நீங்கள், இப்பொழுது இருக்கும் நிலைமைக்கு, முழுக்க முழுக்க நீங்கள் தான் காரணம் . நீங்கள் துன்பத்தில் இருந்தால்.அதற்கு நீங்கள் தான் காரணம். பொறுப்பை பிறர் மேல் திணிக்க வேண்டாம். அது கோழைகள் செய்யும் வேலை. அப்படி இருந்தால், நீங்கள் ஒருக்காலும், விடுதலை அடைய முடியாது. நல்லதோ, கெட்டதோ, பொறுப்புகளை, நீங்கள் முழுமையாக தைரியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான், நீங்கள் முதிர்ச்சி அடைவீர்கள்.
-ஓஷோ
உங்களுக்குள்ளே இருக்கும் தடைகளை அகற்றினாலே போதும். நீங்கள் தானாகவே, இயல்பாக வளர ஆரம்பித்து விடுவீர்கள். ஆறுபோல் உங்கள் சக்தி இயல்பாக ஓட ஆரம்பிக்கும். உங்களை நீங்கள் உங்களுக்கள் தேட ஆரம்பித்து விடுவீர்கள். அப்பொழுது உங்களைப் பற்றி சிறிது தெரிந்தாலும் போதும். உங்களுக்கு புதிய பலமும், புதிய சக்தியும் தானாக உண்டாகிவிடும். அப்பொழுது ஓர் புதிய மகிழ்ச்சி.
– ஓஷோ