– 1993 – December | தன்னம்பிக்கை

Home » 1993 » December

 
  • Categories


  • Archives


    Follow us on

    சோகங்களை சுமப்பதற்காக அல்ல வாழ்க்கை சுகங்களை பெறுவதற்காக அமைந்ததே வாழ்க்கை

    1985 ஆம் ஆண்டு இவ்விதழின் நிறுவன ஆசிரியர் இல.செ.க. அவர்கள் ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுப் பயணத்திற்குப் பின் நம் நாட்டு இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தேவை. பொதுவாக அனைவரும் அறிவில் வளரவேண்டும் என்ற எண்ணத்தோடு

    Continue Reading »

    புத்திசாலித்தனமான தலைவர் யார்?

    தலைமைப் பதவியில் இருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

    ஒன்றை அளவுக்கு மீறி வற்புறுத்துவதனால் ஏற்படும் விளைவுகள்:

    அளவுக்கு மீறிய வற்புறுத்தல் தலைவரையே திரும்ப பாதிக்கும்.

    Continue Reading »

    உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி

    – ஆர் மகாதேவன்

    அலுவலத்தில் எவ்வளவு தான் மாடாய் உழைத்தாலும் மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் உங்களை மதிக்கவிலையா?

    கவலைப்படாமல் கீழ்க்காணும் வழிமுறைகளைக் கடைபிடித்துத்தான் பாருங்களேன்.

    Continue Reading »

    உயர்ந்த மனோபாவங்களை உருவாக்குங்கள்

    – டாகடர் G. இராமநாதன்

    சண்முகநாதன் ஒரு சுங்க இலாகா அதிகாரி. தினமும் மாலையில் மது அருந்துவார் அப்போது தான் தூக்கம் வரும். வேலையில் உள்ள
    சிரமங்கள், குழப்பங்கள், பிரச்சினைகள் இவைகளை மறக்க அவருக்கு தெரிந்த வழி அது.

    Continue Reading »

    ஆசிரியரின் டைரி குறிப்பு

    உயர்ந்த நிலை

    நாம் உயர்ந்து நின்றால் உயர்ந்த நிலையில் இருந்தால் பலர் வலய வந்து பேசுவார்கள். நாம் தாழ்ந்து போனால் வலியச் சென்று பேசினாலும் விலகிப் போவார்கள்.

    இயற்கை

    இயற்கை புசுமை போர்க்கும்போது இதயங்களும் துன்ப இலைகளை உதரிவிட்டுத் துளிர்விடத் தொடங்குகின்றன.

    உண்மை மனிதன்

    உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற மனிதர்கள் பிறருடைய விருப்பு வெறுப்புகளைக்கண்டு வருந்திப் பயனில்லை.

    எல்லாருக்கும் நல்லவர்

    யாரையும் மனம் வருந்தாமல் நடத்தவேண்டும் என்று விரும்பினாலும் அப்படி நடத்த முடிவதில்லை. தவறு செய்கின்றவர்களைத் தண்டித்துத்தானே ஆகவேண்டும். அவர்கள் மனம் வருந்துவார்கள் என்பதற்காக விட்டுவிட்டால் பெரிய பெரிய தவறுகளை அல்லவா வந்து சேரும். எல்லோருக்கும் நல்லவர் ஆக இருக்கமுடியாது.


    எப்போது துன்பம் உணர்கிறோம்?

    நியாயமானவைகள் நடைபெறாவிட்டால் கோபம் வருகிறது. கொதிப்படைகிறோம். துன்பம் அடைகிறோம்.

    அவசரம்

    மிக விரைவிலேயே எல்லாவற்றையும் அடைந்துவிடவண்டும் என்ற வெறியினால் வாழ்க்கையைப் பலபேர் இழந்து விடுகிறார்கள்.

    ஆசை

    பலர் பதவிக்காகவும், பணத்துக்காகவும்,புகழுக்காகவும், துடிக்கிறார்கள். அவற்றிற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகி விடுகிறார்கள்.

    அறம்

    அடிப்படை அற உணர்வு செத்துக்கொண்டே வருகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. வெளி உலகத்துக்கு நல்லவர்கள என்று கருதப்படுகின்ற பலர் உள்ளுக்குள் கொடியவர்களைவிட மோசமானவர்களாக இருக்கிறார்கள். வேர் இல்லாத மரத்தில் பசுமையான இலைகள் எத்தனை நாளைக்கு இருக்கமுடியும்?

    நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?

    – டாக்டர் பெரு. மதியழகன், மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.

    இந்த ‘அறிவு யுகத்தில்’ ஒருவரின் ஒப்பரிய செல்வமே ‘நினைவாற்றல்தான்’. போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் எதைச் சாதிப்பதற்கும் நினைவாற்றல் வேண்டும். நமது அறிவின் அளவு கோல் நினைவாற்றலே. எவ்வளவு செய்திகளை நம் நினைவில் சேமித்துவைக்க முடியும்? என்று சிலர் கேட்பதுண்டு. நமது மூளை

    Continue Reading »