புத்திசாலித்தனமான தலைவர் யார்?
புத்திசாலித்தனமான தலைவர் யார்?
தலைமைப்பதவியில் இருப்பவர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை
ஒன்றை அளவுக்கு மீறி வற்புறுத்துவதனால் ஏற்படும் விளைவுகள்:
அளவுக்கு மீறிய வற்புறுத்தல் தலைவரையே திரும்ப பாதிக்கும்.
ஒன்றில் அடிக்கடி தலையிடுதல், அடிக்கடி வலியுறுத்தல் நல்ல விளைவுகளைத் தராது. இத்தகைய தலைவர்கள் தங்களின் கீழ் உள்ளவர்களைக் கெடுப்பவர்கள் ஆவார்கள்.
ஒரு குழுவுக்குத் தலைமை தாங்குவது என்பது மிகவும் நாகரிகமான செயலாகும். அக்குழுவை வற்புறுத்தியோ, விவாதங்கள் செய்தோ அல்லது வலிமையால் வெற்றி கொண்டோ தலைமை ஏற்கமுடியாது.
ஒரு தலைவன் ஆள் பலம் கொண்டு ஒரு குழுவிற்குத் தலைமை ஏற்பது என்பது அவன் தலைமைத் தன்மையை அறியாதவன் என்பதே பொருள். அவ்வாறு செய்பவர்கள் அக்குழுவின் ஆதரவைப் பெற, பெரும் சிரமத்தை ஏற்கவேண்டி இருக்கும்.
தலைவர்கள், தனக்கு கீழுள்ள இளைஞர்களை வலிந்து முன்னுக்குத் தள்ளுவதை அவர்களுக்கு நன்மை செய்வதாகக் கருதுகிறார்கள். உண்மையில் அது அவர்களின் செயல்பாடுகளைத் தடைப்படுத்துவதே ஆகும்.
Continue Reading »
0 comments Posted in Cover Story