படிப்போம்! படிக்கவைப்போம்!!
இளைஞர்களே எங்கே செல்கிறீர்கள்?
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
ஜெயச்சித்ரா குமரேசன்
ஆசிரியர்:பி.எஸ்.கே.செல்வராஜ் விலை
ரூ. 40 /-
வெளியீடு:
மணிமேகலைப் பிரசுரம்
சென்னை
நூலாசிரியரைப் பற்றி…
தி நியூஸ் வேர்ல்டு, பூவிழி மலர் ஆசிரியர். இருபத்தி நாலு வயதில் இளைஞர்களுக்கு எடுத்துகாட்டாக விளங்குபவர். பல இலட்சிய இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற இலட்சியமுடையவர்.
நூலினைப் பற்றி…
இளைஞர்களுக்காக ஓர் எழுச்சிமிக்க இளைஞனால் உருவாக்கப்பட்ட நூலிது. சோகமான இளைஞர்களை வேகமானவர்களாக மாற்றும் சக்திமிக்க நூல். இந்நூலில் விதைத்துள்ள சிந்தனை விதைகள் வளரும் இளைஞர்களுக்கு வழிகாட்டும்.
1. சாதனைக்கு வயது தடுப்புச்சுவர் அல்ல
2. சாதனையில் ஆணும் பெண்ணும் சமமே.
3. ஆன்மீகம் ஒரு கலைக்கூடம்
4. தடைக்கல்லும், படிக்கல்லும்
5. அறிவுபூர்வமான வீரமே அவசியத் தேவை.
6. தேசத்தின் மீது நேசம் வை.
7. குணநலமும் மனநலமும்
8. உடம்பும் – இலக்கும்
9. உயிருக்கும், உம் உடம்பிற்கும் உள்ள தொடர்பு.
10. வல்லமையும் வாழ்வின் இலக்கும்.
11. அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா?
12. விழிப்புடன் இருந்தால் செழிப்பு வளரும்
13. ஆசையும் இயக்கும் இயக்கமும்
14. பழைய – புதிய நினைவுகள்
15. உந்துதலும், உளப்பாங்கும்
16. தோல்வியைத் தொடர்விடலாமா
17. இவர்கள் எப்படிப்பட்டவர்கள்
18. உண்மை உன்னை உயர்த்தும்
19. இளமை இனிமையானது
20. இளைஞா! உனக்கா! எல்லாம் உன்க்காக!
21. இதுதான் காதல் உலகம்.
22. இளைஞனால் முடியாதது உண்டா?
23. ஆக்குவதற்குத்தான் சக்தி! அழிப்பதற்கல்ல.
24. உலகம் ஒரு சபை
25. பலமும் – பணியும்
26. வாழ்வை வளப்படுத்தும் தத்துவங்கள்
27. உலகமே உழவனின்றி இல்லை.
அடிக்கோடிட்டு இருக்கும் அத்தனை அத்தியாயங்களும் அருமை, பெருமை, மேலும் இருபத்தியேழு அத்தியாயங்களில் இளைஞர்களுக்குத் தேவையான தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், தேசப்பற்று, காதல், உடல் நலம், உள்ள நலம், உழவன் நலம், இவையனைத்தையும் கலந்து கதம்பமாக தொகுத்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.
பல்வேறு சுவை உணவுகளை நன்றாக கலந்து சாப்பிடும்போது கிடைக்கும் ஒரு வித்தியாசமான சுவையினைப் போல இந்நூலினைப் படிப்போருக்கு நிச்சய் உருவாகும் கதம்ப சுவை உணர்வு.
பத்து புத்தகங்களில் தர வேண்டிய சிந்தனைச் செய்திகளை, பல்சுவையினை பகுதிகளாக்கி தந்துள்ளார் நூலின் ஆசிரியர்
வலிமை மிக்கவர்களால்தான் வரலாறு
படைக்க முடியும்!
சக்தி மிக்கவர்களால்தான் சரித்திரம்
படைக்க முடியும்!
தன்னம்பிக்கை மிக்கவர்களால்தான்
வெற்றி பெற முடியும்!
– இளைஞர்களுக்கு இது ஓர் செய்தி.
கடின உழைப்பு இருந்தால் கடலைக்கூட கடக்கலாம்.
உழைப்பே உயர்வு! உழைக்காமல்
இருப்பதுதான் இன்றைய இளைஞர்கள்
செய்யும் பிழை!
தோல்வியில்லாத வெற்றி இன்று வரை
யாரும் பெற்றதில்லை.
– இதுபோல ஆயிரம் வரிகள் இந்த நூலிலே.
கற்றுக் கொள்வதற்கு காலங்களில்லை;
( வயதில்லை )
இந்த நூல் விமர்சனத்தின் மூலமாக ஆசிரியருக்கும் அன்புச் செய்தி!
இணைந்து செயல்படுதல் மூலம் சிறிய
செயல்களை வெற்றி சாதனைகளாக்காலாம்.
ஒன்றுபடுதல் ஆரம்பம்! ஒன்றாயிருத்தல்
வளர்ச்சி! ஒன்றாக செயல்பட்டால் வெற்றி!
நம்பிக்கை – தன் – நம்பிக்கையாளர்கள் வரிசையில் PSK செல்வராஜ் அவர்களுக்கும் ஒரு தனி இடம் – வாழ்த்துக்கள் ! வளம்பெற!