அடையாளம் அடையலாம் !
குழந்தைகள் பெற்றோர்களுக்கான ஆசியர்கள் போல … சுட்டி டி.வியில் குழந்தைகளோடு சேர்ந்து ட்டில் ஐன்ஸ்டைன் பார்த்திருக்கிறீர்களா? நாம் செய்து இருக்கின்றோம். நிறைய இரசிக்க முடிகின்றது. அதில் ஒரு எபிஸோடில் இரண்டு மரங்கொத்திப் பறவைகளைக் காட்டினார்கள். நேரில் நாம் பார்த்ததும் இரண்டுதான். காலை முதல் மாலை வரையிலான வாசத்தில், நமது பூங்கா மலர்களின், வாசனையில் குளித்ததை தவிர, ‘Selfish Gene’ என்கின்ற ரிச்சர்ட் டாகின்ஸ்-ன் புத்தகத்திருந்து தீபக் சோப்ராவின் க்னோவிங் (Knowing) எர்க் வழியாக அசோகமித்திரனின், ‘ ஒற்றன் ‘ வரை படித்ததில் இடைச் செருகலாக இரண்டு நாட்கள் இரண்டு உண்மையான மரங்கொத்திப் பறவைகள் காட்சி கொடுத்தன.
ஆங்கிலக் கவிஞனொருவன், ‘மனிதன், எண்பது வயதில் பிறந்து பிறகு படிப்படியாக வயது குறைந்துகொண்டே வந்து, குழந்தையாகி, மறைந்து போக வேண்டும்.’ அது போல கடவுள் படைத்திருந்தால் நல்லது’ என்று ஆசைப்பட்டது நினைவு வந்தது. பெற்றுக் கொடுப்பதை தவிர குழந்தைகளுக்கான எல்லாக் காரியங்களையும் நாம் இரசித்துச் செய்கின்றோம் என்றபொழுது, ஏன் அதற்கும் முயற்சியுங்களேன் என்று பதில் வந்தது. இதைத் தொடர்ந்து ஒரு கேள்வி . . .
பூங்காவில் கேட்பாரற்று பாழடைந்து போன இரண்டு மயில் சுடுமண் உருவங்களை தூசி தட்டி தோட்டக்காரரின் உதவியோடு நீராட்டிப் பாராட்டித் துடைத்து நேரோலேக் பெய்ன்ட் வாங்கி அடித்து புதுப்பொவினை உருவாக்கிய பொழுது அழகூட்டும் பணிகள் மனதுக்கு நிறைவூட்டுவதாக நமது தோழி சொன்னார்கள். மயிற்கு புது அடையாளம் கிடைத்திருந்தது. உள்ளம்; வர்ணம் தீட்டுகின்றபொழுதோ? கட்டுரை எழுதுகின்றபொழுதோ? கவனக் கூர்மையை வலுப்படுத்திக் கொள்கின்றது. பன்னிரெண்டாம் வகுப்பு பாட்டனி பாட ரெக்கார்டிருந்து கால்நடை மருத்துவ பேதலாலஜி வகுப்பு பயிற்சி ஏடு உட்பட; பலமுறை; பாட புத்தகங்களில் இருப்பதையே அடையாளம் மாறாமல் மீண்டும் நகலெடுத்து வரைந்தது உண்டு. அதற்கான காரணம் இப்பொழுதுதான் புரிவதாக உணர முடிந்தது. ‘அமைதி’, இரமண மஹரிஷியும், இரவீந்திரநாத் தாகூரும் புத்தபிரானும் மெச்சிப் பேசிய ‘அமைதி’ ஆட்டோமேடிக்காக கிடைப்பதற்கான அரிய வழிகளில் ஒன்று ரெக்காடு நோட்டு எழுதுதல். இதை தவத்திற்கான அடையாளம் என்று சொன்னாலும் மிகையாகாது. சிலைக்கு வண்ணம் தீட்டுதல் மயில் முடிந்து ஒரு வால்லா சிங்க சிலை, தோழி, குழந்தைகள் கைவண்ணத்தால் கலைவண்ணம் பெறதொடங்கி இருந்தது.
இக்கட்டுரை முழுக்க இராமநாதபுர பூங்கா நிகழ்ச்சிகள் இழையோடியிருக்கின்றன. இக்ஸோரா (ஐஷ்ன்ழ்ஹ) மலர்களைப்பார்த்து இது இட்ப் பூ என்று சொன்னபொழுது, இதை சமைக்க முடியுமா என குழந்தை கேட்டால் அது மாறுபட்ட கோண அடையாளம். அவசியமாக ஆனால் அதிசயமாக கிடைத்த எதிர்பாராத ஓய்வில், ‘தெய்வத்திருமகள்’ பார்த்தது, ஒரு எழுதத்தக்க நிகழ்வு. அப்பாக்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இருக்கும் ஆழமான அன்பின் அடையாளம். பார்த்துவிடுங்கள்.
ப்ளுமேரியா மலர்மரத்தில் குயில்களின் கூட்டம் ஒன்று சரசரவென தம்முள் வேகமாக பேசிக்கொண்டு சச்சரவிட்டு படபடக்கின்றன. சலீம் அயின் புத்தகத்தில் ஆண்குயில்கள் கறுப்பாகவும், பெண் குயில்கள் புள்ளிப் புள்ளியாக இருஞ்சாம்பல் நிறத்திலும் இருப்பதை டைமார்ப்பிஸம் Sexual Dimorphism அடையாளம் என்று சொல்யிருப்பார். நீண்ட நாட்களாக குயில் என்றால் எல்லாமே கறுப்பாய்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அவற்றின் சத்தத்தில்கூட ஆண் குயில் கூஊ – கூஊ (Koo – ooo) என்றும் பெண்குயிலோ . . . . Kik, Kik, Kik என்றும் சத்தமிட்டு கொஞ்சிக் கொள்ளும் என்று சொல் Wikipedia வில் படித்தேன். இது ஒ அடையாளம். அதை அனுபவிக்க முடிந்தது. சலீம் அ மிகவும் சுவையாக இந்த பறவைகளின் அன்பு விளையாட்டை எழுதியிருப்பார். ரிச்சர்டு டைசின்ஸ் சொல்வது போல ஜீன்கள் தமது அடையாளத்தை பரம்பரைகள் வழியாகப் பரப்புவதற்கான எல்லா முயற்சிகளையும் இயற்கை செய்துவிடுகின்றது.
ப்ளுமேரியா மலர்களை அடையாளம் கண்டுகொண்டதே (Plumeria) ஒரு தனி கதைதான். வாகன வசதியில்லாத தர்மபுரியின், ஏரிமலை ஏறிய, இறங்கிய ஏழெட்டு செங்குத்தான கிலோ மீட்டர்களில் இம்மலர்களின் அடையாளம் தேடவேண்டும் என்று முதன் முத-ல் தோன்றியது. உள்ளூர் மக்கள், ‘மலை அரளி’, என செல்லமாக அழைக்கொள்ள, ‘சாமிக்கு ரொம்ப பிடிக்கும்’ என இலவச தகவல்களும் சேர்ந்து கொண்டது. வழக்கம்போல “அடையாளத்திற்காக” செல்போனில் மலர் சிறைப்பிடிக்கப்பட்டது. இடையில் ரெயின் ட்ரி Raintree,, தூங்குமூஞ்சி மரம் (Albezia Saman) சாமனியா மரம் குறித்து Google-ல் கண்டது தனி கதை. இது குறித்து உஷா சூர்யமணி என்பவர் சுலேகா. Com blog site-ல் அழகாக எழுதியுள்ளதையும் படிக்க நேர்ந்தது ஒரு நல்ல அனுபவம். White flower with yellow tinge எனக் கொடுத்ததும் பானீசியன் தீவுகளில் (இது இந்தோனேசியாவை சுற்றியுள்ள பற்பல சிறுசிறு தீவுகளின் கூட்டம் என அடையாளம் தெரிந்து கொண்டது இன்னொரு ‘ நெட் ‘ (Net)டை முறிக்கிற தேடல்!) உள்ள பழங்கால சுவாரஸ்யமான பழக்க வழக்கம் ஒன்றை அடையாளம் தெரிந்து கொண்டது; கொசுறாக, முடிந்தது. அங்கிருக்கிற பெண்கள் வலது காதில் ப்ளுமேரியா மலர் சூடினால் சுயம்வரம் வேண்டும் என்கிற முடிவு போல், காத்திருக்கின்றேன், மனமொத்த, மணமகனை மணமுடிக்க சம்மதம் என்று அடையாளமாம்… இடது பக்க காதோரம் ப்ளுமேரியா என்றால்… சம்மதிக்கவில்லை ஏற்கனவே மணமுடிந்தது… என அடையாளமாம்… காதில் பூச்சுத்தராங்க பாருங்க! வலது பக்கம், இடது பக்கம் என குயில்கள் கூவுகையில் குரல்தான் எடுப்பாக இருந்தது என்றால் ஆண் மயிலுக்கு தோகை உண்டு, பெண் யானைக்கு தந்தம் இல்லை என்று எத்தனை இயற்கை அடையாளங்கள்.
பூங்காவில் கண்ட மற்றொரு காட்சி, Egret ஒன்றின் கூட்டில் குரங்கு, அல்லது காகம் புகுந்ததால் (சரியாக அடையாளம் தெரியாமல் எப்படி குற்றம் சாட்டுவது?) கலவரம் நடந்ததற்கு நானும் சாட்சியானேன். Food pyramid கட்டப்படும் பொழுது கட்டிட வேலையில் குறுக்கே தலையிட கூடாதோ? என்று யோசித்துக்கொண்டு இருக்கையில் சூடான இள இரத்தத்தோடு நீலமும் பச்சையும் கலந்த நிற உடைந்த முட்டையொன்று கீழே விழ, . . . பிரச்சனையின் தீவிரம் அடையாளம் புரிந்தது. தெய்வத் திருமகளில் பறவைக் குஞ்சொன்றை திரும்பக் கூட்டில் பூனையிடம் இருந்து காப்பாற்றி விக்ரம் விடுவார். . . அவர் விரல்களை தாயாக தவறாக குஞ்சுகள் புரிந்து கொள்ள Imprinting என்கின்றவிலங்கியல் தத்துவத்தில் இடமிருக்கின்றது என அனிமல் எதாலஜி Ethology படிப்பு மூலம் அடையாளம் தெரிந்து கொண்டது இந்த இடத்தில் எழுதத் தக்கதுதான்.
நமக்கான அடையாளத்தை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும். இயற்கை ஒவ்வொரு படைப்பிலும் ஒரு தனித்துவத்தை அடையாளமாக்கித்தான் வைத்திருக்கின்றது. அது சரியான காதில்தான் – பூ – வைத்திருக்கின்றது என்பதை நாம்தான் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் போல . .
0 comments Posted in Articles