயன்படுகிறது. மேலை நாடுகளல் மகளுக்காக குழந்தை பெற்றுத் தந்த அம்மாக்களும் உண்டு. அக்கா தங்கைகள் கூட தன் சகோதரிக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுத் தருவதுண்டு. நம் நாட்டில் இத்தகைய முறையினை ஏற்றுக் கொள்வது சற்று கடினம்.
    வேறுவிதமாகச் சொல்வதாக இருந்தால் முதலாவது முறையில் வாடகைத்தாய் தன் கருப்பையை மட்டுமே கொடுக்கிறாள். உயிரணுவும் சினைமுட்டையும் தம்பதியினருடையது. இரண்டாவது முறையில் வாடகைத்தாய் கருப்பையோடு தன் சினைமுட்டையையும் கொடுக்கிறாள். அதாவது தம்பதியினரில் ஒருவரான கணவனின் உயிரணுவும், வாடகைத்தாயின் சினை முட்டையையும் கொண்டு கரு உண்டாகி குழந்தை பெறுவது.
    பிரபல இந்தி நடிகர் அமீர் கானுக்கு 48 வயது. இவரது மனைவி கிரண் ராவுக்கு 38 வயது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறமுடிவு செய்தனர். அதன்படி அந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அமீர்கான் அளத்துள்ள பேட்டியில் ‘கடவுளன் அருள், அறிவிய|ன் அற்புதம், நண்பர்களன் அன்பு, ஆதரவு ஆகியவற்றுக்கு தலை வணங்குகிறோம்’ என்று கூறியுள்ளார்.
    பிள்ளையைப் பெற்ற இளம் பெண்களே வாடகைத் தாயாக இருக்கத் தகுதியானவர்கள். பெரும்பாலும் 35 வயதுக்குள்ளாக இருப்பவர்களே விரும்பி ஏற்கப்படுகின்றனர். அவர்களன் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டு, ரத்தசோகை, புற்றுநோய், காசநோய், பால்வினை நோய் மற்றும் தொற்று நோய் உள்ளட்ட பாதிப்பு இல்லாதவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும்.
    வாடகைத் தாய்களாக இருந்து பிள்ளை பெற்றுக் கொடுக்க சம்மதிக்கும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். இந்தியாவுக்கு மருத்துவ உலா வருவோரில் பலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இங்கிலாந்து, அமெரிக்கா போன்றநாடுகளல் இந்த முறையில் வாடகைத் தாய்களை அமர்த்த அதிகளவு பணம் தேவைப்படுகிறது. குறைந்த பட்சம் சுமார் எட்டு லட்சம் ரூபாய் செலவிட்டாக வேண்டும். இந்தியாவில் இத்தொகையில் பாதி செலவிட்டாலே போதும் அவர்கள் இந்தியாவுக்கு வந்து, வாடகைத் தாய்க்குப் பணம் கொடுத்து மருத்துவமனைக்கும் கட்டணம் செலுத்திவிட முடியும். தமிழகத்தில் வாடகைத் தாய்மார்களுக்கு ஒரு குழந்தைக்கு 3 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது. இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா நகரமாகக் கருதப்படும் பெங்களூரில் கடந்த இரண்டாண்டுகளல் 75 பெண்கள் வாடகைத் தாயார்களாக செயற்பட்டுள்ளனராம்.
    குழந்தையை விரும்பும் தம்பதியினரே, கர்ப்பம் முதல் டெ|வரி வரை வாடகைத்தாயின் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்வர். பிறக்கப்போகும் குழந்தைககு மனநலப் பிரச்சினை மற்றும் உடல் ஊன பிரச்சினை எதுவாக இருந்தாலும் வாடகைத்தாய் பொறுப்பாக மாட்டார். அதற்கும் குழந்தையை விரும்பும் தம்பதியினரே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
    வாடகைத் தாய்மார்கள் கர்ப்பத்தை சுமக்கும் காலத்தில் அவர்களன் வாழ்வில் நிகழும் பல்வேறு சூழல்கள் அவர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். தவறான முடிவெடுத்து குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோமோ என்றமனசஞ்சலம் ஏற்படலாம். அதன் பொருட்டு அவ்வப்போது வாடகைத் தாய்மார்களுக்கு கவுன்ச|ங் அளக்கப்படுகிறது.
    வாடகைத் தாய் முறையிலும் பல சிக்கல்கள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஜப்பானிய தம்பதியர் ஒரு இந்தியப் பெண்ணை வாடகைத் தாயாக்கினர். வாடகைத் தாயின் வயிற்றில் கரு வளர்ந்து கொண்டிருக்கும்போதே ஜப்பானிய தம்பதியர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு அவர்கள் அந்த குழந்தையை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு வரவில்லை. அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.
    தற்போது வாடகைத்தாய் விவகாரங்கள் வெறும் புரிந்துணர்வு அடிப்படையில்தான் நடக்கிறது. பெரும்பாலோர் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களையே வாடகைத் தாயாக ஏற்றுக்கொள்ளத் துணிகிறார்கள். இந்திய மருத்துவத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது அனுமதிக்கப் பட்டுள்ளதே தவிர இதற்கான சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.
    திருமணம் புரியும் தம்பதிகளல் நூற்றுக்குப் பத்து பேர் கருவுறல் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலைமை இருந்தும் கூட இன்னமும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது குறித்த தெளிவான சட்டமும் நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை. எதிர்காலத்தில் வாடகைத்தாய் விவகாரம் பல குழப்பங்களை ஏற்படுத்தும். உதாரணமாக ‘நான் தான் குழந்தையைப் பெற்றுக்கொடுத்தேன். எனவே உங்கள் சொத்தில் பங்கு வேண்டும்’ என்று வாடகைத் தாய் வழக்கு தொடரக் கூடும்.
    யார் யாரெல்லாம் வாடகைத் தாயாக இருக்க முடியும்? பேறு காலத்தில் வாடகைத்தாய் இறந்தால் அவரது குடும்பத்துக்கு யார் இழப்பீடு கொடுப்பது? குழந்தையை ஏற்கத் தம்பதி மறுத்தால் குழந்தையை யார் ஏற்றுக்கொள்வது? இவற்றையெல்லாம் நெறிமுறைப்படுத்த வேண்டும். எனவே சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
    எந்த ஒரு கண்டுபிடிப்பும் யார் கையில் போய்ச் சேருகிறதோ, அதைப் பொறுத்தே அதன் நன்மை தீமைகள் அமைகின்றன. அந்த வகையில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத தம்பதியினருக்கு ஒரு நல்வரமாக அமைந்திருக்கும் இந்த மருத்துவ கண்டுபிடிப்பிலும் நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே உள்ளன. தீமைகளை மனதில் கொண்டு இதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என முயல்வதை விட, நன்மைகளை கருத்தில் கொண்டு வாடகைத் தாய் முறையினை சரியான சட்ட திட்டங்களுடன் முறைப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
    இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்கவே முடியாதது ‘அம்மா’ என்றஉறவுதான் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அம்மா என்றதொப்புள் கொடி பந்தத்தைக் கூட வாங்கிவிடலாம் என்றநிலைக்கு காலம் மாறிவிட்டது. வாடகைத் தாய் விஷயம் ஒரு மருத்துவ முன்னேற்றம் என்றாலும் கூட ஆழமாக வேரூன்றி நிற்கும் கலாச்சார பண்பாட்டின் காரணமாக இம்முறைஇன்னும் அனைவராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
    ரத்ததானம், உறுப்புதானம் செய்வதுபோல் வாடகைத் தாயாக செயல்படுவதும் ஒரு சேவைதான். குழந்தை பாக்கியம் இல்லாமல் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான தம்பதியரின் ஏக்கத்தை தீர்த்து, பாதிப்புடைய ஒரு பெண்ணுக்கு வாழ்வளக்கும் புனிதமான காரியத்தைத்தான் வாடகைத் தாய்மார்கள் செய்கிறார்கள் என்று எண்ண வேண்டும்.

    டென்சன் படுத்தாதீங்க!

    “டென்சன் படுத்தாதீங்க” என்ற இந்த இரு சொற்களும் இன்று பெரும்பாலோரால் தினமும் பலமுறை உபயோகிக்கப்படுகிறது. முன்பு “சும்மா” என்ற சொல்லை அடிக்கடி சொன்னதைப் போல, என்று என் நண்பரிடம் கூறினால், அவர் ஐயா “என்றைக்குமே தமிழில் மிக அதிகமாக உபயோகிக்கப்படும் சொல் “சும்மா” தான். அதற்கடுத்த இடத்தை வேண்டுமானால் “டென்சன்” என்ற சொல் பிடித்திருக்கலாம்” என்றார்.
    இளைஞர்கள்:
    அவரே காரணமும் சொன்னார். இந்தியாவில் இளைஞர்கள் சுமார் 60% எனச் செய்திகள் கூறுகின்றன. இதில் மாணவர்கள் சுமார் 20% என்பது தோராயமான கணக்கு. இளைஞர்கள் பெரும்பாலும் டென்சன் ஆவதும், அந்தச் சொல்லை அடிக்கடி உபயோகிப்பதும் இயல்பு என்பது நாம் அறிந்த ஒன்று.
    ஆனால், சமீப காலமாகப் பள்ளி மாணவர்கள், குறிப்பாக கிண்டர் கார்டன் (KG) மற்றும் ஆரம்பப் பள்ளியில் பயில்பவர்களும் ‘டென்சன்’ என்ற சொல்லை அதிகம் உபயோகிப்பதை, ஒவ்வொரு வீட்டிலும் தினமும் கேட்கிறோம். ஏன்?
    டென்சன் என்றால் என்ன?
    உதாரணத்துடன் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். இன்று வாகனங்கள் பெருகிவிட்டதால், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த, பெரும்பாலும் எல்லா நகரங்களிலும் போக்குவரத்து சிக்னல்கள் (Traffic Signals) அமைத்திருக்கிறோம்.
    மின் தடையில்லாமல் அந்தக் கருவிகள் இயங்கும் வரை, வாகன ஓட்டிகள் சரியாகச் செல்கிறார்கள். திடீரென மின்தடை ஏற்பட்டு, அந்தக் கருவிகள் இயக்கத்தை நிறுத்திய, அடுத்த நொடியே எல்லாப் பக்கங்களிலும் காத்திருந்தவர்கள், முந்திச் செல்வதும் அதனால் போக்குவரத்து நெரிசல் (Traffic Jam) உருவாவதும் அன்றாடம் காணும் காட்சியாகிவிட்டது.
    மேலும் ஓர் உதாரணம்:
    ரயில்வே கேட் மூடியிருந்தால், இரு புறமும் வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும். ரயில் சென்ற அடுத்த நொடியே, இரு புறமும் கேட் அருகில் வாகனங்கள், எதிர் பக்கத்திலுள்ள வாகனங்கள் மீது மோதுவதற்குத் தயார் நிலையில் நிற்பது போன்ற காட்சியையும் நாம் பார்த்திருக்கிறோம்.
    ஒழுங்காக, இயல்பாக ஒவ்வொன்றாகச் செய்வதை விடுத்து, பலவற்றை ஒரே சமயத்தில் செய்ய முயன்றால், அச்செயல்கள் முழுமையான பலனைத் தராது.
    மோதல்:
    அதேபோல், தனக்குள்ளே உருவாகும், அல்லது நினைக்கும் பல எண்ணங்கள் ஒரே சமயத்தில் மேலே வந்து ஒன்றுடன் ஒன்று மோதும் (Clash) போது உண்டாகும் மன நிலை தான் டென்சன்.
    இதன் அர்த்தம் தெரியாமலேயே இன்று சிறு குழந்தைகளும் வீடுகளில் “என்னை டென்சன் படுத்தாதீங்க” “எனக்கு டென்சனா இருக்குது” என்ற சொற்களை அடிக்கடி உபயோகிக்கின்றனர்.
    பெற்றோர் நிலை:
    இவைகளைக் கேட்கும் பெற்றோர் பெரும்பாலும், இந்தச் சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு சிலர் மற்றவர்களிடம் பெருமையாகத் தம் குழந்தைகள் இது மாதிரி கூறுகின்றனர் என்றும் சொல்லி மகிழ்கின்றனர்.
    இது தவறான போக்கு.
    வருங்காலத்தில் நல்ல வெற்றியாளர்களை, சாதனையாளர்களை உருவாக்குவதில் அந்தப் பருவத்தில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. ஒரு குழந்தை இதுபோல் சொன்னால், உடனே அதை அமைதிப்படுத்தி எதனால் இது மாதிரி பேசுகிறது என ஆராய்ந்து, இதுபோல் பேசக் கூடாது எனப் பொறுமையாகக் கூற வேண்டும்.
    தொடர் கதை:
    ஆனால், பெரும்பாலான பெற்றோர்களே பதட்டப்பட்டு டென்சன் ஆகிவிடுவதால், அவர்களும் குழந்தைகளுடன் போட்டி போடுகின்றனர். இளம் வயதில் மனதில் பதியும் இந்த எண்ணம் உயர் கல்விப் பருவம், பொருளீட்டப் பணியாற்றும் பருவம் எனத் தொடர்ந்து, இல்லறத்திலும் நுழைந்து தனக்கென முக்கியமான இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது.
    ஸ்ட்ரெஸ்:
    எதனால் டென்சன் என்று கூறப்படும் மன விறைப்புத் தன்மை வருகிறது என்பதைக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மன அழுத்தம் (Stress) என்பது டென்சனைத் தொடர்ந்து வருவது. டென்சன் என்ற முதல் படியைச் சரிசெய்து விட்டால், அடுத்தபடியான ஸ்ட்ரெஸ்-க்குச் செல்வதைத் தவிர்த்துவிடலாம்.
    ஆனால், பெரும்பாலானவர்கள் செய்வது 2ம் படியை சுத்தம் செய்து முதல் படியில் பாதுகாப்பாக வைத்துக் கொள்கின்றனர்.
    சிறு உதாரணம் மூலம் தெளிவு பெறலாம்.
    குப்பை கதை:
    சமீபத்தில் பழநிக்கு பாத யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பழநியில் அடிவாரத்தில் கடைகளைச் சுத்தம் செய்து, குப்பைகளை நடுரோட்டில் ஒவ்வொரு கடை முன்பும் போட்டு வைத்திருந்தனர். அங்கு மட்டுமில்லை. தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் இதே நிலை தான் என்பதை உறுதியாகக் கூறலாம்.
    அவர்கள் அதுமாதிரி செய்வது, நம்பிக்கையின் அடிப்படையில் என்று கூடச் சொல்லலாம். உள்ளாட்சிப் பணியாளர்கள் வந்து அவற்றைச் சுத்தம் செய்து விடுவார்கள் என்று. ஆனால், அவர்கள் என்றைக்கு வந்து, எப்போது சுத்தம் செய்வது?
    ஒருநாள், அவர்கள் வரத் தாமதமானால், வராவிட்டால் அந்தச் சாலையில் செல்லும் வாகனங்களால், அந்தக் குப்பைகள் மீண்டும் அவர்களது கடை முன்பே வந்து சேர்ந்து விடும். நடுரோட்டில் குப்பையைக் குவிக்காமல், சாலை ஓரத்தில், கடை அருகில் வைத்தால், சாலையும் சுத்தமாக இருக்கும், வாடிக்கையாளர்களும், முகம் சுளிக்க மாட்டார்கள்.
    துணி முறுக்கு:
    இப்போது முதல் படி, அடுத்த படி இரண்டும் புரிந்திருக்கும்.
    பல எண்ணங்களால், சிந்தனை தடைப்பட்டு ஜீவகாந்தம் முறுக்கேறிய நிலையில் மன அலைச் சுழல் வேகம் அதிகரித்துவிடும். தொடர்ந்து பதட்டம் வந்து, மன இறுக்கத்தை (Stress) உண்டாக்கிவிடும்.
    துணி ஒன்றை இருபுறமும் பிடித்து, இருவர் முறுக்கினால் துணியின் நீளம் சிறிது குறையும். விடும்போது சில இடங்களில் இந்த முறுக்கத்தால் நூல் சேதப்பட்டிருக்கும்; அல்லது தன் இயல்பு நிலையை இழந்திருக்கும்.
    குழந்தைகள்:
    அதுபோல் தான், குழந்தைகள் டென்சன் என்று கூறி, தொடர்ச்சியாகத் தான் விரும்பியதைப் பெறவும், தனது எண்ணப்படி மற்றவர்கள் செயல்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது. பெற்றோர்கள் அப்படியே செயல்படும் போது, குழந்தை மனதில் நன்றாகப் பதிவாகிவிடுகிறது இது.
    எதைச் சாதிக்க வேண்டுமென்றாலும் ‘டென்சன்’ என்ற சொல்லை உபயோகிக்கிறது. கடைசியில் அதை விட முடியாமல், வாலிபப் பருவத்தில் தன் ஆரோக்கியத்தைத் தொலைத்து, மன அமைதியை இழந்து பதட்டமாகவே வாழும் நிலை உண்டாக இது அடிப்படையாக அமைந்து விடுகிறது.
    இதிலிருந்து விடுபட வழி உண்டா? காத்திருங்கள்.

    ஒரு கப் காபி சாப்பிடலாமா..?

    மேயச்செல்லும் மாடு தன் கொம்பில்
    வைக்கோலைக் கட்டிச் செல்வதில்லை
    ஆனால் மனிதன் மட்டும் எதிர்காலம்
    குறித்த அச்சத்திலேயே தன் வாழ்நாளில்
    பாதியைத் தொலைத்துவிடுகிறான்.
    எதிர்கால சொர்க்கத்தை நினைத்துக்
    கொண்டே, இன்றைய நாளை
    நரகமாக உருவாக்கி கொள்கிறான்.
    இன்றைய ஒவ்வொரு நாளையும்,
    சுகமானதாக கருதி உழைத்தாலே
    போதும், எதிர்காலம் கண்டிப்பாக
    சொர்கமாகத்தான் இருக்கும்.

    காலத்தின் மாற்றத்தால் சில சமூக நியதிகளுக்கு உட்பட்டு நாம் அனைவரும் ஓயாது உழைத்துக் கொண்டே இருக்கிறோம். வெற்றியின் அளவுகோல்களும் விருப்பத்தின் அளவுகோல்களும் மாறிவிட்டபின் அதற்கேற்றாற் போல உழைக்கவும் கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம்.
    சக மனிதன் மீதான பரிவும், ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி, சுயநலச் சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது, இத்தகைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன. மேலதிகாரிகளன் கெடுபிடிகளால் தொல்லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க்கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உருவாகும் மன அழுத்தம், என எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    இன்றைய அவசரயுகத்தில் அதிகாரத்தில் இருப்பவரில் இருந்து அடுத்த வேளை உணவுக்கு வழியற்றவர் வரை பாகுபாடில்லாமல் எல்லோரையும் பாதித்திருப்பது இந்த மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் அல்லது மன இறுக்கம்.
    மனிதனின் மன நலத்தில் மட்டுமல்ல, உடல் நலத்திலும் ஏற்படும் பெரும்பான்மையான பாதிப்புகளுக்கு ஆரம்பப் புள்ள இந்த மன உளைச்சல்தான். தூக்கமின்மை, தலைவலி, உடல்சோர்வு, இரத்த கொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு, நரம்புத்தளர்ச்சி, சரும நோய்கள், அஜீரணம், மலச்சிக்கல்….பெண்களாய் இருந்தால் மாதவிலக்கு பிரச்சினைகள், என பட்டியல் நீளும்….புறவியல் ரீதியாக பதற்றம், கவனமின்மை, பயம் போன்றவற்றை உண்டாக்கும்.
    அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல்பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, மற்றும் சிந்தனைகளனால் வருவது. நேர்மறை சிந்தனை உள்ளவர்கள் எல்லாவற்றையும் நல்ல விதமாகப் பார்க்கிறார்கள். உதாரணமாக அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால், அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய அளவுக்கு மனதை இலகுவாக வைத்திருப்பது. .இப்படியில்லாமல் “இந்த வேலை எனக்குப் பிடிக்கவேயில்லை..’ அல்லது “என்னை யாருக்கும் பிடிக்கவில்லை’ இது போன்ற எதிர்மறை சிந்தனைகள் மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்கிறது.
    சொர்க்கம்! நரகம்! இரண்டும் எங்கோ இல்லை …நம் நேர்மறை, எதிர்மறைஎண்ணங்களாலேயே இவ்விரண்டும் தீர்மானிக்கப்படுகின்றன. இதோடு அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாவதைப் போல, மனிதனின் இயல்பை மீறிய தேவைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், ஈடுபாடுகள், நிர்பந்தங்கள், வேலைகள் இவையே மன அழுத்தத்திற்கும், உளைச்சலுக்கும் காரணமாகின்றன.
    என்றோ படித்த ஒரு உண்மை நிகழ்ச்சி , இந்த இடத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது… வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது, ஒரு பெரிய கூஜாவில் காபியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ள, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், நல்ல வேலைப்பாடுகளுடனும், சிலவை சாதாரணமாகவும் பலவிதங்களல் இருந்தன.
    பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார். எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள் “நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளல் காபியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவை பட்டிருக்கின்றன. அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினைகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம். என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காபி தானே தவிர, கோப்பையல்ல.
    ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள். இப்பொழுது, வாழ்க்கை என்பதை காபி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது. பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால் காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம் என்று அவர் மன அழுத்தத்தின் காரணத்தை சொல்லி முடித்தார்.
    “கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்,தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன”ஆனால் மனிதன் மட்டும் கடவுளையோ …இன்னும் யார் யாரையோ நம்பியே வாழ்கிறான் …தன்னைத்தவிர!. இந்த கோப்பையில் காப்பியை ஊற்றிக் கொண்டால் காப்பி நல்ல இருக்கும் என்று கோப்பையின் மீது நம்பிக்கை கொண்டது மாதிரி.
    ஆசை அவனை ஆட்டிவைக்கிறது. ஆசையே அழிவிற்கு காரணம் என்றார் புத்தர். ஆனால் இன்றைக்கு அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்கள் பெரியவர்கள். மனிதன் எட்ட வேண்டிய குறிக்கோளை தான் இவர்கள் ஆசை என்று சொல்லுகிறார்கள். குறிக்கோளுக்கும் ஆசைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. குறிக்கோள் நேர்வழியில் நம்மை நெறிபடுத்தும். ஆசை, குறுக்கு வழியில் செல்ல வழி காட்டும். மன அழுத்தத்திற்கு ஆசையும் ஒரு முக்கிய காரணம் தான்.
    “மேயச்செல்லும் மாடு தன் கொம்பில் வைக்கோலைக் கட்டிச் செல்வதில்லை” ஆனால் மனிதன் மட்டும் எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே தன் வாழ்நாளல் பாதியைத் தொலைத்துவிடுகிறான். எதிர்கால சொர்க்கத்தை நினைத்துக் கொண்டே, இன்றைய நாளை நரகமாக உருவாக்கி கொள்கிறான். இன்றைய ஒவ்வொரு நாளையும், சுகமானதாக கருதி உழைத்தாலே போதும், எதிர்காலம் கண்டிப்பாக சொர்கமாகத்தான் இருக்கும்.
    மனம் அமைதி யாயிருக்கும் நேரத்தில், எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலைகளலும் சரியான முடிவினை எடுக்கும் தீர்க்கமான மன நிலை சாத்தியமாகும். அழுத்தமில்லாத மனமே, சாதிக்கும் வன்மையை உடலுக்கு தருகிறது. முடிவாக நான் சொல்ல வருவது இதைத்தான்… நீங்கள் இப்போது எந்த நிலையில் இருந்தாலும் சரி..வாழ்வது சுகம் என்று எண்ணுங்கள். மனம் ஆரோக்கியமாக இருக்கும். அதுவே உங்களை நல்வழி படுத்தும். இப்போது கையில் கோப்பையை எடுங்கள். கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காபியின் சுவையை அனுபவியுங்கள்.

    Be Cool… ஆல் ஈஸ் வெல்…

    நானாக இருந்திருந்தால் அவர்கள் செய்ததை விட இன்னும் சிறப்பாக செய்திருப்பேன்; நானாக இருந்திருந்தால் இன்னும் வேகமாக முடித்திருப்பேன் என்று ஒரு சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ‘இந்த நானாக இருந்திருந்தால்’ என்பன போன்ற வார்த்தைகள் சொல்பவர்களுக்கு வேண்டுமானால் சிறப்பு சேர்க்கும். இதனால் பாதிக்கப்படுபவர்களை ‘அவர்களாக இருந்திருந்தால்’ என்ன சமாதானம் செய்வார்கள். எல்லோருக்கும் எல்லா விதமான திறமைகளும் ஒன்றாக இருப்பதில்லை. திறமை வாய்க்கப்பெற்றவர்கள் தன் திறமைகளை மேலும் மேம்படுத்திக் கொண்டு செயல்களால் மற்றவர்களையும் பெருமைபடச் செய்ய வேண்டும்.
    திறமையால் கிடைக்கப் பெறும் புகழை மனதிற்குள் ஏற்றி ஆற்றலை அதிகப்படுத்த வேண்டுமேயன்றி, அப்புகழை தலைக்கேற்றி தலைக்கனத்தால் மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளைப் பேசக்கூடாது. ஒருவர் தமது தன்னம்பிக்கையால் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதால் பெரும்பாலானவர்கள் நன்மை பெறமுடியும்.
    “மன்னன் ஒருவன் தனது குதிரைப் படையுடன் ஒரு மிகப்பெரிய பாலைவனத்தைக் கடந்து எதிரி நாட்டிற்குச் சென்று போரிட்டு வெற்றி வாகை சூடி தனது நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான். செல்லும் பொழுது, அனைவரும் போரிட வேண்டும், வெற்றி பெறவேண்டும் என்ற சிந்தனையிலேயே சென்றதால் பாலைவனத்தைக் கடந்து சென்றது பெரிய விசயமாகத் தெரியவில்லை. போர் முடித்து தனது நாட்டிற்கு வர இன்னும் பாதியளவு தூரம் இருக்கும் பொழுது, அனைத்து வீரர்களுக்கும் தாங்க முடியாத தண்ணீர் தாகம். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தண்ணீர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இந்த நிலையிலேயே சென்றால் உயிர் மிஞ்சாது என்றநிலை. மன்னன் தனது படை வீரர்களிடம் தண்ணீர் இருக்குமிடம் எனக்குத் தெரியும், அனைவரும் வேகமாக படைகளைக் கிளப்புங்கள் என்றார். அதைக் கேட்டதும் அனைவரும் உற்சாகத்துடன் மன்னனை வேகமாக பின்தொடர்ந்தனர். இன்னும் கொஞ்சம் தூரம் என்று கூறிக்கொண்டே மன்னனும் வேகமாக முன்னோக்கிச் செல்ல, வீரர்களும் பின்தொடர்ந்தார்கள். இறுதியில், தனது நாட்டை வேகமாக வந்தடைந்தார்கள். மன்னனது நம்பிக்கை வார்த்தையால் அனைத்து வீரர்களும் மனந்தளராமல் நம்பிக்கையுடன் படைகளைக் கிளப்ப, நாடு வந்து சேர்ந்தனர்”. இது போன்றநம்பிக்கை வார்த்தைகள் மரணத்தின் விளிம்பிற்குச் செல்பவர்களுக்கும் கூட தைரியத்தை வரவழைக்கும்.
    நான் எதையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன், எதுவாயினும் நேருக்கு நேர் பேசி விடுவேன்’ என்பவர்கள், அறிவை பயன்படுத்தியாவது பேச வேண்டியதை மட்டும் பேச வேண்டும். ஒருவர் வேண்டும் என கேட்பதை கொடுக்க முடியா விட்டாலும், வேண்டாமென ஒதுக்குவதை திணிக்காமல் இருக்கலாம். கோபங்கொண்டு எடுக்கும் முடிவுகளாலும், ஆத்திரமான வார்த்தைகளாலும் கடத்தப்படும் நொடிப்பொழுது நிமிடங்கள், காலம் முழுவதும் மாற்ற முடியாத வடுக்களை ஏற்படுத்திவிடும். சாதாரணமானவர்களின் வார்த்தைகளை விட, அன்பானவர்களின் கடுமையான வார்த்தைகளால் ஏற்படும் வலிகளுக்கு மருந்துகள் கிடையாது.
    கோபத்தின் விளைவைத் தெரிவித்த மொபைல் குறுஞ்செய்தியொன்று, “தந்தை தனது புதிய காரை தண்ணீர் விட்டுத் துடைத்துக் கொண்டிருந்தார். காரின் பின்பக்கமாக உட்கார்ந்திருந்த மகன் கார் சாவியை வைத்துக் கொண்டு கீறல் செய்து கொண்டிருந்தான். அதைப்பார்த்த தந்தை கோபத்தால், பக்கத்திலிருந்த சுத்தியலை எடுத்து ஆத்திரத்துடன் குழந்தையின் கை மேல் வீச, குழந்தை வலியால் துடித்துக் கதறினான். அவனை காரிலேயே அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார் தந்தை. முதலுதவி செய்த மருத்துவர், குழந்தையின் பிஞ்சு விரல் நசுங்கிவிட்டது, விரலை எடுக்க வேண்டும் என்று கூறி மேற்கொண்டு சிகிச்சை அளித்தார். சிகிச்சை முடிந்து காரில் வீட்டிற்குச் செல்ல வந்த தந்தைக்கு காரைப் பார்த்த பொழுது, அடக்க முடியாத கண்ணீர். மகன் தனது காரின் மேல் எழுதிய கிறுக்கல் ‘ஐ லவ் மை டாடி’Д.
    எனது நண்பர் எழுதிய பொழுது போக்குக் கவிதை ஒன்று,
    எதை எதையோ
    எழுத வேண்டும் என்று
    ஆசைப்பட்டேன்
    எதை எழுதுவதென்றே
    தெரியாமல்
    இதை எழுதுகிறேன்Ð
    இப்படித்தான் போகிறது பெரும்பாலானவர்களது வாழ்க்கையும். சிந்திக்கும் திறன் அனைவருக்கும் உள்ளது. சுயமாக சிந்தித்து, நல்லனவற்றைத் தேர்ந்து, அதன் வழியில் நடந்தால் அனைத்தும் நலமாக அமையும். ‘Be Cool; All is Well’.

    வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

    எல்லோரும் தம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு நடப்பதில்லையே. ஒரு சிலர் தான் வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்கிறார்கள். சாதனையாளர்களாகிறார்கள். வாழ்வில் பெயரும், புகழும் பெறுகிறார்கள்.
    பலர் வெற்றி பெற முடியாமல் தோல்வியில் துவண்டு போகிறார்கள். நொந்து நூலாகி விரக்தியின் காரணமாகத் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். ஏன் இந்த நிலை. கருணையுடைய கடவுள் ஒருசிலருக்கு மட்டும் வெற்றியைத் தந்துவிட்டு, மற்றவர்களிடம் ஓர வஞ்சனையுடன் நடந்து கொள்கிறானா? இல்லையேÐ
    வெற்றி பெற முடியாமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், வெற்றி பெறுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு. அதுதான் உழைப்பு, மன உறுதி, விடாமுயற்சி. இக்கட்டுரையில் வெற்றிக்கான பல படிக்கட்டுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
    கல்வி பயிலும் மாணவன், நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கினால், விரும்பிய கல்லூரியில் சேர்ந்து, விரும்பிய பாடத்தை எடுத்துப் படிக்கலாம். யாரையும் சிபாரிசுக்கென்று அணுகி அலையத் தேவையில்லை. அப்படி மதிப்பெண்கள் பெற முடியாதவர்கள் தான் கிடைத்த கல்லூரி, கிடைத்த பாடம் என்று சேர்ந்து கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகிறார்கள்.
    நாம் செல்ல வேண்டிய பாதையைத் தேர்ந்தெடுப்பது நமது பொறுப்பு. அப்பாதை இரண்டாகப் பிரிகிறது என்று வைத்துக்கொள்வோம். வலப்புறம் திரும்பி நடந்தால் சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் போகப்போக அந்தப் பாதையில் பயணிப்பது உற்சாகமாவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்
    இன்னொரு பாதை இடப்புறமாகப் பிரிகிறது. இந்தப்பாதையில் சென்றால் ஆரம்பத்தில் மகிழ்ச்சி தருவதாகத் தோன்றினாலும், பின்னால் போகப்போகத் துன்பத்தைத் தருவதாக அமைகிறது. இதில் எந்தப் பாதையை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து நமது வெற்றியும், தோல்வியும் அமைகிறது.
    வலப்புறப் பாதையானது உழைப்பு. இடப்புறப் பாதை என்பது சோம்பல், ஆர்வமின்மை என்பதாய் வைத்துக்கொள்வோம். இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கே எது சரி என்று புலப்படும். விடாமுயற்சிக்குத் திடமான, உறுதியான மனம் தேவை. நாம் மேற்கொள்ளும் பணிக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளையும், சிரமங்களையும், சிக்கல்களையும் சலிப்பு, சிறுசிறு பிரச்சனைகளையும் இவை எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு வெற்றி காண வேண்டும் என்று ஒரே எண்ணத்துடன், முனைப்புடன், நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
    இடையில் ஏற்படக்கூடிய தடங்கல்களைக் கண்டு தளராத மனம், சலிப்படையாத உள்ளம், எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்ற நம்பிக்கை, தீராத பிரச்சனை எதுவுமே கிடையாது. எல்லாமே நமது மனப்பான்மையைப் பொறுத்தது என்பதைப் புரிந்து கொண்டு வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
    எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்
    என்று நமக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார் வள்ளுவர். நம்பினோர் கெடுவதில்லை. எண்ணம்போல வாழ்வு. முயற்சி தம் மெய்வருத்தக் கூலி தரும் என்றெல்லாம் ஆன்றோர் சொல்லி வைத்திருப்பது இதன் அடிப்படையில் தான்.
    ஒருமுறை, இருமுறை என்று முயன்றுவிட்டு, வெற்றி கிட்டவில்லையே என்று துவண்டு போவோரே பலர். வெற்றி கிட்டும் வரை விடாது முயற்சிப்பவனே பலன் பெறுகிறான்.
    நான்கு இடங்களில் கிணறு தோண்டுவதைவிட, ஒரு இடத்தில் ஆழமாகத் தோண்டினால் தண்ணீர் கிடைக்குமன்றோÐ அதுபோல நம் முயற்சியை ஒருமுகப்படுத்தித் தொடர்ந்து முயன்றோமானால் வெற்றி பெறுவது நிச்சயம்.
    அதற்கான தாரக மந்திரம் இதுதான் – உழைப்பு, விடாமுயற்சி, குறிக்கோள், தன்னம்பிக்கை. செம்மையான திட்டம் வேண்டும். எதனை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நன்கு திட்டமிட்டுச் செயல்படும்போது, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இடையே ஏற்படக் கூடிய இடையூறுகளை எப்படிக் களைவது என்று ஆராய்ந்து, தேவையானால் வழிமுறைகளை மாற்றிக்கொண்டு, தொடர்ந்து முயன்றால் வெற்றிதான்.
    விளையாட்டுகளில் தடை ஓட்டம் என்ற ஒன்று இருக்கிறது (ஏன்ழ்க்ப்ங்ள் தஹஸ்ரீங்). இடையிடையே உள்ள பல தடைகளைத் தாண்டிக் குதித்துத் தான் வெற்றிக்கம்பத்தை எட்ட வேண்டும். 10, 15 பேர் பங்கு பெற்றாலும் ஓரிருவரே இறுதியில் வெற்றி பெறுகிறார்கள். இடையே சோர்ந்து போய் விலகுபவர்களும் உண்டு. கடைசியாக வெற்றிக்கம்பத்தைத் தொடும்போது தோல்வியுறுபவர்களும் உண்டு. தளரா உறுதியுடன், கோப்பையைப் பெற்றே தீர்வது என்ற உறுதியுடன் பெறுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    ஏகலைவன் துரோணரிடம் சென்று வில் வித்தையைக் கற்றுத் தருமாறு பணிவுடன் கோரினார். ஆனால், அவர் மறுத்துவிட்டார். ஏகலைவன் மனம் சோரவில்லை. துரோணரைப் போல ஒரு பதுமையைச் செய்து, அச்சிலையையே தனது மானசீகக் குருவாகக்கொண்டு வில் வித்தை பயின்றான். கடைசியில் அவனது இடையறாத முயற்சி, பயிற்சி அவனை அர்ஜுனனுக்கு சமமான வில்லாற்றல் மிக்க வீரனாக ஆக்கியது என்பது மகாபாரதக்கதை.
    சரியான திட்டம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. நமது இலக்கை முதலில் நிர்ணயம் செய்துகொண்டு, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுத்துவோமானால் நம் எண்ணம் இறுதியில் பயனைத்தரும் என்பதற்கு மேற்சொன்ன இரண்டு புராணக்கதைகளுமே தக்க சான்றாகும்.
    இல்லாத ஒன்றைக் குறித்து வருந்துவதைவிட, இருக்கின்ற ஒன்றை வைத்து, கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, செம்மையாகத் திட்டமிட்டு, நிறைந்த வாழ்க்கை வாழலாமே. முயன்றால் முடியாததொன்றில்லை.
    பெருமைக்குரிய நமது முன்னால் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம் பிறந்தது சின்னஞ்சிறு ஊர். எளிமையான குடும்பம். சாதாரண சூழலில் கிராமத்தில் படிப்பு. செல்வச் செழிப்போ, வசதி வாய்ப்போ இல்லை. ஆனால் அவரது கடின உழைப்பும், விடாமுயற்சியும், ஆர்வமும், தளராத மனமும், சாதிக்க வேண்டும் என்ற முனைப்பும் அவரைச் சிகரத்தை எட்ட வைத்தது. அவரது உறுதிக்கும், உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கடவுளும் துணையாக நின்றிருக்கிறார் என்பது உண்மையல்லவா.
    மதி இருந்தால்
    விதி என்ன செய்யும்?
    வெற்றி பெறாதவர்கள் தான் விதியின் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ள முயல்கிறார்கள். பிரச்சனையே இல்லாத வாழ்க்கை இல்லை. ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாவது சிலரது சோகம். பிரச்சனையைக் கண்டு துவளாமல், அதனை எப்படிச் சமாளிப்பது என்று தைரியமாக எதிர்கொள்ளும்போது, அமைதியாக சிந்திக்கும் போது வழி பிறக்கிறது. பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெற்ற சாதனையாளர்களின் பட்டியல் நமக்கு ஒரு பாடமாக அமையட்டும்.

    அமெரிக்க தத்துவஞானி திரு. பிராண்ட் ரயஸியின் “எம்பவர் மீ ஆன் லைன்” என்ற நூலில் வெற்றிக்கான பதினெட்டுப் படிக்கட்டுகளைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றை நாமும் பின்பற்றி வெற்றி பெறலாமே.
    1. முதலில் பெரிதாகக் கனவு காணுங்கள்.
    2. வழி நடத்தும் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். எப்படிச் செய்ய விரும்புகிறீர்கள். அந்த லட்சியக் கனவு நிறைவேறுவதற்கான வழிவகை என்ன? என்பதை நன்கு தீர்மானித்துச் செயல்படுங்கள். ஒரு வருடத்தில் நீங்கள் அடைய வேண்டிய பத்து லட்சியங்களைக் குறித்து வைத்துக்கொண்டு, அதனை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முயலுங்கள்.
    3. நீங்கள் உங்களைச் சுயதொழில் முனைவோராக (நங்ப்ச்-ங்ம்ல்ப்ர்ஹ்ங்ழ்) நினைத்துக் கொள்ளுங்கள்.
    4. நீங்கள் செய்யும் வேலையைப் பெரிதும் நேசியுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலை எது என்பதைத் தீர்மானித்து, அதில் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
    5. எந்த வேலையையும் மிகவும் நேர்த்தியாக, சிறப்பாகச் செய்ய முயலுங்கள். தொழில்நுட்பம் பற்றிச் சிந்தித்தால் இன்னும் வளர்ச்சியைக் காண்பீர்கள்.
    6. கடின உழைப்பே உங்கள் உயிர்மூச்சாக இருக்கட்டும். முன்னேறும் வரை சோர்வுக்குச் சற்றேனும் இடம் தராதீர்கள்.
    7. தொடர்ந்து முன்னேற்றத்தின் ஏணிப்படிக்கட்டுகளில் ஏறிச்செல்லுங்கள். மேன்மேலும் அந்தத் தொழிலை எப்படித் திறம்பட வளர்த்துக் கொள்வது என்பதை அறிந்து செயல்படுங்கள். மேன்மேலும் கற்றுக்கொள்பவராக, அதில் முழுமையாக உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.
    தினமும் ஒருமணி நேரமாவது உங்கள் துறை சம்பந்தப்பட்டவரைப் பற்றி படியுங்கள். மேன்மேலும் அது சம்பந்தமான பலப்பல விஷயங்களையும், யுக்திகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
    8. உங்களது ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் சேமியுங்கள் ‘நஹஸ்ங் ரட்ண்ப்ங் வர்ன் நல்ங்ய்க்’ என்பதை உங்களது தாரக மந்திரமாகக் கொள்ளவும். அதற்குமேல் மீதியுள்ள சம்பளத்தில் செலவழியுங்கள்.
    9. உங்களது தொழில் அல்லது வியாபாரத்தின் முழுநுணுக்கங்களையும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள். இதுபோட்டிகள் நிறைந்த உலகம். போட்டியைச் சமாளிப்பதற்கேற்ப உங்கள் தொழில் அல்லது வியாபார யுக்தியை அவ்வப்போது அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள்.
    10. மற்றவர்களுக்குச் சேவை செய்ய முயலுங்கள். ‘இன்ள்ற்ர்ம்ங்ழ் இஹழ்ங்’ (வாடிக்கையாளர்களது தேவை பற்றிய கவனம்) என்பது மிகமிக அவசியம். வாடிக்கையாளர் திருப்தி தான் உங்களுக்கு வரப்பிரசாதம். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த இன்னும் ஏதேனும் செய்ய முடியுமா என்பதைக் கவனித்துச் செயல்படுங்கள். இதுவே உங்கள் வளர்ச்சியின் தாரக மந்திரம்.
    11. உங்களது தொழில் வளர்ச்சியில் தூய்மையும், நேர்மையும், தனித்தன்மையும் என்றும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 12. உங்களைப் போல மற்றவர்களையும் உயர்வாக எண்ணுங்கள். எல்லோரிடமும் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
    12. உங்களைப்போல மற்றவர்களையும் உயர்வாக எண்ணுங்கள். எல்லோரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
    13. முக்கியமாக நிறைவேற்ற வேண்டியவற்றை முன்னுரிமையுடன் நிறைவேற்ற வேண்டியவை, அவசரமாக செய்து முடிக்க வேண்டியவை என்பதை நன்கு தீர்மானித்து, பட்டியலிட்டுக் கொண்டு செயல்படுங்கள். Plan Your Properties. Plan Accordingly and Complete Them Important, Priority, Urgent என்பதைத் தெளிவாக புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
    14. ஒரு உயரத்திலிருந்து அடுத்த உயரத்திற்குச் செல்ல உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். சுழற்சியையும், போக்கையும், மாற்றங்களையும் அடையாளம் காணக் கற்றுக்கொள்ளுங்கள்.
    15. உடன் பிறந்த கற்பனைத் திறனை ஒருபோதும் பூட்டி வைக்காதீர்கள். எந்த ஒரு பிரச்சனையையும் எப்படி சரி செய்வது, இடையூறுகளை எப்படிச் சமாளிப்பது என்பதைத் தீர்க்கமாக ஆராய்ந்து செயல்படக் கற்றுக்கொள்ளுங்கள்.
    16. எப்போதும் உங்களைச் சுற்றிலும் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் சூழ வாழுங்கள். உங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு படியிலும் வெற்றியாளர் சூழ வாழுங்கள்.
    17. உடல் நலமுடன் இருந்தால்தானே உங்களால் எதையும் சாதிக்க முடியும். ஆகவே, உங்கள் உடல் நலனில், ஆரோக்கியத்தைப் பேணுவதில் அக்கறை செலுத்துங்கள்.
    18. பயத்தை எப்படி வெற்றி கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வீணான அச்சத்திற்கு ஒருபோதும் இடம் தராதீர்கள். கவலையும், அச்சமும் தான் ஒரு மனிதனை முன்னேறவிடாமல் கீழே பிடித்துத் தள்ளுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    மேலே சொன்ன இந்த 18 முறைகளை நீங்கள் சரியாகப் பின்பற்றினால் உங்கள் வெற்றி நிச்சயம்.