– 2011 – January | தன்னம்பிக்கை

Home » 2011 » January (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வாக்கினில் இனிமை வேண்டும்

    சிந்தனை செய் நண்பனே…

    ஒருவரது தவறை உணர்த்த வேண்டும் என்றால், அவரது மனதைப் புண்படுத்தாமல் உணர்த்த வேண்டும். இல்லை என்றால் அது எதிர் விளைவுகளை உண்டாக்கும். இதனை எப்படி கையாள்வது என்று பார்ப்போம்.
    பிருத்வி ஒரு கல்லூரி பேராசிரியர் மாணவர்களைத் திருத்தி, நல்வழிப்படுத்தி அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதை லட்சியமாகக் கொண்டவர். ஒரு மாணவன் தவறு செய்தால், அவன் செய்த தவறைச் சுட்டிக்காட்டி விமர்சித்து, அதனை திருத்த முயற்சி செய்வார்.
    ஒருநாள், அவருடைய வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன், பிருத்வி வைத்த வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்துவிடுகிறான். அவனைத் தன்னைச் சந்திக்குமாறு, ஆசிரியர்கள் முன்னிலையில் திட்டித்தீர்க்கிறார். இப்படி இருந்தால், அந்த மாணவன் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது என்று கூறுகிறார். இதுதான் அவனைத் திருத்த சிறந்த வழி என்று நினைக்கிறார் பேராசிரியர் பிருத்வி.
    மாணவர்கள் அனைவரும், அவரை அணுகுவதையே விட்டுவிடுகிறார்கள். அவர் மிகவும் கடுமையாகப் பேசுவதாக எண்ணுகிறார்கள்.
    மாணவர்கள், தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படும் பிருத்வி, தனது சக ஆசிரிய நண்பர் ஒருவரிடம் கேட்கிறார். அதற்கு அந்த நண்பர், மாணவர்கள் பிருத்வியைக் கண்டாலே பயப்படுகிறார்கள். கடுமையாக எல்லோர் முன்னிலையிலும் விமர்சிப்பவர் என்று எண்ணுகிறார்கள் என்று கூறுகிறார். இதைக்கேட்ட பிருத்வி, அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைகிறார். மாணவர்களை நல்வழிப்படுத்த, தான் செய்த முயற்சியை, மாணவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதை நினைத்து வேதனை அடைகிறார்.
    அவர் குழப்பமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம், தனது நெருங்கிய நண்பர் சூர்யாவைச் சந்தித்து ஆலோசிப்பது உண்டு. அதேபோல் இந்த முறையும் சூர்யாவைச் சந்தித்து, இதனைப் பற்றிக் கூறுகிறார். சூர்யா, விமான ஓட்டுநராகப் பணிபுரிபவர்.
    ஒருவரது தவறை உணர்த்த, அவரைக் காயப்படுத்துவது நல்லதல்ல. உணர்வுகளைப் புண்படுத்தாமல் எப்படி கூறவேண்டும் என்பதை அவருடைய விமான ஓட்டுநர் அனுபவத்தை வைத்து விளக்குகிறார்.
    பிறரைப் புண்படுத்தாமல், தவறைச் சுட்டிக்காட்டுவது, ஒரு கலை. ஒருவர் செய்யும் தவறினைத் திருத்த முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அவரை தாழ்த்தக்கூடாது. அவரைப் புண்படுத்தாமல், செய்த தவறை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று கூறுகிறார் சூர்யா. இதற்கு நல்ல உதாரணம், விமானத்தை தரை இறக்கும் விமானியை, எவ்வாறு விமான தளத்தில் இருக்கும் வாட்ச்டவர் விமர்சிக்கிறது என்பதுதான்.
    வாட்ச்டவர், விமானம் சிறப்பாக செயல்படுவதற்கு, விமானிக்கு தக்க தகவல்களை சரியான நேரத்தில் பரிமாறிக் கொண்டிருக்கும். தவறு எதுவாக இருந்தாலும் அது விமானிக்குச் சுட்டிக்காட்டப்படும். வேகமாக வந்தாலோ, தரை இறக்கும் நிலை சரியில்லை என்றாலோ, மிகவும் தாழ்வாக வந்தாலோ, இப்படி எதுவாக இருந்தாலும் சுட்டிக்காட்டப்படும். இப்படி எதைக் கூறினாலும் எந்த விமானியும் அதனைத் தவறாக எடுத்துக்கொள்வதில்லை. ‘ஏன் எப்பொழுதும் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள்? ஏதாவது நன்றாக இருக்கிறது என்று கூறக்கூடாதா?’ என்றெல்லாம் எந்த விமானியும் கேட்பது இல்லை.
    இந்த இடத்தில் நாம் எதை மனதில் கொள்ள வேண்டும் என்றால், விமானியும், பயணிகளும் தங்களுடைய இடத்துக்கு பத்திரமாக செல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் தான் வாட்ச்டவர் நபர் விமானியின் தவறை சுட்டிக்காட்டுகிறார். எந்த வாட்ச்டவர் நபரும் விமானியை விமர்சிப்பதில்லை. அவருடைய செயலைத்தான் விமர்சிக்கிறார். அதேபோல், பெரிய ஒலி பெருக்கியில் கூறாமல், விமானிக்கு மட்டுமே கேட்கும் வண்ணம், காதில் பொருத்தும் கருவி மூலம் அவருக்குக் கூறுகிறார். விமானியிடம், “நீங்கள் இன்னும் இரண்டு நிமிடத்தில் தரையை தொட்டுவிடுவீர்கள்” என்று கூறினால், ‘மிகவும் தாழ்வாக வருகிறீர்கள்’ என்று அர்த்தம். இதனைக் கூறியதற்காக, விமானி, அந்த வாட்ச்டவர் நபரின் மீது கோபம் கொள்ளப்போவது இல்லை. அதனை நல்ல முறையில் எடுத்துக் கொண்டு, தன்னைத் திருத்திக்கொள்வார்.
    இவை அனைத்தையும் விளக்கிக் கூறிய பின்னர், பிருத்விக்கு தான் செய்த தவறு புரிந்தது. மாணவர்களின் மனதைப் புண்படுத்தாமல் எப்படி நல்வழிப்படுத்துவது என்று ஆராய்ந்து செயல்படப் போவதாக சூர்யாவிடம் கூறினார் பிருத்வி.
    சில நாட்களுக்குப்பிறகு, பிருத்வியுடைய துறையில், அவர் வைத்த வகுப்புத் தேர்வில், ஒரு மாணவன் தோல்வி அடைந்து விடுகிறான். இந்த முறை, அந்த மாணவனை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று, மனதைப் புண்படுத்தாமல், ஏன் அவன் அந்தப்பாடத்தில் தோல்வி அடைந்தான் என்று கேட்டு அறிகிறார். அவனுக்கு தினமும் மாலையில் ஒரு மணிநேரம் சிறப்பு வகுப்பு எடுப்பதாகக் கூறுகிறார். மிகவும் மகிழ்ச்சி அடைந்த மாணவன், பிருத்விக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறான்.
    ஒருவரை நல்வழிப்படுத்த நினைத்து விமர்சிக்கும்போது, அந்த விமர்சனம், அவரை முன்னேற தூண்டுவதாக இருக்க வேண்டும். தவிர, அந்த நபரைக் காயப்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஒரு மனிதனை விமர்சிக்காமல், அவனுடைய செயலினை விமர்சிக்க வேண்டும்.
    அடுத்த முறை யாரையாவது அவருடைய செயலைப்பற்றி விமர்சிக்கும்போது, விமானிகள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    சொல்லில் உறுதி வேண்டும்!
    வாக்கினில் இனிமை வேண்டும்!
    அனைவரும் நன்மையடைய வேண்டும்!
    நலம்பெற வாழ்ந்திட வேண்டும்!

    உனக்குள்ளே உலகம்-8 நேரந்தான் இல்லையே!

    பள்ளியில் படிக்கின்ற இரு மாணவர்கள் பேசிக்கொண்டார்கள்.

    “ராஜேக்ஷ் நீ ஞன் வீர்டுப் பாடத்தை செய்யவில்லை? எனக் கேர்டான் ஒரு மாணவன்.

    “எனக்கு நேரமே இல்லை” – என்றான் ராஜேக்ஷ்.

    பள்ளியில்தான் இப்படியென்றால் வீர்டிலும் இப்படித்தான் சூழ்நிலையால் பதில் கிடைக்கிறது.

    வீர்டில் நன்றாக சமைத்து வைத்திருந்தாள் அம்மா. விடுமுறை நாள் என்பதால் பிரியாணி, மர்டன், சிக்கன் வகைகள் சாப்பார்டில் இணைந்திருந்தது. பரபரப்பில் காணப்பர்ட மகன்; சாப்பிர்டுவிர்டு பாதியில் வேகமாக எழுந்துவிர்டான்.

    காரணம் கேர்டால் “அம்மா எனக்கு சாப்பிடுவதற்கு நேரமில்லை. மணி இப்போதே ஒன்றரை ஆகிறது. பிரண்ர்ஸ்களோட சினிமாவுக்கு டிக்கெர் எடுத்திருக்கேன் இப்போது எனக்கு நேரமில்லை வருகிறேன்” – என்று பதிலுக்கு காத்திராமல் மகன் சிர்டாகப் பறந்துவிர்டான்.

    வீர்டிலும்தான் இப்படியென்றால் திருமண விழாக்களிலும் இப்படித்தான்.“நீங்கள் போனவாரத்தில் நடந்த திருமணத்திற்கு ஞன் வரவில்லை? என்று கேர்டால்கூட “எனக்கு நேரமில்லை” என்றுதான் சிலரிடமிருந்து பதில் வருகிறது.

    வணிக நிறுவனங்கள் அல்லது அலுவலகங்களில் ஞதேனும் தவறு ஞற்பர்டால்கூட “நேரம் இல்லை. அதனால்தான் அதைச் செய்யவில்லை” என்று சொல்லி தப்பித்துக்கொள்வதும் உண்டு. “தாங்கள் சரியானவர்கள்தான். ஆனால் நேரம்தான் தவறு செய்கிறது” என்று நேரத்தின்மீது பழிபோடுபவர்கள் இப்போது அதிகமாகிவிர்டார்கள்.

    நேரத்தின்மீது பழிபோடுகிறவர்களிடம் “நீங்கள் செய்வது தவறு” என அழுத்தமாகச் சொன்னால் “எனக்கு நேரமே சரியில்லை” என்கிறார்கள்.

    சிறியவர் முதல் பெரியவர்கள் வரை “எனக்கு டைம் (Time) இல்லை” என்று சொல்வது இன்று வாடிக்கையாகிவிர்டது. இப்போது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பலர் “நேரமில்லை” என்று சொல்ல ஆரம்பித்துவிர்டார்கள். இதற்குக் காரணம் பள்ளிகளில் படிக்கும்போதே சில தேவையற்ற செயல்களில் கவனம் செலுத்தி வாழ்நாள் முழுவதும் துணைநிற்கும் படிப்புக்கு அதிக கவனம் செலுத்த தவறியதுதான்.

    சிறுவயதில் ஆரம்பித்த “நேரம் இல்லையே” என்னும் சமாளிப்பு அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் தொடர்ந்துகொண்டே வருகிறது.

    புகழ்பெற்ற ஒரு கல்வி வல்லுனரிடம் ஒருமுறை பள்ளி மாணவர்களின், கல்வி நிலைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.

    “இப்போதுள்ள மாணவ, மாணவிகளுக்கு படிப்பதற்கே நேரமில்லை பிறகு எப்படி அவர்களால் பாடத்தில் கவனம் செலுத்த முடியும்? தேர்வில் அவர்களால் வெற்றிபெற முடியும்?” என்று என்னிடம் அவர் கேள்வி கேர்டார்.

    நான் அவரை சற்று ஆச்சரியமாகப் பார்த்தேன்.

    “சார் கல்வியாளரான நீங்களே மாணவர்களுக்கு படிப்பதற்கு நேரமில்லை என்று சொன்னால், மற்றவர்கள் என்ன சொல்வார்கள்?” என்று மெதுவாக கேர்டேன்.

    “கவிநேசன்….. உண்மையிலேயே பெரும்பாலான மாணவர்களுக்கு படிப்பதற்கு நேரமில்லை, வேண்டுமென்றால் நான் சொல்வதை குறித்து வாருங்கள். பிறகு நீங்களே தெரிந்து கொள்வீர்கள்” என்றார்.

    கல்வியாளர் சொன்னதை ஒரு தாளில் குறிக்க ஆரம்பித்தேன். அவர் சொன்னது இதுதான்.

    பள்ளி மாணவர்களுக்கு படிப்பதற்கு நேரமில்லை. ஞனென்றால் –

    1.         வருடத்தில் மொத்தம் 365 நார்கள் உள்ளது. அதில் 52 ஞாயிற்றுக்கிழமைகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை என்றாலே ஓய்வு நேரம்தான். அது உங்களுக்குத் தெரியும். இனி மீதி 313 நார்கள்தான் உள்ளது.

    2.         கோடை விடுமுறைக்கு 50 நார்கள் ஒதுக்கிவிடலாம். ஞனென்றால் அதிகமான வெயில் காலங்களில் மாணவர்களால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படிக்க முடியாதல்லவா?

    3.         ஒரு நாளைக்கு எர்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். அப்படி கணக்குப் பார்த்தால் தூக்கத்திற்கு 130 நார்கள் ஒதுக்க வேண்டும். மீதி 141 நார்கள்தான் உள்ளது.

    4.         அடுத்து – விளையார்டு, மற்றும் உடற்பயிற்சிக்கு என ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது ஒதுக்க வேண்டும். கணக்குப்பார்த்தால் வருடத்தில் 15 நார்கள் போய்விடும். மீதி 126 நார்கள்தான் இருக்கிறது.

    5.         காபி, டீ, டிபன் சாப்பாடு – என கணக்குப்பார்த்தால் தினமும் 2 மணி நேரம் செலவாகிவிடும். ஆக வருடத்தில் 30 நார்கள் சாப்பார்டுக்காக ஒதுக்க வேண்டும். மீதி இருப்பதோ 96 நார்கள்.

    6.         மனிதனுக்கு பேசாமல் இருக்க முடியாது. பேசிப்பேசியே நேரம் போய்விடும். பேசுவதற்கு குறைந்தபர்சம் தினமும் 1 மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் அல்லவா? கணக்குப் பார்த்தால் வருடத்திற்கு 15 நார்கள் பேசுவதிலேயே போய்விடும். மீதி இருப்பதோ 81 நார்கள்தான்.

    7.         பள்ளிகளில் விதவிதமான தேர்வுகள் நடைபெறும். அதாவது – தினத்தேர்வு, வாரத்தேர்வு, வார இறுதித்தேர்வு, மாதத் தேர்வு, திருப்புதல் தேர்வு, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் என தேர்வு எழுதும் நேரத்தை கணக்குப்பார்த்தால் ஆண்டுக்கு 35 நார்கள் தேர்வு எழுதுவதற்கு செலவிட வேண்டியுள்ளது. மீதி 41 நார்கள்தான் உள்ளது.

    8.         காலாண்டுத் தேர்வு விடுமுறை, அரையாண்டுத்தேர்வு விடுமுறை என சில நார்கள் கழிந்துவிடும். இதுதவிர ஆங்கில புத்தாண்டு, போகிப் பண்டிகை, மார்டுப் பொங்கல், குடியரசு தினம், மிலாடி நபி, தெலுங்கு வருடப் பிறப்பு, புனித வௌ;ளி, தமிழ் வருடப்பிறப்பு, சுதந்திர தினம், ரம்சான் பண்டிகை, காந்தி ஜெயந்தி, விஜய தசமி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, பக்ரீத் பண்டிகை, மொஹரம், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் கால விடுமுறைகளை கணக்குப் பார்த்தால் மொத்தம் வருடத்தில் சுமார் 40 நார்கள் போய்விடும். இனி மீதம் இருப்பதோ 6 நார்கள்தான்.

    9.         காய்ச்சல், தலைவலி போன்ற உடல்நலக் குறைவு நார்களில் சுத்தமாகப் படிக்க முடியாது. இப்படி வருடத்திற்கு 3 நார்கள் போய்விடும். மீதி 3 நார்கள் உள்ளன.

    10.       கோவில் திருவிழா, சினிமா, உறவினர் வீர்டுக்கு செல்லுதல் என கணக்குப் பார்த்தால் குறைந்தபர்சம் 2 நார்கள் ஆகிவிடும். இனி இருப்பது 1 நாள்தான்.

    11.       “மாணவர்களுக்கு வருடத்தில் இனி ஒரு நாளாவது நேரம் இருக்கிறதே என கவிநேசன் நீங்கள் சந்தோக்ஷப்படுகிறீர்களா?” – என என்னிடம் கேள்வி கேர்டார் கல்வியாளர்.

    நான் புன்முறுவலுடன் அவரைப் பார்த்தேன்.

    “வருடத்தில் ஒருநாள்தான் வரும் பிறந்தநாள். அந்த ஒரு நாளில் சுதந்திரமாக பிறந்தநாள் கொண்டாட வேண்டாமா? மொத்தத்தில் பார்த்தால் நம் மாணவ, மாணவிகளுக்கு படிப்பதற்கே நேரமில்லை. பிறகு எப்படி சார் படிப்பார்கள்?” என்று கேர்டார் கல்வி வல்லுனர்.

    அந்த புகழ்மிக்க கல்வி வல்லுனர் சொன்ன அழுத்தமான கருத்துக்களைப்பற்றி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

    புகழ்மிக்க அந்த கல்வி வல்லுனரின் சிந்தனை சற்று வித்தியாசமானதுதான்.

    “பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகளின் ‘கவனச் சிதறலு’க்கு என்னென்ன காரணங்கள் அடிப்படையாக இருக்கின்றன?” என்பதை அவர் தௌ;ளத் தௌல்வாக குறிப்பிர்டுள்ளார். கல்வி நிலையங்களில் பயிலும் இளைய உள்ளங்கள் அறிந்தோ, அறியாமலோ இந்த ‘கவனம் சிதைக்கும் காரணி’களால் எப்படி சிதைக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களது விளக்கம் அப்படியே படம்பிடித்துக் கார்டுகிறது.

    “படிப்பதற்குத்தான் நேரம் இல்லையே?” என்று சொல்லிச்சொல்லி காலத்தையும், நேரத்தையும் நகர்த்துவதைவிட, நேரத்தை திர்டமிர்டு செயலாற்ற பழகிக்கொண்டால் வெற்றிகளை எளிதில் குவிக்கலாம்.

    பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நேரம் பற்றிய தௌல்வான சிந்தனை அவசியம் தேவை. ஒரு நாளில் 24 மணி நேரம் இருக்கிறது. இந்த 24 மணி நேரத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும்? என்பதுபற்றி ஒரு வாரத்திற்கு முன்பாகவே திர்டமிர்டுக் கொள்ள வேண்டும்.

    பள்ளிக்குச் செல்லும் நேரம், வகுப்பு நேரம், சோதனைகூட நேரம், விளையார்டு நேரம், உணவு நேரம், படிக்கும் நேரம், தூங்கும் நேரம், அரர்டை நேரம், டியூக்ஷன் நேரம் – என தனித்தனியாக நேரத்தை பிரித்துக்கொள்ள வேண்டும். அதாவது – 24 மணி நேரத்தில் ஒவ்வொரு செயல்களுக்கும் எவ்வளவு நேரம் செலவாகிறது? என்பதைத் தௌல்வாக தெரிந்துகொள்ள வேண்டும்.

    நான் பணியாற்றும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பல வருடங்களுக்கு முன்பு பி.பி.ஞ., படித்தார் மாணவர் கிருக்ஷ்ணன். அவரது ஊர் திருநெல்வேலி. திருச்செந்தூரிலிருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருநெல்வேலியிலிருந்து தினமும் கல்லூரிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    முதல் வருடத்தைவிட இரண்டாம் வருடத்தில் அவரது மதிப்பெண்கள் குறைந்துகொண்டே வந்தது. வகுப்பு ஆலோசகராக இருந்ததால் மாணவர் கிருக்ஷ்ணனைத் தனியாக அழைத்து, மதிப்பெண்கள் குறைவதற்கான காரணத்தைக் கேர்டேன்.

    “சார் நான் தினமும் திருநெல்வேலியிலிருந்து காலேஜூக்கு வருகிறேன். காலையில் 6.15 மணிக்கு திருநெல்வேலியில் புறப்படுகிறேன். திருச்செந்தூரில் கல்லூரிக்கு வருவதற்குள் 9 மணி ஆகிவிடுகிறது. பிறகு கல்லூரி முடிந்தபின் திருநெல்வேலி செல்வதற்குள் இரவு 8 மணி ஆகிவிடும். வீர்டிற்கு 8.30 மணிக்குத்தான் செல்வேன். ரொம்ப களைப்பாகிவிடும். என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை” என்றான் கிருக்ஷ்ணன்.

    “தம்பி நீ ஹாஸ்டலில் சேர்ந்து படிக்க வேண்டியதுதானே?” என்று கேர்டேன்.

    “ஹாஸ்டல் சூழல் எனக்கு பிடிக்கவில்லையென்பதால், இப்போது தினமும் வீர்டில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்கிறேன்” என்றான் மாணவர் கிருக்ஷ்ணன்.

    “முன்பு உனக்கு ஹாஸ்டலில் இருக்க பிடிக்கவில்லை. இப்போது உனக்கு படிக்க பிடிக்கவில்லை. அப்படித்தானே!” என நேரடியாக கேர்டபோது அவன் தௌல்வான பதில் தந்தான்.

    “சார்… எனக்குப் படிக்க நேரமில்லை” என்று சோகம் நிறைந்த குரலில் சொன்னான் கிருக்ஷ்ணன்.

    “கிருக்ஷ்ணா நான் சொல்வதையும் சற்று சிந்தித்துப் பார்க்கிறாயா? எனக் கேர்டேன். கிருக்ஷ்ணன் கேர்பதற்கு ஆர்வம் கார்டவே விளக்கம் சொன்னேன். திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு வருவதற்கும், போவதற்கும் சுமார் 4 மணி நேரம் ஆகிவிடும். கல்லூரிக்கு வந்து செல்லும் நேரத்தையும் சேர்த்தால் மொத்தம் ஒரு நாளைக்கு சுமார் 5 மணி நேரம் கல்லூரிக்கு வருவதற்கே நீ செலவு செய்கிறாய். வருடத்திற்கு சுமார் 1000 மணி நேரம் கல்லூரிக்கு வந்து செல்வதிலேயே உனது நேரம் செலவாகிறது. இதற்குப் பதில் நீ கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படிக்க ஆரம்பித்தால், உனக்கு 1000 மணி நேரம் மிச்சமாகும். இதனை நீ படிப்பதற்கு ஞற்ற நேரமாக மாற்றிக் கொள்ளலாம். இதன்மூலம் இனிவரும் காலங்களில் நீ அதிக மதிப்பெண் பெற அதிக வாய்ப்பிருக்கிறது” என ஆலோசனை சொன்னேன்.

    அவனது பெற்றோர்களையும் அழைத்துப் பேசினேன். என்னுடைய ஆலோசனையை ஞற்று அந்த மாணவன் உடனே விடுதியில் சேர்ந்தான். பின்னர் சிறந்த மதிப்பெண்கள் பெற்று இன்று வங்கியில் சிறப்பாக பணிபுரிந்து வருகிறான் கிருக்ஷ்ணன்.

    மாணவர் கிருக்ஷ்ணனைப்போலவே இன்று பல மாணவ, மாணவிகளின் வாழ்க்கை அவர்கள் கல்வி நிலையத்துக்கு பயணம் செய்வதிலேயே பல மணி நேரம் வீணாக சென்றுவிடுகிறது. பஸ்ஸ்டாண்டுக்கு வரும் நேரம், ரயில்வே ஸ்டேக்ஷனுக்கு வரும் நேரம், பஸ்ஸுக்காக காத்து நின்று பயணம் செய்யும் நேரம், பஸ் ஸ்டாண்டிலிருந்து பள்ளி அல்லது கல்லூரிக்குச் செல்லும் நேரம் – என வாழ்க்கை பயணத்தில் பல மணி நேரம் செலவழிக்க வேண்டியநிலை உருவாகிறது. மாணவ, மாணவிகளில் சிலர் தங்கள் நேரம் வீணாகப் போவதை அறியாமலேயே நாளையும், பொழுதையும் கழித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் திர்டமிர்டு படிப்பதற்கான செயல்திர்டங்களை மாணவ, மாணவிகள் வகுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போதெல்லாம் மாணவ, மாணவிகளுக்கு முன்னால் இரண்டு மிகபெரிய சவால்கள் (இர்ஹப்ப்ங்ய்ஞ்ங்ள்) உள்ளன. அவை –

    1.         மாணவ, மாணவிகளுடைய தனிப்பர்ட வாழ்க்கை (Personal Life)

    2.         மாணவ, மாணவிகளின் வாழ்க்கைத் தொழில் (Professional Life)

    – ஆகும்.

    இந்த இரண்டு காரணிகளால் உருவாகும் சவால்களையெல்லாம் மனமகிழ்வோடு சந்தித்து, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    மாணவ, மாணவிகளின் தனிப்பர்ட வாழ்க்கை (Personal Life) பல விதங்களில் பிரச்சினைகளால் சூழப்பர்டுள்ளது. அந்த பிரச்சினை மன அழுத்தத்தை உருவாக்கி விடுகிறது. தனிமை(கர்ய்ங்ப்ண்ய்ங்ள்ள்), மனசோர்வு (Depression), மன அழுத்தம் தொடர்பான நோய்கள் (Stress related Diseases) மற்றும் தற்கொலை மனப்பாங்கு (Suicidal Tendency) ஆகிய பிரச்சினைகளெல்லாம் இன்று மாணவ, மாணவிகளிடம் அதிகமாக காணப்படுகின்றன. இவையெல்லாம் 1990 – ம் ஆண்டுக்கு பின்னர்தான் மிக அதிகமாக காணப்படுகிறது என ஒரு ஆய்வு தௌல்வாகக் குறிப்பிடுகிறது.

    மாறிவருகின்ற சூழலில் தௌல்வாக திர்டமிர்டு நேரத்தை செலவழிக்காவிர்டால் இளவயதினரின் தனிப்பர்ட வாழ்க்கை (Personal Life) வீணாகிவிடும்.

    இன்றைய பள்ளி மாணவ, மாணவிகளிடம் சவாலாக இருக்கும் மற்றொன்று, வாழ்க்கை தொழிலைத் தேர்ந்தெடுத்தல் (Professional Life) ஆகும். அதாவது படித்து முடித்தபின்பு எந்தத் தொழிலை அல்லது வேலையை தேர்ந்தெடுத்து அதன்மூலம் கிடைக்கின்ற வருவாயைக்கொண்டு சிறப்பாக வாழலாம்? என்று முடிவு செய்வதை “வாழ்க்கைத் தொழிலைத் தேர்ந்தெடுத்தல்” என குறிப்பிடலாம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்றபோதே நமக்கு ஞற்ற தொழில் இதுதான் என இளம்வயதினர் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

    நார்டில் பலவிதமான மாற்றங்கள் மிக வேகமாக நிகழ்ந்து வருகின்றன. வணிகம், பொருளாதாரம், அரசியல், தொழில்நுர்பம், பண்பாடு, சமூகம் ஆகியவற்றில் ஞற்படுகின்ற மாற்றங்களால் இளைஞர்கள் வாழ்க்கைத் தொழிலை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்கள் உருவாகின்றன.

    எனவே இளம் வயதிலிருந்தே எதிர்வரும் சவால்களை எளிதில் சந்திப்பதற்குத் தௌல்வான சிந்தனையும் ஆழ்ந்த அறிவும் பெற வேண்டுமென்றால் படிக்கும்போதே தகுதியையும் திறமையையும் இளைய உள்ளத்தினர் வகுத்துக்கொள்ள வேண்டும். தகுதியையும் திறமையையும் வளர்ப்பதற்கு தௌல்வான நேரத்திர்டத்தை ஒவ்வொருவரும் உருவாக்கிக்கொண்டு செயல்படுவது சிறந்ததாகும்.

    நேரத்தை மதித்து வாழ்ந்த பலர் சிறப்புப் பெற்றிருக்கிறார்கள். “இந்தியாவில் நிறைய மக்கள் கடிகாரம் அணிகிறார்கள். விதவிதமான வண்ணங்களில் கடிகாரத்தை வாங்கி உபயோகிக்கிறார்கள். தனது ஆடைக்கு ஞற்ற புத்தம்புதிய கடிகாரத்தைக்கூட பயன்படுத்துகிறார்கள். ஆனால் கடிகாரம் பார்த்து நேரப்படி செயல்பட இன்னும் அவர்கள் பழகிக்கொள்ளவில்லை” – என்பது ஒரு அறிஞரின் கருத்தாகும். இதுபோன்ற கருத்துக்கள் இன்னும் பரவாமல் தடுக்க இளைஞர்கள் உடனடியாக சிறந்த நடவடிக்கை மேற்கொள்வது நல்லது.

    தொடரும்.

    உடலினை உறுதி செய்

    11. எங்கே நேரம்
    உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை என்று நினைப்பவர்கள் பின்னர் ஒருநாள் மருத்துவமனைக்குச் செல்ல நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும்
    – எர்வர்ர் ஸ்டேன்லி
    நான் ரொம்பவும் பிஸியாக இருக்கிறேன். எனக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்கிறார்கள் சிலர். பிஸியாக இருப்பது வரவேற்கத்தக்கதுதான். மன அழுத்தம் (Stress), மனச்சோர்வு (Depression) போன்ற மனநோய்களிலிருந்து விடுதலை பெற ஒரே வழி பிஸியாக இருப்பதாகும்.
    பிஸியாக இருப்பவர் யார்? எல்லா பணிகளையும் செய்து முடிப்பவரைத்தான் பிஸியானவர் என்று கூற முடியும். “A busy man is one woo finds time for every toing”. எனவே ஒரு மணிநேரம் உடற்பயிற்சி என்ற கடமையை நிறைவேற்றும் மனிதனே தன்னை பிஸியானவர் என்று கூறிக்கொள்ள முடியும்.
    உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியவில்லை என்றாலும்கூட அன்றாட வேலைகளைக் கவனிக்கும்போதுகூட உடற்பயிற்சியில் ஈடுபடலாம். அதற்கு சில யோசனைகள்.
    அ.    பஸ் நிலையத்திலிருந்தோ, ரயில் நிலையத்திலிருந்தோ வீர்டிற்கு நடந்து விடலாம். ஆர்டோவிற்கு அதிக பணம் கொடுத்து அவதிப்படுவதைத் தவிர்க்கலாம். ஒரு கல்லில் இரு மாங்காய்கள். நான் கூட எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து அண்ணாநகர் வளைவு வரை காரில் வருவேன். அங்கிருந்து முகப்பேரிலிருக்கும் எனது வீர்டிற்கு நடந்தே சென்றுவிடுவேன். ஒரு மணிநேரத்தில் 8 கி.மீ. தூரம் நடந்ததும் காலை 6.30 மணி ஆகிவிடும். அன்றைய உடற்பயிற்சியும் ஆகிவிர்டது; அதிகாலையில் வீர்டில் உள்ளவர்களைத் தர்டி எழுப்புவதும் தவிர்த்தாகிவிர்டது. நேரம் இருந்தால் எந்த தூரமும் நடக்கும் தூரம் தான்.
    ஆ.    பஸ் நிலையத்திலோ, இரயில் நிலையத்திலோ காத்திருக்கும் நேரத்தில் நிற்பதற்கு பதில் நடக்கலாம்.
    இ.    மார்க்கெர்டுக்கு மோர்டார் சைக்கிளில் செல்வதற்குப் பதிலாக சைக்கிளில் செல்லலாம் அல்லது நடந்தே செல்லலாம். சைக்கிள் மிதிப்பதில் கௌரவக் குறைவு எதுவுமில்லை. மேல்நாடுகளில் கோடீஸ்வரர்கள் கூட சைக்கிளில் பயணம் செல்கின்றனர். அவர்களும் உடற்பயிற்சிக்காகத் தான் சைக்கிள் பயணம் செய்கின்றனர்.
    ஈ.    உங்களது அலுவலகத்தில் லிப்ர் இருந்தாலும் படியிலேயே ஞறுங்கள், படியிலேயே இறங்குங்கள். அப்படி காலையிலும், மாலையிலும், உணவு வேளையிலும் ஞறி இறங்குவதே ஒரு நல்ல உடற்பயிற்சியாகும். சோர்வு அடையும்போது கூட ஒருமுறை ஞறி இறங்கலாம். தினமும் இரண்டு மாடிகள் படிக்கர்டில் ஞறி இறங்கினால் ஆண்டொன்றிக்கு மூன்று கிலோ உடல் எடைக் குறையும்.
    உ.    ஞதாவது அலுவலகத்திற்கு சென்று ஓர் அதிகாரியை பார்க்கச் செல்கிறீர்கள். அதிகாரி அங்கு வர ஒரு மணிநேரம் ஆகும் என்றால் அங்கு ஒரு நாற்காலி போர்டு அமருவதைவிட அந்த அலுவலத்தில் அப்படியே ஒரு மணிநேரம் நடந்து அன்றைய உடற்பயிற்சித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். பந்தோபஸ்து டியூர்டிக்கு அமர்த்தப்படும் காவலர்கள் கூட பணியின் போது பக்கத்து வீர்டிலிருந்து ஒரு நாற்காலி வாங்கி அமர்ந்து கொள்வார்கள். அவர்களுக்கு நான் கூறிய அறிவுரை கூட, உர்காருவதை விர்டுவிர்டு நடக்க வேண்டும் என்பதாகும்.
    ஊ.    ஞாயிற்றுக்கிழமைகளில் பிஸியாக இருக்க வாய்ப்பில்லை. அன்றைய தினம் குடும்பத்துடன் ஒரு நீண்ட நடைப்பயணம் (5 கி.மீ.) செல்லலாம்.
    எ.    கோயிலுக்கோ, சினிமா அரங்கிற்கோ நடந்தே போகலாம். வரும்போது ஆர்டோவில் வந்து சேர்ந்துவிடலாம்.
    ஏ.    வீர்டுவேலைகளை வேலை ஆர்களைத் தேடாமல் நாமே செய்யலாம். நமது துணிகளை நாமே துவைப்பது, தேய்ப்பது, வீர்டைப் பெருக்குவது, சமைப்பது, ஒர்டடை அடிப்பது போன்ற செயல்கள் அனைத்தும் உடற்பயிற்சிகளே. தண்ணீர் கொண்டு வா என்று அம்மாவிடம் கேர்காமல் நாமே நடந்து சென்று தண்ணீர் எடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் அம்மாவுக்கு நாமே தண்ணீர் எடுத்துத் தரலாம். இச்செயல் உடற்பயிற்சியாவதோடு மர்டுமல்லாமல் குடும்ப நல்லுறவையும் மேம்படுத்தும். தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.
    ஐ.    வீர்டிற்கு வெளியே சென்று நடக்கவோ, ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்யவோ வசதி இல்லை என்றால் வீர்டிலேயே உடற்பயிற்சி செய்து கொள்ளலாம். இரவு உணவுக்குச் சற்று முன்னர்கூட உடற்பயிற்சி செய்யலாம்.
    ஒ.    காவல்துறையில் மிக உயர்ந்த அதிகாரிகள் சிலர் தங்களது இருக்கையின் அருகில் நின்று கொண்டு தபால்களைப் பார்ப்பதைக் கவனித்திருக்கிறேன். அதற்காக ஒரு தனி மேஜையையும் அவர்கள் வைத்துள்ளனர். மூன்று மணி நேரம் உர்காருவதற்குப் பதில் நிற்பதால் உடலுக்கு ஓரளவுக்கு உடற்பயிற்சி கிடைக்கிறது.
    ஓ.    அன்றாடம் அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளை நீங்களே செய்யலாம். தண்ணீர் கொண்டு வா என்று மற்றவரிடம் கேர்பதைவிட நீங்களே தண்ணீர் பிடித்து குடிக்கலாம். அலுவலகத்தில் உங்களது கோப்புகளைப் பீரோவிற்குச் சென்று நீங்களே எடுக்கலாம்.
    ஒள.     படிக்கும் மாணவர்கள் சோர்வடையும்போது புத்தகத்துடன் நடந்து
    கொண்டே படிக்கலாம். படித்த மாதிரியும் இருக்கும், உடற்பயிற்சி செய்த மாதிரியும் இருக்கும்.

    இது போன்ற உடல் உழைப்புகள் வழக்கமான உடற்பயிற்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டுமே தவிர, இதுவே பிரதான உடற்பயிற்சியாக இருந்துவிடக்கூடாது. வாரத்திற்கு மூன்று நார்கள் ஞதாவது ஓர் ஞரோபிக் உடற்பயிற்சி என்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். அதாவது குறைந்த பர்சம் 20 நிமிடங்கள் அதிவேகமாக நடக்க வேண்டும். முடிந்தால் ஓட வேண்டும்.
    நமது சொத்துகளிலேயே உயர்ந்த சொத்தான உடல் நலத்தை ஈர்ட பெரிய மூலதனம் ஒன்றும் தேவையில்லை. இதற்குத் தேவையானது தினமும் 30 நிமிடங்கள் தான். 24 மணிநேரத்தில் 30 நிமிடங்களை உங்களால் ஒதுக்க முடியாதா? உங்களுக்குள் இருக்கும் ஒருவரைக் கேர்டுப் பாருங்கள். நிச்சயமாக முடியும் என்பதுதான் அவரது பதிலாக இருக்கும்.
    உங்களுக்குள் இருக்கும் அந்த நபர் யார்? ……………

    நூற்றுக்கு நூறு மார்க்

    பொதுப்பரீட்சைக்கு தேதி அறிவித்தாகிவிட்டது மாணவர்களே! படிப்பதில் மும்முரத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டீர்களா?
    உங்கள் குறிக்கோள் என்ன? நூற்றுக்கு நூறு தானே. நம்புங்கள், நிச்சயமாகக் கிடைக்கும். எப்படி? நூறு மார்க்குகளையும் பகுதி பகுதியாகப் பிரியுங்கள். அதாவது,

    • படிப்பில் நீங்கள் காட்டுகிற அக்கறை. நூற்றுக்கு நூறு வாங்க முடியும் என்கிற தன்னம்பிக்கை. வாங்கியே ஆக வேண்டும் என்கிற வைராக்கியம்…

    இவையெல்லாம் உங்களிடம் முழுமையாக இருந்துவிட்டால், அதற்கொரு… 10 மார்க்

    • படிப்பிலே மட்டும் ஆர்வம் காட்டுகின்ற, படிப்புக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கின்ற உங்கள் வகுப்பு முன்னனி மாணவர்களுடன் மட்டுமே நெருக்கமாய் இருந்து பழகிவந்தால் அதற்கொரு… 10 மார்க்
    • காலையும் மாலையும் படிப்பதற்காக, மிக அதிகமான நேரங்களை ஒதுக்கிவந்தால், அதையும் தினந்தோறும் தவறாமல் செய்யும் பழக்கம் இருந்தால் அதற்கொரு… 10 மார்க்
    • ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் அமைந்துவிட்டால்… இல்லையென்றாலும் தனக்குத்தானே ஊக்கம் கொடுத்துக்கொள்ளும் வித்தை தெரிந்திருந்தால், அதற்கொரு… 10 மார்க்
    • நானும் படிக்கிறேனே என்று புத்தகத்தை திறந்து வைத்திருக்காமல், ஆழ்ந்து படிப்பது, எந்தப் போர்ஷனையும் விட்டு விடாமல் முழுமையாகப் படிப்பது, படித்த பாடப் பகுதிகளில் எந்தச் சந்தேகமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, சும்மா டப்பா அடிக்காமல் புரிந்து படிப்பது, கடினமான பகுதிகளை கூடுதல் கவனத்துடன் படிப்பது, எழுதிப்பார்ப்பது, இவைகளைத் தவறாமல் செய்து வந்தால், அதற்கொரு… 15 மார்க்
    • பழைய கேள்வித் தாள்களை சேகரித்து, அந்த வினாக்களுக்கெல்லாம் விடையெழுதிப்பார்ப்பது, கடிகாரத்தை முன்னால் வைத்து, தனக்குத்தானே பரீட்சை வைத்து எழுதிப்பார்ப்பது, வகுப்பில் நடக்கும் டெஸ்ட்களில் எங்கே, எதனால் மார்க் குறைந்தது என்று கவனித்து படித்தபின், ஒரு நண்பனுக்கு அதை பாடமாக நடத்திப் பார்ப்பது, இவைகளை அக்கறையுடன் செயல்பட்டால், அதற்கொரு… 15 மார்க்
    • பத்துமாதம் பட்ட பாட்டை எடைபோடுவது, மூன்று மணி நேரப் பரீட்சை தான் என்ற உணர்வுடன், கவனமாக, சரியாக, தெளிவாக, முழுமையாக, அடித்தல் திருத்தல் இல்லாமல், பயம், கவலை, படபடப்பு இல்லாமல் பரீட்சை எழுதிவிட்டால், அதற்கொரு… 15 மார்க்
    • இவை எல்லாவற்றையுமே சரியாக, முறையாக, முழுமையாக செய்துவிட்டாலும், ஆண்டவனின் அருளும் அவசியம் என்பதால், அதற்கொரு… 5 மார்க்

    என்னது? உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா? அதனால் என்ன?
    வாழும் தெய்வங்களான, தாய், தந்தை, ஆசான் இவர்களை மனதால் வணங்கி தினமும் படித்து வாருங்கள். முடிந்ததும் மனதார அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். அதற்காக இருக்கட்டுமே இந்த… 5 மார்க்
    என்ன? நூற்றுக்கு நூறு வாங்கிவிடுவீர்கள் தானே?

    உள்ளத்தால் உள்ளலும் தீதே

    “திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. திருடாதே… பாப்பா… திருடாதே” இன்று சிறு குழந்தைகள் திருடாமல் நல்ல குணங்களுடன் இருக்கின்றனர். ஆனால் மக்களை ஆட்சி செய்பவர்களும், அரசின் நிர்வாகப் பிரிவில் இருப்பவர்களும், அரசுக்காக மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்களும், பெரிய தொழில் அதிபர்களும், திரையுலகப் பிரமுகர்களும், மேலே கூறிய ஒன்றை முழுமையாகக் கடைபிடிக்காததால்… வந்த விளைவுகளைப் பாருங்கள்.

    • சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் இந்திய பணம் சுமார் ரூ.73 இலட்சம் கோடி உரியவரி செலுத்தாமல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
    • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமானப் பணிகளின் தரம் சிரிப்பாய் சிரிக்கிறது.
    • நமது ஊர்களில் பாதாள சாக்கடை, சாலைகள், பாலம், கட்டிடங்கள் போன்ற பொதுப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்தக்காரர்கள் உரிய தரத்தில் செய்யாததால், பணிகள் பாதியில் முடக்கம் அல்லது முடிந்தபின் விரைவில் பழுதடைகின்றன.
    • ஒரு சில பணிகள் உண்மையிலேயே முடிக்கப்படாமல், முடிந்ததாய் புத்தகங்களில் காண்பிக்கப்பட்டு, அதற்குரிய தொகையைப் பெற்று சந்தோஷமாக, தைரியமாக நடமாடிவரும் தன்மானம் கொண்டவர்கள்.

    இது போல் பல கூறலாம்.
    நீங்களே உங்கள் பகுதியில் நடந்தவைகளை, நடைபெற்று வருபவைகளை எண்ணிப்பாருங்கள்.
    திருட்டு
    “பாருக்குள்ளே நல்ல நாடு
    நம் பாரத நாடு”
    என்றார் பாரதியார். இன்றைய பாரத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு, ஊழல், லஞ்சமின்றி செயல்படும் மாநில அரசுகள் பற்றிய செய்திகளைப் பலர் பார்த்திருக்கலாம். குஜராத் முதலிடத்திலும், பீஹார் அடுத்த இடத்திலும் உள்ளன.
    “எண்ணி எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
    திண்ணிய ராகப் பெறின்”
    – குறள் 666
    எண்ணத்தில் வலிமை செயலாக மலரும். அங்கு மலர்ந்துள்ளதை ஊடகங்களின் மூலம் அறிய முடிகிறது.
    பிறர் பொருளுக்கு ஆசைப்படாத மனநிலை பாராட்டுக்குரியது. தன்னம்பிக்கை நிறைந்தது. ஏதேனும் தவறு செய்து விட்டால், அந்த எண்ணமே மேலோங்கி, தன்னம்பிக்கையை சிதறடித்துவிடும்.
    பிறருக்கு உரிய ஒன்றை, அவருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வது திருட்டாகும். பொய்யாமொழி திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்மே கள்ளாமை என்ற அதிகாரத்தில் 10 குறட்பாக்களின் மூலம் திருடர்களின் வாழ்க்கை, திருடாதவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என விவரித்துள்ளார்.
    திருடர்கள்
    திருட்டு என்ற ஒன்றைச் செய்வதாலேயே ஒருவரது தன்மானம் போய்விடுகிறது. திருடர்களின் மனமானது எந்நேரமும் மற்றவர்களிடமிருந்து எதை, எப்போது, எப்படி எடுப்பது என்றே சிந்தித்துக் கொண்டிருக்கும். திருட்டால் சேர்த்த செல்வம் ஊதாரித்தன செலவுகளால் கரைந்து இறுதியில் அழிந்துவிடும். அத்துடன் அந்தத் திருடர்களையும் அழித்துவிடும்.
    “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல்”
    – குறள் 282
    மற்றவர்களுக்குச் சொந்தமான பொருளைக் கவர்ந்து (திருடிக்) கொள்ளலாம் என மனதில் நினைப்பது கூட தீமை தரும் செயல் என்பது இதன் பொருள்.
    ஒளவையாரும் ஆத்திச்சூடியில், சிறுபிராயத்திலிருந்தே நல்ல பல பண்புகளை வளர்த்துக் கொள்ளக் கூறியுள்ளார்.
    “கொள்ளை விரும்பேல்”
    என்பது அதில் ஒன்று. திருடாதவர்களுக்கு தேவலோகத்தில் இடம் வழங்கப்படும் என்று குறள் கூறுகிறது.
    கொள்ளை
    தினமும் செய்தித்தாள்களில் கொள்ளையர்கள் அட்டகாசம் எனப்படித்து வருகிறோம். இது திருட்டிலிருந்து முழுவதும் வேறுபட்டது.
    நீங்கள் சட்டைப்பையில் ரூ.100 வைத்துக்கொண்டு பஸ்ஸில் ஏறுகிறீர்கள். கூட்ட நெரிசலில், ஏறி உள்ளே சென்று பாக்கெட்டைப் பார்த்தால் ரூ.100 இல்லை. உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பணம் ரூ.100 எடுத்துக் கொண்டதை திருட்டு என்று கூறுகிறோம்.
    கொள்ளை என்பது தனி நபரோ, பலர் ஒரு குழுவாகவோ, பகலிலோ, இரவிலோ ஓரிடத்திற்குச் சென்று, அங்குள்ள பொருட்களை, அவற்றிற்குச் சொந்தக்காரரை மிரட்டி, ஆபத்தை உண்டாக்கி, தேவைப்பட்டால் கொலையும் செய்து எடுத்துச் செல்வதாகும். இம்மாதிரி செய்பவர்களை “கொள்ளையர்கள்” “கொள்ளைக்காரர்கள்” என்று கூறுகிறோம்.
    திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்கள் இருவருக்கும் அடிப்படையில் தேவை ஒன்று தான். முன்னது தெரியாமல் செய்வது, பின்னது தெரிந்த செய்வது.
    இல்லறவாழ்க்கை
    நாம் அனைவருமே வீடுகளில் குடும்பமாக வசித்து வருகிறோம். நமக்கு நமது வாழ்க்கை இன்பமாக, மகிழ்ச்சியாக, அமைதியாக அமைய வேண்டுமானால் சில நல்ல குணங்களைக் கடைபிடிக்க வேண்டும். சில கெட்ட குணங்களைக் கைவிட வேண்டும் என உலகப்பொதுமறை கூறுகிறது.
    கடைபிடிக்க வேண்டியவை
    அன்பு, அடக்கம், இனிய பேச்சு, உதவும் மனம், ஒழுக்கம், கற்புநெறி, நன்றி பாராட்டுதல், நடுநிலை காத்தல், விருந்து அளித்தல் போன்றவை.
    கைவிட வேண்டியவை
    மற்றவர்களைப் பார்த்து பொறுக்க முடியாமை (பொறாமை), பிறர் வைத்துள்ள பொருட்களை விரும்புதல், புறங்கூறுதல் (இல்லாதபோது ஒருவரைப் பற்றி தவறாகப் பேசுதல்). தேவையில்லாத பேச்சுக்களைப் பேசுதல். தீய செயல்களைச் செய்தல் போன்றவை.
    இவைகளைக் கடைபிடிப்பது குடும்பத்தாரின் கடமை.
    துறவிகள்
    குடும்ப வாழ்க்கை வேண்டாம் என்று தனித்து, எல்லாவித சுகங்களையும், சொத்துக்களையும் துறந்தவர்களைத் துறவிகள் என்று கூறினர். ஆனால் இன்று துறவிகள் ஒருவர் கூட இல்லை என்று தான் கூற வேண்டும். இவர்கள் கடைபிடிக்க வேண்டிய மற்றும் கைவிட வேண்டிய பண்புகளையும் கூறியுள்ளார் செந்நாப்புலவர்.
    கடைபிடிக்க வேண்டியவை
    அனைத்து உயிர்களிடமும் அருள் (சன்ம் என்று கருதி, துன்பம் செய்யாமல் உதவுதல்), இறை சக்தியின் மீது முழு நம்பிக்கை, உண்மையே பேசி, நேர்மையாகவே வாழ்தல் போன்றவை.
    கைவிட வேண்டியவை
    கோபம், உயிர்க்கொலை, மாமிச உணவு, பொருட்கள் மீதான ஆசை, பிறர் வருந்துமாறு துன்பச் செயல் புரிதல், ஏமாற்றுதல் போன்றவை.
    காவி உடையர்கள்
    இன்று, பலர் காவி உடை அணிந்து தனி அமைப்புகள் வைத்துக்கொண்டு, ஆடம்பரமாக, படாடோபமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களைச் சாமியார்கள் என்று அறியாதவர்கள் கூறுகிறார்கள். சாமியார் என்பவரும் துறவி போன்ற வாழ்க்கை வாழ்பவர் தான். ஆனால், இன்று நாம் வாழும் காலத்தில் வசிக்கும் காவி உடை அணிந்து, ஊடகங்கள் மூலம் நமக்கு அறிமுகமானவர்களைச் சாமியார் என்றோ, துறவி என்றோ கூற முடியாது.
    இவர்கள் எதையும் துறக்கவில்லை. சாதாரண மனிதர்களைவிட சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். எனவே தான் இவர்களை “காவி உடையர்கள்” என்று கூறுகிறோம்.
    லஞ்சம், ஊழல்
    இன்று ஜனநாயகம் என்ற போர்வையில் நம் நாட்டில் நடைபெறும் கட்சி ஆட்சி லஞ்சம், ஊழலுக்கு வித்தானது. பொதுநலம் கொண்டு செயல்பட்ட ஒரு சிலர் இன்றும் சரித்திரத்தில் வாழ்ந்து வருவதை நாம் அறிவோம்.
    மக்கள் சேவை என்ற முழக்கத்துடன் பல லட்ச ரூபாய்கள் செலவு செய்து, தேர்தலில் வெற்றி பெறும் அரசியல்வாதிகள். சேவைகளைச் செய்வதற்கு கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பதும், அரசு நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் ஒப்பந்தப் பணிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெற்று, தரம் குறைந்த பணிகள் செய்து, கொள்ளை லாபம் அடிப்பதும் வெளிப்படை. இங்கும் கொள்ளை என்ற சொல் உபயோகித்துள்ளோம். அரசுக்கும், பணிகளை மேற்பார்வையிடும் நிர்வாகப் பணியாளர்களுக்கும் தெரிந்தே இதுபோன்று செய்வதால் இதைத் திருட்டு என்று கூறாமல் கொள்ளை என்று கூறுகிறோம்.
    இதை “ஊழல்” என்று கூறலாம்.
    ஏமாற்றும் நோக்கில் தரம் குறைந்த பணிகள் அல்லது சேவைகள் மூலம் அதிக ஆதாயம் பெற்று, அதில் ஒரு பகுதியை மேற்பார்வையிடும் நிர்வாகப் பணியாளர்களுக்கும் கொடுப்பது தான் ஊழல். அதிகாரம் காரணமாய் மிரட்டி, மற்றவர்களுக்கு ஒன்றும் தராமலேயே தாமே முழுவதையும் வைத்துக் கொள்பவர்களும் உள்ளனர்.
    இதிலிருந்து வேறுபட்டது “லஞ்சம்”
    நியாயமாக, ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்க வேண்டிய பணியை, வேண்டுமென்றே, சுய ஆதாயத்திற்காக, மற்றவர்களிடமிருந்து எதையாவது எதிர்பார்த்து, காலதாமதம் செய்து, பேரம் பேசி பெற்றுக்கொண்டு முடிக்கின்றனர். இதில் பெற்றுக் கொள்ளும் பொருள், சேவை, பணம், சொத்து போன்றவை தான் லஞ்சம்.
    சமீபத்தில் உலக நாடுகளில் 180ல் மேற்கொண்ட ஆய்வில் லஞ்சம், ஊழல் இல்லாத நாடுகளின் பட்டியலில் நமது இந்திய நாடு 84வது இடத்தில் இருப்பதாய் செய்திகளின் மூலம் அறிந்தோம்.
    லஞ்சம், ஊழலே இல்லாத முதல் நாடு நியூசிலாந்து. அவர்களைப் பாராட்டுவோம். அந்த நிலைக்குச் செல்ல இளைய தலைமுறை உத்வேகத்துடன் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
    கருப்புப் பணம்
    கணக்கில் வராத பணம் கருப்புப் பணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அரசாங்க கணக்கின்படி சுமார் 25 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. திருட்டுப்பணம், கொள்ளையடிக்கும் பணம், லஞ்சமாய் வாங்கும் பணம், ஊழல் செய்து சம்பாதித்த பணம் அனைத்துமே கருப்புப் பணமாகும்.
    பகல் கொள்ளையர்கள்
    முகமூடி அணிந்து அடையாளம் தெரியாதவாறு வந்து கொள்ளையடித்துச் செல்பவர்களை முகமூடிக் கொள்ளையர்கள் என்று கூறுகிறோம். தீவட்டி (தீப்பந்தம்) பிடித்து வந்து கொள்ளையடித்துச் செல்வோரை தீவட்டிக் கொள்ளையர்கள் என்று கூறுகிறோம்.
    முகமூடி அணியாமல் உண்மையான தோற்றத்துடனேயே இருந்து பிறர்பொருளை புத்திசாலித்தனமாக தனதாக்கிக் கொள்வோரை பகல் கொள்ளையர்கள் என்று கூறலாம். இன்று சிறு அளவிலிருந்து மிகப்பெரிய நிலைவரை இந்தப்பகல் கொள்ளையர்கள் அதிகரித்துவிட்டனர்.
    நிர்பந்தக் கொள்ளை
    நிர்பந்தப்படுத்துவதன் மூலம் கொள்ளையடிக்க முடியும் என்பதை சமீப கால நிகழ்வுகளால் அறிய முடிகிறது.

    • நம் வீடுகளில் நல்ல நிகழ்ச்சி என தொலைக்காட்சிப் பெட்டிமுன் அமர்வோம். உண்மையில் அது நல்ல நிகழ்ச்சியாகவும் இருக்கும். நிகழ்ச்சி மட்டும் ஒலிபரப்பாகும் நேரம் 15 நிமிடம் என்றால், வேறுமாதிரியான நிர்பந்தங்கள் (விளம்பரங்கள், தேவையற்ற காட்சிகள் போன்றவை) 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். நமது 15 நிமிட நேரம் தொலைக்காட்சியால் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தான் அர்த்தம்.
    • ஓர் அல்ட்ரா டீலக்ஸ் அரசாங்க பஸ்ஸில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு, பயண நாளன்று செல்கிறோம். சாதாரண பஸ் நிற்கிறது. அந்த பஸ் ரிப்பேர் ஆகிவிட்டது. வேறு பஸ் இல்லை. இதில் ஏறிக் கொள்ளுங்கள் என்று கூறினால் எப்படி இருக்கும். இதுவும் நிர்பந்தக் கொள்ளை தான். இதுபோல் பல உதாரணங்களை நீங்கள் கூற முடியும்.

    தன்னம்பிக்கை
    திருடுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் அடிப்படையாக இருப்பது அவர்களிடமுள்ள தன்னம்பிக்கைதான். பஸ்ஸில், கூட்டத்தில், மற்றவர் பாக்கெட்டிலிருந்து ரூ.100 எடுக்க ஒருவர் முயற்சிப்பது, தன் மேலுள்ள அபரிமிதமான தன்னம்பிக்கையால் தான்.
    அதுபோன்றே இரவில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கும்பலில் உள்ளவர்களுக்கும் அசாத்தியமான தன்னம்பிக்கை உள்ளது. அவர்களது உயிரைப் பணயம் வைத்து அச்செயலில் ஈடுபடுகின்றனர்.
    ஆனால், பகல் கொள்ளையர்கட்கு அந்த அளவு தன்னம்பிக்கை தேவையில்லை. சிறுசிறு ஆதாயங்களுக்கே சோரம் போகும் பலர் இருப்பதால் இவர்களால் பல காரியங்களைச் சிரமமில்லாமல் செய்ய முடிகிறது.

    • கான்ட்ராக்ட் தொகையில் கட்டிங்
    • ரேசன் பொருட்கள் கடத்தல்
    • இலவச திட்ட பயனாளிகளைத் தேர்வு செய்தல். இது போல் இன்னும் பல கூறலாம்.

    தன்மாத்தைப் பற்றி கவலைப்படாமல், உயிரைப்பற்றிக் கவலைப்படாமல், தீமையான செயல்களில் தன்னம்பிக்கையுடன் சிலர் ஈடுபடும்போது.
    நேர்மையாக வாழ்ந்து சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடந்து பிறர் சாபத்துக்கு பயந்து வாழும், 98 சதவிகித மக்கள் தன்னம்பிக்கையே இல்லாமல் கண்டும் காணாமலும் இருப்பது ஏன்?
    சிந்தித்தால் தெளிவு வரும்
    இன்று ஜனநாயகத்தின் தூண்களுள் ஓரளவு நம்பிக்கை அளிப்பது நீதித்துறை தான். சிந்திக்க வேண்டும். அரசு ஒதுக்கும் தொகை முழுதும், ஒதுக்கப்பட்ட பணிக்காக மட்டுமே செலவழிக்கப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்கும் உரிமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் (Citizen) உண்டு. இதைக் கடமையாக எப்போது செயல்படுத்துகிறோமோ அன்று தான் இந்தியா ஊழல் இல்லாத நாடாக மாறும்.
    இதற்குத் தேவை நாட்டுப்பற்றும், இணைந்து பணியாற்றும் சகிப்புத்தன்மையும், தன்னம்பிக்கையும் ஆகும். நம்நாடு என்ற எண்ணம் அனைவருக்கும் வேண்டும். எப்படி நம் வீட்டைப் பராமரித்துப் பாதுகாக்கிறமோ, வீட்டிலுள்ள பொருட்கள் திருடு போகாமல் பத்திரப்படுத்துகிறோமோ அதுபோல் நாடு, நாட்டிலுள்ள இயற்கை வளங்கள் மற்றும் நாட்டு மக்களுக்காகச் செலவிடப்படும் நிதிகளைப் பாதுகாப்பாக கண்காணிக்க வேண்டும்.
    ஒரு தெருவில் வசிப்போர், தமக்குள் கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, அங்கு நடைபெறும் பொதுச் செயல்களில் முழுமையாக இணைத்துக் கொள்வதுடன், பிறர் செயல்களைப் பக்குவமாய் நன்னெறிப்படுத்தும் மனநிலையைப் பெற வேண்டும்.
    நேர்மையாகவும், நாணயமாகவும் பொதுவான காரியங்கள் நடைபெறுவதைக் கண்காணித்து முறைப்படுத்தும் தைரியமும், தன்னம்பிக்கையும் தேவை. குழுவாக இணையும்போது தைரியம் வந்துவிடும். தேவை தன்னம்பிக்கை தான். தவறு செய்பவர்கள் எல்லாம் தன்னம்பிக்கையுடன் செய்கின்றபோது, நம்மால் ஏன் முடியாது? ஏன் கூடாது? என்று நினைத்தாலே போதும். தன்னம்பிக்கை உடலின் அனைத்து செல்களுக்கும் புது சக்தியைத் தருவதை உணரலாம்.
    மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல், நம்மிடம் இருப்பதை அறிந்து, அளவுடன் அனுபவித்து வாழும்போது, அநியாயங்களை சுட்டிக்காட்டும் மனப்பக்குவம் பெற்று வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
    வாழ்க வளமுடன்

    வெற்றி நிச்சயம்

    உலகில் படைக்கப்பட்டுள்ள அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். வெற்றியும் தோல்வியும் நம் கைகளில் தான் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எதையாவது ஒன்றை அடைய வேண்டும் என்றால் அதை எப்பாடுபட்டாவது அடைந்தே தீருவேன் என்று சபதம் செய்ய வேண்டும். விருப்பம் இல்லாமல் நம்மால் எதையும் அடைய இயலாது.
    ஒரு சமயம் பிக்கு ஒருவர் புத்தவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
    “பகவரே, தாங்கள் ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மனிதர்கள் ஏன் அதை அடைவதில்லை”“இன்றே நீ ஒரு காரியம் செய். இந்த பகுதியிலுள்ள மனிதர்களைச் சந்தித்து அவர்கள் அடைய விரும்புவது என்ன என்று கேட்டு அவற்றை மனதில் பதிவு செய்து கொண்டு வா”
    புத்தபெருமான் இவ்வாறு சொன்னதும் அந்த பிக்கு அன்றே அந்த வேலையைத் தொடங்கினார். அந்த ஊரில் இருந்த பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து புத்தர் கேட்கச் சொன்னது போலவே தாங்கள் அடைய விரும்புவது எதை என்று கேட்டார். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.
    அன்று மாலை பிக்கு புத்தரைச் சந்தித்தார்.
    “நான் சொன்னவாறு செய்தாயா?” என்று புத்தர் கேட்க அதற்கு பிக்கு “ஆம். அவ்வாறே செய்தேன்” என்றார்.
    “கேட்டவற்றைச் சொல்”
    பிக்கு தான் சந்தித்த மனிதர்கள் அடைய விரும்பிய விஷயங்களை ஒவ்வொன்றாகக் கூறினார்.
    இவற்றை அமைதியாகக் கேட்ட புத்தர் “இவர்களில் ஒருவர் கூட மோட்சத்தை அடைய விரும்புகிறேன் என்று சொல்லவில்லையே” என்று கேட்டார்.
    அதற்கு அந்த பிக்குவும் “ஆம்” என்றார்.
    “விரும்பாத ஒன்றை எவ்வாறு அடைய முடியும்?”
    புத்தர் அந்த பிக்குவிடத்தில் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க பிக்குவும் அந்த கேள்வியில் இருந்த உண்மையை புரிந்து கொண்டு அமைதி காத்து நின்றார்
    நாம் வாழ்க்கையில் வெற்றியடைய முக்கியமாகச் சில விஷயங்களை நம் மனதிலிருந்து அகற்றியாக வேண்டும். அவ்வாறு அகற்ற வேண்டிய விஷயங்களில் முதன்மையானது எதிர்மறை சிந்தனை.
    நாம் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் முதலில் நமது மனம் எதைப்பற்றி சிந்திக்கிறதோ அந்தச் சிந்தனையே வெற்றி பெறும். ஒரு இளைஞன் காலியாக உள்ள ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறான். அவன் விண்ணப்பிக்கும் போதே சில எதிர்மறையான விஷயங்களைத் தனக்கு முன்னால் வைக்கிறான். பத்தே இடங்கள் தான் காலியாக உள்ளன. பல ஆயிரம் விண்ணப்பங்கள் வரும். நமக்கு நிச்சயம் இந்த வேலை கிடைக்காது. பலர் சிபாரிசுகளோடு வருவார்கள். கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொன்னாலும் சிபாரிசோடு வருபவர்களையே வேலைக்குத் தேர்வு செய்வார்கள். எதிலும் நமக்கு அதிர்ஷ்டமே இல்லை. இந்த இன்டர்வியூ வெறும் கண்துடைப்புதான். இப்படி பல எதிர்மறையான விஷயங்களையே அந்த இளைஞனின் மனசு யோசிக்கிறது. அவன் சிந்தித்த எதிர்மறை விஷயங்கள் அனைத்தும் உண்மையாகிப் போகிறது. இதனால் வேலையும் கிடைக்காமல் போகிறது.
    ஒரு விஷயத்தில் இறங்குகிறாம் என்றால் முதலில் நாம் எதிர்மறையான விஷயங்களைப் பற்றி சிந்திக்காது நேர்மறையான விஷயங்களைப் பற்றியே சிந்திக்க வேண்டும். ஒரே ஒரு வேலை காலியாக இருந்தாலும் அந்த வேலை நமக்கு நிச்சயம் கிடைக்கும். இன்டர்வியூவில் நான் நன்றாக பதில் சொல்லுவேன். இந்த வேலைக்கான முழுத்தகுதியும் எனக்கு இருக்கிறது என்று ஒருவன் சிந்திப்பானேயானால் அவன் நிச்சயம் வெற்றி பெறுவான். ஆகவே நாம் எப்போதும் வெற்றி கிடைக்குமோ இல்லையோ அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நேர்மறையாக சிந்திக்கப்பழகிக் கொள்ள வேண்டும். இது நம் வாழ்க்கை முழுவதற்கும் பயனளிக்கும். வெற்றிக்கும் வழி வகுக்கும்.
    நாம் அகற்ற வேண்டிய அடுத்த விஷயம் தாழ்வு மனப்பான்மை. ஒரு மனிதனின் தோல்விக்கு முதல் காரணமாக அமைவது அவனுடைய தாழ்வு மனப்பான்மை ஆகும். ஒருவனுக்கு எல்லா திறமைகளும் இருக்கும். ஆனால் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை தோல்விக்குச் சொந்தக்காரனாக்கி விடுகிறது. தன்னைப் பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதும் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு காரணமாகிவிடுகிறது.
    நாம் எல்லோரும் அசாத்திய சக்தி படைத்த மனிதர்கள் என்ற எண்ணத்தை மனதில் உருவாக்கிக் கொள்வது அவசியமாகும். நம்மைச் சுற்றியுள்ள எல்லா மனிதர்களுக்கும் உள்ள திறமை நமக்கும் உள்ளது என்பதை முதலில் நாம் உணர வேண்டும். சிலர் முதல் தோல்வியிலேயே துவண்டு போய்விடுவார்கள். சிலர் எத்தனை முறை தோற்றாலும் கவலைப்படாமல் தொடர்ந்து வெற்றிக்காக முயற்சி செய்து போராடிக் கொண்டே இருப்பார்கள். கடைசியில் ஒருநாள் வெற்றியும் பெறுவார்கள்.
    இனிநாம் பின்பற்ற வேண்டிய விஷயங்களைப் பற்றிச் சற்றுப்பார்போம்.
    காலையில் எழுந்ததும் உங்கள் மனதுக்குள்ளே ஒரு சபதத்தை மேற்கொள்ளுங்கள். இன்றைய நாள் நிச்சயம் எனக்கு நல்லதாக இருக்கும். இன்று நான் புதிதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுவேன். நேற்றைய நாளைவிட இன்று அறிவிலோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்திலோ நான் முன்னேறியவனாக இருப்பேன். இப்படி சபதம் எடுத்துவிட்டு உங்களுடைய நாளைத் துவக்கிப் பாருங்கள். நிச்சயம் உங்கள் மனத்தில் புத்துணர்ச்சி உருவாகும். இது உங்கள் சாதனைக்கு வழிவகுக்கும்.
    அடுத்ததாக எந்த ஒரு விஷயத்தையும் ஆர்வமின்றி செய்தால் அதில் வெற்றி பெற இயலாது. ஒரு மனிதன் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் நூறு சதவிகிதம் ஆர்வம் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் பணி எத்தகைய கடினமானதாக இருந்தாலும் அதை மிகச் சுலபமாக முடிக்கலாம். எதையும் வெறுப்போடு நோக்காதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே வெல்வதற்கே என்று அடிக்கடி உங்கள் மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள்.
    சுவர் இருந்தால் தான் சித்திரம் தீட்ட முடியும் என்பது முதுமொழி. இது உண்மை தான். உடல் நன்றாக இருந்தால் தான் நாம் சாதனைகளைச் சுலபமாகச் செய்ய முடியும் தேர்வுகளுக்காக வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு படித்துக் கடைசியில் தேர்வு நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனால் ஒரு மாணவனுக்கு எவ்வளவு நஷ்டம் என்பதைச் சற்று மனதில் சிந்தித்துப் பாருங்கள். தேர்விற்காக மட்டுமல்ல. வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும். அப்போதுதான் நம்மால் சிறந்த முறையில் வாழ முடியும். கடைகளில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு வகைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்டு வரும் குளிர்பானங்கள் நிச்சயம் உடலுக்கு கேட்டை மட்டுமே விளைவிக்கும். இயற்கையாக விளையும் பழங்கள், பழச்சாறுகள், இளநீர், வீட்டில் செய்யும் உணவு வகைகள் போன்றவற்றை நிறைய சாப்பிடுங்கள். இதனால் எந்த கெடுதலும் விளையாது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் ஆழ்ந்த தூக்கம்.
    நமது மூளையில் ஹிப்போகேம்பஸ் என்றொரு முக்கிய பகுதி இருக்கிறது. நமது நினைவாற்றலுக்கு இந்த பகுதியே முக்கிய பங்கு வகுக்கிறது. இரவு நேரங்களில் போதிய அளவிற்கு தூங்காவிட்டால் அது நமது நினைவுத்திறனை வெகுவாக பாதிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
    நம்மால் நினைத்த மாத்திரத்தில் மிகச்சுலபமாக தூங்க முடியும். அதற்கென பிரத்யோகமாக சில பயிற்சி முறைகள் உள்ளன. அவற்றை இப்போது நாம் ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்வோம்.
    எப்பொழுதுமே வலது பக்கமாக திரும்பிப்படுக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நமது நுரையீரல் இரண்டு பகுதிகளால் ஆனது. இதில் இடதுபக்க நுரையீரலைவிட வலதுபக்க நுரையீரல் அளவில் சற்று பெரியதாகும். நீங்கள் வலது பக்கமாகத் திரும்பிப் படுக்கும்போது உங்கள் உடலுக்கு அதிக அளவில் பிராண சக்தி கிடைக்கும். இது சிறந்த தூக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் உங்களுக்குத் தரும்.
    தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு மிகவும் அவசியமாகும். சிலர் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பார்கள். விரைவில் களைத்துப் போவார்கள். மெல்ல மெல்ல செயலில் ஆர்வம் குன்றத் தொடங்கும். பின்னர் மனதில் சலிப்பு வந்து அமர்ந்து கொள்ளும். ஆகவே தினந்தோறும் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் குறைந்தபட்சம் ஆறுமணி நேரமாவது ஆழ்ந்து தூங்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
    ஒரு நாளும் வெற்றி தானாக நம்மைத் தேடிவராது. நாம்தான் அதைத் தேடிச் செல்ல வேண்டும். அதற்கு சில வழிமுறைகளை நிச்சயமாகப் பின்பற்றியாக வேண்டும். வெற்றி பெற்ற மனிதர்களைப் படியுங்கள். அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று அவர்களின் வாழ்க்கையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் அவர்களைப் போல வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

    முயற்சி தரும் வெற்றி

    தெளிவு, அறிவு, உணர்ச்சி ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையிலே ஏற்படும் ஓர் உந்துசக்தியே செயலாகப் பயன்படும். இந்த நிலை ஏற்படுவதற்கு மனதிற்குத் தெளிவைக் கொடுக்க வேண்டும்.அறிவை கூர்மைப்படுத்தி உணர்வுகளைக் கொழுந்துவிட்டு எரியச் செய்ய வேண்டும். முயற்சிக்கு இம்மூன்றும் உறுதுணையாக இருக்கும். முயற்சி தான் நம்மை முழுமனிதனாக ஆக்கும்.
    வாழ்வின் மகத்துவம் முயற்சி செய்வதில் தான் இருக்கிறது. அறிவை வளரச் செய்வதிலும் துடிப்புடன் நின்றால்தான் நிமிர்ந்து நின்று வளம் பெற முடியும்.‘கிரேக்க சமுதாயத்தின் ஏற்றம் மிகுந்த இளைஞர்களே, வருங்கால கனவான்களே, நீங்கள் வீரர்களாக இருந்தால் மட்டும் போதாது; அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த அறிவு இப்பூவுலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அதைப் பெறுவதற்குத்தான் உங்களை எல்லாம் அழைக்கிறேன்’ இந்தக் குரல் வேறு யாரிடமிருந்தும் வரவில்லை.
    சிந்தித்துச் சிந்தித்துச் தெளிவடைந்த சீர்திருத்தச் செம்மல், ஏதன்ஸ் நகரமாந்தர் அனைவர் உள்ளங்களிலும் உற்சாகத்தையும், ஏதென்ஸ் நகர வீதிகளில் கலகலப்பையும் உண்டாக்கிய சிம்மக்குரலோன் சாக்ரடிஸிடமிருந்துதான் வெளிவந்தது.
    அறிவு எங்கு சிதறிக்கிடந்தாலும், அடி வானத்திற்கு அப்பாலிருந்தாலும், அதைப் பெறுவதற்கு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
    ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்ற வினா எழுவது இயல்பு. இதற்கு விடை காண்பது முக்கியம்.
    முயற்சிதான் வாழ்வதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தன்னைத் தானே உணர்ந்து கொள்வதற்கு வழி செய்கிறது. நாம் செய்யும் எல்லா முயற்சிகளிலும் நம்மை நாமே புரிந்து கொள்வது மகத்தானது.
    நம்மை நாம் புரிந்து கொள்ளாதவரையில் நமக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திகளினால் பயன் எதுவும் ஏற்படாது. பிறப்பு இயற்கையானது போலவே, முயற்சியும் நம்முடனேயே இருந்து கொண்டிருக்கிறது.
    வாழ்வதற்கு ஒன்றுமே இல்லை என்று நினைக்கும்போது, வாழ்க்கையிலும் எதுவும் இல்லாமல் போய் விடுகிறது. அப்பொழுது முயற்சிக்கே இடமில்லை.முயற்சி சமுதாய மறுமலர்ச்சிக்கு சக்தி வாய்ந்த சாதனமாக இருக்கிறது. சமுதாயத்தைச் சீர்படுத்துவதே முயற்சிதான். முயற்சி முதலில் அறியாமையை விரட்டுகிறது.
    அறியாமை விரட்டப்பட்டால் புது எழுச்சி தோன்றுகிறது. முயற்சி நம்முடைய கடமையைச் சுட்டிக்காட்டி பொறுப்புணர்ச்சியையும் கடமையைச் சுட்டிக்காட்டி பொறுப்புணர்ச்சியையும், விசுவாசத்தையும் ஏற்படுத்தித் தருகிறது.
    விரிவாகப் பார்க்கும்போது முயற்சி நம்மைச் செம்மைப்படுத்துவதற்கு மாபெரும் கருவியாக இருந்துவருகிறது.
    வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதற்கு இது ஒரு ஊன்றுகோலாக இருக்கிறது.
    வாழ்வின் மகத்துவத்தை எடுத்துக்கூறுவதற்கும், உணர்வதற்கும் ஒரு சக்தி வாய்ந்த சாதனமாக இருப்பது முயற்சிதான்.
    முயற்சி செய்தால்தான் வாழ்வதன் மகத்துவம் தெரியும். வாழ்க்கையில் எப்போது நாம் வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்குப் போராட வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறோமோ –
    எப்பொழுது உலகில் நாம் முயன்று சாதிப்பதற்கு ஒன்றுமில்லை எண்ணுகிறோமோ அப்பொழுதுதே நம்முடைய வீழ்ச்சி ஆரம்பமாகிவிடும்.
    எந்த நாடு முன்னேற்றத்தின் விளிம்பை தொட்டுவிட்டோம் என்று இறுமாந்தி நிற்கிறதோ, அதனுடைய அர்த்தம் அந்த நாடு அழிவை நோக்கிச் செல்லும் வழியாக இறங்க ஆரம்பித்துவிட்டது என்பதாகும்.
    எந்த நாடு எனக்கு எதிரிகளே இல்லை எனவும், தன்னை எதிர்க்கும் சக்தி யாருக்கும் இல்லை என்னும் முனைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறதோ அது அடிமையாகும் நாட்களை நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.
    இதனுடைய விரிவான விளக்கம் என்னவென்றால் -வாழ்க்கை முழுவதும் முயற்சி செய்ய வேண்டும் என்னும் தனிமனித தத்துவத்தை ஒரு நாட்டை அடிப்படையாக வைத்து விரிவான கோணத்தில் பார்ப்பதாகும்.நாட்டின் வளர்ச்சி எந்த விதத்திலும் எல்லையைத் தொட்டுவிடக்கூடாது. முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் எல்லையே இல்லை.
    இது மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஸ்தம்பித்து நின்று விடக்கூடாது ஏன் என்றால் –
    முன்னேற்றம் ஏற்படாத இழப்பு ஒரு புறமிருக்க, அந்த தேக்க நிலையில் ஏற்படும் இழப்பு இரட்டிப்புச் சரிவை ஏற்படுத்திவிடும். இதற்கு உதாரணமாக ரோமப் பேரரசையும் அதன் நாகரிகத்தையும் கூற முடியும். ரோமானியர்கள், உலகமே ரோம் நகரம் என்ற அச்சில் தான் சுழன்று கொண்டிருக்கிறது என்று எண்ணினார்கள். உலக நாகரிகத்தின் எல்லையே ரோம் தான் என்று கருதினார்கள்.
    அதன்பயனாக அவர்கள் உண்பதிலும் உல்லாசம் அனுபவிப்பதிலும் உறங்குவதிலும் தீவிரம் காட்டிய அளவு -உழைப்பதில் காட்டவில்லை. இதன் காரணமாக ரோமப் பேரரசும் அதன் நாகரிகமும் காலப்போக்கில் முகவரி தெரியமலே போய்விட்டது.
    நாம் மேற்கொள்ளும் முயற்சி வாழ்க்கை முழுவதும் பரந்து விரிந்து இருக்க வேண்டும். நமது அதிகபட்சத் திறமையினால் முயற்சியின் பலன் விரைவிலே கிடைத்து விட்டாலும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
    முயற்சி முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது வாழ்க்கையின் எல்லையும் குறுகிவிடும் என்பதனை என்றும் நினைவில் வைக்க வேண்டும்.

    உள்ளத்தோடு உள்ளம்

    எல்லோரும் வாழ வேண்டும் நல்லோர்கள் எண்ணமிது என்பது பாரதியின் வாக்கு.“வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அனைவரின் இலட்சியமுமாகும். அதற்கு நல்ல எண்ணங்கள், நல்ல மனநிலை, நல்ல சூழ்நிலை ஆகியவை தேவை. இவை தாமாக வராது. நாமாகத்தான் தேடிப்பிடித்து அமைத்துக் கொள்ள வேண்டும்.

    Continue Reading »

    கோபி பயிலரங்கம்

    கோபியில்…
    தன்னம்பிக்கை மாத இதழ்
    ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை டெக் பொறியியல் கல்லூரி, கோபி இணைந்து நடத்தும்
    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    Continue Reading »

    திருநெல்வேலி பயிலரங்கம்

    நெல்லையில்,
    தன்னம்பிக்கை வாசகர் வட்டம் திருநெல்வேலி கிளை நடத்தும் முதல் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்.

    Continue Reading »