“உயர்ந்த மனோபாவங்கள்”
கோவையில் ஒரு தொழிலதிபர், தன்னுடைய தொழிற்சாலையை இருபத்து ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டார். அதன்பின் சில மாதங்கள், பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அவர் ஏதோ ஒரு குழப்பமான மனநிலையில் திடீரென ஒரு பெரிய வியாபாரத்தை விட்டுவிட்டார். அந்த முடிவு சரிதானா? இனி எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? என்ற எண்ணங்கள் அடிக்கடி அவரை வாட்டின. மனநிலை பாதிக்கப்பட்டார்.
அவருடைய கடந்த கால வாழ்க்கையைப் பார்த்தால் அவருடைய மனோபாவங்கள் நன்கு விளங்கும். அவர் பிடிவாத எண்ணம் கொண்டவர். மற்றவர்கள் நியாயமானவை, சரியானவை என்று ஒரு விவரத்தைச் சொன்னால்கூட அவர் ஏற்கமாட்டார். சரியோ, தவறோ தான் சொல்வதுதான் நியாயமானவை என வாதம் செய்வார். மற்றவர்கள் இவருடைய சொல்லுக்கு மதிப்பு தரவில்லையேல், அவர்களை தரக்குறைவாகப் பேசுவார். தன்னிடம் வேலைசெய்யும் தொழிலாளர்கள் அவரிடம் ஏதாவது ஒரு அபிப்ராயத்தைச் சொன்னால், உடனே அதற்கு எதிர்மறையான செயலைச் செய்வார். எல்லாம் தமக்குத் தெரியும்; மற்றவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என எண்ணுபவர். தம்மைச் சுற்றியுள்ள உறவுகளான மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் தன்னுடைய சொல் படிதான் செயல்பட வேண்டும் என்பதில் கண்டிப்பானவர். யாராவது அவரிடம் சொல்லாமல் ஒரு காரியத்தைச் செய்தால், உடனே அது தவறு என கொந்தளிப்பார். வீட்டில் அவர் மனைவி கீரையில் பொறியல் செய்தால் உனக்கு மனித ரசனையே இல்லை. ஏன் அந்த காய்களில் நல்ல பொறியல் செய்யக்கூடாதா? என்பார். அந்த அம்மையார் காய் வகை பொறியல் செய்தால் இந்த மண்ணை யார் சாப்பிடுவது? எடுத்து குப்பையில் கொட்டு என்று குமறுவார்.
Continue Reading »
1 comment Posted in Cover Story