– 2011 – December | தன்னம்பிக்கை

Home » 2011 » December

 
  • Categories


  • Archives


    Follow us on

    பயறு வகைகளின் விலையேற்றம் ஏன்?

    சராசரி ஒவ்வொரு இந்தியர்களும் பருப்பு வகைகளைத் தவிர்க்கமுடியாத உணவாக கொண்டுள்ளார்கள். நாம் ஏதோ ஒரு வகையில் பருப்பு வகைகளை நம் உணவில் கலாச்சாரத்துடன் கலந்து உட்க்கொண்டு வருகிறோம்.
    நமது பயறு வகைப் பயிர்களின் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளாக ஒரே நிலையில் தான் உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதம் ஒவ்வொரு ஆண்டும் இருக்கும் என எடுத்துக்கொண்டால் நம்முடைய பருப்பு வகைகளின் தேவை இன்னும் பத்தாண்டுகளில் இருமடங்காக உயரும். தற்போதைய (2011ல்) பருப்பு வகைகளின் உற்பத்தி 19.5 மில்லியன் டன் என்று எடுத்துக்கொண்டால் அதுவே 2026ல் 36.1 மில்லியன் டன் (சுரபி மிட்டல், ICRIER 2011). எனவே, பருப்பு வகைகளின் தேவை இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது.
    உலக அளவில் பருப்பு வகைகளின் உற்பத்தி பெரியதாக அதிகரிக்கவில்லை. மேலும் இந்தியாவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுதான் பருப்பு வகைகளின் விலையேற்றத்துக்கு பிரதான காரணமாக உள்ளது.
    மத்திய அரசு சார்ந்த நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்து 15 சதவிகிதம் இறக்குமதி செலவுகளை ஏற்று இந்தியா தன் பருப்பு தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு இருந்தது. ஆனால் 2007 முதல் இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளின் விலை சுமார் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது. உதாரணமாக, துவரம் பருப்பு 2007ம் ஆண்டில் விற்ற விலையான 27 33 ரூபாய் / கிலோவுடன் ஒப்பிடும்போது, தற்பொழுது 45 / கிலோவாக உயர்ந்துள்ளது.
    இந்தியா பெரும்பாலான பயறு வகைகளை மியான்மார் (பர்மா) நாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. மியான்மரில் உலக சந்தையில் உள்ள தேவைக்கு ஏற்ப பருப்பு விலையில் மாற்றம் ஏற்படும். மேலும், ஆப்ரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பருப்பு வகைகளின் இருப்பு மற்றும் அங்குள்ள உற்பத்தியைப் பொறுத்து மியான்மரர் பருப்பு விலையைத் தீர்மானிக்கிறது.
    இந்திய அரசு நிறுவனங்கள் 2010 செப்டம்பர் முதல் 15 சதவிகிதம் மானிய விலையில் கொடுக்கும் வழக்கத்தை வெளிநாட்டில் வாங்கும் பருப்பு வகைகளுக்கு கைவிட்டது. இதன் மூலம் மற்ற தனியார் நிறுவனங்கள் பெருமளவில் பருப்பு கொள்முதல் வர்த்தகத்தைத் தொடங்கின. இதுவே தற்போதைய பருப்பு விலையின் ஏற்றஇறக்கத்திற்கு ஒரு காரணமாகும். வெளிநாட்டுச் சந்தையில் ஏற்படும் ஏற்றஇறக்கங்கள் நமது பருப்பு வகைகளின் விலையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
    இந்தியாவின் பருப்பு உற்பத்தியில் மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன.
    2007ல் இந்தியாவின் பருப்பு வகைத் தேவை 18 மில்லியன் டன். இதில் 15.11 மில்லியன் டன் இந்தியாவில் மேற்சொன்ன மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டது. எஞ்சிய அனைத்து தேவைக்குமான பருப்பு வகைகள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து பூர்த்தி செய்யப்பட்டது.
    மேலும், 1958 59ம் ஆண்டுகளில் ஒரு தனி நபர் உட்கொள்ளும் பருப்புகளின் அளவு 27.3 கிலோ. ஆனால் 2008ல் தனி நபர் உட்கொள்ளும் பருப்புகளின் அளவு 12.7 கிலோவாகக் குறைந்துள்ளது. இந்த தேவையின் குறைவுக்கு மற்ற புரதங்களை உண்பதன் மூலம் ஈடுகட்டப்படுகிறது.
    இப்படி தனி மனித புரத உண்ணும் அளவு குறைந்திருந்தாலும் பருப்பு வகைகளின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அரசு பயறு வகைகளின் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவின் பயறு வகைப் பயிர்களின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது நல்ல நிலையில் தான் உள்ளது.
    கடந்த 25 – 30 ஆண்டுகளில் 10-12 சதவிகிதம் பயறு வகைப் பயிர்களின் நிலப்பரப்பு அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்தி 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் உற்பத்தி திறன் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு பல முன்னேற்றத்தை ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் இந்தியா அடைந்திருந்தாலும் தற்போது பருப்பு வகைகளின் தேவை மிக அதிக அளவில் உருவெடுத்துள்ளதால் உள்நாட்டில் உற்பத்தி அளவைப் பெருக்குவதில் மிகவும் சிரமத்தில் உள்ளது.
    இதற்கு முக்கிய காரணங்கள் இந்தியாவில் பயிரிடப்படும் பயறு வகைப் பயிர்கள் 85 – 90 சதவிகிதம் பருவ மழையை நம்பியே இருக்கின்றது. எனவே சரியான அளவில் பருவ மழை கிடைக்கவில்லை என்றால் பயறு வகைப் பயிர்களின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகின்றது. மேலும் பயறு வகைப் பயிர்கள் மற்ற பணப் பயிர்கள் விளைவிக்க உபயோகமில்லாத பகுதிகளில் விளைவிக்கப்படுவதும் விளைச்சல் குறைபாட்டிற்கு ஒரு காரணமாகும்.
    விவசாயிகளுக்கு எப்போதும் சீரான, கட்டுபடியான கொள்முதல் விலை, தரமான சேமிப்புக் கிடங்குகள், உலக சந்தையில் பருப்பு வகைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய சரியான தகவல்கள் போன்றவை விவசாயிகளுக்கு கிடைத்தால் பயறு வகைப் பயிர்கள் பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
    உற்பத்தி பெருக்குவதற்கான சில வாய்ப்புக்கள்:
    1. உயர் விளைச்சல் ரகங்களை பயிரிடுவதன் மூலம் 25 சதவிகிதம் உற்பத்தியைப் பெருக்கலாம்.
    2. பருப்பு வகைகளில் பூச்சிகள் மற்றும் நோய்களினால் ஏற்படும் சேதங்களைத் தவிர்ப்பதன் மூலம் 25 சதவிகிதம் உற்பத்தியைப் பெருக்கலாம்.
    3. சரியான முறையில் நீர் பாசனம் மற்றும் தேவையான உரங்களை வினியோகிப்பதன் மூலம் 20 சதவிகிதம் விளைச்சலை அதிகரிக்கலாம்.
    4. சரியான முறையில் பருப்பு வகைகளைச் சேமிப்பதன் மூலம் சேதாரத்தைத் தவிர்த்து 15 சதவிகிதம் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
    5. பயறு வகைப் பயிர்கள் தற்போது உள்ள நெல் தரிசுகள் மற்றும் ஊடு பயிர்கள் மூலம் மீதமுள்ள உற்பத்தியை அடையலாம்.

    மனிதமனம் உருவாக்கும் மனிதவளம்

    இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்து முடிந்துவிட்டது. 2011 – ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப் புள்ளிவிவரம்படி இந்தியாவில் 121 கோடியே 1 லட்சத்து 93 ஆயிரத்து 422 பேர் உள்ளனர். இதில் 62 கோடியே 37 லட்சம் பேர் ஆண்கள். மீதமுள்ள 58 கோடியே 65 லட்சம் பேர் பெண்கள். இவர்களில் 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 50% பேர் இருக்கிறார்கள்.
    இந்தப் புள்ளிவிவரம் “இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது” என்பதை நமக்கு உணர்த்துகிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதம் அளவுக்கு இளைஞர்கள் இருப்பதால் அவர்களை நல்வழிப்படுத்தவும், கல்வியில் சிறந்தவர்களாக மாற்றவும் இந்திய அரசும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
    “இளம் பருவத்தில் கல்வி பயிலும் மாணவ – மாணவிகளை நற்பண்புகள் கொண்டவர்களாக மாற்றிவிட்டால் இந்தியாவை உலக அரங்கில் சிறந்த நாடாக மாற்றிவிடலாம்” என்றநம்பிக்கை எல்லோரிடமும் இருக்கிறது. இப்போதெல்லாம் மக்கள் தொகை அதிகரிப்பை ஒரு பிரச்சனையாக எந்த நாட்டிலும் பார்ப்பதில்லை. ஏனென்றால் மக்களை நாட்டின் சொத்தாக (Assets) நினைக்கின்றமனோபாவம் பல நாடுகளில் உருவாகிவிட்டது. மக்களை வளங்களாக கருதுவதால் “மனிதவளம்” (Human Resource) என்றேபெயரிட்டு அழைக்கிறார்கள்.
    இந்தியாவில் “மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்” (Ministry of Human Resource Development) என்று ஒரு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு, இந்தத் துறையை கவனிக்க மனிதவளத் துறைஅமைச்சரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
    பள்ளிப் பருவத்திலேயே கல்வி பயிலும் இளைய உள்ளங்களை நாட்டிலுள்ள சிறந்த வளமாக மாற்றுவதற்கு உதவியாக “டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்கூல் எஜூகேஷன் அன்ட் லிட்ரசி” (Department of School Education and Literacy) என்றதுறைஅமைக்கப்பட்டிருக்கிறது. இதைப்போலவே உயர்கல்வியின் வளர்ச்சிக்காக “டிபார்ட்மெண்ட் ஆஃப் ஹையர் எஜூகேஷன்” (Department of Higher Education) என்றதுறையும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு துறைகளும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பொறுப்பில் உள்ளது.
    கல்வி பயிலும்போதே சிறந்த பண்புகள்கொண்ட இளைஞர்களை உருவாக்குவதற்காக பல்கலைக்கழக மானியக்குழு (University Grants Commission) (UGC), இந்தியன் கவுன்சில் ஆஃப் சோசியல் சயின்ஸ் ரிசர்ச் (Indian Council of Social Science Research (ICSSR), இந்தியன் கவுன்சில் ஆஃப் ஹிஸ்டோரிகல் ரிசர்ச் (Indian Council of Historical Research) (ICHR), இந்தியன் கவுன்சில் ஆஃப் பிலாஸபிகல் ரிசர்ச் (Indian Council of Philosophical Research) (ICPR), மத்தியப் பல்கலைக்கழகங்கள் (Central Universities), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (Indian Institute of Technology) (IIT), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (Indian Institute of Management) (IIM), நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (National Institute of Technology) (NIT) போன்றபல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
    “இந்தியாவிலுள்ள இளைஞர்க ளெல்லாம் மிகச்சிறந்த வல்லுநர்களாக திகழவேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்” என்றநல்ல நோக்கத்தோடு இளைஞர்களின் கல்விக்காக இந்திய அரசாங்கம் கோடிக்கணக்கான பணத்தை செலவிடுகிறது.
    கல்வி நிலையத்தில் பயிலும்போது தகவல் தொடர்பு திறன் (Communication Skill), இணைந்து பழகும் திறன் (Interpersonal Skill), தலைமைப்பண்பு திறன் (Leadership Skill), முடிவெடுக்கும் திறன் (Decision Making Skill) போன்றமனித வாழ்க்கைக்கு அடிப்படையான திறன்களையும் வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சிகளும் கல்வி நிலையங்களில் வழங்கப்படுகின்றன. கல்வி அறிவு பெற்று திறன் வளர்க்கும் பயிற்சிகளை மேற்கொண்ட பின்னும் சில மாணவ, மாணவிகள் வாழ்க்கைக்குப் பொருந்தாத நல்வாழ்க்கைக்குப் பயன்படாத செயல்களில் ஈடுபடுவது மன வருத்தத்தை உருவாக்கிவிடுகிறது.
    இதோ சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு.
    நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவன் மணிகண்டன். அவனுக்கு வயது 14. உயர்நிலைப்பள்ளியில் 9 – ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் சைக்கிளில் பள்ளிக்கூடத்திற்குச் சென்று வந்தான். இவனது நெருங்கிய நண்பன் மாடசாமி. இவனுக்கும் வயது 14. மாடசாமியும், மணிகண்டனும் மிக நெருங்கிய நண்பர்கள். எங்கு சென்றாலும் சேர்ந்து செல்லும் பழக்கம் உள்ளவர்கள். வீட்டில் இருந்தாலும் இருவரும் செல்போனில் தொடர்புகொண்டு பேசிக்கொள்வார்கள். பள்ளிக்கூடம் செல்லும்போதும் செல்போனை எடுத்துச்செல்லும் பழக்கம் இவர்களுக்கு உண்டு. ரகசியமாக மறைத்துவைத்து செல்போன்மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்புவதும், கேம்ஸ் விளையாடுவதும் இவர்களது வாடிக்கையான செயல்.
    ஒருநாள் மணிகண்டன் பள்ளிக்கூடத்திற்கு வந்தவுடன் “நாம் இருவரும் செல்போன்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளலாமா?” என்று மாடசாமி கேட்டான். இருவரும் செல்போன்களை மாற்றிக்கொண்டார்கள். வீட்டுக்கு வந்தவுடன் தனது மகன் மணிகண்டன் வேறு செல்போனை வைத்துக்கொண்டிருப்பதை பார்த்து அவனது தந்தை விசாரித்தார்.
    “நல்ல செல்போனை கொடுத்துவிட்டு வேறு செல்போனை எதற்காக வாங்கி வந்தாய்? உடனடியாக செல்போனை திருப்பிக் கொடுத்துவிட்டு வந்துவிடு” என்று தந்தை சத்தம்போட்டதும், செல்போனை வாங்குவதற்காக 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது நண்பன் மாடசாமி வீட்டிற்கு சென்றான். மாடசாமியின் செல்போனைக் கொடுத்துவிட்டு தனது செல்போனை திருப்பித்தரும்படி கேட்டான். மாடசாமி செல்போனை கொடுக்கவில்லை.
    “செல்போனை மாற்றியது மாற்றியதுதான். திருப்பித்தர முடியாது” என்றான். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. “வேறு ஒரு நண்பனிடம் அந்த செல்போன் இருக்கிறது நாளைக்கு வாங்கித்தருகிறேன்” என்று மாடசாமி சொல்ல மணிகண்டன் விடவில்லை. உடனே வாங்கித் தருமாறு வலியுறுத்தி அவனை அழைத்துக்கொண்டு இரவு நேரத்தில் வயல்வெளி ஓரமாக நடந்து வரும்போது மீண்டும் தகராறு உருவாகி கைகலப்பு ஏற்பட்டது. மணிகண்டனின் கழுத்தை மாடசாமி நெறித்ததால் மூச்சுத் திணறி உயிருக்குப் போராடிய மணிகண்டனின் நிலை என்ன?
    (தொடர்ச்சி அடுத்த இதழில்)

    மாற்றங்கள் உருவாக்கும் வாய்ப்புகள்

    வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர் களுக்கும் இடையே எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும் ஒரு வேறுபாடு மிகவும் பிரதானமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது என்னவென்றால் வெற்றியாளர்கள் மாற்றங்கள் நிகழும் போது அதற்குத் தகுந்தாற் போல் உடனடியாக மாறி அந்த மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தோல்வியாளர்களோ நிகழும் மாற்றங்களைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள். மனம் வருந்துகிறார்கள். புலம்புகிறார்கள். எனவே அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும், மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைக் கண்டு கொள்ளவும், பயன்படுத்தவும் தவறி விடுகிறார்கள்.
    உலகில் மாறுதல் ஒன்றே மாறாத நியதி என்று சொல்வார்கள். மாறுதல் உலகம் இயங்குவதன் அறிகுறி. உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும் வரை மாறுதலும் இருந்து கொண்டே இருக்கும். உலகம் யாருடைய தனிப்பட்ட கருத்தின்படியும் இயங்குவதில்லை. அவர்கள் கருத்தைப் பொருட்படுத் துவதுமில்லை. அது பிடிக்காதவர்கள் உலகில் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்.
    மாறுகின்ற காலத்தில் மாறுகின்ற தேவைகளுக்கேற்ப தங்கள் வழி முறைகளை மாற்றிக் கொண்டு செயல்படும் மனிதர்கள் மட்டுமே வெற்றியடைகிறார்கள். நேற்றைய தேவைகளுக்கேற்ப உங்களது இன்றைய செயல்பாடுகள் இருந்தால் எப்படி வெற்றி கிடைக்கும்?
    அல்கெமிஸ்ட் என்ற பிரபல நாவலில் இதற்கு ஒரு அழகான உதாரணத்தைக் காணலாம். ஒரு சிறிய மலை மேல் அழகான கண்ணாடிப் பொருள்கள் விற்கும் கடை ஒன்று இருந்தது. ஒரு காலத்தில் மிக நன்றாக வியாபாரம் நடந்த கடையில் காலம் செல்லச் செல்ல வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டது. மலை அடிவாரத்திலேயே நிறைய கடைகள் வந்து விட யாரும் கண்ணாடிப் பொருட்களை வாங்க அந்த மலைக்கு மேல் வருவதை நிறுத்தினர். அந்த கடைக்காரருக்கோ அந்த வியாபாரம் தவிர வேறு வியாபாரமும் தெரியாததால் வேறு வழியில்லாமல் அதையே நடத்திக் கொண்டு வந்தார்.
    சாண்டியாகோ என்ற இளைஞன் அவர் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். சம்பளம் மிகக் குறைவாகவே தந்த கடைக்காரர் நடக்கும் விற்பனையில் அதிக கமிஷன் தருவதாகச் சொன்னார். வியாபாரமே இல்லாததால் கமிஷன் எங்கே தரப் போகிறோம் என்ற எண்ணம் அவருக்கு. இரண்டே நாளில் உண்மை நிலவரத்தை சாண்டியாகோ உணர்ந்தான். வேறு கடைகளே இல்லாத காலத்தில் செய்த வியாபார முறையையே இப்போதும் கடைக்காரர் பின்பற்றுகிறார் என்று புரிந்தது. அவன் அவரிடம் கடைக்கு வெளியே ஒரு ஷோ கேஸ் வைத்து அழகான புதிய பொருட்களைப் பார்வைக்கு வைத்தால் கீழே செல்பவர்களில் சிலரை அது ஈர்க்கக்கூடும் என்று சொன்னான். கடைக்காரருக்கு பெரிய ஆர்வம் இல்லா விட்டாலும் அப்படியே செய்தார். புதியவர்கள் பலரும் வர ஆரம்பிக்க விற்பனையும் அதிகரித்தது.
    ஒரு நாள் மலையேறிய ஒருவர் குடிக்க நல்ல தேநீர் கடை கூட இல்லை என்று அங்கலாய்த்தது சாண்டியாகோ காதில் விழுந்தது. அவன் கடைக்காரரிடம் சொன்னான். “நாம் தேநீரும் தயாரித்து நம்முடைய அழகான கண்ணாடிக் கோப்பைகளில் தந்தால் தேநீரும் விற்கலாம். பலரும் வீடுகளிலும் அது போல் குடிக்க கண்ணாடிக் கோப்பைகளை வாங்கிக் கொண்டு போவார்கள்” என்றான். அவருக்கு அதிலும் பெரிய பலன் கிடைக்கும் என்று தோன்றவில்லை. ஆனாலும் சம்மதித்தார்.
    அவன் சொன்னபடியே பலரும் வந்து தேநீர் குடித்து அது போன்ற அழகான கோப்பைகளை வாங்கிக் கொண்டு போனார்கள். நாளடைவில் அந்தக் கடை பிரபலமாகி வியாபாரமும் அதிகரித்து மேலும் இரண்டு பேரை வேலைக்கு எடுத்துக் கொண்டு கூட்டத்தை சமாளிக்க வேண்டி இருந்தது. சாண்டியாகோ வந்திராவிட்டால், காலத்தின் மாறுதல்களுக்கு ஏற்ப புதிய வழிகளைப் பின்பற்றியிரா விட்டால் அந்தக் கடையை அவர் விரைவில் மூடி விட வேண்டி இருந்திருக்கும்.
    மாறுதல் இயற்கை என்றாலும் அது ஏற்படுத்தும் புதிய சூழல் நமக்குப் பிடிபடாமலும், புரியாமலும், சிறிது அசௌகரியமாகவும் இருப்பது இயல்பே. ஆனால் மாறுதல் ஏற்படும் போது இது வரை கிடைத்திராத வாய்ப்புகளும் கிடைக்கும் என்ற ஞானத்தோடு மாறுதல்களை எதிர்கொள்வதே அறிவு.
    சில சமயங்கள் மாறுதல்கள் நம் வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே அசைப்பனவாகவும் இருப்பது உண்மையே. இருப்பவை அனைத்தையும் இழக்க நேர்வது போன்ற மாறுதல்கள் பூதாகரமாக இருக்கலாம். ஆனால் கவலையில் ஆழ்வதும், விதியை நொந்து கொள்வதும் அதற்குத் தீர்வாகாது. மாறுதல்கள் உணர்த்தும் பாடங்களைப் படித்து, தரும் வாய்ப்புக்களை முறையாகப் பயன்படுத்தி மீண்டு வருவதே வெற்றி. சிலவற்றை இழந்தால் ஒழிய நம் பார்வை வேறுபக்கம் திரும்பாது என்பதற்காகவே கூட விதி நம்மை சிலவற்றை இழக்க வைக்கலாம். ஒருவிதத்தில் அது நமக்கு அனுகூலமே ஒழிய நஷ்டமல்ல.
    சொய்சீரோ ஹோண்டா என்ற இளைஞர் படிக்கும் காலத்திலேயே கார்களுக்குப் பயன்படுத்தும் புதிய பிஸ்டன் ஒன்றை உருவாக்கி அதை டயோட்டா கார் கம்பெனிக்கு அனுப்பினார். அந்த வகை பிஸ்டனைப் பயன்படுத்தினால் பல விதங்களில் காரோட்டம் மேம்பாடடையும் என்று அவர்களுக்குத் தெரிவித்தார். அது தங்களுடைய தேவைகளைப் பூரணமாகப் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்து டயோட்டா கம்பெனியினர் திருப்பி அனுப்பி விட்டனர். மீண்டும் இரண்டு வருடங்கள் கழித்து அந்தப் பிஸ்டனை மேம்படுத்தி வடிவமைத்து அதை டயோட்டாவுக்கு மறுபடி அனுப்ப அந்தப் புதிய பிஸ்டனை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதைத் தயாரித்துத் தரும் உரிமை ஹோண்டாவுக்கு அளிக்கப்பட்டது.
    ஹோண்டா தன்னிடம் இருப்பவை அனைத்தையும் முதலீடாகப் போட்டு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைக் கட்டத் தொடங்கினார். தொழிற்சாலை கட்டும் பணி முடியும் தருவாயில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு தொழிற்சாலை தரைமட்டமாகியது. ஹோண்டா தன் மனைவியின் நகைகளை விற்று, நண்பர்களிடம் கடனை வாங்கி மீண்டும் தொழிற்சாலை கட்டத்துவங்கினார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கட்டிடம் முடிவடையும் நேரம் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. எதிரிகளின் விமானத் தாக்குதலால் அந்தக் கட்டிடமும் தவிடுபொடியானது.
    இதையெல்லாம் மாற்றம் என்று சொல்வதை விட நாசம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என்றாலும் ஹோண்டா விதியை நொந்து கொண்டு முடங்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் கடுமையான பெட்ரோல் மற்றும் கேஸ் தட்டுப்பாடு ஜப்பானைத் தாக்கியது. கார்களை இயக்க முடியாமல் பலரும் அவதியுற்றனர். ஹோண்டாவும் எங்கும் காரை எடுத்துச் செல்ல முடியாமல் தத்தளித்தார். வேறு வழி இல்லாமல் தன் சைக்கிளுக்கு மோட்டார் ஒன்றைப் பொருத்திக் கொண்டு வீட்டுக்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். அதைப் பார்த்த அக்கம்பக்கத்து வீட்டாரெல்லாம் தங்களுக்கும் அது போன்ற ஒரு மோட்டார் பொருத்திய சைக்கிள் செய்து தருமாறு கேட்க ஆரம்பித்தனர். ஹோண்டா செய்து தர ஆரம்பித்தார். சீக்கிரமே அவரிடமிருந்த மோட்டார்கள் எல்லாம் தீர்ந்து போயின.
    தன் முயற்சிகளில் சிறிதும் தளராத விக்கிரமாதித்தன் போல் ஹோண்டா மீண்டும் ஒரு தொழிற்சாலை கட்ட எண்ணினார். இந்த முறை பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை அல்ல, தன் புதிய கண்டுபிடிப்பான மோட்டார் பைக் தயாரிக்கும் தொழிற்சாலையாக. ஆனால் இருப்பதையெல்லாம் முன்பே இரு முறை தொழிற்சாலை கட்டித் தொலைத்திருந்த அவருக்கு முதலீடு செய்யப் பணம் இருக்கவில்லை. சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவெடுத்தார்.
    ஜப்பான் முழுவதும் இருந்த 18000 சைக்கிள் கடைக்காரர்களுக்கு தன் புதிய கண்டுபிடிப்பைப் பற்றிக் கடிதம் எழுதினார். அன்றைய சூழ்நிலையில் மிகவும் சுலபமாக விலை போகும் பைக்கைத் தயாரிக்க அவர்களால் முடிந்த அளவு முதலீடு செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று அவர் விவரித்தார். 18000 கடைக்காரர்களில் சுமார் 5000 பேர் முதலீடு செய்ய முன் வந்தனர். அவருடைய கனவுத் தொழிற்சாலை உருவாகியது.
    முதலில் அவர்கள் தயாரித்த மோட்டார் பைக் பெருமளவில் விலை போகவில்லை. காரணம் அதன் எடையும், பெரிய வடிவமும். எனவே ஹோண்டா அந்த இரண்டையும் சரி செய்து சில மாற்றங்களுடன் புதிய மோட்டார் பைக்கை உருவாக்கினார். அது உடனடியாக வெற்றி பெற்றது. பின் வெற்றி அவரை நிழலாகப் பின் தொடர்ந்தது. கார்களையும் உருவாக்க ஆரம்பித்தார். இன்று ஹோண்டா கார்ப்பரேஷன் உலகப் புகழ் பெற்ற பெரிய நிறுவனமாக இருப்பது அனைவருக்கும் தெரியும்.
    மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை ஆழமாக உணர்ந்திருங்கள். வழக்கம் என்கிற சுகமான சங்கிலி புதியன வரும் போது அதிருப்தி கொள்ளக் கூடும். ஆனாலும் வழக்கமான வாழ்க்கையில் சிறைப்பட்டு இருந்து விடாதீர்கள். மேல்போக்காகப் பார்க்கையில் பிரச்னைகள் போலத் தோன்றினாலும் எல்லா மாற்றங்களும் தங்களுடன் வாய்ப்புகளையும் சேர்த்தே அழைத்து வருகின்றன. வரும் மாற்றங்கள் நம் அபிப்பிராயங்களுக்கேற்ப மாறிவிடுவதில்லை. மாற்றங்கள் காலடி மண்ணையே அசைக்கிறதாகக் கூட சில நேரங்களில் இருக்கலாம். செயலிழந்து மட்டும் போய் விடாதீர்கள். அது கண்டிப்பாய் தோல்வி என்னும் புதைகுழியில் உங்களை ஆழ்த்தி விடும். எனவே பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ உங்கள் அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு வாய்ப்புகளைக் கவனியுங்கள். எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்படுங்கள். கண்டிப்பாக வெற்றிவாகை சூடுவீர்கள்.

    இவர் பேரு அழகர்சாமி

    பொதுவாக மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாள் முடிவதற்குள் பலர் போற்றும் செயல்களைச் செய்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த மனித பிறப்பிற்கு ஒரு சிறப்பு இருக்கும். பொதுவாய் ஒவ்வொரு மனிதனும் சில சிறந்த பண்புகளால் பலரின் இதயங்களில் இடம்பிடித்து வருகிறார்கள். குழந்தைகள், மனைவி, தொண்டர்கள் என ஒவ்வொரு துறையைப் பொருத்தும் இந்த சிறப்புகள் மாறிக்கொண்டே செல்கிறது என்றபோதிலும் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரே விஷயம் நல்ல பண்புகள், சிறப்பான செயல்கள் என்பவை மட்டுமே. அப்படி தனது சிறந்த பண்புகளில் தனது பெயருக்கு ஒரு புது முகவரியைத் தந்து கொண்டிருப்பவரும், எதிர்கால சந்ததியினருக்கு நல்ல விழுமியங்களை விதைத்துக்கொண்டு இருப்பவரும், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை சமூகப்பணித் துறையின் தலைவருமான திரு. அழகர் சாமி அவர்களுடன் ஒரு நேர்முகம்.
    உங்களைப் பற்றிய ஒரு முன்னுரை:
    எனது சொந்தஊர் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூருக்கு அருகில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி. பள்ளிக் கல்வியனைத்தும் அதைச் சுற்றியுள்ள பகுதியில்தான். ஆத்தூர் எஸ். ராமசாமி நாயுடு மெமோரியல் கல்லூரியில் இளங்கலை ரசாயணமும், விருதுநகர் இந்து நாடாருக்குப் பாத்தியப்பட்ட செஞ்சி குமாரா கல்லூரியில் முதுகலை சமூகப்பணியும் படித்தேன். அதைத்தொடர்ந்து லட்சுமி மில்ஸ், எல்.ஜி. அல்ட்ரா போன்ற நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டில் பணியாற்றினேன். தொடர்ந்து சேரன் கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை சமூகப்பணி துறையில் துறைத்தலைவராகவும், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் துறைத்தலைவராகவும், தற்போது ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை சமூகப்பணித்துறையில் துறைத்தலைவராக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிசெய்து வருகிறேன்.
    சமூகப்பணியைத் தேர்ந்தெடுக்க ஏதாவது சிறப்புக் காரணங்கள் உண்டா?
    மனித வாழ்க்கை கடவுளின் கொடை. இந்தக் கொடையில் ஓர் உயர்ந்த பகுதி இளமை. ஏனென்றால் ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றைத் திசை திருப்புவதிலும், சமுதாயத்தின் போக்கை நிர்ணயம் செய்வதிலும் இளைஞர்களின் பங்கு அதிகம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இளைஞர்களின் முழு ஆளுமை வளர்ச்சியை, சமுதாயத்தில் அவர்களின் பொறுப்பை உணர்த்தி, வழிகாட்டி, மனிதவளத்தைப் பெருக்க வேண்டும் என்ற உந்துசக்தியின் காரணமாகத்தான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றமும் அந்நாட்டின் மனிதவளத்தைப் பொறுத்தே அமைகிறது. அப்படிப்பட்ட மனிதவளத்தை மேம்படுத்தும் பொருட்டு இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்.
    எப்படி குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பில் ஆர்வம் வந்தது?
    இந்தியாவின் எதிர்காலம் இளைய சமுதாயத்திடம் தான் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் வளர்ந்து நாளை இந்த நாட்டை வழிநடத்தப் போகிறவர்கள். அவர்களுக்கு தோள்கொடுத்துத் துணைநிற்கப் போகிறவர்கள் எதிர்கால இளைஞர்களான இன்றைய குழந்தைகள். நாட்டின் எதிர்காலத் தூண்களாக வளரவேண்டிய இந்தக் குழந்தைகள், ஏழ்மை, வறுமை போன்ற காரணங்களால் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிடுகின்றனர். அத்தகைய குழந்தைத் தொழிலாளர்களை மீட்க தேசிய குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்புத்திட்டத்துடன் இணைந்து குழந்தைத் தொழிலாளர்களை இனம்கண்டு மீட்கவும், அவர்களுக்கு கல்வி கிடைக்கவும் உதவியிருக்கிறோம். மேலும் 250க்கும் மேற்பட்ட வீதி நாடகங்களை நடத்தி பொதுமக்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
    இந்த சீரிய சிறப்புப் பணியைப் பாராட்டி கோவை மாவட்ட முன்னாள் ஆட்சித்தலைவர் திரு. உமாநாத் அவர்கள் இரண்டு முறை சுதந்திரத்தினத்தன்று வ.ஊ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டி கவுரவித்துள்ளார்.
    “அழகான கோவை’ திட்டத்தில் தங்களின் பங்களிப்பைப் பற்றி?
    இந்த உலகமே அழிந்தாலும் அழியாமல் இருக்கக்கூடிய ஒரு பொருள் பிளாஸ்டிக். அத்தகைய நச்சுப்பொருளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 வார்டுகளிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை வழங்கியது.
    ‘மரம் நடுவது என்பது ஒரு எண்ணத்தை விதைப்பதைப்போல’ என்ற வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டு அடுத்த தலைமுறைக்கு இந்தப் பூமியை செழுமையான பூமியாக ஒப்படைக்கும் நோக்கத்துடன் ‘ராக்’ மற்றும் ‘சிறுதுளி’ அமைப்புடன் இணைந்து மரங்களை நடுவது, இயற்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றில் பங்களிப்பைக் கொடுத்துள்ளேன்.
    “தோழர்’ அறக்கட்டளை பற்றி?
    எல்லா உறவுகளாலும் கைவிடப்பட்டு, இவ்வுலகை விட்டுச் செல்லும் மனிதர்களை, உறவுகள் இருந்து செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்து ஒருவரின் கடைசிப் பயணத்தை மகிழ்ச்சியாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பது தான் ‘தோழர்’ அறக்கட்டளை. அத்தகைய தோழர் அறக்கட்டளையில் என்னை இணைத்துக்கொண்டு, எங்களின் கல்லூரி மாணவர்களையும் இணைத்து உறவுகள் அற்று இறக்கும் மனிதர்களை அடக்கம் செய்து வருகிறோம். இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற அனாதைப் பிணங்களை அடக்கம் செய்திருக்கிறோம்.
    குறிப்பாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோவை ரயில்வே ஸ்டேசனுக்கு அருகில் ஒரு முதியவர் அனாதையாக இறந்து கிடந்ததைப் பார்த்த எங்கள் கல்லூரியின் முதுகலை சமூகப்பணி இரண்டாமாண்டு மாணவிகள் திவ்யா, ரூபிகா இருவரும் காவல்துறைக்கு தெரிவித்ததுடன் கடைசிவரை இருந்து அந்த அனாதைப் பிணத்தை அடக்கம் செய்துவிட்டுத்தான் வந்தார்கள். மனிதாபிமானம் கிட்டத்தட்ட இறந்துவிட்ட இந்தக் காலத்தில் இத்தகைய மாணவர்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம் என்பதே எங்களுக்குப் பெருமை.
    ரத்ததானம் மற்றும் எச்.ஐ.வி. எய்ட்ஸ் விழிப்புணர்வில் தங்களின் ஈடுபாடு?
    இவ்வுலகில் மனிதனால் உருவாக்க முடியாத ஒரு பொருள் இரத்தம். அப்படிப்பட்ட பெருமைமிக்க இரத்தத்தை தேவைப்படுவோர்க்குத் தேவைப்பட்ட நேரத்தில் கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். இதுவரை எங்கள் மாணவர்கள் 1000 யூனிட்டுக்கும் மேல் தங்களின் விலைமதிப்பற்ற இரத்தங்களைத் தானமாகக் கொடுத்துள்ளார்கள்.
    இந்தியாவில் இறப்பு விகிதத்தைக் கணிசமான அளவு உயர்த்துவதில் எய்ட்ஸின் பங்கு முக்கியமானது. கோவை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து எச்.ஐ.வி. பற்றிய விழிப்புணர்வை வீதி நாடகங்கள் மூலம் ஏற்படுத்துகிறோம்.
    மற்றொரு சிறப்பம்சமாக, எஸ்.எம்.எஸ். வழியாக எச்.ஐ.வி. விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து கொண்டாடி அவர்களும் சகமனிதர்கள் தான் என்பதை எடுத்துக்காட்டுகிறோம்.
    இந்தியாவிலேயே எங்கும் இல்லாத ஒன்றாக பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோயாளிகளையும், திருநங்கைகளையும் புறக்கணிக்காமல் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றி இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாக இருக்கிறோம்.
    இத்தகைய சமுதாயப்பணியில் நீங்கள் நினைவுகூற வேண்டியவர்களைப்பற்றி?
    முதலில் என் நன்றியை எங்களின் கல்லூரி நிர்வாகத்துக்கும், முதல்வர் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கல்லூரி முதல்வர் திரு. சுந்தர்ராமன் அவர்கள் எனக்கு வழங்கிய வாய்ப்புகள் தான் இந்த அளவிற்கு சமூகப் பணிகள் மேற்கொள்ள உதவியது.
    அடுத்தது பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்லச்சாமி அவர்களுக்கும், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோவிந்தராஜூ அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    என் எண்ணங்களைச் செயல்படுத்தும் மாணவ, மாணவியர்களுக்கும், சக பேராசியர்களுக்கும், என்னுடைய அனைத்துப் பணிகளுக்கும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஒத்துழைப்பு தரும் என் குடும்ப உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
    ஒரு மனிதனின் மதிப்பையும், வெற்றியையும், தியாகத்தையும் அவர்கள் சமுதாயத்துக்கு செய்த சேவையை பொறுத்தே மதிப்பிடப்படுகிறது. வரலாற்றில் பேசப்படுபவர்கள் சமுதாயத்திற்குச் செயற்கரிய சேவை செய்தவர்கள் மட்டுமே. மக்களை நேசித்து, அவர்களுக்கு நன்மையைச் செய்து அவர்களின் சந்ததியினருக்கு ஒரு வழிகாட்டியாக சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, சமுதாயச் சேவையே பிரதானம் என்ற சிந்தனையில் இருக்கும் பேராசிரியர் திரு. அழகர்சாமி அவர்கள் பல்வேறு விருதுகளைப் பெற்றிருப்பதுடன், இளம் செஞ்சிலுவைச் சங்கத்தின் கோவை மாவட்ட அனைத்துக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளராகவும், இந்திய செஞ்சிலுவைச்சங்கம் கோவையின் எக்சிகியூட்டிவ் மெம்பராகவும், CFRN-ன் கோர்கமிட்டி மெம்பராகவும், பாசிட்டிவ் பீபிள் நெட்வொர்க் அசோசியேசன் அமைப்பில் மெம்பராகவும் இருந்துகொண்டு, சமூகப்பணியை உயிர்மூச்சாகக்கொண்டு நல்ல விழுமியங்களை விதைத்துக் கொண்டிருக்கும் பேராசிரியரின் சீரிய பணிகள் சிறக்க தன்னம்பிக்கை வாழ்த்துகிறது.

    ஸ்டீவ் ஜாப்ஸ்

    அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ஜோயன் கரொல் சியபல்சும் (Joannl Carole Schieble). சிரியா நாட்டைச் சேர்ந்த அப்துல் பட்டா ஜான் ஜன்டாலியும் (Abdul Fattiah John Jandali) காதலித்தனர். 1954ல் கோடைவிடுமுறைக்கு இரண்டு மாதங்கள் அப்துல்பட்டா வீட்டிற்குச் சென்றனர் இருவரும். காதல் கருவானது. கரு வளர்ந்தது. அப்பொழுது அவர்களின் வயது 23. கல்லூரியில் பட்டம் வாங்காமல் திருமணம் செய்து கொள்வதில்லை என்று உறுதியெடுத்திருந்தனர். திருமணமாகவில்லை ஆனால் கரு வளர்கிறது.
    இன்றைய காலகட்டத்தைப் போல் அல்லாமல், அப்பொழுது அமெரிக்காவில் மணமாகாமல் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது சமூகத்தில் மிகக்கேவலமான செயலாகப் பார்க்கப்பட்டது. காலம் கடந்துவிட்டது. கருக்கலைப்பு என்பதும் சாத்தியமில்லை.
    மிக நீண்ட யோசனைக்குப் பின்னர் நம் ஊரில் குழந்தை பெற்றுக்கொள்வதைவிட, கண் காணாத வேறு ஏதாவது ஊரில் பெற்றுக் கொள்வோம் என்று முடிவுசெய்தனர் அந்த பல்கலைக்கழக மாணவர்கள்.
    குழந்தை பெற்றுக்கொள்ள வசதியான, பொருத்தமான இடம் என்று தேடியபோது கிடைத்தது உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள் பல பிறந்த ஊரான சான் பிரான்சிஸ்கோ.
    பிப்ரவரி 24, 1955, 21ம் நூற்றாண்டில் தொழில்நுட்பத்தில் உலக சரித்திரத்தையே புரட்டிப்போட்ட பல அரிய கண்டுபிடிப்புகளைக் கொடுத்த ஆண்குழந்தை பிறந்தது.
    எதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்று பெரிய பெரிய நிறுவனங்கள் நினைத்த அத்தனை கணினி தொழில்நுட்பங்களையும் ஒன்று சேர இணைத்து மூவிஸ், மியூசிக், மொபைல் என்ற மூன்று உலகங்களின் தலையெழுத்தை மாற்றி எழுதிய அந்த குழந்தையின் மரபணு வியப்பூட்டுவதாக இருந்தது

    பவுல் ஜாப்ஸ் அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஆண்மகன். குடும்பம் வறுமையின் எல்லையில் இருந்தது. விளைவு பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு கடற்படையில் சேர்ந்து இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்றார்.
    உலகப்போரின் முடிவுக்குப்பின்னர் எஞ்சிய வாழ்வை அமைதியாகக் கழிக்க பிறந்த ஊரில் இருந்து சான்பிரான்சிஸ்கோ வந்தார்.
    குடிபெயர்ந்த இடத்தில் கண்டதும் காதல். ஓய்வுக்காக ஒதுங்கிய இடத்தில் பவுலா என்ற பெண்ணை சந்தித்தார். காதல் கொண்டார். காதலித்தவரையே கரம் பிடித்தார்.
    மணந்தவுடன் மறுபடியும் பிறந்த ஊர் பறந்தார். ஆனாலும் விடவில்லை கலிபோர்னியா என்ற காந்த விசை. திரும்பினார் மீண்டும் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு.
    வருடங்கள் ஓடின. வளமான வாழ்க்கை. ஆனாலும் மகிழ்ச்சி இல்லை. காரணம் மழலை இல்லை. மழலைக்காக மறுமணம் என்று மனம் போகவில்லை. நீண்ட யோசனைக்குப்பின் முடிவெடுத்தனர் தத்தெடுப்பதென்று.

    இருவருமே கல்லூரி மாணவர்கள். இப்போது பெற்றோர்கள். குழந்தையை வளர்ப்பதா? கல்லூரிப் படிப்பைத் தொடர்வதா? குழப்பத்தில் இருந்தனர். இருவரின் இலக்கும் பட்டம் பெறுவதுதான். அப்படியானால் குழந்தையை என்ன செய்வது? யோசனைக்குப்பின் முடிவெடுத்தனர். தத்துக்கொடுப்பதென்று.

    தத்துக்குப் பதிவு செய்திருந்த இடத்தில் இருந்து பவுலா, பவுல் ஜாப்ஸ்க்கு அழைப்பு வந்தது, ஆண்குழந்தை உள்ளதென்று. சென்றனர்; பார்த்தனர்; முடிவெடுத்தனர் தத்தெடுக்க. ஆனால் குழந்தை கிடைத்தும் கொஞ்ச முடியாத ஒரு சூழ்நிலை.
    குழந்தை எல்லாவிதத்திலும் வசதியான சூழ்நிலை நிரம்பிய குடும்பத்தில்தான் வளரவேண்டும் என்று நினைத்திருந்த உயிரியல் பெற்றோர், பள்ளிக்கூடத்தையே தாண்டாத அப்பா, கல்லூரிப் படிப்பைத் தாண்டாத அம்மா, இவர்களை நம்பி எல்லாம் குழந்தையைக் கொடுக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்தனர்.
    நாங்கள் படிக்கவில்லை என்றாலும் இவனை கல்லூரிப் படிப்பு வரை படிக்க வைப்போம். எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுவோம் என்று பலவாறு ஜாப்ஸ் தம்பதியினர் உறுதியளித்தனர். தடங்கல்கள் நீங்கி ஒரு சுபதினத்தில் தத்துக்கொடுக்கப்பட்டது அந்த ஆண்குழந்தை. பிற்காலத்தில் கணினி தொழில்நுட்பத்தில் பல புரட்சிகளை நிகழ்த்திக்காட்டி அந்த குழந்தைக்கு பெயர் வைத்தனர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்று. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 1958ல் ஒரு பெண் குழந்தையும் தத்தெடுக்கப்பட்டு பாட்டி (Patti) என்று பெயர் சூட்டப்பட்டது.
    மிகவும் கொந்தளிப்பான குழந்தையாகவே வளர்ந்தார் ஸ்டீவ். பல நேரங்களில் பள்ளி பற்றிய கவலையின்றி இருந்தார். பள்ளிப்படிப்பு போரடிக்கும் போதெல்லாம் வகுப்பறையில் பட்டாசுகள் வெடிப்பதும், பாம்புகளை விடுவதுமாகவே திரிந்து கொண்டிருந்தார்.
    4வது கிரேடு படித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த மாற்றம் நிகழ்ந்தது. மாற்றத்திற்குக் காரணம் ஐம்ர்ஞ்ங்ய்ங் “டெடி” ஹில் (Imogene Teddy Hill) என்ற ஆசிரியர்.
    ஒருநாள் ஒரு நோட்டைக் கொடுத்து சில கணக்குகளையும் கொடுத்து அதற்கு விடையை வீட்டில் எழுதிக் கொண்டுவா என்று சொன்ன ஆசிரியருக்குப் பைத்தியமாக இருக்குமோ என்று கூட எண்ணினார் ஸ்டீவ்.
    நன்றாகப் படித்தால் மிட்டாயும், 5 டாலர் காசும், விளையாட்டுப் பொருள்களும் தருவதாக கூறி ஸ்டீவின் கவனத்தை படிப்பின்பால் திருப்பினார். ஸ்டீவ்வும் ஒரு வாரத்தில் அனைத்துக் கணக்குகளையும் முடித்துக் கொடுத்தார். முதல்முறையாக மற்றவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றினார்.
    வாக்குறுதியின் விரைவாக விடாமுயற்சியுடன் படித்தால் டிரிபில் புரமோஷன் கிடைத்தது. ஆனால் ஸ்டீவின் பெற்றோர் வேண்டுதலுக்கு இணங்க டபுள் புரமோசனாகி 5ம் வகுப்பு தவிர்க்கப்பட்டு 6ம் வகுப்பு கிரிட்டெண்டன் நடுநிலைப் பள்ளியில் (Crittenden Middle School) சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
    மேல் வகுப்பிற்குச் செல்லச்செல்ல படிப்பு பாகற்காயாக கசந்தது. மோசமான சூழ்நிலையில் இருந்த பள்ளியில் ஸ்டீவின் பிறவிக்குணமான பிடிவாதம் தலைதூக்கியது. விளைவு காரணமின்றி பள்ளி பிடிக்காமல் போனது. வேறு பள்ளி மாற வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தபோது அவரின் வயது 11. பிடிவாதத்தினால் லாஸ் அல்டோஸ் (Los Altos) நகருக்கு குடிபெயர்ந்து இன்ல்ங்ழ்ற்ண்ய்ர் ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
    சான்பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, சான்டாகிளாரா போன்ற பகுதிகள் 1960ல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியர்கள் குடியேறியிருந்த பகுதியாக இருந்ததன் பயன் ஸ்டீவிற்கும் எலக்ட்ரானிக்ஸ் அறிவு வளர்ந்தது.
    தத்து எடுக்கும்போது கல்லூரி வரை படிக்க வைப்போம் என்று வாக்குறுதி அளித்ததால் ஸ்டீவின் கல்லூரி செலவிற்காக கடுமையாக உழைத்தார் பவுல்.
    மெக்கானிக்ஸில் நிபுணத்துவம் பெற்றவரான பவுல், மோசமான காயலான் கடைக்குப் போடுவதற்குத் தயாராய் இருக்கும் காரையெல்லாம். மிகக்குறைந்த விலைக்கு வாங்கி, டிங்கரிங்க் பார்த்து சரிசெய்து அதை நல்ல விலைக்கு விற்றுவிடுவார். சில காலம் கறாராய் வட்டி வசூல் செய்யும் வேலையையும் கூடுதலாகப் பார்த்தார். பணம் தயாரான தைரியத்தில் எங்கே படிக்கப்போகிறாய் என்று ஸ்டீவிடம் கேட்டார். ஸ்டீவ் தேர்ந்தெடுத்தது ரீட் கல்லூரி (Reed College).
    ரீட் கல்லூரி ஸ்டீவின் வீட்டைவிட்டு வெகு தூரத்தில் இருந்தது. ஒருபுறம் என்றாலும், அதன் கட்டணம் இதுவரை தான் சேமித்து வைத்திருந்த பணத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. ஆனாலும் ஸ்டீவின் பிடிவாதம் அறிந்திருந்ததால் அவர் விரும்பிய கல்லூரியிலேயே சேர்த்தனர்.
    போன இடத்தில் ஸ்டீவிற்குப் படிப்பைத்தவிர, போதைப்பொருள், வேதாந்தம் போன்ற பழக்கங்கள் அதிகமானது. சேர்ந்த இரண்டொரு மாதங்களில் கிறிஸ்துமஸ்ஸிற்கு முன்னர் கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ஆறு மாதங்களுக்குப் பின்னர் வாழ்க்கையில் என்னவாகப் போகிறேன்? அதற்கு இந்த படிப்பு உதவுமா? பட்டம் பெறுவதைக் காட்டிலும் பட்டறிவு தான் சிறந்தது என்று முடிவுக்கு வந்தார் ஸ்டீவ்.
    எதற்கும் உதவாத படிப்பிற்கு ஏன் பெற்றோர்கள் முட்டாள்தனமாக பணத்தை வீணடிக்கின்றனர் என்று யோசித்ததன் விளைவு, தன் கல்லூரி படிப்பைக் கைவிடுவது என்று முடிவு செய்தார் ஸ்டீவ்.
    கல்லூரி படிப்பைக் கைவிட முடிவு செய்த முட்டாள் முடிவின் காரணமாய் மனம் போன போக்கில் தனக்குப் பிடித்த வகுப்புகளுக்கு எல்லாம் போனார். பின்பு வகுப்புகளுக்குச் செல்வதும் நின்றது.
    இந்த நேரத்தில் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். ஒரு மனிதன் வாழ்வில் நடப்பதெல்லாம் நன்மைக்காகத்தானா? ஒருவன் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகள் கூட சில ஆண்டுகள் கழித்து அறிவுப்பூர்வமான முடிவுகளாக இருக்குமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் பாசிட்டீவான பதில் ‘ஆம்’ என்பதற்கு ஸ்டீவ்வின் வாழ்க்கை ஒரு வரலாற்றுச் சான்று.
    மனம்போன போக்கில் முடிவெடுத்து வகுப்புகளுக்குச் சென்றபோது எதேச்சையாய் ‘காலிகிராப்’ கற்றுக்கொண்டதன் விளைவு, சில ஆண்டுகள் கழித்துத் தான் உருவாக்கிய மேக் (Mac) கம்ப்யூட்டரில் அழகான பான்ட் உருவாக்க உதவியது.
    வகுப்புகளுக்குச் செல்வது நின்றபின்னர் சிறிது காலம் ஓசியில் விடுதிகளில் தங்கினார். தரையில் படுத்துத் தூங்கினார். சாப்பிடக் காசு இல்லாமல் பழைய கோக் பாட்டில்களைப் பொறுக்கிச் சம்பாதித்தார். நல்ல சாப்பாட்டிற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 7 மைல் நடந்து சென்று ஹரே கிருஷ்ணா இஸ்கானில் போடும் உண்டைகட்டியைச் சாப்பிட்டிருக்கிறார். பின்பு அதுவும் சரிப்பட்டுவராது என்று முடிவு செய்து வீட்டிற்கே திரும்பிவிட்டார்.
    ஒருநாள் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ஸ்டீவ்வின் கண்ணில்பட்டது அந்த விளம்பரம். எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டுமா? என்ற ஒரு வாக்கியம் தாங்கிய அந்த விளம்பரத்தைப் பார்த்த ஸ்டீவ் அடுத்த நொடியில் கிளம்பினார் அந்த கம்பெனிக்கு.
    வீடியோ கேம் தயாரிக்கும் கம்பெனியான அட்டாரி (Attari) என்ற அந்த நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. வேலை தரும்வரை இங்கிருந்து நகர்வதில்லை என்று கம்பெனியின் வாசலில் காத்துக் கிடந்தார். பிடிவாதத்தால் கிடைத்தது வேலை.
    என்னதான் வேலை, நல்ல சம்பளம் என்று எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தாலும் ஸ்டீவ்வின் மன வானில் வேதாந்தம் என்ற வேதாளம் மறுபடியும் விழித்துக்கொண்டது. நான் யார்? என்ற உள்ளுணர்வு அரிக்கத் தொடங்கியது. இந்த உண்மைகளை அறிய அவர் வித்தியாசமான புத்தகங்களை வாங்கி படிக்கத் தொடங்கினார்.
    மற்றவர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டியே ஆக வேண்டும் என்று அவருக்கு வாழ்நாள் முழுக்க வெறியே இருந்தது. ஹிப்பியாக வெறுங்காலோடு கோவில் பிரசாத உண்டைக்கட்டிக்காக மைல் கணக்கில் நடந்த ஸ்டீவ் முழுக்க பழங்கள் மட்டுமே உணவாக மாசக்கணக்கில் எடுத்துக் கொண்டார். அப்படி இருந்தால் உடலில் கழிவே தங்காது என்றும், வியர்த்தாலும் வாடை அடிக்காது என்றும் திடமாக நம்பிக் குளிக்காமல் நடமாடினார்.
    அப்படியே வேலைக்கும் போக, மற்றவர்களை இவருடைய உடம்பு வாடை கஷ்டப்படுத்த, நிர்வாகத்தால் ஆட்கள் குறைவான இரவு நேர ஷிப்டில் பணியமர்த்தப்பட்டார். ஒன்று நாங்கள் இருக்க வேண்டும் அல்லது அவன் இருக்க வேண்டும் என்று கூட வேலை பார்ப்பவர்கள் சொல்லுமளவிற்கு தன் பிடிவாத குணத்தால் இருந்திருக்கிறார்.
    தினசரி மூன்று வேளையும் ஆப்பிள். இந்த வாரம் ஊழ்ன்ண்ற்ள் சாலட் வாரம் என்று விதவிதமாக சாப்பாடு சம்பந்தமாக சோதனை செய்தபடி இருந்த ஸ்டீவின் சிந்தனையில் மீண்டும் ஒரு மணியடித்தது… நான் யார்?
    நான் யார் என்ற கேள்விக்கு எல்லாம் விடை தேட சரியான இடம் இந்தியாவைத் தவிர வேறில்லை என்ற முடிவுக்கு வந்தார் ஸ்டீவ்.
    அடாரி மேனேஜரிடம் சென்று இமயமலை செல்ல வேண்டும் என்றும், செலவுக்குப் பணம் வேண்டும் என்றும் கேட்டார். அனுமதி கிடைத்தது. ஒரு நிபந்தனையுடன். இந்தியாவிற்குச் செல்லும்முன் ஜெர்மனியில் உள்ள தங்கள் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சினையை சரி செய்துவிட்டு இந்தியாவிற்குத் தாரளமாகச் செல்லலாம் என்றார்.
    நிபந்தனையை ஏற்றுக்கொண்டதுடன், தன்னுடைய கல்லூரி கால தோழன் டேனியல் Kottke-க்கு தானே பயணச் செலவையும் ஏற்றுக்கொண்டு அழைத்துச் சென்றார் ஜெர்மனிக்கு.
    ஜெர்மனியின் பிரச்சனைக்கு மிக விரைவில் ஒரு தீர்வைக் கூறிவிட்டு, தன் உள் உணர்வின் தேடலைத் தொடங்க இந்தியா கிளம்பினார். அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஒரு சேர கொடுத்தது இந்தியா. இந்தியாவில் நிலவிய வறுமையைப் பார்த்து மிகப்பெரிய அதிர்ச்சியடைந்தார். ஜீன்சையும், டீ-சர்ட்டையும் துறந்தார்.
    இமயமலை நோக்கி காஷாய லுங்கியில் நடைபயணம் தொடங்கினார். அமைதிக்கு வழிகாட்டும் பல சாமியார்களைத் தேடி அலைந்து கொண்டிருந்த ஸ்டீவ் உத்திரபிரதேசத்தில் உள்ள கைஞ்சி ஆசிரமத்திற்குத் தனது கல்லூரி நண்பருடன் சென்று நீம் கரோலி பாபாவைத் தரிசனம் செய்தார். அவரது போதனையில் மனம் மாறிய ஜாப்ஸ் அவரையே தன்னுடைய ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டார்.
    ஒருநாள், ஒரு கூட்டத்தில் அனைவரையும் விட்டுவிட்டு இவரை மட்டும் அழைத்தார் பாபா. ஆஹா… நமக்கு எப்படியும் மோட்சம் கிடைக்கும் என்று சென்ற ஸ்டீவிற்கு கிடைத்தது நிஜமான மொட்டை. சில மாதங்கள் கடந்த பின்னர்தான் உணர்ந்தார் தான் தேடி வந்த உண்மை, அமைதி, ஞானம் எதுவும் இவரிடம் கிடைக்கப்போவதில்லை என்று முடிவெடுத்து அமெரிக்காவே செல்லலாம் என்ற பிளைட்டைப் பிடிக்கக் கிளம்பினார்.
    இந்தியாவில் ஏழு மாதங்கள் வரை தங்கியிருந்த ஸ்டீவ் எதை வாங்கினாலும் பேரம் பேசியே வாங்கினார். பாலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்தவருடன் சண்டை போட்டார். இந்த அனுபவங்கள் எல்லாம் அவருக்கு ஆன்மீகத்தின் மீது எந்த ஆத்திரத்தையும் ஏற்படுத்தவில்லை.
    மாறாக ஜென் தத்துவத்தின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அசைவ உணவைத் தவிர்த்தார். பிற்காலத்தில் மீனை மட்டும் எடுத்துக்கொண்டார். இத்தகைய ஈடுபாடுதான் அவரை புத்த மதத்தை தழுவச் செய்திருக்கிறது.
    அவரின் ஆன்மிகத் தேடல் திடீரென தடைபட்ட போதிலும், அவரின் பிறப்பின் ரகசியங்களையும், நான் யார் என்ற கேள்வியும் அவரை குடைந்து கொண்டே தான் இருந்திருக்கிறது.
    பவுல் ஜாப்ஸிம், பவுலா ஜாப்ஸிம் தான் தன் பெற்றோர்கள் என்று அடித்தல் திருத்தம் இன்றி வலியுறுத்திச் சொன்னாலும் தன்னைப் பெற்றவர்களைத் தேடும் தேடுதல் வேட்டைத் தொடர்ந்தது தீயாய்.
    பிற்காலத்தில் தான் பிறந்த பின்னர் தன்னுடைய உயிரியல் பெற்றோர்கள் திருமணம் செய்து கொண்டதும், ஒரு தங்கை இருப்பதையும் அறிந்த பின்னரே தீர்த்தது அவரின் தேடுதல் தாகம்.
    இதையெல்லாம் எப்படி கண்டுபிடித்தார் என்பது ஸ்டீவ்வின் வாழ்க்கையில் ஸ்டீவ்விற்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களில் ஒன்று. தன்னைக் கைவிட்ட அம்மாவையும், அப்பாவையும் விந்து அணுவைச் சேகரித்துக் கருத்தரித்துப் பெற்றுப் போட்டவர்களாக வாழ்க்கை முழுக்க கண்டார்.
    புற்றுநோய் முற்றிய நிலையில் படுக்கையில் இருக்கும்போது ஸ்டீவ்வின் உயிரியல் அப்பா எழுதிய அன்பான கடிதத்திற்கு ‘Thank You’ என்று ரெண்டே வார்த்தையில் பதில் எழுதி அலட்சியப்படுத்தினார். ஒரு வேலை ஸ்டீவ் வாழ்க்கையில் எல்லாமே பைனரியாக இருந்திருக்கலாமோ?
    இப்படி பிறந்ததுமே பெற்றோரால் கை கழுவப்பட்ட குழந்தை, பள்ளியில் ஒழுங்காகப் படிக்காமல் கல்லூரியைக் கூட தாண்டாத, வேலைக்கும் சரியாகச் செல்லாமல், சாமியாராக கிப்பித் தலையுடன் இந்தியாவிற்கு வந்த ஸ்டீவ்விற்குள் நல்ல விழுமியங்களை விதைத்தது எப்படி? அந்த விதை விருட்சமாக வளர்ந்தது எப்படி?…
    -தொடரும்…

    தங்க மோகம்

    தங்கம் இந்திய மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தோடு இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. தங்கம் அழகு ஆபரணம் மட்டுமல்ல. அவசர பணத்தேவைக்கு கைகொடுத்து உதவும் நண்பனும் கூட. தங்கம் ஒரு விலை மதிப்புள்ள பொருளாகக் கருதப்படுவதோடு மட்டுமல்லாமல் மதிப்புமிக்க ஒரு மங்கலப் பொருளாகவும் மதிக்கப்படுகிறது.
    இந்தியாவில் பெரிய அளவில் தங்கம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் இறக்குமதி பொருட்களில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தங்கம் உள்ளது. இந்தியாவில் 1982ம் ஆண்டு வாக்கில் 65 டன் தங்கம் தேவையாயிருந்தது. ஆனால் இன்றைக்கு அது 500 டன் அளவுக்கு உயர்ந்து விட்டது.
    முன்பெல்லாம் நிலம் வாங்குவது, வீடு கட்டுவது, வங்கியில் டெபாசிட் செய்வது உள்ளிட்ட பல்வேறு சேமிப்புகளில் மக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் இப்போது தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். பிறவகை சேமிப்புகள் குறைந்து தங்கத்தின் மீதான சேமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    தங்கம் சுரங்கம் தோண்டி வெட்டி எடுக்கப்படுகிறது. தங்கம் பாறைகளுக்கு நடுவே ஒரு கொடிபோல் பரவி இருக்கும். தங்கம் படர்ந்திருக்கும் அத்தகைய பாறைகளை தங்கப் படிகக்கல் என்கிறார்கள். பாறைப் படிவுகளிலிருந்து தங்கம் பல்வேறு வேதியியல் முறைகளில் பிரித்தெடுக்கப்படுகிறது.
    தங்கம் மஞ்சள் நிறம் கொண்ட பளப்பளப்பான ஒரு உலோகம். எவ்வளவு காலமானாலும் தங்கம் கருக்காது. 1063 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் தங்கம் உருகும். அப்போது இதன் நிறம் பச்சையாகத் தோன்றும்.
    இதனை தகடாக அடிக்கவும், கம்பியாக நீட்டுவதும் எளிது. எனவே தங்கம் ஆபரணங்களின் ராஜாவாகத் திகழ்கிறது. ராஜ திராவகம் எனப்படும் பாதரசத்தில் தங்கம் எளிதில் கரையும்.
    கேரட்
    தங்கத்தின் தரம் கேரட் (இஹழ்ஹற்) என்றஅளவில் அளக்கப்படுகிறது. தங்கத்தின் சுத்தம் குறையக் குறைய அதன் காரட் மதிப்பும் குறையும். சுத்தமான தங்கம் என்பது 99.99% சுத்தத்தை குறிப்பதாகும். இதைத்தான் நகை வியாபாரிகள் 999.9 என்று கூறுவர். ஆக, 999.9 அளவு சுத்தம்தான் 24 காரட் தங்கம் என்பது.
    ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இன்றுள்ளது போல மின்னணு தராசுகள் கிடையாது. அப்போது ‘கரோப்’ என்றமரத்தின் விதைகளை தங்கம், வைரம் போன்றமதிப்பு மிக்க உலோகங்களை எடை போடுவதற்கு உபயோகப்படுத்தினர். கிரேக்க மொழியில் கரோப் என்பது ‘கரோட்டின்’ என்று மாறி, பிற்காலத்தில் இந்தச் சொல்லே ‘காரட்’ என்றாகி விட்டது.
    தங்கம் மென்மையான உலோகம் என்பதால் அத்துடன் மற்றஉலோகங்களைக் கலக்காமல் நகை செய்ய இயலாது. ஆபரணங்கள் செய்யும்போது தங்கத்துடன் செம்பு போன்றஉலோகங்களும் கலக்கப்படுகின்றன. தங்கத்தை நகையாகச் செய்யும்போது, காட்மியம் என்றஉலோகம் பற்றவைக்க உபயோகிக்கப்படுகிறது. இதைத்தான் நகைக்கடைக்காரர்கள் தங்கள் கடைவிளம்பரங்களில் ஓஈங என்று போட்டுக்கொள்கின்றனர். தங்கத்தின் நிறம் அதனுடன் கலக்கப்படும் மற்றஉலோகங்களைப் பொறுத்து அமையும். நாம் விரும்பும் தங்கத்தின் நிறத்திற்குத் தகுந்தாற்போல ஒரு கிராம் தங்கத்தோடு 90 மில்லிகிராமிலிருந்து, 700 மில்லிகிராம் வரை ஏனைய உலோகங்கள் கலக்கப்படுகின்றன. நகை வாங்கும்போது, நகையில் கலக்கப்பட்டுள்ள மற்றஉலோகத்துக்கும் தங்கத்தின் விலையையே கொடுத்து வாங்குகிறோம். அந்த வகையில் எப்படிப்பார்த்தாலும் நகைக்கடைக்காரர்களுக்கு ஒரு பவுனுக்கு, ஒரு கிராம் தங்கத்தின் விலை இலாபமாகக் கிடைக்கும்.
    ஹால்மார்க் முத்திரை
    ஹால்மார்க் முத்திரை என்பது அதிகாரப்பூர்வமான ஒரு சின்னத்தையோ, எண்ணையோ நகைகளின் மீது பதிப்பது ஆகும். இத்தகைய ஹால்மார்க் முத்திரைகள் நகைகளின் தரத்திற்கு சான்றாகவும், வாங்குவோர் மனதில் நம்பிக்கையூட்டுவதாகவும் அமையும்.
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் தங்கத்தின் தரம் பற்றி அறிந்திருந்தனர். முறையான ஹால்மார்க் முத்திரை, தங்கத்தின் மீது பதிக்கும் வழக்கம் 13ம் நூற்றாண்டில் பிரான்சில் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர் அது இங்கிலாந்திற்கு பரவி லண்டனில் உள்ள பிரசித்தி பெற்றபொற்கொல்லர் அரங்கிலும் (எர்ப்க்ள்ம்ண்ற்ட்ள்’ ஏஹப்ப்) நுழைந்து விட்டது. இந்த அரங்கில்தான் தங்கத்தின் சுத்தத்திற்கான பொற்கொல்லர் முத்திரை அந்த காலத்தில் பதிக்கப்பட்டு வந்தது. பின்னர் அந்த எர்ப்க்ள்ம்ண்ற்ட்’ள் ஏஹப்ப் என்றசொல்லே காலப்போக்கில் மருவி “ஏஹப்ப்ம்ஹழ்ந்” என்றாகிவிட்டது.
    நகை உருவாக்கம்
    அந்தக் காலத்தில் தங்க ஆசாரிகள், தமது வீடுகளிலேயே பட்டறைகள் அமைத்திருப்பார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடுவர். நகை தேவைப்படுவோர் தங்கத்தை நகையாகவோ, தங்க நாணயமாகவோ ஆசாரியிடம் கொடுத்தால் அவர் நகையாக செய்துத் தருவார்.
    ஒரு நகையின் டிசைன் அல்லது மாடல் போன்றவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அதில் பதிக்கப்படும் கல், முத்து போன்றவைகளை டிசைனுக்குத் தகுந்தவாறு நுணுக்கமாக பொருத்துவது, மெருகூட்டுவது என்று அதன் உருவாக்கத்தின் சகல அம்சத்திலும் அந்த ஆசாரியே பங்குபெற்றிருப்பார். இவ்வகையான உற்பத்தி முறையில் ஒரு நகையை உருவாக்க அதன் வேலைப்பாடுகளின் நுணுக்கத்தைப் பொருத்து ஒருவாரமோ பத்துநாளோ ஆகலாம்.
    இந்த பழையக்கால உற்பத்தி முறையில் தங்க நகை வடிவமைப்புத் தொழில் பல நூற்றாண்டுகளாக பெரியதோரு மாற்றம் இல்லாமல் அப்படியே தொடர்ந்து இருந்து. கொண்டிருந்தது. ஏனென்றால் தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மேலும் தேவைக்கு சற்று அதிகமாகவே வாங்கி வைத்துக் கொள்ளும் பழக்கம் சில செல்வந்தக் குடும்பங்களில் மட்டுமே இருந்தது.
    தங்கத்தில் முதலீடு
    புதிய தாராளமயக் கொள்கையின் அறிமுகம் இந்த நிலையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. அதாவது ‘தங்கம் ஒரு சேமிப்பு’ என்றநடுத்தர வர்க்கத்தின் மனோபாவம் மாறி ‘தங்கம் ஒரு அந்தஸ்தின் அடையாளம்’ என்றநிலை ஏற்பட்டு விட்டது.
    1991ல் என்.ஆர்.ஐ. இந்தியர்கள் இந்தியாவுக்குள் தங்கத்தை கொண்டு வருவதிலும், தங்கத்தை இறக்குமதி செய்வதிலும் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 1990ல் இருந்து 1998 வரை தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 15 சதவீதமாக அதிகரித்தது. இது அதே காலகட்டத்தில் அதிகரித்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
    இப்படி வௌ;ளம்போல் உள்ளே நுழைந்த தங்கம், நகை உருவாக்கத் தொழிலில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. சிறிய அளவிலான நகைக் கடைகளுக்குப் போட்டியாக பெரிய பெரிய நகை மாளிகைகள் உருவாகக் தொடங்கின. வாடிக்கையாளர்களும் ஆசாரிகளிடம் சென்று நாட்கணக்கில் காத்திருந்து அவர்கள் செய்து தரும் ஒரே மாதியான டிசைனை ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். ‘கடைக்குச் சென்றோமா, பத்துக்கு இருபது டிசைன்களைப் பார்த்தோமா, அதில் ஒன்றைப் பொறுக்கியெடுத்தோமா’ என்றமனநிலைக்கு வந்துவிட்டனர்.
    அண்மைக் காலத்தில் மிகவும் பிரபலம் அடைந்த ஒரு தினம் ‘அட்சய திருதி’ நாள். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான மக்கள் இந்த தினத்தைப் பற்றி கேள்விப்பட்டதே கிடையாது. எங்கோ பரணில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு தினம் தூசு தட்டி கொண்டு வரப்பட்டு விட்டது. ஊடகங்கள் மாறி மாறி மக்களை மூளைச்சலவை செய்து அட்சய திருதி நாளில் நகை வாங்கினால் ‘நல்லது’ என்றும் ‘ஐசுவரியம்’ பொங்கும் என்றஎண்ணத்தை ஏற்படுத்திவிட்டன. ஏழ்மை நிலையில் உள்ள மக்களும் கூட அந்த குறிப்பிட்ட நாளில் “ஒரு குண்டுமணி அளவுக்காவது தங்கம் வாங்கி வைப்போமே” என்று சிந்திக்கும் அளவுக்கு ஒரு சடங்காகவே மாறிப்போனது. போதாக்குறைக்கு சினிமாக் கவர்ச்சியும் துணைக்கு வந்து விட்டது. அதாவது துணிக்கடைகளைப் போலவே நகைக்கடைகளுக்கும் பிரபல சினிமா நடிகைகள் நடிகர்கள் விளம்பரம் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

    வாகை சூட வந்தவர் இல.செ.க.

    இன்றைக்கு, சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், பாதையோரத்தில் நிற்கும் நூறாண்டுகளைத் தாண்டிய மரங்களை, வேரோடு வெட்டிச் சாய்த்திடுவதைக் காணும்போது, விழிகளில் குருதிப்புனல் கொப்பளிக்கிறது. “இத்தகு பயன்தரு மரங்களைக் கொல்வது, அக்காலத்தில் பயன்கருதாது நட்டு வளர்த்த அந்தப் பண்பாளர்களுக்கு, நாம் இழைக்கும் பச்சைத் துரோகம்” என்று அற உணர்வு கொண்டோர் உள்ளம் அரற்றுகிறது. கையும் காலும் வெட்டப்பட்டு, கண்ட துண்டமாய்க் கிடக்கும் இந்த மரங்களை வளர்க்க, முன்னர் நமது பழந்தமிழர்கள் எவ்வாறு பாடுபட்டனர் என்பதை அறிவதற்காக, டாக்டர் இல.செ.க. அய்யா அவர்களுடைய “தமிழர் வேளாண்மை மரபுகள்” (Agricultural Heritage of Tamils) என்ற ஆய்வேட்டைப் புரட்டினேன்.
    அதுசமயம், 1985ம் ஆண்டில் அவர் டாக்டர் பட்டம் பெறுவதற்காக, இந்த ஆய்வேட்டை எழுதியதும், அதுகுறித்து, நாங்களெல்லாம், அவரோடு அமர்ந்து அளவளாவியதும் நினைவுக்கு வந்தன. அந்த நினைவலைகளை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்………
    அவரது அலுவலக அறைக்குள் சுமார் 10, 15 பேர் உட்கார்ந்திருந்தோம். பேராசிரியர்கள், நண்பர்கள், மாணவர்கள் எனப் பல்வகையினர் நட்சத்திரக் கூட்டங்களாய்ச் சூழ்ந்திருக்க, நடுவே அய்யா அவர்கள் நிலவாய் ஒளிர்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரது ஆய்வேட்டைப் பற்றிப் பலரும் கூறிய கருத்துக்களைக் கேட்டவாறு இருந்தார்.
    “அறிவியல் என்றாலே, அது அயல்நாட்டுச் சரக்கு என்று நினைப்பவர்கள், உங்கள் ஆய்வேட்டைப் படித்தால், நமது இலக்கியத்தில் இத்தனை அறிவியல் கருத்துக்கள் உள்ளனவா என்று வியந்துபோவார்கள்” என்றார் ஒரு பேராசிரியர்.
    “ஆய்வு நூலின் வடிவம், கருத்து, அதைப் புலப்படுத்தியுள்ள முறை எல்லாமே பிரமாதம்” என்றார் இன்னொருவர்.
    “சங்க இலக்கியத் தாவரங்களின் 155 பெயர்களையும், அவற்றிற்கான கலைச்சொற்களையும் (Botanical Name) இணைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்றார் ஒரு மாணவர்.
    “சங்க கால இலக்கியம், இலக்கணம், நிகண்டு, அகராதி, தமிழ் மற்றும் ஆங்கில அறிவியல் நூல்கள் என்று 192 நூல்களைப் படித்து, தொகுத்துள்ளீர்களே எப்படி?” என்றார் இன்னொரு மாணவர்.
    “புள்ளி விவரம் நிறையத் தந்திருக்கிறீர்கள். நெல்லிலே, செந்நெல், வெண்ணெல், குளநெல், தோப்பி நெல், சாலி நெல், ஜவன நெல், மூங்கில் நெல் என்று பல ரகங்கள். அதேபோல, மரங்கள், பழங்கள், மலர்கள், கால்நடைகள், வேளாண்கருவிகள் எல்லாவற்றையும் வகைப்படுத்தியுள்ளீர்கள். வேளாளர்கள் சமுதாயம் எப்படி வாழ்ந்தது? வேளாண்மைச் செயல் முறைகள் என்னென்ன? என்றெல்லாம் விளக்கியுள்ளீர்கள்” என்றார் ஒரு நண்பர்.
    “இன்று ஏக்கருக்கு 2000 கிலோ விளைச்சல் எடுப்பதை இலக்காக நினைக்கிறோம். ஆனால், பழந்தமிழர்கள் ஏக்கருக்கு 4000 கிலோ எடுத்ததாக இலக்கியத்தில் உள்ளதாக எழுதியுள்ளீர்கள். ஆச்சரியமான செய்தி” என்றார் இன்னொரு நண்பர்.
    “பகல் பொழுதில் வழி நடைப்பயணம் செய்வோர் நிழல் தங்கி, இளைப்பாறிச் செல்ல, மரங்களை வளர்த்தனர்; அது அவர்களது அற உணர்வையும், அருள் உணர்வையும் காட்டுகிறது” என்றார் வனவியல் துறைப் பேராசிரியர்.
    “விளைந்த வரகினை இரந்தவர்க்கு ஈந்துவிட்டு, அதன்பின் விருந்தினர் வர, அவர்களுக்கு விதைத்தினையை சோறாக்கி விருந்தளித்தனர் வேளாளர்கள் என்று உழவர்களின் உயர்ந்த பண்பாட்டைச் சுட்டியுள்ளீர்கள்” என்றார் மற்றொரு தமிழ்ப்பேராசிரியர்.
    இப்படிப் பலவாறு நூலின் சிறப்பியல்புகளை எல்லோரும் நயந்துரைத்தனர். இந்த நூலின் அணிந்துரையில், தமிழறிஞர் முனைவர் ம.ரா.போ. குருசாமி அவர்கள், “நுண்மாண் நுழைபுலன் என்று வள்ளுவரின் முப்பால் சுட்டிய மூவகைத் திறனும் முழுதுறப்பெற்றது இவ்வாய்வேடு என்று சொல்லலாம். புலமையரங்கிலும், ஆய்வரங்கிலும் உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்பதற்கு கந்தசாமியின் ஆய்வே சிறந்த சான்றாகும். செம்மையான முயற்சியில் சிறப்புற வாகை சூடியவர் கந்தசாமி” என்று சிறப்புத்து எழுதியுள்ளார் என்பதையும் நான் எடுத்துக் காட்டினேன்.
    அதோடு அய்யாவிடம், “இந்த ஆய்வுக்குத் தூண்டுகோலாக அமைந்தது எது?” என்றும் கேட்டேன். அதற்கு அய்யா அவர்கள், “தமிழகத்துப் பயிர்பச்சைகளை அறிய விரும்பும் பயிர்நூல் வல்லார் சங்க இலக்கியப் பாடல்களை முழு நம்பிக்கையோடு பயிலலாம் என்ற டாக்டர் மு.வ. அவர்களின் கருத்தே இவ்வாய்வுக்குத் தூண்டுகோலாக அமைந்தது. மேலும், தமிழர் வேளாண்மை மரபுகள் பற்றி இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த ஆய்வு முதன்மையாகவும், முழுமையாகவும் மேற்கொண்ட முன் முயற்சியாகும்” என்றார்.
    நண்பர் டாக்டர் கே.ஏ. பொன்னுசாமி, “இந்த ஆய்வின் பயன்பாடு என்ன?” என்று கேட்டார். அதற்கு அய்யா, “நிறைய இருக்கின்றன. ஆய்வில் எழுதியிருக்கிறேன். அவற்றில் சிலவற்றைச் சொல்கிறேன்.
    1. ஒரு நாட்டில் வேளாண்மை வளர்ச்சிக்கு நீர்வளமே ஆதாரம். அதை உருவாக்கித் தருவதையும், பகிர்ந்தளிப்பதையும் அரசு முதற்கடமையாகச் செய்ய வேண்டும்.
    2. பண்டைய நாளில், தானியங்களைச் சேமிக்கக் குதிர்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த அமைப்பின் அடிப்படையில், தானியக்கிடங்குகளை விரிந்த அளவில் அமைத்தால், தானியமணிகளைக் கெடாது பாதுகாக்கலாம். (இன்று உழவர்களுக்கு ஊரகக்கிடங்குகள் தன்ழ்ஹப் எர்க்ர்ஜ்ய்ள் கட்டுவதற்கு வங்கிகள் நிதியுதவி வழங்குகின்றன என்ற செய்தியை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்).
    3. பண்டைய நாளில், நன்செய்க்கும், புன்செய்க்கும் தனித்தனி பாதுகாப்புக் கருவிகள் இருந்ததைப் போல, இன்றைய நிலையிலும் இடத்திற்கும் காலத்திற்கும் பயிருக்கும் ஏற்ற கருவிகளைக் கண்டறிய வேண்டும்.
    4. பண்டைய நாளில் வேளாண் விளைபொருள் விற்பனை பண்டமாற்று முறையில் நடந்தது. அதேபோல, வேளாண் விளைபொருளுக்கு உரிய விலையும், விற்பனை வாய்ப்புகளும் பெருகினால்தான், உழவர் சமுதாயம் மேம்படும்.
    5. நீர்நிலைகளை அரசனே உருவாக்கிக் கொடுத்ததால், நதிகள் நாட்டுடைமையாகக் கருதப்பட்டன. அதை இன்றும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
    6. யா, ஓமை, இருப்பை போன்ற வறட்சியைத் தாங்கும் மரங்களை இனங்கண்டு பயிரிட்டால், மரவளமும், மழைவளமும் செழித்தோங்கும்.
    7. பண்டை நாளில் வேளாண்மைத் தொழில் அனைவராலும் மிகச்சிறப்பான தொழிலாகப் பேசப்பட்டது. ஆனால் இப்போது அதற்குரிய முக்கியத்துவம் இல்லை. அதற்கு மறுவாழ்வு தரவேண்டும்”
    …இப்படி அய்யா சொல்லிக்கொண்டே போனார்.
    முடிவில், அவரை மனதாரப் பாராட்டி, வாழ்த்திவிட்டு திரும்பினோம்.
    எதைப் பேசினாலும், எதை எழுதினாலும், அது சமுதாயத்திற்குப் பயன்படுகின்றவையாக இருக்க வேண்டும் என்ற நெறிகொண்டு வாழ்ந்த அய்யாவை எண்ணுகையில் இதயம் பெருமையால் கனக்கிறது. வேளாண் வல்லுனர்களும், உழவியல் ஆய்வாளர்களும், வேளாண் ஆர்வலர்களும், இலக்கிய அன்பர்களும், இந்நூலை நிச்சயம் படிக்க வேண்டும். அது வருங்கால வேளாண் வளர்ச்சிக்குரிய சிந்தனைகளை, உங்கள் மனதிலே பயிரிடும் என்பதில் ஐயமில்லை.
    நான் ஏற்கனவே சொன்னது போல், அறிஞர் டாக்டர் ம.ரா.போ. குருசாமி அவர்களின் கருத்துப்படி, அய்யா இல.செ.க. அவர்கள் வாகை சூட வந்தவரே”

    உள்ளத்தோடு உள்ளம்

    மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு எப்போதாவது வருமா என்றால் இனி இல்லை என்றேகூறிவிடலாம். காரணம், இருக்கும் பிரச்சனைகளிலிருந்து வெளிவருவதற்குள் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்துகொண்டே இருந்தால் எப்படித் தீர்வு வரும்.
    மாத வருமானத்தை அதற்கு இத்தனை, இதற்கு இத்தனை என்று பிரித்து பிரித்து ஒரு ரூபாய் மிச்சமின்றி செலவு செய்துவிட்டு ‘அப்பாடா’ இந்த மாதம் கடன் இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விடுபவர்கள் எண்ணிக்கையில் குறைவு. எப்படியும் கடன்பட்டே தீரவேண்டும் என்றநிலையில் ஒருவருக்கு இருவர் வேலை பார்த்து அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்பவர்களே எண்ணிக்கையில் அதிகம்.
    இப்படிப்பட்டவர்களை மனதில் வைத்துத்தான் ஆளும் அரசு தங்களது திட்டங்களை, செயல்பாடுகளை அதிகம் முன் வைக்க வேண்டும் என்பதைத் தான் அனைவருமே எதிர்பார்க்கிறார்கள். ஆனால்…
    சுமைதாங்கி கல்லுக்கு ‘சுமை’ சுகம் தான் என்றாலும் அதிகச் சுமை வேண்டாமே… ‘வாக்கு’ தந்தவர்களின் வாழ்விற்கு அதிகச் சுமைகளைத் தராமல் கொஞ்சம் சுகங்களையும் தாருங்கள் உரியவர்களே…
    அன்புடன்

    மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !!

    வயது என்பது மனதைப் பொருத்த விஷயம். நாம் அதைப்பற்றி மனதை அலட்டிக்கொள்ளாமல் இருந்தால், அது ஒரு விஷயமே அல்ல என்பதைப் போல 73 வயதில் 23 வயது இளைஞனைப் போல இன்னும் உற்சாகத்துடன் மருத்துவத் தொழிலில் செயல்பட்டு வருபவர் இவர்.
    இந்திய மருத்துவக் சங்கத் தேர்வில் இந்த ஆண்டும் போட்டியிட்டு இளைய சமுதாயத்தின் நல்லாதரவுடன் வெற்றி பெற்றிருப்பவர்.
    முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு இந்திய மருத்துவ உலகிற்கு தனிப்பெரும் பங்காற்றியிருப்பவர்.
    மருத்துவ உலகின் ‘களைகளை’ அகற்றி பல் மருத்துவத்தின் மகத்துவத்தை பல் மருத்துவர்களுக்கும், மக்களுக்கும் கொண்டு சேர்க்க அயராது உழைத்து மருத்துவ அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

    Continue Reading »

    சாதிக்கலாம் வாங்க

    எந்த ஒரு முயற்சியலும் வெற்றி பெற வேண்டும் என்றால் திட்டமிடல் மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற திட்டமிடுதல் என்பது மிக மிக அவசியம். அந்த வகையில் நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு உழைத்தது சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் மூன்றாமிடம் பெற்று சாதித்திருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்.வி. வருண்குமார். இந்த வெற்றி எப்படி உங்களுக்கு சாத்தியமானது என்றபோது அவர் தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டது பலரின் வெற்றிக்கு பாலமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

    “திருச்சி சேம்பியன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பு. சென்னை ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம். 2003ம் ஆண்டில் நண்பர்களுடன் ‘காக்க காக்க’ திரைப்படம் பார்த்தது தான் என் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தை பார்த்த பிறகு நாமும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஒரு ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என் மனதில் தோன்றிய எண்ணத்தை செயல்வடிவம் கொண்டுவர பெருமுயற்சி மேற்கொண்டேன். வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கூறுவதைப் போல எந்த ஒரு வெற்றியும் ஒரே நாளில் கிடைத்துவிடுவதில்லை. தொடர் பயிற்சியும், தொடர் முயற்சியும் இருந்தால் மட்டுமே நமது கனவுகளை நனவாக்க முடியும் என்பதை மனதில் விதைத்துக் கொண்டு சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொள்ளத் திட்டமிட்டேன். 2007ல் இருந்து தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான வழிவகைகளை படிப்படியாக மேற்கொண்டேன்” என்றார் டாக்டர் ஆர்.வி. வருண்குமார். மேலும்,

    திட்டமிடலின் ஒரு பகுதியாக முதலில் பிரிலிமினரி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சியை மேற்கொண்டேன். எட்டக்கூடிய திட்டமிடுதலை வகுத்துக்கொண்டதுடன் குறிப்பிட்ட கால அளவில் அதை செய்தும் முடித்தேன். தொடர்ச்சியான முன்னேற்றம் தன்னம்பிக்கையை உயர்த்தியது. இத்தகைய தன்னம்பிக்கை தான் பிரிமிலினரி தேர்வில் எனது வெற்றிக்கு வழிவகுத்தது.

    பிரிலிமினரி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் எந்தவித பயமுமின்றி மெயின் தேர்வுக்குத் தயாராக ஆரம்பித்தேன். இந்தத் தேர்வில் முதல் தேர்வாக பொதுநிர்வாகமும் (Public Administration), இரண்டாவதாக சமூகவியலும் (Sociology) எடுத்தேன். மெயின் தேர்வுக்குத் தயாராகும்போது தமிழ் மற்றும் ஆங்கில நாளிதல்களைத் தொடர்ந்து படித்தேன். மேலும் ‘விக்கிபீடியா’ வழியாகவும், Press Information Bureau-ன் மூலமாகவும், Google Books மூலமாகவும் எனக்குத் தேவையான செய்திகளை எடுத்துக்கொண்டேன் என்றவர்

    இப்படித் தொடர்ந்து பயிற்சி செய்ததால்தான் ஒவ்வொரு தேர்வையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடிந்தது. பொதுக்கட்டுரையை மட்டும் கடைசி நிமிடத்தில் எழுதி முடித்தேன். மற்ற தாள்களை எல்லாம் குறைந்தபட்சம் 5 நிமிடங்களுக்கு முன்னரே எழுதி முடித்தேன். இதற்குக் காரணம் நான் தொடர்ச்சியாக மேற்கொண்ட பயிற்சிதான் என்றார்.

    புதிதாக இந்தத் தேர்வை எழுத ஆயத்தமாகிக் கொண்டிருப்பவர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது என்ன என்றபோது, “குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். பிரிமிலினரி தேர்வுக்கு முன்னர் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 3 மணிநேரமாவது இரண்டு தேசிய நாளிதழ்களைத் தொடர்ந்து படியுங்கள். சராசரியாக 6 முதல் 8 மணி நேர பயிற்சியை மேற்கொண்டால் மட்டுமே உங்களது லட்சியத்தை நிறைவு செய்ய இயலும்” என்றார்.

    இப்படித் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டு கடின உழைப்பை வெளிப்படுத்தியவரின் பொழுதுபோக்கு உலக சினிமாவையும், Documentaries-யும் பார்ப்பதுதான். அத்தகைய படங்கள் தான் தனக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாக கூறியவர், சச்சின் டெண்டுல்கர் தான், தனது ‘Role Model’ என்கிறார். மேலும் பொருளாதாரப் பேராசிரியராக இருக்கும் தன்னுடைய அப்பாவும், ஹோம் மேக்கராக இருக்கும் அம்மாவும், அமெரிக்காவில் எரிக்ஸன் கம்பெனியில் வேலை பார்க்கும் தன்னுடைய சகோதரரின் உதவியின்றி இத்தேர்வில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்கிறார்.

    செயல்பாடு உள்ள திட்டமிடலே, “வெற்றியாக” மாறுகிறது என்று உணர்த்திய டாக்டர் ஆர்.வி. வருண்குமார், ஐ.ஏ.எஸ். அவர்களை தன்னம்பிக்கை வாழ்த்தி மகிழ்கிறது.