பிறப்பு தடையல்ல
பன்னீர் செல்வம் Jc.S.M on May 2011
தன் அக்காவுடன் சென்று ஒருநாள் மாலையில் சிறுவன், டீச்சரைச் சந்திக்கிறான்.
அக்கா : டீச்சர்Ð என்னோட தம்பி இவன்தான். அடிக்கடி நான்
செல்வேனில்லீங்களா? இவன் கேக்கறகேள்விகளுக்கு எங்க ஊட்லே யாராலுமே பதில் சொல்ல முடியறதில்லே. இவனுக்குக் கொஞ்சம் புரியறமாதிரி இவன் கேக்கறகேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க டீச்சர். நான் தூரமா உக்காந்து ஹோம் ஒர்க்கை எழுதிகிட்டிருக்கேன்.
டீச்சர் : தம்பி, உன்பேரு என்னப்பா?
சிறுவன் : வணக்கம் டீச்சர். எம்பேரு கணேசு.
டீச்சர் : கணேசு அல்ல கணேசன்
கணேசன் : டீச்சர் நான் பணக்காரன் ஆக முடியுமா?
டீச்சர் : நிச்சயமா முடியும்.
கணேசன் : அதுக்கு நான் என்ன செய்யனும்?
டீச்சர் : ரொம்ப சந்தோஷம், நல்ல ஆசை பணக்காரன் அப்படீன்னா, நீ என்ன நெனைக்கறே?
கணேசன் : நெறைய பணம் இருக்கனும்Ð நெனைச்சதெல்லாம் வாங்கனும்Ð பெரிய மெத்தை வீடு, காரு, நல்ல துணி இதெல்லாம் அப்படீன்னு நெனைக்கறேன்.
டீச்சர் : வெரிகுட். நெறைய பணம்னா, தெளிவாச் சொல்லனும், ஒரு லட்சமா, 10 லட்சமா, ஒரு கோடியா, இல்ல எவ்வளவு கோடிதான் வேணும்?
கணேசன் : அடேங்கப்பாÐ அவ்ளோ பணமா? இது வரைக்கும் ஒரு தடவை தான் 100 ரூபா நோட்டையே பாத்திருக்கேன் டீச்சர்.
டீச்சர் : பரவாயில்லே. அந்த மாதிரி 1000 நோட்டு சேர்ந்தா ஒரு லட்ச ரூபாய். அதுவே 100 மடங்கு அதாவது 100 கட்டு சேர்ந்தா ஒரு கோடி ரூபாய். ரொம்ப சிம்பிள் தான்.
கணேசன் : அப்ப ஒரு கோடி ரூபா, எனக்கு வேணும்னா நா என்ன பண்ணனும் டீச்சர்.
டீச்சர் : அப்படிக் கேளுடா குட்டிப் பையாÐ வசதியில்லாத ஏழைகள் வீட்டிலே பொறக்கற குழந்தைகள் ஏழையாத் தான் வாழனும் அப்படீன்னு கடவுள் நினைக்கலேÐ அதே தான் உனக்கும்Ð நீ முயற்சி செய்து, நன்றாகப் படித்து, கடுமையாக உழைத்தால், நீ நெனைக்கறதை உன்னாலே அடைய முடியும்.
நீ செய்ய வேண்டியது, 500 ரூபா நோட்டை நல்லாப் பாத்து மனசிலே பதிஞ்சு வெச்சுக்கோÐ அந்த மாதிரி 100 நோட்டு சேர்த்துக் கட்டினா அது 50000 ரூபா அது மாதிரி 200 கட்டு எனக்கு வேணும். அதை நான் எனது 25 வயசுக்குள்ளே சம்பாதிப்பேன். அப்படீன்னு நெனச்சுகிட்டே இருக்கனும்.
கணேசன் : டீச்சர், 25 வயசு வரைக்கும் காத்திருக்கணுமா? ஒடனே கெடைக்காதா?
டீச்சர் : வெளையாட்டுப் பையனா இருக்கறயேப்பா? நீ முதல்லே படித்து முடிக்கனும். நெறைய மார்க் வாங்கி ஒரு வேலைக்குப் போகனும். அங்கே உன்னோட முழுத் திறமையைக் காண்பித்து, நெறைய சம்பளம் வாங்கனும், இதுக்குத் தாம்ப்பா சுமாரா 25 வயசுன்னு சொன்னேன்.
கணேசன் : படிச்சு முடிச்சு வேலைக்குப் போயி இத்தனை பணத்தை சம்பாதிக்க முடியுமா? இல்லே அரசியலுக்கு போனாத்தான் சம்பாதிக்க முடியுமா? டீச்சர்
டீச்சர் : அதென்ன கணேசன், புதுசா அரசியல்னு சொல்றேÐ
கணேசன் : டீச்சர், எங்க அப்பா அடிக்கடி சொல்வாரு, பாரு இவங்கெல்லாம் நாலு வருஷத்துக்கு முன்னாலே தான் ஒரு அரசியல் கட்சீலே சேந்தாங்கÐ இன்னிக்கு என்னடான்னா, கோடிக் கணக்குலே சொத்து சேத்துட்டாங்கனு, அதனாலே அப்படிக் கேட்டேன் டீச்சர்.
டீச்சர் : பரவாயில்லப்பா. இன்னிக்கு இந்த அரசியல் பண்றதுதான் நம்ம நாட்டுலே ஏழைங்க ஏழையாவேயும், பணக்காரங்க பணக்காரங்க ளாவேயும் இருக்கறதுக்கு அடிப்படையா இருக்குது.
சரி, நீ கேட்டதுக்கு பதில் சொல்றேன். அரசியல்ங்கிறது தொழில் இல்லை. ஒரு சேவையா ஆரம்பமானது தான். இன்னிக்கு சுயநலமிக்க அரசியல்வாதிகளாலே, லாபம் தரக்கூடிய பிசினஸ் அப்படீங்கறஅளவுக்கு பொதுமக்கள் மனசுலே எடம் புடிச்சுருச்சு, அரசியல் என்பது தொழில் இல்லீங்கிறதுனாலே, முன்னெல்லாம் நல்ல வசதியாக இருந்தவங்க தங்களோட கைக்காசைப் போட்டு பொதுவான காரியங்கள் செஞ்சாங்க.
ஆனா, இன்னிக்கு ஒரு சில வருடங்க ளிலேயே அரசியல்வாதிகள் ஏராளமா சம்பாதிச்சர்றாங்க. அந்தப் பணம் முறையாக வந்ததில்லை. அந்த மாதிரி எண்ணம் உன்னை மாதிரி சின்னப் பசங்களுக்கு வரவே கூடாது.
கணேசன் : சரிங்க டீச்சர், வேறெஎப்படித்தான் சம்பாதிக்கிறது.
டீச்சர் : முதலில் படித்து முடி, 500 ரூபாய் நோட்டை மனதில் பதிய வை இன்னிக்கு நேரமாச்சு. தேவைப் பட்டா மறுபடியும் நாம சந்திக்கலாம். நான் கௌம்பறேன்.
டீச்சர் சென்றுவிட்டார். தன் அக்காவுடன் வீட்டுக்குத் திரும்பினான் கணேசன்.
டீச்சர் கூறியவாறு பணக்கட்டுக்களை மனதுக்குள் குவித்தான். இதே சிந்தனையாக மாறினான். கோழி முட்டைகளை அடைக்காப்பது போல் பல ஆண்டுகள் இந்த எண்ணத்தை வலுப்படுத்தினான். நன்றாகப் படித்தான். அந்தப் பள்ளியில் இவன்தான் முதல் மதிப்பெண் பெற்றான்.
ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து, கூலிக்கு வேலை செய்து, வாழ்க்கையின் உச்சத்தை எட்டிய ஜி.டி. நாயுடு, அம்பானி, ஓபராய் போன்றவர்களது சுயசரிதைகளை வாசித்தான். இன்று தமிழ் நாட்டில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ள சில வணிக நிறுவனங்களைப் பற்றியும், அதன் வளர்ச்சி விபரங்கள் பற்றியும் முழுமையாக அறிந்து கொண்டான்.
நேர்மை, நாணயம், நாட்டுப்பற்று, சகமனிதரை மதிக்கும் பண்பு, பிறருக்கு உதவும் குணம் ஆகியன இயல்பாகவே இவனிடம் இருந்தது. பள்ளி ஆசிரியர்களாலும், ஊர் மக்களாலும் பாராட்டப்பட்டான்.
வங்கிக் கடன் வாங்கி கல்லுரிக் கல்வியை முடித்தான். கேம்பஸ் இண்டர்வியூவில் வெளிநாட்டு கம்பெனி ஒன்றால் தேர்வு செய்யப்பட்டான். படிப்பு முடிந்தவுடன் பெற்றோர் ஆசியுடன் வெளிநாடு சென்று வேலை பார்த்தான். அங்கும் உயர்கல்வி கற்றான். இவனது ஆர்வத்துடன் கூடிய ஈடுபாடு, அந்த நிறுவனத்தில் குறுகிய காலத்தில் நற்பெயருடன் பதவி உயர்வையும் பெற்று தந்தது.
ஒருமுறைதாயகம் திரும்பியபோது, சிறுவயதில் சந்தித்துப் பேசிய டீச்சரைச் சென்று சந்தித்து, விரிவாகத் தன் வளர்ச்சியைக் கூறினான். இவன் மனதில் பெரிய மாற்றம் வந்துள்ளதை அந்த டீச்சர் கண்டறிந்தார். சிறுவயதில் பணம், வீடு, கார் என்றமனநிலையில் இருந்தவன், இன்று பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனிதர்களை மதிக்கும் நல்ல குணத்துக்கு மதிப்பளித்துப் பேசியதை அறிந்து மகிழ்ந்தார்.
தான் பெற்றசம்பளப் பணத்தில் சேமித்து, வசித்த வீட்டையே மாடி வீடாக மாற்றி விட்டான். இன்னும் இரு வருடங்களில் வெளிநாட்டுப் பணியை முடித்துவிட்டுத் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்து, நண்பர் சிலருடன் சேர்ந்து புதிய தொழில் ஒன்றைத் துவங்க இருப்பதாய் கூறி, ஆசிகள் பெற்றுக் கொண்டான்.
வாய்ப்புகளை உருவாக்கும் மனவலிமையை வளர்த்துக் கொண்டான். உருவாக்கிய வாய்ப்புகளில் தன் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி, மனோசித்திரமாய் வரைந்து வைத்திருந்த இலக்குகளை அடைந்தான். முயற்சிக்கான விளைவுதான் வெளிநாட்டு வேலை; இருந்தாலும் தாய்நாடு திரும்பி வந்து, இங்கு புதிய தொழில் துவங்க இருக்கிறான்.
இது மற்றவர்களுக்குச் சாத்தியமா?
சாத்தியம் தான் என்று சத்தியமாய் கூறுகிறேன். இந்தக் கட்டுரையில் நீங்கள் கடந்து வந்த சிறுவனை நான் என் வாழ்க்கையில் சந்தித்தேன். எனவே, சிறுவயதில் அவர்களிடம் நல்ல பண்புகளை விதைத்தால், அவை வளர்ந்து, பருவத்தில் நல்ல குணங்களாக வெளிவரும். இப்பணியைப் பெற்றோர் மட்டுமே செய்ய இயலாது.
ஆசிரியப் பெருமக்கள், குறிப்பாக 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள், இதை நாட்டுப்பற்றுடன், இதய சுத்தியுடன் செயல்படுத்தினால் பத்தே ஆண்டுகளில் இந்தியா ஊழலற்றபாதையில் பயணத்தை துவங்கிவிடும்.
நல்ல பண்புகள், பழக்கங்கள் வாழ்க்கையாக மாறும்போது பயமும் சந்தேகமும் எக்காரணம் கொண்டும் நம் மனதிற்குள் நுழைய முடியாது. இவை தடைகளாக, வேலிகளாக இல்லாவிட்டால் சுதந்திரமாக யாராலும் முன்னேறமுடியும். இதற்கு வசதிமிக்க குடும்பத்தில் பிறப்பது அவசியமா? ஏழைக்குடும்பத்தில் பிறந்து விட்டேனே என யாரும் வருந்த வேண்டியதில்லை.
ஏழையாக இருந்தாலும், படிப்பறிவில்லாதவர்களாக இருந்தாலும், உங்களுக்கு குழந்தையாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக உங்கள் குழந்தையும் ஏழையாகவே வாழ வேண்டுமா?
தேவையில்லைÐ ஐந்தில் வளையுங்கள். 50ல் தானே வளையும். நல்ல பண்புகளை, குணங்களை இளம் வயதில் மனதில் விதையுங்கள். பயம், சந்தேகம் இரண்டையும் கிள்ளி எறிய உற்சாக மூட்டுங்கள். ஏராளமான வாய்ப்புகள் இறைந்து கிடக்கின்றன. நமக்குத் தேவையானதை நாம் தான் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று நல்ல ரோல்மாடலாக இருங்கள். முன்னேறப் பிறப்பு தடையே அல்ல.
வாழ்க வளமுடன்
0 comments Posted in Articles