– 2007 – October | தன்னம்பிக்கை

Home » 2007 » October (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    டிக்..திக்..டிக்..திக்…..

    நீங்கள் தனியாக இருக்கிறீர்கள், தண்ணீர் குழாயில் இருந்து குடத்தில் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள், குடம் நிரம்புவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போல இருக்கிறதே. நீங்கள் ஆயுள் காப்பீடு கட்டணம் செலுத்த ஒரு நீண்ண்ட வரிசையில் நிற்கிறீர்கள் கவுன்ட்டரில் இருப்பவர் ஒவ்வொருவரிடமும் அதிக நேரம் கழிப்பதாக தோன்றுகிறதா? ஆனால் நீங்கள் நான்கு பாலிசி கட்டணங்கள் கட்டும்போது, அதற்கான மொத்த தொகையைக் கணக்கு போட்டு, ரசீது, அடித்து, மீதி சில்லறையை உங்களுக்கு கொடுத்து, அனைத்தையும் சரி பார்த்து நீங்கள் கவுன்ட்டரை விட்டு நகர்ந்தபோது, சும்மா அரை நிமிடத்தில் இவ்வளவு வேலைகளும் முடிந்துவிட்டதாகத் தோன்றுகிறதே?

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தி. ந. வெங்கடேஷ் I.A.S., அவர்களின் அட்டைப்பட கட்டுரை அவரின் சமுதாய நோக்கச் சேவைகளை தன்னம்பிக்கை வாசகர்களுக்கு சுவைக்க தந்தது பாராட்டத்தக்கது. இவர் போன்றே எல்லோரும் அமைந்து விட்டால் நமது அன்பு முன்னால் ஜனாபதி ‘கலாம்’ கண்ட கனவை நிறைவேறி விடலாம் என்பதில் கடுகளவு கூட ஐயமில்லை.

    Continue Reading »

    மறதி ஏன்?

    பரீட்சைன்னா மறந்து போறா!

    ஒரு பள்ளிக்கூடத்தில் மதிய உணவுக்கான இடைவேளை. மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தாயாரில் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு உணவை ஊட்டிக் கொண்டே தங்கள் குழந்தைகளைப் பற்றி பேசுகின்றனர்.

    Continue Reading »

    வேரில் பழுத்த பலா

    வீட்டிற்குள் பழைய தேவையற்ற பொருட்களை அடைத்து வைத்திருக்கும் அறைக்குள் செல்கிறீர்கள். தூசியும் அழுக்குமாக இருக்கும் அந்த அறைக்குள் 5 நிமிடம்கூட இருக்க முடிவதில்லை. வெளியில் வேகமாக வந்து முகம், கை கால்களை தண்ணீரால் கழுவிக்கொண்டு புதிய பூத்துவாலையால் துடைத்துக் கொண்டு மின்விசிறியை ஓடவிட்டு வரவேற்பறை சோபாவில் சாய்கிறீர்கள். மணம் நிறைந்த அத அறையின் இனிய சூழலில் சுகமும் மகிழ்ச்சியும் கூட இனிய உறக்கம் கண்களைத் தழுவ இரண்டு மணி நேரம் துயில் கொள்ளுகின்றீர்கள்.

    Continue Reading »

    மனதின் மொழி

    சென்ற இதழ் தொடர்ச்சி..

    இனிய வாசகர்களுக்கு! வாழத்துக்கள். பிரச்னை இல்லாத வாழ்க்கையில் சுவாராஸ்யம் இராது என்பதை புரிந்து கொண்டு பிரச்னையைக் கண்டு பயந்து விடாது பிரச்னையை சமாளிக்கவும், தீர்வுக்கு கொண்டு வரவும் ஆரம்பித்து விட்டீர்கள் என்பதை நினைத்தாலே இனிக்கிறது. நன்றி. மிக்க நன்றி. நம்மால் எதையும் செய்ய முடியும். நாம்மாலேயே முடியவில்லை என்றால் வேறு யாரால் முடியும்.

    Continue Reading »

    பாராட்டு விழா

    “தன்னம்பிக்கை” போராளி பேரிசிரியர் முனைவர் இல.செ. கந்தசாமி அவர்களுக்கு பாராட்டு விழாவும், இல.செ. கந்தசாமி அவர்களின் ‘வாழ்வும் பணியும்’ என்ற தலைப்பில் பாவலர் காஞ்சி நடராசன் நினைவுக் கருத்தரங்கம், கோவை, போத்தனூர் புகைவண்டி நிலையம் எதிரில் உள்ள தென்னக இயில்வே பசுத்தூர் யூனியன் அரங்கத்தில் 26.08.2007 ஞாயிறு காலை 10.00 மணிக்கு தமிழ்த்திரு இராம்மோகன் (பொதுச் செயலர், சமத்துவ தொழிலாளர் முன்னணி) அவர்கள் தலைமையிலும், அரிமா. மு. சின்னமுத்து, கோவை சேகர் அரிமா நா. மதிவாணன், மேட்டூர் வெள்ளிங்கிரி, சி. கேசவமூர்த்தி, க. மனோகரன், சி. தியாகராசன், சூலூர் வீ. பால்வண்ணன், கவிஞர் மா. கொங்குவாணன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.

    Continue Reading »

    கற்றல் கருவிகள்

    “தேவையான கருவிகளைக் கொடு. நாங்கள் வேலையை முடிக்கிறோம்” – சர் வின்ஸடன் சர்ச்சில்.

    பயன்றற மூளை என்ற ஒன்று இல்லை. சரியான வகையில் மூளையைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்பதே உண்மை. உலகின் மிகவும் உயர்ந்த, விலை மதிக்க முடியாத அற்புதக் கருவி நமது மூளை. சரியான பயிற்சிகள் மூலம் அதை சிறப்பாக இயக்கினால் சாதனை பல புரியலாம்.

    Continue Reading »

    தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!

    தெருவில் நீங்கள் நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று தெய்வம் உங்கள் எதிரில் தோன்றி, “உனக்கு என்ன தேவை” – என்று கேட்கிறது. உங்களது மனக் கண்ணில் இந்தக்காடசியைக் காட்சிப்படுத்திப் பார்த்து.. உங்களது தேவையைச் சொல்ல முயலுங்கள்…அப்போது தான் நம் தேவை எதுவென்று நாமே உணராமல் இருக்கும் உண்மை நிலை நமக்குப் புரியவரும்.

    Continue Reading »

    சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!

    தொழில் உடன்பாடுகள் செய்து கொள்ளும் போது, சரியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். சென்ற இதழில் நான் சொன்னதுபோல் பொறுப்பற்ற, கடமையுணர்வில்லாத, விளையாட்டுத் தனமானவர்களை நம்பி களத்தில் இறங்கினீர்கள் என்றால் கடைசியில் பாதிக்கபடப்போவது நீங்கள்தான்.

    Continue Reading »

    உழைப்பே உயர்வு

    ஓவியர்கள் எப்படி எல்லாம் தங்கள் லட்சியங்களை வளர்த்துக் கொண்டார்கள், எப்படியெல்லாம் கஷ்டங்களை மேற்கொண்டார்கள், எவ்விதம் முயற்சி செய்து முன்னேறினார்கள் என்பதனைத் தெரிந்து கொண்டால்-

    Continue Reading »