உலகத்து மக்கள் அனைவருமே மொத்தம் எட்டு வகைப்பட்டவர்களாக மட்டுமே உள்ளனர் என்றும், அவர்களுள் எட்டாம் வகையினர் மட்டும் மேலும் எட்டுப் பிரிவினர்களாக உள்ளனர் என்றும் இக்கட்டுரையின் முதற் பகுதியில் புரிந்து கொண்டோம்.
இந்தப் பிரிவினர்களிடையே உள்ள வேறுபாடுகளையும், நீங்கள் எந்த வகையைச் சார்ந்தவர் என்பதையும், உங்களின் உடல்நலம் இப்போது எவ்வாறுள்ளது, வருங்காலத்தில் உங்களுக்கு நோய்கள் ஏற்படுமா, அவ்வாறானால், என்னென்ன நோய்கள் எப்போது ஏற்படும் என்பன போன்ற விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறேன்.
அதற்கு முன்னதாக, மனிதர்கள் இத்தனை பிரிவினர்களாக இருப்பதற்கான காரணங்கள் என்னவென இப்போது போதிய ஆதாரங்களுடன் விளக்குகிறேன்.
இப்பகுதியைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், சில அடிப்படை விவரங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
“இந்த விவரங்கள் நமக்கு எதற்கு?” என்று எதனையும் ஒதுக்கிவிடாது, நான் எழுதும் அனைத்தையும், உங்களுக்கு ஏற்கனவே தெரியுமானாலுங்கூட, நிச்சயமாகப் படியுங்கள். ஏனெனில், அவற்றையெல்லாம் நான் வேறு கோணத்தில் உங்களுக்கு உணர்த்துவேன். அதனால், நீங்கள் பின்னர் திண்ணமாகப் பெரும் பயன் பெறுவீரகள்.
சுண்ணாம்புச் சத்து
இது, Calcium அல்லது Ca என்று குறிப்பிடப்படும். Lime என்பது CaO எனக் குறிப்பிடப்படும். இது, வெள்ளை நிறத்திலான ஓர் உலோகப் பொருளாகும்.
பிணத்தை எரித்தால் சாம்பல் கிடைக்கும். அந்தச் சாம்பலில் 75% Calcium phosphate எனும் சுண்ணாம்புதான். நமது உடல் எலும்புகளில் உள்ள எல்லா உலோகப்பொருட்களையும் கணக்கிட்டால், இந்த வகைச் சுண்ணாம்பு அதில் 85% ஆகும்.
உடம்பில் காயம் ஏற்பட்டு அதனால் ஏற்படும் இரத்த ஒழுக்கு நிற்கவேண்டுமானால், இரத்தம் உறைந்து கெட்டிப்பட வேண்டும். அதற்கும் இந்தச் சுண்ணாம்பு உதவுகிறது. நமது எலும்புகளையும் பற்களையும் சுண்ணாம்புதான் உண்டாக்கி, உறுதியானவை ஆக்குகிறது.
நமது உடம்பின் அமிலத்தன்மையையும் காரத்தன்மையையும் சமச்சீராக (Acid-Base Balance) வைத்துக் கொள்ளுவதற்கு உதவுவதும் இந்தச் சுண்ணாம்புதான்.
தாய்ப்பாலில் இது 20 மில்லிகிராமும், பசுவின் பாலில் 120 மில்லிகிராமும் இருக்கிறது.
சுரப்பிநீர்களை (Enzymes) இயங்கச் செய்வதோடு, சதைகள் நரம்புகள் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கும் இது பயன்படுகிறது. நமது உடம்பினுள் உள்ள நீர்ப்பொருட்கள், மென்மையான சவ்வுகளுக்கிடையே புகுவதற்கும் வெளியேறுவதற்கும் (Permeability of the membranes) சுண்ணாம்பு உதவுகிறது.
சுண்ணாம்பு நமது உடலினுள் தேவைக்கு மீறி மிகுதியாகச் சேர்ந்துவிடுமானால், அது நமது உடலை விட்டு வெளியேற்றப்பட்டுவிடும். அது எவ்வாறெல்லாம் வெளியேறுகிறது என்பதை இங்கு பட்டியலிடுகிறேன், நினைவில் வைத்துக்கொள்ள முயலுங்கள். ஏனெனில், இது மிக முக்கியமான தகவலாகும்.
மலத்திலும்,
சிறுநீரிலும்,
வியர்வையிலும்,
தோல் உரிதலிலும்,
உடல் உறவின்போது ஆண் உடம்பிலிருந்து வெளிப்படும் விந்திலும்,
மாதவிலக்கின்போது வெளிப்படும் இரத்தக் கழிவிலும்,
கர்ப்பந்தரிப்பதற்காக உள்ள முட்டையிலும்,
கரு / குழந்தை உற்பத்தியின் வழியாகவும்,
பிரசவத்தின்போது நீர்க்குடம் உடைந்து வெளியேறும் நீரிலும்,
தாய்ப்பாலிலும்,
காதில் உண்டாகும் குரும்பியிலும்,
மூக்குப்பீயிலும்,
கண்களின் ஓரத்தில் காலை எழும்போது காணும் நீர்க்கசிவிலும்,
நாக்கில் காணப்படும் வெள்ளைநிறத்திலான ஊத்தையின் வழியாகவும்,
பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து வெளிப்படும் வெள்ளைப் படுதலிலும்,
ஆண்குறியில் உண்டாகும் அழுக்குப்போன்ற திரட்டலிலும்,
தொப்புளில் வெளிப்படும் வழவழப்புத் தன்மை வழியாகவும்,
கம்புக்கூட்டிலும் மற்ற இடங்களிலும் உள்ள வியர்வை நாளங்களின் வழியாகாவும்,
நெஞ்சுச் சளி
ஆகியவற்றின் வழியாகவும், மிகைப்படும் சுண்ணாம்பு நமது உடலைவிட்டு வெளியேற்றப்பட்டுவிடும். இவற்றின் வழியாகவெல்லாம் மிகுதிப்பட்ட அந்தச் சுண்ணாம்பு வெளியேறிய பிறகுங்கூட, இன்னும் மீதி இருக்குமானால், அளவுக்குமிஞ்சிய அந்தச் சுண்ணாம்பு உடம்பினுள்ளேயே இருந்துவிடும். அது சில உறுப்புக்களில் சேமித்து வைக்கப்படும்.
இந்தச் சுண்ணாம்பு (மிகக் குறைந்த அளவிலான மேக்னீசியம், துத்தநாகம்,
செம்பு, இரும்பு போன்ற ஏனைய சிலவற்றுடன் சேர்ந்து) விலங்குகளின் உடலில் எவ்வாறெல்லாம் சேமித்து வைக்கப்படுகின்றது என்பதை நாம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். இது மிக முக்கியமான தகவலாகும்.
விலங்குகளின் எலும்பிற்கும், அது உறுதியாக இருப்பதற்கும் சுண்ணாம்பு தேவைப்படுகிறது. மாடு, யானை போன்றவற்றின் உடம்பும் எலும்புகளும் பெரியனவாகவும், கனமானவையாகவும், உறுதியானவையாகவும் இருக்கும். இதற்குக் காரணம், அவை, சுண்ணாம்புச்சத்தைக் கொண்டுள்ள புல், செடிகொடிகளை மிக அதிக அளவில் உண்ணுவதுதான்.
யானைத்தந்தம், மான், ஆடு, மாடுகளின் கொம்புகள், நெகங்கள் ஆகியவையும் சுண்ணாம்பால் ஆனவைதாம். கிளிகளின் கூர்மையான மூக்கு, நெகங்கள் ஆகியவையும் சுண்ணாம்பில் உருவானவைதாம். எறும்புண்ணியின் (Ant eaters) முட்களும் முதலையின் மிகக்கடினமான தோலும் சுண்ணாம்பைக் கொண்டதுதான்.? நத்தை, ஆமை ஆகியவற்றின் ஓடும் சுண்ணாம்பால் ஆனவைதாம். குதிரையின் குளம்புகளும், பறவைகளின் கூரான நெகங்களும் சுண்ணாம்பால் உருவானவைதாம். ஒட்டகம், கோவில்மாடு போன்றவற்றின் பெரிய திமில்களும் சுண்ணாம்புச் சேர்க்கையால் விளைபவைதாம். குதிரை, புலி போன்றவற்றின் இறுக்கமான தசைநார்களும் சுண்ணாம்பின் சேர்க்கையால் விளைபவையே.
யானையின் மிகப் பெரிய உடம்பு, அதன் தும்பிக்கை, கால்கள், நீரில் வாழும் ஷுல் (Seal) தோல், எருமையின் கனத்துத் தடித்த தோலும்கூட சுண்ணாம்பின் காரணமாகத் தோன்றுபவையே.
இனி, ஆண் விலங்குகளிலும், பெண் விலங்குகளிலும், மனிதரிலுங்கூட, சுண்ணாம்பின் காரணமாக ஏற்படும் வேறுபாடுகளைப் பாருங்கள்:
ஒரு தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதாகக் கொள்ளுவோம். அவற்றில் ஒரு குழந்தை ஆண், மற்றொன்று பெண். இரு குழந்தைகளையும் ஒரே மாதிரியாகத்தான் அவற்றின் பெற்றோர் வளர்க்கிறார்கள். அவ்விரு குழந்தைகளும் ஏறத்தாழ 12 வயது வரை ஒரே மாதிரியாகவே உடல் வளர்ச்சி அடைகிறார்கள். ஆயினும், அதற்குப்பிறகு, ஆண் தனது உருவத்தில் பெரியவனாகவும், பெண் சிறியவளாகவும் வளர்கிறார்கள். இது ஏன் என நினைக்கிறீர்கள்?
“இது மரபுவழியில் வருவது” (Genetics) என்று கூறித்தப்பிக்க முயலவேண்டாம். ஏனெனில், “தொடக்க காலத்திலேயே ஏன் இந்த வேறுபாடுகள் தோன்றின?” என்ற எனது அடுத்த கேள்விக்கு உங்களால் மறுமொழி சொல்ல இயலாது! எனது ஆய்வின் விளைவாகக் கிடைக்கும் இந்த விவரங்களையெல்லாம் நீங்கள் படிக்கத்தவறினால், ஒருபோதும் நீங்கள் இம்மருத்துவத்தின் பயனை முழுமையாகப் பெற இயலாது என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். எனவே, தயவுசெய்து தொடர்ந்து படியுங்கள்.
மிக அதிகமான அளவில் தீனி தின்னும் யானையின் உடலினுள், அதற்கு ஒப்ப, மிக அதிகமான அளவு சுண்ணாம்பு சேர்ந்துவிடுந்தான். பெண் யானையின் விலக்கு (கர்பப்பை உடைந்து, இரத்தத்துடன் வெளியேறுதல்), 3 முதல் 4 மாதங்கள் என்றும், கர்பந்தரித்துக் குட்டி ஈணுங்காலம் 22 மாதங்கள் என்பதும், யானையின் ஒரு நாள் தீனி ஏறத்தாழ 40 முதல் 180 கிலோ அளவானது என்பதும், பலரும் அறிந்திருக்கக்கூடிய விவரங்கள்தாம்.
180 கிலோ நிறைகொண்ட தழைகளிலிருந்து பெறப்படும் மிகுதியான சுண்ணாம்பு, பெண் யானையின் விலக்கின் ஒரு பகுதியாக வெளியேறிவிடுகிறது. ஆனால், ஆண் யானையின் உடலினுள் செல்லும் சுண்ணாம்பு வெளியேறுவதற்கான வாய்ப்பு இல்லாமையால், அது தந்தமாக உருவெடுக்கின்றது.
சில பெண் யானைகளில், நலக்குறைவின் காரணமாக சரிவர விலக்கு நடவாத காரணத்தால், சிறு தந்தங்கள் உண்டாவதும் உண்டு.
இதே காரணத்தால்தான் ஆண் மான்களும் கெடாய் ஆடுகளுங்கூட கொம்புகள் பெறுகின்றன். அவற்றின் பெட்டைகளுக்கு கொம்புகள் கிடையா! அதோடுகூட, ஆண் விலங்குகளிலும், மனிதருள் ஆண்களிலும் மாதவிலக்கு இல்லாமையால்தான், அவற்றின் உருவங்களும், பெண்களைக் காட்டிலும் பெரிதாக உருப்பெறுகின்றன.
பெட்டைக் கோழிகளும் மற்ற பறவைகளூம் முட்டையிடுவதின் வாயிலாக மிகுதியாகும் சுண்ணாம்பை வெளியேற்றுகின்றன. அதனால், அவையுங்கூட சிறிய உருவத்தையே பெறுகின்றன. அதனால்தான் முட்டையில் அதிகமான சுண்ணாம்பு இருக்கிறது. முட்டையின் ஓடும் சுண்ணாம்பால் ஆனதுதான் என்பதையும் மறந்துவிடலாகாது. சேவலுக்கும் ஆண் மயிலுக்கும் அதிக அளவு சிறகுகளும், தோகையும், கொண்டையும் உண்டாகின்றன.
முயல்கள் எந்நேரமும் இலைகளைத் தின்றுகொண்டேதான் இருக்கும். அதனால், மிக அதிக அளவிலான சுண்ணாம்பு அவற்றின் உடலினுள் சென்றுவிடுந்தான். ஆயினுங்கூட அவற்றின் உருவம் சிறிதாகத்தான் இருக்கின்றது.
ஏன் தெரியுமா? ஆண் முயல்கள் ஒவ்வொருநாளும் 5 முதல் 7 தடவைகள் உடலுறவு வைத்துக் கொள்ளுகின்றன. அப்போது வெளியேறும் விந்தின்வழி பெரும்பகுதியான சுண்ணாம்பு வெளியேறிவிடுகின்றது.
பெண் முயல், ஓராண்டுக்காலத்தில், 3 முதல் 5 முறைகள் கர்பந்தரித்து, ஒவ்வொருமுறையும் இரண்டிலிருந்து எட்டுக் குட்டிகள்வரை ஈன்று, அவற்றின்வாயிலாக அதிகச் சுண்ணாம்பை வெளியேற்றிவிடுகின்றன.
மனிதருள் பெண்களைப் பாருங்கள்: மாத விலக்கு நின்றபிறகு, அவர்களின் உடல் எவ்வளவு பெருத்துவிடுகிறது! அதோடுகூட அவர்களது மார்பும் பெருத்துத்தான் போகும். இதற்குக் காரணம், மாதந்தோறும் வெளியாகும் சுண்ணாம்பு, விலக்கு நின்றபிறகு, உடலினுள்ளேயே தங்கிவிடுவதுதான்!
இந்த அளவில் இதனை நிறுத்திக்கொண்டு, அடுத்த இதழில், மனிதற்கு ஏற்படும் நோய்களுக்கான காரணங்களை விளக்க நினைத்துள்ளேன். அதுவரை பொறுத்திருங்கள்.