– 2009 – August | தன்னம்பிக்கை

Home » 2009 » August (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    அரசி

    இது ஊனமுற்றோர்க்கான இடம்” பெரும்பாலும், இந்த வாசகர்களை பேருந்திலும், ரயிலிலும் நாம் பார்த்திருப்போம். ஊன முற்றவர்கள் வந்தால், இந்த இடம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறதா? ரயில் பயணம், பேருந்து பயணத்தில், இந்த நிலை என்றால் வாழ்க்கை பயணத்தில் ஊனமுற்றவர்களின் நிலை?

    அவர் பெயர் “ஷிர்லி செங்” வயது (26) சீனாவில் வசித்து வருகிறார். இவர் பிறந்து பத்துமாத குழந்தையாக இருந்தபோது கை, கால் மூட்டுகளில் வீக்கம் மற்றும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு அவருடைய கை, கால்கள் செயல் இழந்தன. நம்பிக்கை இழக்காத அவரின் தாய் தொடர்ந்து “பதினொரு (11 வயது) ஆண்டு காலம் வரை அமெரிக்கா, சீனா இரண்டு நாடு களிலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தார். இறுதியில் சிகிச்சை பலனில்லாமல் போனது.

    பள்ளி என்று “ஷிர்லி” போனதே தன்னுடைய பதினோராவது வயதில்தான். அதுவரை அவருக்கு எழுத படிக்க தெரியாது.

    பள்ளியில் சேர்ந்த சிறிது நாளிலேயே சுய முன்னேற்ற வாசகங்களையும் தன்னம்பிக்கை தரும் கவிதைகளையும் எழுதினார். சிறு வயதி லேயே Motivational Poet என்றஅந்தஸ்தை பள்ளி முதல்வர் மூலம் பெற்றார். Earth Science என்ற பாடத்தில் 97% சதவிகிதம் பெற்று பள்ளியிலேயே முதலிடம் வகித்தார். பள்ளி மாணவர்கள், இடையே சிறந்த சுயமுன்னேற்ற பேச்சாளராக விளங்கினார். இவர் மாணவியாக இருந்த போதே இவருடைய பேட்டிகள் பத்திரிக்கைகளில் வெளியாயின. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் செய்தி ஆனார். பலர் வாழ்க்கையில் திருப்புமுனை ஆனார். அவர் வாழ்க்கை உற்சாகம் குறையாமல் சென்றது. அவருடைய “பதினேழாவது” வயதில் மீண்டும் காய்ச்சலால் தாக்கப்பட்டு தன் இரு கண்களிலும், பார்வை இழந்தார் (இப்பொழுது அவருக்கு பார்வை இல்லை).

    “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” என்று இருக்க வேண்டிய இவர் வாழ்க்கை சோதனைகளை கடந்து சாதனையாக மாற பலருக்கும் பாடமாகிறது.

    ஆம். இப்பொழுது ஷிர்லி தன்னம்பிக்கை சுயமுன்னேற்றம் பற்றி 27 புத்தகங்கள் எழுதி யுள்ளார். இவர் சுயமாக எழுதிய புத்தகங்கள் 9.

    இவருக்கு வியட்நாம், அமெரிக்க நாடுகளில் விருது பெற்று தந்த புத்தகங்கள் 8, 17 சுயமுன்னேற்ற புத்தகங்களுக்கு துணை ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். இவருடைய முதல் புத்தகத்தை எழுதும் பொழுது இவருக்கு வயது 20. தொடர்ந்து ஓர் ஆண்டுக்குள் மூன்று புத்தகம் எழுதி விட்டார்.
    சுயமுன்னேற்றம் பற்றி இவர் பேசிய “குறுந்தகடுகள்” இவருக்கு வருமானத்தை பெற்று தருகிறது.
    இந்த நிலையிலும் தன்னை வளர்த்து ஆளாக்கிய, தன் தாயை தெய்வம் என்கிறார் “ஷிர்லி” தன் தாய் கொடுத்த உற்சாகம் தான் தன்னை இந்த அளவு உயர்த்தியதாக கூறுகிறார். தன்னுடைய பதினேழாவது வயதில் பார்வை இழந்தபோது தன் மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டார்.

    “இந்த நிலையிலும் இறைவன் எனக்கு கேட்கும் திறன் கொடுத் திருக்கிறார், நுகரும் திறன் கொடுத்திருக்கிறார், சிந்திக்க அறிவு கொடுத்திருக்கிறார், இது என் வாழ்க்கையில் இறுதி அல்ல இறைவன் கொடுத்த இந்த வாழ்வில் நான் பார்க்க முடியாமல் போனாலும் இறைவனின் அற்புதத்தை என்னால் உணரமுடிகிறது, இறைவனுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

    நான் கல்வி என்று பெரிதாக படிக்க வில்லை “என் வாழ்க்கை அனுபவங்கள் தான் என் கல்வி என்று கூறும் “ஷிர்லி” தன் வாழ்நாளில் Brailey என்றபார்வை இல்லாதவர்கள் படிக்கும் முறையை பயன்படுத்தியதே இல்லை. “கணினி’யில் Screen reader என்றமென்பொருள் மூலமாக கணினி திரையில் உள்ளதை ஒலியாக கேட்கிறார். தனக்கு வரும் Emailகளுக்கு தானே விடை தருகிறார். அதுவும் எப்படி? தனது வலது கை ஆள்காட்டி விரல் தனது இடது கை ஆள்காட்டி விரல் இந்த இரண்டு விரல்களால் மட்டும் டைப் செய்து பதில் அனுப்புகிறார். அதுவும் ஒரு நிமிடத்திற்கு 65 வார்த்தைகள். மேலும் தனது இணையதளத்தை தானே வடிவமைத்திருக்கிறார்.

    பல புத்தகங்களை கணினியின் உதவியோடு படிக்கிறார். “குட்டே” என்ற ஆங்கில இதழில் “ஷிர்லி” அளித்த பேட்டி

    நிருபர் : “ஷிர்லி” நீங்கள் இந்த நிலைக்கு உயர்ந்தது எப்படி?

    ஷிர்லி : இந்த நிலைக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து கனவு கண்டேன். என் கனவு பலித்தது.

    நிருபர் : “ஷிர்லி” தோல்வியென்றால் என்ன?

    ஷிர்லி : தோல்வி என்பது ஒரு தற்காலிகமான மனநிலை. இன்னும் சொல்லப் போனால் தோல்வி என்பது வெறும் வார்த்தையே. நாம் நமது முயற்சிகளை தொடர்ந்து செய்யும் போது தோல்வி களுக்கு தான் தோல்வி வரும். தோல்வி என்பது மனிதனுக்கு இல்லை என்று கூறுகிறார் “ஷிர்லி”.

    ஷிர்லியின் எதிர்கால கனவு என்ன தெரியுமா?

    Harward பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் “முனைவர் (Ph.D)” பட்டம் பெற வேண்டும் என்பது. நிச்சயம் ஒருநாள் எனக்கு பார்வை வரும், நான் முனைவர் பட்டம் பெறுவேன் என்று கூறும் “ஷிர்லி”யின் லட்சியம் நிறைவேற வாழ்த்துவோம்.

    மல்டிமீடியாவில் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு

    மல்டிமீடியா என்பது என்ன?

    மல்டிமீடியா என்பது பல்வேறு மீடியாக்களின் கூட்டுக்கலவை ஆகும். இக்கூட்டுக்கலவை என்பது ஒலி, ஒளி, நகர்வு, வரைபடம் போன்றவை ஆகும். முன்காலத்தில் சினிமா துறையில் மட்டும் பயன்படுத்தப்பட்ட மல்டிமீடியா இன்று கல்வி, மருத்துவம், கட்டுமானம், தொழிற்சாலை, கணிதம் மற்றும் ஆராய்ச்சித் துறை முறைசாரா கல்வி ஒளிபரப்புத் துறை, ஜவுளித்துறை போன்ற அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

    வடமாநிலங்களில் உள்ள புனே, மும்பை, டில்லி போன்ற நகரங்களில் வசிக்கும் மாணவர்களிடையே மல்டிமீடியா பற்றிய விழிப்புணர்வு அதிகமாக காணப்படுகிறது. மும்பையில் மட்டும் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மல்டிமீடியா தொழிற்சாலைகள் உள்ளது என்றால் மிகையாகாது. தற்போது ரிலையன்ஸ், டாடா மற்றும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தற்சமயம் இந்த மல்டிமீடியாவில் முதலீடு செய்து வருகின்றன. இப்படிப்பட்ட மல்டிமீடியாவில் தென்னிந்தியாவில் குறிப்பாக பெங்களூர், சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களிலுள்ள மாணவர்களைத் தவிர மற்ற இடத்தில் உள்ளவர்களுக்கு இது பற்றி விழிப்புணர்வு மிகவும் குறைவே.

    மல்டிமீடியாவின் பயன்பாடு

    இப்படிப்பட்ட மல்டிமீடியாவின் பயன்பாடு கல்வி முதல் சினிமா வரை அனைத்து துறைகளிலும் மேலோங்கி உள்ளது. அதைப்பற்றிய விவரங்கள் சிலவற்றைகாண்போம்.

    விளம்பரத்துறை

    தற்போது உள்ள நிலையில் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற பொருட்களாகிய டூத் பேஸ்ட் முதல் ஆடை அணிகலன் வரை விற்பனை சத விகிதத்தை உயர்த்த பெரிதும் உதவுவது விளம்பரங்கள் ஆகும். அப்படிப்பட்ட விளம்பரங்களை உருவாக்க உதவும் மீடியாக்களான ஒலி, ஒளி, விஷ்வல் எஃப்பக்ட்ஸ் ஆகியவற்றைகொண்ட மல்டிமீடியா பெரிதும் பயன்பட்டு வருகிறது. சென்ற2009 நாடாளுமன்றதேர்தலில் விளம்பரங்கள் மூலம் இத்துறைக்குச் சுமார் 800 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

    கல்வித்துறை

    பள்ளி, கல்லூரி சென்று படித்து தெரிந்து கொள்ளும் விஷயத்தை விட இன்று மிகவும் சுலபமான முறை இணைய தளத்தில் கற்றுத் தெரிந்து கொள்வதும் CBT மூலம் தெரிந்து கொள்வதும் தான்!

    CBT எனப்படும் கணினி தாங்கிய கல்வி முறையை உருவாக்க மல்டிமீடியா பெரிதும் உதவுகிறது. இம்முறைமூலம் கல்வி கற்பதால் மாணவர்களுக்கு கற்றுக் கொள்வதில் விருப்பம் அதிகமாகிறது. இதனால் கற்கும் கல்வி எளிமை ஆகிறது. இதற்கு ‘EDUTAINMENT’ என்று பெயர்.

    மருத்துவத்துறை

    இத்துறையில் இன்று டாக்டர் பட்டம் பெற உள்ள மாணவ – மாணவிகள் பயிலும் முறை மல்டிமீடியாவால் உருவானவையே. உதாரணமாக முந்நாளில் மருத்துவ பயிற்சிக்காக பிணங்களை அறுத்துக்காட்டி வகுப்புகள் நடப்பது சகஜம். ஆனால் இன்று மல்டிமீடியா மூலம் மனிதனையும், மனிதனின் உறுப்புக்களையும் உருவாக்கி செய்முறை விளக்கம் கணினி மூலம் நடத்தப்படுகிறது. இதனால் உடலில் உள்ள செல்களில் அசைவு நோய் கிருமியின் தன்மை ஆகியவற்றை பயிற்சியில் உள்ளவர்கள் தெளிவாக புரிந்து கொள்கிறார்கள். நோயாளி உடலில் உள்ள நோய்கிருமி பற்றியும் அதன் தன்மைப்பற்றியும் நோயாளிக்கு புரியவைத்து விடவும் உதவுகிறது. மருத்துவத்தில் மல்டிமீடியா அறுவை சிகிச்சைகளுக்கு பெரிதும் உதவுகிறது.

    கட்டுமானத் துறை

    கட்டுமானத் துறை என்பது உலகை உருவாக்குவது ஆகும். அப்படிப்பட்ட ஆக்குதல் துறையில் மல்டிமீடியா இல்லாமல் இருக்குமா? இத்துறையிலும் மல்டிமீடியாவின் பங்களிப்பு பெரிதும் உண்டு. ஒரு கட்டிடத்தை எடுத்துக்கொண்டால் அதன் கட்டுமானப் பணி தொடங்கும் முன் அந்த கட்டிடத்தின் வடிவத்தையும் அதன் அழகையும் மட்டுமின்றி சுவற்றின் வண்ணங்களையும் கட்டிடத்தை சுற்றி உள்ள புல்வெளி வெற்றிடத்தையும் முன்கூட்டியே கண்டு கொள்ள மல்டிமீடியாவைப் பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமின்றி வீட்டினுள் உள்ள பொருட்கள் எங்கு இருக்க வேண்டும் எங்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று அறியவும் முடியும்.
    தொழிற்சாலைத் துறை
    ஒரு இயந்திரத்தின் இயக்கமும் அந்த இயக்கத்தின் மூலம் வெளியாகும் விளைவுகளையும் எளிதில் கண்டு அறிய மல்டிமீடியா பயன்பட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு அந்த இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது. அதில் உள்ள சிறப்பம்சங்கள் எவ்வாறு இருக்கிறது என்பதை எளிதில் எடுத்துக்காட்ட முடிகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு PREVIEW-வாக காட்ட முடிகிறது. இதற்குப் பெயர் தான் ‘Architechture Walkthrough’ எனப்படும். இதைப்போல் ஒரு புதிய நிறுவனம் தொடங்கினால் அதைப்பற்றிய செய்திகளை அறியவும் அந்நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு அந்நிறுவனத்தின் வேலை பற்றி பயிற்சி அளிக்கவும் Conference எனப்படும் கூட்டு சந்திப்பிற்காகவும் தொழிற்சாலைகளில் மல்டிமீடியா பெரிதும் பயன்பட்டு வருகிறது. ஒரு தொழிற்சாலையின் இணையதளம் மல்டிமீடியா இல்லாமல் உருவாக்கப்படுவது இல்லை.

    பொழுதுபோக்குத் துறை

    அன்று முதல் இன்று வரை மல்டிமீடியா பொழுதுபோக்குச் சாதனமாக பயன்பட்டு வருகிறது. சினிமா, நாடகம், ஓவியம், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றில் அன்று தொட்டு இன்று வரை ஏறுமுகத்தை மட்டும் கொண்ட மல்டிமீடியாவை இரண்டாக பிரிக்கலாம். அது லீனியர் (Linear) மற்றும் நான் லீனியர் (Non-Linear). சினிமா, நாடகம், நடனம் போன்றவை திரையில் காண்போரை எந்த ஒரு மாறுதலுக்கும் உட்படாத ஒரு வகை. இது லீனியர் வகையாகும்.

    கணினியில் விளையாடப்படும் Computer Games வகைகளை நான்லீனியர் என்கிறோம். அதாவது பயன்படுத்துவரால் Control செய்ய சாத்தியம் உள்ளவையே. CBT, PBT ஆகியவை இந்த நான் லீனியர் வகையைச் சாரும்.

    உலகில் உள்ள அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்ற மல்டிமீடியாவை கோவையில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா குழுமம் G9 SCHOOL OF MULTIMEDIA என்ற நிறுவனத்தில் மாணவ-மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சலுகைகளுடன் வேலை வாய்ப்பு உறுதிப்பத்திரம் அளித்து சேவையின் அடிப்படையில் பெரும் தொண்டாற்றி வருகிறது.

    திறந்த உள்ளம்

    நண்பர் ஒருவரின் மூலமாக தன்னம்பிக்கை மாத இதழ் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதைப் படித்த உடன் நமது வாழ்க்கைக்கு தேவையான பல பயன் உள்ள செய்திகள் இடம் பெற்றிருப்பதை தெரிந்து கொண்டேன்.

    ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் சோர்வையடைகிறான். அதனால், துவண்டு போகிறான். பல மன உளைச்சலுக்கு ஆளாகி தோல்வி அடைந்து, சில சமயங்களில் மரணத்தைக் கூட தழுவுகிறான்.

    நான் இந்த தன்னம்பிக்கை மாத இதழை இன்னும் முழுவதுமாக கூட படிக்கவில்லை. அதற்குள்ளாகவே இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதிக் கொண்டிருக் கிறேன். ஏனென்றால் நீங்கள் கூறியுள்ள செய்திகள் ஒவ்வொன்றும் நம்மால் முடியும். முயற்சி செய், என்ற தன்னம்பிக்கையை ஒரு மருத்துவர் கூறுவதைவிட பல மடங்குகளில் எளிய முறையில் வாசகர்களுக்கு புரிய வைத்து இருக்கிறீர்கள்.

    – சிவராமகிருஷ்ணன், திருச்சி.

    நலம் சேர்த்த தன்னம்பிக்கை மாதஇதழ் வளம்சேர்த்த நல்வார்த்தைகளுடன்
    கலை அழகு சேர்ந்த கவிநயத்துடனே
    கலைகண்ணன் வெளியிட்டு வருகிறார்
    நாளைய தலைமுறை நலம்சேர்க்கும் வண்ணம்
    வாழையடி வாழையாய் வரும் இளையோர்சக்தி
    வரலாறு படைக்க தன்னம்பிக்கை இதழ்
    திரமாக படிக்க பயன்தரும்
    வாழ்க! வளர்க மலர்க!!

    – கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்,
    ஒண்டிப்புதூர், கோவை.

    பூவின் இதழ்களோ
    தேனை மட்டும் கொடுக்கும் – ஆனால்
    தன்னம்பிக்கை மாத இதழோ
    தேன்போன்ற
    தன்னம்பிக்கை நிறைந்த
    கவிதைகளையும்
    கட்டுரைகளையும்
    சிந்தனைகளையும்
    தருகிறது.

    – கவிஞர் ஞானசித்தன், சென்னை.

    தன்னம்பிக்கையின் 20வது ஆண்டு விழாவில் பேசிய அனைவரின் கருத்துக்களும் அமுதமொழிகளாக நெஞ்சிலே தன்னம்பிக்கையை ஊட்டியது. தற்தையின் கொள்கைக் கனவை நனவாக்கி வரும் ஆசிரியரின் உரையும், ஜயாவிடமே படித்து, அவருடனே பணியாற்றிய திரு. தூசி தியாகராசன் அவர்களின் உரையில் தன்னம்பிக்கை இதழ் உருவான செய்தியும், கல்வி கற்பது என்பது வகுப்பறையில் கற்பது மட்டுமன்று மண்ணும் மரமும் வகுப்பறைகள், மக்களே பாடப்புத்தகங்கள், அனுபவங்களே அறிவை வளர்க்கிறது என்றகருத்தும் நெஞ்சை விட்டு அகலாமல் நிற்கிறது. விழா ஐயாவின் புகழைப்பாடும் விழாவாக மட்டும் அமையாமல் இளைஞர்களை வழிநடத்தும் கருத்தரங்கமாக அமைந்ததை அறிய முடிந்தது.

    – கருமலைத் தமிழாழன், ஓசூர்.

    பாலாவின் “கடவுள் எங்கே” கடவுளை எங்கேயோ தேடுபவர்களுக்கு ஒரு வழி காட்டி.

    – அ. சம்பத், திருவரங்கம்.

    தன்னம்பிக்கை 20வது ஆண்டு விழாவில் கவிஞர் மு. மேத்தா அவர்கள் காவியங்களில் மட்டுமே சந்திக்கும் மனிதர்களை வாழ்க்கையில் சந்திப்பது சிறப்பு என டாக்டா இல.செ.க. அவர் குறித்து கூறியது நன்று.

    வெற்றிப்படிக்கட்டுகள், காதலுக்குக் கண்டு உண்டு, நாட்டுப்பற்று உள்ளிட்ட கட்டுரைகள் அருமை.
    தொலைத்தொடர்பு தொல்லைத் தொடர்பாக எந்த வகையில் மக்களிடையே பயன்பட்டு அதன் மூலம் நமது கலாச்சாரத்தைச் சீரழிக்கிறது என்பதை அன்றாட நிகழ்ச்சிகளைக் கொண்டு அருமையாக விளக்கப் பட்டுள்ளது.

    மல்டிமீடியா மூலம் பயின்று எப்படி உயரலாம் என்பதை டாக்டர் ரமா சுந்தரராஜன் இன்றைய இளைய சமுதாயத்துக்கு விளக்கியுள்ளார். இதனைப் பயன்படுத்தி முன்னேறமுயல வேண்டும்.

    – இரா. தியாகராசன் எம்.ஏ., பி.எட்., இலால்குடி.

    விரக்தியில் வெந்திடும்
    வீணர்கள்கூட சற்று
    தலைநிமிர்ந்து விழித்து
    நம்பிக்கையில் நிலவாய்
    முடியுமென்ற முன்னுரையெழுத
    முத்திரையாய் முக்கூடலாய்
    புறப்பட்டு ஒளியேற்றும்
    சிறுவாணித் தண்ணீரில்
    வளர்கவிகளில் குளித்திட
    வளர்ந்திட்ட விருட்சமே நீ!
    புகழாய் வளர்ந்து
    பூந்தமிழாய் வலம்வந்து
    கொங்கு மண்ணில்
    கொடையாய் வாழ்க!

    – கவிநிலா அருணா, (தளி) ஜல்லிப்பட்டி.

    விதியை விரட்டி பணத்தைத் திரட்ட முடியும்

    விதியின் பெயரைச் சொல்லி சும்மா உட்கார்ந்து இருந்தால் ஒரு நாளும் பணத்தைப் பெறமுடியாது; பணக்காரராகவும் வாழ இயலாது. ஒரு கை மட்டும் அசைந்து கொண்டிருந்தால் ஓசை வராது.

    விதி என்பது வீணர்களின் வீணானச் சொல் என்கிறார் குருநானக். நாம் விதியைப் பற்றி ஒரு நாளும் எண்ண வேண்டாம். செயலைச் செய்வோம். செல்வத்தைப் பெறுவோம். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.

    விதியை விரட்டும் தன்மை பணத்திற்கு உண்டு. பணம் நம்முடைய நல்ல இயல்புகளை சோதிக்கும் ஓர் உரைகல்.

    பணத்தின் ஆற்றல் நம்முடைய தேவைகளை நிறைவேற்றி விடும் போது, விதியைப் பற்றி ஏன் எண்ண வேண்டும்.

    பவ்ம் முதலில் நம்மிடம் வர அனுமதிக்க வேண்டிய இடம் இதயம்தான். நாம் பணத்தை கையில் பற்றிப் பிடிக்கும் முன் இதயத்தைத் தான் பற்றிப் பிடிக்க வேண்டும்.

    வாழ்க்கையை கௌரவமாக நடத்த பணம் அவசியமாகிறது. பணமா மனிதனைச் சம்பாதிக் கிறது? மனிதன் அல்லவா பணத்தைச் சம்பாதிக் கிறான் என்று கூறுகிறார் விவேகானந்தர்.
    பணம் ஒரு அத்தியாவசியப் பொருள்.

    அது மனிதனுடைய உழைப்புக்கும் வாழ்க்கைக்கும் உறுதுணையாக நிற்கிறது என்கிறார் நேருஜி.
    பணத்தின் மேன்மையைப் பற்றி பல அறிஞர்களுடைய வார்த்தையை கவனித்து நடந் தால் விதி என்பதை என்னவென்றே தெரியாமல் செய்து விடமுடியும்.

    பணப்பை பெருகப் பெருக ஒவ்வொரு வருடைய கன்னமும் பெருத்துவிடும். பணப்பை சிறிதாக சிறிதாக கன்னமும் வற்றிவிடும். பணம் வந்ததும் அறிவற்றவன் கூட அறிவாளியாகி விடுகிறான்.
    அவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தை கூ.ட சட்டங்களாக மாறுகின்றன அறிஞர் ஜான்ஸாட்.
    செல்வம் வந்ததும் செல்வாக்கும் வந்து விடுகிறது. தங்கத்திற்கு அரசர்கள்கூட தங்களின் தொப்பியை கழற்றி மரியாதை செலுத்துவார்கள் என்பது பழமொழி.

    பணத்தை மட்டும் சேர்த்து விடு. உலகம் முழுவதும் உன்னை ஒரு பணக்காரன் என்றும் பண்பாளன் என்றும் கூறத் தயங்காது என்கிறார் பெர்னாட்ஷா. பணம் யாருடைய கையில் இருந்தாலும் ஆற்றல் அளிக்கும்.

    பணம் கொடுப்பதாகக் கூறி ஒருவரிடம் வேலையை ஒப்படைத்தால் வேலை விரைவிலே நடக்கும் என்கிறார் இங்கர்லால்.

    பணத்திற்கு இவ்வளவு ஆற்றல் இருக்கும் பொழுது சாதாரண விதியை அதனால் மாற்றமுடியாதா என்ன?

    கட்டாயம் முடியும்! நம் மனம் வைத்து பணத்தைச் சம்பாதித்து விட்டால் விதியைப் பற்றி எண்ணிப் பார்க்கக்கூட நேரம் இருக்காது.

    பணத்தைச் சரியானபடி பயன்படுத்தினால் அது மாபெரும் ஆற்றலாக விளங்கும்.
    பாங்குகளிலும், கடைகளிலும் ஆண்டுக்கு இரண்டு முறைகணக்கு எடுத்து வரவு செலவினை வகைப்படுத்துவது வழக்கம்.

    இதேபோல் நாம் சம்பாதிக்கும் வழிமுறை களைக் கணக்குப் பார்த்து சரிகட்டும் போது விதி எங்கிருந்து உள்ளே வரமுடியும்.

    குருடும் செவிடும் ஊமையுமான ஹெலன் கெல்லர், ஓர் சொல்லைக் கற்றுக் கொள்ள மணிக்கணக்காக உழைத்து சொற்களை உணர்ந்தார்.

    ஆங்கிலத்துடன் பிரெஞ்சு, லத்தின் மொழி களைக் கற்க எட்டு ஆண்டுகள் ஓயாது உழைத்து, இரவு பகலென்று பார்க்காமல் ஒரே நோக்கத் துடன் படித்ததின் பயன் அதில் பண்டிதரானார்.

    அவருடன் ஆசிரியரும் சேர்ந்து உழைத்தார். அதன் பயன் பட்டதாரியானார்.
    ஹெலன் கெல்லரின் குறிப்பிடத்தக்க செயல் என்னவென்றால் அவர் தனக்கு என்று படைத்துக் கொண்ட வாழ்வை வளமுள்ள தாகவும், மனநிறைவு கொண்டதாகவும் ஏற்றுக் கொண்டதுதான்!
    தனக்கு இருந்த குறைகளைக் கொடுமை யான பாடுகளாகக் கொள்ளவில்லை.

    எதையும் நிறைவாகக் கொண்டாரே விதியின் மேல் பழியைப் போட்டு அழுது வடியவில்லை. கண்ணீர் சிந்தவில்லை. துணிந்து செயல்பட்டார் விதியை விரட்டி அடித்தார். வெற்றி பெற்றார்.
    விதி என்றசொல்லைப் படைத்து அதனை சமுதாய ஓடையில் உருக்கி ஊற்றிவிட்ட படியினால் அதனுடைய வழிவழி வந்தவர்களும் விதியை எவராலும் வெல்ல முடியாது என்றஎண்ணத்தை உருவாக்கி விட்டார்கள்.

    விதியை மதியால் வெல்ல முடியும் என்பதனை கூறமறந்துவிட்டார்கள் என்பதனை நினைவில் வைக்க வேண்டும்.

    எல்லாவற்றிற்கும் விதிதான் காரணம் என்று வீணாக உரைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. நாம்தான் அவற்றிற்கெல்லாம் காரணம் என்கிறார் தீரர் சத்தியமூர்த்தி.

    இனியொரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம் என்று கட்டளையிடுகிறார் பாரதியார்.
    எழுந்து நில்லுங்கள். ஊக்கத்தை விடாதீர்கள். உங்கள் சொந்த விதியைப் படைப்பவர்கள் நீங்களே என்பதை ஒரு போதும் மறவாதீர்கள்.

    உங்களுடைய எதிர்காலத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று உணர்ச்சி ததும்ப உரைக்கிறார் விவேகானந்தர்.

    விதி வீழ்த்தி விடும் என்று வீணே அஞ்ச வேண்டாம். துணிந்து வரும் எதிர்ப்பை எதிர்த்து போராடுவதின் மூலம் விதியை விரட்டி அடித்து விடலாம்.

    மதியை வளர்க்க வந்தவர்கள் விதியைப் புகுத்தி சமுதாயத்தில் எதனையும் பகுத்தறிவு கண்கொண்டு காணாமல் தடுத்து விட்டனர்.

    தங்கள் துன்பங்களுக்குத் தாங்கள்தான் காரணம் என்பதனை விட்டுவிட்டு விதிதான் என்று கூறிவிட்டனர் என்கிறார் காரல் மார்க்ஸ்.

    இந்த அறிவுரைகளை மனதில் வைத்து செயலாற்றினால் வெற்றிதான் வருமே தவிர விதி வராது.

    மனிதா! மனிதா!!

    உலக வரைபடத்தில் மக்கள் குழுவினர் வரைந்து கொண்ட எல்லைக் கோடுகள் பல நாடுகளை உருவாக்கின. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. அந்த எல்லைக் கோட்டுக்குள் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் அந்த நாட்டுக்கே சொந்தம். ஒரு சில நாடுகளில் வைரம், தங்கம், குரூட் ஆயில் போன்றவிலை உயர்ந்த இயற்கைச் செல்வங்கள் உள்ளன. பல நாடுகளில் சாதாரண நிலையே காணப்படுகின்றன.

    அளவுகோல் என்ன?

    இந்தச் சூழலில் வளரும் நாடுகள் என்று ஒரு சில நாடுகளைக் கூறுகிறோம். வளர்ந்து வரும் நாடுகள் என்று பெரும்பாலானவைகளைக் கூறுகிறோம். பின்னடைந்த நாடுகள் என்று ஒருசிலவற்றைப் பிரித்து வைத்துள்ளோம். இவ்வாறு பிரிப்பதற்கு என்ன அளவுகோலை உபயோகிக்கின்றனர்?

    நான்கே நான்கு அம்சங்கள்தான். அவை :

    கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், மக்கள் வாழ்க்கை முறை.

    கல்வி

    அனைவருக்கும் கல்வி என்ற செய்தியை நாம் அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பும் கல்வி கற்க உரிமை உள்ளது. அதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. ஏனென்றால் கல்வி மூலமே உலக வரலாற்றையும், வாழ்க்கை வசதிகளைப் பெறுவதற்கான பணி / தொழில்களையும் பெற இயலும்.

    “”கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக”

    என்றார் கல்வியின் விளைவு குறித்து கூறிய திருவள்ளுவர். நாட்டை நிர்வகிக்க மக்களிட மிருந்து பலவகையிலும் வரிகள் மூலம் நிதியைப் பெற்று, அதைச் சரியாக திட்டமிட்ட வகையில் மக்களுக்குச் சென்று சேர வைப்பதே அரசாங்கத்தின் பணி. அந்த வகையில் எந்தெந்த நாடுகளில் கல்வி இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறதோ அந்த நாடுகள் வளர்ந்த நாடுகள் (Developed Countries) என அழைக்கப்படுகின்றன. அனைவருக்கும் கல்வி வழங்க இயலாத நாடுகள் வளர்ந்துவரும் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

    பொருளாதாரம்

    அடிப்படையே தனிமனித வருமானமும் (Per Capita Income) விலைவாசியும் ஆகும். சர்வதேச அளவில் ஒரு நாட்டின் கரன்சிக்கு எந்த அளவு மதிப்பு (value) நிர்ணயிக்கப்படுகிறதோ அதுவும் கணக்கில் கொள்ளப்படுகிறது. தேவைக்கேற்ற குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (Need Based Minimum Wage) என்பது கம்யூனிச கோட்பாடு. ஆனால், இன்றைக்கு கம்யூனிச நாடுகளில் கூட இந்த கோட்பாடு கடைப்பிடிக்க முடிவதில்லை. காரணம் : பெருகிவரும் மக்கள் தொகை; குறைந்து வரும் இயற்கை வளங்கள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்டவைகள்.

    ஒவ்வொரு நாடும் தனக்கென கரன்சிகளை வைத்துள்ளன. இந்தியா – ரூபாய்; அமெரிக்கா – டாலர்; இங்கிலாந்து – பவுண்ட்; ரஷ்யா – ரூபிள். இதுபோல் இருந்தாலும் சர்வ தேச அளவில் அமெரிக்க டாலரின் அடிப்படையிலேயே அனைத்தும் கணக்கிடப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கென்று தனியே யூரோ என்ற ஒரு கரன்சியை உருவாக்கிக் கொண்டுள்ளன.

    விலைவாசி

    பொருட்களின் விலைகளின் அடிப்படை யிலும் பொருளாதாரம் பாதிக்கிறது. சமீபத்தில் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். ஒரு நாட்டில் பணத்தை மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றால்தான் அன்றாட உணவுப் பொருட்களையே வாங்க முடியும் என்று. பணம் எனும் கரன்சியை ஒவ்வொரு நாடும் அச்சடித்து வெளியிடுகின்றன. இதற்கு அடிப்படையாக தங்கம் உள்ளிட்ட சிலவற்றை இருப்பாக வைத்துக் கொள்கின்றன. இருப்பை விட அதிகமாக அச்சிட்டு புழக்கத்தில் விடும் போது பணவீக்கம் என்று கூறுகிறோம். இந்நிலையில் கையில் பணமிருக்கும்; ஆனால், பொருட்களின் விலை மிக அதிகமாக இருக்கும்.

    பொருட்களின் விலையைச் சாமானியரும் வாங்குமளவு கட்டுக்குள் வைத்திருப்பது அரசின் அடிப்படை, தலையாய கடமை. இதற்கு ஒவ்வொருவரும் உழைத்து சம்பாதிக்கும் தொகை கணக்கில் எடுக்கப்பட்டு, பரிசீலிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்தவே அரசாங்கங்கள் அகவிலைப்படி, பஞ்சப்படி, Dearness Allowance என அறிவிக்கின்றன.

    விலைவாசி குறைந்து, கரன்சி இருப்பு நிலை அதிகரிக்கும்போது சர்வதேச சந்தையில் அந்த நாட்டின் கரன்சி மதிப்பு உயர்கிறது. ஓராண்டுக்குமுன், 2008ல் நமது நாட்டு ரூபாயின் மதிப்பு உயர்ந்து, அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்ததையும் அதனால், ஏற்றுமதியாளர் பலர் அவதிக்குள்ளானதையும் அறிவோம். ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்; அதற்கான வேலைவாய்ப்பை நாடுகள் குடிமக்களுக்கு உருவாக்கித்தர வேண்டும். உழைப்பைப் போலவே ஓய்வும் தேவை. வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் கல்வி, மருத்துவம், முதியோர் பராமரிப்பு முதலிய சமூக நலத்தை அரசாங்கங்கள் தம் பொறுப்பில் எடுத்துக் கொண்டு செயல்படுத்துவதால் அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு சொத்து சேர்க்க ஆசையில்லை; அவசியமு மில்லை. எனவே, உல்லாசமாக வார இறுதியில் சுற்றுலா உள்ளிட்ட செயல்களுக்கு செலவழித்து மகிழ்கின்றனர்.

    சுகாதாரம்

    குடிநீர் வசதி, கழிவு நீர் வெளியேற்றும் வசதி, மருத்துவ சிகிக்சை வசதி, சுற்றுச்சூழல் தூய்மை ஆகியவைகளை உள்ளடக்கியதே சுகாதாரமாகும். இவை எல்லாவற்றிலும் நிறைவு பெற்று கேடில்லாத சூழலை உருவாக்கிய நாடுகள் வளர்ந்த நாடுகள் எனப்படுகின்றன. இவைகள் குறைந்த நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் (Developing Countries) என்றும், இவைகளில் மிகக் குறைவான வசதியுடைய நாடுகள் (Under Developed Countries) என்றும் கூறப்படுகின்றன.

    மழை

    “நீரின்றி அமையாது உலகு”. இக்கூற்றின்படி வாழ்வின் அடிப்படை ஆதாரம் நீராகும். நீருக்கு ஒரே வழி மழைதான். மழை என்றும் ஒரேமாதிரி பொழிந்து கொண்டு இருப்பதாயும், மக்களது மனநிலைக்கேற்ப இடம் மாறிப் பெய்து வருவதாயும் புள்ளி விபரங்கள் மூலம் அறிய முடிகிறது. ஓராண்டில் மழையின் மொத்த அளவு என்னவோ, அது ஒவ்வொரு ஆண்டும் குறையாமல் இயற்கை செயல்படுகிறது.

    சமீப காலங்களில் மழையானது பாலைவனப்பகுதிகளிலும் கடல்களிலும் அதிக அளவு பொழிந்து வருகிறது. காரணம் மக்களது மனநிலைதான். சிறிதுநேர, தற்காலிக சுகத்துக்காக ஒத்தி வைப்பதால், மழையானது வேறிடத்தில் பெய்கிறது.

    சுத்தமான, தூய்மையான குடிநீர் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும். வானம் பார்த்த பூமி என்பது போய் இன்று குடிநீர் தடையின்றிப் பெற, வானம் பார்த்து யாகங்களும், பூஜைகளும் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில் மக்கள் குடிநீரைக் காசு கொடுத்து (மினரல் வாட்டர்) வாங்கி உபயோகிக் கின்றனர். இக்கலாச்சாரம் கிராமங் களுக்கும் தொற்றக் கூடாதெனப் பிரார்த்திப்போம்.

    கழிவுநீர் வெளியேற்ற வசதி

    கொசுக்கள் எங்கே உற்பத்தி யாகின்றன? பன்றிகள் எங்கே உல்லாசமாய் வாழ்கின்றன? கழிவுநீர் தேக்கங்களில்தான். ஏன்? நாடுகள் கழிவு நீரை வெளியேற்ற போதிய அக்கறை காட்டாததுதான். மக்கள் தொகை குறைவாக இருந்த போது கழிவுநீரைப் பலவழிகளில், வீட்டுத்தோட்டம், விவசாயம் என உபயோகித்தனர். இன்று மக்கள் தொகைப் பெருக்கத் தால் மிகப் பெரும்பானான வீடுகளில் வீட்டுத் தோட்டமே தெரியாத நிலை உள்ளது.

    விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக கழிவு நீர் சுத்திகரிக்கப் பட்டு பலவாறு உபயோகிக்கப்படும் நிலையில், ஒருசில நாடுகளைத் தவிர, ஏனைய நாடுகளில் இது பெரிய பிரச்சனையாகவே உள்ளது. பாதாள சாக்கடைத் திட்டங்கள் பல வந்தாலும் முழுமையான செயல்பாடு இல்லை. மக்களும் நீரை சிக்கனமாய் பயன் படுத்தப் பழக வேண்டும்.

    மருத்துவம்

    ஆரோக்கியம் நிலவ, மருத்துவம் அவசியம் தேவை. தட்ப வெப்ப மாறுபாடுகள் தொற்று நோய்கள், எதிர்பாரா விபத்துக்கள் போன்ற வற்றிலிருந்து குணம் பெற மேற் கொள்ளும் சிகிச்சை முறைகள்தான் மருத்துவமாகும். இரசாயனம், அறுவை சிகிச்சை, ல-ழ்ஹஹ் உள்ளிட்ட சோதனை முறை களை அடிப்படையாகக் கொண்ட ஆங்கில மருத்துவம், பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படை யிலான இயற்கை மருத்துவம், உணவை அடிப்படையாகக் கொண்ட மூலிகை மருத்துவம் எனப் பல முறைகள் உள்ளன.

    நாட்டுக் குடிமக்கள் அனைவருக்கும் தேவையான மருத்துவ சிகிச்சைகள் எந்த நாட்டல் இலவசமாக வழங்க முடிகிறதோ அந்த நாடு வளர்ந்த நாடு எனப்படுகிறது. கருத்தரித்த நாள் முதல் தாய்க்கான போஷாக்கு பராமரிப்பு, பிரசவம், குழந்தை வளர்ப்பு, கல்வி, வேலை, முதியோர் பராமரிப்பு என ஒவ்வொன்றிலும் அரசின் பங்கு மிகப் பெருமளவில் உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் முழுமையான பலனைத் தருவதில்லை; எனவே, தனியார் பலர் இத்துறையில் வேகமாய் வளர்ச்சி பெற்றுள்ளனர்.

    (தொடரும்)

    தன்னம்பிக்கை 20வது ஆண்டு விழா

    – கவிவேந்தர் மு. மேத்தா
    சென்ற மாத இதழ் தொடர்ச்சி….

    மனசுக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர்

    தன்னம்பிக்கை இதழை தோற்றுவித்த பேராசிரியர் டாக்டர் இல.செ.கந்தசாமி என்று நாம் சொன்னாலே அவர் எழுத்துக்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கை, அவர் ஏற்படுத்திக்கொண்ட நட்பு, அவர் இந்த சமூக நலனுக்கு ஆற்றிய பணிகள் தாம் நம் நினைவுக்கு வரும்.

    Continue Reading »

    பிரச்சனைகளில் வெற்றி பெற சட்டமிடுவோம்

    ஆர். முருகேசன்
    மனநல ஆலோசகர் –
    மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்

    கசங்கி கிடந்த அந்த அழகான படத்தை முடிந்தவரை சரிசெய்து பார்த்தேன். திருப்தி யில்லை. தூக்கிப் போட்டுவிடவும் மனமில்லை. பிறகு அந்த படத்தை சுற்றி நான்கு பக்கங்களிலும் அழகான சட்டங்களை அமைத்து வரவேற்பரை சுவற்றில் மாட்டினேன். என்ன வியப்பு! வீட்டிற்குள் வருபவர்கள் அனைவரும் அந்த படம் நன்றாக இருக்கிறதே எங்கே வாங்கியது எவ்வளவு எனக் கேள்விகளை கேட்கும் தகுதியினையும் அழகையும் பெற்றது. இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு பள்ளிச்சிறுவன் இந்தியாவின் எல்லைகளாக நான்கு பக்கங்களிலும்… என உரக்கப்படிப்பது கேட்டதும் சட்டென மனதில் தோன்றியவைகள். நான்கு திசைகள், நான்கு பக்கங்கள் என எதையும் (எப்படிப்பட்ட உருவ அமைப்பை பெற்றிருந் தாலும்) அதனைச் சுற்றியுள்ள நான்கு பக்கங்களில் கவனம் செலுத்தினால் நான்கு பக்கங்களுக்குள்ளே இருப்பது தெளிவாகிறது; அழகும் பெறுகிறதே அப்படியானால் எந்தவொரு பிரச்சனைக்கும் நான்கு பக்கங்கள் இருக்குமா? இருந்தால் அவை களே பிரச்சனைக்குரிய தெளிவான தீர்வாக அமைய வாய்ப்பாகுமா என எண்ணும்போது இந்த நான்கும் நான்கு பக்கங்களாக வடிவெடுத்தது.

    1. காரணம்

    எந்த ஒரு காரணத்திற்கு இந்த பிரச்சனை உருவானது அல்லது உருவாக்கப்பட வேண்டும் என்றகேள்வி மனதில் எழ வேண்டும். எழுந்தால் பிரச்சனையும் நாமும் விழாமல் தீர்வுடன் எழுவோம். தீர்வு என்பது வெற்றித்தானே?

    2. முன்னுரிமை

    பிரச்சனைக்கு முன்னுரிமை வழங்குவது எப்போது எப்படி வழங்கப்பட வேண்டும். உடனடியாக, தாமதமாக அல்லது மிக தாமதமாக என முன்னுரிமை வழங்கி பிரச்சனையை அணுக வேண்டும். முன்னுரிமை வழங்கினாலே முன்னுக்கு வருவது நிச்சயமாக தீர்வு என்றவெற்றி தான்.

    3. சுதந்திர கோட்பாடு

    சுதந்திரக் கோட்பாடு என்பது இது இப்படித்தான் செயல்பட வேண்டும்; ஆனால் சுதந்திரமாக உதாரணத்திற்கு தண்டவாளங்களில் செல்லும் ரயில்வண்டியைச் சொல்லலாம். ரயிலில் உள்ள சக்கரங்கள் தடையின்றி சுதந்திரமாக சுழலும் ஆனால் கட்டுப்பாடுடன் ஒரு கோட்பாடு என்ற தண்டவாளங்களில் மட்டுமே. ஒரு சுதந்திர இந்தியன் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்; ஆனால் இந்திய எல்லைக்குள் அதுமட்டுமல்ல சில அனுமதி மறுக்கப்பட்ட இடங்களைத் தவிர. அதுபோலத் தான் பிரச்சனையை கையாள சுதந்திர கோட் பாடினை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும். சுதந்திரம் வெற்றியைத்தானே குறிக்கிறது.

    4. தனித்துவம்

    மேலே குறிப்பிட்ட வழிகளில் பிரச் சனைக்கு கிடைக்கும் தீர்வு உங்களின் பலம் பலவீனம் இவற்றை கருத்திற்கொண்டும் உங் களால் மெருகுபடுத்தி வெளிப்படுத்தும்போது தனித்துவம் வாய்ந்த தீர்வாகிறது.

    ‘இந்த பிரச்சனைக்கு யார் வேண்டு மானாலும் தீர்வு சொல்லலாம் ஆனால் அவர் மாதிரி இந்த மாதிரி தீர்வை கொடுத்திருக்க முடியாது’ இப்படி நாமோ அல்லது மற்றவர் களோ சொல்லக் கேட்டிருக்கலாம்.

    ஆனால் இனி, மற்றவர்கள் நம்மைப் பற்றி இப்படி சொல்வதைக் கேட்கலாம். பிரச்சனைக்கு நான்கு பக்கங்களிலும் தீர்வு என்ற சட்டமிடுவோம், வெற்றி அழகாக தெளிவாக வெளிப்படும்.

    அன்னையும், பிதாவும்

    இந்த தேசத்தின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று தாய் தந்தையரை வணங்குவதும் போற்றுவதும் ஆகும். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ – இதுதான் இந்தியப் பண்பாட்டின் அரிச்சுவடிப் பாடம். எனவேதான் தொழுவதற்கு உரிய மாதா, பிதா, குரு, தெய்வம் வரிசையில் முதல் இரண்டு இடங்களில் தாயும் தந்தையும் இடம் பெறுகிறார்கள்.

    Continue Reading »

    உடலினை உறுதி செய்

    விளையாட்டு வீரர்களிடம் வளரும் தலைமைப் பண்புகள்

    ஓராண்டு பேச்சு வார்த்தையில் ஒருவரைப் பற்றி கற்றுக் கொள்வதைவிட ஒரு மணி நேர விளையாட்டில் கற்றுக்கொள்ளலாம் என்றார் பிளேட்டோ என்ற கிரேக்க அறிஞர். விளை யாட்டுகள் மனிதனின் தலைமைப் பண்புகளை வளர்க்கின்றன. ஒரு விளையாட்டின் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது; அவற்றின்படி நடப்பது; மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து விளையாடுவது; ஓர் அணி என்ற உணர்வுடன் விளையாடுவது; எதிரணியானாலும் வெற்றி பெற்றவரைப் பாராட்டுவது; நமது பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வது; ஓர் அணியின் தலைவராக இருந்து விளையாடுவது; தோல்வியடைந்தாலும், விளையாட்டை விட்டுவிடாமல் தொடர்ந்து விளையாடி அடுத்த போட்டியில் வெற்றி பெற முயல்வது போன்றவை விளையாட்டு வீரர்களிடம் வளரும் பண்புகள் ஆகும். இவையனைத்தும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் பயற்சிகளாகும்.
    கோபப்படுவதும், அதை வெளிப்படுத்து வதும் குறிக்கோளை அடைய உதவாது என்பது ஓர் அணியின் தலைவனுக்கு நன்கு தெரியும். தனது விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, அறிவுரை நல்கி, பயிற்சி அளித்து, அவர்களை சிறப்பாக விளையாட வைப்பது தான் அணித்தலைவனின் கடமை. விளையாடிப் பழக்கமில்லாத உயர் பதவியில் உள்ளவர்கள் பலர், கோபத்தை கொப்பளித்து, தனக்கு கீழ்ப் பணிபுரிபவர்களை கேவலமாக திட்டி, தண்டனைகளை வழங்கி, அவர்களின் சுயகவுரவத்தை சிதைத்து, ஆர்வத்தையும் குறைத்து, உயர் அதிகாரிகள் மீது வெறுப்பையும் ஏற்படுத்தி விடுகின்றனர். ஆனால், விளையாட்டு பழக்கமுள்ள அதிகாரிகளின் நடத்தை இதிலிருந்து வேறுபட்டிருக்கும். ஒரு விளை யாட்டு வீரன் என்ற முறையில் நான் பல தவறு களைச் செய்துள்ளேன். எனவே மற்ற வீரர்கள் நான் தவறு செய்த போது அவர்கள் என்னை மன்னித்தது போல அவர்களையும் நான் மன்னிக்க வேண்டும் என்பதுதான் ஒரு விளையாட்டு வீரரின் மனப்பான்மையாக இருக்கும். இந்த மன்னிக்கும் மனப்பான்மை ஒரு சிறந்த தலைமைப் பண்பாகும். அது ஒரு விளையாட்டு வீரனிடம்தான் இருக்கும்.

    வாழ்க்கையில் நாம் விழுகிறோமா என்பது முக்கியமல்ல விழுந்தபின் நம்மால் எழ முடிகிறதா என்பதுதான் முக்கியம். வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். நாம் அனைவரும் போர் வீரர்கள். தினமும் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. அவற்றில் தோல்விகளையும், வேதனைகளையும் தழுவ வேண்டியுள்ளது. அப்படி தோற்று விழுவதில் தவறில்லை. அது தவிர்க்க முடியாதது. ஆனால் மீண்டும் எழ வேண்டும். அப்போதுதான் அடுத்தகட்ட போரில் பங்கு பெறமுடியும்.

    எத்தனை முறை விழுந்தாலும் விளையாட்டு வீரன் எழுவான். குத்துச் சண்டையைப் பாருங்கள். கீழே விழுந்த வீரன், உடலில் உயிர் இருக்கிறது என்றால் எழுந்து நின்று மீண்டும் சண்டைக்குத் தயார் என்கிறான். வாழ்வில் வெற்றி பெற இந்த மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு விளையாட வேண்டும்.

    எனக்குத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் பெறவேண்டும் என்பது கொள்ளை ஆசை. ஆனால், தமிழ்நாடு போலீஸ் அணியில் உள்ளவர்கள் இந்தியாவிலேயே சிறந்த வீரர்கள். அவர்களோடு போட்டியிட வேண்டும். 1991-ஆம் ஆண்டு முதல் இப்போட்டியில் பங்கு கொண்ட போதும் ஒவ்வொரு ஆண்டும் தோல்விதான் இருந்தாலும் நான் ஒரு விளையாட்டு வீரன் என்றமுறையில் முயற்சியைக் கைவிடவில்லை. 2000 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் போட்டியிலேயே 60/60 என்ற புள்ளிக் கணக்கில் (15 மீட்டர் தூரத்தில் மிக துரிதமாக சுடும் பிரிவு) தங்கப் பதக்கம் வென்றேன். இந்த நாள் எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள். 60/60 என்றபுள்ளிகள் இன்றும் ஒரு சாதனையாகவே உள்ளது.

    பலமுறைதோல்வி அடைந்தாலும் தொடர்ந்து வெற்றிக்காக முயலும் பண்பினை விளையாட்டு எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

    உடற்பயிற்சியின் வகைகள்

    நடத்தல், ஓடுதல், யோகா, நீச்சல், டென்னிஸ், இறகுப்பந்து, கைப்பந்து என்று பல உடற்பயிற்சிகள் உள்ளன. எதைத் தேர்வு செய்வது? எந்த உடற்பயிற்சி எவ்வளவு நேரம் செய்வது என்ற சந்தேகம் உங்களுக்கு எழக்கூடும்.

    உடற்பயிற்சிகள் உடலில் ஏற்படுத்தும் பலன்களைப் பொறுத்து அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

    1. உடலுறுதி (Strength) தரும் உடற்பயிற்சிகள்.
    2. தாங்கும் சக்தி (Stamina) தரும் உடற் பயிற்சிகள்
    3. வளையும் தன்மை (Flexibility) தரும் உடற் பயிற்சிகள்.

    உடலுறுதியை மேம்படுத்த பளுப் பயிற்சி (Weight Training) செய்தல் வேண்டும்.

    தாங்கும் சக்தியை மேம்படுத்த குறைந்த பட்சம் 20 நிமிடம் தொடர்ந்து வேகமாக நடக்க வேண்டும் அல்லது ஓட வேண்டும் அல்லது நீச்சல் அடிக்க வேண்டும். இவை அனைத்தும் ஏரோபிக் உடற்பயிற்சிகள் ஆகும். டென்னிஸ், இறகுப்பந்து, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் நல்லது என்றாலும், அவை ஏரோபிக் உடற்பயிற்சிகள் ஆகாது என்று கோலெட் பெய்லி என்பவர் Fit or Fat என்றபுத்தகத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். ஏரோபிக் உடற்பயிற்சிகளை இதய நாளங்களில் உடற்பயிற்சி என்றும் கூறலாம். இவை இதயத்தின் தசைகளை வலுப்படுத்துகின்றன.

    வளையும் தன்மையை மேம்படுத்த யோகா பயிற்சி சிறந்தது.

    உடற்பயிற்சிகளை ஏரோபிக் உடற்பயிற்சி (Aerobic Exercise) மற்றும் அன்ஏரோபிக் உடற்பயிற்சி (Anaerobic Exercise) என்று இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஏரோபிக் என்றால் காற்று அல்லது ஆக்ஸிஜன் என்று பொருள். தொடர்ந்து மூச்சு (ஆக்ஸிஜன்) வாங்கும் ஓர் உடற்பயிற்சியை 20 நிமிடங்கள் செய்வதே “ஏரோபிக் உடற்பயிற்சி” ஆகும்.

    20 நிமிடங்கள் தொடர்ந்து வேகமாக நடப்பது, ஓடுவது அல்லது சைக்கிள் மிதிப்பது அல்லது நீச்சல் அடிப்பது ஏரோபிக் உடற்பயிற்சி ஆகும். வீட்டு வேலை செய்வது, டென்னிஸ் விளையாட்டு, ஜிம் பயிற்சி போன்றவை அன்ஏரோபிக் உடற்பயிற்சிகள் ஆகும்.

    உடல் எடையைக் குறைக்கவும், இதயத் தசைகளை வலுப்படுத்தவும் ஏரோபிக் உடற் பயிற்சிகளைத் தவறாமல் வாரம் மூன்று முறைக்குக் குறையாமல் செய்தல் வேண்டும். ஐந்து நிமிடங்கள் தயார் பயிற்சி (Warm Up) செய்த பின்னர் 20 நிமிடங்கள் ஓடி பின்பு ஐந்து நிமிடங்கள் முடிவுப் பயிற்சி (Warm Down) செய்தலே ஒரு சிறந்த ஏரோபிக் உடற்பயிற்சி ஆகிவிடுகிறது. பயிற்சியை அதிகமான நேரமும் செய்யலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளும் முன்னர் ஒரு மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

    ஏரோபிக் உடற்பயிற்சியின் மூலம்தான் உடலில் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பு கரைகிறது. இந்த உடற்பயிற்சி செய்து பல மணி நேரங்கள் வரைக்கும் உடலில் உள்ள கொழுப்புகள் எரிக்கப்பட்டு கலோரிகள் செலவிடப்படுகின்றன. எனவேதான் தினமும் டென்னிஸ், இறகுப்பந்து போன்ற விளையாட்டுகள் விளையாடுபவர்கள் கூட, வாரம் மூன்று முறை ஓட வேண்டும் அல்லது அதிக வேகமாக நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தினமும் டென்னிஸ் அல்லது இறகுப்பந்து விளையாடுபவர்களை உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்கள். பலருக்குத் தொப்பை இருக்கும். அதற்குக் காரணமும் இதுதான்.

    அதே வேளையில் தினமும் ஓடும் நபர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்களது வயிற்றில் அதிகமான கொழுப்பு இருக்கவே இருக்காது. ஏரோபிக் உடற்பயிற்சி இல்லாமல் உடற்தகுதி (Fitness) இல்லை.

    உடலுறுதி தரும் உடற்பயிற்சி

    உடல் உறுதியாக இருத்தல் மிகவும் அவசியமாகும். எல்லாவித உடற்பயிற்சிகளும் ஒரு வகையான உடலுறுதியைத் தருகின்றன. உடலில் உள்ள தசைகள் முறுக்கேறுவதால் கைகளும், கால்களும் நல்ல உறுதியுடன் இருக்கும். ஒரு வலு (Power) இருப்பதைப் போல் உணர்வு ஏற்படும். அது மட்டுமல்லாமல் நம் உடல் தோற்றம் கூட விரும்பத்தக்க வகையில் கவர்ச்சியாக இருக்கும். பளு பயிற்சி முடித்து ஜிம்மை விட்டு வெளியே வரும்போதே கையில், மார்பில், தோளில் உள்ள தசைகள் முறுக்கேறியிருப்பதை உணரும் போது நமக்கே ஒரு புதுத்தெம்பு பிறக்கும். நமது தன்னம்பிக்கை உயரும். நம்மீது நமக்கு மரியாதை ஏற்படும்.

    உடலின் தசைகளின் அளவு குறைவதையும், எலும்புகளின் அளவு குறைவதையும் தடுக்கும் ஒரே வழி உடலுறுதித் தரும் எடைப் பயிற்சிகளை செய்வது ஆகும்.

    நான் எந்த ஜிம்மிலும் சேரவில்லை. வீட்டிலேயே மினி ஜிம் ஒன்றைவைத்துள்ளேன். 20 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி சேர்த்த உபகரணங்கள் அவை. அதில் ஒரு செட் டம்பெல்ஸ் (Dumb Bells), ஒரு செட் பார் பெல்ஸ் (Bar Bells), ஒரு செட் பெஞ்ச் பிரஸ் (Bench Press) உள்ளன. இவை மூன்றுமே எனக்கு போதுமான தாக இருக்கிறது. நீங்கள் இது போன்ற குறைந்த பட்ச உபகரணங்களை வீட்டில் வைத்துக் கொண்டால், வீட்டில் அனைவரும் உடற்பயிற்சி செய்யலாம். தாய், தந்தை, பிள்ளைகள் என்று குடும்பத்தோடு உடற்பயிற்சி செய்யலாம். மழைக்காலங்களில் கூட வீட்டிலிருந்தபடி உடற்பயிற்சி செய்யலாம்.

    வீட்டில் ஒரு மினி ஜிம்

    வீட்டில் ஒரு ஜிம் ஏற்படுத்திக் கொள்ள தேவையான உபகரணங்கள், அவற்றை வைத்து செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் ஆகிய வற்றைப் அடுத்த இதழில் பார்ப்போம்.

    – தொடரும்…

    உடல் நலம் சிறக்க முனைவர். செ. சைலேந்திரபாபு. ஐ.பி.எஸ். அவர்கள் எழுதிய
    “உடலினை உறுதி செய்”
    என்கிற நூலினை வாங்கிப் படியுங்கள்
    விலை ரூ. 90.00 மட்டுமே

    மழையென்ன செய்யும்

    சாயங்காலம் ஆறு மணி. போக்குவரத்து நெரிசல் அதிகமிருந்த காலை அது. வண்டிகளின் இரைச்சல், மக்கள் நடமாட்டமென்று அச்சாலையே கலகலவென்று இருந்தது. என்ன ஒரு வருத்தமென்றால், சுத்தமான காற்று மட்டுமில்லாமல் போனது. பரபரப்பு குறையாமல் அச்சாலை மிளிர்ந்தது.

    Continue Reading »